என் பூர்விகம், இலங்கையின் வடக்கே அமைந்துள்ள சப்த தீவுகளின் ஒன்றான அனலைதீவாகும். சிறு வயதில் சில வருடங்கள் அங்கு வசித்துள்ளோம். குறிப்பாகச் சொல்லப் போனால் 1977 ல் நடந்த இனக்கலவரத்தின் பின்னர் தான் அங்கு வசிக்கச் சென்றோம். அச்சிறுபிராயத்தில், நான்கைந்து வருடங்களேயென்றாலும் அங்கு வசித்த நாட்கள் ஒவ்வொன்றினதும் நினைவுகள் அவ்வளவு எளிதில் என் மனதில் நின்று அழிந்துவிடவில்லை. அவற்றில் சிறுதுளி இப்பதிவில்...
எங்கள் ஊரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதென்றாலோ அல்லது அருகிலுள்ள நயினாதீவுக்குச் செல்வதென்றாலோ லோஞ்சியில் தான் பயணம் செய்ய வேண்டும். இப்போது நினைத்துப் பார்க்கையில் அவை எல்லாம் எப்போதாவது நிகழும் மிகச் சிறு பயணங்கள் தான்; ஆனால், அன்று, அவை ஒவ்வொன்றும் வெளிநாடு சென்றுவருவது போலொரு குதூகலம் தரும் தருணங்களாக அமைந்திருந்தன.
அநேகமாக, காலையில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வகையிலானவை தான் அப்பயணங்கள். அதிலும் முதல் லோஞ்ச் பிடிக்கவேண்டுமென்றால் பொழுது புலரும் முன்னரே எழுந்து தயாராக வேண்டும். அதுவென்ன அவ்வளவு இலகுவான காரியமா என்ன? விடியலில் புறப்படுவதை நினைத்துக்கொண்டே இருப்பதால் உறக்கம் கூட ஒழுங்காக வராது; புரண்டு புரண்டு படுத்துக்கிடந்துவிட்டு அதிகாலையில் அசந்துறங்கும் பொழுது அம்மா அருட்டி அருட்டிப் பார்த்துவிட்டு, "அப்ப நீ வரவேணாம், நாங்க போயிட்டு வாறம்." என்று சொல்லும் போதுதான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்வேன்.
மாரி காலமெனில் கதகதப்பான போர்வைக்குள்ளிருந்து வெளியே வரும் போதே வெடவெடவென்று குளிரில் நடுங்கியும் போவேன். அதற்கென்று தூக்கக் கலக்கத்தில் குந்தியிருந்தால் அம்மா சொன்னது போலவே 'அம்மம்மா வீட்டில நில்லு!' என்றுவிட்டுச் சென்றும் விடுவார்.
பிறகென்ன ? கண்களை முழுதாகத் திறவாதே தான் காலைக்கடன்கள் முடிப்பேன். சிலநேரம், இடது உள்ளங்கையில் பொத்திவைத்திருக்கும் கோபால் பற்பொடியைத் தொட்டெடுக்கும் வலது ஆட்காட்டி விரல் பற்களில் அழுத்தம் கொடாது வெடுவெடுவென்று நடுங்கித் தொலைக்கும். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் போகப் போகின்றேன், நிச்சயம் தியேட்டரில் ஏதாவதொரு படம் பார்க்கலாம், ஐஸ்கிரீம் குடிக்கலாம் இதைவிட வேறென்ன வேண்டும் என்றது, சந்தோசத்தையும் உற்சாகத்தையும் பொங்கச் செய்து குளிரை விரட்டுவதில் குறியாய் நிற்கும்
'குளிக்கவா வேணும்? ஒரு வாளித் தண்ணியில சும்மா முகத்தை அலம்பீட்டுப் போகலாம் தானே?' மனதுள் ஒரு போராட்டமே போட்டுவிட்டு இறுதியில் முக்கி முனகி ஒரு ஐந்தாறு வாளித் தண்ணியைக் கிணற்றிலிருந்து இழுத்தெடுத்துக் குளித்துவிடுவேன். இந்த இடத்தில் அள்ளியெடுத்து என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் அந்தநேரம் நான் சிறுமிதானே? என்னால் அள்ள முடிவதில்லை. அதேநேரம், அப்பாவோ அம்மாவோ அள்ளித் தருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதும் இல்லை. கிணற்றுக் கட்டோடு தேய்த்துத் தேய்த்து என்றாலும் இழுத்து எடுத்துவிடுவேன்.
பிறகு நிமிடமும் தாமதிக்கமாட்டேன். வெளிப்பாவனைக்கு என்று வைத்துள்ள சட்டையில் ஒன்றை உருவி அணிந்துவிட்டு, தலையை அம்மாவிடம் கொடுத்து இழுத்து, மறக்காது கமகமக்கும் குட்டிக்குறா பவுடர் போட்ட வேகத்தில் பொட்டுச் சிரட்டையுடன் குசினிக்குள் ஓடுவேன்.
'என்ன ...பொட்டுச் சிரட்டையா?' என்ற கேள்வி உங்களுள் எழுகின்றதா?
அப்போதெல்லாம் இந்த ஒட்டுப் பொட்டெல்லாம் பாவனையில் இல்லை. திருமணமான பெண்களுக்குக் குங்குமம், அதுதவிர சாந்துப்பொட்டு... கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் சிறு குப்பிகளில் கிடைக்கும் தான். இருந்தாலும் எங்களுக்கு வீட்டில் அம்மாவே பொட்டைத் தயாரிப்பார். குழந்தையிலிருந்து அதைத்தான் வைப்பார்கள். அது ஒன்றும் பெரிய கடினமான வேலையெல்லாம் இல்லை. எனக்குத் தெரிய அம்மா ஒரே தடவையில் நான்கைந்து சிரட்டையில் செய்து வைப்பார்.
நன்றாகத் துப்பரவு செய்த, உள்ளும் வெளியிலும் பளபளவென்றிருக்கும் தேங்காய் சிரட்டை, சவ்வரிசி, பச்சை அரிசிக் குறுனல் , வாசத்துக்கு மல்லிப்பூ என இவ்வளவும் இருந்தால் போதும், பொட்டைத் தயாரித்துவிடலாம். அம்மா பொட்டுத் தயாரிக்கையில் பார்த்துக்கொண்டு நின்ற நினைவு இன்னமும் உண்டு.
உங்களுக்கும் அறியும் ஆவல் இருந்தாலுமென்று இங்கே செய்முறை சொல்கின்றேன்.
முதலில் சவ்வரிசி, குறுனல் அரிசி இரண்டையும் கருக வறுக்க வேண்டும். அவை நன்றாகக் கருகி வருகையில் மல்லிப்பூ சேர்த்து அளவாகத் தண்ணி விட்டு கஞ்சியாக்க வேணும். பின்னர், அதனை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் விட்டு வடித்து எடுத்து, சிரட்டையில் அளவாக ஊற்றி, அப்ப மாவை ஊற்றிவிட்டு சட்டியைச் சுற்றுவோமே, அப்படிச் சுற்றி விடவேணும். பின்னர் இதனை வெயிலில் காயவைக்க வேண்டும். சிறிது காய்ந்து வருகையில் மீண்டும் ஒருதரம் சுற்றிவிடவேண்டும் . பின் நன்றாகக் காய்ந்த பின்னர் எடுத்துப் பாவிக்கலாம். வாசமும் பளபளப்புமாக இருக்கும். தேவையான நேரங்களில் துளி அளவில் தண்ணி விட்டு விரலால் தேய்த்தெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
நானும் நீர் விட்டு உரசி எடுத்த பொட்டை, மங்கிய லாந்தர் வெளிச்சத்தில் வெகு பிரயத்தனம் செய்து கண்ணாடி பார்த்து நெற்றியில் இட்டுக் கொண்டு, என் பாட்டா செருப்பைப் போட்டுக்கொண்டு ஓடிப்போய் இன்னொருவாளி தண்ணியை இழுத்து முன் பின் எல்லாம் செருப்போடு சேர்த்துக் காலைக் கழுவுவேன்.
"இப்ப போட்டுக்கொண்டு வெளியில நடக்கத்தானே போற? பிறகேன் கழுவிற?" என்று அம்மா சொன்னாலும் எனக்குப் புத்தம் புதுசுபோல காலணி இருக்க வேண்டும். அதாவது தூசில்லாது.
அதன் பின்னென்ன? முதல் ஆளாக முற்றத்தில் இறங்கி நின்று கொள்வேன்.
"தேத்தண்ணி ஆறிட்டு, குடிச்சிட்டு வாவன்." என்பார் அம்மா.
செருப்பைக் கழட்டிவிட்டுச் சமையலறைக்குள் சென்றால் எங்கள் குசினியின் மண் தரையிலிருந்து தூசு ஈரக் காலில் அப்புமே! அசைய மாட்டேன். அங்கு நின்றே கேட்டு வாங்கி அரையும் குறையுமாகக் குடித்துவிட்டு புறப்பட்டு, பத்து வீடுகள் தள்ளியிருக்கும் அம்மம்மா வீடு செல்வோம். சிலவேளைகளில் சித்தியாக்களும்
சேர்ந்து வருவார்கள். அநேகம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரியம்மா ஆக்களுக்காக அம்மம்மா பொருட்கள் தந்துவிடுவார். முக்கியமாகத் தோசையும் சம்பலும். எங்களுக்கும் சுடச் சுடச் சாப்பிடத் தருவார் . ஒரே சுருட்டலாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்குவோம்.
நாங்கள் அனலையில் தெற்குப் பகுதி. லோஞ்சி எடுக்க வீட்டிலிருந்து தரவையால் சிறிது தூரம் நடக்க வேண்டும். ஒரு ஐஞ்சு பத்து நிமிட நடைதூரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால், அன்று அது நீண்ட தூர நடை. அதுவும் மழை காலம் என்றால் தரவை மழை வெள்ளத்தின் வசமாகியிருக்கும். அந்நாட்களில் சற்றே உள்பக்கமாக பனை வடலிகளால் கடந்து சென்று பாதையால் செல்லலாம். அந்தத் தரவையில் சில கொட்டில் வீடுகள் இருந்தன . இரண்டு அல்லது மூன்று என்று நினைவு. மழைநாட்களில் சுற்றிலும் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் அவை படகு வீடுகள் போல் மிதந்து கொண்டிருக்கும். குழந்தைகளும் அங்கு வசித்தார்கள். அந்நாட்களில் எப்படி சமாளித்திருப்பார்கள்? அந்தச் சிறுவயதில் நான் ஒருபோதுமே நினைத்துப் பார்க்கவில்லை . லோஞ்சி எடுக்க ஓட்டமும் நடையுமாகச் செல்கையில் பார்த்துச் செல்வதோடு சரி.
லோஞ்சி என்றதும் 'அலையரசி' தான் சட்டென்று நினைவில் வருகின்றது. நீலமும் செம்மஞ்சளும் கலந்த தோற்றத்தில் ஒரு ராணி போலவே தான் காட்சியளிக்கும். அதற்கு முன்னர் இருந்தவை அலையரசியை விடவும் சிறு லோஞ்சிகள். கடலின் கொந்தளிப்பைத் தாராளமாகவே பிரதிபலிப்பார்கள். அவை போடும் ஆட்டத்தில் சற்றே பயமாகக் கூட இருக்கும். அலையரசி அப்படியில்லை. கடலன்னையின் ஆர்ப்பரிப்பைக் கம்பீரமாக எதிர்கொண்டோடுவாள். லோஞ்சியில் உள்ளே இறங்க இருபுறமும் இடம் இருக்கும். இறங்கி இருக்கரையிலும் போட்டுள்ள வாங்கில்களில் அமர்ந்து கொள்ளலாம் . இன்ஜின் இருக்கும் பக்கம் இருந்தால் அதன் வெப்பமும் சத்தமும் எண்ணெய் வாசனையும் முகத்தில் மோதும். பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆண்கள் பெரும்பாலும் மேல்தட்டில் அமர்ந்து கொள்வார்கள் . அப்போது, பத்துப் பதினோரு வயதுகளில் லோஞ்சி நகரத் தொடங்கியதும் அந்த வாயிலில் முகம் பதித்து, லோஞ்சியின் பக்கத்தில் மோதிவிளையாடும் கடலன்னையை இரசித்தபடியே அந்த முக்கால் மணிநேரப் பயணத்தையும் கழித்துவிடுவேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் தெவிட்டாத கணங்கள் அவை. அப்பப்போ முகத்தில் பட்டுச் சிதறும் அந்த உப்பு நீருக்கும் ஒரு மாய சக்தி உண்டு என்ற வகையில் பச்சை வண்ணக் கடலழகி தன்னில் பட்ட விழிகளை அசைக்க விடாள்.
யாழ்ப்பாணம் வந்துவிட்டு மாலையில் வீடு செல்கையில் அநேகம் கையில் கச்சான் சோளன் கலந்த சிறு பாக்கெட்டுகள் இருக்கும். ஊர்காவற்றுறைத் துறைமுகத்திலேயே வாங்கலாம். கையில் உள்ளவை தீர்ந்ததும் அருகில் இருக்கும் தம்பியிடம் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கடன் வாங்கிச் சாப்பிடுவேன். அதுவும் ஒன்று இரண்டு என்று பெரிய மனதோடு தருவான். அதே அவனிடம் முதல் முடிந்துவிட்டால்...என்னிடம் கை நீட்டுவான் . கண்கள், ' எனக்கும் கொஞ்சம் தாவன்' என்று கெஞ்சும். அவனைப்போலவே நானும் ஒன்று இரண்டு அதுவும் உள்ளதில் சிறிதாகத் தெரிந்தெடுத்துக் கொடுத்தால் கடைசி வரை வாங்க மாட்டான்.
" நான் கனக்க எடுக்க மாட்டன் ரோசி அக்கா, காட்டு எடுக்கிறன்." என்று அநியாயத்துக்கு அன்பாகக் கதைத்து அந்தக் குட்டிக் கடதாசிப் பையினுள் தன் சிறு கரத்தை விட்டானோ அதனுள்ளிருந்த அவ்வளவையும் எடுத்துவிடுவான் . எனக்கு வருமே கோபம்! இருந்தாலும் சனம் பார்க்குகிறார்களே சண்டை போடவா முடியும் என்று கட்டுப்படுத்திக்கொண்டு கடலைப் பார்க்கத் திரும்பும் வேகத்தில் அழுதும் விடுவேன். அழுகையில் கோபம் அடங்காது, அதிகரிக்கும்; அவனை ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் முறுக்கும்; அதன் சொல் கேட்கும் கை மெல்ல நகர்ந்து இறுக்கி நுள்ளி விடும். விடுவானா அவன்? திருப்பி நுள்ளுவான். மாறி மாறி நுள்ளிக் கொள்ளும் போது இருவர் கண்களிலும் கண்ணீராக இருக்கும். அப்போதைக்கு அம்மாவின் ஏரிபார்வையில் அடங்கி விட்டாலும் கோபத்தில் கச்சான் அப்படியே கடலுக்குள் போவதும் நடந்திருக்கு. அடுத்த இரு நாட்களுக்கு எங்களுள் சண்டைக்கு அந்தக் கச்சானும் சோளனுமே காரணமாக இருக்கும்.
நயினாதீவு அம்மன் கோவில் திருவிழாக் காலங்களில் அதுவும் தேர்திருவிழாவுக்குக் கட்டாயமாகச் செல்வோம். சுடச் சுட கச்சான் , பூப்போல பொரிந்த சோளன், கண்ணைக்கவரும் நிறங்களில் இனிப்புப் பூந்தி, பஞ்சு மிட்டாய், குச்சி, கோன் ஐஸ் கிரீம், அதைவிட்டால் கைக்கு நிறைய காப்புகள் இதுதான் என் திருவிழாக் கனவே! அம்மாவின் கையிருப்புக்கேற்ப இவைகள் நினைத்த அளவுக்கு இல்லையென்றாலும் கிடைக்கும்.
அதைத் தவிர்த்து எங்கள் மாமா வீடும் அங்கு இருப்பதால் இடையிடை சென்று வருவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன், நானும் அம்மாவும் மாமா வீடு சென்றுவிட்டு மாலை லோஞ்சியில் வீடு திரும்பும் எண்ணத்தில் வந்தால் அது புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. மறுநாள் பாடசாலை, அதைவிட்டு, வீட்டில் தம்பி தங்கச்சியை அம்மம்மா ஆட்களோடு விட்டுட்டே வந்திருந்தோம் .
"இனி என்ன செய்யிறது? இரவு தங்கீட்டு நாளைக்குப் போங்க!" என்று, வழியனுப்பும் நோக்கில் எங்களோடு வந்திருந்த மாமா சொன்னார் .
'இப்பிடியாகிற்று, நாளைக்கு வாறம்' என்று சொல்லிவிட்டுத் தங்கிச் செல்ல அப்போது தொலைபேசி எல்லாம் இல்லையே!
"இல்ல அண்ணா, அது எல்லாம் சரிவராது; எப்பிடியும் போக வேணும்; பிள்ளைகள் தேடுவீனம்." என்ற அம்மா கவலையோடு யோசிக்க, "சரி கொஞ்சம் நில்லுங்க, வள்ளம் ஏதாவது கிடைக்குதா பார்ப்பம்." என்றுவிட்டுச் சென்ற மாமா, திரும்பிவந்து, லோஞ்சி ஏறும் இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நிறுத்தியிருந்த ஒரு வள்ளம் நோக்கி அழைத்துச் சென்றார்.
எங்கள் ஊரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதென்றாலோ அல்லது அருகிலுள்ள நயினாதீவுக்குச் செல்வதென்றாலோ லோஞ்சியில் தான் பயணம் செய்ய வேண்டும். இப்போது நினைத்துப் பார்க்கையில் அவை எல்லாம் எப்போதாவது நிகழும் மிகச் சிறு பயணங்கள் தான்; ஆனால், அன்று, அவை ஒவ்வொன்றும் வெளிநாடு சென்றுவருவது போலொரு குதூகலம் தரும் தருணங்களாக அமைந்திருந்தன.
அநேகமாக, காலையில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வகையிலானவை தான் அப்பயணங்கள். அதிலும் முதல் லோஞ்ச் பிடிக்கவேண்டுமென்றால் பொழுது புலரும் முன்னரே எழுந்து தயாராக வேண்டும். அதுவென்ன அவ்வளவு இலகுவான காரியமா என்ன? விடியலில் புறப்படுவதை நினைத்துக்கொண்டே இருப்பதால் உறக்கம் கூட ஒழுங்காக வராது; புரண்டு புரண்டு படுத்துக்கிடந்துவிட்டு அதிகாலையில் அசந்துறங்கும் பொழுது அம்மா அருட்டி அருட்டிப் பார்த்துவிட்டு, "அப்ப நீ வரவேணாம், நாங்க போயிட்டு வாறம்." என்று சொல்லும் போதுதான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்வேன்.
மாரி காலமெனில் கதகதப்பான போர்வைக்குள்ளிருந்து வெளியே வரும் போதே வெடவெடவென்று குளிரில் நடுங்கியும் போவேன். அதற்கென்று தூக்கக் கலக்கத்தில் குந்தியிருந்தால் அம்மா சொன்னது போலவே 'அம்மம்மா வீட்டில நில்லு!' என்றுவிட்டுச் சென்றும் விடுவார்.
பிறகென்ன ? கண்களை முழுதாகத் திறவாதே தான் காலைக்கடன்கள் முடிப்பேன். சிலநேரம், இடது உள்ளங்கையில் பொத்திவைத்திருக்கும் கோபால் பற்பொடியைத் தொட்டெடுக்கும் வலது ஆட்காட்டி விரல் பற்களில் அழுத்தம் கொடாது வெடுவெடுவென்று நடுங்கித் தொலைக்கும். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் போகப் போகின்றேன், நிச்சயம் தியேட்டரில் ஏதாவதொரு படம் பார்க்கலாம், ஐஸ்கிரீம் குடிக்கலாம் இதைவிட வேறென்ன வேண்டும் என்றது, சந்தோசத்தையும் உற்சாகத்தையும் பொங்கச் செய்து குளிரை விரட்டுவதில் குறியாய் நிற்கும்
'குளிக்கவா வேணும்? ஒரு வாளித் தண்ணியில சும்மா முகத்தை அலம்பீட்டுப் போகலாம் தானே?' மனதுள் ஒரு போராட்டமே போட்டுவிட்டு இறுதியில் முக்கி முனகி ஒரு ஐந்தாறு வாளித் தண்ணியைக் கிணற்றிலிருந்து இழுத்தெடுத்துக் குளித்துவிடுவேன். இந்த இடத்தில் அள்ளியெடுத்து என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் அந்தநேரம் நான் சிறுமிதானே? என்னால் அள்ள முடிவதில்லை. அதேநேரம், அப்பாவோ அம்மாவோ அள்ளித் தருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதும் இல்லை. கிணற்றுக் கட்டோடு தேய்த்துத் தேய்த்து என்றாலும் இழுத்து எடுத்துவிடுவேன்.
பிறகு நிமிடமும் தாமதிக்கமாட்டேன். வெளிப்பாவனைக்கு என்று வைத்துள்ள சட்டையில் ஒன்றை உருவி அணிந்துவிட்டு, தலையை அம்மாவிடம் கொடுத்து இழுத்து, மறக்காது கமகமக்கும் குட்டிக்குறா பவுடர் போட்ட வேகத்தில் பொட்டுச் சிரட்டையுடன் குசினிக்குள் ஓடுவேன்.
'என்ன ...பொட்டுச் சிரட்டையா?' என்ற கேள்வி உங்களுள் எழுகின்றதா?
அப்போதெல்லாம் இந்த ஒட்டுப் பொட்டெல்லாம் பாவனையில் இல்லை. திருமணமான பெண்களுக்குக் குங்குமம், அதுதவிர சாந்துப்பொட்டு... கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் சிறு குப்பிகளில் கிடைக்கும் தான். இருந்தாலும் எங்களுக்கு வீட்டில் அம்மாவே பொட்டைத் தயாரிப்பார். குழந்தையிலிருந்து அதைத்தான் வைப்பார்கள். அது ஒன்றும் பெரிய கடினமான வேலையெல்லாம் இல்லை. எனக்குத் தெரிய அம்மா ஒரே தடவையில் நான்கைந்து சிரட்டையில் செய்து வைப்பார்.
நன்றாகத் துப்பரவு செய்த, உள்ளும் வெளியிலும் பளபளவென்றிருக்கும் தேங்காய் சிரட்டை, சவ்வரிசி, பச்சை அரிசிக் குறுனல் , வாசத்துக்கு மல்லிப்பூ என இவ்வளவும் இருந்தால் போதும், பொட்டைத் தயாரித்துவிடலாம். அம்மா பொட்டுத் தயாரிக்கையில் பார்த்துக்கொண்டு நின்ற நினைவு இன்னமும் உண்டு.
உங்களுக்கும் அறியும் ஆவல் இருந்தாலுமென்று இங்கே செய்முறை சொல்கின்றேன்.
முதலில் சவ்வரிசி, குறுனல் அரிசி இரண்டையும் கருக வறுக்க வேண்டும். அவை நன்றாகக் கருகி வருகையில் மல்லிப்பூ சேர்த்து அளவாகத் தண்ணி விட்டு கஞ்சியாக்க வேணும். பின்னர், அதனை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் விட்டு வடித்து எடுத்து, சிரட்டையில் அளவாக ஊற்றி, அப்ப மாவை ஊற்றிவிட்டு சட்டியைச் சுற்றுவோமே, அப்படிச் சுற்றி விடவேணும். பின்னர் இதனை வெயிலில் காயவைக்க வேண்டும். சிறிது காய்ந்து வருகையில் மீண்டும் ஒருதரம் சுற்றிவிடவேண்டும் . பின் நன்றாகக் காய்ந்த பின்னர் எடுத்துப் பாவிக்கலாம். வாசமும் பளபளப்புமாக இருக்கும். தேவையான நேரங்களில் துளி அளவில் தண்ணி விட்டு விரலால் தேய்த்தெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
நானும் நீர் விட்டு உரசி எடுத்த பொட்டை, மங்கிய லாந்தர் வெளிச்சத்தில் வெகு பிரயத்தனம் செய்து கண்ணாடி பார்த்து நெற்றியில் இட்டுக் கொண்டு, என் பாட்டா செருப்பைப் போட்டுக்கொண்டு ஓடிப்போய் இன்னொருவாளி தண்ணியை இழுத்து முன் பின் எல்லாம் செருப்போடு சேர்த்துக் காலைக் கழுவுவேன்.
"இப்ப போட்டுக்கொண்டு வெளியில நடக்கத்தானே போற? பிறகேன் கழுவிற?" என்று அம்மா சொன்னாலும் எனக்குப் புத்தம் புதுசுபோல காலணி இருக்க வேண்டும். அதாவது தூசில்லாது.
அதன் பின்னென்ன? முதல் ஆளாக முற்றத்தில் இறங்கி நின்று கொள்வேன்.
"தேத்தண்ணி ஆறிட்டு, குடிச்சிட்டு வாவன்." என்பார் அம்மா.
செருப்பைக் கழட்டிவிட்டுச் சமையலறைக்குள் சென்றால் எங்கள் குசினியின் மண் தரையிலிருந்து தூசு ஈரக் காலில் அப்புமே! அசைய மாட்டேன். அங்கு நின்றே கேட்டு வாங்கி அரையும் குறையுமாகக் குடித்துவிட்டு புறப்பட்டு, பத்து வீடுகள் தள்ளியிருக்கும் அம்மம்மா வீடு செல்வோம். சிலவேளைகளில் சித்தியாக்களும்
சேர்ந்து வருவார்கள். அநேகம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரியம்மா ஆக்களுக்காக அம்மம்மா பொருட்கள் தந்துவிடுவார். முக்கியமாகத் தோசையும் சம்பலும். எங்களுக்கும் சுடச் சுடச் சாப்பிடத் தருவார் . ஒரே சுருட்டலாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்குவோம்.
நாங்கள் அனலையில் தெற்குப் பகுதி. லோஞ்சி எடுக்க வீட்டிலிருந்து தரவையால் சிறிது தூரம் நடக்க வேண்டும். ஒரு ஐஞ்சு பத்து நிமிட நடைதூரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால், அன்று அது நீண்ட தூர நடை. அதுவும் மழை காலம் என்றால் தரவை மழை வெள்ளத்தின் வசமாகியிருக்கும். அந்நாட்களில் சற்றே உள்பக்கமாக பனை வடலிகளால் கடந்து சென்று பாதையால் செல்லலாம். அந்தத் தரவையில் சில கொட்டில் வீடுகள் இருந்தன . இரண்டு அல்லது மூன்று என்று நினைவு. மழைநாட்களில் சுற்றிலும் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் அவை படகு வீடுகள் போல் மிதந்து கொண்டிருக்கும். குழந்தைகளும் அங்கு வசித்தார்கள். அந்நாட்களில் எப்படி சமாளித்திருப்பார்கள்? அந்தச் சிறுவயதில் நான் ஒருபோதுமே நினைத்துப் பார்க்கவில்லை . லோஞ்சி எடுக்க ஓட்டமும் நடையுமாகச் செல்கையில் பார்த்துச் செல்வதோடு சரி.
லோஞ்சி என்றதும் 'அலையரசி' தான் சட்டென்று நினைவில் வருகின்றது. நீலமும் செம்மஞ்சளும் கலந்த தோற்றத்தில் ஒரு ராணி போலவே தான் காட்சியளிக்கும். அதற்கு முன்னர் இருந்தவை அலையரசியை விடவும் சிறு லோஞ்சிகள். கடலின் கொந்தளிப்பைத் தாராளமாகவே பிரதிபலிப்பார்கள். அவை போடும் ஆட்டத்தில் சற்றே பயமாகக் கூட இருக்கும். அலையரசி அப்படியில்லை. கடலன்னையின் ஆர்ப்பரிப்பைக் கம்பீரமாக எதிர்கொண்டோடுவாள். லோஞ்சியில் உள்ளே இறங்க இருபுறமும் இடம் இருக்கும். இறங்கி இருக்கரையிலும் போட்டுள்ள வாங்கில்களில் அமர்ந்து கொள்ளலாம் . இன்ஜின் இருக்கும் பக்கம் இருந்தால் அதன் வெப்பமும் சத்தமும் எண்ணெய் வாசனையும் முகத்தில் மோதும். பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆண்கள் பெரும்பாலும் மேல்தட்டில் அமர்ந்து கொள்வார்கள் . அப்போது, பத்துப் பதினோரு வயதுகளில் லோஞ்சி நகரத் தொடங்கியதும் அந்த வாயிலில் முகம் பதித்து, லோஞ்சியின் பக்கத்தில் மோதிவிளையாடும் கடலன்னையை இரசித்தபடியே அந்த முக்கால் மணிநேரப் பயணத்தையும் கழித்துவிடுவேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் தெவிட்டாத கணங்கள் அவை. அப்பப்போ முகத்தில் பட்டுச் சிதறும் அந்த உப்பு நீருக்கும் ஒரு மாய சக்தி உண்டு என்ற வகையில் பச்சை வண்ணக் கடலழகி தன்னில் பட்ட விழிகளை அசைக்க விடாள்.
யாழ்ப்பாணம் வந்துவிட்டு மாலையில் வீடு செல்கையில் அநேகம் கையில் கச்சான் சோளன் கலந்த சிறு பாக்கெட்டுகள் இருக்கும். ஊர்காவற்றுறைத் துறைமுகத்திலேயே வாங்கலாம். கையில் உள்ளவை தீர்ந்ததும் அருகில் இருக்கும் தம்பியிடம் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கடன் வாங்கிச் சாப்பிடுவேன். அதுவும் ஒன்று இரண்டு என்று பெரிய மனதோடு தருவான். அதே அவனிடம் முதல் முடிந்துவிட்டால்...என்னிடம் கை நீட்டுவான் . கண்கள், ' எனக்கும் கொஞ்சம் தாவன்' என்று கெஞ்சும். அவனைப்போலவே நானும் ஒன்று இரண்டு அதுவும் உள்ளதில் சிறிதாகத் தெரிந்தெடுத்துக் கொடுத்தால் கடைசி வரை வாங்க மாட்டான்.
" நான் கனக்க எடுக்க மாட்டன் ரோசி அக்கா, காட்டு எடுக்கிறன்." என்று அநியாயத்துக்கு அன்பாகக் கதைத்து அந்தக் குட்டிக் கடதாசிப் பையினுள் தன் சிறு கரத்தை விட்டானோ அதனுள்ளிருந்த அவ்வளவையும் எடுத்துவிடுவான் . எனக்கு வருமே கோபம்! இருந்தாலும் சனம் பார்க்குகிறார்களே சண்டை போடவா முடியும் என்று கட்டுப்படுத்திக்கொண்டு கடலைப் பார்க்கத் திரும்பும் வேகத்தில் அழுதும் விடுவேன். அழுகையில் கோபம் அடங்காது, அதிகரிக்கும்; அவனை ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் முறுக்கும்; அதன் சொல் கேட்கும் கை மெல்ல நகர்ந்து இறுக்கி நுள்ளி விடும். விடுவானா அவன்? திருப்பி நுள்ளுவான். மாறி மாறி நுள்ளிக் கொள்ளும் போது இருவர் கண்களிலும் கண்ணீராக இருக்கும். அப்போதைக்கு அம்மாவின் ஏரிபார்வையில் அடங்கி விட்டாலும் கோபத்தில் கச்சான் அப்படியே கடலுக்குள் போவதும் நடந்திருக்கு. அடுத்த இரு நாட்களுக்கு எங்களுள் சண்டைக்கு அந்தக் கச்சானும் சோளனுமே காரணமாக இருக்கும்.
நயினாதீவு அம்மன் கோவில் திருவிழாக் காலங்களில் அதுவும் தேர்திருவிழாவுக்குக் கட்டாயமாகச் செல்வோம். சுடச் சுட கச்சான் , பூப்போல பொரிந்த சோளன், கண்ணைக்கவரும் நிறங்களில் இனிப்புப் பூந்தி, பஞ்சு மிட்டாய், குச்சி, கோன் ஐஸ் கிரீம், அதைவிட்டால் கைக்கு நிறைய காப்புகள் இதுதான் என் திருவிழாக் கனவே! அம்மாவின் கையிருப்புக்கேற்ப இவைகள் நினைத்த அளவுக்கு இல்லையென்றாலும் கிடைக்கும்.
அதைத் தவிர்த்து எங்கள் மாமா வீடும் அங்கு இருப்பதால் இடையிடை சென்று வருவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன், நானும் அம்மாவும் மாமா வீடு சென்றுவிட்டு மாலை லோஞ்சியில் வீடு திரும்பும் எண்ணத்தில் வந்தால் அது புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. மறுநாள் பாடசாலை, அதைவிட்டு, வீட்டில் தம்பி தங்கச்சியை அம்மம்மா ஆட்களோடு விட்டுட்டே வந்திருந்தோம் .
"இனி என்ன செய்யிறது? இரவு தங்கீட்டு நாளைக்குப் போங்க!" என்று, வழியனுப்பும் நோக்கில் எங்களோடு வந்திருந்த மாமா சொன்னார் .
'இப்பிடியாகிற்று, நாளைக்கு வாறம்' என்று சொல்லிவிட்டுத் தங்கிச் செல்ல அப்போது தொலைபேசி எல்லாம் இல்லையே!
"இல்ல அண்ணா, அது எல்லாம் சரிவராது; எப்பிடியும் போக வேணும்; பிள்ளைகள் தேடுவீனம்." என்ற அம்மா கவலையோடு யோசிக்க, "சரி கொஞ்சம் நில்லுங்க, வள்ளம் ஏதாவது கிடைக்குதா பார்ப்பம்." என்றுவிட்டுச் சென்ற மாமா, திரும்பிவந்து, லோஞ்சி ஏறும் இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நிறுத்தியிருந்த ஒரு வள்ளம் நோக்கி அழைத்துச் சென்றார்.