அத்தியாயம் 3
ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். சுவாதிக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படியிருக்க வருகிற வரன்களை எல்லாம் இவள் தட்டிக்கொண்டேயிருந்தால் எப்படி? இவளை விட்டுவிட்டு மற்றவளுக்குச் செய்யவா முடியும்?
இவளுக்குத் திருமணம் செய்கிற எண்ணமே இல்லையோ என்கிற சந்தேகமும், தொழிலே போதும் என்று இருந்துவிடுவாளோ என்கிற பயமும் இப்போதெல்லாம் அவரைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. அந்தளவில் வருகிற வேறு வரன்களுக்கும் மறுப்பை மாத்திரமே சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
ஆனால், கடந்த சில வருடங்களாக அதைப் பற்றி அதிகம் யோசித்துக்கொண்டே இருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
அவளால் இலகுவாகத் திருமணம் என்கிற ஒன்றினுள் நுழைந்துவிட முடியாது. அந்தளவில் அவளுக்கு அவளின் தொழில் முக்கியம். அவளோடு சேர்ந்தோ, அவளுக்கு அடுத்தோ பார்ப்பதற்கு என்று யாருமில்லை.
அப்படி இருந்தாலுமே அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அவளால் இருக்க முடியாது.
ஆக, அவளுக்குத் துணையாக வருகிறவன் அவள் சூழ்நிலையை அறிந்தவனாக, அவளைப் புரிந்தவனாக, நாளைக்குக் குழந்தைகள் என்று வந்தபிறகும் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்காதவனாக இருக்க வேண்டும்.
முக்கியமாகத் தொழில் விடயத்தில் தோள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தொந்தரவு தராதவனாக இருக்க வேண்டும்.
திருமணம் என்கிற ஒன்றினுள் சென்றபிறகு சண்டை சச்சரவு, பிரிவு, புரிந்துணர்வு இல்லாமை, நிம்மதியற்ற வாழ்க்கை என்று இருப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
தொழிலில் இருக்கிற பிரச்சனைகளும் பரபரப்பும் அவளுக்குப் போதுமானவை. இல்லற வாழ்க்கை இதமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டுமென்பது அவளின் அவா.
அதற்கு ஏற்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்.
வரன்கள் வந்துபோகாமல் இல்லை. தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அவளுக்கு என்ன குறை?
என்ன, வருகிறவர்களோடு இரண்டு முறை பேசினாலே அவளுக்குச் சலிப்புத் தட்டிவிடும்.
“அவசரமா ஒரு கலியாணம் தேவையா இருக்கு. என்ன செய்யலாம் விசாகன்?” தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று கேட்டாள் இளவஞ்சி.
“மேம்!” அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் அவன்.
“அம்மா அப்பா கவலைப்படுறதும் நியாயமாத்தான் இருக்கு. எனக்கு அடுத்ததா சுவாதி இருக்கிறாள். ஆனா எனக்குத் தோள் குடுப்பான் எண்டு நினைக்கிற மாதிரி ஒருத்தனும் மாட்டுறான் இல்லையே. என்ன செய்யலாம் விசாகன்?” அவன் காட்டிய அதிர்வில் சிறு முறுவல் பூத்தாலும் திரும்பவும் வினவினாள்.
அவன் ஒன்றுமே சொல்லாமல் கேட்டுக்கொண்டானே தவிர எதுவும் சொன்னான் இல்லை.
அவன் எப்போதுமே அப்படித்தான். தன் எல்லையிலேயே நின்றுகொள்வான். அதனாலேயே அவளுக்கு அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் உண்டு. நண்பனாகப் பாவித்து இலகுவாகப் பேசுவதும் அவனோடுதான்.
அதில், “கலியாணம் நடக்காம இப்பிடியே இருந்திடுவனோ விசாகன்?” என்றாள் கேள்வியாக.
அதற்கு மட்டும், “அப்பிடி எப்பிடி மேம் கலியாணம் நடக்காமப் போகும்? வரன் வந்துகொண்டுதானே இருக்கு. வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது நீங்க.” என்று பதில் சொன்னான்.
“அப்ப என்னிலதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” மெல்லிய அதட்டல் போன்று அவள் வினவவும், “மேம்?” என்று விழித்தான் அவன்.
“சும்மா ஃபன்னுக்கு விசாகன்.” என்று முறுவலித்துவிட்டு, அதற்குள் தொழிற்சாலை வந்திருக்கவே இறங்கி அலுவலகத்திற்கு நடந்தாள்.
*****
அன்று, மூன்றடுக்கு மாடியில் மிகப் பிரமாண்டமாகச் சக்திவேல் ஆடையகம் வவுனியாவில் திறப்புவிழா காணவிருந்தது. இவ்வளவு காலமும் மொத்த விற்பனையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது தமக்கான ஆடையகத்தையும் ஆரம்பிக்கிறார்கள்.
அதைப் பற்றி முதன்முறை அறிந்தபோது இலேசாகச் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. காரணம், இது அவள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என்று திறந்து, இணைய வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தாள்.
அது மாத்திரமல்லாமல், வீட்டிலிருந்தே இணையம் வாயிலாக விற்பனை செய்கிற சிறு தொழிலாளர்களுக்கும் சின்ன சின்ன அளவில் கொடுக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன.
அவளின் இந்த வளர்ச்சிதான் அவர்களின் கண்களை உறுத்துவதே. இப்போது அவள் பாதையில் அவர்களும். அதற்கு அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.
அந்த வீட்டின் யாரையும் பார்க்கவே பிடிக்காத அளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிக்கிடந்தாலும் அதையெல்லாம் நேரடியாகக் காட்டிவிட முடியாது. தொழில் தந்திரங்களில் இதுவும் ஒன்று. சிரித்த முகமாகப் போய், வாழ்த்தி, அவர்களின் விருந்தில் கலந்துகொண்டுவிட்டு வர வேண்டும்.
கடுஞ்சிகப்பு, டார்க் மெரூன், கடும் பச்சை நிறங்கள் கலந்த, கை இல்லாத, முதுகை மூடிய கலம்காரி பிளவுசின் முதுகுப் பக்கத்தில் கிருஷ்ண-அர்ஜுன உபதேசம் மிகுந்த கலை நேர்த்தியோடு பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தது.
அந்த பிளவுசை இன்னுமே தூக்கிக் காட்டுவது போன்று டார்க் மரூனில் சின்ன போடர் கொண்ட, மென் பச்சை பிளேன் கொட்டன் சேலை அணிந்துகொண்டாள்.
முதுகிலிருந்த வேலைப்பாடு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கிக்கொண்டாள்.
கழுத்தில் அம்மன் பெண்டண்ட் கொண்ட டெரகோட்டா வகை ஆரம் அணிந்து, பொறுத்தமான காதணிகளையும் மாட்டிக்கொண்டு தயாராகி இறங்கி வந்தவளைக் கண்டு, ஜெயந்தியும் குணாளனும் அப்படியே அமர்ந்துவிட்டனர்.
எளிமையும் நேர்த்தியும் எப்போதுமே அவளிடம் இருப்பவைதான். ஆனால் இன்று அவற்றோடு பளிச்சென்று தெரிந்த அவளின் கம்பீர அழகில் கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை.
அந்தளவில் நெஞ்சைப் பறித்தாள் அவள்.
“அந்தத் தம்பி ஏதும் கதைச்சா முகத்தில அடிச்ச மாதிரிப் பதில் சொல்லாதயம்மா. சாதாரணமாக் கதச்சுப்போட்டு வாங்கோ.” தப்பித்தவறி அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலும் என்றெண்ணித் தயவாய்ச் சொன்னார் ஜெயந்தி.
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை.
குணாளன், விசேசத்துக்குப் புறப்படுகிற மகளிடம் எதையும் பேசிக் கோபப்படுத்த விரும்பவில்லை. அதில், “விசாகன் கவனமப்பு. உங்களை நம்பித்தான் அனுப்புறன். கவனமாக் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அங்கே திறப்புவிழா நடக்கும் நேரத்திற்குச் சரியாகச் சென்று இறங்கினாள் இளவஞ்சி.
முழுமையான கறுப்பில் இருந்த விசாகன் அவளுக்கு இரண்டடி பின்னால் பாதுகாப்பாக நடந்துவர, தனியொருத்தியாகத் தயக்கங்கள் எதுவுமற்று படிகளில் ஏறி வந்தவளின் தோரணையில் தவிர்க்கவே முடியாத பிரமிப்போடு அங்கிருந்தவர்கள் பார்வை இவள் மீது படிந்தது.
தன் குடும்பத்தினரோடு நின்றிருந்த நிலன் வேகமாக வந்து, “சரியா அந்த நேரத்துக்குத்தான் வருவியா?” என்றபடி அவளை அழைத்துக்கொண்டு போனான்.
அங்கே கடை வாசலில் திறப்புவிழாவிற்கான அத்தனை ஆயத்தங்களும் தயாராக இருந்தன. அதன் அருகில் சக்திவேல் ஐயா, அவர் மகன் பிரபாகரன், நிலனின் அன்னை சந்திரமதி, அவன் தம்பி மிதுன், தங்கை கீர்த்தனா, சக்திவேல் அய்யாவின் மகள் ஜானகி, அவர் கணவர் பாலகுமாரன், அவர்களின் மகன்கள் என்று அவர்கள் வீட்டின் மூன்று தலைமுறை மனிதர்களும் மொத்தமாக நின்றிருந்தனர்.
அங்குச் செல்லாமல், இடையில் அவளுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைக் கண்டுவிட்டு, அவரோடு அவள் ஒதுங்கிக்கொள்ள, “அங்க வா வஞ்சி!” என்று, மற்றவர்கள் காதில் விழாதவாறு மெலிதாக அதட்டி அழைத்தான் நிலன்.
தீர்க்கமாக அவனை நோக்கினாலும், “நீங்க அங்க பாருங்க.” என்று இனிய குரலில் மொழிந்துவிட்டு அந்தப் பெண்ணோடு பேசுவதுபோல் திரும்பிக்கொண்டாள் இளவஞ்சி.
அவனாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவளோடு மல்லுக்கட்ட முடியவில்லை. அதைவிட, கடையைத் திறந்து வைப்பதற்காக வவுனியா நகரசபைத் தலைவர் வேறு சரியாக அந்த நேரம் பார்த்து வந்து இறங்கிவிட, நொடியில் அந்த இடமே பரபரப்பாகிப்போனது.
சிறப்பான முறையில் சக்திவேல் ஆடையகம் திறந்துவைக்கப்பட்டது.
சந்திரமதி அம்மா விற்பனை செய்ய, வவுனியா நகரசபைத் தலைவரே முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
சக்திவேல் ஐயா உட்பட அவன் வீட்டின் மொத்த ஆட்களின் பார்வையும் அடிக்கடி இவளில்தான் படிந்து படிந்து மீண்டது. திருமணத்திற்கு அவர்கள் கேட்டு அவள் மறுத்தாள் என்பதற்காக இப்படியா விடாமல் பார்ப்பது? ஒருவித எரிச்சல் உண்டாக, கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் மெல்ல மெல்ல அவர்கள் பார்வையிலிருந்து நகர ஆரம்பித்தாள்.
ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். சுவாதிக்கே திருமண வயது வந்துவிட்டது. அப்படியிருக்க வருகிற வரன்களை எல்லாம் இவள் தட்டிக்கொண்டேயிருந்தால் எப்படி? இவளை விட்டுவிட்டு மற்றவளுக்குச் செய்யவா முடியும்?
இவளுக்குத் திருமணம் செய்கிற எண்ணமே இல்லையோ என்கிற சந்தேகமும், தொழிலே போதும் என்று இருந்துவிடுவாளோ என்கிற பயமும் இப்போதெல்லாம் அவரைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. அந்தளவில் வருகிற வேறு வரன்களுக்கும் மறுப்பை மாத்திரமே சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
ஆனால், கடந்த சில வருடங்களாக அதைப் பற்றி அதிகம் யோசித்துக்கொண்டே இருக்கிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்று.
அவளால் இலகுவாகத் திருமணம் என்கிற ஒன்றினுள் நுழைந்துவிட முடியாது. அந்தளவில் அவளுக்கு அவளின் தொழில் முக்கியம். அவளோடு சேர்ந்தோ, அவளுக்கு அடுத்தோ பார்ப்பதற்கு என்று யாருமில்லை.
அப்படி இருந்தாலுமே அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அவளால் இருக்க முடியாது.
ஆக, அவளுக்குத் துணையாக வருகிறவன் அவள் சூழ்நிலையை அறிந்தவனாக, அவளைப் புரிந்தவனாக, நாளைக்குக் குழந்தைகள் என்று வந்தபிறகும் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்காதவனாக இருக்க வேண்டும்.
முக்கியமாகத் தொழில் விடயத்தில் தோள் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தொந்தரவு தராதவனாக இருக்க வேண்டும்.
திருமணம் என்கிற ஒன்றினுள் சென்றபிறகு சண்டை சச்சரவு, பிரிவு, புரிந்துணர்வு இல்லாமை, நிம்மதியற்ற வாழ்க்கை என்று இருப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.
தொழிலில் இருக்கிற பிரச்சனைகளும் பரபரப்பும் அவளுக்குப் போதுமானவை. இல்லற வாழ்க்கை இதமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டுமென்பது அவளின் அவா.
அதற்கு ஏற்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள்.
வரன்கள் வந்துபோகாமல் இல்லை. தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் அழகும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அவளுக்கு என்ன குறை?
என்ன, வருகிறவர்களோடு இரண்டு முறை பேசினாலே அவளுக்குச் சலிப்புத் தட்டிவிடும்.
“அவசரமா ஒரு கலியாணம் தேவையா இருக்கு. என்ன செய்யலாம் விசாகன்?” தொழிற்சாலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென்று கேட்டாள் இளவஞ்சி.
“மேம்!” அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் அவன்.
“அம்மா அப்பா கவலைப்படுறதும் நியாயமாத்தான் இருக்கு. எனக்கு அடுத்ததா சுவாதி இருக்கிறாள். ஆனா எனக்குத் தோள் குடுப்பான் எண்டு நினைக்கிற மாதிரி ஒருத்தனும் மாட்டுறான் இல்லையே. என்ன செய்யலாம் விசாகன்?” அவன் காட்டிய அதிர்வில் சிறு முறுவல் பூத்தாலும் திரும்பவும் வினவினாள்.
அவன் ஒன்றுமே சொல்லாமல் கேட்டுக்கொண்டானே தவிர எதுவும் சொன்னான் இல்லை.
அவன் எப்போதுமே அப்படித்தான். தன் எல்லையிலேயே நின்றுகொள்வான். அதனாலேயே அவளுக்கு அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் உண்டு. நண்பனாகப் பாவித்து இலகுவாகப் பேசுவதும் அவனோடுதான்.
அதில், “கலியாணம் நடக்காம இப்பிடியே இருந்திடுவனோ விசாகன்?” என்றாள் கேள்வியாக.
அதற்கு மட்டும், “அப்பிடி எப்பிடி மேம் கலியாணம் நடக்காமப் போகும்? வரன் வந்துகொண்டுதானே இருக்கு. வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது நீங்க.” என்று பதில் சொன்னான்.
“அப்ப என்னிலதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” மெல்லிய அதட்டல் போன்று அவள் வினவவும், “மேம்?” என்று விழித்தான் அவன்.
“சும்மா ஃபன்னுக்கு விசாகன்.” என்று முறுவலித்துவிட்டு, அதற்குள் தொழிற்சாலை வந்திருக்கவே இறங்கி அலுவலகத்திற்கு நடந்தாள்.
*****
அன்று, மூன்றடுக்கு மாடியில் மிகப் பிரமாண்டமாகச் சக்திவேல் ஆடையகம் வவுனியாவில் திறப்புவிழா காணவிருந்தது. இவ்வளவு காலமும் மொத்த விற்பனையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது தமக்கான ஆடையகத்தையும் ஆரம்பிக்கிறார்கள்.
அதைப் பற்றி முதன்முறை அறிந்தபோது இலேசாகச் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. காரணம், இது அவள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை என்று திறந்து, இணைய வாயிலாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தாள்.
அது மாத்திரமல்லாமல், வீட்டிலிருந்தே இணையம் வாயிலாக விற்பனை செய்கிற சிறு தொழிலாளர்களுக்கும் சின்ன சின்ன அளவில் கொடுக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களாகின்றன.
அவளின் இந்த வளர்ச்சிதான் அவர்களின் கண்களை உறுத்துவதே. இப்போது அவள் பாதையில் அவர்களும். அதற்கு அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.
அந்த வீட்டின் யாரையும் பார்க்கவே பிடிக்காத அளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிக்கிடந்தாலும் அதையெல்லாம் நேரடியாகக் காட்டிவிட முடியாது. தொழில் தந்திரங்களில் இதுவும் ஒன்று. சிரித்த முகமாகப் போய், வாழ்த்தி, அவர்களின் விருந்தில் கலந்துகொண்டுவிட்டு வர வேண்டும்.
கடுஞ்சிகப்பு, டார்க் மெரூன், கடும் பச்சை நிறங்கள் கலந்த, கை இல்லாத, முதுகை மூடிய கலம்காரி பிளவுசின் முதுகுப் பக்கத்தில் கிருஷ்ண-அர்ஜுன உபதேசம் மிகுந்த கலை நேர்த்தியோடு பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தது.
அந்த பிளவுசை இன்னுமே தூக்கிக் காட்டுவது போன்று டார்க் மரூனில் சின்ன போடர் கொண்ட, மென் பச்சை பிளேன் கொட்டன் சேலை அணிந்துகொண்டாள்.
முதுகிலிருந்த வேலைப்பாடு அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே தன் நீண்ட கூந்தலைப் பிடரியில் கொண்டையாக்கிக்கொண்டாள்.
கழுத்தில் அம்மன் பெண்டண்ட் கொண்ட டெரகோட்டா வகை ஆரம் அணிந்து, பொறுத்தமான காதணிகளையும் மாட்டிக்கொண்டு தயாராகி இறங்கி வந்தவளைக் கண்டு, ஜெயந்தியும் குணாளனும் அப்படியே அமர்ந்துவிட்டனர்.
எளிமையும் நேர்த்தியும் எப்போதுமே அவளிடம் இருப்பவைதான். ஆனால் இன்று அவற்றோடு பளிச்சென்று தெரிந்த அவளின் கம்பீர அழகில் கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை.
அந்தளவில் நெஞ்சைப் பறித்தாள் அவள்.
“அந்தத் தம்பி ஏதும் கதைச்சா முகத்தில அடிச்ச மாதிரிப் பதில் சொல்லாதயம்மா. சாதாரணமாக் கதச்சுப்போட்டு வாங்கோ.” தப்பித்தவறி அவர்கள் திருமணப் பேச்சை எடுத்தாலும் என்றெண்ணித் தயவாய்ச் சொன்னார் ஜெயந்தி.
அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை.
குணாளன், விசேசத்துக்குப் புறப்படுகிற மகளிடம் எதையும் பேசிக் கோபப்படுத்த விரும்பவில்லை. அதில், “விசாகன் கவனமப்பு. உங்களை நம்பித்தான் அனுப்புறன். கவனமாக் கூட்டிக்கொண்டு போயிட்டுக் கூட்டிக்கொண்டு வந்திடுங்கோ.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அங்கே திறப்புவிழா நடக்கும் நேரத்திற்குச் சரியாகச் சென்று இறங்கினாள் இளவஞ்சி.
முழுமையான கறுப்பில் இருந்த விசாகன் அவளுக்கு இரண்டடி பின்னால் பாதுகாப்பாக நடந்துவர, தனியொருத்தியாகத் தயக்கங்கள் எதுவுமற்று படிகளில் ஏறி வந்தவளின் தோரணையில் தவிர்க்கவே முடியாத பிரமிப்போடு அங்கிருந்தவர்கள் பார்வை இவள் மீது படிந்தது.
தன் குடும்பத்தினரோடு நின்றிருந்த நிலன் வேகமாக வந்து, “சரியா அந்த நேரத்துக்குத்தான் வருவியா?” என்றபடி அவளை அழைத்துக்கொண்டு போனான்.
அங்கே கடை வாசலில் திறப்புவிழாவிற்கான அத்தனை ஆயத்தங்களும் தயாராக இருந்தன. அதன் அருகில் சக்திவேல் ஐயா, அவர் மகன் பிரபாகரன், நிலனின் அன்னை சந்திரமதி, அவன் தம்பி மிதுன், தங்கை கீர்த்தனா, சக்திவேல் அய்யாவின் மகள் ஜானகி, அவர் கணவர் பாலகுமாரன், அவர்களின் மகன்கள் என்று அவர்கள் வீட்டின் மூன்று தலைமுறை மனிதர்களும் மொத்தமாக நின்றிருந்தனர்.
அங்குச் செல்லாமல், இடையில் அவளுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரைக் கண்டுவிட்டு, அவரோடு அவள் ஒதுங்கிக்கொள்ள, “அங்க வா வஞ்சி!” என்று, மற்றவர்கள் காதில் விழாதவாறு மெலிதாக அதட்டி அழைத்தான் நிலன்.
தீர்க்கமாக அவனை நோக்கினாலும், “நீங்க அங்க பாருங்க.” என்று இனிய குரலில் மொழிந்துவிட்டு அந்தப் பெண்ணோடு பேசுவதுபோல் திரும்பிக்கொண்டாள் இளவஞ்சி.
அவனாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவளோடு மல்லுக்கட்ட முடியவில்லை. அதைவிட, கடையைத் திறந்து வைப்பதற்காக வவுனியா நகரசபைத் தலைவர் வேறு சரியாக அந்த நேரம் பார்த்து வந்து இறங்கிவிட, நொடியில் அந்த இடமே பரபரப்பாகிப்போனது.
சிறப்பான முறையில் சக்திவேல் ஆடையகம் திறந்துவைக்கப்பட்டது.
சந்திரமதி அம்மா விற்பனை செய்ய, வவுனியா நகரசபைத் தலைவரே முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
சக்திவேல் ஐயா உட்பட அவன் வீட்டின் மொத்த ஆட்களின் பார்வையும் அடிக்கடி இவளில்தான் படிந்து படிந்து மீண்டது. திருமணத்திற்கு அவர்கள் கேட்டு அவள் மறுத்தாள் என்பதற்காக இப்படியா விடாமல் பார்ப்பது? ஒருவித எரிச்சல் உண்டாக, கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் மெல்ல மெல்ல அவர்கள் பார்வையிலிருந்து நகர ஆரம்பித்தாள்.
Last edited: