அத்தியாயம் 5
மன்னார் நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தான் கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல் மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? அந்தளவுக்கு ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்? ஒருவனின் பிறப்பு ஒன்றே போதுமா அவனைப்பற்றிய மற்ற எதையும் யோசிக்காமல் விலக்கி வைக்க?
யாரிடமும் இறக்கி வைத்துவிட முடியாத அந்த அழுத்தத்தோடு மத்தியானம் உண்ணாமல் வீட்டுக்கு வந்து விழுந்து படுத்துவிட்டான். எழுந்து பார்த்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. பசி வயிற்றைப் பிடுங்கியது. வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்று அனைத்தையும் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு அது வதங்கியதா என்று கூடப் பார்க்காமல் மஞ்சள்தூள், மிளகுத்தூள், சின்னச் சீரகத்தூள், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் போட்டுப் பிரட்டி, இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி வறைபோல் செய்தான். இரண்டு பானை டோஸ்ட்டரில் போட்டு எடுத்து, முட்டை வறையோடு சேர்த்துச் சாப்பிட்டான்.
அப்போதுதான் நிதானமாகச் சிந்திக்க வந்தது. துளசிக்கு கலியாணம் பேசுறார் என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்துபோன மாமியும், அவன் பேசச் சந்தர்ப்பமே தராமல் வெளியே போன மாமாவும், அவன் அவனுடைய திருமணப் பேச்சை ஆரம்பித்துவிடுவான் என்றுதான் நழுவினார்களோ? அதன்பிறகும் மாமி அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாரே. உதட்டோரம் விரக்தியாய் வளைந்தது.
மேலே இருக்கிறவனுமா அவனைக் கைவிட்டுவிடுவான்?
வீட்டில் இருந்து, இதையெல்லாம் யோசிக்கப் பிடிக்கவில்லை. அரவிந்தனோடு எங்கேயாவது போவோமோ என்று யோசித்தபோதுதான் அவன் இன்று பிள்ளையார் பந்து விளையாடப்போவதாகச் சொன்னது நினைவு வந்தது.
அதைக் கேட்டபோது, இன்னுமே சின்னப்பிள்ளைகள் போல் இதென்ன விளையாட்டு என்று சிரிப்புத்தான் வந்தது கிருபனுக்கு. இவனையும் வா என்று கூப்பிட, “எந்தக் காலத்திலயடா இருக்கிறீங்க? இன்னும் அதெல்லாம் நினைவு இருக்கா என்ன?” என்று சிரித்தான் கிருபன். அம்மா அப்பா இருந்த காலத்தில் புழுதி மறைத்த காட்சியாக அந்த விளையாட்டு விளையாடிய நினைவு மாத்திரமே நினைவில் இருந்தது அவனுக்கு.
“நீ வா. வந்தா உனக்குத் தெரியும், இது அந்தக்காலத்து விளையாட்டா இல்ல இந்தக் காலத்து விளையாட்டா எண்டு!” என்றுவிட்டு, அரவிந்தன் சொன்ன கதையில் இவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.
அவர்கள் பிள்ளையார் பேணி விளையாடும் நிலம் கமலியின் சீதனக்காணியாம். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்தக் காணியில் வீடு கட்டிவிடுவாளாம் என்று அவளின் நண்பர்கள் படை அவளுக்குத் திருமணம் ஆகக்கூடாது என்று நேர்த்தி வைத்திருக்கிறார்களாம். இல்லையோ, வருகிறவன் பணக்காரனாக இருக்க வேண்டுமாம். முக்கியமாக அவனுக்கு வீடு சொந்தமாக இருக்கவேண்டுமாம். அப்படியானவனுக்குத்தான் அவர்கள் அவளைக் கொடுப்பார்களாம்.
தகப்பன் அவளுக்கான வீட்டினைக் கட்ட ஆயத்தமானபோது கமலியும் தடுத்துவிட்டாளாம். ‘இப்ப கட்டுற வீடு நான் கலியாணம் கட்டுற காலத்தில பழைய டிசைன் ஆகிடும். கலியாணம் சரி வந்ததும் கட்டித்தாங்க, இல்லையோ காசை தாங்க எனக்குப் பிடிச்ச மாதிரி நான் கட்டிக்கொள்ளுறன்’ என்று தடுத்துவிட்டாளாம். அப்படிச்சொன்னதற்கு முக்கியம் காரணம் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதுதானாம்.
சிறுபிள்ளைத்தனமான விசயமாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் இருந்த பிணைப்பு மனத்தைத் தொட்டது. மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எப்படியும் விளையாடி முடித்திருப்பார்கள் என்று கணித்து அவனுக்கு அழைத்தான்.
“டேய் மச்சான், வாடா மன்னார் கடல்ல போட்டிங் போவம். இப்ப போனா தூண்டிலும் போடலாம்.”
“அதுக்கு நாளைக்குப் போவமடா. இப்ப நீ வெளிக்கிட்டு இங்க வா.” என்று அழைத்தான் அவன்.
“டேய் என்னடா? இன்னுமா முடியேல்ல?”
“இன்னும் இருட்ட இல்லையே. நீ வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.
‘ப்ச்!’ அலுப்புடன் போனை மேசையில் போட்டுவிட்டுத் தலையைப் பிடித்துக்கொண்டான் கிருபன்.
விருட்டென்று எழுந்துபோன மாமா, அவரின் ஒற்றைப் பார்வையில் அறைக்குள் நழுவிய பெண்கள், ஒட்டுதல் இல்லாமலேயே பேசிய மாமி என்று அவர்களின் செய்கைகள் தான் மீண்டும் கண்முன்னே ஓடியது. அதற்குமேலும் அதைப்பற்றி யோசிக்கப் பிடிக்காமல் தலையை உதறிக்கொண்டு வேகமாக எழுந்து தயாராகி வெளியேறினான்.
அங்கோ, அந்தக் காணியில் அவர்களின் தெருவின் இளவட்டம் முழுவதும் நின்றது. அதில் இளம் பெண்களும் அடக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். ‘அடப்பாவி! வெக்கமே இல்லாம பெட்டையளோட விளையாடுறியேடா!’ என்று நண்பனைத் திட்டிக்கொண்டான்.
அதைவிட, எப்போதுமே நேர்த்தியாகப் பார்த்துப் பழகிய கமலி, இன்று குப்பத்து முனியம்மா போல், முழங்கால் வரை நின்ற தொள தொள ஜம்பர் ஒன்றுடன் அரவிந்தனின் பழைய டீ ஷர்ட் ஒன்றினையும் போட்டிருந்தாள். முடி எல்லாம் கலைந்து பறந்து அதைக் கொண்டையாக்கி அந்தக் கொண்டையுமே அவிழ்ந்து தொங்கி என்று படு கன்றாவியாக இருந்தாள். தேகம் முழுக்க மண்ணில் உருண்டவள் போன்று புழுதி அப்பிக்கிடந்தது.
வந்த இவனையெல்லாம் கவனிக்கும் நிலையிலேயே இல்லை அவள். வெகு மும்முரமாக, நண்பர்களுக்குள் உருவாகியிருந்த ஏதோ ஒரு பிணக்கைத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்.
“இனி சிரட்டையை ஆரும் கொண்டு ஓடுறேல்ல சரியா. போட்டுட்டுத்தான் ஓடவேணும். ரெண்டு தரப்புக்கும் இதுதான் ரூல். சரிதானே. இனி வாங்கோ.” என்று அழைத்து வந்தாள்.
மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு ஆறு வயது சிறுவனை இளைப்பாற அமர்த்திவிட்டு அவனுக்குப் பதிலாக, “நீ வாடா!” என்றான் அரவிந்தன்.
எதிரணியில் இருப்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் இளம் பெண்கள். அவர்களோடு எப்படி? அவர்கள் வேறு இவனையே பார்ப்பது தெரிய உள்ளுக்குள் நெளிந்தான் கிருபன்.
“நல்ல உடுப்பு மச்சி.” என்று உடையைச் சாட்டி அவன் தயங்க, “நாங்க மட்டும் கூடாத உடுப்பா போட்டிருக்கிறம். ஒண்டுக்கு நாலு தரம் ரின்சோ போட்டு நல்ல வடிவா அலம்பினா சரி!” என்று பட்டென்று பதில் சொன்னாள், கமலி.
பெரும் கூச்சம் அவனுக்கு. பிள்ளையார் பந்து விளையாடும்போது எதிரணியைத் துரத்த வேண்டும். பந்து கையில் கிடைத்தால் சிரட்டைகளை அடுக்கும் அவர்களை அடித்து அவுட்டாக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிப் பெண்களிடம் செய்வது? அதுவும் பெண்களைப் பின்னால் துரத்துவதை நினைக்கவே அவனுக்கு முகம் சிவந்துவிடும் போலிருந்தது. அவர்கள் அவனைத் துரத்தும் நிலை வந்தால்?
ஆனாலும், வேறு வழியில்லை. இனியும் மறுத்தால் இந்தப் பெண்கள் அவனைக் கேலி செய்தே ஒருவழியாக்கி விடுவார்கள். இப்போதே அவனைக் குறுகுறு என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சும்மா விளையாடுவதுபோல் போக்குக் காட்டுவோம் என்று வந்து நின்றுகொண்டான்.
ஆரம்பத்தில் உடம்பு வளைந்து கொடுக்கமாட்டேன் என்று இறுகி நின்றது. பெண்களின் முன்னே ஓடுவது ஒருமாதிரி இருந்தது. ஆயினும் தேங்கி நிற்க முடியாமல் அந்த விளையாட்டே அவனை விரட்டிற்று. போகப்போக, ஆட்கள் சிரட்டையை அடுக்கப் பார்ப்பதையும், பந்து எறிந்ததும் சிரட்டையைப் போட்டுவிட்டு தலைதெறிக்க அவர்கள் ஓடுவதையும், சில நேரங்களில் விழுந்து எழும்புவதையும் கண்டு சிரித்துச் சிரித்து வயிறே வலித்தது அவனுக்கு. அதைவிட, அவனே அறியாத ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளத் தன்னை மறந்து அந்த விளையாட்டில் ஐக்கியமாகிப்போனான்.
ஒருமுறை கமலி அடுக்கப்பார்க்க, அவன் பந்தை எறிய அவள் எழுந்து ஓடியபோதும் சரியாகச் சென்று அவளின் காலில் பட்டது பந்து.
மன்னார் நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தான் கிருபன். சாப்பிடுகிறாயா என்று கூடக் கேட்காத மாமியின் செயல் மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருந்தது. அந்தளவுக்கு ஏன் விலக்கி வைக்க வேண்டும்? அந்தளவுக்கு ஏன் வெறுத்து ஒதுக்க வேண்டும்? ஒருவனின் பிறப்பு ஒன்றே போதுமா அவனைப்பற்றிய மற்ற எதையும் யோசிக்காமல் விலக்கி வைக்க?
யாரிடமும் இறக்கி வைத்துவிட முடியாத அந்த அழுத்தத்தோடு மத்தியானம் உண்ணாமல் வீட்டுக்கு வந்து விழுந்து படுத்துவிட்டான். எழுந்து பார்த்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. பசி வயிற்றைப் பிடுங்கியது. வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்று அனைத்தையும் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு அது வதங்கியதா என்று கூடப் பார்க்காமல் மஞ்சள்தூள், மிளகுத்தூள், சின்னச் சீரகத்தூள், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் போட்டுப் பிரட்டி, இரண்டு முட்டைகளை அடித்து ஊற்றி வறைபோல் செய்தான். இரண்டு பானை டோஸ்ட்டரில் போட்டு எடுத்து, முட்டை வறையோடு சேர்த்துச் சாப்பிட்டான்.
அப்போதுதான் நிதானமாகச் சிந்திக்க வந்தது. துளசிக்கு கலியாணம் பேசுறார் என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்துபோன மாமியும், அவன் பேசச் சந்தர்ப்பமே தராமல் வெளியே போன மாமாவும், அவன் அவனுடைய திருமணப் பேச்சை ஆரம்பித்துவிடுவான் என்றுதான் நழுவினார்களோ? அதன்பிறகும் மாமி அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாரே. உதட்டோரம் விரக்தியாய் வளைந்தது.
மேலே இருக்கிறவனுமா அவனைக் கைவிட்டுவிடுவான்?
வீட்டில் இருந்து, இதையெல்லாம் யோசிக்கப் பிடிக்கவில்லை. அரவிந்தனோடு எங்கேயாவது போவோமோ என்று யோசித்தபோதுதான் அவன் இன்று பிள்ளையார் பந்து விளையாடப்போவதாகச் சொன்னது நினைவு வந்தது.
அதைக் கேட்டபோது, இன்னுமே சின்னப்பிள்ளைகள் போல் இதென்ன விளையாட்டு என்று சிரிப்புத்தான் வந்தது கிருபனுக்கு. இவனையும் வா என்று கூப்பிட, “எந்தக் காலத்திலயடா இருக்கிறீங்க? இன்னும் அதெல்லாம் நினைவு இருக்கா என்ன?” என்று சிரித்தான் கிருபன். அம்மா அப்பா இருந்த காலத்தில் புழுதி மறைத்த காட்சியாக அந்த விளையாட்டு விளையாடிய நினைவு மாத்திரமே நினைவில் இருந்தது அவனுக்கு.
“நீ வா. வந்தா உனக்குத் தெரியும், இது அந்தக்காலத்து விளையாட்டா இல்ல இந்தக் காலத்து விளையாட்டா எண்டு!” என்றுவிட்டு, அரவிந்தன் சொன்ன கதையில் இவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது.
அவர்கள் பிள்ளையார் பேணி விளையாடும் நிலம் கமலியின் சீதனக்காணியாம். அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்தக் காணியில் வீடு கட்டிவிடுவாளாம் என்று அவளின் நண்பர்கள் படை அவளுக்குத் திருமணம் ஆகக்கூடாது என்று நேர்த்தி வைத்திருக்கிறார்களாம். இல்லையோ, வருகிறவன் பணக்காரனாக இருக்க வேண்டுமாம். முக்கியமாக அவனுக்கு வீடு சொந்தமாக இருக்கவேண்டுமாம். அப்படியானவனுக்குத்தான் அவர்கள் அவளைக் கொடுப்பார்களாம்.
தகப்பன் அவளுக்கான வீட்டினைக் கட்ட ஆயத்தமானபோது கமலியும் தடுத்துவிட்டாளாம். ‘இப்ப கட்டுற வீடு நான் கலியாணம் கட்டுற காலத்தில பழைய டிசைன் ஆகிடும். கலியாணம் சரி வந்ததும் கட்டித்தாங்க, இல்லையோ காசை தாங்க எனக்குப் பிடிச்ச மாதிரி நான் கட்டிக்கொள்ளுறன்’ என்று தடுத்துவிட்டாளாம். அப்படிச்சொன்னதற்கு முக்கியம் காரணம் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதுதானாம்.
சிறுபிள்ளைத்தனமான விசயமாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் இருந்த பிணைப்பு மனத்தைத் தொட்டது. மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எப்படியும் விளையாடி முடித்திருப்பார்கள் என்று கணித்து அவனுக்கு அழைத்தான்.
“டேய் மச்சான், வாடா மன்னார் கடல்ல போட்டிங் போவம். இப்ப போனா தூண்டிலும் போடலாம்.”
“அதுக்கு நாளைக்குப் போவமடா. இப்ப நீ வெளிக்கிட்டு இங்க வா.” என்று அழைத்தான் அவன்.
“டேய் என்னடா? இன்னுமா முடியேல்ல?”
“இன்னும் இருட்ட இல்லையே. நீ வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.
‘ப்ச்!’ அலுப்புடன் போனை மேசையில் போட்டுவிட்டுத் தலையைப் பிடித்துக்கொண்டான் கிருபன்.
விருட்டென்று எழுந்துபோன மாமா, அவரின் ஒற்றைப் பார்வையில் அறைக்குள் நழுவிய பெண்கள், ஒட்டுதல் இல்லாமலேயே பேசிய மாமி என்று அவர்களின் செய்கைகள் தான் மீண்டும் கண்முன்னே ஓடியது. அதற்குமேலும் அதைப்பற்றி யோசிக்கப் பிடிக்காமல் தலையை உதறிக்கொண்டு வேகமாக எழுந்து தயாராகி வெளியேறினான்.
அங்கோ, அந்தக் காணியில் அவர்களின் தெருவின் இளவட்டம் முழுவதும் நின்றது. அதில் இளம் பெண்களும் அடக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். ‘அடப்பாவி! வெக்கமே இல்லாம பெட்டையளோட விளையாடுறியேடா!’ என்று நண்பனைத் திட்டிக்கொண்டான்.
அதைவிட, எப்போதுமே நேர்த்தியாகப் பார்த்துப் பழகிய கமலி, இன்று குப்பத்து முனியம்மா போல், முழங்கால் வரை நின்ற தொள தொள ஜம்பர் ஒன்றுடன் அரவிந்தனின் பழைய டீ ஷர்ட் ஒன்றினையும் போட்டிருந்தாள். முடி எல்லாம் கலைந்து பறந்து அதைக் கொண்டையாக்கி அந்தக் கொண்டையுமே அவிழ்ந்து தொங்கி என்று படு கன்றாவியாக இருந்தாள். தேகம் முழுக்க மண்ணில் உருண்டவள் போன்று புழுதி அப்பிக்கிடந்தது.
வந்த இவனையெல்லாம் கவனிக்கும் நிலையிலேயே இல்லை அவள். வெகு மும்முரமாக, நண்பர்களுக்குள் உருவாகியிருந்த ஏதோ ஒரு பிணக்கைத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்.
“இனி சிரட்டையை ஆரும் கொண்டு ஓடுறேல்ல சரியா. போட்டுட்டுத்தான் ஓடவேணும். ரெண்டு தரப்புக்கும் இதுதான் ரூல். சரிதானே. இனி வாங்கோ.” என்று அழைத்து வந்தாள்.
மீண்டும் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு ஆறு வயது சிறுவனை இளைப்பாற அமர்த்திவிட்டு அவனுக்குப் பதிலாக, “நீ வாடா!” என்றான் அரவிந்தன்.
எதிரணியில் இருப்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் இளம் பெண்கள். அவர்களோடு எப்படி? அவர்கள் வேறு இவனையே பார்ப்பது தெரிய உள்ளுக்குள் நெளிந்தான் கிருபன்.
“நல்ல உடுப்பு மச்சி.” என்று உடையைச் சாட்டி அவன் தயங்க, “நாங்க மட்டும் கூடாத உடுப்பா போட்டிருக்கிறம். ஒண்டுக்கு நாலு தரம் ரின்சோ போட்டு நல்ல வடிவா அலம்பினா சரி!” என்று பட்டென்று பதில் சொன்னாள், கமலி.
பெரும் கூச்சம் அவனுக்கு. பிள்ளையார் பந்து விளையாடும்போது எதிரணியைத் துரத்த வேண்டும். பந்து கையில் கிடைத்தால் சிரட்டைகளை அடுக்கும் அவர்களை அடித்து அவுட்டாக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிப் பெண்களிடம் செய்வது? அதுவும் பெண்களைப் பின்னால் துரத்துவதை நினைக்கவே அவனுக்கு முகம் சிவந்துவிடும் போலிருந்தது. அவர்கள் அவனைத் துரத்தும் நிலை வந்தால்?
ஆனாலும், வேறு வழியில்லை. இனியும் மறுத்தால் இந்தப் பெண்கள் அவனைக் கேலி செய்தே ஒருவழியாக்கி விடுவார்கள். இப்போதே அவனைக் குறுகுறு என்று பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். சும்மா விளையாடுவதுபோல் போக்குக் காட்டுவோம் என்று வந்து நின்றுகொண்டான்.
ஆரம்பத்தில் உடம்பு வளைந்து கொடுக்கமாட்டேன் என்று இறுகி நின்றது. பெண்களின் முன்னே ஓடுவது ஒருமாதிரி இருந்தது. ஆயினும் தேங்கி நிற்க முடியாமல் அந்த விளையாட்டே அவனை விரட்டிற்று. போகப்போக, ஆட்கள் சிரட்டையை அடுக்கப் பார்ப்பதையும், பந்து எறிந்ததும் சிரட்டையைப் போட்டுவிட்டு தலைதெறிக்க அவர்கள் ஓடுவதையும், சில நேரங்களில் விழுந்து எழும்புவதையும் கண்டு சிரித்துச் சிரித்து வயிறே வலித்தது அவனுக்கு. அதைவிட, அவனே அறியாத ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்ளத் தன்னை மறந்து அந்த விளையாட்டில் ஐக்கியமாகிப்போனான்.
ஒருமுறை கமலி அடுக்கப்பார்க்க, அவன் பந்தை எறிய அவள் எழுந்து ஓடியபோதும் சரியாகச் சென்று அவளின் காலில் பட்டது பந்து.