அவ்வப்போது அவள் விழிகள் யோசனையோடு காந்தனைப் பின்தொடர்வதைக் கவனித்தான் நிர்மலன். சிந்திக்கட்டும், பிறகு தெளிவான முடிவை எடுக்கட்டும். காயப்பட்டு, நைந்து, நம்பிக்கையிழந்து போன மனது அவளது. அதில் மாற்றங்கள...
அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார். வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிளாஸ்டிக் காலுக...
அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது. “வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான். “ஆருமே இல்லாத வீட்டை என்னால பாக்கேலாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார...
அவனது கண்மணி என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? இப்படி அவளிருக்க, அவன் வெளிநாட்டில் மனைவியோடு இனிமையான இல்லறம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அவனை அவனே வெறுத்தான்! “சாப்பாட்டுக்கு என்ன செய்றாய்?” குரலடைக்கக் கேட்...
பத்து நாட்கள் கடந்திருக்கும். எப்போதும்போல அன்று மாலையும் கோயிலுக்கு வந்திருந்தாள் கண்மணி. மனதார வணங்கிவிட்டுக் கண்களைத் திறந்தபோது, திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். ...
“எனக்கும் முள்ளிவாய்க்கால் தான்.” நான் போராளி அல்ல, பொதுஜனம் தான், ஆனாலும் கால் போய்விட்டது என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லி எதற்கு அவனைப் பிரிக்க? “இவையல(இவர்களை) மாதிரி நாங்களும் வீரச்சாவு அட...
அது ஒரு புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிலம். அங்கு, நான்கு பக்கமும் மண்சுவரால் எழுப்பப்பட்ட கொட்டில் ஒன்றை, தனக்கான தங்குமிடமாக அமைத்துக்கொண்டிருந்தாள் கண்மணி. பொய்யாக அதனை ‘வீடு’ என்று சொல்வதில் அர்...
வாடிப்போயிருக்கும் செடி நீருக்காகத் தாகத்துடன் காத்திருப்பதில்லையா? அப்படி இருந்தது அவள் கேட்டவிதம். “உனக்குக் கவலையாவே இல்லையா?” கேட்டே விட்டான் நிர்மலன். அவனால் முடியவில்லை. நடிக்க முடியவில்லை. ஒன்ற...
நெஞ்சில் முட்டி மோதிய எண்ணங்களை எல்லாம் ஒரே மூச்சில் அவன் கொட்டி முடித்தபோது, ‘அந்தப் பெண்ணா? எவ்வளவு அன்பும் சாந்தமுமாய்க் கதைத்தாள். கடவுளே..!’ உஷாவின் கண்களில் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது. மனம்...
நாட்கள் ஒன்றும் அப்படியே உறைந்துவிடவில்லை. அவனது வாழ்க்கையும் எங்கும் தேங்கிவிடவில்லை. மனைவி பிள்ளைகளோடு சுவிசுக்கு வந்து சேர்ந்துவிட்டான். வழமைபோல வீடு, வேலை, மனைவி, பிள்ளைகள் என்று அவனது பொழுதுகள் க...

