Chitrasaraswathi
நிதனி பிரபுவின் அவள் ஆரணி எனது பார்வையில். பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கும் இருவரின் காதல் திருமணத்தில் நிறைவு பெறும் கதைகள் பல உண்டு. ஆனால் ஆரணி மற்றும் நிகேதனின் காதலும், திருமண வாழ்வில் இருவரும் இதே காதலுடன் வாழ முடியுமா என்பதை நிதனி அழகாக தந்திருக்கிறார். ஆரணி மறக்க முடியாத நாயகி. அவளின் காதலும், நிக்கியை அவளைவிட யாராலும் இப்படி காதலிக்க முடியுமா ? யதார்த்தமான கதை இலங்கைத் தமிழில். சில அத்தியாயங்களில் காதல் காட்சிகள் அதிகம்தான். ஆனாலும் மனதை ஈர்க்கும் நாயகன், நாயகி. நிகேதனின் அம்மா, தங்கை மற்றும் அண்ணி கதாபாத்திரங்களில் அண்ணி மாலினி நல்லவளே. பெண் பெற்றோரை எதிர்த்து செய்யும் காதல் திருமணம் பெற்றோரை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆரா கேட்கும் மன்னிப்பும் அழகே.
நிதனி பிரபுவின் அவள் ஆரணி எனது பார்வையில். பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கும் இருவரின் காதல் திருமணத்தில் நிறைவு பெறும் கதைகள் பல உண்டு. ஆனால் ஆரணி மற்றும் நிகேதனின் காதலும், திருமண வாழ்வில் இருவரும் இதே காதலுடன் வாழ முடியுமா என்பதை நிதனி அழகாக தந்திருக்கிறார். ஆரணி மறக்க முடியாத நாயகி. அவளின் காதலும், நிக்கியை அவளைவிட யாராலும் இப்படி காதலிக்க முடியுமா ? யதார்த்தமான கதை இலங்கைத் தமிழில். சில அத்தியாயங்களில் காதல் காட்சிகள் அதிகம்தான். ஆனாலும் மனதை ஈர்க்கும் நாயகன், நாயகி. நிகேதனின் அம்மா, தங்கை மற்றும் அண்ணி கதாபாத்திரங்களில் அண்ணி மாலினி நல்லவளே. பெண் பெற்றோரை எதிர்த்து செய்யும் காதல் திருமணம் பெற்றோரை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆரா கேட்கும் மன்னிப்பும் அழகே.