ஹாய் நிதா,
‘பூவே பூச்சூட வா’ இந்த பெயரில் ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று (பழைய படம்) இருக்கிறது. ரொம்ப உணர்வுபூர்வமான படம். உங்களோட இந்த கதை கூட அப்படி ஒன்று தான். நிறைய இடங்களில் கண் கலங்க வைக்கிற அளவுக்கு உங்க எழுத்து இருந்தது. குறிப்பாஅதிரூபன் மிருணாவை நினைத்து பார்க்கும்போது ....அழகான நினைவுகள் .....மறைந்து போன பிறகு ......மறக்க முடியாத நினைவுகளின் கனங்கள்......வானதியை பற்றிய நெருடல்......தெரிந்த பின் வரும் உணர்வுகளின் அழுத்தம் ......பின் தெளிவது ......அப்படியே இயல்பான ஒரு மனவோட்டத்தை ரொம்ப அருமையா உங்க எழுத்து நடை பிரதிபலிக்குது.எனக்கு ரொம்ப பிடித்தது.
சோகமான உணர்வை பிரதிபலிக்கும் கதையை வாசிப்பதை நான் தவிர்த்து விடுவேன். இந்த கதை அதற்கு விலக்கு. வானதி கதா பாத்திரம் கூடவே வந்து சோகத்திலும் ஒரு சுகம் கொடுக்கிறது. தொடர்ந்து என்னை படிக்கவும் வைத்தது. அவரவர்க்கு அவரவர் உணர்வு ......இதை தெளிவா சொல்லி இருக்கீங்க. அன்பான, உயிரான உறவை இழக்கும் கொடுமை,அது தரும் வலி .....இதையெல்லாம் தாண்டி மீதமிருக்கும் வாழ்வை நினைத்து வலிகளை கடந்து வாழ வேண்டியது இருக்கிறது.அதற்கு ஆறுதலான துணையை தேடிக்கொள்வதில் என்ன தவறு.....ரொம்ப பிடித்தது.
ஒரு அழுத்தமான அதே சமயம் இனிமையான உணர்வுன்னு கலவையான உணர்வுகளோடு படித்து முடித்தேன்.
உங்களோட ‘நெஞ்சமதில் மஞ்சம் கொள்ள வாராயோ ‘ மற்றும் ‘எந்தன் உறவுக்கு ஒரு உயிர் கொடு ‘ இரண்டும் என்னோட ஆல் டைம் பாவரிட். உங்க கதைகளில் குழந்தைகளை வைத்து எழுதுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.