செந்தூரத்தின் ‘இம்மாத எழுத்தாளர்’ பகுதியை அலங்கரிக்கவுள்ளார்கள் இருவர். குடும்ப நாவல்களை விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு இவர்கள் புதியவர்களாக இருக்க முடியாது.
மனதை இலேசாக்கவல்ல நகைச்சுவை உணர்வு கலந்து, கலகலவென்ற உறவுகள், நட்புகள் சூழ நகரும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தாம் சொல்லவந்த கருத்துகளை அழகாகச் சொல்லும் கதைகளுக்குச் சொந்தக்காரர்களான, எழுத்தாளர் பிரேமா மற்றும் திருமதி லாவண்யா இருவரையும், செந்தூரத்தின் சார்பாகக் கேள்விகளோடு அணுகியபோது மனம் திறந்து தம் பதில்களைத் தந்தார்கள்.
அவற்றை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இருவரதும் எதிர்கால எழுத்துகள் மேலும் மேலும் மெருகோடு உங்களை நாடிவர எங்கள் அன்பு வாழ்த்துகள்!
இன்று எல்லாமே இணையம் என்றாகிப்போன நிலையில், நம்மை நாம் வெளியுலகுக்கு உணர்த்த, இணைய உலகம் கைக்குள் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தும் அதிலிருந்து சற்றே விலகி இருப்பவர் நீங்கள்.
அந்த வகையில், குடும்ப நாவல்கள், அதுவும் மனதை இலகுவாக்கவல்ல, உதடுகளில் உறைந்த முறுவலோடு வாசித்து முடிக்கும் வகையிலான நாவல்களின் சொந்தக்காரியான நீங்கள், உங்களைப்பற்றி எங்கள் வாசகர்களுடன் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.
உங்கள் சிறு பிராயம், குடும்பம், பிள்ளைகள், பள்ளி, கல்லூரி எனச் சுருங்கச் சொன்னால் உங்கள் வாசகர்களும் எங்கள் வாசகர்களும் அறிந்துகொள்வார்கள்.
பிரேமா: நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘அருப்புக்கோட்டை’ என்னும் ஊரில். பொறியியல் படிப்பிற்காகக் கோவை சென்றேன். திருமணத்திற்கு பின் சென்னைவாசியாகி விட்டேன். எனக்கு ஒரு மகன் மட்டுமே! அவன் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
திருமதி லாவண்யா: சொந்த ஊர் கோவை. அம்மா, குடும்பத் தலைவி. தந்தை, காவல்துறையில் ஆய்வாளராக இருந்தார். நான் இளங்கலை கடைசி வருடம் படிக்கையில் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் உயிரிழந்தார். உடன்பிறந்த ஒரு அண்ணன், நியூயார்க்கில் வசிக்கிறார்.
பள்ளி மற்றும் இளங்கலை முடித்தது அனைத்துமே கோவையில். இளங்கலையில் விவசாயப் பாடத்தை விரும்பிப் படித்தேன். அதன்பிறகு, திருமணம் முடிந்து அமெரிக்கா வாசம். இங்கே மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, அதன்பின்னர் இரண்டு வருடங்கள் டொராண்டோவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் வேலையில் இருந்தேன். பரபரவென்று இடைவிடாது சுற்றிக் கொண்டிருந்த நான் குழந்தைகளுக்கென பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன்.
கணவர் சத்யா, மகன் நிதின் (6), மகள் நேயா (1 ½) இவர்களுடன் கலிபோர்னியாவில் தற்சமயம் வசிக்கிறேன்.
மனதை இலேசாக்கவல்ல நகைச்சுவை உணர்வு கலந்து, கலகலவென்ற உறவுகள், நட்புகள் சூழ நகரும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தாம் சொல்லவந்த கருத்துகளை அழகாகச் சொல்லும் கதைகளுக்குச் சொந்தக்காரர்களான, எழுத்தாளர் பிரேமா மற்றும் திருமதி லாவண்யா இருவரையும், செந்தூரத்தின் சார்பாகக் கேள்விகளோடு அணுகியபோது மனம் திறந்து தம் பதில்களைத் தந்தார்கள்.
அவற்றை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இருவரதும் எதிர்கால எழுத்துகள் மேலும் மேலும் மெருகோடு உங்களை நாடிவர எங்கள் அன்பு வாழ்த்துகள்!
இன்று எல்லாமே இணையம் என்றாகிப்போன நிலையில், நம்மை நாம் வெளியுலகுக்கு உணர்த்த, இணைய உலகம் கைக்குள் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தும் அதிலிருந்து சற்றே விலகி இருப்பவர் நீங்கள்.
அந்த வகையில், குடும்ப நாவல்கள், அதுவும் மனதை இலகுவாக்கவல்ல, உதடுகளில் உறைந்த முறுவலோடு வாசித்து முடிக்கும் வகையிலான நாவல்களின் சொந்தக்காரியான நீங்கள், உங்களைப்பற்றி எங்கள் வாசகர்களுடன் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.
உங்கள் சிறு பிராயம், குடும்பம், பிள்ளைகள், பள்ளி, கல்லூரி எனச் சுருங்கச் சொன்னால் உங்கள் வாசகர்களும் எங்கள் வாசகர்களும் அறிந்துகொள்வார்கள்.
பிரேமா: நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘அருப்புக்கோட்டை’ என்னும் ஊரில். பொறியியல் படிப்பிற்காகக் கோவை சென்றேன். திருமணத்திற்கு பின் சென்னைவாசியாகி விட்டேன். எனக்கு ஒரு மகன் மட்டுமே! அவன் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
திருமதி லாவண்யா: சொந்த ஊர் கோவை. அம்மா, குடும்பத் தலைவி. தந்தை, காவல்துறையில் ஆய்வாளராக இருந்தார். நான் இளங்கலை கடைசி வருடம் படிக்கையில் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் உயிரிழந்தார். உடன்பிறந்த ஒரு அண்ணன், நியூயார்க்கில் வசிக்கிறார்.
பள்ளி மற்றும் இளங்கலை முடித்தது அனைத்துமே கோவையில். இளங்கலையில் விவசாயப் பாடத்தை விரும்பிப் படித்தேன். அதன்பிறகு, திருமணம் முடிந்து அமெரிக்கா வாசம். இங்கே மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, அதன்பின்னர் இரண்டு வருடங்கள் டொராண்டோவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் வேலையில் இருந்தேன். பரபரவென்று இடைவிடாது சுற்றிக் கொண்டிருந்த நான் குழந்தைகளுக்கென பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன்.
கணவர் சத்யா, மகன் நிதின் (6), மகள் நேயா (1 ½) இவர்களுடன் கலிபோர்னியாவில் தற்சமயம் வசிக்கிறேன்.