Sugiy
Member
வணக்கம் செந்தூரம் உறவுகளே!
|| உன்னை நீயே தோற்கடி! || என்ற வாசகத்தைத் தனதாக்கிக் கொண்டு இணையத்தளத்தில் கோலோச்சும் ரோசி அக்கா, நிதனி மற்றும் அன்பான வாசக நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுடன் எனது முதற்பதிவைப் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். ஆரோக்கியமான பகிர்வுகளோடு இணைந்திருப்போம்....
# பகிடி வதை #
எல்லாரும் இதைப்பற்றி எழுதுகிறார்கள் என்று இதை நான் எழுதவில்லை. எம் சமூகத்தில் இந்த விடயம் ஒருகிழமை பேசப்படும். பிறகு இன்னொரு புலம்பலுக்கான தலைப்புக் கிடைத்துவிடும்.
ஆனாலும் கடந்த நாட்களாக என் மனதைக் குடையும் விடயங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
இங்கு பிள்ளைகள் பிறந்தது முதல் பெற்றோறாகிய எங்களுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரை - "நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள்" என்பதே!.
போர் முடிந்து எத்தனையோ நவீனங்கள் எம்மைச் சுற்றி விரவிக்கிடந்தாலும், எம் சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேட்டால் இலக்கற்றே என்று எண்ணத்தோன்றுகிறது. முன்பள்ளியிலிலிருந்து படி படி என்று தாம் மாடாய் உழைத்து பிள்ளைகளைப் படிப்பிக்கும் பெற்றோர் பலருக்குத் தெரிவதில்லை, தம் பிள்ளைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்று!
படிப்பு என்பது சரி பிழை பார்த்து நடக்கக் கற்றுக்கொள்வற்கே அன்றி பெருமை பாராட்டுவதற்காக அல்ல என்பதை எந்த ஒரு பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிர்களோ, அவர்கள் தாம் செய்யும் செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
தேவைகளை நிவர்திசெய்வதற்காகப் பாடுபடும் பெற்றோர்கள் அதன் அளவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. ஏனெனில் அதன் அளவு என்ன என்பதை அவர்களே புரியாமல் இருப்பதே!
பிறரை மதிக்கக் கற்றுக் கொடுத்தல். இன்றைய எம் சமூகத்தில் குடும்பச் சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று கேட்டால் உருப்படாமற் போய்க்கிடக்கிறது என்றே சொல்வேன். தந்தை தாயை மதிப்பதில்லை. பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை. வீடுகளில் குடும்ப உறவுகள் அனைத்துமே தேவையின் அடிப்படையிலேயே பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன.
ஒரு சாதாரண குடும்பத்திலேயே மாற்றப்பட வேண்டிய பண்புகள் ஏராளம் இருக்கும் போது எவ்வாறு நல்லறுவடையை நாம் எதிர்பார்க்க முடியும்?
-அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள் -பிறரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
-நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள்
-நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள்
-கடமை உணர்வை வளருங்கள்
-பிள்ளைகளுக்கு தமது கடமைகளைச் செய்யக் கற்றுக் கொடுங்கள்
-ஆரோக்கியமான பொழுதுபோக்கு விடயங்களில் பிள்ளைகளுக்கு ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் ஊட்டுங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருங்கள்.
நன்றி
|| உன்னை நீயே தோற்கடி! || என்ற வாசகத்தைத் தனதாக்கிக் கொண்டு இணையத்தளத்தில் கோலோச்சும் ரோசி அக்கா, நிதனி மற்றும் அன்பான வாசக நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுடன் எனது முதற்பதிவைப் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். ஆரோக்கியமான பகிர்வுகளோடு இணைந்திருப்போம்....
# பகிடி வதை #
எல்லாரும் இதைப்பற்றி எழுதுகிறார்கள் என்று இதை நான் எழுதவில்லை. எம் சமூகத்தில் இந்த விடயம் ஒருகிழமை பேசப்படும். பிறகு இன்னொரு புலம்பலுக்கான தலைப்புக் கிடைத்துவிடும்.
ஆனாலும் கடந்த நாட்களாக என் மனதைக் குடையும் விடயங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
இங்கு பிள்ளைகள் பிறந்தது முதல் பெற்றோறாகிய எங்களுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரை - "நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள்" என்பதே!.
போர் முடிந்து எத்தனையோ நவீனங்கள் எம்மைச் சுற்றி விரவிக்கிடந்தாலும், எம் சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேட்டால் இலக்கற்றே என்று எண்ணத்தோன்றுகிறது. முன்பள்ளியிலிலிருந்து படி படி என்று தாம் மாடாய் உழைத்து பிள்ளைகளைப் படிப்பிக்கும் பெற்றோர் பலருக்குத் தெரிவதில்லை, தம் பிள்ளைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்று!
படிப்பு என்பது சரி பிழை பார்த்து நடக்கக் கற்றுக்கொள்வற்கே அன்றி பெருமை பாராட்டுவதற்காக அல்ல என்பதை எந்த ஒரு பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிர்களோ, அவர்கள் தாம் செய்யும் செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
தேவைகளை நிவர்திசெய்வதற்காகப் பாடுபடும் பெற்றோர்கள் அதன் அளவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. ஏனெனில் அதன் அளவு என்ன என்பதை அவர்களே புரியாமல் இருப்பதே!
பிறரை மதிக்கக் கற்றுக் கொடுத்தல். இன்றைய எம் சமூகத்தில் குடும்பச் சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று கேட்டால் உருப்படாமற் போய்க்கிடக்கிறது என்றே சொல்வேன். தந்தை தாயை மதிப்பதில்லை. பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை. வீடுகளில் குடும்ப உறவுகள் அனைத்துமே தேவையின் அடிப்படையிலேயே பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன.
ஒரு சாதாரண குடும்பத்திலேயே மாற்றப்பட வேண்டிய பண்புகள் ஏராளம் இருக்கும் போது எவ்வாறு நல்லறுவடையை நாம் எதிர்பார்க்க முடியும்?
-அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள் -பிறரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
-நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள்
-நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள்
-கடமை உணர்வை வளருங்கள்
-பிள்ளைகளுக்கு தமது கடமைகளைச் செய்யக் கற்றுக் கொடுங்கள்
-ஆரோக்கியமான பொழுதுபோக்கு விடயங்களில் பிள்ளைகளுக்கு ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் ஊட்டுங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருங்கள்.
நன்றி