• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே! - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய் ஹாய்,

என்னடா இது ஆட்டநாயகன் ஆரம்பிக்கிறன் எண்டு அறிவிப்பைப் போட்டுவிட்டு வேற கதை ஆரம்பிச்சு இருக்கிறாவே எண்டு எல்லாரும் என்னைப் பேசாதீங்க. என்னவோ ஆட்டநாயகனுக்கு முழுமையாக நான் தயாராகாத ஒரு உணர்வு. அறிவிப்பு போட்டுட்டனே எண்டு ஆரம்பிச்சு, தொடர்ந்து எழுத முடியாம இடையில நிப்பாட்டுறதுக்குப் பதிலா முழுமையா தயாராகிக்கொண்டு வந்து அதை ஆரம்பிக்கலாமே எண்டுதான் விட்டுட்டேன்.

சோ ப்ளீஸ் என்னைத் திட்டாதீங்க. ஆனா, கட்டாயம் அந்தக் கதை எழுதுவேன்.

இப்ப அழகென்ற சொல்லுக்கு அவளே கதை எழுதுறன் சரியா?

சாதாரண கதைதான். முதல் அத்தியாயமும் போடப்போறேன். அதனால் கதையைப் பற்றிக் கதையை வாசித்தே தெரிந்துகொள்ளுங்க.

மற்றது முக்கியமான விசயம். ஆரம்பத்துக்கு டெய்லி எபி எதிர்பாக்காதீங்க. என்னவோ புதுசா எழுத ஆரம்பிக்கிற ஒரு ஃபீல்ல ஒன்றுமே எழுத வருது இல்ல. ஆனா விரைவில் பிக்கப் ஆகிடுவேன். அதுக்குப் பிறகு வேகமா போடுறேன்.

நன்றி !


நட்புடன் நிதனிபிரபு

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அழகென்ற சொல்லுக்கு அவளே! - நிதனிபிரபு

அத்தியாயம் 1


ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தின் நல்லூர், எப்போதும்போல் அன்றும் நல்லூரானின் கோயில் மணியோசையில் சுறுசுறுப்பாக விழித்திருந்தது.

நகரின் சற்றே உட்புறமாகச் சகல வசதிகளுடனும் அமைந்திருந்த அந்த வீட்டின் மாடியறையில் சுறுசுறுப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தாள் இளவஞ்சி.

‘டி என் கார்மெண்ட்’ஸின் நிர்வாகி. இரவு கொழும்புக்கு வேறு புறப்பட்டாக வேண்டும். அதற்குள் இன்றைய வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, தங்க நிறத்தில் மெல்லிய போடர் கொண்ட வெங்காய நிற பிளேன் கைத்தறி கொட்டன் சேலைக்கு டிசைனர் பிளவுஸ் பொறுத்தமாக அணிந்துகொண்டாள்.

இடை தாண்டிய அடர் கூந்தல் அவளுக்கு. அதை ஒற்றைப் பின்னலாக்கிவிட்டாள். முகத்தில் அளவான அலங்காரம். கண்ணை உறுத்தாத மெலிய நகைகள் என்று தயாராகி, அறையை விட்டு வெளியே வந்தாள்.

அதற்காகவே காத்திருந்தது போன்று அழைத்தான் விசாகன். அவளின் வாகன ஓட்டி, பாதுகாவலன், நம்பிக்கையான நல்ல நண்பன் என்று எப்படியும் அவனை வரையறுக்கலாம்.

அவளின் அம்மம்மா தையல்நாயகிதான் ‘டி என் கார்மெண்ட்’சை நிறுவியவர். அவரின் பெயரைச் சுருக்கித்தான் ‘டி என் கார்மெண்ட்ஸ்’ என்று பெயர் சூட்டினார். அவரின் அன்னை, வீட்டிலிருந்து தைத்துக்கொடுத்துத்தான் தையல்நாயகி அம்மாவை வளர்த்தாராம்.

அப்படி, அன்னையின் தையலைப் பார்த்தே வளர்ந்த தையல்நாயகி அம்மாவிற்குத் தையற்கலை கைவந்த கலையாகிப்போனது. அன்னையைப் போலவே வீட்டிலிருந்து தைத்துக்கொடுக்க ஆரம்பித்தவரின் வளர்ச்சி ஒரு கார்மெண்ட்ஸாக வந்து நின்றிருந்தது.

அந்தளவில் ஆளுமையான பெண்மணி. தாத்தா குமாரசுவாமி மனைவி சொல் தட்டாத கணவர். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும்.

மகள் வாசவி இளம் வயதிலேயே இறந்துவிட, மகன் குணாளனானுக்கு அவரின் கார்மெண்ட்ஸை கொண்டு நடத்தும் திறன் இல்லை என்று ஆரம்பமே கணித்தாரா, இல்லை தனக்குப் பிறகு இளவஞ்சிக்குத்தான் இந்தத் தொழில் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என்பது அவர் அறிந்த இரகசியம் மட்டுமே.

அதற்கு ஏற்றாற்போல் கார்மெண்ட்ஸ்க்கு வந்துபோய் அன்னைக்கு உறுதுணையாக இருந்தாலும் தனித்தியங்கும் வல்லமை இல்லாதவராகவே இருந்தார் குணாளன்.

அன்னை சொல்கிறவற்றை மட்டுமே செய்தார். அதனாலேயே படித்துப் பேராசிரியராகிவிட்ட குணாளனை அவர் வழியிலேயே விட்டுவிட்டார் தையல்நாயகி.

குணாளனின் மூத்த பெண்தான் இளவஞ்சி. தையல்நாயகியின் செல்லப் பேத்தி. தன் கைகளுக்குள்ளேயே வைத்து வளர்த்தவர் சின்ன வயதிலிருந்தே அவளை கார்மெண்ட்ஸ்க்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்திருந்தார்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று அவள் அறியாமலேயே அவளுக்கு நிறைய விடயங்களைப் புகுத்தியவரும் அவரே.

அவளுக்கு நினைவு தெரிந்து அவளின் பதினாறாவது வயதிலேயே சின்ன சின்னப் பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து, தொழிலின் நுட்பங்களை விளக்கி, தொழிலாளர்களைக் கையாளும் விதங்களைப் பழக்கி என்று அவளை எதிர்காலத்த்தில் தேர்ந்த ஒரு நிர்வாகியாக மாற்றுவதற்கான அத்தனை வேலைகளையும் தொடங்கியிருந்தார்.

இளம் வயதில் விடுமுறை நாள்களில் கூட நண்பிகளோடு சுற்ற விடுகிறார் இல்லையே என்று சிணுங்கினாலும், பதினெட்டுப் பத்தொன்பது வயதிலேயே அந்தத் தொழிலின் சுவையும், தையல்நாயகியின் ஆளுமையும் அவளையும் பற்றிக்கொண்டன.

அவளின் இருபத்தி ஐந்தாவது வயதில் இறைபதம் அடைந்திருந்தார் தையல்நாயகி. அவள் வாழ்வில் நடந்த மிகப்பெரிய இழப்பு அது. அவருக்கு இயலாமல் போன காலத்திலேயே அவளின் பாதுகாப்பிற்கு என்று அவரால் பணியில் அமர்த்தப்பட்டவன்தான் விசாகன்.

இதற்காகவே இருக்கும் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் முறையான பயிற்சிகள் பெற்ற, அனுபவம் மிக்க பாதுகாவலன்.

காலையில் வீட்டை விட்டுப் புறப்படுகிறவளை அழைத்துக்கொண்டு போகிறவன் அவள் திரும்பவும் அந்த வீட்டிற்குள் வந்து சேர்கிற வரைக்கும் பாதுகாப்பாகவும் வாகன ஓட்டியாகவும் இருப்பான்.

இன்று இளவஞ்சி குணாளனுக்கு இருபத்தியெட்டு வயது. ஆறு வருடங்களுக்கும் மேலாக அவளோடு இருக்கிறான் விசாகன்.

அவள் படியிறங்கி முடிக்கையில், “குட் மோர்னிங் மேம்!” என்றபடி வீட்டிற்குள் உள்ளிட்டான். ஒற்றைத் தலையசைப்பில் அதை ஏற்றுக்கொண்டுவிட்டு உணவு மேசையில் சென்று அமர்ந்தாள்.

அவள் அன்னை ஜெயந்தி, விசாகனுக்கும் சேர்த்தே உணவைப் பரிமாற வர, “இல்லை அன்ட்ரி. எனக்கு டீ போதும். மேம்க்கு குடுங்க!” என்று தடுத்தான் விசாகன்.

அவன் எப்போதும் அப்படித்தான் என்பதில் இளவஞ்சி அதைப் பற்றி மேல பேசவில்லை. ஜெயந்தியும் பெண்ணுக்கு உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு அவனுக்குப் பால் தேநீரைக் கொடுத்தார்.

“சுவாதியும் சுதாகரும் எங்கயம்மா?” தங்கை தம்பியரைப் பற்றி விசாரித்தபடியே காலை உணவை உண்ண ஆரம்பித்தாள் இளவஞ்சி.

“சுதாகர் டியூஷன் போய்ட்டான். சுவாதி இண்டைக்கு ஃபிரெண்ட்ஸோட வெளில போகப்போறாளாம். கார்மெண்ட்ஸுக்கு வரேல்லையாம் எண்டு சொன்னவள்.” மகள் கோபப்படப்போகிறாள் என்று தெரிந்துமே சின்ன மகளின் ஆசை அது என்பதில் சொன்னார் ஜெயந்தி.

அவரிடம் ஒன்றும் சொல்லாமல் சுவாதியின் அறையை நோக்கி, “சுவாதி!” என்று ஒரு குரல் கொடுத்தாள் இளவஞ்சி.

“அக்கா!” என்று அடுத்த நொடியே வந்து அவள் முன்னால் நின்றாள் சுவாதி.

“உனக்கு எத்தின வயசு? இன்னும் சின்ன பிள்ளை மாதிரி அம்மாவ வச்சுக் கதைப்பியா? முதல் உன்ர பிரச்சினையை நீ பாக்கப் பழகு!” என்று அதட்டவும் அவள் முகம் சுருங்கிப் போயிற்று.

“எங்க போகப்போறாய்?”

“சும்மா ஃபிரண்ட்ஸோட.”

“அப்ப முக்கியமான அலுவல் ஒண்டும் இல்ல.”

“இல்ல!” என்றவளை ஒரு பார்வை தமக்கை பார்க்கவும் உள்ளே நடுங்கியது அவளுக்கு.

“எங்க போறதா இருந்தாலும் பின்னேரம் போ. ரெண்டு மணி வரைக்கும் கார்மெண்ட்ஸ்ல நீ நிக்கோணும். இண்டைக்கு விசாகணும் ஹாஃப் டேதான். அதால போ, போய் வெளிக்கிடு!” என்று அதட்டி அனுப்பினாள்.

தமக்கை அறியாமல் அன்னையை முறைத்துவிட்டுப் போனாள் சுவாதி.

அவள் ஒரு முழுமையான ஈராயிரக்குழவிக் குழந்தை. 24 வயது. ஃபேஷன் டிசைனிங் முடித்திருந்தாலும் அதில் ஆர்வமும் இல்லை, ஈடுபாடும் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் செழிப்பான வீட்டுப் பெண்ணாக வளர்ந்து, சோம்பி இருப்பதிலும் ஊர் சுற்றலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவளுக்கு கூடப்பிறந்த தமக்கை ஹிட்லரின் பெண் வடிவமாகவே தெரிந்தாள்.

கார்மெண்ட்ஸின் நிர்வாகி அவள் என்பதும், வீட்டின் தலைவராகத் தந்தை குணாளன் இருந்தாலுமே வீட்டு நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துகிறவளாக அவள் இருப்பதும் பிடிப்பதேயில்லை. அவள் இல்லாத பொழுதுகளில் அன்னையிடம் தமக்கையைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அதுவே தமக்கையின் முன்னே பேச்சும் வராது, மூச்சும் வராது.

இப்போதும் விசாகனின் முன்னே தமக்கை கண்டித்தது பெரும் எரிச்சலைக் கொடுக்க, அவளைத் திட்டித் தீர்த்தபடியே தயாராக ஆரம்பித்தாள்.

உணவை முடித்துக்கொண்டு நேராகத் தந்தையைச் சென்று பார்த்தாள் இளவஞ்சி.

அவருக்கு நரம்புத்தளர்ச்சி. அவருக்கு இருந்த மது அருந்தும் பழக்கம் காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் சொல்லியிருந்தார்கள். இரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரித்து, அது நீரிழிவு நோயை உண்டாக்கி, நரம்புத்தளர்ச்சியாக வந்து நின்றிருந்தது.

திடகாத்திரமான தேகம் உடைந்து, எடை குறைந்து, பார்வை இலேசாக மங்கி என்று முற்றிலுமாக மாறிப்போயிருந்தார் குணாளன்.

சகல வசதிகளுடனும் கூடிய விசாலமான அறைதான் அவருக்கும் ஜெயந்திக்குமானது. அவருக்கென்றே நியமிக்கப்பட்டிருந்த பாலனின் உதவியோடு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, தினமும் இந்த நேரத்தில் தன்னைப் பார்க்க வரும் மகளுக்காக அவருமே தயாராகத்தான் இருந்தார்.

இவளைக் கண்டதும் முகம் பூவாக மலர, “வாம்மா!” என்று அழைத்து, அவள் கரம் பற்றித் தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.

“சாப்பிட்டீங்களா அப்பா? எல்லாம் ஓகேதானே? ஏதாவது வேணுமா?” அன்னையின் கனிவுடன் தளர்ந்துபோயிருந்த அவர் கரத்தை வருடிக்கொடுத்தபடி வினவினாள்.

“எனக்கு என்னம்மா குறை? அம்மாக்குச் சமனா என்ர மகள் என்னைப் பாக்கிறது காணாதா? நான் நல்லாத்தான் இருக்கிறன். நீ சொல்லு. தொழில் எப்பிடிப் போகுது?” இலேசான திணறல் இருந்தாலும் நன்றாகவே பேசினார் குணாளன்.

“தொழிலுக்கு என்னப்பா? எப்பவும் போல நல்லாத்தான் போகுது.” என்று முறுவலித்தாள் அவள்.

“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?”
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

“சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதைக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற்குமேல் அதைப் பற்றிப் பேச அவரை அனுமதிக்கவில்லை.

“சரியப்பா எனக்கு நேரமாகுது.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

அவர் கேள்விப்பட்டது போன்று கடந்த சில வருடங்களாகத் தொழிலில் நெருக்கடித்தான். பல சறுக்கல்கள். நடக்கிற அத்தனை பிரச்சனைகளும் அவளின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சவால் விட்டுக்கொண்டேயிருந்தன.

முக்கியமாக அவள் கை தட்டிப் போகிற அத்தனை வாய்ப்புகளும் எதிராளியின் கைக்குப் போய்க்கொண்டிருந்தன.

இலங்கை முழுவதும் பல கிளைகள் பரப்பிப் படர்ந்திருந்த ஆடையாகங்கள் பல இத்தனை காலமும் அவளின் வாடிக்கையாளராக இருந்தவர்கள். இப்போது அவளின் எதிரியின் கைவசம் போய்க்கொண்டிருந்தனர். அல்லது, இவர்களிடம் கொடுக்கும் ஆர்டரின் அளவு குறைந்திருந்தது.

அம்மா ஜெயந்தி முழுமையான இல்லத்தரசி. அவரின் ஒரே கவலை இவள் இருபத்தி எட்டு வயதாகியும் திருமணம் செய்யாமல் தொழில் தொழில் என்று இருக்கிறாளே என்பதுதான். தந்தை மனத்தளவிலும் உடலளவிலும் நொடிந்துபோயிருப்பவர்.

அவர்களிடம் தொழில்பற்றிய எந்தக் கெட்டதுகளையும் அவள் கொண்டுபோவதில்லை. முதலில் அவளுக்கு அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கத் தெரியாது.

அவளுக்கு உதவிக்கு வரும் சுவாதிக்குக் கூட இதைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிவதற்கு பார்க்கும் வேலையில் ஒரு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும். தமக்கை என்ன செய்கிறாள் என்கிற கவனிப்பு இருக்க வேண்டும்.

இது படிப்பை முடித்துவிட்டேன், அக்கா வரச் சொல்கிறாள் என்று வருகிறவன் இவள் சொல்கிறவற்றை மட்டும் கடமைக்கு முடித்துவிட்டுப் போய்விடுவாள்.

அதனால் அத்தனை நெருக்கடிகளையும் இளவஞ்சி தனியொருத்தியாகத்தான் சமாளித்துக்கொண்டிருந்தாள். குறைந்துபோயிருக்கும் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். அதற்கான ஒரு வழியாகத்தான் இன்று இரவு கொழும்பு போகிறாள்.

தையல்நாயகி அம்மாவின் காலத்திலிருந்தே பழக்கமானவர்தான் முத்துமாணிக்கம். அங்கே கொழும்பில் அவரும் கார்மெண்ட்ஸ்தான் வைத்திருக்கிறார். பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதில் மனைவியோடு தானும் அங்கே சென்றுவிட முடிவெடுத்தவர், கார்மெண்ட்ஸை விற்கலாமா என்று யோசிப்பதை அவளிடம்தான் முதன்முதலில் சொன்னார்.

அவளுக்கு அத்தனை ஆனந்தம். அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்னிடம்தான் முதன்முதலில் சொல்ல வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவரும் முடிவானதும் அவளிடமே சொல்ல, விலை பேசி முடிக்க வருவதாகச் சொல்லியிருந்தாள். அவரும் அவளின் முடிவை அறிந்தபிறகுதான் முறையாக வெளியே அறிவிப்புப் போடுவதாகச் சொல்லியிருந்ததில் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாள் இளவஞ்சி.

அந்தக் காலத்திலேயே ஒரு பெண்ணாகத் தனித்தியங்கி சாதித்த பெண்மணியான தையல்நாயகி மீது அலாதியான மரியாதை கொண்டவர் முத்துமாணிக்கம். அவரைப் போலவே அவரின் பேத்தியும் என்பதில் இவள் மீது பிரத்தியேகமான வாஞ்சை கொண்டவர்.

அவளுக்கும் நியாயமில்லாத விலை கேட்கும் எண்ணமில்லை. அவரும் அதிகவிலை சொல்லப்போவதில்லை என்கையில் இது கைகூடும் என்கிற நம்பிக்கையில் இருந்தாள் இளவஞ்சி.

அன்று மதியமே விசாகனை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னவள் திட்டமிட்டது போலவே இரவு பத்துமணிக்கு அவளின் பிஏ ஆனந்தி சகிதம் விசாகனோடு கொழும்புக்குப் புறப்பட்டிருந்தாள்.

எப்போதும் கொழும்பு வந்தால் தங்கும் நம்பிக்கையான உயர்ரக ஹோட்டலில் தங்கி, குட்டியாக இளைப்பாறி, புத்துணர்ச்சியோடு தயாராகி முத்துமாணிக்கம் வீட்டிற்குச் சென்றவளை, வாசலுக்கே வந்து வரவேற்றனர் முத்துமாணிக்கமும் அவர் துணைவியார் இராசம்மாவும்.

“அப்பிடியே தையல்நாயகியப் பாத்த மாதிரியே இருக்கிறீங்கம்மா. அதே கம்பீரம். அதே நிமிர்வு. அதே தைரியம்.” அவளைப் பார்த்த கணம் விழிகள் இலேசாகப் பனித்துவிட வாஞ்சையுடன் சொன்னார் மனிதர்.

தையல்நாயகி அம்மாவை அறிந்த பலரும் இதையே சொல்லக் கேட்டிருந்தவள் அழகான முறுவலோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

“நீங்க வாறீங்க எண்டு சொன்னதில இருந்து இதே தானம்மா கதை. இவர் உங்கட அப்பம்மாவை சைட் அடிச்சாரோ எண்டு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றபடி அவளுக்குக் காலை உணவைப் பரிமாறினார் இராசம்மா.

இருவருமே அறுபத்தி ஐந்திற்கும் எழுபதற்கும் இடைப்பட்டவர்கள். அப்படியிருக்க அவர்களின் பேச்சு மூட்டிய சிரிப்புடன், “அப்பிடியா அங்கிள்?” என்றாள் இளவஞ்சி.

“நான் ஏன் பொய் சொல்லப்போறன்? நான் ப்ரப்போஸ் பண்ண முதல் தையல்நாயகி கட்டிட்டா. இல்லாட்டி அவவத்தான் கட்டியிருப்பன். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா இந்தக் கொடுமைக்காரக் கிழவிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருக்கும். எங்க?” என்று அவர் பெருமூச்சு விட்டார்.

முகத்தை வெட்டிவிட்டு, “அவாவை மாதிரி கெட்டிக்காரி எல்லாம் இவரைத் திரும்பிப் பாத்திருப்பாவோ எண்டு கேளுங்கோம்மா. என்னவோ நானா இருக்கப்போய் தெரியாத்தனமா கட்டிட்டனே எண்டு வச்சு வாழுறன்.” என்று இவளை நடுவில் வைத்து அவர்கள் செல்லச் சண்டை இட்டுக்கொள்ள, அப்பம்மாவும் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருகணம் கலங்கிப்போனாள் இளவஞ்சி.

ஆனாலும் சமாளித்துக்கொண்டு உணவை முடித்தாள்.

அவர் கார்மெண்ட்ஸ்க்கு சொன்ன தொகை சற்று அதிகமாக இருக்க, “கூடவா இருக்கே அங்கிள்.” என்றாள் மனத்தை மறைக்காமல்.

“சக்திவேல் கார்மெண்ட்ஸ்சின்ர காதுக்குப் போனா இதவிடக் கூடத் தந்து வாங்குவினம்.” என்று புன்னகைத்தார் அவர்.

மறைமுக மிரட்டல். கை தேர்ந்த வியாபாரி இல்லையா? அவளும் சளைத்தவளா என்ன?

“அது நான் போட்டிக்கு நிக்கிறன் எண்டு தெரிஞ்சாத்தான் அங்கிள். எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னா நான் கேக்கிறதில பாதிதான் கேப்பினம்.” என்று முறுவலித்தாள் அவள்.

அதிலிருக்கும் உண்மையில், “கெட்டிக்காரிதான்.” என்று சொல்லிச் சிரித்தார் முத்துமாணிக்கம்.

“ஆனாம்மா பாரம்பரியமான கார்மெண்ட்ஸ் எங்கட. இதால காலத்துக்கும் நீங்க லாபம் மட்டும்தான் பாப்பீங்க. அப்பிடியிருக்க நான் சொல்லுற தொகையக் குடுக்கிறதால உங்களுக்கு நட்டம் வரப்போறேல்ல.” என்று அவரும் விடுவதாக இல்லை.

“உண்மைதான் அங்கிள். ஆனா நீங்க சொன்ன சக்திவேல் கார்மெண்ட்ஸ் இத வாங்கினா உங்கட பெயர் இருக்குமா எண்டு யோசிங்க. ஆனா நான் உங்கட பெயரை மாத்த மாட்டன். சோ உங்கட பெயரும் அதுக்குண்டான மரியாதையும் காலத்துக்கும் இருக்கும்.”

அந்தப் பெயர் அவருக்கு முக்கியம்தான். தையல்நாயகி கூட அவர் காலத்தில் அவர்களின் வீட்டிலேயே தொழிலை ஆரம்பித்து அதைப் பெரிதாக்கியவர்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் அப்படியன்று. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று துணிமணிகளைக் கொண்டு வந்தும், நெசவு செய்தும் தொழில் செய்தவர்கள். அதனாலேயே அவருக்கு அவர் பெயர் நிலைத்திருப்பது முக்கியம்தான்.

“நல்லா யோசிங்க அங்கிள். உங்களிட்ட இருக்கிற மெஷின்ஸ் எல்லாம் பழசு. அது இன்னும் எத்தின நாளைக்கு உழைச்சுத் தரும் எண்டு தெரியாது. அதைவிட நான் புது மெஷின்ஸ்தான் போடுவன். நீங்க பழமை மாறாம அப்பிடியே வச்சிருக்கிறீங்க. எனக்கு அது செட்டாகாது. அதுக்கும் நான் காசு போடோணும். ஆனாலும், அறா விலைக்கு நான் கேக்கேல்லை. உங்களுக்கும் எனக்கும் நியாயமான விலைதான் இது.”

அவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தபோதிலும் தொழில் என்று வந்தபிறகு நேர்த்தியாகவும் தெளிவாகவும் பேசினாள் அவள்.

அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை அவரும் அறிவார். இதை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்ததில் இருந்தே அதன் மீதான கவனிப்பைக் குறைத்திருந்தார்தான்.

அதில், “எதுக்கும் பொறுங்கோம்மா. மகனாக்களோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு உள்ளே சென்றவர் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தபோது முகம் முழுக்கச் சிரிப்போடு வந்தார்.

“தம்பியாக்களுக்கும் ஓக்கேயாம். அப்ப அந்த விலைக்கே முடிப்பம்.” என்று அவர் சொன்னதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.

“உறுதியான முடிவுதானே அங்கிள்? நான் நம்பி இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே?”

“உறுதியான முடிவுதானம்மா. முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் இனி உங்களுக்குத்தான். தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.

நிறைய நாள்களுக்குப் பிறகு அவள் உள்ளம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, குடை, வாகனங்களை மூடப் பயன்படுத்தும் ரெட் என்று அதை வளர்த்து, அதில் ஒரு பிராண்ட் நிறுவ வேண்டும் என்பது அவளின் நெடுநாள் ஆசை.

இனி அது நிறைவேறிவிடும். தலைநகரில் இயங்கப்போகும் கார்மெண்ட்ஸ் அவளின் வளர்ச்சியைப் பலபடிகள் ஏற்றிவிடப் போகிறது. அவள் போகிற பக்கமெல்லாம் காலைப் பிடித்து இழுத்துவிடுகிறவர்களுக்கு என் உயரத்தைப் பார் என்று காட்ட வேண்டும்.

அப்போதே அதற்கான திட்டங்கள் அவள் உள்ளத்தில் கடகடவென்று உதயமாக ஆரம்பிக்க, ஐபாடை எடுத்துவைத்து அவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

ஆனால், அடுத்தநாள் காலையே அவளுக்கு அழைத்த முத்துமாணிக்கம் அவளிடம் மன்னைப்பைக் கேட்டுவிட்டு, அவள் கேட்ட தொகையை விடவும் அதிக தொகையில் சக்திவேல் கார்மெண்ட்ஸ் கேட்டதாகவும், பெயரையும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று சொன்னதாகவும், மகன்கள் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டதாகவும் சொல்ல அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி.

“அவேக்கு எப்பிடித் தெரியும் அங்கிள்? ஆர் கதச்சதாம்?”

“நிலன் கதச்சவனாம்.”

“ஓ!” என்றவளுக்கு மேலே பேசக்கூட முடியவில்லை. நீங்கள் தந்த வாக்கு என்னாயிற்று என்றுகூட அவள் கேட்கவில்லை.

எல்லாமே கைமீறிப் போனபிறகு எதைக் கேட்டு என்ன பலன்?

நிலன் பிரபாகரன்! கடந்த சில வருடங்களாக அவளின் சறுக்கல்கள் எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பவன்.



தொடரும்…

கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட மறந்துடாதீங்க மக்களே.
 
Last edited:

saras

New member
“சரியப்பா எனக்கு நேரமாகுது.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

அவர் கேள்விப்பட்டது போன்று கடந்த சில வருடங்களாக தொழிலில் நெருக்கடித்தான். பல சறுக்கல்கள். நடக்கிற அத்தனை பிரச்சனைகளும் அவளின் அனுபவத்திற்கும் திறமைக்கும் சவால் விட்டுக்கொண்டேயிருந்தன.

முக்கியமாக அவள் கை தட்டிப் போகிற அத்தனை வாய்ப்புகளும் எதிராளியின் கைக்குப் போய்க்கொண்டிருந்தன.

இலங்கை முழுவதும் பல கிளைகள் பரப்பிப் படர்ந்திருந்த ஆடையாகங்கள் பல இத்தனை காலமும் அவளின் வாடிக்கையாளராக இருந்தவர்கள். இப்போது அவளின் எதிரியின் கைவசம் போய்க்கொண்டிருந்தனர். அல்லது, இவர்களிடம் கொடுக்கும் ஆர்டரின் அளவு குறைந்திருந்தது.

அம்மா ஜெயந்தி முழுமையான இல்லத்தரசி. அவரின் ஒரே கவலை இவள் 28 வயதாகியும் திருமணம் செய்யாமல் தொழில் தொழில் என்று இருக்கிறாளே என்பதுதான். தந்தை மனத்தளவிலும் உடலளவிலும் நொடிந்துபோயிருப்பவர்.

அவர்களிடம் தொழில்பற்றிய எந்தக் கெட்டதுகளை அவள் கொண்டுபோவதில்லை. முதலில் அவளுக்கு அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கத் தெரியாது.

அவளுக்கு உதவிக்கு வரும் சுவாதிக்கு கூட இதைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிவதற்கு பார்க்கும் வேலையில் ஒரு ஆர்வமும் ஈடுபாடும் வேண்டும். தமக்கை என்ன செய்கிறாள் என்கிற கவனிப்பு இருக்க வேண்டும். இது படிப்பை முடித்துவிட்டேன், அக்கா வராகி சொல்கிறாள் என்று வருகிறவன் இவள் சொல்கிறவற்றை மட்டும் கடமைக்கு முடித்துவிட்டுப் போய்விடுவாள்.

அதனால் அத்தனை நெருக்கடிகளையும் இளவஞ்சி தனியொருத்தியாகத்தான் தாண்ட வேண்டும். குறைந்துபோயிருக்கும் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். அதற்கான ஒரு வழியாகத்தான் இன்று இரவு கொழும்பு போகிறாள்.

தையல்நாயகி அம்மாவின் காலத்திலிருந்தே பழக்கமானவர்தான் முத்துமாணிக்கம். அங்கே கொழும்பில் அவரும் கார்மெண்ட்ஸ்தான் வைத்திருக்கிறார். பிள்ளைகள் இருவரும் அவுஸ்திரேலியாவில் இருப்பதில் மனைவியோடு தானும் அங்கே சென்றுவிட முடிவெடுத்தவர், கார்மெண்ட்ஸை விற்கலாமா என்று யோசிப்பதை அவளிடம்தான் முதன்முதலில் சொன்னார்.

அவளுக்கு அத்தனை ஆனந்தம். அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்னிடம்தான் முதன்முதலில் சொல்ல வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவரும் முடிவானதும் அவளிடமே சொல்ல, விலை பேசி முடிக்க வருவதாகச் சொல்லியிருந்தாள். அவரும் அவளின் முடிவை அறிந்தபிறகுதான் முறையாக வெளியே அறிவிப்புப் போடுவதாகச் சொல்லியிருந்ததில் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாள் இளவஞ்சி.

அந்தக் காலத்திலேயே ஒரு பெண்ணாகத் தனித்தியங்கி சாதித்த பெண்மணியான தையல்நாயகி மீது அலாதியான மரியாதை கொண்டவர் முத்துமாணிக்கம். அவரைப் போலவே அவரின் பேத்தியும் என்பதில் இவள் மீது பிரத்தியேகமான வாஞ்சை கொண்டவர்.

அவளுக்கும் நியாயமில்லாத விலை கேட்கும் எண்ணமில்லை. அவரும் அதிகவிலை சொல்லப்போவதில்லை என்கையில் இது கைகூடும் என்கிற நம்பிக்கையில் இருந்தால் இளவஞ்சி.


அன்று மதியமே விசாகனை வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுக்கச் சொன்னவள் திட்டமிட்டது போலவே இரவு பத்துமணிக்கு அவளின் பிஏ ஆனந்தி சகிதம் விசாகனோடு கொழும்புக்குப் புறப்பட்டிருந்தாள்.

எப்போதும் கொழும்பு வந்தால் தங்கும் நம்பிக்கையான உயர்ரக ஹோட்டலில் தங்கி, குட்டியாக இளைப்பாறி, புத்துணர்ச்சியோடு தயாராகி முத்துமாணிக்கம் வீட்டிற்குச் சென்றவளை, வாசலுக்கே வந்து வரவேற்றனர் முத்துமாணிக்கமும் அவர் துணைவியார் இராசம்மாவும்.

“அப்பிடியே தையல்நாயகியப் பாத்தா மாதிரியே இருக்கிறீங்கம்மா. அதே கம்பீரம். அதே நிமிர்வு. அதே தைரியம்.” அவளை பார்த்த கணம் விழிகள் இலேசாகப் பனித்துவிட வாஞ்சையுடன் சொன்னார் மனிதர்.

தையல்நாயகி அம்மாவை அறிந்த பலரும் இதையே சொல்லக் கேட்டிருந்தவள் அழகான முறுவலோடு அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டாள்.

“நீங்க வாறீங்க எண்டு சொன்னதில இருந்து இதே தானம்மா கதை. இவர் உங்கட அப்பம்மாவை சைட் அடிச்சாரோ எண்டு எனக்குச் சந்தேகமா இருக்கு.” என்றபடி அவளுக்குக் காலை உணவைப் பரிமாறினார் இராசம்மா.

இருவருமே 65க்கும் இழுப்பதற்கும் இடைப்பட்டவர்கள். அப்படியிருக்க அவர்களின் பேச்சு மூட்டிய சிரிப்புடன், “அப்பிடியா அங்கிள்?” என்றாள் இளவஞ்சி.

“நான் ஏன் பொய் சொல்லப்போறன்? நான் ப்ரப்போஸ் பண்ண முதல் தையல்நாயகி கட்டிட்டா. இல்லாட்டி அவவத்தான் கட்டியிருப்பன். அப்பிடி ஒண்டு நடந்திருந்தா இந்தக் கொடுமைக்காரக் கிழவிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருக்கும். எங்க?” என்று அவர் பெருமூச்சு விட்டார்.

முகத்தை வெட்டிவிட்டு, “அவாவை மாதிரி கெட்டிக்காரி எல்லாம் இவரைத் திரும்பிப் பாத்திருப்பாவோ எண்டு கேளுங்கோம்மா. என்னவோ நானா இருக்கப்போய் தெரியாத்தனமா கட்டிட்டனே எண்டு வச்சு வாழுறன்.” என்று இவளை நடுவில் வைத்து அவர்கள் செல்லச் சண்டை இட்டுக்கொள்ள, அப்பம்மாவும் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருகணம் கலங்கிப்போனாள் இளவஞ்சி.

ஆனாலும் சமாளித்துக்கொண்டு உணவை முடித்தாள்.

அவர் கார்மெண்ட்ஸ்க்கு சொன்ன தொகை சற்று அதிகமாக இருக்க, “கூடவா இருக்கே அங்கிள்.” என்றாள் மனத்தை மறைக்காமல்.

“சக்திவேல் கார்மெண்ட்ஸ்சின்ர காத்துக்குப் போனா இதவிடக் கூடத் தந்து வாங்குவினம்.” என்றார் அவர்.

மறைமுக மிரட்டல். கை தேர்ந்த வியாபாரி இல்லையா? அவளும் சளைத்தவளா என்ன?

“அது நான் போட்டிக்கு நிக்கிறன் எண்டு தெரிஞ்சாத்தான் அங்கிள். எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னா நான் கேக்கிறதில பாதிதான் கேப்பினம்.” என்று முறுவலித்தாள் அவள்.

அதிலிருக்கும் உண்மையில், “கெட்டிக்காரிதான்.” என்று சொல்லிச் சிரித்தார் முத்துமாணிக்கம்.

“ஆனாம்மா பாரம்பரியமான கார்மெண்ட்ஸ் எங்கட. இதால காலத்துக்கும் நீங்க லாபம் மட்டும்தான் பாப்பீங்க. அப்பிடியிருக்க நான் சொல்லுற தொகையக் குடுக்கிறதால உங்களுக்கு நாட்டம் வரப்போறேல்ல. காலம் முழுக்க வரப்போற அந்த லாபத்தோட பாக்கேக்க நான் சொல்லுற தொகை ஒன்றுமே இல்லை.” என்று அவரும் விடுவதாக இல்லை.
“உண்மைதான் அங்கிள். ஆனா நீங்க சொன்ன சக்திவேல் கார்மெண்ட்ஸ் இத வாங்கினா உங்கட பெயர் இருக்குமா எண்டு யோசிங்க. இதுவும் சக்திவேல் கார்மெண்ட்ஸா மாறிடும். ஆனா நான் உங்கட பெயரை மாத்த மாட்டன். சோ உங்கட பெயரும் அதுக்குண்டான மரியாதையும் காலத்துக்கும் இருக்கும். அதை யோசிங்க.”

அந்தப் பெயர் அவருக்கு முக்கியம்தான். தையல்நாயகி கூட அவர் காலத்தில் அவர்களின் வீட்டிலேயே தொழிலை ஆரம்பித்து அதைப் பெரிதாக்கியவர்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் அப்படியன்று. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று துணிமணிகளைக் கொண்டு வந்தும், நெசவு செய்தும் தொழில் செய்தவர்கள். அதனாலேயே அவருக்கு அவர் பெயர் நிலைத்திருப்பது முக்கியம்தான்.

“நல்லா யோசிங்க அங்கிள். உங்களிட்ட இருக்கிற மெஷின்ஸ் எல்லாம் பழசு. அது இன்னும் எத்தின நாளைக்கு உழைச்சுத் தரும் எண்டு தெரியாது. அதைவிட நான் புது மெஷின்ஸ்தான் போடுவன். நீங்க பழமை மாறாம அப்பிடியே வச்சிருக்கிறீங்க. எனக்கு அது செட்டாகாது. அதுக்கும் நான் காசு போடோணும். ஆனாலும், அறா விலைக்கு நான் கேக்கேல்லை. உங்களுக்கும் எனக்கும் நியாயமான விலைதான் இது.”

அவர் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தபோதிலும் தொழில் என்று வந்தபிறகு நேர்த்தியாகவும் தெளிவாகவும் பேசினாள் அவள்.

அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை அவரும் அறிவார். இதை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்ததில் இருந்தே அதன் மீதான கவனிப்பைக் குறைத்திருந்தார்தான்.

அதில், “எதுக்கும் பொறுங்கோம்மா. மகனாக்களோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றுவிட்டு உள்ளே சென்றவர் அரை மணி நேரத்தில் திரும்பி வந்தபோது முகம் முழுக்கச் சிரிப்போடு வந்தார்.

“தம்பியாக்களுக்கும் ஓக்கேயாம். அப்ப அந்த விலையையே முடிப்பம்.” என்று அவர் சொன்னதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.

“உறுதியான முடிவுதானே அங்கிள்? நான் நம்பி இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே?”

“உறுதியான முடிவுதானம்மா. முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸ் இனி உங்களுக்குத்தான். தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.

நிறைய நாள்களுக்குப் பிறகு அவள் உள்ளம் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ரெயின்கோட் தயாரிப்பில் இறங்கி, குடை, வாகனங்களை மூடப் பயன்படுத்தும் ரெட் என்று அதை வளர்த்து, அதில் ஒரு பிராண்ட் நிறுவ வேண்டும் என்பது அவளின் நெடுநாள் ஆசை.

இனி அது நிறைவேறிவிடும். தலைநகரில் இயங்கப்போகும் கார்மெண்ட்ஸ் அவளின் வளர்ச்சியைப் பலபடிகள் ஏற்றிவிடப் போகிறது. அவள் போகிற பக்கமெல்லாம் காலைப் பிடித்து இழுத்துவிடுகிறவர்களுக்கு என் உயரத்தைப் பார் என்று காட்ட வேண்டும்.

அப்போதே அதற்கான திட்டங்கள் அவள் உள்ளத்தில் கடகடவென்று உதயமாக ஆரம்பிக்க, ஐபாடை எடுத்துவைத்து அவற்றைக் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

ஆனால், அடுத்தநாள் காலையே அவளுக்கு அழைத்த முத்துமாணிக்கம் அவளிடம் மன்னைப்பைக் கேட்டுவிட்டு, அவள் கேட்ட தொகையை விடவும் அதிக தொகையில் சக்திவேல் கார்மெண்ட்ஸ் கேட்டதாகவும், மகன்கள் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டதாகவும் சொல்ல அப்படியே அமர்ந்துவிட்டாள் இளவஞ்சி.

“அவேக்கு எப்பிடித் தெரியும் அங்கிள்? ஆர் கதைச்சதாம்?”

“நிலன் கதைச்சவனாம்.”

“ஓ!” என்றவளுக்கு மேலே பேசக்கூட முடியவில்லை. நீங்கள் சொன்ன வார்த்தை என்னாயிற்று என்றுகூட அவள் கேட்கவில்லை.

எல்லாமே கைமீறிப் போனபிறகு எதைக் கேட்டு என்ன பலன்?

நிலன் பிரபாகரன்! கடந்த சில வருடங்களாக அவளின் சறுக்கல்கள் எல்லாவற்றுக்கும் காரணமாயிருப்பவன்.

தொடரும்…


கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட மறந்துடாதீங்க மக்களே.
Good start
 
Top Bottom