அத்தியாயம்-20
ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்த்து, நிலத்தில் வீசிக்கொண்டிருந்தது. இலைகளோ, பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பலவர்ண ஜாலங்கள் காட்டி, பார்ப்போரை தன்னழகில் சொக்கவைத்துக் கொண்டிருந்தன.
அந்த அழகான காலநிலையை அனுபவிக்கும் உணர்வற்றவளாக, தன்னறையின் ஜன்னல் வழியே வெளியை வெறித்துக்கொண்டிருந்தாள் சனா.
உள்ளம் இனம் புரியா அவஸ்தையினால் தவித்துக்கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை அவளைத் திட்டிவிட்டுப் போனவன், இதோ இன்றோடு மூன்றாவது நாளாகியும் அவளோடு கதைக்கவே இல்லை. அவளும் எத்தனையோ தடவைகள் முயன்றுவிட்டாள், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
அன்று அவள் சற்றுக் கோபமாகப் பேசிவிட்டாள் தான். அதுவும் அவன் தாத்தா பாட்டியை அப்படிப் பேசியது தவறுதான். ஆனால், அதற்குக் காரணம் அவன் மேல் வைத்துவிட்ட அளவற்ற அன்பல்லவா!
அக்காவாக இருந்தாலும், ஒருவர் அவனைக் குறையாகச் சொல்வதைக் கேட்கும் சக்தி அவளிடம் இல்லையே! அதனால் தானே அப்படி வெடித்தாள்.
ஆனாலும், அவளின் பேச்சுப் பிழை என்று உணர்ந்த நொடியில் இருந்து, எத்தனையோ தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேஜ்கள் அனுப்பி விட்டாள். அப்படி இருந்தும் அவன் கோபம் போகவில்லையா என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் நினைவுகளின் நாயகனே செல்லில் அழைத்தான்.
ஓடிச்சென்று கட்டிலில் கிடந்த கைபேசியைத் தூக்கினாள்.
‘சூர்யா அழைக்கிறான்’ என்று அதில் ஒளிரவும், கண்கள் கலங்க அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்து, “சூர்யா…” என்றாள் நெஞ்சை உருக்கும் குரலில்.
அந்தப் பக்கம் சில நொடிகள் நிசப்தம். இப்போது மனம் தடதடக்க, “சூர்யா…?” என்றாள் மீண்டும் ஆவலோடு கேள்வியாக.
“நான்தான். இன்று மாலை உனக்கு டொச் வகுப்பு இருக்கிறதுதானே?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது? ஒட்டாமை? ஆனால், அதை உணரும் நிலையில் அவள் இல்லை.
“அங்கு சந்திப்போமா சூர்யா..?” ஆசை, எதிர்பார்ப்பு என்று ஆவலே நிறைய அவள் கேட்க, “ம். வா அங்கு பேசலாம்.” என்றவன் கைபேசியை வைத்துவிட்டிருந்தான்.
அவளுக்கு அதுகூடக் குறையாகத் தெரியவில்லை. அவன் அவளோடு கதைத்துவிட்டான். அதுதான் நினைவில் நின்றது. மாலை அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலில் என்ன செய்வது என்றே தெரியாமல் அறையிலேயே அங்குமிங்கும் நடந்தாள்.
இதழ்களில் இளம் புன்னகை. ஏதோ அவனை இன்றுதான் முதன் முதலாக பார்க்கப் போவதுபோல்.
இப்போதே அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. நொடிக்கொரு தடவை சிவரில் தொங்கிய மணிக்கூட்டைப் பார்த்துப் பார்த்தே நேரத்தை ஓட்டியவளுக்கு பெரும் சந்தேகம் ஒன்று வந்தது.
அது அவர்கள் சந்திப்பது டொச் வகுப்புத் தொடங்க முதலா அல்லது முடிந்தபிறகா என்பதுதான்.
அதைக் கேட்பதற்கு என்கிற சாட்டை வைத்து அவனுக்கு செல்லில் அழைத்தாள். ம்கூம், அவன் எடுக்கவில்லை. ஆனாலும் அது அவளைப் பாதிக்கவில்லை.
எப்போதும் முடிந்தபிறகுதான் சந்திப்பது வழக்கம். இன்று எதற்கும் இருக்கட்டும் என்று, வகுப்புத் தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகே பள்ளியை நோக்கிச் சென்றாள்.
முதன்முதலில் அவர்கள் சந்தித்துக்கொண்ட இருக்கையில் அமர்ந்தவள், அன்று அவன் இருந்த ஓரத்தை தடவிக்கொடுத்தாள். ஏதோ அவனையே தடவுவது போன்ற பிரமை. அவனின் கதகதப்பு அதில் இன்னும் ஒட்டியிருப்பது போன்ற எண்ணம்.
அவனுக்காக் காத்துக் காத்து அவள் கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். டொச் வகுப்புக்கான மற்றவர்கள் வந்து, “உள்ளே வரவில்லையா நீ..?” என்று கேட்டபோதும், “நீங்கள் போங்கள். வருகிறேன்..” என்றவள், அவளின் ஆசிரியரும் வந்தபிறகுதான் உள்ளே சென்றாள்.
சும்மாவே அவளுக்கு டொச் விளங்கிக் கொள்வது கஷ்டம். இன்று ஒன்றுமே விளங்கவில்லை.
கடனே என்று அமர்ந்திருந்தவள், வகுப்பு முடிந்ததும் முதலாவது ஆளாக வெளியே வந்தாள். வந்தவளின் கண்கள், அவள் சற்று முன் அமர்ந்திருந்த மரத்தடியை வேகமாக நோக்க, அங்கே சூர்யா அமந்திருந்தான்.
அவளுக்காகத்தான் அவன் காத்திருக்கிறான் என்பதில் பூவாய் மலர்ந்தது அவள் முகம்.
“சூர்யா…” என்றபடி அவனருகே ஓடியவள், அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“என்ன சூர்யா. ஏன் இவ்வளவு நாட்களும் நீங்கள் என்னோடு கதைக்கவில்லை. மேசேஜ்களுக்கு கூடப் பதிலில்லை. தாத்தா பாட்டியைப் பற்றி அன்று நான் அப்படிச் சொன்னதற்காகவா? நான் கதைத்தது பிழைதான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் எதற்காகவும் இனி இப்படி என்னோடு கதைக்காமல் இருக்காதீர்கள் சூர்யா..” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க. அவளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருப்பது அந்தப் பிரச்சினை ஒன்றுதான்.
அவன் எதுவுமே பேசவில்லை. அவளையே பாத்திருந்தான்.
“இப்போது கோபம் போய்விட்டதுதானே. நானும் இனி உங்களிடம் கோபப் படமாட்டேன். ஒரு நாள் கோபப் பட்டுவிட்டு இந்த மூன்று நாட்களும் பட்ட பாடு இருக்கே! அம்மாடி! இனி ஒருபோதும் அந்தத் துன்பம் வேண்டாம்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“உங்களைக் காணாமல் எனக்குப் பைத்தியமே பிடிக்காத குறை தான். இனி இப்படிச் செய்யாதீர்கள்..” என்றபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டவளின் உள்ளம், அந்தத் தோள் மட்டுமே காலம் முழுவதுக்கும் போதும் என்று எண்ணிக்கொண்டது.
அப்போதும் அவன் அமைதியாக இருக்க, நிமிர்ந்து பார்த்து, “என்ன சூர்யா. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உடம்புக்கு ஏதுமா..?” என்று கேட்டாள் இதமாக.
“இல்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். முக்கியமான விஷயம் ஒன்று கதைக்கவேண்டும் என்றேனே..” என்றான் அவன்.
“அமாம். நானும் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன விஷயம் சூர்யா?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, “இனிமேல் எனக்கு மெசேஜ் எதுவும் அனுப்பாதே. நாம் பேசிக்கொள்ளவும் வேண்டாம்..” என்றான் அவன்.
“ஏன் சூர்யா? உங்களோடு கதைக்காமல், மெசேஜ் அனுப்பாமல் என்னால் இருக்க முடியாதே…” என்றவளிடம்,
“இருக்கப் பழகு!” என்றான் அழுத்தமாக.
“ஏன்..?” என்று மீண்டும் அவள் கேட்க, “நாம் பிரிந்துவிடலாம்..” என்றான் அவன்.
“புரியவில்லை..” அவன் சொன்னதன் பொருளை ஆழமாக யோசிக்காமல் அவனை ஏறிட்டாள் லட்சனா. அவளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குள் எதுவும் நடந்துவிடவில்லை. அவன் கோபம் எப்போதும் உள்ளதுதானே என்பதுதான் அவள் எண்ணமாக இருந்தது.
“நமக்குள் ஒத்துவராது. அதனால் நீ உன் வழியைப் பார். நான் என் வழியைப் பார்கிறேன்.” என்றான் அவன் இன்னும் தெளிவாக.
அப்போதும் புரியாமல் அவனை ஏறிட்டவளுக்கு, அவன் சொன்னதன் அர்த்தம் விளங்கத் தொடங்க, நெஞ்சுக்கூடு தடதடக்கத் தொடங்கியது.
ஆனாலும் அவன் பேச்சை பெரிதாக எடுக்காமல் இருக்க முயன்றபடி, “விளையாடாதீர்கள் சூர்யா.” என்றாள், தன்னை நிதானமாகக் காட்டி.
“என்னைப் பார்த்தால், விளையாட்டுப் பேச்சு பேசுபவன் போலவா இருக்கிறது…” அழுத்தமான குரலில் அவன் கேட்க, அப்போதுதான் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதில் காதல் இல்லை. ஏன் அவள் மீதான கோபமும் இல்லை. உணர்ச்சிகளைத் துடைத்த முகமாக இறுகிக் கிடந்தது.
அதைப் பார்த்ததும் அவள் நெஞ்சில் ஒரு நடுக்கம். அவன் சொல்லப் போவதைக் கேட்காமல் ஓடிவிட்டால் என்ன என்று கூடத் தோன்றியது.
“ஆனால்.. நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா..?” என்றவளின் உள்ளம் ஏனோ உதறியது.
“சொல்வதன் அர்த்தம் புரியாமல் போக நானென்ன குழந்தையா?” என்று எரிந்து விழுந்தான் அவன். “நீதான் புரியாமல் பேசுகிறாய். யோசித்துப்பார். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை, சந்தோசமாகக் கழிந்த நேரத்தை விட சண்டை பிடித்ததுதான் அதிகம். அப்படி வாழ்க்கையையும் ஓட்ட முடியாது.” என்றான் அவன், பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.
“ஏன் சூர்யா, இப்படிப் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்..?” என்று தவிப்போடு அவள் கேட்க, அவன் அமைதி காத்தான்.
அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் இதோ இதோ என்று துளிர்த்தது. அழுதால் அவனுக்குப் பிடிக்காதே என்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“ப்ச்!” என்று சலித்தான் அவன். அடுத்தவருக்கு விளக்கம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேசத் தொடங்கினான்.
“எதையும் நான் வேடிக்கைக்கும் சொல்லவில்லை. விளையாட்டுக்கும் சொல்லவில்லை. அதை முதலில் நன்கு புரிந்துகொள்!” என்று அழுத்திச் சொன்னவன், தான் சொன்னதை அவள் உணர்ந்துகொள்ள அவகாசம் கொடுப்பது போல் சற்று அமைதியாக நின்றான்.
அவளோ அவன் பேசும் மொழியே புரியாதவள் போல் திகைத்து நின்றாள்.
“நிதானமாக இருந்து யோசித்தால், நமக்குள் ஒத்துவராது என்பது உனக்கே புரியும். நமக்குத் திருமணம் நடந்தாலும் இரண்டு நாட்களில் பிரிந்து நிற்போம். அதற்கு அது நடக்காமல் இருப்பதே மேல். அதுதான் பிரிந்துவிடலாம் என்கிறேன். எனக்கு நீ ஒத்துவர மாட்டாய். உனக்கு நான் ஒத்துவர மாட்டேன்.” என்றான் அவன் பிசிறற்ற குரலில்.
பேச்சு மூச்சற்றுப் போனது அவளுக்கு. இந்த மூன்று நாட்கள் பிரிவையே தாங்க முடியாது அவள் தவிக்கையில் நிரந்தரப் பிரிவா? அவனின்றி வாழ அவளால் முடியுமா?
அவளால் வாயை திறக்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய, “ஏ..ன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் சூர்யா. வேண்டாமே.. என்னால் தாங்கமுடியவில்லை…” என்றாள் வேதனையோடு.
“நீங்கள் சும்மா… சும்மாதானே இதெல்லாம் சொல்கிறீர்கள்…” ஆமாம் என்று சொல்லிவிடு என்று மன்றாடியது அவள் குரல்.
“நான் சும்மா சொல்லவில்லை!” என்றான் அவன் கடினமான குரலில்.
அவள் அவனைத் திகைப்போடு பார்க்க, “உன்னோடு பழகுவது எனக்கு மூச்சு முட்டுகிறது. அன்பு என்கிற பெயரில் உனக்கு அடிமையாக வாழ என்னால் முடியாது. பாசம் காட்டுகிறேன் என்று நீ செய்யும் செயல்கள் சினமூட்டுகிறது.” என்றான் கடினப்பட்ட குரலில். அடக்கப்பட்ட ஆத்திரம், இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபம் அத்தனையையும் இன்று காட்டினான்.
அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய?
“ஒருவர் மேல் அளவற்ற அன்பு காட்டுவது குற்றமா சூர்யா..?” நொந்த குரலில் கேட்டாள் சனா.
“நீ காட்டியது அன்பல்ல, அடக்குமுறை!” என்றான் அவன் இரக்கமே இல்லாமல்!
ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்த்து, நிலத்தில் வீசிக்கொண்டிருந்தது. இலைகளோ, பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பலவர்ண ஜாலங்கள் காட்டி, பார்ப்போரை தன்னழகில் சொக்கவைத்துக் கொண்டிருந்தன.
அந்த அழகான காலநிலையை அனுபவிக்கும் உணர்வற்றவளாக, தன்னறையின் ஜன்னல் வழியே வெளியை வெறித்துக்கொண்டிருந்தாள் சனா.
உள்ளம் இனம் புரியா அவஸ்தையினால் தவித்துக்கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை அவளைத் திட்டிவிட்டுப் போனவன், இதோ இன்றோடு மூன்றாவது நாளாகியும் அவளோடு கதைக்கவே இல்லை. அவளும் எத்தனையோ தடவைகள் முயன்றுவிட்டாள், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
அன்று அவள் சற்றுக் கோபமாகப் பேசிவிட்டாள் தான். அதுவும் அவன் தாத்தா பாட்டியை அப்படிப் பேசியது தவறுதான். ஆனால், அதற்குக் காரணம் அவன் மேல் வைத்துவிட்ட அளவற்ற அன்பல்லவா!
அக்காவாக இருந்தாலும், ஒருவர் அவனைக் குறையாகச் சொல்வதைக் கேட்கும் சக்தி அவளிடம் இல்லையே! அதனால் தானே அப்படி வெடித்தாள்.
ஆனாலும், அவளின் பேச்சுப் பிழை என்று உணர்ந்த நொடியில் இருந்து, எத்தனையோ தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேஜ்கள் அனுப்பி விட்டாள். அப்படி இருந்தும் அவன் கோபம் போகவில்லையா என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் நினைவுகளின் நாயகனே செல்லில் அழைத்தான்.
ஓடிச்சென்று கட்டிலில் கிடந்த கைபேசியைத் தூக்கினாள்.
‘சூர்யா அழைக்கிறான்’ என்று அதில் ஒளிரவும், கண்கள் கலங்க அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்து, “சூர்யா…” என்றாள் நெஞ்சை உருக்கும் குரலில்.
அந்தப் பக்கம் சில நொடிகள் நிசப்தம். இப்போது மனம் தடதடக்க, “சூர்யா…?” என்றாள் மீண்டும் ஆவலோடு கேள்வியாக.
“நான்தான். இன்று மாலை உனக்கு டொச் வகுப்பு இருக்கிறதுதானே?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது? ஒட்டாமை? ஆனால், அதை உணரும் நிலையில் அவள் இல்லை.
“அங்கு சந்திப்போமா சூர்யா..?” ஆசை, எதிர்பார்ப்பு என்று ஆவலே நிறைய அவள் கேட்க, “ம். வா அங்கு பேசலாம்.” என்றவன் கைபேசியை வைத்துவிட்டிருந்தான்.
அவளுக்கு அதுகூடக் குறையாகத் தெரியவில்லை. அவன் அவளோடு கதைத்துவிட்டான். அதுதான் நினைவில் நின்றது. மாலை அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலில் என்ன செய்வது என்றே தெரியாமல் அறையிலேயே அங்குமிங்கும் நடந்தாள்.
இதழ்களில் இளம் புன்னகை. ஏதோ அவனை இன்றுதான் முதன் முதலாக பார்க்கப் போவதுபோல்.
இப்போதே அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. நொடிக்கொரு தடவை சிவரில் தொங்கிய மணிக்கூட்டைப் பார்த்துப் பார்த்தே நேரத்தை ஓட்டியவளுக்கு பெரும் சந்தேகம் ஒன்று வந்தது.
அது அவர்கள் சந்திப்பது டொச் வகுப்புத் தொடங்க முதலா அல்லது முடிந்தபிறகா என்பதுதான்.
அதைக் கேட்பதற்கு என்கிற சாட்டை வைத்து அவனுக்கு செல்லில் அழைத்தாள். ம்கூம், அவன் எடுக்கவில்லை. ஆனாலும் அது அவளைப் பாதிக்கவில்லை.
எப்போதும் முடிந்தபிறகுதான் சந்திப்பது வழக்கம். இன்று எதற்கும் இருக்கட்டும் என்று, வகுப்புத் தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகே பள்ளியை நோக்கிச் சென்றாள்.
முதன்முதலில் அவர்கள் சந்தித்துக்கொண்ட இருக்கையில் அமர்ந்தவள், அன்று அவன் இருந்த ஓரத்தை தடவிக்கொடுத்தாள். ஏதோ அவனையே தடவுவது போன்ற பிரமை. அவனின் கதகதப்பு அதில் இன்னும் ஒட்டியிருப்பது போன்ற எண்ணம்.
அவனுக்காக் காத்துக் காத்து அவள் கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். டொச் வகுப்புக்கான மற்றவர்கள் வந்து, “உள்ளே வரவில்லையா நீ..?” என்று கேட்டபோதும், “நீங்கள் போங்கள். வருகிறேன்..” என்றவள், அவளின் ஆசிரியரும் வந்தபிறகுதான் உள்ளே சென்றாள்.
சும்மாவே அவளுக்கு டொச் விளங்கிக் கொள்வது கஷ்டம். இன்று ஒன்றுமே விளங்கவில்லை.
கடனே என்று அமர்ந்திருந்தவள், வகுப்பு முடிந்ததும் முதலாவது ஆளாக வெளியே வந்தாள். வந்தவளின் கண்கள், அவள் சற்று முன் அமர்ந்திருந்த மரத்தடியை வேகமாக நோக்க, அங்கே சூர்யா அமந்திருந்தான்.
அவளுக்காகத்தான் அவன் காத்திருக்கிறான் என்பதில் பூவாய் மலர்ந்தது அவள் முகம்.
“சூர்யா…” என்றபடி அவனருகே ஓடியவள், அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“என்ன சூர்யா. ஏன் இவ்வளவு நாட்களும் நீங்கள் என்னோடு கதைக்கவில்லை. மேசேஜ்களுக்கு கூடப் பதிலில்லை. தாத்தா பாட்டியைப் பற்றி அன்று நான் அப்படிச் சொன்னதற்காகவா? நான் கதைத்தது பிழைதான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் எதற்காகவும் இனி இப்படி என்னோடு கதைக்காமல் இருக்காதீர்கள் சூர்யா..” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க. அவளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருப்பது அந்தப் பிரச்சினை ஒன்றுதான்.
அவன் எதுவுமே பேசவில்லை. அவளையே பாத்திருந்தான்.
“இப்போது கோபம் போய்விட்டதுதானே. நானும் இனி உங்களிடம் கோபப் படமாட்டேன். ஒரு நாள் கோபப் பட்டுவிட்டு இந்த மூன்று நாட்களும் பட்ட பாடு இருக்கே! அம்மாடி! இனி ஒருபோதும் அந்தத் துன்பம் வேண்டாம்.” என்றாள் தழுதழுத்த குரலில்.
“உங்களைக் காணாமல் எனக்குப் பைத்தியமே பிடிக்காத குறை தான். இனி இப்படிச் செய்யாதீர்கள்..” என்றபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டவளின் உள்ளம், அந்தத் தோள் மட்டுமே காலம் முழுவதுக்கும் போதும் என்று எண்ணிக்கொண்டது.
அப்போதும் அவன் அமைதியாக இருக்க, நிமிர்ந்து பார்த்து, “என்ன சூர்யா. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உடம்புக்கு ஏதுமா..?” என்று கேட்டாள் இதமாக.
“இல்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். முக்கியமான விஷயம் ஒன்று கதைக்கவேண்டும் என்றேனே..” என்றான் அவன்.
“அமாம். நானும் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன விஷயம் சூர்யா?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, “இனிமேல் எனக்கு மெசேஜ் எதுவும் அனுப்பாதே. நாம் பேசிக்கொள்ளவும் வேண்டாம்..” என்றான் அவன்.
“ஏன் சூர்யா? உங்களோடு கதைக்காமல், மெசேஜ் அனுப்பாமல் என்னால் இருக்க முடியாதே…” என்றவளிடம்,
“இருக்கப் பழகு!” என்றான் அழுத்தமாக.
“ஏன்..?” என்று மீண்டும் அவள் கேட்க, “நாம் பிரிந்துவிடலாம்..” என்றான் அவன்.
“புரியவில்லை..” அவன் சொன்னதன் பொருளை ஆழமாக யோசிக்காமல் அவனை ஏறிட்டாள் லட்சனா. அவளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குள் எதுவும் நடந்துவிடவில்லை. அவன் கோபம் எப்போதும் உள்ளதுதானே என்பதுதான் அவள் எண்ணமாக இருந்தது.
“நமக்குள் ஒத்துவராது. அதனால் நீ உன் வழியைப் பார். நான் என் வழியைப் பார்கிறேன்.” என்றான் அவன் இன்னும் தெளிவாக.
அப்போதும் புரியாமல் அவனை ஏறிட்டவளுக்கு, அவன் சொன்னதன் அர்த்தம் விளங்கத் தொடங்க, நெஞ்சுக்கூடு தடதடக்கத் தொடங்கியது.
ஆனாலும் அவன் பேச்சை பெரிதாக எடுக்காமல் இருக்க முயன்றபடி, “விளையாடாதீர்கள் சூர்யா.” என்றாள், தன்னை நிதானமாகக் காட்டி.
“என்னைப் பார்த்தால், விளையாட்டுப் பேச்சு பேசுபவன் போலவா இருக்கிறது…” அழுத்தமான குரலில் அவன் கேட்க, அப்போதுதான் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதில் காதல் இல்லை. ஏன் அவள் மீதான கோபமும் இல்லை. உணர்ச்சிகளைத் துடைத்த முகமாக இறுகிக் கிடந்தது.
அதைப் பார்த்ததும் அவள் நெஞ்சில் ஒரு நடுக்கம். அவன் சொல்லப் போவதைக் கேட்காமல் ஓடிவிட்டால் என்ன என்று கூடத் தோன்றியது.
“ஆனால்.. நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா..?” என்றவளின் உள்ளம் ஏனோ உதறியது.
“சொல்வதன் அர்த்தம் புரியாமல் போக நானென்ன குழந்தையா?” என்று எரிந்து விழுந்தான் அவன். “நீதான் புரியாமல் பேசுகிறாய். யோசித்துப்பார். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை, சந்தோசமாகக் கழிந்த நேரத்தை விட சண்டை பிடித்ததுதான் அதிகம். அப்படி வாழ்க்கையையும் ஓட்ட முடியாது.” என்றான் அவன், பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.
“ஏன் சூர்யா, இப்படிப் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்..?” என்று தவிப்போடு அவள் கேட்க, அவன் அமைதி காத்தான்.
அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் இதோ இதோ என்று துளிர்த்தது. அழுதால் அவனுக்குப் பிடிக்காதே என்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
“ப்ச்!” என்று சலித்தான் அவன். அடுத்தவருக்கு விளக்கம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேசத் தொடங்கினான்.
“எதையும் நான் வேடிக்கைக்கும் சொல்லவில்லை. விளையாட்டுக்கும் சொல்லவில்லை. அதை முதலில் நன்கு புரிந்துகொள்!” என்று அழுத்திச் சொன்னவன், தான் சொன்னதை அவள் உணர்ந்துகொள்ள அவகாசம் கொடுப்பது போல் சற்று அமைதியாக நின்றான்.
அவளோ அவன் பேசும் மொழியே புரியாதவள் போல் திகைத்து நின்றாள்.
“நிதானமாக இருந்து யோசித்தால், நமக்குள் ஒத்துவராது என்பது உனக்கே புரியும். நமக்குத் திருமணம் நடந்தாலும் இரண்டு நாட்களில் பிரிந்து நிற்போம். அதற்கு அது நடக்காமல் இருப்பதே மேல். அதுதான் பிரிந்துவிடலாம் என்கிறேன். எனக்கு நீ ஒத்துவர மாட்டாய். உனக்கு நான் ஒத்துவர மாட்டேன்.” என்றான் அவன் பிசிறற்ற குரலில்.
பேச்சு மூச்சற்றுப் போனது அவளுக்கு. இந்த மூன்று நாட்கள் பிரிவையே தாங்க முடியாது அவள் தவிக்கையில் நிரந்தரப் பிரிவா? அவனின்றி வாழ அவளால் முடியுமா?
அவளால் வாயை திறக்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய, “ஏ..ன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் சூர்யா. வேண்டாமே.. என்னால் தாங்கமுடியவில்லை…” என்றாள் வேதனையோடு.
“நீங்கள் சும்மா… சும்மாதானே இதெல்லாம் சொல்கிறீர்கள்…” ஆமாம் என்று சொல்லிவிடு என்று மன்றாடியது அவள் குரல்.
“நான் சும்மா சொல்லவில்லை!” என்றான் அவன் கடினமான குரலில்.
அவள் அவனைத் திகைப்போடு பார்க்க, “உன்னோடு பழகுவது எனக்கு மூச்சு முட்டுகிறது. அன்பு என்கிற பெயரில் உனக்கு அடிமையாக வாழ என்னால் முடியாது. பாசம் காட்டுகிறேன் என்று நீ செய்யும் செயல்கள் சினமூட்டுகிறது.” என்றான் கடினப்பட்ட குரலில். அடக்கப்பட்ட ஆத்திரம், இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபம் அத்தனையையும் இன்று காட்டினான்.
அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய?
“ஒருவர் மேல் அளவற்ற அன்பு காட்டுவது குற்றமா சூர்யா..?” நொந்த குரலில் கேட்டாள் சனா.
“நீ காட்டியது அன்பல்ல, அடக்குமுறை!” என்றான் அவன் இரக்கமே இல்லாமல்!