பரீட்சையை அவள் திறம்படச் செய்வாள் தான் என்றாலும், ஆசிரியர் சொல்லும் விளக்கங்களைக் கேட்டு விளங்கிக்கொள்வது போல் வராதே. இதில் பேப்பர் வேறு நாளை மாலைதான் கையில் கிடைக்கும். மழையைப் பார்க்காமல் போயிருக்க ...
அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடுவதும், அடுத்தவரை நோகடிப்பதும் அவளின் இயல்பே அல்ல. இப்படி யாரிடமும் மன்னிப்பைக் கெஞ்சிக் கேட்கும் நிலை அவளுக்கு வந்ததே இல்லை. தவிப்போடு நின்றவளை திரும்பிப் பா...
இன்னொரு பக்கம் கண்ணாடி ஷெல்புகளில் லாப்டாப்புகள், டாப்லெட்ஸ் நிறைந்து வழிந்தன. கடையின் நட்ட நடுவில் உயரமான கண்ணாடி பெட்டகத்துக்குள், ‘ஐ-பாட், ஐ-பொட், ஐ-மேக், மேக்புக், ஐ-போன்’ என்று ஆப்பிள் நிறுவனத்து...
வேகவேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தாள் கவின்நிலா. டியூஷனுக்கு வெளிக்கிடும் நேரத்தில் ஸ்கூட்டி தன் வேலையை காட்டியதால் வந்த விளைவு. ஸ்பெஷல் கிளாஸ் வேறு. மேகமோ இருட்டிக்கொண்டு வந்தது. ‘ராமா ராமா இப...
“அது காசு மெத்தின குணம். அந்தக் குடும்பத்துக்கே படிச்சுப் படிச்சு மறை கழண்டுட்டுது. இல்லாட்டி இந்த வயசுல இதெல்லாம் தேவையா? ஒரு ஃபோன் காணாது?” என்று கடிந்தான் அவன். “அந்தக் குடும்பத்தை எப்படிக் குறை சொ...
அன்று அவர்களின் ட்ரெஸ் கோட் சுடிதார். தலைக்கு சிவப்பு ரோஜாவோடு சின்னதாய் எவர்கிறீன் இலை ஒன்று. எல்லோருக்கும் தனித்தனியாக ரோஜாக்களை வெட்டி எடுக்கும்போதே, இந்திராணி கடிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். மல்லி...
இது இன்று நேற்றல்ல, அவள் ஏஎல் தொடங்கிய காலத்திலிருந்து நடப்பது. வாரத்தில் இரண்டு நாட்களாவது பின்னால் வருவான். சினப்பார்வை ஒன்றை வீசிவிட்டு அவள் வேகமாக சைக்கிளை மிதிக்க, தன் மோட்டார் வண்டியை அவளருகே கொ...
“ஓ..! அப்ப நீ படிச்சு கெட்டிக்காரி ஆகேல்ல. அவள்தான் நீ எழுதாத பேப்பருக்கு மார்க்ஸ் போட்டிருக்கிறாள்.” “இதுல இருந்தே தெரியுது, நீங்க எப்படி உங்கட பிள்ளைகளுக்கு மார்க்ஸ் போடுறீங்க எண்டு. ஆனா, என்ர மிஸ் ...
வீட்டுக்கு வரும்போது வாடி வதங்கிப்போய் வந்தாள் கவின்நிலா. “என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் அன்னை மேகலா. “லைட்டா தலை வலிக்குதம்மா.” சோர்வுடன் அமர்ந்தவளை தன் மடியில் ஏந்திக்கொண்...
படிக்கிற வயதில் படிக்காமல், எப்போது பார்த்தாலும் ரோட்டில் நின்று போகிற வருகிற பெண்களைப் பார்த்தபடி அரட்டை அடிக்கும் இவனெல்லாம் என்ன மனிதன் என்றுதான் அவளது சிந்தனை ஓடும். அதுகூட சசியின் அண்ணா என்று அறி...

