மீட்டிங் முடிந்து வெளியே வந்தபோது என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வுதான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோஃபி வாங்கிக்கொண்டு வந்து ஒன்றை அரவிந்தனிடம் நீட்டினான் கிருபன்.
“வெளில எங்கயும் போவமா மச்சி? மண்டை எல்லாம் காஞ்சு போச்சு. இவனுகளுக்கு எல்லாம் ஏன் சொட்டை எண்டு இப்ப விளங்குதடா. என்ன அறுவ!” நாளைய நாளும் விடுமுறை என்பதில் அதைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்திருந்தான், அரவிந்தன்.
கிருபனின் எண்ணமும் அதுதான். வீட்டுக்குப் போவதை நினைத்தாலே அலுப்படித்தது. “போட்டிங் போகலாம். ஆனா மழை வரும் போல இருக்கேடா.” மெல்லிய கருமையைச் சுமந்தபடி இருந்த வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“தியேட்டருக்கு ஏதாவது புதுப்படம் வந்திருக்கா?” என்று வினவிய அரவிந்தனின் கைபேசி, குறுஞ்செய்தி வந்திருப்பதை ஒலியெழுப்பி அறிவித்தது.
எடுத்துப்பார்த்தான். ‘டேய் அண்ணா, வரேக்க கோழிக்கொத்து வாங்கிக்கொண்டு வா! மறந்தியோ மண்டையிலேயே குட்டுவன்!’ என்று அனுப்பியிருந்தாள் கமலி.
“இவளுக்கு இருக்கிற திமிருக்கு..” அரவிந்தன் பல்லைக் கடிக்கச் சிறு சிரிப்புடன் பார்த்தான் கிருபன். “ஒரே ஒரு தங்கச்சி தான்டா எனக்கு. ஆனா, அந்த ஒருத்தி ஒரு ஊருக்கே சமன். பார் என்ன எழுதி இருக்கிறாள் எண்டு!” என்று கைப்பேசியைக் காட்டினான்.
கைப்பிடிச் சுவரில் இலகுவாகச் சாய்ந்தபடி கோப்பியை பருகிக்கொண்டு இருந்த கிருபன் இலேசாக எட்டிப் பார்த்தான். அதில் இருப்பதைக் கண்டு உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்து போயிற்று.
யார் என்றே தெரியாத அவனை முதல் சந்திப்பிலேயே அந்த அரட்டு அரட்டியவள் கூடப்பிறந்தவனை விட்டு வைப்பாளா?
உணவை வெளியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, வண்டியைக் கிளப்பாமல், “உன்ர தங்கச்சிக்கு?” என்றான் கிருபன்.
“அவளின்ர வாய்க்குக் கொத்துதான் இல்லாத குறை. நான் இண்டைக்கு இரவுதான் வீட்டுக்கு போவன். அப்ப பாப்பம். நீ உன்ர வீட்டுக்கு விடுடா. நெட்பிளிக்ஸ்ல ஏதாவது படம் பாப்பம்.” என்றபடி அவன் பின்னால் ஏறிக்கொண்டான் அரவிந்தன்.
இன் பண்ணியிருந்த இருவரின் சேர்ட்டுகளும் இப்போது வெளியே வந்திருக்க, முழுக்கை அரைக்கையாக மாறியிருந்தது. நண்பர்கள் இருவரும் விறாந்தையின் தரையில் கிடந்த மெத்தையில் ஆளுக்கொரு கோக் டின்னுடன் சரிந்திருந்தனர். திரில், சஸ்பென்ஸ் என்று கலந்துகட்டி வெகு சுவாரசியமாக நகர்ந்துகொண்டிருந்தது ஆங்கிலத் திரைப்படத்தின் திரைக்கதை. அதில் மூழ்க விடாமல் டொங்கு டொங்கு என்று அரவிந்தனின் கைபேசியில் செய்திகள் வந்து விழுந்துகொண்டே இருந்தது.
“இவளோட நான் படுற பாடு இருக்கே!” பல்லைக் கடித்தபடி எடுத்துப் பார்த்தான், அரவிந்தன்.
‘அண்ணா பசிக்குது. எப்ப வருவாய்?’ என்று அனுப்பியிருந்தாள் கமலி. இவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும், முகத்தைக் கையில் தாங்கியபடி கண்ணீர் சொட்டச் சொட்டக் காத்திருக்கும் ஒரு பெண் குழந்தையின் இமோஜி வந்து விழுந்தது.
கிருபனுக்கே சிரிப்பை அடக்குவது சிரமமாயிற்று. எல்லாரையும் அழ வைக்கிற இவள் கண்ணீர் வடிக்கிறாளாமா? காரியம் சாதிக்க நாடகமாடுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது.
“பாரடா எப்பிடி நடிக்கிறாள் எண்டு. வீட்டுக்கு போனன் எண்டு வை, இவ்வளவு நேரமா என்ன செய்தனி எண்டு கேட்டு என்ர முடியை போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுவாள்.” என்றபடி எழுந்துகொண்டான், அரவிந்தன்.
என்னதான் கோபமாகப் பேசினாலும் அவள் பசி என்று சொன்னதிலேயே மனம் கசிந்திருந்தது அவனுக்கு. உண்மையிலேயே சாப்பிடாமல் காத்திருப்பாள் என்றும் தெரியும். திரைப்படத்தை நிறுத்திவிட்டு கிருபனும் எழுந்து புறப்பட்டான்.
அவள் கேட்ட கோழிக்கொத்தோடு அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமும் வாங்கிக்கொண்டு வந்தவனைக் கொண்டுபோய் அவன் வீட்டினில் இறக்கிவிட்டு வந்த கிருபன், மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு மெத்தையில் விழுந்தான்.
மனம் படத்தில் லயிக்க மாட்டேன் என்றது.
ஒருகாலத்தில் அம்மா, அப்பா, அவன் என்று அவர்களின் வாழ்க்கையும் நல்லமாதிரித்தான் இருந்தது. ஒருநாள் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி போன அப்பா திரும்பி வரவேயில்லை. என்ன ஆயிற்று, எங்கே போனார் என்று இவர்கள் பயந்துகொண்டு இருக்க, வீடு தேடிவந்த காவல்துறையினர் அவர் விபத்தில் காலமாகிவிட்ட செய்தியைத்தான் தெரிவித்தனர்.
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது டிப்பர் மோதி வண்டியோடு பற்றைக்குள் தூக்கி எறியப்பட்டதில், அந்த விபத்து மற்றவர்களின் பார்வைக்கு வராமலேயே போயிற்று. டிப்பரும் நில்லாமல் தப்பித்து ஓடியிருக்கிறது. காப்பாற்ற யாருமற்று உயிருக்குப் போராடி மரணத்தைத் தழுவியிருக்கிறார் அவனது தந்தை. அவர் இருந்த இடத்தைச் சுற்றி நாய் விடாமல் குலைத்ததில் யாரோ பார்த்துத்தான் அவரைக் கண்டு பிடித்தார்களாம்.
ஐந்து வயது மகனை வைத்துக்கொண்டு மறுமணம் புரிய மனமற்று, கூடப்பிறந்த அண்ணா வசித்துவந்த கிளிநொச்சிக்கே வந்து சேர்ந்தார் அவனது அன்னை பாக்கியவதி. அவர் நர்ஸ் என்பதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கே மாற்றலையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்வாதாரத்தை தான் பார்க்கத் தேவையில்லை என்பதில் இவனது மாமாவான சோமசுந்தரமும் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
“வெளில எங்கயும் போவமா மச்சி? மண்டை எல்லாம் காஞ்சு போச்சு. இவனுகளுக்கு எல்லாம் ஏன் சொட்டை எண்டு இப்ப விளங்குதடா. என்ன அறுவ!” நாளைய நாளும் விடுமுறை என்பதில் அதைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்திருந்தான், அரவிந்தன்.
கிருபனின் எண்ணமும் அதுதான். வீட்டுக்குப் போவதை நினைத்தாலே அலுப்படித்தது. “போட்டிங் போகலாம். ஆனா மழை வரும் போல இருக்கேடா.” மெல்லிய கருமையைச் சுமந்தபடி இருந்த வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“தியேட்டருக்கு ஏதாவது புதுப்படம் வந்திருக்கா?” என்று வினவிய அரவிந்தனின் கைபேசி, குறுஞ்செய்தி வந்திருப்பதை ஒலியெழுப்பி அறிவித்தது.
எடுத்துப்பார்த்தான். ‘டேய் அண்ணா, வரேக்க கோழிக்கொத்து வாங்கிக்கொண்டு வா! மறந்தியோ மண்டையிலேயே குட்டுவன்!’ என்று அனுப்பியிருந்தாள் கமலி.
“இவளுக்கு இருக்கிற திமிருக்கு..” அரவிந்தன் பல்லைக் கடிக்கச் சிறு சிரிப்புடன் பார்த்தான் கிருபன். “ஒரே ஒரு தங்கச்சி தான்டா எனக்கு. ஆனா, அந்த ஒருத்தி ஒரு ஊருக்கே சமன். பார் என்ன எழுதி இருக்கிறாள் எண்டு!” என்று கைப்பேசியைக் காட்டினான்.
கைப்பிடிச் சுவரில் இலகுவாகச் சாய்ந்தபடி கோப்பியை பருகிக்கொண்டு இருந்த கிருபன் இலேசாக எட்டிப் பார்த்தான். அதில் இருப்பதைக் கண்டு உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்து போயிற்று.
யார் என்றே தெரியாத அவனை முதல் சந்திப்பிலேயே அந்த அரட்டு அரட்டியவள் கூடப்பிறந்தவனை விட்டு வைப்பாளா?
உணவை வெளியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டபோது, வண்டியைக் கிளப்பாமல், “உன்ர தங்கச்சிக்கு?” என்றான் கிருபன்.
“அவளின்ர வாய்க்குக் கொத்துதான் இல்லாத குறை. நான் இண்டைக்கு இரவுதான் வீட்டுக்கு போவன். அப்ப பாப்பம். நீ உன்ர வீட்டுக்கு விடுடா. நெட்பிளிக்ஸ்ல ஏதாவது படம் பாப்பம்.” என்றபடி அவன் பின்னால் ஏறிக்கொண்டான் அரவிந்தன்.
இன் பண்ணியிருந்த இருவரின் சேர்ட்டுகளும் இப்போது வெளியே வந்திருக்க, முழுக்கை அரைக்கையாக மாறியிருந்தது. நண்பர்கள் இருவரும் விறாந்தையின் தரையில் கிடந்த மெத்தையில் ஆளுக்கொரு கோக் டின்னுடன் சரிந்திருந்தனர். திரில், சஸ்பென்ஸ் என்று கலந்துகட்டி வெகு சுவாரசியமாக நகர்ந்துகொண்டிருந்தது ஆங்கிலத் திரைப்படத்தின் திரைக்கதை. அதில் மூழ்க விடாமல் டொங்கு டொங்கு என்று அரவிந்தனின் கைபேசியில் செய்திகள் வந்து விழுந்துகொண்டே இருந்தது.
“இவளோட நான் படுற பாடு இருக்கே!” பல்லைக் கடித்தபடி எடுத்துப் பார்த்தான், அரவிந்தன்.
‘அண்ணா பசிக்குது. எப்ப வருவாய்?’ என்று அனுப்பியிருந்தாள் கமலி. இவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும், முகத்தைக் கையில் தாங்கியபடி கண்ணீர் சொட்டச் சொட்டக் காத்திருக்கும் ஒரு பெண் குழந்தையின் இமோஜி வந்து விழுந்தது.
கிருபனுக்கே சிரிப்பை அடக்குவது சிரமமாயிற்று. எல்லாரையும் அழ வைக்கிற இவள் கண்ணீர் வடிக்கிறாளாமா? காரியம் சாதிக்க நாடகமாடுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது.
“பாரடா எப்பிடி நடிக்கிறாள் எண்டு. வீட்டுக்கு போனன் எண்டு வை, இவ்வளவு நேரமா என்ன செய்தனி எண்டு கேட்டு என்ர முடியை போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுவாள்.” என்றபடி எழுந்துகொண்டான், அரவிந்தன்.
என்னதான் கோபமாகப் பேசினாலும் அவள் பசி என்று சொன்னதிலேயே மனம் கசிந்திருந்தது அவனுக்கு. உண்மையிலேயே சாப்பிடாமல் காத்திருப்பாள் என்றும் தெரியும். திரைப்படத்தை நிறுத்திவிட்டு கிருபனும் எழுந்து புறப்பட்டான்.
அவள் கேட்ட கோழிக்கொத்தோடு அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமும் வாங்கிக்கொண்டு வந்தவனைக் கொண்டுபோய் அவன் வீட்டினில் இறக்கிவிட்டு வந்த கிருபன், மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு மெத்தையில் விழுந்தான்.
மனம் படத்தில் லயிக்க மாட்டேன் என்றது.
ஒருகாலத்தில் அம்மா, அப்பா, அவன் என்று அவர்களின் வாழ்க்கையும் நல்லமாதிரித்தான் இருந்தது. ஒருநாள் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி போன அப்பா திரும்பி வரவேயில்லை. என்ன ஆயிற்று, எங்கே போனார் என்று இவர்கள் பயந்துகொண்டு இருக்க, வீடு தேடிவந்த காவல்துறையினர் அவர் விபத்தில் காலமாகிவிட்ட செய்தியைத்தான் தெரிவித்தனர்.
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது டிப்பர் மோதி வண்டியோடு பற்றைக்குள் தூக்கி எறியப்பட்டதில், அந்த விபத்து மற்றவர்களின் பார்வைக்கு வராமலேயே போயிற்று. டிப்பரும் நில்லாமல் தப்பித்து ஓடியிருக்கிறது. காப்பாற்ற யாருமற்று உயிருக்குப் போராடி மரணத்தைத் தழுவியிருக்கிறார் அவனது தந்தை. அவர் இருந்த இடத்தைச் சுற்றி நாய் விடாமல் குலைத்ததில் யாரோ பார்த்துத்தான் அவரைக் கண்டு பிடித்தார்களாம்.
ஐந்து வயது மகனை வைத்துக்கொண்டு மறுமணம் புரிய மனமற்று, கூடப்பிறந்த அண்ணா வசித்துவந்த கிளிநொச்சிக்கே வந்து சேர்ந்தார் அவனது அன்னை பாக்கியவதி. அவர் நர்ஸ் என்பதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கே மாற்றலையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்வாதாரத்தை தான் பார்க்கத் தேவையில்லை என்பதில் இவனது மாமாவான சோமசுந்தரமும் அவர்களை ஏற்றுக்கொண்டார்.