• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11


இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்தையும் நல்லபடியாக முடித்த ஆசுவாசம் குணாளனை அண்டவேயில்லை. ஒரு பாரம் நெஞ்சைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது. விழிகளை மூடினால் வெறுமையைச் சுமந்து நிற்கும் மூத்த மகளின் முகம் வந்து நின்றது.

இங்கே மிதுன் சுவாதிக்கிடையிலும் எதுவும் சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை. இருவர் முகத்திலும் காதலித்து மணந்த மகிழ்ச்சி கொஞ்சமும் இல்லை.

சுவாதிக்கு ‘அவளும்தானே என்னோடு பழகினாள்’ என்ற மிதுனின் வார்த்தைகளைக் கடப்பது இலகுவாய் இல்லை. இருவரும்தான் பழகினார்கள். இருவரும்தான் எல்லை தாண்டினார்கள். ஆனால், அதன் பாரத்தைச் சுமப்பது அவள். அதனால் உண்டான பழியைச் சுமப்பதும் அவள். இன்னுமே மற்றவர் முகம் பார்க்க முடியாமல், தனக்குள் கூனிக் குறுக்கிக்கொண்டிருப்பதும் அவள்.

மிதுனுக்குத் திருமணம் முடிந்தும் முகம் கொடுக்காமல் இருக்கிறவள் மீது எரிச்சல் உண்டாயிற்று.

தளைகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்தே பழகியவன். ஆசைப்பட்டுத்தான் அவளோடு பழகினான். காதல் என்று பல பெண்களோடு பழகியிருந்தாலும் எல்லை தாண்டியதில்லை.

ஊர் சுற்றுவான், பார்ட்டிகள் செய்வான், கிளப்புகள் போவான், அவர்களோடு நன்றாகவே நேரம் செலவழிப்பான், கொஞ்ச நாள்களில் ஏதோ ஒரு கருத்து முரண் வரும், அவர்கள் தருகிற நெருக்கடிகள் அவனுக்குத் தாங்க முடியாததாக இருக்கும், பிரிவைச் சொல்லி விலகிவிடுவான்.

திரும்பவும் இன்னொரு பெண்ணின் மீது ஆர்வம் வரும். பிறகு அதுவும் இதே கதைதான்.

இவளோடு அப்படி இருக்க முடியவில்லை. அவர்களுக்குள் பலமுறை சண்டைகள் வந்தாலும் அதைப் பிரிவை நோக்கி நகர்த்தியதில்லை. மாறாக அதை ஊடலாக மாற்றி, அவளை எப்படியாவது சமாதானம் செய்துவிடுவான். அவ்வளவு அவளைப் பிடிக்கும். அளவுமீறிய பிடித்தம்தான் அளவைத் தாண்ட வைத்ததும்.

தவறுதான். இல்லை என்று அவனும் சொல்லவில்லை. அதுதான் திருமணமே முடிந்தாயிற்றே. வாழ்க்கையை வாழுவோம் என்று அவளை நெருங்கினால் முகம் திருப்புகிறாள். கோபம்தான் வந்தது. சரிதான் போடி என்று அவளை அவள் பாட்டுக்கு விட்டுவிட்டான்.

அவர்கள் இருவரையும் பார்த்த ஜெயந்திக்கு இன்னுமே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் நிலைதான். சுவாதியைக் கூப்பிட்டுக் கண்டித்தார். கணவனோடு இணக்கமாக இருக்கும்படி புத்தி சொன்னார்.

ஒரு வாரம் கடந்திருந்தது. இவர்களின் திருமணச் செய்தி கிசுகிசு என்று ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்திருந்தது. அன்று மூத்த மகளையும் மருமகனையும் விருந்துக்கு அழைத்திருந்தார் குணாளன்.

அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த இளவஞ்சியின் உள்ளத்தில் பெரும் இரைச்சல். என் வீடு என்று வாழ்ந்த இடம். இன்றோ வாழப்போன வீட்டுக்கு நிகராக இந்த வீடும் அந்நியமாகத் தெரிந்தது.

ஆனாலும் அந்த வீட்டில் நிற்கையில் உயிரின் ஆழம் வரை ஒரு வலி ஊடுருவாமல் இல்லை. தையல்நாயகி அம்மாவின் கரம் பிடித்துத் தொழிற்சாலை செல்ல ஆரம்பித்ததில் தொடங்கி, கடைசியாக அவள் தலையில் இடி விழுந்த நொடி வரை நினைவில் வந்து போக, ஒரு நொடி நிலைகுலைந்துபோனாள்.

சம்பிரதாய விருந்து சிறப்பாகவே நடந்து முடிந்தது. குணாளனும் ஜெயந்தியும் அவள் முகத்தை முகத்தைப் பார்த்தனர். அது தெரிந்தும் அவர்கள் பார்வையைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி.

சுதாகர் அவளையே சுற்றி சுற்றி வந்தான். அவளுக்கு ஆறுதலாக இருக்க முயன்றான். அவனோடு கூட மனத்திலிருந்து பேச முடியாமல் மாடியில் இருக்கும் தன் அறைக்கு வந்திருந்தாள் இளவஞ்சி.

புதிதாகப் பார்ப்பதுபோல் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். குளியலறை, உடை மாற்றுவதற்குத் தனியாய் ஒரு பகுதி, அலுவலக வேலைகள் பார்க்கத் தனிப்பகுதி என்று விசாலமான அறை அவளுடையது.

அந்த அறைக்கு அரைவட்ட வடிவிலான பால்கனி. அதில் பாதியைக் கூரை முதற்கொண்டு கண்ணாடியால் உருவாக்கிக் கண்ணாடி வீடுபோல் மாற்றியிருந்தாள்.

அமைதியான இரவுகளை அனுபவிக்கவும் ஆழ்ந்து சிந்திக்கவும் விரும்பினால் அங்கேதான் வருவாள். அங்கு, தொங்கும் கூடை நாற்காலி ஒன்று உண்டு. அதுதான் அவளின் சிம்மாசனம். எப்போதும் அதனுள் கால்களையும் சேர்த்துப் போட்டுக்கொண்டு அமர்கையில் தன்னை மிகவுமே சின்னப்பெண் போல் உணர்வாள். உற்சாகமாகவும் இருக்கும்.

இன்றும் வந்து அமர்ந்தாள். இன்று அந்த உணர்வு வரமாட்டேன் என்றது. எதையும் சிந்திக்க முடியாத அளவில் ஒரு அழுத்தம் நிரந்தரமாக அவளைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.

அவளால் இங்கும் ஒட்ட முடியவில்லை. அங்கும் ஒட்ட முடியவில்லை. இப்படியேதான் போகப்போகிறதா அவள் வாழ்க்கை? அமைதியான, அழகான, இதமான ஒரு திருமண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாளே! அது பேராசையோ? அதுதான் நடக்கவில்லை போலும்.

ஒரு நெடிய மூச்சுடன் அவள் நிமிர, “நல்ல வடிவா இருக்கு வஞ்சி, உன்ர ரூமும் இந்த பால்கனியும்.” என்றுகொண்டு வந்தான் நிலன்.

கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் இளவஞ்சி. இதுவரையில் இப்படி அவள் பகுதிக்குள் யாரும் சட்டென்று வந்ததில்லை. இளையவர்கள் கூட அக்கா என்று அழைத்துவிட்டுத்தான் வருவார்கள். திடீரென்று தன் பகுதிக்குள் வந்தவனை எதிர்கொள்ள முடியாமல் பார்த்தாள்.

“என்ன பார்வை? என்னை எதிர்பாக்கேல்லயோ?” என்றான் அவன்.

கடந்த சில நாள்களாகவே மௌனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவளால் இப்போதும் எதையும் பேச முடியவில்லை.

“அங்க எங்கட அறைலயும் இதே மாதிரி கிளாஸ் ரூம் செய்வமா? இரவில அதுவும் மழை நேரம் இன்னுமே நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறன்.”

கூடைக்குள் கோழிக்குஞ்சாகச் சுருண்டு கிடந்தவள் இப்போதும் பதில் மொழிந்தாள் இல்லை. உச்சி வெயிலைச் சுமந்தபடி கழுவித் துடைத்ததைப் போல் பளிச்சென்று இருந்த வானில் பார்வையை நிலைக்கவிட்டிருந்தாள்.

அவளையே பார்த்தான் நிலன். இங்கு வந்ததிலிருந்து யாரோடு என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுக்க அவளில்தான். தாய் தந்தையரின் முகம் பாராமல், தம்பி தங்கையரோடு பெரிதாகப் பேசாமல், உணவை முடித்துக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். இப்போது அவனோடு பேசவும் தயாராக இல்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“வஞ்சி!” என்ற அவன் அழுத்தமான அழைப்பில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள்.

“ஏன் இப்பிடி எல்லாரிட்ட இருந்தும் ஒதுங்கி நிக்கிறாய்? இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கலாம் எண்டு நினைக்கிறாய்? உன்ர அம்மா அப்பா பாவம் வஞ்சி. அவே உன்ர முகத்தை முகத்தைப் பாக்கிறது தெரியேல்லயா உனக்கு?”

சுர்ரென்று கோபம் ஒன்று முளைக்க அவனையும் அவன் கேள்விகளையும் அலட்சியம் செய்து எழுந்து நடந்தாள். அவளைப் போக விடாமல் மறித்து நின்றான் நிலன்.

“பதில் சொல்லிப்போட்டுப் போ வஞ்சி!” திருமணம் நடந்த நாள் முதலாய் அவள் மனநிலை அறிந்து, அவளுக்கு இதமாகத்தான் நடக்கிறான். அப்படி இருந்தும் அவள் காட்டும் இந்த அலட்சியம் அவனையும் இலேசாகக் கோபம் கொள்ள வைத்ததில் அழுத்தியே சொன்னான்.

அதற்கு அவள் அடங்க வேண்டுமே. “இந்தக் கலியாணம் ஏன் நடந்தது நிலன்?” என்றாள் அவனை நேராக நோக்கி.

படக்கென்று வாயை மூடிக்கொண்டான் நிலன்.

“என்னட்ட இருக்கிறது ஒரேயொரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாம எந்தக் கேள்வியும் கேட்டுக்கொண்டு வராதீங்க. பதில் கிடைக்காது!” என்றுவிட்டு அவள் இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள்.

“அக்கா!” என்று கதவைத் தட்டி அழைத்துவிட்டு வந்தான் சுதாகர்.

கணவன் மனைவி இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“அத்தானின்ர அப்பாவும் அப்பப்பாவும் வந்திருக்கினம். உங்களக் கீழ வரட்டாம் எண்டு அப்பா சொல்லிவிடச் சொன்னவர்.” என்று தகவல் சொன்னான்.

ஏனோ? கணவன் மனைவி இருவர் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீள, இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

“என்ன அப்பப்பா, இஞ்ச வாறதாச் சொல்லவே இல்ல.” என்றவனின் விழிகள் தந்தையைக் கேள்வியுடன் ஏறிட்டன.

“திடீரெண்டு அப்பா வெளிக்கிடச் சொன்னார். அதான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றார் அவர்.

அப்படி என்ன திடீர் அலுவல்? அவன் புருவங்களைச் சுருக்கினான்.

நிலனை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன்னருகில் வந்து அமர்ந்த மிதுனிடம், “பிறகு சின்ன பேரா? இஞ்சயே இருக்கிற பிளான்ல இருக்கிறியா, இல்ல அங்க வரப்போறியா?” என்று விசாரித்தார் சக்திவேலர்.

“கொஞ்ச நாளைக்கு இஞ்சயே இருக்கப்போறன் அப்பப்பா.” என்றான் அவன்.

அவன் சொன்னதை மறுத்து, அவர்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்கிற பயத்தில், “பிள்ள பிறக்கிற வரைக்கும் இஞ்சயே இருக்கட்டும். அதுக்குப் பிறகு அவேக்கு எது வசதியோ அப்பிடிச் செய்யட்டும்.” என்று வேகமாக இடையிட்டுச் சொன்னார் ஜெயந்தி.

மிதுனின் எண்ணமும் அதுதான். என்ன, இன்னுமே குழந்தையைப் பற்றி இயல்பாக எல்லோரிடமும் பேச அவனால் முடியவில்லை. திருமணத்திற்கு முதல் உருவான குழந்தை என்கிற உறுத்தல் அவனையும் உறுத்திக்கொண்டே இருந்தது.

அதற்கு ஒன்றும் சொல்லாத சக்திவேலர், “குணாளன், ஒரு முக்கியமான விசயம் கதைக்கோணும். எல்லாரும் இஞ்ச இருக்கேக்கையே கதைச்சிட்டா நல்லம் எண்டுபோட்டுத்தான் வெளிக்கிட்டு வந்தனான்.” என்றார் குணாளனிடம்.

திடீரென்று நடந்த அவர் வருகையாலேயே குணாளனுக்குள் பல பிரளயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. ஆனால் அவர் இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பா. அவர்களின் நல் வாழ்க்கைக்காக அனைத்தையும் சமாளித்துப் போகத்தான் வேண்டும்.

அதில், “சொல்லுங்க ஐயா. என்ன எண்டாலும் கதைச்சுப் பேசிச் செய்யலாம்.” என்று சொன்னார்.

“ஒரு உறைக்க ரெண்டு கத்தி இருக்கிறது சரியா வராது குணாளன். தையல்நாயகியும் சக்திவேலும் இனியும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறதில எனக்கு விருப்பம் இல்ல. அதால என்ர பெரிய பேரனுக்கு உதவியா அவன்ர மனுசி இருக்கட்டும். சின்ன பேரனும் பேத்தியும் சேர்ந்து தையல்நாயகியப் பாக்கட்டும்.” என்றதும் அங்கிருந்தவர்களில் யார் அதிகமாக அதிர்ந்தார்கள் என்று கணிக்க முடியாத அளவில் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சிதான்.

அத்தனை தலைகளும் உடனேயே இளவஞ்சியை நோக்கித் திரும்பின. அவள் ஆடவும் இல்லை, அசையவும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.

ஆனால், நிலனால் அப்படி நிற்க முடியவில்லை. “என்ன கதைக்கிறீங்க அப்பப்பா? அது அவளின்ர தொழில். அவள் அப்பிடியெல்லாம் விட்டுக்குடுக்க மாட்டாள். வேணுமெண்டா சக்திவேலை மிதுன் பாக்கட்டும்.” என்றான் ஆத்திரத்தை அடக்கி.

குணாளன் நிலைகுலைந்தே போனார். ஆத்திரமா ஆவேசமா என்று பிரித்தறிய முடியா உணர்வொன்று அவரைச் சுழற்றி அடிக்கப் பார்த்தது. ஆனாலும் சமாளித்து, “ஐயா குறையா நினைக்காதீங்கோ. அது அம்மா மூத்த மகளுக்குத்தான் குடுத்தவா. அதச் சொந்தம் கொண்டாட எனக்கே உரிமை இல்ல.” என்று சொன்னார்.

“அவாவே உங்கட சொந்த மகள் இல்ல. இதுல உங்கட அம்மா உருவாக்கின தொழில் எப்பிடி அவாக்குச் சொந்தமாகும்?” என்று திருப்பிக் கேட்டார் சக்திவேலர்.

ஒரு நொடி நிலனே துடித்துப்போனான் என்கையில் இளவஞ்சியின் நிலை?

வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்தான். உள்ளத்து உணர்வுகளை அப்படியே அடக்கியத்தில் இரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்துடன் நின்றிருந்தாள் அவள்.

ஆரம்பத்திலிருந்து அவள் அவனை மணக்கமாட்டேன் என்று நின்றதே திருமணத்தின் பின் இப்படி நடக்கும் என்றுதான். தொழிலையும் வாழ்க்கையும் சேர்த்து யோசிக்காதே, அப்படி ஒன்று நடக்கவே நடக்காது என்று எத்தனை முறை சொல்லியிருப்பான்?

ஆனால் இப்போது? அவள் சொன்னபடிதான் அனைத்தும் நடக்கிறது.

அது கொடுத்த சினத்தில், “என்னப்பா இதெல்லாம்? இதுக்குத்தான் இவரை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தனீங்களா?” என்று பிரபாகரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினான்.

பிரபாகரனாலும் எல்லோர் முன்னும் தந்தையை எதிர்த்துப் பேச முடியவில்லை. அது அவருக்குப் பழக்கம் இல்லாத ஒன்றும். ஆனாலும், “அப்பா, இத நாங்க பிறகு கதைப்பமே.” என்று அவரைத் தடுக்கப் பார்த்தார்.

“பிறகு கதைக்க என்ன கிடக்கு? அதுதான் கதைச்சாச்சே.” என்று மகனிடம் சொல்லிவிட்டு, “குணாளன் இஞ்ச பாருங்கோ. அவாவை நல்ல முறைல வளத்து, தொழில் பழக்கி, ஊருக்க மதிப்பும் மரியாதையோடயும்தான் வச்சிருக்கிறீங்க. இனியும் என்ர வீட்டு மருமகளா, என்ர பேரன்ர மனுசியா மதிப்புக் குறையாமத்தான் இருக்கப் போறா. அதால உண்மையான வாரிசு ஆரோ, அவேக்குத்தான் தொழில் போகோணும்.” என்றவரை வேகமாக இடைமறித்தான் நிலன்.

“நீங்க என்ன சொன்னாலும் இது நடக்காது அப்பப்பா. அவள் இந்த வீட்டு வாரிசு இல்லாம இருக்கலாம். ஆனா, அந்தத் தொழில் வாரிசு அவள் மட்டும்தான். அத வேற ஆருக்கும் குடுக்க நான்…” என்றவனின் கரத்தைப் பற்றித் தடுத்த இளவஞ்சி, “நான் தொழில்ல இருந்து விலகிறன்.” என்று அறிவித்தாள்.
 
Last edited:

JayaEniya

New member
“பதில் சொல்லிப்போட்டுப் போ வஞ்சி!” திருமணம் நடந்த நாள் முதலாய் அவள் மனநிலை அறிந்து, அவளுக்கு இதமாகத்தான் நடக்கிறான். அப்படி இருந்தும் அவள் காட்டும் இந்த அலட்சியம் அவனையும் இலேசாகக் கோபம் கொள்ள வைத்ததில் அழுத்தியே சொன்னான்.

அதற்கு அவள் அடங்க வேண்டுமே. “இந்தக் கலியாணம் ஏன் நடந்தது நிலன்?” என்றாள் அவனை நேராக நோக்கி.

படக்கென்று வாயை மூடிக்கொண்டான் நிலன்.

“என்னட்ட இருக்கிறது ஒரேயொரு கேள்வி. அதுக்குப் பதில் சொல்லாம இந்தக் கேள்வியும் கேட்டுக்கொண்டு வராதீங்க. பதில் கிடைக்காது!” என்றுவிட்டு அவள் இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள்.

“அக்கா!” என்று கதவைத் தட்டி அழைத்தபடி வந்தான் சுதாகர்.

கணவன் மனைவி இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“அத்தானின்ர அப்பாவும் அப்பப்பாவும் வந்திருக்கினம். உங்களக் கீழ வரட்டாம் எண்டு அப்பா சொல்லிவிடச் சொன்னவர்.” என்று தகவல் சொன்னான்.

ஏனோ? கணவன் மனைவி இருவர் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீள இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

“என்ன அப்பப்பா, இஞ்ச வாறதாச் சொல்லவே இல்ல.” என்றவனின் விழிகள் தந்தையைக் கேள்வியுடன் ஏறிட்டன.

“திடீரெண்டு அப்பா வெளிக்கிடச் சொன்னார். அதான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றார் அவர்.

அப்படி என்ன திடீர் அலுவல்? அவன் புருவங்களைச் சுருக்க, “அதுக்கு என்ன தம்பி. இனி இதுவும் உங்கட வீடுதானே? இஞ்ச வாறதுக்குச் சொல்லிப்போட்டா வரோணும்?” என்றார் குணாளன்.

நிலனை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன்னருகில் வந்து அமர்ந்த மிதுனிடம், “பிறகு சின்ன பேரா? இஞ்சயே இருக்கிற பிளான்ல இருக்கிறியா, இல்ல அங்க வரப்போறியா?” என்று விசாரித்தார் சக்திவேலர்.

“கொஞ்ச நாளைக்கு இஞ்சயே இருக்கப்போறன் அப்பப்பா.” என்றான் அவன்.

அவன் சொன்னதற்கு மறுத்து அவர்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்கிற பயத்தில், “பிள்ளை பிறக்கிற வரைக்கும் இஞ்சயே இருக்கட்டும். அதுக்குப் பிறகு அவேக்கு எது வசதியோ அப்பிடிச் செய்யட்டும்.” என்று வேகமாக இடையிட்டுச் சொன்னார் ஜெயந்தி.

மிதுனின் எண்ணமும் அதுதான். என்ன, இன்னுமே குழந்தையைப் பற்றி இயல்பாக எல்லோரிடமும் பேச அவனால் முடியவில்லை. திருமணத்திற்கு முதல் உருவான குழந்தை என்கிற உறுத்தல் அவனையும் உறுத்திக்கொண்டே இருந்தது.

அதற்கு ஒன்றும் சொல்லாத சக்திவேலர், “குணாளன், ஒரு முக்கியமான விசயம் கதைக்கோணும். எல்லாரும் இஞ்ச இருக்கேக்கையே கதைச்சிட்டா நல்லம் எண்டுபோட்டுத்தான் வெளிக்கிட்டு வந்தனான்.” என்று குணாளனைப் பார்த்தார்.

“சொல்லுங்க ஐயா. என்ன எண்டாலும் கதைச்சுப் பேசிக் செய்றதுதானே.” என்ன வரப்போகிறது என்று மெல்லிய கலக்கம் உண்டானாலும் சொன்னார் குணாளன்.

“ஒரு உறைக்க ரெண்டு கத்தி இருக்கிறது சரியா வராது குணாளன். அதோட தையல்நாயகியும் சக்திவேலும் இனியும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறதில எனக்கு விருப்பம் இல்ல. அதால என்ர பெரிய பேரனுக்கு உதவியா அவன்ர மனுசி இருக்கட்டும். சின்ன பேரனும் பேத்தியும் சேர்ந்து தையல்நாயகியப் பாக்கட்டும்.” என்றதும் அங்கிருந்தவர்களில் யார் அதிகமாக அதிர்ந்தார்கள் என்று கணிக்க முடியாத அளவில் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சிதான்.

அத்தனை தலைகளும் உடனேயே இளவஞ்சியை நோக்கித் திரும்பின. அவள் ஆடவும் இல்லை, அசையவும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.

ஆனால், நிலனால் அப்படி நிற்க முடியவில்லை. “என்ன கதைக்கிறீங்க அப்பப்பா? அது அவளின்ர தொழில். அவள் அப்பிடியெல்லாம் விட்டுக்குடுக்க மாட்டாள். வேணுமெண்டா சக்திவேலை மிதுன் பாக்கட்டும்.” என்றான் ஆத்திரத்தை அடக்கி.

குணாளன் நிலைகுலைந்தே போனார். ஆனாலும் சமாளித்து, “ஐயா குறையா நினைக்காதீங்கோ. அது அம்மா மூத்த மகளுக்குத்தான் குடுத்தவா. அத சொந்தம் கொண்டாட எனக்கே உரிமை இல்லை.” என்று நயமாகவே சொன்னார்.

“அவாவே உங்கட சொந்த மகள் இல்ல. இதுல உங்கட அம்மா உருவாக்கின தொழில் எப்பிடி அவாக்குச் சொந்தமாகும்?” என்று சக்திவேலர் சொன்னதும் நிலனே துடித்துப்போனான் என்கையில் இளவஞ்சியின் நிலை?

வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்தான். உள்ளத்து உணர்வுகளை அப்படியே அடக்கியத்தில் இரத்தமெனச் சிவந்துவிட்ட முகத்துடன் நின்றிருந்தாள் அவள்.

ஆரம்பத்திலிருந்து அவள் அவனை மணக்கமாட்டேன் என்று நின்றதே திருமணத்தின் பின் இப்படி நடக்கும் என்றுதான். தொழிலையும் வாழ்க்கையும் சேர்த்து யோசிக்காதே, அப்படி ஒன்று நடக்கவே நடக்காது என்று எத்தனை முறை சொல்லியிருப்பான்?

ஆனால் இப்போது? அவள் சொன்னபடிதான் அனைத்தும் நடக்கிறது.

அத்தனை பேரின் முன்னும் வீட்டின் மூத்த மனிதரிடம் கோபப்பட முடியாமல், “என்னப்பா இதெல்லாம்? இதுக்குத்தான் இவரை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தீங்களா?” என்று பிரபாகரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சினந்தான்.

பிரபாகரனாலும் எல்லோர் முன்னும் தந்தையை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனாலும், “அப்பா, இத நாங்க பிறகு கதைப்பமே.” என்று அவரைத் தடுக்கப் பார்த்தார்.

“பிறகு கதைக்க என்ன கிடக்கு? அதுதான் கதைச்சாச்சே.” என்று மகனிடம் சொல்லிவிட்டு, “குணாளன் இஞ்ச பாருங்கோ. அவாவை நல்ல முறைல வளத்து, தொழில் பழக்கி, ஊருக்க மதிப்பும் மரியாதையோடயும்தான் வச்சிருக்கிறீங்க. இனியும் என்ர வீட்டு மருமகளா, என்ர பேரன்ர மனுசியா மதிப்புக் குறையாமத்தான் இருக்கப் போறா. அதால உண்மையான வாரிசு ஆரோ, அவேக்குத்தான் தொழில் போகோணும்.” என்றவரை வேகமாக இடை மாறித்தான் நிலன்.

“நீங்க என்ன சொன்னாலும் இது நடக்காது அப்பப்பா. அவள் இந்த வீட்டு வாரிசு இல்லாம இருக்கலாம். ஆனா, அந்தத் தொழில் வாரிசு அவள் மட்டும்தான். அத வேற ஆறுக்கும் குடுக்க நான்…” என்றவனின் கரத்தைப் பற்றித் தடுத்த இளவஞ்சி, “நான் தொழில்ல இருந்து விலகிறன்.” என்று அறிவித்தாள்.

தொடரும்…

கேட்ட லீவு பெண்டிங்ல இருக்கு. எப்ப வேணுமோ அப்ப சொல்லிப்போட்டு எடுப்பேன் சொல்லிட்டேன்.

[/QUOT
 
Top Bottom