• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று.

இப்படியான பல தோல்விகளை, சறுக்கல்களை, இக்கட்டான சூழ்நிலைகளை எல்லாம் பலமுறை கடந்து வந்திருக்கிறாள். ஆரம்ப காலங்களில் அவள் ஒரு பெண் என்பதாலேயே இளக்காரமாக நோக்கி இலகுவாகத் தட்டிவிடலாம் என்றெண்ணி முயற்சிகளும் எடுத்திருக்கிறார்கள்.

அவற்றைக் கையாளும் முறைகளும் அவளுக்குக் கைவந்த கலைதான். அதெல்லாம் அவளைப் பெரிதளவில் பாதித்ததும் இல்லை.

இந்த முறை முத்துமாணிக்கம் என்பதாலேயே அளவுக்கதிகமாக நம்பியிருந்தாள். தன் மீதும் தன் அப்பம்மா மீதும் அவர் கொண்டிருந்த அபிமானம் அப்படி நம்ப வைத்திருந்தது.

அதோடு ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவள் கனவும் அதற்குள் புதைந்து கிடந்ததாலோ என்னவோ நடந்த விடயம் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இப்போது அவளின் ஒரேயொரு கேள்வி, இந்தச் செய்தி நிலனின் காதிற்கு எப்படிப் போனது என்பது. உடனேயே
முத்துமாணிக்கத்திற்கு அழைத்தாள்.

அங்கே அவருமே இப்படி நடந்துபோயிற்றே என்கிற மனவருத்தத்தில்தான் இருந்தார். ஒரு பருவத்திற்கு மேல் பிள்ளைகளின் கைகள் ஓங்கிவிடுகின்றன. பெரிய முடிவுகள் அவர்கள் வசமாகிவிடுகின்றன.

அதுவும் மொத்தமாகத் தொழிலைக் கொடுக்கிறோம் என்கையில் கிடைக்கிற வரையில் இலாபம் என்று பிள்ளைகள் நின்றபோது அவரால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

ஆனால், இளவஞ்சி? அவளுக்கு அவர் கொடுத்த நம்பிக்கை?

அவள் அழைக்கவும் உடனேயே அழைப்பை ஏற்று, அவள் கேள்விக்குப் பதிலையும் சொன்னார்.

“உண்மையா நான் சொல்லேல்ல இளவஞ்சி. ஆனா என்ர இளையவனும் நிலனும் ஃபிரெண்ட்ஸ் எண்டு உங்களுக்கும் தெரியும்தானே? அப்பிடித்தான் நியூஸ் போயிருக்கு.”

அதுவரையில் ஆனந்தி மீது அவளுக்கு மெல்லிய சந்தேகம் உண்டாகியிருந்தது. அவள் பக்கமிருந்து அவள், விசாகன், ஆனந்தி மூவருக்கும்தான் இது தெரியும். விசாகன் அத்தனை சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

ஆனந்தி கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே அவளோடு இருப்பவள். அவள் மூலம் விடயம் கசியவில்லை என்று தெளிவானதும் அழைப்பைத் துண்டிக்கப் போனவளை இடைமறித்துப் பேசினார் முத்துமாணிக்கம்.

“சொறியம்மா. இப்பிடி நடக்கும் எண்டு நான் நினைக்கேல்ல.” என்றார் மிகுந்த மனவருத்தத்தோடு.

“பரவாயில்ல அங்கிள். தொழில் எண்டு வந்திட்டா நாணயத்த விட லாபம் முன்னுக்கு வந்து நிக்கிறது எப்பவும் நடக்கிறதுதானே?” என்று, இத்தனை காலமும் அவர் ஈட்டி வைத்திருந்த நல்ல பெயரை ஒற்றை வரியில் அடித்து நொறுக்கிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டார் முத்துமாணிக்கம்.

இங்கே இளவஞ்சி, நினைத்தது நடக்காமல் போன ஆத்திரம் ஒருபுறம், திரும்ப திரும்ப நிலனிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோமே என்கிற இயலாமை இன்னொரு புறம் என்று தாக்கியதில் அதிலிருந்து வெளிவர முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள்.

ஆனால், எல்லோரையும் போன்று உணர்வுகளுக்குள் ஆட்பட்டுக் கிடக்கவோ, மனநிலையைச் சரியாக்கிக்கொள்வதற்காக நேரம் செலவழிக்கவோ அவளால் முடியாதே!

புலி வாலைப் பிடித்த கதையாக அவளால் முடிகிறதோ இல்லையோ அன்றைய நாளின் பின்னே ஓடியே ஆக வேண்டும். அதில் எப்போதும் போன்று தயாராகித் தொழிற்சாலைக்குப் புறப்பட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று கண்டுகொண்ட விசாகன், “மேம்?” என்றான் கேள்வியாக.

“முத்துமாணிக்கம் அங்கிளின்ர கார்மெண்ட்ட நிலன் வாங்கிறாராம் விசாகன்.” என்றாள் வீதியோரம் பார்வை இருக்க.

“விடுங்க மேம். எல்லாம் நல்லதுக்கு எண்டே நினைப்பம்.” என்றான் ஆறுதலாக.

குறைந்தது பத்து ஏக்கருக்கு மேற்பட்ட பெரும் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது அவளது தொழிற்சாலை.

அகன்ற பெரிய வாசல்கள் மட்டும் மூன்று. இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களைச் சுமந்து செல்லும் லொறிகளுக்காக ஒரு வாசல்.

வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலமோ, விமானங்கள் மூலமோ தலைநகருக்கோ, துறைமுகங்களுக்கோ வந்திறங்கும் மூலப் பொருள்களை அங்கிருந்து கொண்டு வரும் லொறிகளுக்கு இன்னொரு வாசல்.

தொழிலாளர்கள், அவர்கள் வாகனங்கள், அவர்களை ஏற்றி வருவதற்கு என்று அவள் ஏற்பாடு செய்திருக்கும் பஸ்கள், அலுவலகத்திற்கு வருகிறவர்கள் வந்து போவதற்கு என்று இன்னொரு வாசல்.

அந்த வாசல் நடுவில் இருந்தது. இவளின் காரைக் கண்டதும் அதன் கேட் உருண்டு ஓடிப்போய், ஒரு பக்கச் சுவரோரமாகப் பதுங்கிக்கொள்ள, நீண்ட நெடிய ஓடுபாதையில் நிதானமாகப் பயணித்து, இவளின் வாகனம் தரிப்பதற்கு என்றே பிரத்தியேகமாக இருந்த கூரையின் கீழ் சென்று ஓய்வுபெற்றது இவளது கார்.

ஆங்கில எழுத்து ‘வி’யைத் தலைகீழாக்கி வைத்தது போன்ற கூரைகள் பத்துக்கும் மேலே அடுத்தடுத்துத் தொடராகப் போடப்பட்டிருக்க, அதன் நீளங்கள் பின் பக்கமாக முடிவிலியைப் போன்று நீண்டுகொண்டே போயின.

அதன் மேல் பகுதியில் தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை என்கிற பெயர், தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளிலும் கம்பீரமாக எழுதப்பட்டிருந்தது.

வேக நடையில் அதனுள் உள்ளிட்டவளை முகம் மலர்ந்த புன்னகையோடு வரவேற்றார் தையல்நாயகி.

அவரின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாளிற்கு எடுத்த படம். இன்னும் சொல்லப்போனால் எடுத்ததே அவள்தான். தன் பேத்தி தன்னைப் புகைப்படம் பிடிக்கிறாள் என்கிற பூரிப்பில் அன்றலர்ந்த மலராக மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் தையல்நாயகி அம்மா.

அவரைக் கண்டதும் இன்னுமே கலங்கிப்போனாள். அவள் உள்ளம் சட்டென்று குழந்தையாக மாறி, அவர் மடிக்குள் தஞ்சம் புகுந்துகொள்ள ஏங்கிற்று.

முடியாதே!

தொண்டைக்குள் வந்து சிக்கிய எதையோ விழுங்கிக்கொண்டு, “நான் தோக்கிறனா அப்பம்மா?” என்று மனதார அவரிடம் பேசியவளின் கைகள், பழக்கதோசமாக அவருக்குப் பூச்சூடி வணங்கிற்று.

அவரின் கனிந்த பார்வை, ‘நீயாக ஒப்புக்கொள்கிறவரை தோல்வி தோல்வியே கிடையாது கண்ணம்மா.’ என்று சொல்வது போலவே இருக்க, மனம் இலேசாகத் தொடங்கிற்று.

அதனோடே தன் அலுவலக அறைக்குச் சென்று,
கைப்பையை உள்ளே வைத்துவிட்டு, விறுவிறு என்று தொழிற்சாலைக்குள் பிரவேசித்து நடக்க ஆரம்பித்தாள்.

மனம் எப்போதெல்லாம் சஞ்சலப்பட்டுக் கிடக்கிறதோ அப்போதெல்லாம் இதைத்தான் செய்வாள். இப்படிச் செய்கையில் அவள் உள்ளத்திற்கும் ஆறுதல் கிட்டும். ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவளே நேரடியாகப் பார்த்ததாகவும் ஆகிவிடும்.

பெண்களுக்கான உடைகள் உற்பத்திதான் அவர்களது. உள்ளாடைகள் தொடங்கி, கர்ப்பிணிப் பெண்களுக்கான உடைகளிலிருந்து, குழந்தைகளுக்கான உடைகள்வரை ஒன்று விடாமல் உற்பத்தி செய்கிறார்கள்.

ஒவ்வொரு ஆடையிலும் அணிகிறவர்களுக்கு வசதியாக இருக்கும்படியான மாற்றங்களை யோசித்து, அதனை வடிவமைத்துக் கொடுக்க ஒரு குழு தனியாகவும், அப்படி அவர்கள் கொடுக்கும் வடிவமைப்பை வரைபடமாக்கி, அதை அந்த ஆடையின் தேவையான அளவுகளின்(XS, S, M, L, XL…) அளவுத் துண்டுகளாக்கிக் கொடுக்க ஒரு குழுவினரும் இருந்தனர்.

அவர்களிடமிருந்து வருகிற அளவுகளும், ஒவ்வொரு அளவிற்கும் எத்தனை உருப்படியில் ஆடைகள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்டரையும் கவனித்து, அதற்கு ஏற்ற வகையில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய பெரிய மேசைகளில் பல அடுக்கில் துணிகளை விரித்து அடுக்கி, அதன் மேலே முன்னுடல், பின்னுடல், கை, கொலர் என்று இருக்கும் அளவுத் துண்டுகளை வரைந்து, அவ்வளவு பெரிய துணி அடுக்கினையும் ஒரே நேரத்தில் சீராக வெட்டும் மெஷினினால் வெட்டி, அந்தந்தத் துண்டுகளைத் தனித்தனியாகக் கட்டி, அடுத்த நிலைக் குழுவிடம் அனுப்ப என்று இன்னொரு குழு இருந்தது.

அப்படி வெட்டப்பட்ட துணிகள் அவர்கள் தொழிற்சாலையின் லோகோவைப் பிரிண்ட் பண்ணுவதற்கு முதலில் செல்லும். அதன் பிறகு கை, நெஞ்சுப் பகுதி, முதுகு என்று எங்காவது ஏதாவது டிசைன்கள் போடவேண்டுமாயின் அதற்குத் தகுந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ப்ரோடிங், பிரிண்டிங் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து நகரும் துணிகள் சீராக அயர்ன் செய்யப்பட்டு தைக்கும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே ஒவ்வொரு ஆடையும் எந்த வரிசையில் தைக்கப்பட வேண்டுமோ அந்த வரிசையில் அவரவர் அந்தந்த வேலையை மட்டுமே முடித்துக்கொடுக்க, ஒரு வட்டம்போல் சுழன்று வரும் துணி, கடைசியில் தனக்கான வடிவத்தை முழுமையாகப் பெற்று, ஒரு உடையாக உருமாறி நிற்கும்.

அது கிளீனிங் பகுதிக்குச் சென்று, தேவையற்ற நூல்களோ, துணிகளோ இருந்தால் அகற்றப்படும். அப்படியே அளவு, போடப்பட்ட பிரிண்ட் முதற்கொண்டு தைக்கப்பட்ட பட்டன் வரை சரியாக இருக்கிறதா என்று ஆராயப்பட்டு, திரும்பவும் அயர்ன் பண்ணும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே அயர்ன் செய்யப்பட்டு, அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு, பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும்.

இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இருப்பது கொடவுன். அங்கே பனையளவு உயரத்திற்கும் மேலே, எவ்வளவு பெரிய பாரத்தையும் தாங்குமளவுக்கான ராக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தட்டு தட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

அந்த ராக்குகளில் இராட்சத ரோல்களாகச் சுற்றப்பட்டிருக்கும் துணி வகைகள், நூற்கண்டுகள், பட்டன்கள் டிசைன் ஓராயிரம், தைப்பதற்குத் தேவையான இதர பொருள்கள் எல்லாமே மின்சார ஃபோர்க்லிஃப்ட்(Electric Forklift) மூலம் ஏற்றி அடுக்கப்பட்டிருந்தன.

அதையெல்லாம் பார்த்தபடி, அங்கே பணிபுரிந்தவர்கள் இன்முகத்தோடு சொல்லும் காலை நேரத்து வணக்கத்தையும் பெற்றுக்கொண்டு, அவளே நேரடியாகக் கவனிக்கையில் கண்ணில் படும் தவறுகளையும் குறைகளையும் பற்றி அந்தந்த இடத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டு, அந்தத் தொழிற்சாலையை மொத்தமாக அவள் சுற்றி முடிக்கையில் பெருமையும் நிமிர்வும் அவளறியாமலேயே அவளுக்குள் உண்டாயிற்று.

அவளுக்கே இத்தனை தொந்தரவுகளும் துன்பங்களும் சறுக்கல்களும் ஏமாற்றங்களும் கிடைக்கின்றன என்றால், எங்கோ ஒரு மூலையில் இருந்த கிராம வீட்டில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, நகரத்துக்கு நகர்ந்து வந்து, முதலில் யாழ்ப்பாணத்திலேயே மூலப் பொருள்களை வாங்கித் தைத்துக்கொடுத்து, பிறகு தலைநகரிலிருந்து கொள்வனவு செய்யத் தொடங்கி, அதன் பிறகு இந்தியா முதற்கொண்டு ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இறக்குமதி செய்கிற அளவிற்கு அவள் அப்பம்மா வளர்த்திருக்கிறார் என்றால், அவர் இதைப் போன்ற எத்தனையைக் கடந்து வந்திருப்பார்?

அவர் அவளைப் போன்று சோர்ந்திருந்தால் இன்று தையல்நாயகி என்கிற இந்தத் தொழிற்சாலை உருவாகியிருக்குமா, இல்லை அது இத்தனையாயிரம் பெண்களுக்கான வாழ்வாதாரத்திற்கு தூணாகத்தான் நின்றிருக்குமா?

அதைவிட அங்கிருக்கும் பல பெண்களின் கதை அவளுக்குத் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில் அவள் எதிர்கொள்பவை எல்லாம் ஒன்றுமேயில்லை. அடிப்படை வசதி மட்டுமல்ல அளவுக்கதிகமான வசதிகளும், வருமானமும் அவளிடம் உண்டு. அப்படியானவள் கலங்கி நிற்பதா? அதுவும் தையல்நாயகியின் பேத்தி உடைந்துபோவதா?

கூடவே கூடாது! இயல்பான நிமிர்வுடன் அன்றைய நாளிற்கான தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நாள்கள் நகர ஆரம்பித்தன. நிலன், முத்துமாணிக்கத்தின் கார்மெண்ட்ஸை பத்திரப்பதிவு செய்த செய்தி இவள் செவியையும் வந்து எட்டியிருந்தது.

அன்று வீடு வந்தவளை அழைத்தார் குணாளன்.

“அம்மாச்சி… அது… நிலனுக்கு உங்களத் திரும்பவும் கேட்டு விட்டிருக்கினம்மா.” என்றார், மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்தே.

அதேபோல் அவளுக்கும் சட்டென்று சினம்தான் உண்டாயிற்று. “என்னப்பா இது அரியண்டம்? விருப்பமில்ல எண்டு சொல்லியாச்சே. பிறகும் என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

அந்தப் பக்கம் அவளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இந்தப் பக்கம் அவளைப் பெண் கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரியம் என்று மனம் கொதித்தது.

அவருக்கும் இரண்டு மனம்தான். அவள் சொல்வதுபோல் வேண்டாம் என்றும் நினைத்தார். அதே நேரத்தில் வேண்டும் என்றும் நினைத்தார். தன் தடுமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், “ஆனாம்மா நீயும் ஒருக்கா யோசிக்கலாமே. எனக்கும் நிலனுக்கு உங்களக் குடுக்க விருப்பம்தான்.” என்று சொன்னார்.

இது அவள் எதிர்பாராதது. இத்தனை காலமும் வெறுத்து ஒதுக்கிய மனிதர்கள் மீது இதென்ன திடீர் பற்று? அவர் மீது சிறு கோபம் உண்டாக, “யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெறுமதியான ஆள் இல்லையப்பா அந்த நிலன். வேண்டாம் எண்டா வேண்டாம்தான்.” என்று உறுதியான குரலில் மறுத்தாள்.

“அப்படிச் சொல்லாதயம்மா. என்னதான் இண்டைக்கு நாங்களும் நல்ல வசதி வாய்ப்போட இருந்தாலும் அவே பாரம்பரியமான குடும்பம். அங்க நீ போனா எங்களுக்கும் பெருமைதானே?” என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

“என்ன கிழிஞ்ச பெருமை? முதல் அந்தளவுக்கு நாங்க எந்தப் பக்கத்தால குறைஞ்சுபோனோம்?” என்று சீறினாள்.

“அம்மாச்சி…”

“கதைக்காதீங்கப்பா. எப்ப இருந்தப்பா இப்பிடி அடுத்தவன்ற பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் ஆசைப்பட ஆரம்பிச்சனீங்க? நாங்களும் மூண்டாவது தலைமுறையா நிமிந்துதானேப்பா நிக்கிறம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”

“சரியம்மா. நான் கதைச்சது பிழையாவே இருக்கட்டும். நீங்க அந்தப் பெடியனைப் பற்றி மட்டும் யோசிங்கோ. அவர் நல்லவர்தானே. உங்களை மாதிரி உழைப்பில கெட்டிக்காரனும்.”

“அந்தக் கெட்டிக்காரனும் அவரின்ர வீட்டு ஆக்களும் எதுக்குப் பிளான் பண்ணினம் எண்டு உங்களுக்கு விளங்கவே இல்லையாப்பா?”

“வாழ்க்கையோட தொழிலைத் தொடர்படுத்தக் கூடாதம்மா. வாழ்க்கை வேற. தொழில் வேற.”

“இதெல்லாம் மேடைப் பேச்சுக்கும் பேட்டி குடுக்கவும் நல்லாருக்கும். ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. ரெண்டுல எது பிழைச்சாலும் மற்றதும் சேந்துதான் பாதிக்கும்.” தெளிவாகத் தன் கருத்தை உரைத்தாள் அவள்.

“சரியம்மா. கோபதாபத்தை விட்டுப்போட்டு அப்பா சொல்லுற மாதிரியும் ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன். நீங்க ரெண்டு பேரும் ஒரே தொழில். ஒருத்தர் இன்னொருத்தருக்கு உதவியா இருக்கலாம். வாழ்க்கைல ஒண்டு சேர்ந்தா தொழில்ல ரெண்டு பேரும் சேர்ந்தே வளரலாம். குடும்பமும் நல்ல குடும்பம். இது வரைக்கும் அவரின்ர மச்சான்தான் குழப்படி எண்டு கேள்விப்பட்டிருக்கிறனே தவிர இவரைப் பற்றி ஒரு குறையும் காதில விழுந்ததே இல்ல. இந்தக் காலத்தில இப்பிடி எல்லாம் பொருந்தி வாற சம்மந்தம் கிடைக்காதம்மா.” என்றவரை நம்ப முடியாமல் பார்த்தாள் இளவஞ்சி.

“என்னம்மா?”

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “அப்பம்மா இல்லை எண்டதும் எல்லாமே மறந்துபோச்சு என்னப்பா?” என்றாள் கசப்புடன்.

குணாளனின் பேச்சு நின்றுபோயிற்று. குற்றவுணர்ச்சியோடு சேர்த்து ஏதோ ஒரு வலியும் சுருக்கென்று அவருள் பாய்ந்தது.

“சக்திவேலருக்கு முன்னால எந்த இடத்திலயும் நாங்க குறஞ்சு நிண்டுடவே கூடாது எண்டு அப்பம்மா சொல்லுவா. அத மறந்திட்டீங்களா அப்பா? இல்ல, என்னத்துக்கு திரும்ப திரும்ப என்னைக் கேக்கினம் எண்டு விளங்கேல்லையா உங்களுக்கு? அவேக்குச் சமனா வளந்துகொண்டு வாறன் நான். என்னைக் கட்டி, பிறகு என்ர வாழ்க்கையை நடுவுக்க வச்சு தொழிலை ஒண்டு சேர்க்கிறன் எண்டு சொல்லி, தையல்நாயகிய இருந்த இடம் இல்லாம ஆக்குவினம். தேவையா இதெல்லாம்?” அவர்களின் கேவலமான திட்டத்தை அறியாமல் தந்தை இப்படிப் பேசுகிறாரே என்கிற கவலை தொனிக்க வினவினாள் அவள்.

“அதையெல்லாம் பேசி முடிவு செய்து கட்டுறதுதானேம்மா? அம்மா ஆரம்பிச்ச தொழில நானும் அப்பிடி விட்டுட மாட்டனம்மா. அப்பாக்காக யோசிங்கோ செல்லம்.”

சட்டென்று முகத்தில் பரவிய கடினத்தோடு, “ஆருக்காகவும் இதில யோசிக்க ஒண்டும் இல்லை அப்பா. எனக்கு விருப்பம் இல்ல. அவ்வளவுதான்.” என்றுவிட்டு எழுந்துகொண்டாள் அவள்.

“அக்காக்கு விருப்பமில்லை எண்டா விடுங்கோவன் அப்பா.” அக்காவின் செல்லமான சுதாகர், அவ்வளவு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டுச் சொன்னான்.

“நீ சும்மா இரு தம்பி! உனக்கு ஒண்டும் தெரியாது.” என்று அவனை அதட்டிவிட்டு, “அம்மா இருந்திருந்தா அம்மாவும் இதத்தானம்மா சொல்லியிருப்பா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “கடைசி வந்தாலும் இல்லை!” என்று சீறியிருந்தாள் அவள்.

“உங்களை விட அப்பம்மாவை, அவவின்ர மனதை, அதிலிருந்த கனவுகளை எனக்குத்தான் கூடத் தெரியும். நான் சொல்லுறன், அப்பம்மா அப்பிடிச் சொல்லவே மாட்டா!” என்றவளுக்கு அதற்குமேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமே இல்லை.

அதில், “நீங்களா விருப்பமில்லை எண்டு சொல்லுறீங்களா, இல்லை அந்த வீட்டு ஆக்களோட நானே கதைக்கவா?” என்றாள் அவரைத் தீர்க்கமாகப் பார்த்து.

“இல்லை இல்ல! நானே சொல்லுறன்.” இன்னுமே எப்படியாவது இந்தத் திருமணத்தை நடந்துவிடமாட்டோமா என்கிற எதிர்பார்ப்பு அவர் ஆழ்மனத்தில் இருந்ததில் அவசரமாக மகளைத் தடுத்தார்.


 
Last edited:

K sathiyabhama

New member
அவர்களிடமிருந்து வருகிற அளவுகளும், ஒவ்வொரு அளவிற்கும் எத்தனை உருப்படியில் ஆடைகள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்டரையும் கவனித்து, அதற்கு ஏற்ற வகையில் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய பெரிய மேசைகளில் பல அடுக்கில் துணிகளை விரித்து அடுக்கி, அதன் மேலே முன்னுடல், பின்னுடல், கை, கொலர் என்று இருக்கும் அளவுத் துண்டுகளை வரைந்து, அவ்வளவு பெரிய துணி அடுக்கினையும் ஒரே நேரத்தில் சீராக வெட்டும் மெஷினினால் வெட்டி, அந்தந்தத் துண்டுகளைக் கட்டித் தனித்தனியாக அடுத்த நிலைக்கு குழுவிடம் அனுப்ப என்று இன்னொரு குழு இருந்தது.

அப்படி வெட்டப்பட்ட துணிகள் அவர்கள் தொழிற்சாலையின் லோகோவைப் பிரிண்ட் பண்ணுவதற்கு முதலில் செல்லும். அதன் பிறகு கை, நெஞ்சுப் பகுதி, முதுகு என்று எங்காவது ஏதாவது டிசைன்கள் போடப்பட வேண்டுமாயின் அதற்குத் தகுந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட எம்ப்ரோடிங், பிரிண்டிங் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து நகரும் துணிகள் சீராக அயர்ன் செய்யப்பட்டு தைக்கும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே ஒவ்வொரு ஆடையும் எந்த வரிசையில் தைக்கப்பட வேண்டுமோ அந்த வரிசையில் அவரவர் அந்தந்த வேலையை மட்டுமே முடித்துக்கொடுக்க, ஒரு வட்டம்போல் சுழன்று வரும் துணி, கடைசியில் தனக்கான வடிவத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டு ஒரு உடையாக மாறிப்போகும்.

அது கிளீனிங் பகுதிக்குச் சென்று, தேவையற்ற நூல்களோ, துணிகளோ அகற்றப்பட்டு, அளவு, போடப்பட்ட பிரிண்ட் முதற்கொண்டு தைக்கப்பட்ட பட்டன் வரை சரியாக இருக்கிறதா என்று ஆராயப்பட்டு திரும்பவும் அயர்ன் பண்ணும் பகுதிக்குச் செல்லும்.

அங்கே அயர்ன் செய்யப்பட்டு அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும்.

இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது. இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இருப்பது கொடவுன். அங்கே பனையளவு உயரத்திற்கும் மேலே, எவ்வளவு பெரிய பாரத்தையும் தாங்குமளவுக்கான ராக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தட்டு தட்டாகப் பிரிக்கப்பட்டு, இராட்சத ரோல்களாகச் சுற்றப்பட்டிருக்கும் துணி வகைகள், நூற்கண்டுகள், பட்டன்கள் டிசைன் ஓராயிரம், தைப்பதற்கு தேவையான இதர பொருள்கள் எல்லாமே மின்சார ஃபோர்க்லிஃப்ட்(electric forklift) மூலம் ஏற்றி அடுக்கப்பட்டிருந்தன.

அதையெல்லாம் பார்த்தபடி, அங்கே பணிபுரிந்தவர்கள் இன்முகத்தோடு சொல்லும் காலை நேரத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, அவளே நேரடியாகக் கவனிக்கையில் கண்ணில் படும் தவறுகளையும் குறைகளையும் பற்றி அந்தந்த இடத்திலேயே பேசித் தீர்த்துக்கொண்டு அந்தத் தொழிற்சாலையை மொத்தமாக அவள் சுற்றி முடிக்கையில் நெஞ்சம் விம்மித் தணியும். பெருமையும் நிமிர்வும் அவளறியாமலேயே அவளிற்குள் வந்துவிடும்.

அவளுக்கே இத்தனை தொந்தரவுகளும் துன்பங்களும் சறுக்கல்களும் ஏமாற்றங்களும் கிடைக்கிறது என்றால், வீட்டில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, முதலில் யாழ்ப்பாணத்திலே மூலப் பொருள்களை வாங்கித் தைத்துக்கொடுத்து, பிறகு தலைநகரிலிருந்து கொள்வனவு செய்யத் தொடங்கி, அதன் பிறகு இந்தியா முதற்கொண்டு ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இறக்குமதி செய்கிற அளவிற்கு அவள் அப்பம்மா வளர்த்திருக்கிறார் என்றால் அவர் இதைப் போல எத்தனையைக் கடந்து வந்திருப்பார்?

அவர் அவளைப் போன்று சோர்ந்திருந்தால் இன்று தையல்நாயகி என்கிற இந்தத் தொழிற்சாலைதான் உருவாகியிருக்குமா, இல்லை அது இத்தனையாயிரம் பெண்களுக்கான வாழ்வாதாரத்திற்கு தூணாகத்தான் நின்றிருக்குமா?

அதைவிட அங்கிருக்கும் பல பெண்களின் கதை அவளுக்குத் தெரியும். அவர்களோடு ஒப்பிடுகையில் அவள் எதிர்கொள்பவை எல்லாம் ஒன்றுமேயில்லை. அடிப்படை வசதி மட்டுமல்ல அளவுக்கதிகமான வசதிகளும், வருமானமும் அவளிடம் உண்டு. அப்படியானவள் கலங்கி நிற்பதா? அதுவும் தையல்நாயகியின் பேத்தி உடைந்துபோவதா?

கூடவே கூடாது! இயல்பான தன் நிமிர்வுடன் அன்றைய நாளிற்கான தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நாள்கள் நகர ஆரம்பித்தன. நிலன் முத்துமாணிக்கத்தின் கார்மெண்ட்ஸை பத்திரப்பதிவு செய்த செய்தி இவள் செவியையும் வந்து எட்டியிருந்தது.

அன்று வீடு வந்தவளை அழைத்தார் குணாளன்.

“அம்மாச்சி… அது… நிலனுக்கு உங்களத் திரும்பவும் கேட்டு விட்டிருக்கினம்மா.” என்றார் மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்தே.

அதேபோல் அவளுக்கும் சட்டென்று சினம்தான் உண்டாயிற்று. “என்னப்பா இது அரியண்டம்? விருப்பமில்லை எண்டு சொல்லியாச்சே. பிறகும் என்ன?” என்றாள் எரிச்சலுடன்.

அந்தப் பக்கம் அவளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே இந்தப் பக்கம் அவளைப் பெண் கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரியம் என்று மனம் கொதித்தது அவளுக்கு.
“ஆனாம்மா நீயும் ஒருக்கா யோசிக்கலாமே பிள்ளை. எனக்கும் நிலனுக்கு உங்களக் குடுக்க விருப்பம்தான்.”

இது அவள் எதிர்பாராதது. அவரும் ஆசைப்படுகிற அளவிற்கு அவன் என்ன உலகத்திலேயே இல்லாத மாப்பிள்ளையா? “யோசிக்கிற அளவுக்கெல்லாம் பெறுமதியானவன் இல்லையப்பா அந்த நிலன். வேண்டாம் எண்டா வேண்டாம்தான்.”

“அப்படிச் சொல்லாதயம்மா. என்னதான் இண்டைக்கு நாங்களும் நல்ல வசதி வாய்ப்போட இருந்தாலும் அவே பாரம்பரியமான குடும்பம். அங்க நீ போனா எங்களுக்கும் பெருமைதானே.”

“என்ன கிழிஞ்ச பெருமை? முதல் அந்தளவுக்கு நாங்க எந்தப் பக்கத்தால் குறைஞ்சுபோனோம்?” முகம் கோபத்தில் சிவந்து கொதிக்கச் சீறினாள் இளவஞ்சி.

“அம்மாச்சி…”

“கதைக்காதீங்கப்பா. எப்ப இருந்தப்பா இப்பிடி அடுத்தவன்ற பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் ஆசைப்பட ஆரம்பிச்சனீங்க? நாங்களும் மூண்டாவது தலைமுறையா நிமிந்துதானேப்பா நிக்கிறம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?”

“சரியம்மா. நான் கதைச்சது பிழையாவே இருக்கட்டும். நீங்க அந்தப் பெடியனைப் பற்றி மட்டும் யோசிங்கோ. அவர் நல்லவர்தானே. உங்களை மாதிரி உழைப்பில கெட்டிக்காரனும்.”

“அந்தக் கெட்டிக்காரனும் அவன்ர வீட்டு ஆக்களும் ஏத்துக்குப் பிளான் பண்ணினோம் எண்டு உங்களுக்கு விளங்கவே இல்லையாப்பா?” ஏளனமாக உதவு வளைய வினவினாள் அவள்.

“வாழ்க்கையோட தொழிலைத் தொடர்படுத்தக் கூடாதம்மா. வாழ்க்கை வேற. தொழில் வேற.”

“இதெல்லாம் மேடைப் பேச்சுக்கும் பேட்டி கொடுக்கவும் நல்லாருக்கும் அப்பா. ரெண்டுக்கும் தொடர்பு இருக்கு. ரெண்டுல எது பிழைச்சாலும் மற்றதும் சேந்துதான் பாதிக்கும்.” பட்டென்று சொன்னாள் பெண்.

“சரியம்மா. கோபதாபத்தை விட்டுப்போட்டு அப்பா சொல்லுற மாதிரியும் ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோவன். நீங்க ரெண்டு பேரும் ஒரே தொழில். ஒருத்தர் இன்னொருத்தருக்கு உதவியா இருக்கலாம். நாளைக்கு சேர்ந்தே நீங்க ரெண்டுபேரும் வளரலாம். குடும்பமும் நல்ல குடும்பம். இது வரைக்கும் அவரின்ர தம்பிதான் குழப்படி எண்டு கேள்விப்பட்டிருக்கிறனே தவிர இவரைப் பற்றி ஒரு குறையும் காதில விழுந்ததே இல்ல. இந்தக் காலத்தில இப்பிடி எல்லாம் பொருந்தி வாற சம்மந்தம் கிடைக்காதம்மா.” என்றவரை ஒன்றுமே சொல்லாமல் பார்த்தாள் இளவஞ்சி.

“என்னம்மா?”

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “அப்பம்மா இல்லை எண்டதும் எல்லாமே மறந்துபோச்சு என்னப்பா?” என்றாள் கசப்புடன்.

“சக்திவேலருக்கு முன்னால எந்த இடத்திலயும் நாங்க குறஞ்சு நிண்டுடவே கூடாது எண்டு அப்பம்மா சொல்லுவா, அத மறந்திட்டீங்களா அப்பா? இல்ல, என்னத்துக்கு திரும்ப திரும்ப என்னைக் கேக்கினம் எண்டுதான் விளங்கேல்லையா உங்களுக்கு? அவேக்குச் சமனா வளந்துகொண்டு வாறன் நான். என்னைக் கட்டி, பிறகு என்ர வாழ்க்கையை நடுவுக்க வச்சு தொழிலை ஒண்டு சேர்க்கிறன் எண்டு சொல்லி, தையல்நாயகிய இருந்த இடம் இல்லாம ஆக்குவினம். தேவையா இதெல்லாம்?”

“அதையெல்லாம் பேசி முடிவு செய்து கட்டுறதுதானேம்மா? அம்மா ஆரம்பிச்ச பாக்டரிய நனையும் அப்பிடி விட்டுட மாட்டனம்மா. அப்பாக்காக யோசிங்கோ செல்லம்.”

“ஆருக்காகவும் இதில யோசிக்க ஒண்டும் இல்லை அப்பா. எனக்கு விருப்பம் இல்ல. அவ்வளவுதான்.” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மா இருந்திருந்தா அம்மாவும் இதத்தானம்மா சொல்லியிருப்பா.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “கடைசி வந்தாலும் இல்லை அப்பா!” என்று சீறியிருந்தாள் அவள்.

“உங்களை விட அப்பம்மாவை, அவவின்ர மனதை, அதிலிருந்த கனவுகளை எனக்குத்தான் கூடத் தெரியும். நான் சொல்லுறன், அப்பம்மா அப்பிடிச் சொல்லவே மாட்டா!” என்றவளுக்கு அதற்குமேல் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமே இல்லை.

அதில், “நீங்களா விருப்பமில்லை எண்டு சொல்லுறீங்களா, இல்லை அந்தச் சக்திவேலரிட்ட நானே சொல்லவா?” என்றாள் தந்தையைத் தீர்க்கமாகப் பார்த்து.

“இல்லை இல்ல! நானே சொல்லுறன்.” இன்னுமே எப்படியாவது இந்தத் திருமணத்தை நடந்துவிடமாட்டோமா என்கிற ஆசையில் இருந்தவர் மகளைத் தடுத்தார்.

தொடரும்…

லைக்கிட்டுக் கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
Very interesting ma
 
Top Bottom