அத்தியாயம் 6
இரண்டு மாதங்கள் எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப்போயிற்று. இன்னுமே தனக்குள் சுருங்கிப் போனான் கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும் அரவிந்தனின் முகம் பார்க்கத் தடுமாறினான். என்ன என்ன என்று விசாரித்தவனுக்கு மாமா வீட்டுக்குப் போய்வந்ததைக் காரணமாக்கினான்.
எதையும் தூண்டித் துருவும் பழக்கம் அரவிந்தனுக்கு இல்லையாதலால் நண்பனை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுக்கு இதமாக நடக்கமுயன்றான். அது இன்னுமே அவனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிற்று.
அவர்கள் வீட்டிலிருந்து வராமல் நின்றுவிட்ட பலகாரங்கள் அவளின் தீராத கோபத்தைச் சொல்லியது. எப்படியாவது மன்னிப்புக் கேட்க முடிந்தால்? அவனே எதிர்பாராமல் நடந்துவிட்ட பிசகு என்று சொல்லிவிட முடிந்தால்? அது தன்னால் முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே வந்து நின்றது.
அரவிந்தனின் அன்னை சுகுணா மட்டும், சோற்றை ரைஸ் குக்கரில் போட்டுவிட்டுச் சாப்பிடட்டும் என்று அவ்வப்போது கறி கட்டிக் கொடுத்துவிடுவார். அதுவே, அவள் மற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லவில்லை என்று உணர்த்திற்று.
‘அண்ணான்ர பிரென்ட் எண்டு பாத்தா என்ன கேக்கிறீங்க?’ என்று கேட்டாளே ஒரு கேள்வி. இப்போது நினைக்கையிலும் மனதளவில் குன்றினான். அவளின் குறும்பை, அதட்டலை, உருட்டலை, ரசனையை, கைப்பக்குவத்தை எல்லாம் ரசித்திருக்கிறானே தவிர அவளை ரசித்தது இல்லை. ஒரு இளம் பெண் பிள்ளையின் கண்களை நேராகப் பார்ப்பதே அவனுக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கையில் அவளை எப்படிப் பார்ப்பான்? எப்படி ரசிப்பான்?
ஒதுங்கி ஒதுங்கி மட்டுமே போனவன் ஏன் அப்படிக் கேட்டான்?
மாமா வீட்டுக்குப் போய்வந்ததில் ஆழமாகக் காயப்பட்டிருந்த மனது, எனக்கு யாருமே இல்லையா என்று தனக்குள் அழுதுகொண்டிருந்தபோது, அம்மாவைப்போலவே அக்கறையும் கோபமுமாக அவனைக் கவனித்தவளை காலத்துக்கும் தன்னுடனேயே வைத்திருக்கும் உந்துதலில் கேட்டுவிட்டது.
அதைக் கேட்டதும் எவ்வளவு கேவலமாகப் பார்த்தாள். அல்லும் பகலும் நிம்மதியாக இருக்கவிடாமல் அவளின் அந்தப் பார்வை அவனைத் துரத்தியது. இன்றைக்கும் வேலை முடிந்ததும் அரவிந்தனின் கண்ணில் படாமல் நழுவி பைக்கை எங்கு என்றில்லாமல் விரட்டினான்.
போய்வருவதற்கு என்று அவனுக்கு இருந்த ஒரேயொரு வீட்டைக்கூட, தன் செய்கையால் கெடுத்துக்கொண்டு அநாதரவாக வீதியில் அலைகிறான். அமைதி வேண்டி மன்னார் மடுமாதா ஆலயத்துக்கு வந்தவன் ஒரு மெழுகு திரியைக் கொளுத்திவிட்டு அப்படியே வாங்கிலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். ஆறாத காயத்திலிருந்து வடியும் நீரினைப்போல கண்ணோரஙகள் மெல்ல மெல்ல கசிந்தன.
யாரிடமிருந்தும் ஆறுதல் கிடைக்காது என்கிற உண்மை சிறு வயதிலேயே புரிந்துவிட்ட படியினால் இதுவரைக்கும் யாரின் அருகாமையையும் அவன் தேடியதில்லை. இழப்பை எண்ணி வருந்தியதில்லை. அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அன்னை தந்தையின் நினைவு வந்தால் கூட எதையாவது செய்து மாற்றிவிடுவான். இன்றோ எதுவுமே முடியாமல் என்ன காரியம் செய்துவிட்டேன் என்று மனம் அரித்துக்கொண்டே இருந்தது.
அதட்டி உருட்டி வீட்டுக்குள் அழைத்த அவள், சாப்பிட்டு முடிச்சிட்டுத்தான் போகவேணுமென்று மிரட்டிய அவள், சிம்ரன் என்று அழைத்து அவனைக் கூச்சப்பட வைத்த அவள் என்று அவர்களின் வீட்டுக்கு அவனை அந்நியமாக உணரவைக்காமல் உரிமையாக வந்துபோகச் செய்ததில் அரவிந்தனைக் காட்டிலும் அவளின் பங்குதானே அதிகம். அப்படியானவளிடம் போய்.. ப்ச்! கண்களைத் திறந்து மாதாவையே பார்த்திருந்தான். மடுவில் வீற்றிருக்கிறவள் அன்னைக்கும் மேலான அன்னையல்லவா. தன் கருணையினால் அவனை அருள் பாலித்தாள்.
மெல்ல மெல்ல மனம் அமைதி அடைந்தது. நடந்தவை அனைத்தும் முடிந்தவைதான் என்கிற உண்மை புரிந்தது. எதன் காரணத்துக்காகவும் வாழ்க்கை அதனிடத்தில் தேங்கி விடுவதில்லையே. அப்பா இல்லை என்று அறிந்தபோதும் கடந்து வந்தான் தான். எல்லாமாக இருந்த அம்மா இறந்ததையும் அந்தப் பிஞ்சு வயதிலேயே தாங்கிக்கொண்டான் தான். மாமா வீட்டுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று தெரிந்துமே அங்கேயே இருந்து அதையும் கடந்தான் தான். அப்படியே இதையும் கடக்க வேண்டியதுதான். கடப்பான்! வாழுவான்! காலம் அதைச் செய்யும்.
ஆனால், ஆசைப்பட்ட வாழ்க்கை அமையுமா? நம்பிக்கை இல்லை அவனுக்கு! ஒரு பெரு மூச்சுடன் எழுந்து அன்னையை வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வரும்போதே இடியப்ப பார்சல் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்தான். இப்போதெல்லாம் அவனுடைய படுக்கை, இருப்பு, ஓய்வெடுப்பு, வேலை பார்ப்பது எல்லாமே அந்த ஹாலின் தரையில் இருக்கும் மெத்தை தான். அதிலேயே அமர்ந்து டிவியைப் போட்டுவிட்டு பார்சலைப் பிரித்தான்.
தொலைக்காட்சியில் பாதிக் கவனமும் சாப்பாட்டில் மீதிக்கவனமுமாக இருக்கையில் அவன் வீட்டு பெல்லை யாரோ அழுத்தினார்கள். யாரோ என்ன அரவிந்தனாகத்தான் இருக்கும். இன்றைக்கு மனம் அளவுக்கதிகமாகக் குழம்பிப்போய் இருந்ததில் அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான். தேடிவந்திருக்கிறான் என்று விளங்கிற்று. அவனுடைய அந்த அக்கறை காயப்பட்டிருந்த மனதுக்கு இதம் சேர்க்க எழுந்துபோய்க் கதவைத் திறந்தான்.
“வா…” என்று ஆரம்பித்தவனின் பேச்சு அரவிந்தனின் அருகிலேயே நின்றவளைக் கண்டதும் அப்படியே நின்றுபோயிற்று. தன்னை மறந்து தவிப்புடன் அவளையே பார்த்தான்.
“நந்தி மாதிரி நடுவிலேயே நிக்காம தள்ளுடா!” என்று தள்ளியபடி உள்ளே வந்தான் அரவிந்தன்.
அவனது கோபத்தை உணர்ந்தாலும் அதைவிட அவளின் முன்னால் தன்னை நிலைப்படுத்துவதே பெரிய விடயமாக இருக்க, “சொறிடா. வா மச்சான். வா...ங்கோ!” என்று அவளையும் அழைத்தான்.
வீட்டுக்குள் வந்தவளின் பார்வை அவனை ஆராய்ந்து தரையில் பிரித்தபடி கிடந்த பார்சலில் தங்கவும் வேகமாக அதைத் தூக்கிக்கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு கையைக் கழுவியவனுக்குள் பெரும் போராட்டம்.
ஏன் வந்திருக்கிறாள்? ஏதாவது சொல்லுவாளோ? சட்டையைப் பிடிப்பாளோ? அரவிந்தன் வேறு நிற்கிறானே என்று பலதும் மண்டைக்குள் ஓட மெலிதாக வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
“தேத்தண்ணி ஊத்தவாடா?” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
“நீயும் உன்ர தேத்தண்ணியும்! இங்க வா முதல். ஒபீஸ்ல ஃபோனை மறந்து வச்சிட்டு வாற அளவுக்கு அவசரமா எங்க ஓடினனி?” என்று அரவிந்தன் கேட்டபோதுதான் அவனுக்கே அது உரைத்தது.
“ஓ..! மறந்திட்டன் போல. மேசையில வை வாறன்.” என்றுவிட்டு வேகமாகக் கெட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொதிக்க விட்டான்.
சும்மா கொறிக்க என்று வாங்கி வைத்திருந்த மிக்ஸரை இரண்டு குட்டி பிளேட்களில் போட்டு தேக்கரண்டி இரண்டையும் அதில் ஓரமாக வைத்தான். அப்படியே ஒரு லெமன் பஃப் பிஸ்கட் பக்கெட்டை உடைத்து இன்னொரு தட்டில் அடுக்கினான். எல்லாவற்றையும் ஒரு ட்ரேயில் எடுத்துவைத்து கொண்டுவந்து அவர்களுக்கு முன்னே இருந்த டீப்போவில் வைத்துவிட்டு, “ரெண்டுபேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ.” என்றான் பொதுவாக.
அவர்களின் வீட்டுக்குப் போனால் அவளும் இப்படித்தானே பார்த்துப் பார்த்துக் கவனிப்பாள். இயலாமையோடு அவளைப் பார்க்க அவளும் இவனைத்தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான் கிருபன். ஃபோனை எடுத்துச் சார்ஜில் போடுவதுபோலச் சமாளித்துவிட்டு வந்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
மிக்ஸர் தட்டை எடுத்துக்கொண்டாள் கமலி. விழிகள் அவன் வீட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது.
“பிறகு? ரெண்டுபேரும் எங்க போயிட்டு வாறீங்க?” ஒன்றுமே நடவாததுபோல் காட்டிக்கொள்ள முயன்றான், கிருபன்.
“கமலி கேக்குக்குச் சாமான் வாங்கவேணும் எண்டு சொன்னவள். அதுதான் கூட்டிக்கொண்டு போயிட்டு வாறன். வேல முடிஞ்சும் ஃபோன தர வந்தனான். நீ இல்ல. அதுதான் இப்ப திரும்ப வந்தனான். சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு உனக்கு என்ன அலுவல்?” என்று, அப்போதும் தீராத கோபத்துடன் கேட்டான் அரவிந்தன்.
“இல்ல மச்சான், அது வேலை முடியிற நேரம் தான் மாமா கடைக்குச் சாமான் வாங்க மன்னார் வந்திருக்கிறார் எண்டு தெரிய வந்தது. அதுதான் அவசரமா போயிட்டன்.” என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, தொடர்ந்து அரவிந்தனிடம் இருந்து வரப்போகிற கேள்விகளைத் தவிர்க்க அவசரமாக எழுந்து, “இருங்கோ, தேத்தண்ணி கொண்டுவாறன்!” என்று உள்ளே நடந்தான்.
அவள் தன்னோடு ஏதாவது பேசமாட்டாளா என்று மனம் ஏங்கிற்று. அவளின் குறு குறு பார்வைக்கான அர்த்தத்தை மனது தேடிற்று. முதன் முதலாக அவனைப் பார்த்தபோது கூட என்ன விசயம் என்று அதட்டியவள் இன்று அமைதியாக இருந்து அவனைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தாள்.
சிந்தனை அவளிடம் இருக்க, கைகள் தேநீரை ஊற்றியது. சிங்குக்குள் டொங் என்று பாத்திரம் விழுந்த சத்தத்தில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். கமலி நின்றுகொண்டு இருந்தாள். மிக்ஸர் சாப்பிட்டு முடித்த தட்டும் தேக்கரண்டியும் சிங்குக்குள் விழுந்த வேகமே அவளின் கோபத்தைச் சொல்ல, அவன் விழிகள் அவனே உணராமல் அவளில் நிலைத்தன.
“என்ன பார்வை?”
“இல்ல. ஒண்டும் இல்ல.”
“பயந்தவன் மாதிரி பம்முறது. ஆனா, கதைக்கிறது எல்லாம் தேவையில்லாத கதைகள் என்ன?”
அவன் முகம் கருத்துப்போனது. “சொறி… அது..” என்றபோதே அவனை நெருங்கி வந்தாள் அவள். பதட்டத்துடன் வேகமாக விலகினான் அவன். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் ஊற்றி வைத்திருந்த தேநீர் கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒருவாய் பருகிப் பார்த்தாள்.
ஏதாவது சொல்வாளாக்கும் என்று தன்னை மீறிய ஆவலோடு பார்த்தான். அவளோ கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை விழிகளால் ஒரு சுழற்றுச் சுழற்றினாள். அப்படியே வந்து மூடியிருந்த பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தாள். பெட் ரூம் திறந்தே இருக்க விறாந்தையில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டாள்.
அப்போதும் தொடர்ந்த அவளின் மௌனத்தில் அவன் மனது ஏமாற்றத்தில் சுருண்டு போயிற்று! காட்டிக்கொள்ளாமல் அவனுக்கும் அரவிந்தனுக்குமான கோப்பைகளை கட்டு ஒன்றில் எடுத்து வைத்தான்.
சிறுவயதில் இருந்து தன்னுடைய வேலைகளைத் தானே செய்து பழகியதில் வீடு எப்போதுமே ஒழுங்கு குலையாமல் இருக்கும் என்பதில் அவனுக்குள் ஒரு நிம்மதி. இல்லையோ அதற்கும் அவனை எப்படியெல்லாம் நினைப்பாளோ யாருக்குத் தெரியும்?
அரவிந்தனுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அருந்த, அவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று ஆராய்வது தெரிந்தது.
‘என்னத்த பாக்கிறாள்? அப்பிடி என்ன கிடக்கு அங்க?’ அரவிந்தனோடு பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அவளிடமே இருந்தது.
இங்கே அரவிந்தனும் ஏன் வீட்டுக்கு வருவதில்லை, விளையாட வருவதில்லை, முன்னர்ப் போன்று தன்னோடு பழகுவதில்லை என்று கேள்விகளாகக் கேட்டுத் தாளித்துக்கொண்டிருந்தான். அவனைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.
இரண்டு மாதங்கள் எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப்போயிற்று. இன்னுமே தனக்குள் சுருங்கிப் போனான் கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும் அரவிந்தனின் முகம் பார்க்கத் தடுமாறினான். என்ன என்ன என்று விசாரித்தவனுக்கு மாமா வீட்டுக்குப் போய்வந்ததைக் காரணமாக்கினான்.
எதையும் தூண்டித் துருவும் பழக்கம் அரவிந்தனுக்கு இல்லையாதலால் நண்பனை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுக்கு இதமாக நடக்கமுயன்றான். அது இன்னுமே அவனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிற்று.
அவர்கள் வீட்டிலிருந்து வராமல் நின்றுவிட்ட பலகாரங்கள் அவளின் தீராத கோபத்தைச் சொல்லியது. எப்படியாவது மன்னிப்புக் கேட்க முடிந்தால்? அவனே எதிர்பாராமல் நடந்துவிட்ட பிசகு என்று சொல்லிவிட முடிந்தால்? அது தன்னால் முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே வந்து நின்றது.
அரவிந்தனின் அன்னை சுகுணா மட்டும், சோற்றை ரைஸ் குக்கரில் போட்டுவிட்டுச் சாப்பிடட்டும் என்று அவ்வப்போது கறி கட்டிக் கொடுத்துவிடுவார். அதுவே, அவள் மற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லவில்லை என்று உணர்த்திற்று.
‘அண்ணான்ர பிரென்ட் எண்டு பாத்தா என்ன கேக்கிறீங்க?’ என்று கேட்டாளே ஒரு கேள்வி. இப்போது நினைக்கையிலும் மனதளவில் குன்றினான். அவளின் குறும்பை, அதட்டலை, உருட்டலை, ரசனையை, கைப்பக்குவத்தை எல்லாம் ரசித்திருக்கிறானே தவிர அவளை ரசித்தது இல்லை. ஒரு இளம் பெண் பிள்ளையின் கண்களை நேராகப் பார்ப்பதே அவனுக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கையில் அவளை எப்படிப் பார்ப்பான்? எப்படி ரசிப்பான்?
ஒதுங்கி ஒதுங்கி மட்டுமே போனவன் ஏன் அப்படிக் கேட்டான்?
மாமா வீட்டுக்குப் போய்வந்ததில் ஆழமாகக் காயப்பட்டிருந்த மனது, எனக்கு யாருமே இல்லையா என்று தனக்குள் அழுதுகொண்டிருந்தபோது, அம்மாவைப்போலவே அக்கறையும் கோபமுமாக அவனைக் கவனித்தவளை காலத்துக்கும் தன்னுடனேயே வைத்திருக்கும் உந்துதலில் கேட்டுவிட்டது.
அதைக் கேட்டதும் எவ்வளவு கேவலமாகப் பார்த்தாள். அல்லும் பகலும் நிம்மதியாக இருக்கவிடாமல் அவளின் அந்தப் பார்வை அவனைத் துரத்தியது. இன்றைக்கும் வேலை முடிந்ததும் அரவிந்தனின் கண்ணில் படாமல் நழுவி பைக்கை எங்கு என்றில்லாமல் விரட்டினான்.
போய்வருவதற்கு என்று அவனுக்கு இருந்த ஒரேயொரு வீட்டைக்கூட, தன் செய்கையால் கெடுத்துக்கொண்டு அநாதரவாக வீதியில் அலைகிறான். அமைதி வேண்டி மன்னார் மடுமாதா ஆலயத்துக்கு வந்தவன் ஒரு மெழுகு திரியைக் கொளுத்திவிட்டு அப்படியே வாங்கிலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். ஆறாத காயத்திலிருந்து வடியும் நீரினைப்போல கண்ணோரஙகள் மெல்ல மெல்ல கசிந்தன.
யாரிடமிருந்தும் ஆறுதல் கிடைக்காது என்கிற உண்மை சிறு வயதிலேயே புரிந்துவிட்ட படியினால் இதுவரைக்கும் யாரின் அருகாமையையும் அவன் தேடியதில்லை. இழப்பை எண்ணி வருந்தியதில்லை. அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அன்னை தந்தையின் நினைவு வந்தால் கூட எதையாவது செய்து மாற்றிவிடுவான். இன்றோ எதுவுமே முடியாமல் என்ன காரியம் செய்துவிட்டேன் என்று மனம் அரித்துக்கொண்டே இருந்தது.
அதட்டி உருட்டி வீட்டுக்குள் அழைத்த அவள், சாப்பிட்டு முடிச்சிட்டுத்தான் போகவேணுமென்று மிரட்டிய அவள், சிம்ரன் என்று அழைத்து அவனைக் கூச்சப்பட வைத்த அவள் என்று அவர்களின் வீட்டுக்கு அவனை அந்நியமாக உணரவைக்காமல் உரிமையாக வந்துபோகச் செய்ததில் அரவிந்தனைக் காட்டிலும் அவளின் பங்குதானே அதிகம். அப்படியானவளிடம் போய்.. ப்ச்! கண்களைத் திறந்து மாதாவையே பார்த்திருந்தான். மடுவில் வீற்றிருக்கிறவள் அன்னைக்கும் மேலான அன்னையல்லவா. தன் கருணையினால் அவனை அருள் பாலித்தாள்.
மெல்ல மெல்ல மனம் அமைதி அடைந்தது. நடந்தவை அனைத்தும் முடிந்தவைதான் என்கிற உண்மை புரிந்தது. எதன் காரணத்துக்காகவும் வாழ்க்கை அதனிடத்தில் தேங்கி விடுவதில்லையே. அப்பா இல்லை என்று அறிந்தபோதும் கடந்து வந்தான் தான். எல்லாமாக இருந்த அம்மா இறந்ததையும் அந்தப் பிஞ்சு வயதிலேயே தாங்கிக்கொண்டான் தான். மாமா வீட்டுக்கு நான் பாரமாக இருக்கிறேன் என்று தெரிந்துமே அங்கேயே இருந்து அதையும் கடந்தான் தான். அப்படியே இதையும் கடக்க வேண்டியதுதான். கடப்பான்! வாழுவான்! காலம் அதைச் செய்யும்.
ஆனால், ஆசைப்பட்ட வாழ்க்கை அமையுமா? நம்பிக்கை இல்லை அவனுக்கு! ஒரு பெரு மூச்சுடன் எழுந்து அன்னையை வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வரும்போதே இடியப்ப பார்சல் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்தான். இப்போதெல்லாம் அவனுடைய படுக்கை, இருப்பு, ஓய்வெடுப்பு, வேலை பார்ப்பது எல்லாமே அந்த ஹாலின் தரையில் இருக்கும் மெத்தை தான். அதிலேயே அமர்ந்து டிவியைப் போட்டுவிட்டு பார்சலைப் பிரித்தான்.
தொலைக்காட்சியில் பாதிக் கவனமும் சாப்பாட்டில் மீதிக்கவனமுமாக இருக்கையில் அவன் வீட்டு பெல்லை யாரோ அழுத்தினார்கள். யாரோ என்ன அரவிந்தனாகத்தான் இருக்கும். இன்றைக்கு மனம் அளவுக்கதிகமாகக் குழம்பிப்போய் இருந்ததில் அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான். தேடிவந்திருக்கிறான் என்று விளங்கிற்று. அவனுடைய அந்த அக்கறை காயப்பட்டிருந்த மனதுக்கு இதம் சேர்க்க எழுந்துபோய்க் கதவைத் திறந்தான்.
“வா…” என்று ஆரம்பித்தவனின் பேச்சு அரவிந்தனின் அருகிலேயே நின்றவளைக் கண்டதும் அப்படியே நின்றுபோயிற்று. தன்னை மறந்து தவிப்புடன் அவளையே பார்த்தான்.
“நந்தி மாதிரி நடுவிலேயே நிக்காம தள்ளுடா!” என்று தள்ளியபடி உள்ளே வந்தான் அரவிந்தன்.
அவனது கோபத்தை உணர்ந்தாலும் அதைவிட அவளின் முன்னால் தன்னை நிலைப்படுத்துவதே பெரிய விடயமாக இருக்க, “சொறிடா. வா மச்சான். வா...ங்கோ!” என்று அவளையும் அழைத்தான்.
வீட்டுக்குள் வந்தவளின் பார்வை அவனை ஆராய்ந்து தரையில் பிரித்தபடி கிடந்த பார்சலில் தங்கவும் வேகமாக அதைத் தூக்கிக்கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு கையைக் கழுவியவனுக்குள் பெரும் போராட்டம்.
ஏன் வந்திருக்கிறாள்? ஏதாவது சொல்லுவாளோ? சட்டையைப் பிடிப்பாளோ? அரவிந்தன் வேறு நிற்கிறானே என்று பலதும் மண்டைக்குள் ஓட மெலிதாக வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
“தேத்தண்ணி ஊத்தவாடா?” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
“நீயும் உன்ர தேத்தண்ணியும்! இங்க வா முதல். ஒபீஸ்ல ஃபோனை மறந்து வச்சிட்டு வாற அளவுக்கு அவசரமா எங்க ஓடினனி?” என்று அரவிந்தன் கேட்டபோதுதான் அவனுக்கே அது உரைத்தது.
“ஓ..! மறந்திட்டன் போல. மேசையில வை வாறன்.” என்றுவிட்டு வேகமாகக் கெட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொதிக்க விட்டான்.
சும்மா கொறிக்க என்று வாங்கி வைத்திருந்த மிக்ஸரை இரண்டு குட்டி பிளேட்களில் போட்டு தேக்கரண்டி இரண்டையும் அதில் ஓரமாக வைத்தான். அப்படியே ஒரு லெமன் பஃப் பிஸ்கட் பக்கெட்டை உடைத்து இன்னொரு தட்டில் அடுக்கினான். எல்லாவற்றையும் ஒரு ட்ரேயில் எடுத்துவைத்து கொண்டுவந்து அவர்களுக்கு முன்னே இருந்த டீப்போவில் வைத்துவிட்டு, “ரெண்டுபேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ.” என்றான் பொதுவாக.
அவர்களின் வீட்டுக்குப் போனால் அவளும் இப்படித்தானே பார்த்துப் பார்த்துக் கவனிப்பாள். இயலாமையோடு அவளைப் பார்க்க அவளும் இவனைத்தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான் கிருபன். ஃபோனை எடுத்துச் சார்ஜில் போடுவதுபோலச் சமாளித்துவிட்டு வந்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
மிக்ஸர் தட்டை எடுத்துக்கொண்டாள் கமலி. விழிகள் அவன் வீட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தது.
“பிறகு? ரெண்டுபேரும் எங்க போயிட்டு வாறீங்க?” ஒன்றுமே நடவாததுபோல் காட்டிக்கொள்ள முயன்றான், கிருபன்.
“கமலி கேக்குக்குச் சாமான் வாங்கவேணும் எண்டு சொன்னவள். அதுதான் கூட்டிக்கொண்டு போயிட்டு வாறன். வேல முடிஞ்சும் ஃபோன தர வந்தனான். நீ இல்ல. அதுதான் இப்ப திரும்ப வந்தனான். சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு உனக்கு என்ன அலுவல்?” என்று, அப்போதும் தீராத கோபத்துடன் கேட்டான் அரவிந்தன்.
“இல்ல மச்சான், அது வேலை முடியிற நேரம் தான் மாமா கடைக்குச் சாமான் வாங்க மன்னார் வந்திருக்கிறார் எண்டு தெரிய வந்தது. அதுதான் அவசரமா போயிட்டன்.” என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, தொடர்ந்து அரவிந்தனிடம் இருந்து வரப்போகிற கேள்விகளைத் தவிர்க்க அவசரமாக எழுந்து, “இருங்கோ, தேத்தண்ணி கொண்டுவாறன்!” என்று உள்ளே நடந்தான்.
அவள் தன்னோடு ஏதாவது பேசமாட்டாளா என்று மனம் ஏங்கிற்று. அவளின் குறு குறு பார்வைக்கான அர்த்தத்தை மனது தேடிற்று. முதன் முதலாக அவனைப் பார்த்தபோது கூட என்ன விசயம் என்று அதட்டியவள் இன்று அமைதியாக இருந்து அவனைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தாள்.
சிந்தனை அவளிடம் இருக்க, கைகள் தேநீரை ஊற்றியது. சிங்குக்குள் டொங் என்று பாத்திரம் விழுந்த சத்தத்தில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். கமலி நின்றுகொண்டு இருந்தாள். மிக்ஸர் சாப்பிட்டு முடித்த தட்டும் தேக்கரண்டியும் சிங்குக்குள் விழுந்த வேகமே அவளின் கோபத்தைச் சொல்ல, அவன் விழிகள் அவனே உணராமல் அவளில் நிலைத்தன.
“என்ன பார்வை?”
“இல்ல. ஒண்டும் இல்ல.”
“பயந்தவன் மாதிரி பம்முறது. ஆனா, கதைக்கிறது எல்லாம் தேவையில்லாத கதைகள் என்ன?”
அவன் முகம் கருத்துப்போனது. “சொறி… அது..” என்றபோதே அவனை நெருங்கி வந்தாள் அவள். பதட்டத்துடன் வேகமாக விலகினான் அவன். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் ஊற்றி வைத்திருந்த தேநீர் கோப்பைகளில் ஒன்றை எடுத்து ஒருவாய் பருகிப் பார்த்தாள்.
ஏதாவது சொல்வாளாக்கும் என்று தன்னை மீறிய ஆவலோடு பார்த்தான். அவளோ கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை விழிகளால் ஒரு சுழற்றுச் சுழற்றினாள். அப்படியே வந்து மூடியிருந்த பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தாள். பெட் ரூம் திறந்தே இருக்க விறாந்தையில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டாள்.
அப்போதும் தொடர்ந்த அவளின் மௌனத்தில் அவன் மனது ஏமாற்றத்தில் சுருண்டு போயிற்று! காட்டிக்கொள்ளாமல் அவனுக்கும் அரவிந்தனுக்குமான கோப்பைகளை கட்டு ஒன்றில் எடுத்து வைத்தான்.
சிறுவயதில் இருந்து தன்னுடைய வேலைகளைத் தானே செய்து பழகியதில் வீடு எப்போதுமே ஒழுங்கு குலையாமல் இருக்கும் என்பதில் அவனுக்குள் ஒரு நிம்மதி. இல்லையோ அதற்கும் அவனை எப்படியெல்லாம் நினைப்பாளோ யாருக்குத் தெரியும்?
அரவிந்தனுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அருந்த, அவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று ஆராய்வது தெரிந்தது.
‘என்னத்த பாக்கிறாள்? அப்பிடி என்ன கிடக்கு அங்க?’ அரவிந்தனோடு பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அவளிடமே இருந்தது.
இங்கே அரவிந்தனும் ஏன் வீட்டுக்கு வருவதில்லை, விளையாட வருவதில்லை, முன்னர்ப் போன்று தன்னோடு பழகுவதில்லை என்று கேள்விகளாகக் கேட்டுத் தாளித்துக்கொண்டிருந்தான். அவனைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.