Hai mam...I love your stories...in your story the importance of the all chacters is good...i really wounder how you can manage by balacing all of those things...even in sometimes i may wounder whether it is a true story or not....
But my fav part is naming ur character and those nick names...really superb mam...soulful...and the way of expressing their love also very nice....
So by guessing You r a very lovelable person...who take care of all...wounderful mother to your children...and (kandeepa) lovable wife...(sometimes i may think that ur romance part in your story is may be your realtime experince)(just for kidding mam dont mind it)
You may consider good and bad side of each person...from.your writing it seems clear....
As like you know NNV is my all time fav story....
My one of the comfort zone is include your writing mam...those words you used describe the emotional part is my fav...
Keep on writing mam...we all are waiting for your stories...
ஹாய் உமா,
எப்போதுமே உங்களின் அன்பு அலாதியானது. மென்மையான இதயம் கொண்டவர் என்று நிறையமுறை நினைத்து இருக்கிறேன். உங்களின் அன்பை எதிர்பார்ப்பை கேள்வியை ஆசையை கூட மென்மையாக தனிப்பட்ட முறையில் எப்போதுமே வெளிப்படுத்தும் பண்பான ஒருவர்தான் நீங்கள். அதை திரும்பவும் நிரூபித்து இருக்கிறீங்க.
இது பதில் புகழாரம் இல்லை. உண்மையிலேயே நான் உணர்ந்து இருக்கிறேன். உங்களின் எதிர்பார்ப்பில் கூட ஒரு மென்மை இருக்கும். அதே மென்மையோடும் அன்போடும் நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகுந்த நிறைவை தருது. என் இதயத்தில் இருந்து நன்றி.
சும்மா விளையாட்டுக்கு என்று ஆரம்பித்த கதை எழுதுவது உங்களைப்போன்ற நல்ல அன்பான உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கு என்று நினைக்கும்போது, இதைவிட வேறு என்ன வேண்டும்?
எப்போதுமே எனக்கு என்னைப் பிடிக்கும். குடும்பத்தை தொழிலை பிள்ளைகளை என்று எல்லாவற்றிலும் மிகுந்த கவனமாக இருப்பேன். அப்படியே எனக்குப் பிடித்த எழுத்திலும். முடிந்தவரை என்னுடைய முழுமையைத்தான் கொடுப்பேன். ஆக நான் என்னையும் கைவிட்டுவிடவில்லை. என் ஆசைகளை எனக்குப் பிடித்தவைகளைத்தான் நானும் செய்கிறேன். அதன்மூலம் என் எழுத்தை நேசிக்கும், என் எழுத்தின் மூலம் அறிந்துகொண்ட என்னை நேசிக்கும் உங்களை போன்றவர்களின் அன்பு கிடைப்பது பாக்கியமே. நன்றி.
பெயர்களை தேர்வு செய்வதில் உண்மையிலேயே கொஞ்சம் கவனம் எடுப்பேன் தான். நல்ல தமிழ் பெயர்களை முடிந்தவரை அறிமுகம் செய்ய விரும்புவேன். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா, ஒரு தோழி அவரும் என் கதைகளை விரும்பி வாசிப்பவர் தான். மிகுந்த அன்பானவர். அவருடைய மகனுக்கு செந்தூரன் பெயராம். அந்தப் பெயரைச் சூட்ட, நிலவே நீ என் சொந்தமடி என்கிற என் கதையின் நாயகன் செந்தூரனும் ஒரு காரணம் என்றார். உணர்வுகளை தெளிவாகச் சொல்லுவேன் என்பார்கள். அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு என் சந்தோசத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படி ஒரு சந்தோசம்.
(sometimes i may think that ur romance part in your story is may be your realtime experince)(just for kidding mam dont mind it)
ஹாஹா... இதை என் கணவரைத்தான் கேக்கவேணும். கொடுமைக்காரி என்பாராக இருக்கும்.
உண்மை, யாரையுமே குற்றவாளியாகவோ அல்லது அப்பழுக்கற்ற நல்லவராகவோ காட்ட விரும்புவது குறைவுதான். யாரிடம் குறைகள் இல்லை சொல்லுங்கோ.. அப்படித்தான் இயல்பான மனிதர்களை அவர்களின் ஆசாபாசங்களோடு முடிந்தவரை சொல்ல நினைப்பேன்.
My one of the comfort zone is include your writing mam...those words you used describe the emotional part is my fav..
இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு? மிக்க மிக்க மிக்க நன்றி உமா.
வேற என்ன சொல்ல? மிக்க மிக்க நன்றி உமா. நிச்சயமாக இத்தனை அழகான என்னை நெகிழ வைக்கும் அன்பான வார்த்தைகளை எதிர்பார்க்கவே இல்லை. நன்றி நன்றி.