அவரிடம் பேசினால் அவரின் வேதனை கூடிப்போகுமே தவிர இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவளால் அவனுடைய வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதில் கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று...
வருடம் தான் கழிந்ததே ஒழிய மாற்றம் எதுவும் நிகழவேயில்லை. இதில் அரவிந்தன் குடும்பம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்பதையும் யாதவி மூலம் அறிந்துகொண்டவனின் இதயத்தில் பாரம் தான் ஏறிற்று! மெல்ல மெல்ல அவ...
பிரதாபனுக்கும் யாதவிக்கும் காதல் பேச்சுக்களோ, சின்னச் சின்னச் சில்மிசங்களோ நடந்தேறியதே இல்லை. ஆனால், இதயங்கள் இணைபிரியாமல் அன்போடு சேர்ந்திருந்தன. வீட்டுக்கு அவன் வரும் பொழுதுகளில் இருத்திவைத்து ஒருநே...
அவன் தந்த பரிசினை உடனேயே பிரித்துப் பார்க்கவில்லை யாதவி. தனிமையில் அவனையும் அவன் நினைவுகளையும் மட்டுமே சுமந்து அதனை ஆசையாசையாகப் பிரிக்க ஆவல் கொண்டவள், தன் ஹாண்ட் பாக்கினுள் போட்டுக்கொண்டாள். வீட்டுக்...
மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்கவேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள். கடினம் தான். ...
ஆனால், இனி என்ன செய்வது? அவனிடமும் போய்க் கதைக்க முடியாது. உயிர் விடும் அளவுக்குத் துணிந்தவளிடம் மனதை மாற்றிக்கொள் என்று சொல்லவும் முடியும் போலில்லை. இதற்கு என்னதான் தீர்வு? தீர்வோடு வந்தாள் பெயர் கூட...
பிரதாபன் எதைச் சொல்லியும் பிரபாவதி கேட்பதாயில்லை. “அவர் என்ன சொன்னவர்? அப்படியே சொல்லு!” என்று நின்றாள். “அவருக்கு விருப்பம் இல்லையாம்.” “நினைச்சனான்! அவன்ர தங்கச்சிதான் எதையாவது சொல்லி மனதை மாத்தியிர...
அந்த நேரத்திலும் அந்தப்பெண் இந்த விசயத்தைக் கையாண்ட விதம் அவனைக் கவர்ந்தது. அவள் கோபப்படவில்லை. அரவிந்தனைப் போன்று கூட வார்த்தைகளை விடவில்லை. நியாயம் பேசவில்லை. நாங்கள் பொய் சொல்லவில்லை என்று வாதாடவில...
அவனுக்குச் சம்மதிக்கிற எண்ணமே இல்லை. சம்மதிக்கவும் முடியாது. அவளுக்கான மாப்பிள்ளை கையிலேயே இருக்கிறானும் கூட! ஆனால், போய்ப்பார்த்துப் பேசினால் தானே எதனால் மறுக்கிறேன் என்று காரண காரியத்துடன் விளக்க மு...
தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அரவிந்தன். ஜீன்ஸ் அணிந்திருந்ததில் சஹானாவின் கால்கள் தப்பியிருக்க வெயிலுக்கு இதமாகக் கையில்லாத மெல்லிய சட்டை அணிந்திருந்ததில் கை முழுவதும் சிராய்த்து, திட்டுத் திட...
