ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்- சுதாராஜ்
அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும் இப்பொழுதெல்லாம் வயதின் நினைவும், அதையொட்டிய கவலைகளும் தோன்றுவதற்குக் காரணம் அவன்தானோ? அவனைக் காண நேர்ந்தபிறகுதானே இந்தப் புதுமையான மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கும்.. தன் மன நினைவுகளுக்கும் கவலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும் புரியவில்லை. அவனைக் காணாமலே விட்டிருக்கலாம். வாழ்க்கையில் வெவ்வேறு விதங்களில் கவலைகளின் தோற்றங்களை அலாதியான துணிவுடனே சுமந்து வந்தவள் புனிதம். இதென்ன புதுவிதமான கவலை? இந்த முப்பத்திரண்டு வயதை நினைத்து!
இந்த வயதில் எத்தனை பெண்கள் ஊரிலே குடும்பமும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள். கணவன்… குழந்தைகள்…. பொறுப்பு…. சுகம்! மண்ணாங்கட்டி.. குடும்பத்திலும் பிள்ளை குட்டிகளிலும் அப்படி என்ன சுகம்தான் கொட்டிக்கிடக்கிறது? சீச்சி!…. அந்தப் பழம் புளிக்கும்!
ஊரிலே அப்பா…. அம்மா…. தங்கைகள்…. தம்பிகள் எல்லோரையும் பிரிந்து, கடல் கடந்து வந்து இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் பணத்திற்காகக் காயவேண்டிக் கிடக்கிறதே.. கவலைகளுக்கு அதுதான் காரணமோ?
பணத்துக்காக இப்படியொரு செயற்கையான வாழ்க்கையா? என்ன இலகுவாகச் சொல்லியாயிற்று…. பணத்திற்காக இப்படியொரு வாழ்க்கையா என்று! பணம்! பணம்தானே வேண்டும்? அப்பாவுக்கு… சகோதரர்களுக்கு… மாப்பிள்ளைமாருக்கு.. எல்லோருக்கும் வேண்டியது அதுதான். அது மட்டும்தான்! பிறகு பணத்தைத் தேடி எங்கே போனால்தான் என்ன கேவலம் இருக்கிறது?
மாதா மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்பமுடிகிறதே, சுளையாக! அவர்கள் வயிறு நிறையச் சாப்பிடுவார்கள். அம்மா ஏதோ சீட்டுக்கூடப் பிடிக்கிறாளாம்…. ‘உனது கலியாணத்துக்கு உதவும்” என்று கடிதம் எழுதியிருந்தாள். கலியாணமும் கச்சேரியும்! தங்கச்சிகளுக்காவது உரிய காலத்தில் ஒழுங்காக நடந்தால் சரி. அந்த ஒரு விஷயத்தை நினைக்கிறபொழுதுதான் சத்தியமாக ஆறுதலடைய முடிகிறது.
அப்பா செய்த கைங்கரியங்களில் ஒன்று: மூத்த நான்கையும் பெண்களாவே பெற்றுப்போட்டது. ஆனால் நேரகாலத்திற்கு அவர்களுக்கு ஒவ்வொருவனைப் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை. நேரகாலத்திற்குக் கஞ்சியும் ஊற்ற முடியவில்லை. பாவம் அவர் என்ன செய்ய?
தனது கடமையை உணர்ந்துகொண்டு, அரபுதேசம் வந்துவிட்டாள் புனிதம். “ஹவுஸ்மெயிட்”டாக மூன்று மாதத்திற்கு முதல் குவைத்திற்கு வந்தாள். அவளோடு சேர்ந்து பதினைந்து பெண்களை “ஏஜெண்ட்“ அனுப்பிவைத்தான். புனிதத்திற்கு ஆங்கிலக் குடும்பத்திற்குப் பணிபுரிய வேண்டிவந்தது.
ரொபேர்ட் கோல் தம்பதியினரின் குழந்தையைக் கவனிப்பதுதான் புனிதத்தின் முக்கிய வேலை. வீட்டு வேலைகள் குறைவாகவே இருக்கும். திருமதி கோல் புனிதத்தை ஒரு பணிப்பெண்ணாகவா கருதுகிறாள்? தங்கள் குடும்பத்திலேயுள்ள ஒருத்திமாதிரி எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள். வயிறு நிறையச் சாப்பாடு, பழவகைகள், ரெலிவிசன், தனியறை, கட்டில் மெத்தை சொகுசு! இந்த வசதிகளையெல்லாம் ஊரிலிருந்தால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா என எண்ணிக்கொண்டு மனதை ஆறுதல் படுத்த நினைத்தாலும்… உள்ளே முட்டி முட்டி நோவெடுக்கிற நினைவுகள்.
குழந்தையை “பிராமில்” இருத்தி உருட்டியவாறு அல்பைட் வீதியில் நடந்து வந்தாள். கால் நடக்கிற அலுவலைச் செய்கிறது. குழந்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து அவளிடம் எதையோ சொல்ல எத்தனிக்கிறது. அதையும் கவனிக்கவில்லை. மனது நினைக்கிறது. நினைத்து, நினைத்து அது பறக்கிற இடம் எங்குதானென்று புரியவில்லை. மனதின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் முடியாது. கவலைகளுக்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கும்வரை அதைச் சமாதானிக்கவும் முடியாது.
அல்பைட் வீதியில் நடந்துவந்து “மெசில்லா ஹோட்டல்“ சந்தியை அடைந்ததும் நின்றாள். இங்கு நெடுநேரம்வரை நிற்கலாம். ஏழுமணிவரையானாலும். இன்னும் ஒரு மணித்தியாலமளவிற்தானே இருக்கிறது?
அதற்குள் அவன் எப்படியும் வந்துவிடுவான். அவனை நினைக்கிறபொழுது பொங்குகின்ற ஓர் இன்பம். காரை விட்டு இறங்குகின்றபோதே அந்தக் கண்களையும் ஹோட்டலினுள் நுழையுமுன்னர்…. அவசரத்தில் மலர்த்துகிற அந்தப் புன்னகையையும் தரிசிக்கலாமே! அவ்வளவுதானா? அதற்காகத்தானா இந்தக் கவலைகளெல்லாம்? முட்டாள் பெண்ணே அவன் எங்கே… நீ எங்கே… சும்மா போ!
அந்தக் கண்களையும், மலர்ச்சியையும் அவளுக்காகவே அவன் வீசுகிறபொழுது… அவள் ஏன் மணிக்கணக்காகவேனும் நிற்கக்கூடாது? நிற்பேன். அவனது பார்வைக்காக. அதற்குப் பிறகு…. இரவில் படுக்கையில் அவனது பார்வையும், சிரிப்பும் நினைவுக்கு வரும். அந்தப் பார்வையின் செக்ஸை நினைத்துக்கொண்டே படுக்கலாம். ஸ்வீட் ட்றீம்ஸ்!
இந்த மாலைபொழுதை நன்றாக ரசிக்கமுடிகிறது. இன்றைய மாலை மட்டுமல்ல, இங்கு மாலைப்பொழுதுகளே மிகவும் இனிமையானவை. தனிமையான வாழ்வில்…. அன்பு…. பாசம்…. எல்லாவற்றையும் தூரவிட்டு இருக்கும் வெறும் செயற்கையான வாழ்வில்… எப்படா ஒரு பொழுது கழியும் என்பதுபோல இருக்கும். இந்தத் தனிமையான வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து ஒருவனைக் கட்டிக்கொள்வதென்றால்கூட…. பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு சீக்கிரமாக ஊருக்குப் போய்விடவேண்டும். காலையில் எழுகிறபொழுது எவ்வளவு கவலை தோன்றுகிறது. இது என்ன செயற்கையான வாழ்வு? எனக்காக யார் இருக்கிறார்கள். நான் தனிய! மாலை வந்தால் கொஞ்சம் குதூகலம்… அப்பாடா ஒருநாள் முடியப்போகிறதே!.
ஆறு மணிக்கெல்லாம் மறையாத ஜுன் மாதத்துச் சூரியன். குவைத் சிற்றியை நோக்கிப் பணக்காரத்தனமாகப் பறக்கின்ற வாகனங்களில்… அணிகோர்த்து நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களின் தலைகளாய் இருக்கும் தண்ணீர் தாங்கிகளில் எல்லாம் பட்டுத் தெறிக்கும் மஞ்சள் வெய்யில் கண்களைக் கூசவைக்கிறது. அவனது பார்வையும் அப்படித்தான்! மெசில்லா ஹோட்டலுக்கு நிறைப் பேர் வருகிறார்கள். எல்லோரும் பெரிய மனிதர்கள். ஹோட்டலுக்கு மிதந்து வருகின்ற கார்களையும்… இறங்கிச் செல்லும் வெள்ளைக்காரர்களையும் பார்த்துக்கொண்டே இருப்பது நல்ல பொழுதுபோக்குத்தான். எத்தனை விதமான கார்கள்! எத்தனை விதமான வெள்ளைக்காரர்கள்! அரபிய உடையில் வருபவர்களைப் பார்த்து இவர்கள் அரபியர்கள் எனச் சொல்லலாம். மற்றப்படி வெள்ளைத் தோல்காரர்கள் எல்லோரையும் வெள்ளைக்காரர்களாகத்தான் நினைக்க முடிகிறது. வெள்ளைத் தோலிலும் விதவிதமான வெள்ளைகள். அதை வைத்துக்கொண்டே இவன் வேறு நாடு… இவன் வேறு நாடு என்று நினைக்க முடியும். கோட் – சூட் – ரை சப்பாத்து, டொக், டொக் எவ்வளவு கம்பீரமாக நடக்கிறார்கள். எங்களை அசைக்க யாரும் இல்லை என்பதுபோல!
எங்களுடைய சனங்களுக்கு இந்தக் கம்பீரமும் திமிரும் வரவே வராதா? சில வெள்ளைக்காரர்கள் தாங்களே வாகனங்களைச் செலுத்தி வருவர். சிலருக்காக “ட்றைவர்“ ஓட்டுவார். அதிலும் கவலையான விஷயம் அந்த ட்றைவர்கள் எல்லாம் எங்கள் பக்கத்தவராக இருப்பது. இது என்ன நீதியோ? இங்கு வருகிற எங்களுடைய ஆட்களெல்லாம் ஏதாவது சிறிய, சிறிய வேலைகளுக்குத்தானே வருகிறார்கள். லேபர்கள்… ஹவுஸ் மெயிட்ஸ்… ட்றைவர்ஸ்…. இடியட்ஸ்! ஒரு நாளைக்காவது வெள்ளையன் கார் ஓட்டிவர, அதிலிருந்து ஒரு கறுப்புத்தோல் இறங்கவேண்டுமே. எவ்வளவு அருமையாக இருக்கும்!
எந்த நேரத்தில் புனிதம் அந்தக் கனவைக் கண்டாளோ! அவன் வந்தானே அன்றைக்கு! கோட் – சூட் – ரை – சப்பாத்து – டொக் – டொக்! எவ்வளவு கம்பீரமாக! அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே… ‘எங்களுடைய நாட்டிலிருந்தும்..!’ என நினைத்தாள். அப்படி நினைக்கத்தான் அவள் விரும்பினாள். அவன் பெரிய உத்தியோகத்தனாக இருக்கும். “டொக்டராக, இஞ்சினியராக..!” இந்தப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் குடியிருக்கிறான் என்றால் லேசுப்பட்ட ஆளாகவா இருப்பான்? வெள்ளைத் தோல் ட்றைவர் போய்விட்டான். எங்களுடைய பெரியவனும் போய்விட்டான். சாய்…. வடிவாகப் பார்க்க முடியாமல் போய்விட்டதே! நாளைக்குப் பார்க்கவேண்டும். நாளைக்கு வருவானோ…. என்னவோ!
அன்றைய மாலை மறைந்துவிட்டது. மாலை எவ்வளவு அழகாக இருக்குமோ… அப்படித்தான் இரவும் இதமாக வரும். ஒருநாள் முடிந்துவிட்ட சுகம்! இன்னும் எத்தனை நாட்களில் ஊருக்குப் போகலாம். ஊரிலே அப்பா, அம்மா சகோதரர்கள்.. கல்யாணம்? அட, இந்த முப்பத்திரண்டு வயதுக்குப் பிறகுமா? இப்படி வெளிநாட்டிலிருந்து உழைத்துக் கொண்டுபோய், ஒரு நாளைக்கு அவள் மணவறையில் புதுமணப் பெண்ணாக? இரவுகளுக்கும் சுகமான நினைவுகளுக்கும் குறைச்சலே இல்லை! ஒரு மாலை மறைந்துவிட்ட இனிமையை.. ஒரு நாள் முடிந்துவிட்ட இன்பத்தை அந்த நினைவுகளைத் தொடர்ந்து ஏற்படும் ஏக்கம் கெடுத்துவிடுகிறது. ஒரு நாள் முடியப் போவதால் சந்தோஷமும் அதனாலேயே வயதில் அதிகரிப்பு ஏற்படுகிறது என்ற கவலையும் தோன்றிவிடுகிறது. இது என்ன இன்பமும் துன்பமும் கலந்த வேளை? மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த நினைவுகளைத் தருகிற நேரம்! இப்போது புதுப் பிரச்சினையும் முளைத்திருக்கிறது. அவன் நாளைக்கும் வருவானோ… என்னவோ!
அடுத்த நாளும் வந்தான். புனிதம் எதிர்பார்த்து நின்ற நேரம் சரியாக இருந்தது. அந்த “பியூக்“ கார் அமைதியாக வந்து மெதுமையாக நின்றது. அவன் இறங்கினான். புனிதம் ஆர்வம் மேலிட்டுப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான். தற்செயலாகத்தான் அவனும் கண்டிருக்கவேண்டும். ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும்.. அவனிடத்திலும் தோன்றியமாதிரி இருந்தது. அல்லது அது தனது பிரமையோ என்று தெரியவில்லை. அவளைக் கண்ட மாத்திரத்தே அந்த நடையிலும் மிடுக்கிலும் ஒரு தளர்ச்சி தோன்றியது போலிருந்தது! ஏனோ? என்ன நினைத்தானோ? போய்விட்டான், பேசாமலே போய்விட்டான்.
அடுத்த நாளும் அதே நேரம் வந்தது. மிதக்கிற “பியூக்“கின் கதவு திறக்க அவன் கம்பீரமாக வெளிப்பட்டான். நேற்றையைப்போல அவசரமாக நுழையாமல்…. அவளைத் தேடுகிறானோ…. அவளைக் கண்டதும் புன்சிரிப்பு…. சிரிக்கலாமா…? கூடாதா….?
அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும் இப்பொழுதெல்லாம் வயதின் நினைவும், அதையொட்டிய கவலைகளும் தோன்றுவதற்குக் காரணம் அவன்தானோ? அவனைக் காண நேர்ந்தபிறகுதானே இந்தப் புதுமையான மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கும்.. தன் மன நினைவுகளுக்கும் கவலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும் புரியவில்லை. அவனைக் காணாமலே விட்டிருக்கலாம். வாழ்க்கையில் வெவ்வேறு விதங்களில் கவலைகளின் தோற்றங்களை அலாதியான துணிவுடனே சுமந்து வந்தவள் புனிதம். இதென்ன புதுவிதமான கவலை? இந்த முப்பத்திரண்டு வயதை நினைத்து!
இந்த வயதில் எத்தனை பெண்கள் ஊரிலே குடும்பமும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள். கணவன்… குழந்தைகள்…. பொறுப்பு…. சுகம்! மண்ணாங்கட்டி.. குடும்பத்திலும் பிள்ளை குட்டிகளிலும் அப்படி என்ன சுகம்தான் கொட்டிக்கிடக்கிறது? சீச்சி!…. அந்தப் பழம் புளிக்கும்!
ஊரிலே அப்பா…. அம்மா…. தங்கைகள்…. தம்பிகள் எல்லோரையும் பிரிந்து, கடல் கடந்து வந்து இந்தப் பாலைவனப் பிரதேசத்தில் பணத்திற்காகக் காயவேண்டிக் கிடக்கிறதே.. கவலைகளுக்கு அதுதான் காரணமோ?
பணத்துக்காக இப்படியொரு செயற்கையான வாழ்க்கையா? என்ன இலகுவாகச் சொல்லியாயிற்று…. பணத்திற்காக இப்படியொரு வாழ்க்கையா என்று! பணம்! பணம்தானே வேண்டும்? அப்பாவுக்கு… சகோதரர்களுக்கு… மாப்பிள்ளைமாருக்கு.. எல்லோருக்கும் வேண்டியது அதுதான். அது மட்டும்தான்! பிறகு பணத்தைத் தேடி எங்கே போனால்தான் என்ன கேவலம் இருக்கிறது?
மாதா மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்பமுடிகிறதே, சுளையாக! அவர்கள் வயிறு நிறையச் சாப்பிடுவார்கள். அம்மா ஏதோ சீட்டுக்கூடப் பிடிக்கிறாளாம்…. ‘உனது கலியாணத்துக்கு உதவும்” என்று கடிதம் எழுதியிருந்தாள். கலியாணமும் கச்சேரியும்! தங்கச்சிகளுக்காவது உரிய காலத்தில் ஒழுங்காக நடந்தால் சரி. அந்த ஒரு விஷயத்தை நினைக்கிறபொழுதுதான் சத்தியமாக ஆறுதலடைய முடிகிறது.
அப்பா செய்த கைங்கரியங்களில் ஒன்று: மூத்த நான்கையும் பெண்களாவே பெற்றுப்போட்டது. ஆனால் நேரகாலத்திற்கு அவர்களுக்கு ஒவ்வொருவனைப் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை. நேரகாலத்திற்குக் கஞ்சியும் ஊற்ற முடியவில்லை. பாவம் அவர் என்ன செய்ய?
தனது கடமையை உணர்ந்துகொண்டு, அரபுதேசம் வந்துவிட்டாள் புனிதம். “ஹவுஸ்மெயிட்”டாக மூன்று மாதத்திற்கு முதல் குவைத்திற்கு வந்தாள். அவளோடு சேர்ந்து பதினைந்து பெண்களை “ஏஜெண்ட்“ அனுப்பிவைத்தான். புனிதத்திற்கு ஆங்கிலக் குடும்பத்திற்குப் பணிபுரிய வேண்டிவந்தது.
ரொபேர்ட் கோல் தம்பதியினரின் குழந்தையைக் கவனிப்பதுதான் புனிதத்தின் முக்கிய வேலை. வீட்டு வேலைகள் குறைவாகவே இருக்கும். திருமதி கோல் புனிதத்தை ஒரு பணிப்பெண்ணாகவா கருதுகிறாள்? தங்கள் குடும்பத்திலேயுள்ள ஒருத்திமாதிரி எவ்வளவு அன்பாக நடத்துகிறார்கள். வயிறு நிறையச் சாப்பாடு, பழவகைகள், ரெலிவிசன், தனியறை, கட்டில் மெத்தை சொகுசு! இந்த வசதிகளையெல்லாம் ஊரிலிருந்தால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியுமா என எண்ணிக்கொண்டு மனதை ஆறுதல் படுத்த நினைத்தாலும்… உள்ளே முட்டி முட்டி நோவெடுக்கிற நினைவுகள்.
குழந்தையை “பிராமில்” இருத்தி உருட்டியவாறு அல்பைட் வீதியில் நடந்து வந்தாள். கால் நடக்கிற அலுவலைச் செய்கிறது. குழந்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து அவளிடம் எதையோ சொல்ல எத்தனிக்கிறது. அதையும் கவனிக்கவில்லை. மனது நினைக்கிறது. நினைத்து, நினைத்து அது பறக்கிற இடம் எங்குதானென்று புரியவில்லை. மனதின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் முடியாது. கவலைகளுக்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கும்வரை அதைச் சமாதானிக்கவும் முடியாது.
அல்பைட் வீதியில் நடந்துவந்து “மெசில்லா ஹோட்டல்“ சந்தியை அடைந்ததும் நின்றாள். இங்கு நெடுநேரம்வரை நிற்கலாம். ஏழுமணிவரையானாலும். இன்னும் ஒரு மணித்தியாலமளவிற்தானே இருக்கிறது?
அதற்குள் அவன் எப்படியும் வந்துவிடுவான். அவனை நினைக்கிறபொழுது பொங்குகின்ற ஓர் இன்பம். காரை விட்டு இறங்குகின்றபோதே அந்தக் கண்களையும் ஹோட்டலினுள் நுழையுமுன்னர்…. அவசரத்தில் மலர்த்துகிற அந்தப் புன்னகையையும் தரிசிக்கலாமே! அவ்வளவுதானா? அதற்காகத்தானா இந்தக் கவலைகளெல்லாம்? முட்டாள் பெண்ணே அவன் எங்கே… நீ எங்கே… சும்மா போ!
அந்தக் கண்களையும், மலர்ச்சியையும் அவளுக்காகவே அவன் வீசுகிறபொழுது… அவள் ஏன் மணிக்கணக்காகவேனும் நிற்கக்கூடாது? நிற்பேன். அவனது பார்வைக்காக. அதற்குப் பிறகு…. இரவில் படுக்கையில் அவனது பார்வையும், சிரிப்பும் நினைவுக்கு வரும். அந்தப் பார்வையின் செக்ஸை நினைத்துக்கொண்டே படுக்கலாம். ஸ்வீட் ட்றீம்ஸ்!
இந்த மாலைபொழுதை நன்றாக ரசிக்கமுடிகிறது. இன்றைய மாலை மட்டுமல்ல, இங்கு மாலைப்பொழுதுகளே மிகவும் இனிமையானவை. தனிமையான வாழ்வில்…. அன்பு…. பாசம்…. எல்லாவற்றையும் தூரவிட்டு இருக்கும் வெறும் செயற்கையான வாழ்வில்… எப்படா ஒரு பொழுது கழியும் என்பதுபோல இருக்கும். இந்தத் தனிமையான வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து ஒருவனைக் கட்டிக்கொள்வதென்றால்கூட…. பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு சீக்கிரமாக ஊருக்குப் போய்விடவேண்டும். காலையில் எழுகிறபொழுது எவ்வளவு கவலை தோன்றுகிறது. இது என்ன செயற்கையான வாழ்வு? எனக்காக யார் இருக்கிறார்கள். நான் தனிய! மாலை வந்தால் கொஞ்சம் குதூகலம்… அப்பாடா ஒருநாள் முடியப்போகிறதே!.
ஆறு மணிக்கெல்லாம் மறையாத ஜுன் மாதத்துச் சூரியன். குவைத் சிற்றியை நோக்கிப் பணக்காரத்தனமாகப் பறக்கின்ற வாகனங்களில்… அணிகோர்த்து நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களின் தலைகளாய் இருக்கும் தண்ணீர் தாங்கிகளில் எல்லாம் பட்டுத் தெறிக்கும் மஞ்சள் வெய்யில் கண்களைக் கூசவைக்கிறது. அவனது பார்வையும் அப்படித்தான்! மெசில்லா ஹோட்டலுக்கு நிறைப் பேர் வருகிறார்கள். எல்லோரும் பெரிய மனிதர்கள். ஹோட்டலுக்கு மிதந்து வருகின்ற கார்களையும்… இறங்கிச் செல்லும் வெள்ளைக்காரர்களையும் பார்த்துக்கொண்டே இருப்பது நல்ல பொழுதுபோக்குத்தான். எத்தனை விதமான கார்கள்! எத்தனை விதமான வெள்ளைக்காரர்கள்! அரபிய உடையில் வருபவர்களைப் பார்த்து இவர்கள் அரபியர்கள் எனச் சொல்லலாம். மற்றப்படி வெள்ளைத் தோல்காரர்கள் எல்லோரையும் வெள்ளைக்காரர்களாகத்தான் நினைக்க முடிகிறது. வெள்ளைத் தோலிலும் விதவிதமான வெள்ளைகள். அதை வைத்துக்கொண்டே இவன் வேறு நாடு… இவன் வேறு நாடு என்று நினைக்க முடியும். கோட் – சூட் – ரை சப்பாத்து, டொக், டொக் எவ்வளவு கம்பீரமாக நடக்கிறார்கள். எங்களை அசைக்க யாரும் இல்லை என்பதுபோல!
எங்களுடைய சனங்களுக்கு இந்தக் கம்பீரமும் திமிரும் வரவே வராதா? சில வெள்ளைக்காரர்கள் தாங்களே வாகனங்களைச் செலுத்தி வருவர். சிலருக்காக “ட்றைவர்“ ஓட்டுவார். அதிலும் கவலையான விஷயம் அந்த ட்றைவர்கள் எல்லாம் எங்கள் பக்கத்தவராக இருப்பது. இது என்ன நீதியோ? இங்கு வருகிற எங்களுடைய ஆட்களெல்லாம் ஏதாவது சிறிய, சிறிய வேலைகளுக்குத்தானே வருகிறார்கள். லேபர்கள்… ஹவுஸ் மெயிட்ஸ்… ட்றைவர்ஸ்…. இடியட்ஸ்! ஒரு நாளைக்காவது வெள்ளையன் கார் ஓட்டிவர, அதிலிருந்து ஒரு கறுப்புத்தோல் இறங்கவேண்டுமே. எவ்வளவு அருமையாக இருக்கும்!
எந்த நேரத்தில் புனிதம் அந்தக் கனவைக் கண்டாளோ! அவன் வந்தானே அன்றைக்கு! கோட் – சூட் – ரை – சப்பாத்து – டொக் – டொக்! எவ்வளவு கம்பீரமாக! அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே… ‘எங்களுடைய நாட்டிலிருந்தும்..!’ என நினைத்தாள். அப்படி நினைக்கத்தான் அவள் விரும்பினாள். அவன் பெரிய உத்தியோகத்தனாக இருக்கும். “டொக்டராக, இஞ்சினியராக..!” இந்தப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் குடியிருக்கிறான் என்றால் லேசுப்பட்ட ஆளாகவா இருப்பான்? வெள்ளைத் தோல் ட்றைவர் போய்விட்டான். எங்களுடைய பெரியவனும் போய்விட்டான். சாய்…. வடிவாகப் பார்க்க முடியாமல் போய்விட்டதே! நாளைக்குப் பார்க்கவேண்டும். நாளைக்கு வருவானோ…. என்னவோ!
அன்றைய மாலை மறைந்துவிட்டது. மாலை எவ்வளவு அழகாக இருக்குமோ… அப்படித்தான் இரவும் இதமாக வரும். ஒருநாள் முடிந்துவிட்ட சுகம்! இன்னும் எத்தனை நாட்களில் ஊருக்குப் போகலாம். ஊரிலே அப்பா, அம்மா சகோதரர்கள்.. கல்யாணம்? அட, இந்த முப்பத்திரண்டு வயதுக்குப் பிறகுமா? இப்படி வெளிநாட்டிலிருந்து உழைத்துக் கொண்டுபோய், ஒரு நாளைக்கு அவள் மணவறையில் புதுமணப் பெண்ணாக? இரவுகளுக்கும் சுகமான நினைவுகளுக்கும் குறைச்சலே இல்லை! ஒரு மாலை மறைந்துவிட்ட இனிமையை.. ஒரு நாள் முடிந்துவிட்ட இன்பத்தை அந்த நினைவுகளைத் தொடர்ந்து ஏற்படும் ஏக்கம் கெடுத்துவிடுகிறது. ஒரு நாள் முடியப் போவதால் சந்தோஷமும் அதனாலேயே வயதில் அதிகரிப்பு ஏற்படுகிறது என்ற கவலையும் தோன்றிவிடுகிறது. இது என்ன இன்பமும் துன்பமும் கலந்த வேளை? மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த நினைவுகளைத் தருகிற நேரம்! இப்போது புதுப் பிரச்சினையும் முளைத்திருக்கிறது. அவன் நாளைக்கும் வருவானோ… என்னவோ!
அடுத்த நாளும் வந்தான். புனிதம் எதிர்பார்த்து நின்ற நேரம் சரியாக இருந்தது. அந்த “பியூக்“ கார் அமைதியாக வந்து மெதுமையாக நின்றது. அவன் இறங்கினான். புனிதம் ஆர்வம் மேலிட்டுப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான். தற்செயலாகத்தான் அவனும் கண்டிருக்கவேண்டும். ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும்.. அவனிடத்திலும் தோன்றியமாதிரி இருந்தது. அல்லது அது தனது பிரமையோ என்று தெரியவில்லை. அவளைக் கண்ட மாத்திரத்தே அந்த நடையிலும் மிடுக்கிலும் ஒரு தளர்ச்சி தோன்றியது போலிருந்தது! ஏனோ? என்ன நினைத்தானோ? போய்விட்டான், பேசாமலே போய்விட்டான்.
அடுத்த நாளும் அதே நேரம் வந்தது. மிதக்கிற “பியூக்“கின் கதவு திறக்க அவன் கம்பீரமாக வெளிப்பட்டான். நேற்றையைப்போல அவசரமாக நுழையாமல்…. அவளைத் தேடுகிறானோ…. அவளைக் கண்டதும் புன்சிரிப்பு…. சிரிக்கலாமா…? கூடாதா….?
Last edited: