தேன் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
- தேனின் பயனறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் தருகிறார்கள். தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு, நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.
- இதய நோயிலிருந்து தப்பவேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர நல்ல பயனிருக்கும்.
- தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்துத் தேனைச் சேர்ப்போமாயின் , அது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
-வாய்வுத் தொல்லையிலிருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, புத்துணர்வு கிடைப்பதை உணரலாம்.
-நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேனுக்குண்டு.
- உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது.
உடல் பருமனானவர்கள், தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும், பலம் அதிகரிக்கும்.
உடல் மெலிந்தவர்கள், இரவு உணவிற்குப் பின், ஒரு கோப்பை பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.
- உட்கொள்ளப்படும் தேன், உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றி விடும்.
அதேபோல், உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
- தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம்.
பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும்.
அதுபோல், ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும்.