அத்தியாயம் 3
ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்படி?
சுவாதிக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படியிருக்க வருகிற வரன்களை எல்லாம் இவள் தட்டிக்கொண்டேயிருந்தால் எப்படி?
இவளுக்குத் திருமணம் செய்கிற எண்ணமே இல்லையோ, தொழிலே போதும் என்று இருந்துவிடுவாளோ என்கிற பயம் இப்போதெல்லாம் அவரைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாகத் திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
அவளுக்குத் தொழில் முக்கியம். அவளுக்கடுத்து அதைக் கவனிக்க யாருமில்லை. சுதாகரும் தந்தையைப் போல் ஒரு பேராசிரியனாக வரப்போகிறேன் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டான். சுவாதியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எப்போதடா தமக்கையிடமிருந்து தப்பி ஓடலாம் என்று காத்திருக்கிறாள்.
ஆக, அவளுக்குத் துணையாக வருகிறவன் அவள் சூழ்நிலையை அறிந்தவனாக, அவளைப் புரிந்தவனாக, நாளைக்குக் குழந்தைகள் என்று வந்தபிறகும் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்காதவனாக இருக்க வேண்டும்.
திருமணம் என்கிற ஒன்றினுள் சென்றபிறகு சண்டை சச்சரவு, பிரிவு, புரிந்துணர்வு இல்லாமை, நிம்மதியற்ற வாழ்க்கை என்று இருப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
தொழிலில் இருக்கிற பிரச்சனைகளும் பரபரப்பும் அவளுக்குப் போதுமானவை. இல்லற வாழ்க்கை இதமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டுமென்பது அவளின் அவா.
அதற்கு ஏற்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்.
வரன்கள் வந்துபோகாமல் இல்லை. தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அவளுக்கு என்ன குறை?
என்ன, வருகிறவர்களோடு இரண்டு முறை பேசினாலே அவளுக்குச் சலிப்புத் தட்டிவிடும்.
“அவசரமா ஒரு கலியாணத்தச் செய்யோணும் விசாகன்.” தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று சொன்னாள் இளவஞ்சி.
“மேம்!” அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் அவன்.
“அம்மா அப்பா கவலைப்படுறதும் நியாயம்தான். எனக்கு அடுத்ததா சுவாதி இருக்கிறாள். ஆனா எனக்குத் தோள் குடுப்பான் எண்டு நினைக்கிற மாதிரி ஒருத்தனும் மாட்டுறான் இல்ல. என்ன செய்யலாம் விசாகன்?” அவன் காட்டிய அதிர்வில் சிறு முறுவல் பூத்தாலும் வினவினாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டானே தவிர அவன் எதுவும் சொன்னான் இல்லை.
அவன் எப்போதுமே அப்படித்தான். தன் எல்லையிலேயே நின்றுகொள்வான். அதனாலேயே அவளுக்கு அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் உண்டு. நண்பனாகப் பாவித்து இலகுவாகப் பேசுவதும் அவனோடுதான்.
அதில், “கலியாணம் நடக்காம இப்பிடியே இருந்திடுவனோ விசாகன்?” என்றாள் கேள்வியாக.
அதற்கு மட்டும், “அப்பிடி எப்பிடி மேம் நடக்காமப் போகும்? வரன் வந்துகொண்டுதானே இருக்கு. வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது நீங்க.” என்று பதில் சொன்னான் அவன்.
“அப்ப என்னிலதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” மெல்லிய அதட்டல் போன்று அவள் வினவவும், “மேம்?” என்று விழித்தான் அவன்.
“சும்மா ஃபன்னுக்கு விசாகன்.” என்று முறுவலித்தாள்.
அதற்குள் தொழிற்சாலை வந்திருக்க இறங்கி அலுவலகத்திற்கு நடந்தாள்.
*****
அன்று, மூன்றடுக்கு மாடியில் மிகப் பிரமாண்டமாகச் சக்திவேல் ஆடையகம் வவுனியாவில் திறப்புவிழா காணவிருந்தது. இவ்வளவு காலமும் மொத்த விற்பனையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது தமக்கான ஆடையகத்தையும் ஆரம்பிக்கிறார்கள்.
அதைப் பற்றி முதன்முறை அறிந்தபோது இலேசாகச் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. காரணம், இது அவள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என்று திறந்து, இணைய வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தாள்.
அது மாத்திரமல்லாமல், வீட்டிலிருந்தே இணையம் வாயிலாக விற்பனை செய்கிற சிறு தொழிலாளர்களுக்கும் சின்ன சின்ன அளவில் கொடுக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன.
அவளின் இந்த வளர்ச்சிதான் அவர்களின் கண்களை உறுத்துவதே. இப்போது அவள் பாதையில் அவர்களும். அதற்கு அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.
அந்த வீட்டின் யாரையும் பார்க்கவே பிடிக்காத அளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிக்கிடந்தாலும் அதையெல்லாம் நேரடியாகக் காட்டிவிட முடியாது. தொழில் தந்திரங்களில் இதுவும் ஒன்று. சிரித்த முகமாகப் போய், வாழ்த்தி, அவர்களின் விருந்தில் கலந்துகொண்டுவிட்டு வர வேண்டும்.
கடுஞ்சிகப்பு, டார்க் மெரூன், கடும் பச்சை நிறங்கள் கலந்த, கை இல்லாத, முதுகை மூடிய கலம்காரி பிளவுசின் முதுகுப் பக்கத்தில் கிருஷ்ண-அர்ஜுன உபதேசம் மிகுந்த கலை நேர்த்தியோடு பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தது.
அந்த பிளவுசை இன்னுமே தூக்கிக் காட்டுவது போன்று டார்க் மரூனில் சின்ன போடர் கொண்ட, மென் பச்சை பிளேன் கொட்டன் சேலை அணிந்துகொண்டாள்.
முதுகிலிருந்த வேலைப்பாடு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கிக்கொண்டாள்.
கழுத்தில் அம்மன் பெண்டண்ட் கொண்ட டெரகோட்டா வகை ஆரம். பொறுத்தமான காதணிகளையும் மாட்டிக்கொண்டு தயாராகி இறங்கி வந்தவளைக் கண்டு, ஜெயந்தி குணாளன் இருவராலும் பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.
இந்தப் பெண் ஒரு திருமணத்தைச் செய்துகொள்ளக் கூடாதா என்கிற ஏக்கம் தானாக உண்டாயிற்று.
“அந்தத் தம்பி ஏதும் கதைச்சா முகத்தில அடிச்ச மாதிரிப் பதில் சொல்லாதயம்மா. சாதாரணமாக் கதச்சுப்போட்டு வாங்கோ.” தப்பித்தவறி அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலும் இவள் நன்றாகப் பேச வேண்டுமே என்றெண்ணித் தயவாய்ச் சொன்னார் ஜெயந்தி.
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை.
விசேசத்துக்குப் புறப்படுகிற மகளிடம் எதையும் பேசிக் கோபப்படுத்த விரும்பாத குணாளன், “விசாகன் கவனமப்பு. உங்கள நம்பித்தான் அனுப்புறன். கவனமாக் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அங்கே திறப்புவிழா நடக்கும் நேரத்திற்குச் சரியாகச் சென்று இறங்கினாள் இளவஞ்சி.
முழுமையான கறுப்பில் இருந்த விசாகன் அவளுக்கு இரண்டடி பின்னால் பாதுகாப்பாக நடந்துவர, தனியொருத்தியாகத் தயக்கங்கள் எதுவுமற்று படிகளில் ஏறி வந்தவளின் தோரணையில் அங்கிருந்தவர்கள் பார்வை தவிர்க்கவே முடியாமல் இவள் மீது படிந்தது.
தன் குடும்பத்தினரோடு நின்றிருந்த நிலன் வேகமாக வந்து, “சரியா அந்த நேரத்துக்குத்தான் வருவியா?” என்று அவளைச் சத்தமில்லாமல் அதட்டினான்.
அதைக் கண்ட சக்திவேலரின் முகம் கடுத்துச் சிவந்தது. வயோதிபம் காரணமாகப் பேரன் அளவுக்கு அவரால் அவசரமாக இயங்க முடியவில்லை. இல்லையானால் எட்டிப் பிடித்து அவனை நிறுத்தியிருப்பார்.
அங்கே கடை வாசலில் திறப்புவிழாவிற்கான அத்தனை ஆயத்தங்களும் தயாராக இருந்தன. அதன் அருகில் சக்திவேல் ஐயா, அவர் மகன் பிரபாகரன், நிலனின் அன்னை சந்திரமதி, தங்கை கீர்த்தனா, சக்திவேல் அய்யாவின் மகள் ஜானகி, அவர் கணவர் பாலகுமாரன், அவர்களின் மகன் மிதுன் என்று அவர்கள் வீட்டின் மூன்று தலைமுறை மனிதர்களும் மொத்தமாக நின்றிருந்தனர்.
அங்குச் செல்லாமல், இடையில் அவளுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைக் கண்டுவிட்டு, அவரோடு அவள் ஒதுங்கிக்கொள்ள, “அங்க வா வஞ்சி!” என்று, மற்றவர்கள் காதில் விழாதவாறு மெலிதாக அதட்டி அழைத்தான் நிலன்.
தீர்க்கமாக அவனை நோக்கினாலும், “நீங்க அங்க பாருங்க.” என்று இனிய குரலில் மொழிந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு பேசுவதுபோல் திரும்பிக்கொண்டாள் இளவஞ்சி.
அவனாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவளோடு மல்லுக்கட்ட முடியவில்லை. அதைவிட, கடையைத் திறந்து வைப்பதற்காக வவுனியா நகரசபைத் தலைவரை அழைத்திருந்தான். அவர் வேறு சரியாக அந்த நேரம் பார்த்து வந்து இறங்கிவிட, அவனால் வேறு எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.
சிறப்பான முறையில் சக்திவேல் ஆடையகம் திறந்துவைக்கப்பட்டது. சந்திரமதி அம்மா விற்பனை செய்ய, வவுனியா நகரசபைத் தலைவரே முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
சக்திவேல் ஐயா உட்பட அவன் வீட்டின் மொத்த ஆட்களின் பார்வையும் அடிக்கடி இவளில்தான் படிந்து படிந்து மீண்டது. அதுவும் சக்திவேல் ஐயா வெறுப்பும் கசப்புமாகவே நோக்கினார்.
கவனித்தவளுக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவளைப் பிடிக்கவில்லையானால் எதற்கு அழைக்க? கூடவே, தன் பிரசன்னம் அவரை அமைதியிழக்க வைக்கிறது என்பது சிறு சிரிப்பையும் அவளுக்குள் தோற்றுவித்தது.
அதை மறைத்தபடி கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தாள்.
ஆனால், சற்றுத் தூரத்தில் நின்றிருந்தாலும் அவள் மீதே கவனமாக இருந்த விசாகன், அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்து, “மேம்” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான்.
“ஒண்டும் இல்ல. எல்லாரும் என்னையே பாக்கிற மாதிரி இருக்கு விசாகன்.” என்றாள் அவள்.
“மாதிரி இல்ல. உங்களையேதான் பாக்கினம்.” தம்மைச் சுற்றி இருக்கிறவர்களிடம் பார்வையைச் சுழற்றியபடி சொன்னான் அவன்.
சட்டென்று சிறு சிரிப்பொன்று அவள் இதழ்களில் முகிழ்க்கப் பார்த்தது.
“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நின்றான்.
இப்போது அரும்பியே விட்ட முறுவலோடு, “நான் ஓகேதான். நீங்க போங்க.” என்று அவனை அனுப்பிவிட்டாள்.
எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சக்திவேல் ஐயாவால் மாடிகள் ஏற முடியாது. அவர் ஒரு புறமாக அமர்ந்துவிட, தந்தையோடு சேர்ந்து நகரசபைத் தலைவரோடு இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு நிலன் ஆளானான். அதில் அன்னையிடம் அவளைக் கண்ணால் காட்டிவிட்டு அவரோடு நடந்தான்.
ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்படி?
சுவாதிக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படியிருக்க வருகிற வரன்களை எல்லாம் இவள் தட்டிக்கொண்டேயிருந்தால் எப்படி?
இவளுக்குத் திருமணம் செய்கிற எண்ணமே இல்லையோ, தொழிலே போதும் என்று இருந்துவிடுவாளோ என்கிற பயம் இப்போதெல்லாம் அவரைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாகத் திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
அவளுக்குத் தொழில் முக்கியம். அவளுக்கடுத்து அதைக் கவனிக்க யாருமில்லை. சுதாகரும் தந்தையைப் போல் ஒரு பேராசிரியனாக வரப்போகிறேன் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டான். சுவாதியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எப்போதடா தமக்கையிடமிருந்து தப்பி ஓடலாம் என்று காத்திருக்கிறாள்.
ஆக, அவளுக்குத் துணையாக வருகிறவன் அவள் சூழ்நிலையை அறிந்தவனாக, அவளைப் புரிந்தவனாக, நாளைக்குக் குழந்தைகள் என்று வந்தபிறகும் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்காதவனாக இருக்க வேண்டும்.
திருமணம் என்கிற ஒன்றினுள் சென்றபிறகு சண்டை சச்சரவு, பிரிவு, புரிந்துணர்வு இல்லாமை, நிம்மதியற்ற வாழ்க்கை என்று இருப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
தொழிலில் இருக்கிற பிரச்சனைகளும் பரபரப்பும் அவளுக்குப் போதுமானவை. இல்லற வாழ்க்கை இதமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டுமென்பது அவளின் அவா.
அதற்கு ஏற்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்.
வரன்கள் வந்துபோகாமல் இல்லை. தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அவளுக்கு என்ன குறை?
என்ன, வருகிறவர்களோடு இரண்டு முறை பேசினாலே அவளுக்குச் சலிப்புத் தட்டிவிடும்.
“அவசரமா ஒரு கலியாணத்தச் செய்யோணும் விசாகன்.” தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று சொன்னாள் இளவஞ்சி.
“மேம்!” அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் அவன்.
“அம்மா அப்பா கவலைப்படுறதும் நியாயம்தான். எனக்கு அடுத்ததா சுவாதி இருக்கிறாள். ஆனா எனக்குத் தோள் குடுப்பான் எண்டு நினைக்கிற மாதிரி ஒருத்தனும் மாட்டுறான் இல்ல. என்ன செய்யலாம் விசாகன்?” அவன் காட்டிய அதிர்வில் சிறு முறுவல் பூத்தாலும் வினவினாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டானே தவிர அவன் எதுவும் சொன்னான் இல்லை.
அவன் எப்போதுமே அப்படித்தான். தன் எல்லையிலேயே நின்றுகொள்வான். அதனாலேயே அவளுக்கு அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் உண்டு. நண்பனாகப் பாவித்து இலகுவாகப் பேசுவதும் அவனோடுதான்.
அதில், “கலியாணம் நடக்காம இப்பிடியே இருந்திடுவனோ விசாகன்?” என்றாள் கேள்வியாக.
அதற்கு மட்டும், “அப்பிடி எப்பிடி மேம் நடக்காமப் போகும்? வரன் வந்துகொண்டுதானே இருக்கு. வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது நீங்க.” என்று பதில் சொன்னான் அவன்.
“அப்ப என்னிலதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” மெல்லிய அதட்டல் போன்று அவள் வினவவும், “மேம்?” என்று விழித்தான் அவன்.
“சும்மா ஃபன்னுக்கு விசாகன்.” என்று முறுவலித்தாள்.
அதற்குள் தொழிற்சாலை வந்திருக்க இறங்கி அலுவலகத்திற்கு நடந்தாள்.
*****
அன்று, மூன்றடுக்கு மாடியில் மிகப் பிரமாண்டமாகச் சக்திவேல் ஆடையகம் வவுனியாவில் திறப்புவிழா காணவிருந்தது. இவ்வளவு காலமும் மொத்த விற்பனையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது தமக்கான ஆடையகத்தையும் ஆரம்பிக்கிறார்கள்.
அதைப் பற்றி முதன்முறை அறிந்தபோது இலேசாகச் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. காரணம், இது அவள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என்று திறந்து, இணைய வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தாள்.
அது மாத்திரமல்லாமல், வீட்டிலிருந்தே இணையம் வாயிலாக விற்பனை செய்கிற சிறு தொழிலாளர்களுக்கும் சின்ன சின்ன அளவில் கொடுக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன.
அவளின் இந்த வளர்ச்சிதான் அவர்களின் கண்களை உறுத்துவதே. இப்போது அவள் பாதையில் அவர்களும். அதற்கு அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.
அந்த வீட்டின் யாரையும் பார்க்கவே பிடிக்காத அளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிக்கிடந்தாலும் அதையெல்லாம் நேரடியாகக் காட்டிவிட முடியாது. தொழில் தந்திரங்களில் இதுவும் ஒன்று. சிரித்த முகமாகப் போய், வாழ்த்தி, அவர்களின் விருந்தில் கலந்துகொண்டுவிட்டு வர வேண்டும்.
கடுஞ்சிகப்பு, டார்க் மெரூன், கடும் பச்சை நிறங்கள் கலந்த, கை இல்லாத, முதுகை மூடிய கலம்காரி பிளவுசின் முதுகுப் பக்கத்தில் கிருஷ்ண-அர்ஜுன உபதேசம் மிகுந்த கலை நேர்த்தியோடு பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தது.
அந்த பிளவுசை இன்னுமே தூக்கிக் காட்டுவது போன்று டார்க் மரூனில் சின்ன போடர் கொண்ட, மென் பச்சை பிளேன் கொட்டன் சேலை அணிந்துகொண்டாள்.
முதுகிலிருந்த வேலைப்பாடு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கிக்கொண்டாள்.
கழுத்தில் அம்மன் பெண்டண்ட் கொண்ட டெரகோட்டா வகை ஆரம். பொறுத்தமான காதணிகளையும் மாட்டிக்கொண்டு தயாராகி இறங்கி வந்தவளைக் கண்டு, ஜெயந்தி குணாளன் இருவராலும் பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.
இந்தப் பெண் ஒரு திருமணத்தைச் செய்துகொள்ளக் கூடாதா என்கிற ஏக்கம் தானாக உண்டாயிற்று.
“அந்தத் தம்பி ஏதும் கதைச்சா முகத்தில அடிச்ச மாதிரிப் பதில் சொல்லாதயம்மா. சாதாரணமாக் கதச்சுப்போட்டு வாங்கோ.” தப்பித்தவறி அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலும் இவள் நன்றாகப் பேச வேண்டுமே என்றெண்ணித் தயவாய்ச் சொன்னார் ஜெயந்தி.
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை.
விசேசத்துக்குப் புறப்படுகிற மகளிடம் எதையும் பேசிக் கோபப்படுத்த விரும்பாத குணாளன், “விசாகன் கவனமப்பு. உங்கள நம்பித்தான் அனுப்புறன். கவனமாக் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அங்கே திறப்புவிழா நடக்கும் நேரத்திற்குச் சரியாகச் சென்று இறங்கினாள் இளவஞ்சி.
முழுமையான கறுப்பில் இருந்த விசாகன் அவளுக்கு இரண்டடி பின்னால் பாதுகாப்பாக நடந்துவர, தனியொருத்தியாகத் தயக்கங்கள் எதுவுமற்று படிகளில் ஏறி வந்தவளின் தோரணையில் அங்கிருந்தவர்கள் பார்வை தவிர்க்கவே முடியாமல் இவள் மீது படிந்தது.
தன் குடும்பத்தினரோடு நின்றிருந்த நிலன் வேகமாக வந்து, “சரியா அந்த நேரத்துக்குத்தான் வருவியா?” என்று அவளைச் சத்தமில்லாமல் அதட்டினான்.
அதைக் கண்ட சக்திவேலரின் முகம் கடுத்துச் சிவந்தது. வயோதிபம் காரணமாகப் பேரன் அளவுக்கு அவரால் அவசரமாக இயங்க முடியவில்லை. இல்லையானால் எட்டிப் பிடித்து அவனை நிறுத்தியிருப்பார்.
அங்கே கடை வாசலில் திறப்புவிழாவிற்கான அத்தனை ஆயத்தங்களும் தயாராக இருந்தன. அதன் அருகில் சக்திவேல் ஐயா, அவர் மகன் பிரபாகரன், நிலனின் அன்னை சந்திரமதி, தங்கை கீர்த்தனா, சக்திவேல் அய்யாவின் மகள் ஜானகி, அவர் கணவர் பாலகுமாரன், அவர்களின் மகன் மிதுன் என்று அவர்கள் வீட்டின் மூன்று தலைமுறை மனிதர்களும் மொத்தமாக நின்றிருந்தனர்.
அங்குச் செல்லாமல், இடையில் அவளுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைக் கண்டுவிட்டு, அவரோடு அவள் ஒதுங்கிக்கொள்ள, “அங்க வா வஞ்சி!” என்று, மற்றவர்கள் காதில் விழாதவாறு மெலிதாக அதட்டி அழைத்தான் நிலன்.
தீர்க்கமாக அவனை நோக்கினாலும், “நீங்க அங்க பாருங்க.” என்று இனிய குரலில் மொழிந்துவிட்டு, அந்தப் பெண்ணோடு பேசுவதுபோல் திரும்பிக்கொண்டாள் இளவஞ்சி.
அவனாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவளோடு மல்லுக்கட்ட முடியவில்லை. அதைவிட, கடையைத் திறந்து வைப்பதற்காக வவுனியா நகரசபைத் தலைவரை அழைத்திருந்தான். அவர் வேறு சரியாக அந்த நேரம் பார்த்து வந்து இறங்கிவிட, அவனால் வேறு எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.
சிறப்பான முறையில் சக்திவேல் ஆடையகம் திறந்துவைக்கப்பட்டது. சந்திரமதி அம்மா விற்பனை செய்ய, வவுனியா நகரசபைத் தலைவரே முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
சக்திவேல் ஐயா உட்பட அவன் வீட்டின் மொத்த ஆட்களின் பார்வையும் அடிக்கடி இவளில்தான் படிந்து படிந்து மீண்டது. அதுவும் சக்திவேல் ஐயா வெறுப்பும் கசப்புமாகவே நோக்கினார்.
கவனித்தவளுக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவளைப் பிடிக்கவில்லையானால் எதற்கு அழைக்க? கூடவே, தன் பிரசன்னம் அவரை அமைதியிழக்க வைக்கிறது என்பது சிறு சிரிப்பையும் அவளுக்குள் தோற்றுவித்தது.
அதை மறைத்தபடி கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தாள்.
ஆனால், சற்றுத் தூரத்தில் நின்றிருந்தாலும் அவள் மீதே கவனமாக இருந்த விசாகன், அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்களைக் கவனித்து, “மேம்” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான்.
“ஒண்டும் இல்ல. எல்லாரும் என்னையே பாக்கிற மாதிரி இருக்கு விசாகன்.” என்றாள் அவள்.
“மாதிரி இல்ல. உங்களையேதான் பாக்கினம்.” தம்மைச் சுற்றி இருக்கிறவர்களிடம் பார்வையைச் சுழற்றியபடி சொன்னான் அவன்.
சட்டென்று சிறு சிரிப்பொன்று அவள் இதழ்களில் முகிழ்க்கப் பார்த்தது.
“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நின்றான்.
இப்போது அரும்பியே விட்ட முறுவலோடு, “நான் ஓகேதான். நீங்க போங்க.” என்று அவனை அனுப்பிவிட்டாள்.
எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சக்திவேல் ஐயாவால் மாடிகள் ஏற முடியாது. அவர் ஒரு புறமாக அமர்ந்துவிட, தந்தையோடு சேர்ந்து நகரசபைத் தலைவரோடு இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு நிலன் ஆளானான். அதில் அன்னையிடம் அவளைக் கண்ணால் காட்டிவிட்டு அவரோடு நடந்தான்.
Last edited: