• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12


கம்பீரம் குறையாமல் தொழிற்சாலைக்குச் சென்று, தனக்கும் சுவாதிக்கும் திருமணமாகிவிட்டதை முறையாக அறிவித்து, பணியாளர்களின் வாழ்த்துகளை எல்லாம் ஒட்டவைத்த ஒற்றை முறுவலோடு ஏற்று, இனிமேல் சுவாதிதான் தன் கணவனோடு இணைந்து தொழிலைக் கவனித்துக்கொள்வாள் என்று அறிவித்தாள் இளவஞ்சி.

இதுவரை காலமும் அவளோடு பயணித்த அத்தனை முகங்களிலும் பேரதிர்ச்சி. அந்தத் தொழிற்சாலையின் ஆணிவேரே இனி இல்லையென்றால் யார் பொறுப்பெடுத்தும் என்ன பயன்? இது என்ன சிறுபிள்ளை விளையாட்டா தையல்நாயகியைத் தூக்கிச் சுவாதியின் கையில் கொடுக்க?

இதுவரை காலமும் அவளோடு இணைந்து பயணித்தவர்கள், அவளுக்குத் தோள் கொடுத்தவர்கள், அவளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், அவள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள் அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர் மல்கிப் போயிற்று. என்னவோ தம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்துவிட்டதைப் போன்று அவள் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்துப் பார்த்தனர்.

அவளை நெருங்கிக் காரணம் அறியவும், இது வேண்டாம் என்று சொல்லவும் முயன்றனர். அவள் அதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஒரு நாள் முழுக்க அங்கேயே இருந்து, பொறுப்புகளை எல்லாம் சுவாதியிடமும் மிதுனிடமும் ஒப்படைத்துவிட்டு, இதையும் தாண்டி எதுவும் தெரிய வேண்டுமாயின் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்புகொள்ளும்படி சுவாதி, மிதுன், ஆனந்தி மூவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

எப்போதும் அவளை வரவேற்பதற்காக வாசலில் காத்திருக்கும் தையல்நாயகி அம்மா, இன்று அவளை அங்கிருந்து அனுப்பிவைப்பதற்கும் சிரித்த முகத்தோடு அதே வாசலில் காத்திருந்தார்.

அவரைப் பார்த்தவள் நெஞ்சினில் ஹோ என்று பெரும் இரைச்சல். அடிவயிற்றிலிருந்து பெரும் கேவல் ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்பிற்று. அவள் கண் முன்னாலேயே அவள் உயிரைப் பிடுங்கி யாரோ எறிவதுபோல் ஒரு வலி.

அவள் அவர்கள் மகள் இல்லை என்றபோதும் துடித்தாள்தான். ஏன், இன்று வரையிலும் கூட நம்ப முடியாமல், அதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல்தான் நடமாடுகிறாள்.

ஆனால் இது? இந்தத் தொழிற்சாலை? அதை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்கிற முடிவை அவர்களுக்கு முதல் அவளே எடுத்துவிட்டாள்தான்.

ஆனால், முடிவெடுப்பது என்பது வேறு, அதன்படி நடப்பது என்பது வேறாயிற்றே!

இது அவள் உணர்வுகளோடும், நாளாந்த வாழ்வோடும் இரண்டரக் கலந்ததாயிற்றே. இனி இங்கே வராமல் எப்படி இருப்பாள்? இதைத் தாண்டிய ஒரு உலகம் அவளுக்குத் தெரியாதே!

நண்பர்கள் வட்டமில்லை. பொழுதுபோக்கிற்கு என்று ஒன்றுமில்லை. ஓராயிரம் கனவுகளைச் சுமந்திருந்தாளே. அவற்றை இனி என்ன செய்யப்போகிறாள்? போட்டு வைத்திருந்த திட்டங்கள்?

கண்ணைக் கட்டிக் காட்டில் அல்ல, கையைக் கட்டிக் கடலில் தள்ளிவிட்டதுபோல் உள்ளம் துடித்தது.

மெல்ல நடந்து அவரிடம் சென்றாள். அவரையே பார்த்தாள். எல்லோரிடமும் இரும்புப் பெண்மணியாக இருக்கிறவர் அவளிடம் மட்டும் கனிவோடு குழைத்த கண்டிப்பைத்தான் காட்டுவார். இன்றும் தன் புன்னகையாலும் கனிவான பார்வையாலும் அவள் உள்ளத்தினுள் அமைதியைப் பரப்ப முயன்றுகொண்டிருந்தார்.

கடவுளிடம் எதையும் மனதார வேண்டிய நிகழ்வுகள் அவளுக்கு மிக மிகச் சொற்பமாகவே நிகழ்ந்திருக்கின்றன. இன்னுமே சொல்லப்போனால் அவர் உயிர்போகும் தருவாயில்தான் ‘என் அப்பம்மாவை என்னிடமே திருப்பித் தந்துவிடு’ என்று வேண்டிய நினைவு.

மற்றும்படி அவர் இருந்தபோதும் சரி, அவர் இல்லாதபோதும் சரி ஆத்மார்த்தமான உரையாடல்களையும் தன் வேண்டுதல்களையும் அவரிடம்தான் அவள் இதுவரையில் பகிர்ந்திருக்கிறாள்.

இன்றும் அவரிடம்தான் பகிர்ந்தாள்.

‘என்னைச் சுத்தி என்ன நடக்குது எண்டு எனக்கு இன்னுமே தெளிவாத் தெரியேல்ல அப்பம்மா. நான் உங்கட பேத்தி இல்லை எண்டா, கடைசிவரையும் தையல்நாயகிய விட்டுடாத எண்டு ஏன் சொன்னீங்க? அப்பிடிச் சொன்ன நீங்க ஏன் என்னைப் பற்றிச் சொல்லேல்ல? சொல்லியிருக்க எல்லாத்துக்கும் தயாரா இருந்திருப்பேனே.’

‘இப்ப நீங்க சொன்னதையும் மீறித் தையல்நாயகியக் குடுத்திட்டுப் போறன். நான் எடுத்த இந்த முடிவு சரியா? ஆனா உரிமை இல்லாத ஒண்ட எப்பிடிச் சொந்தம் கொண்டாடுறது சொல்லுங்க?’

இன்னொருமுறை அந்த இடத்திற்கு யாரோ ஒருத்தியாக வருகிற தைரியம் அவளுக்கு வருமா தெரியாது. அதில் நெஞ்சு நிறைய அவரைப் பார்த்துவிட்டு, எப்போதும்போல் அவருக்குப் பூக்கள் போட்டு வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

நிலனின் வீட்டுக்குள் நுழைகையில் பல பக்கமிருந்தும் பார்வைகள் அவளை ஊசியாகக் குத்தும் உணர்வு. அத்தனையையும் கடந்து மாடியேறினாள். சாப்பிட வரச்சொல்லி அழைத்த சந்திரமதியிடம் பசியில்லை என்றாள்.

அவளை வற்புறுத்தி உண்ண வைக்கத் தைரியம் இல்லாமல் நின்றார் சந்திரமதி. உன் தொழிலுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கும் சம்மந்தமில்லை என்று அன்று அவரும்தானே அழுத்திச் சொன்னார்.

ஆனால் இன்று, அதை அவள் மொத்தமாகக் கொடுத்துவிட்டு வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார். அவருக்கே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அவளுக்கு?

அவள் அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகியாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பிரமிப்போடு பார்த்தவராயிற்றே.

“இனி வந்து சமையலப் பாக்கச் சொல்லுங்க அண்ணி. சும்மா என்னவோ வெட்டி முறிக்கிறவள் மாதிரி ஊரைச் சுத்தினது எல்லாம் போதும். முதல் சமைக்கத் தெரியுமா எண்டு கேளுங்க.” என்ற ஜானகியின் எள்ளல் அவளைத் தாக்கவும் இல்லை.

“என்ன ஜானகி இது? பேசாம இரு!” என்ற பாலகுமாரனின் பரிவு அவள் மனத்தைத் தொடவும் இல்லை.

அத்தனையையும் தாண்டி நிலனின் அறைக்குள் நுழைந்தாள்.

இன்னுமே அவளுக்கு அது நிலனின் அறைதான்.

*****

நிலன் அவள் முகம் பார்க்கவே வெட்கினான். என்னவோ அவள் முதுகில் தானே குத்திவிட்டது போலொரு உணர்வு. சும்மாவே காரணத்தைச் சொல்லாமல் மணந்துகொண்டான் என்கிற கோபத்தில் இருக்கிறாள். இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது.

ஆனால், அன்று அவளோடு வீட்டுக்கு வந்தபிறகு நீ தொழிலைக் கொடுக்கக் கூடாது என்று சண்டையே போட்டான். எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். அவள் அசையவே இல்லை.

இதுவே பழைய இளவஞ்சியாக இருந்திருக்க சக்திவேலரால் அவளை அசைத்திருக்க முடியுமா என்ன? ஆணிவேரையே ஆட்டம் காண வைத்துவிட்டதில் அவளும் நிலையிழந்து நிற்கிறாள்.

அவன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தொழிலை முழுமையாக அவர்கள் வசம் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள் என்று அவனுக்கு அழைத்துச் சொன்னார் சந்திரமதி.

அவ்வளவு நேரமாக அலுவலகத்தில் இருந்தவன் வீட்டுக்குப் புறப்பட்டான். பயணம் முழுக்க அவளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற யோசனைதான். விறாந்தையில் சக்திவேல் ஐயா அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து அவன் நடக்க, “என்னடா பேரா, பாத்தும் பாக்காத மாதிரிப் போறாய்?” என்று அவனைத் தடுத்தார்.

நின்று திரும்பி அவர் முகம் பார்த்தவன் அவரிடம் வந்து, “பாத்து என்ன கதைக்கோணும் அப்பப்பா?” என்றான் நிதானமாக.

அவர் அவனையே பார்க்க, “சுவாதி உங்கட பேத்தி. வஞ்சி என்ர மனுசியா? நீங்க பிரிச்சுக் கதைச்சது அவளை இல்ல. என்னை!” என்றவனுக்கு நெஞ்சினுள் நிறையக் குமுறல்கள் முட்டி மோதின. அவர் மீது கோபம் பெருகியது. அவன் வீட்டில் அவனே அறியா விடயங்கள் பல புதைந்து கிடக்கின்றன என்று அவனுக்கும் இந்தக் கொஞ்ச நாள்களாகத்தான் தெரிய வந்துகொண்டிருக்கிறது.

இன்னுமே என்ன என்று சரியாகத் தெரியாதபோதும் ஏதோ இருக்கிறது என்பது வரை புரிந்தது.

“ஒருத்தருக்கு வலிக்கோணும் எண்டுறதுக்காகவே கதைக்கிறது இருக்குத்தானே, அது பெரிய மனுசத்தனம் இல்ல அப்பப்பா. அத நீங்க செய்திருக்கக் கூடாது. இந்த வீட்டு மருமகளா இருக்கிறது அவளுக்குப் பெருமையா? சக்திவேல் குடும்பம் மொத்தத்துக்கும் தலையிடியா இருந்த ஒருத்தி அவள். அவளைப் பாத்து…” என்றவன் மேலே பேசப் பிடிக்காமல் நிறுத்திவிட்டு, “இப்பிடி ஒரு முகம் உங்களுக்கு இருக்கு எண்டு தெரியாமயே இவ்வளவு காலமும் இருந்திருக்கிறன் பாருங்களன்.” என்று விரக்தியோடு சொல்லிவிட்டு விறுவிறு என்று மாடியேறினான்.

போகிறவனையே பார்த்திருந்த சக்திவேல் ஐயா அவன் சொன்னதற்காகக் கலங்கிவிடவெல்லாம் இல்லை. அவளைப் பற்றி அறிந்ததிலிருந்து அவருக்குள் பல யோசனைகளும் சில கணக்குகளும். அதன் படி அவர் சரியாகத்தான் நடக்கிறார்.

அவன் அறைக்குள் அவள் இல்லை. எங்கே நிற்பாள் என்று தெரிந்தவன் பால்கனிக்கு நடந்தான். அங்கேதான் நின்றிருந்தாள்.

அவனுக்கும் மிதுனுக்கும் அடுத்தடுத்த அறைகள்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் தடுப்பு இல்லாத நீண்ட பால்கனிதான் ஆரம்பத்தில் போடப்பட்டிருந்தது.

ஆட்டம் பாட்டம் என்று நடுச்சாசமத்திலும் தன் பக்க பால்கனிக்கும் வந்து சத்தம் போடுகிறான் என்று, அவன்தான் பால்கனியின் நடுவில் மிதுன் ஏறிக்கூட வந்துவிடாதபடிக்கு உயரச் சுவர் அமைத்திருந்தான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

எப்போதும் அவள் கைகளைக் கட்டிக்கொண்டு அதில் சாய்ந்து நின்றிருப்பாள். இன்றும் அப்படித்தான் நின்றிருந்தாள்.

அவள் அருகில் சென்று நின்றான். இருவரும் மற்றவரைப் பார்க்கவில்லை. ஆனால், அருகருகே நின்றிருந்தனர்.

“அப்பப்பா இப்பிடி எல்லாம் கதைப்பார் எண்டு எனக்குத் தெரியா வஞ்சி.” அவள் புறம் திரும்பாமலே சொன்னான்.

“...”

“நீ குடுத்திருக்கக் கூடாது.”

“...”

“முத்துமாணிக்கம் அங்கிளிட்ட வாங்கின கார்மெண்ட்ஸ் என்ர பெயர்லதான் இருக்கு. அத நான் உனக்கு மாத்துறன். அத ஆர் உன்னட்ட இருந்து வாங்கினம் எண்டு நானும் பாக்கிறனே.” என்றான் சினத்துடன்.

இன்னதென்று இனம் பிரிக்க முடியா சிறு சிரிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் இளவஞ்சி.

“என்ன, சும்மா சொல்லுறன் எண்டு நினைக்கிறியா?” அவள் தன்னை நம்பவில்லையோ என்றெண்ணி வினவினான்.

மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “எனக்கு என்ன புதுசாத் தொழில் ஆரம்பிச்சு, முன்னுக்கு வரத் தெரியா எண்டு நினைக்கிறீங்களா? இல்ல அதுக்குத் தேவையான பொருளாதாரம் என்னட்ட இல்லை எண்டு நினைக்கிறீங்களா? பாத்துக்கொண்டிருக்க முன்னால வந்து காட்ட என்னால ஏலும். நீங்களாவது வளந்து, படிச்சு முடிச்ச பிறகு தொழிலுக்க வந்தவர். ஆனா நான் வளந்ததே அங்கதான். இங்க தொழில் விசயமே இல்லை.” என்றவளுக்கு அவனிடம் தன் மனத்தில் இருப்பதைச் சொல்லப் பிடிக்கவில்லை.

இங்கே பிரச்சனை சக்திவேலரோ, அவர் பேச்சோ அல்ல. அவளுக்கு எதிராக நிற்பது அவள் உள்ளம். உனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை நீ உரிமை கோருவாயா என்கிற கேள்வி. அதுதான் சக்திவேலர் கேட்டதும் கொடுத்துவிட்டாள். இல்லாமல் அவளிடமிருந்து அவள் உயிரைக் கூடப் பறித்துவிடலாம். தையல்நாயகியைப் பறிக்கவே முடியாது.

“இப்ப உங்களுக்குச் சந்தோசமா இருக்குமே நிலன்.” என்றாள் அவனிடம்.

இப்படிச் சொல்லாதே என்பதுபோல் அவளைப் பார்த்தான் நிலன்.

“இதுக்குத்தானே இந்தக் கலியாணம்.” என்றாள் கசப்போடு.

அதற்கு மட்டும் வேகமாக மறுத்துத் தலையசைத்தான்.

“அப்ப என்னத்துக்கு?”

அவனால் பதில் சொல்ல இயலா அதே கேள்வி.

சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள் வந்து அவன் முன்னே நின்றாள்.

என்னவோ சொல்லப்போகிறாள். உதடுகள் கோடாக அழுந்த அவளையே பார்த்தான்.

“காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா, கலியாணத்துக்கு முதல் அத நீங்க என்னட்டச் சொல்லாம இருந்ததில கூட ஒரு அர்த்தமிருக்கு. ஆனா, கலியாணத்துக்குப் பிறகும் அத மறச்சு என்னை விட உங்களுக்கு அந்த விசயம், இல்லை அந்த விசயத்தோட சம்மந்தப்பட்ட ஆள்தான் முக்கியம் எண்டு சொல்லாமச் சொல்லுறீங்க நிலன்.” என்று அவன் கண்களையே பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.

ஒருகணம் இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட உறைந்து நின்றுவிட்டான் நிலன்.

அடுத்த வினாடியே அவள் கரம் பற்றி இழுத்துத் தன் முன்னால் நிறுத்தி, “காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா அதுக்காக நீ எனக்கு முக்கியம் இல்லை எண்டு சொல்லுறத நான் ஏற்கவே மாட்டன். காரணத்தைச் சொல்லுற இடத்தில நான் இல்ல வஞ்சி. அதுக்கு எனக்கு அனுமதி இல்ல. அதைவிட முழுமையான காரணம் எனக்கும் தெரியாது.” என்றான் நிலன்.

“ஓ! அப்ப பிடிவாதமா நிண்டு என்னக் கட்டுற அனுமதிய உங்களுக்கு ஆர் தந்தது?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

அதே பால்கனியில் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியாமல் நின்றான் நிலன். வெளியே எடுக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள்ளின் நிலைதான் அவன் நிலை.

முடிந்துவிட்ட திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றாமல் அவனும் விலகி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பின்னால் இருப்பதும், தானும் அவளுக்கு நியாயமாக இல்லை என்கிற உறுத்தல். அதையே அவள் அவன் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டுப் போகிறாள்.

கீர்த்தனா வந்து இருவரையும் உணவுக்கு அழைத்தாள். மொத்த வீடும் சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தது. இளவஞ்சி மாத்திரமல்ல நிலனும் யார் முகமும் பார்க்காமல் சென்று அமர்ந்தான்.

எல்லோர் மீதும் ஒரு கோபம். அவர்களின் தவறுகளால் அவன் இளவஞ்சியின் முன்னே குற்றவாளியாக நிற்கிறான்.

சந்திரமதி எல்லோருக்கும் பரிமாறினார். விசேசமாக அவர் இளவஞ்சியைக் கவனித்துக்கொள்ள, “மருமகள் எண்டு ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்த பிறகும் எல்லா வேலையையும் நீங்களே செய்துகொண்டு இருப்பீங்களா அண்ணி? பொறுப்ப அவளிட்டக் குடுத்துப்போட்டு நீங்க ஓய்வா இருக்கப் பாருங்க!” என்றார் ஜானகி அதட்டலாக.

சட்டென்று மகனையும் மருமகளையும் பார்த்தார் சந்திரமதி. அவர்கள் இருவரும் எதுவும் சொல்ல முதல், “ஓய்வு எடுக்கிற அளவுக்கு எனக்கு என்ன வயசா போயிற்றுது? நீங்க சாப்பிடுங்க மச்சாள். உங்களுக்குப் பிடிக்கும் எண்டுதான் கத்தரிக்கா பொரிச்சுக் குழம்பு வச்சனான்.” என்று அவரையும் கவனித்து, சமாதானம் செய்ய நினைத்தார்.

ஜானகி அதைக் கேட்க வேண்டுமே. அவரை மீறி அத்தனையும் நடந்துவிட்ட ஆத்திரம் அவரை உந்திக்கொண்டே இருந்தது. அதைவிட அசையாமல் இருந்தே நான் இப்பிடித்தான் என்று சொல்லாமல் சொல்லும் இளவஞ்சி அவரை மிகவுமே சீண்டினாள். எப்படிப் பிறந்தோம் என்றே தெரியாத இவளுக்குத் திமிர் வேறா என்கிற ஆத்திரம்.

“என்னப்பா இது? இப்பிடிச் சும்மா அறைக்கயே அடஞ்சு கிடக்கிறதுக்கா உங்கட பேரனுக்குக் கட்டிவச்சனீங்க. வீட்டு வேலைகளைப் பாத்து, குடும்பப் பொறுப்பை எடுத்து, பிள்ளை குட்டி எண்டு போகோணும்தானே?” என்றார் தகப்பனிடம்.

எல்லோரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஜானு சொல்லுறதும் சரிதான். வீட்டுப் பொறுப்பக் கொஞ்சம் கொஞ்சமா கவனிக்கட்டும். அம்மா சந்திரா, என்ன எண்டு பாத்து உங்கட மருமகளுக்குச் சொல்லிக் குடுங்கோம்மா.” என்றார் சக்திவேல் ஐயா.

“ஓம் மாமா. அப்பிடிப் பழக்காம விடுவனா? வஞ்சியும் கெட்டிக்காரி. பழகிடுவா. இப்பவே என்னத்துக்கு எண்டுதான் சொல்லுறன். மெல்ல மெல்லச் சொல்லிக்குடுக்குறன்.” ஜானகி மீது சந்திரமதிக்குக் கோபம் உண்டானாலும் மாமனாரிடம் சமாளித்தார்.

அப்போதும் விடாமல், “அதத்தான் அண்ணி இப்பவே ஆரம்பிங்கோ எண்டு அப்பா சொல்லுறார். வீட்டில சும்மாதானே இருக்கப்போறா உங்கட மருமகள்.” என்றதும், அவ்வளவு நேரமாக எவ்வளவு தூரத்திற்குப் போகிறார்கள் பார்க்கலாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்த நிலன் விழுக்கென்று நிமிர்ந்தான்.

“நீங்களும் வீட்டில சும்மாதானே இருக்கிறீங்க அத்த. நீங்க அம்மாக்கு உதவியா இருங்கோ. அவள் எனக்கு உதவிக்கு வேணும்.” என்றான்.

“இதென்ன புதுசா? இவ்வளவு காலமும் ஆர் உனக்கு உதவினது?”

“இவ்வளவு காலமும் வீட்டை ஆர் பாத்தது?”

“அது வேற. மருமகள் வந்ததுக்குப் பிறகும் நாங்கதான் பாக்கோணுமா?”

“ஏன் பாத்தா என்ன?”

“தம்பி, என்ன இது? பேசாமச் சாப்பிடு!” என்று சந்திரமதியும் பிரபாகரனும் தடுத்தும் கேளாமல் ஜானகிக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தான் நிலன்.

கடைசியில், “பேரா! பேசாமச் சாப்பிடு!” என்று சக்திவேலர் அதட்டிய பிறகுதான் எல்லோரும் அமைதியாகச் சாப்பிட்டனர். ஆனால், எல்லோர் மனத்திலும் இளவஞ்சி குறித்தான சிந்தனைதான். அவள் அறியாமல் அவளைக் கவனித்தனர்.

அனைத்தையும் கவனித்தபடி சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்த இளவஞ்சி, “மிஸ்டர் சக்திவேலர், நீங்களும் உங்கட குடும்பமும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? இவள் ஆள் அட்ரஸ் இல்லாதவள், இருந்த தொழிலயும் பறிச்சாச்சு, இப்ப பல்லுப் பிடுங்கின பாம்பு, நாங்க என்ன எண்டாலும் கதைக்கலாம் எண்டா?” என்றாள்.

“ஏய்! ஆரப் பாத்து பெயர் சொல்லிக் கதைக்கிறாய்?” என்று சீறிக்கொண்டு வந்த ஜானகியை அவள் கணக்கில் எடுக்கவே இல்லை.

“உங்கட ஆட்சி அதிகாரத்தை இந்த வீட்டோட வச்சிருங்க. என்னட்ட கொண்டு வராதீங்க சரியா? என்னத்தான் கட்டியே ஆகோணும் எண்டு நிண்டு கட்டினது உங்கட பேரன். இப்பவும் வேணாம் எண்டு சொல்லச் சொல்லுங்க. இந்த நிமிசம் இந்த வீட்டை விட்டு வெளில போறன் நான்.” என்றுவிட்டு எழுந்தவள், “உங்கட அப்பப்பா என்ன முடிவில இருக்கிறார் எண்டு கேட்டுக்கொண்டு வந்து சொல்லுங்க.” என்று நிலனிடமும் சொல்லிவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு மேலேறினாள்.

 
Last edited:

aashabanu

Member
இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் வஞ்சி கிட்ட இருந்து சூப்பர்
தாத்தாக்கு தலையில சுத்தியலை வச்சி அடிச்ச மாதிரி ஒரு கேள்வி பேரனுக்கு நெஞ்சில் எட்டி மிதிச்ச மாதிரி ஒரு கேள்வி
குட் சூப்பர்
 

JayaEniya

New member
“நீ குடுத்திருக்கக் கூடாது.”

“முத்துமாணிக்கம் அங்கிளிட்ட வாங்கின கார்மெண்ட்ஸ் என்ர பெயர்லதான் இருக்கு. அத நான் உனக்கு மாத்துறன். அத ஆர் உன்னட்ட இருந்து வாங்கினம் எண்டு நானும் பாக்கிறனே.” என்றான் சினத்துடன்.

இன்னதென்று இனம் பிரிக்க முடியா சிறு சிரிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் இளவஞ்சி.

“என்ன, சும்மா சொல்லுறன் எண்டு நினைக்கிறியா?” அவள் தன்னை நம்பவில்லையோ என்றெண்ணி வினவினான்.

மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “எனக்கு என்ன புதுசாத் தொழில் ஆரம்பிச்சு முன்னுக்கு வரத் தெரியா எண்டு நினைக்கிறீங்களா? இல்ல அதுக்குத் தேவையான பொருளாதாரம் என்னட்ட இல்லை எண்டு நினைக்கிறீங்களா? பாத்துக்கொண்டிருக்க முன்னால வந்து காட்ட என்னால ஏலும். நீங்களாவது வளந்து படிச்சு முடிச்ச பிறகு தொழிலுக்க வந்தவர். ஆனா நான் வளந்ததே அங்கதான். இங்க தொழில் விசயமே இல்லை.” என்றவளுக்கு அவனிடம் தன் மனத்தில் இருப்பதைச் சொல்லப் பிடிக்கவில்லை.

இங்கே பிரச்சனை சக்திவேலரோ, அவர் பேச்சோ அல்ல. அவளுக்கு எதிராக நிற்பது அவள் உள்ளம்தான். உனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை நீ உரிமை கோருவாயா என்கிற கேள்விதான். அதுதான் சக்திவேலர் கேட்டதும் கொடுத்துவிட்டாள். இல்லாமல் அவளிடமிருந்து அவள் உயிரைக் கூடப் பறித்துவிடலாம். தையல்நாயகியைப் பறிக்கவே முடியாது.

“இப்ப உங்களுக்குச் சந்தோசமா இருக்குமே நிலன்.” என்றாள் அவனிடம்.

இப்படிச் சொல்லாதே என்பதுபோல் அவளைப் பார்த்தான் நிலன்.

“இதுக்குத்தானே இந்தக் கலியாணம்.” என்றாள் கசப்போடு.

அதற்கு மட்டும் வேகமாக மறுத்துத் தலையசைத்தான்.

“அப்ப என்னத்துக்கு?”

அவனால் பதில் சொல்ல இயலா அதே கேள்வி.

சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள் வந்து அவன் முன்னே நின்றாள்.

என்னவோ சொல்லப்போகிறாள். அவன் இதயம் அழுத்தம் கூட்டிப்போய் துடிக்க ஆரம்பித்தது.

“காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா, கலியாணத்துக்கு முதல் அத நீங்க என்னட்டச் சொல்லாம இருந்ததில கூட ஒரு அர்த்தமிருக்கு. ஆனா, கலியாணத்துக்குப் பிறகும் அத மறச்சு என்னை விட உங்களுக்கு அந்த விசயம், இல்லை அந்த விசயத்தோட சம்மந்தப்பட்ட ஆள்தான் முக்கியம் எண்டு சொல்லாமச் சொல்லுறீங்க நிலன்.” என்று அவன் கண்களையே பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.

ஒருகணம் இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட உறைந்து நின்றுவிட்டான் நிலன்.

அடுத்த வினாடியே அவள் கரம் பற்றி இழுத்துத் தன் முன்னால் நிறுத்தினான். “காரணம் என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். ஆனா அதுக்காக நீ எனக்கு முக்கியம் இல்லை எண்டு சொல்லுறத நான் ஏற்கவே மாட்டன். காரணத்தைச் சொல்லுற இடத்தில நான் இல்ல வஞ்சி. அதுக்கு எனக்கு அனுமதி இல்ல. அதைவிட முழுமையான காரணம் எனக்கும் தெரியாது.”

“ஓ! அப்ப பிடிவாதமா நிண்டு என்னக் கட்டுற அனுமதிய உங்களுக்கு ஆர் தந்தது?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.

அதே பால்கனியில் தன்னை சமாளித்துக்கொள்ள முடியாமல் நின்றான் நிலன். வெளியே எடுக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள்ளின் நிலைதான் அவன் நிலை.

முடிந்துவிட்ட திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றாமல் அவனும் விலகி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்கு பின்னால் இருப்பதும் தானும் அவளுக்கு நியாயமாக இல்லை என்கிற உறுத்தல்தான். அதையே அவள் அவன் முகத்திற்கு நேரே சொல்லிவிட்டுப் போகிறாள்.

கீர்த்தனா வந்து இருவரையும் உணவுக்கு அழைத்தாள். மொத்த வீடும் சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தது. இளவஞ்சி மாத்திரமல்ல நிலனும் யார் முகமும் பார்க்காமல் சென்று அமர்ந்தான்.

எல்லோர் மீதும் ஒரு கோபம். அவர்களின் தவறுகளால் அவன் இளவஞ்சியின் முன்னே குற்றவாளியாக நிற்கிறான்.

சந்திரமதி எல்லோருக்கும் பரிமாறினார். விசேசமாக அவர் இளவஞ்சியைக் கவனித்துக்கொள்ள, “மருமகள் எண்டு ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்த பிறகும் எல்லா வேலையையும் நீங்களே செய்துகொண்டு இருப்பீங்களா அண்ணி? பொறுப்ப அவளிட்டக் குடுத்துப்போட்டு நீங்க ஓய்வா இருக்கப் பாருங்க!” என்றார் ஜானகி அதட்டலாக.

சட்டென்று மகனையும் மருமகளையும் பார்த்தார் சந்திரமதி. அவர்கள் இருவரும் எதுவும் சொல்ல முதல், “ஓய்வு எடுக்கிற அளவுக்கு எனக்கு என்ன வயசா போயிற்றுது? நீங்க சாப்பிடுங்க மச்சாள். உங்களுக்குப் பிடிக்கும் எண்டுதான் கத்தரிக்கா பொரிச்சு குழம்பு வச்சனான்.” என்று அவரையும் கவனித்து, சமாதானம் செய்ய நினைத்தார்.

ஜானகி அதைக் கேட்க வேண்டுமே. அசையாமல் இருந்தே நான் இப்பிடித்தான் என்று சொல்லாமல் சொல்லும் இளவஞ்சி அவரை மிகவுமே சீண்டினாள்.

“என்னப்பா இது? இப்பிடிச் சும்மா அறைக்கயே அடஞ்சு கிடக்கிறதுக்கா உங்கட பேரனுக்குக் கட்டிவச்சனீங்க. வீட்டு வேலைகளைப் பாத்து, குடும்பப் பொறுப்பை எடுத்து, பிள்ளை குட்டி எண்டு போகோணும்தானே?” என்றார் தகப்பனிடம்.

எல்லோரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஜானு சொல்லுறதும் சரிதான். வீட்டுப் பொறுப்பக் கொஞ்சம் கொஞ்சமா கவனிக்கட்டும். அம்மா சந்திரா, என்ன எண்டு பாத்து உங்கட மருமகளுக்குச் சொல்லிக் குடுங்கோம்மா.” என்றார் சக்திவேல் ஐயா.

“ஓம் மாமா. அப்பிடிப் பழக்காம விடுவானா? வஞ்சியும் கெட்டிக்காரி. பழகிடுவா. இப்பவே என்னத்துக்கு எண்டுதான் சொல்லுறன். மெல்ல மெல்லச் சொல்லிக்குடுக்குறன்.” ஜானகி மீது சந்திரமதிக்கு கோபம் உண்டானாலும் மாமனாரிடம் சமாளித்தார்.

ஆனால், அப்போதும் விடாமல், “அதத்தான் அண்ணி இப்பவே ஆரம்பிங்கோ எண்டு அப்பா சொல்லுறார். வீட்டில சும்மாதானே இருக்கப்போறா உங்கட மருமகள்.” என்றதும், அவ்வளவு நேரமாக எவ்வளவு தூரத்திற்குப் போகிறார்கள் பார்க்கலாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்த நிலன் விழுக்கென்று நிமிர்ந்தான்.


“நீங்களும் வீட்டில சும்மாதானே இருக்கிறீங்க அத்த. நீங்க அம்மாக்கு உதவியா இருங்கோ. அவள் எனக்கு உதவிக்கு வேணும்.” என்றான்.

“இதென்ன புதுசா? இவ்வளவு காலமும் ஆர் உனக்கு உதவினது?”

“இவ்வளவு காலமும் வீட்டை ஆர் பாத்தது?”

“அது வேற. மருமகள் வந்ததுக்குப் பிறகும் நாங்கதான் பாக்கோணுமா?”

“ஏன் பாத்தா என்ன?”

“தம்பி, என்ன இது? பேசாமச் சாப்பிடு!” என்று சந்திரமதியும் பிரபாகரனும் தடுத்தும் கேளாமல் ஜானகிக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தான் நிலன்.

கடைசியில், “பேரா! பேசாமச் சாப்பிடு!” என்று சக்திவேலர் அதட்டிய பிறகுதான் எல்லோரும் அமைதியாகச் சாப்பிட்டனர். ஆனால், எல்லோர் மனத்திலும் இளவஞ்சி குறித்தான சிந்தனைதான். அவள் அறியாமல் அவளைத்தான் கவனித்தனர்.

அனைத்தையும் கவனித்தபடி சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்த இளவஞ்சி, “மிஸ்டர் சக்திவேலர், நீங்களும் உங்கட குடும்பமும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? இவள் ஆள் அட்ரஸ் இல்லாதவள், இருந்த தொழிலயும் பறிச்சாச்சு, இப்ப பல்லுப் பிடுங்கின பாம்பு, நாங்க என்ன எண்டாலும் கதைக்கலாம் எண்டா?” என்றாள்.

“ஏய்! ஆரப் பாத்து பெயர் சொல்லிக் கதைக்கிறாய்?” என்று சீறிக்கொண்டு வந்த ஜானகியை அவள் கணக்கில் எடுக்கவே இல்லை.

“உங்கட ஆட்சி அதிகாரத்தை இந்த வீட்டோட வச்சிருங்க. என்னட்ட கொண்டு வராதீங்க சரியா? என்னத்தான் கட்டியே ஆகோணும் எண்டு நிண்டு கட்டினது உங்கட பேரன். இப்பவும் வேணாம் எண்டு சொல்லச் சொல்லுங்க. இந்த நிமிசம் இந்த வீட்டை விட்டு வெளில போறன் நான்.” என்றுவிட்டு எழுந்தவள், “உங்கட அப்பப்பா என்ன முடிவில இருக்கிறார் எண்டு கேட்டுக்கொண்டு வந்து சொல்லுங்க.” என்று நிலனிடமும் சொல்லிவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு மேலேறினாள்.

தொடரும்…

சொறி மக்களே, உண்மையா சஸ்பென்ஸ் வச்சு எழுத நினைக்கேல்ல. ஆனா அதச் சொல்லுற இடம் வரேல்ல. யோசிச்சு பாருங்களன். அது அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாது எண்டுதான் எல்லாரும் நினைக்கினம். அப்பிடி இருக்க அவளுக்குத் தெரிய வாற இடம், அதுக்குச் சரியான காரணத்தோடதான் வரும் இல்லையா? எனக்குத் தெரிஞ்சு 14 அல்லது 15வது அத்தியாயத்தில வந்திடும். ஓகேயா?

வேற என்ன? ஹாப்பி வீக்கெண்ட். திங்கள் சந்திக்கலாம். கத எப்பிடிப் போகுது எண்டு சொல்லுங்க .
அமைதியாக இருந்தாலும் சிங்கம் ,சிங்கம்தானே. தேவைப்படும் போது கர்ஜித்தால் போதும். வஞ்சி எப்போதும் சிங்கம்தான்.
 
Top Bottom