Subasini Sugumaran
தனிமை துயர் தீராதோ...
எழுத்தாளர் நிதனி பிரபு
இவங்க கதை இப்ப தான் படிக்கிறேன் முதல் முறையாக....
எப்படி இவங்கள தவற விட்டேன் என்ற வேதனை மனதில் உருவாகி விட்டது.. அவ்வளவு அழகான தமிழ்...
இப்போ கதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன்...
பிறந்த சின்ன சிறு வயதில் தாயால் ஒதுக்கப்படும் நிலையில் இருந்து அவளின் துயர் பயணிக்கிறது...
என்றும் தனிமை மட்டுமே சிறு வயது முதல் உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு துணையாக தன் வலியை போக்கும் உறவாக தன் தனிமை துயரை தீர்க பாடு படும் நாயகியின் உணர்வுகளும் அவள் காதலும் பாசமும் என பல உணர்வுகளை தன் எழுத்தில் பிரதிபலிக்கும் அழகே தனி தான்....
கண் இழந்த பிள்ளைக்கு சில மணி துளிகள் பார்வை கிடைத்த பின் மீண்டும் காரிருளில் தள்ளியது போன்ற அவள் காதல் வாழ்க்கை அவளை எப்படி எல்லாம் வருந்த வைக்கிறது என்பதை கதையின் நாயகியோடு நாமும் உணர முடியும் அப்படி ஒரு தாக்கம் உணர்வுகளை பதியவைக்கும் எழுத்து ....
இவ்வளவு கொடுமைக்கார ஹீரோவாடா நீ என்று நம் ஹீரோயின் ஆர்மி கடமை நம்மை அழைக்க அவனை திட்ட கூட மனம் வராத அளவுக்கு அவளை காதலிக்கும் ஹீரோ.... அவனின் கோபமும் நியாயம் தானே என் ஹீரோக்காக பேச வைத்த விதம் அருமை....
அக்காவிற்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் தம்பி பாசம்... மனைவியின் மேல் வெறுப்பு இருந்த போது அவளின் தம்பி மற்றும் தங்கையை தன் பிள்ளைகளை போல பாசம் காக்கும் அத்தானாக இந்த ஹீரோ மனசை கொள்ளை அடிக்கிறான் என்றால் வாழ்க்கையில் போராட மட்டுமே வாழுந்து தன் உடன்பிறப்புகளுக்காக வாழுந்து தன் மன வலியை தன்னுள்ளே புதைக்கும் ஹீரோயின் கண் கலங்க வைக்கிறாள்...
வாழ்க்கையில் உண்மையோ வெறுப்போ என்னால் உண்மையாக தான் இருக்க முடியும் என்ற ஹீரோவின் வார்த்தைகள் மனதில் பதிகிறது என்றால் கடைசியாக தன் மனதை திறக்கும் ஹீரோயின் நம்ம கட்டியிழுக்கிறாள்....
கதையில் ஹீரோ தவறா இல்லை ஹீரோயின் தவறா என்று நம்மால் சொல்ல முடியாது மாதிரி கதையின் நகர்வு அருமை....
இதில் வரும் நட்புக்கு அழகு சேர்க்கும் நீக்கோ கேரக்டர் அவனின் பாசம் எல்லாம் உணர்வு பூர்வமாக இருக்கும் படிக்க....
கதையை படிக்க ஹீரோயின் உணர்வுகள் படித்து அவளுக்காய் ஹீரோவை திட்டியபடி படிக்க அவளை மெழுகு உருகுவது போல காதலிக்கும் ஹீரோ பக்கம் மன சாய தன் அக்காவுக்காக போராடும் தம்பியை படிக்கும் போது அவன் அத்தானை மேல் இருக்கும் அன்பு பாசம் அவன் பால் ஈர்க்க இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டது கதை முடிவில்....
எழுத்தாளர் மேம் உண்மையாக உங்க தமிழ் சூப்பர்...
எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தைகள்...என்னடியப்ப என்ற உங்கள் ஒவ்வொரு ஹீரோவும் காதலோடு அழைப்பது.... அம்மாச்சி என்ற வார்த்தை அவ்வளவு பாசமும் உணர்வும் கொட்டி இருக்கிறது படிக்கும் போது.....
வாழ்த்துக்கள்
மேம்....
"இந்த கதையின் லிங் அமேசான் கிண்டில் இருக்கிறது"....
தனிமை துயர் தீராதோ...
எழுத்தாளர் நிதனி பிரபு
இவங்க கதை இப்ப தான் படிக்கிறேன் முதல் முறையாக....
எப்படி இவங்கள தவற விட்டேன் என்ற வேதனை மனதில் உருவாகி விட்டது.. அவ்வளவு அழகான தமிழ்...
இப்போ கதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன்...
பிறந்த சின்ன சிறு வயதில் தாயால் ஒதுக்கப்படும் நிலையில் இருந்து அவளின் துயர் பயணிக்கிறது...
என்றும் தனிமை மட்டுமே சிறு வயது முதல் உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு துணையாக தன் வலியை போக்கும் உறவாக தன் தனிமை துயரை தீர்க பாடு படும் நாயகியின் உணர்வுகளும் அவள் காதலும் பாசமும் என பல உணர்வுகளை தன் எழுத்தில் பிரதிபலிக்கும் அழகே தனி தான்....
கண் இழந்த பிள்ளைக்கு சில மணி துளிகள் பார்வை கிடைத்த பின் மீண்டும் காரிருளில் தள்ளியது போன்ற அவள் காதல் வாழ்க்கை அவளை எப்படி எல்லாம் வருந்த வைக்கிறது என்பதை கதையின் நாயகியோடு நாமும் உணர முடியும் அப்படி ஒரு தாக்கம் உணர்வுகளை பதியவைக்கும் எழுத்து ....
இவ்வளவு கொடுமைக்கார ஹீரோவாடா நீ என்று நம் ஹீரோயின் ஆர்மி கடமை நம்மை அழைக்க அவனை திட்ட கூட மனம் வராத அளவுக்கு அவளை காதலிக்கும் ஹீரோ.... அவனின் கோபமும் நியாயம் தானே என் ஹீரோக்காக பேச வைத்த விதம் அருமை....
அக்காவிற்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் தம்பி பாசம்... மனைவியின் மேல் வெறுப்பு இருந்த போது அவளின் தம்பி மற்றும் தங்கையை தன் பிள்ளைகளை போல பாசம் காக்கும் அத்தானாக இந்த ஹீரோ மனசை கொள்ளை அடிக்கிறான் என்றால் வாழ்க்கையில் போராட மட்டுமே வாழுந்து தன் உடன்பிறப்புகளுக்காக வாழுந்து தன் மன வலியை தன்னுள்ளே புதைக்கும் ஹீரோயின் கண் கலங்க வைக்கிறாள்...
வாழ்க்கையில் உண்மையோ வெறுப்போ என்னால் உண்மையாக தான் இருக்க முடியும் என்ற ஹீரோவின் வார்த்தைகள் மனதில் பதிகிறது என்றால் கடைசியாக தன் மனதை திறக்கும் ஹீரோயின் நம்ம கட்டியிழுக்கிறாள்....
கதையில் ஹீரோ தவறா இல்லை ஹீரோயின் தவறா என்று நம்மால் சொல்ல முடியாது மாதிரி கதையின் நகர்வு அருமை....
இதில் வரும் நட்புக்கு அழகு சேர்க்கும் நீக்கோ கேரக்டர் அவனின் பாசம் எல்லாம் உணர்வு பூர்வமாக இருக்கும் படிக்க....
கதையை படிக்க ஹீரோயின் உணர்வுகள் படித்து அவளுக்காய் ஹீரோவை திட்டியபடி படிக்க அவளை மெழுகு உருகுவது போல காதலிக்கும் ஹீரோ பக்கம் மன சாய தன் அக்காவுக்காக போராடும் தம்பியை படிக்கும் போது அவன் அத்தானை மேல் இருக்கும் அன்பு பாசம் அவன் பால் ஈர்க்க இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டது கதை முடிவில்....
எழுத்தாளர் மேம் உண்மையாக உங்க தமிழ் சூப்பர்...
எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தைகள்...என்னடியப்ப என்ற உங்கள் ஒவ்வொரு ஹீரோவும் காதலோடு அழைப்பது.... அம்மாச்சி என்ற வார்த்தை அவ்வளவு பாசமும் உணர்வும் கொட்டி இருக்கிறது படிக்கும் போது.....
வாழ்த்துக்கள்
மேம்....
"இந்த கதையின் லிங் அமேசான் கிண்டில் இருக்கிறது"....