அத்தியாயம் 10
நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல்,
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி.
மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் வாசலில் இருந்து வீதிவரைக்கும் கற்கள் பதிக்கப்பட்டு, ஆங்காங்கே அழகுற பூச்சாடிகள் வைக்கப்பட்டிருந்தது. காவலாளி கண்ணாடிக் கதவினைத் திறந்துவிட ஏதுவாக வாசலிலேயே நின்றிருந்தான்.
இதைவிடப் பலமடங்கு பெரிய நிறுவனத்தின் முதலாளியின் மகள்தான் ஆரணி. அப்படியானவளின் இன்றைய நிலை? தன்னைக் காதலித்துத் தொலைத்துவிட்ட பாவத்துக்காக இங்கே வேலை கேட்டு வந்திருக்கிறாள். கசந்துவழிந்த உண்மையைத் தொண்டைக்குழிக்குள் விழுங்கிவிட முடியாமல் தடுமாறி நின்றவனை, “வா!” என்று அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள் ஆரணி.
இவளைக் கண்டதுமே, “மேம் வாங்க மேம்! சுகமா இருக்கிறீங்களா மேம்?” என்று வரவேற்ப்புப் பெண் தன்னிடத்திலிருந்து விரைந்து வந்து நலன் விசாரித்தாள்.
ஆரணி இட்டிருந்த திலகத்தைக் கண்டுவிட்டு, “வெட்டிங் முடிஞ்சுதா மேம்? எப்ப நடந்தது? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல நீங்க. சேர் எங்க?” பக்கத்தில் நிற்பவனை அவளுடைய கணவனாக அவள் நினைக்கவில்லை என்று புரிந்தது.
விழிகளில் குடியேறிய மெல்லிய கோபத்துடன், “இவர் தான் அவர். பெயர் நிகேதன்.” என்று சுருக்கமாக அறிமுகம் செய்துவிட்டு, “அங்கிள பாக்கலாமா?” என்றாள் வேறு பேசாமல்.
“ஓ..! எஸ் மேம். வாங்கோ.” வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அழைத்துக்கொண்டு போனாள் அவள்.
தன்னுடைய ‘பிஏ’ உடன் ஆலோசனையில் இருந்த ராஜேந்திரன் இவளைக் கண்டது சட்டென்று முகம் மலர்ந்தார். “வா வா வா! எப்பிடி இருக்கிறாய் ஆராம்மா?” எழுந்து வந்து ஆர்ப்பாட்டமாக வரவேற்றார். “இவர்தான் அந்த லக்கி போயா?” என்றபடி, அவனையும் அணைத்துக்கொண்டார்.
அவர்களை அமரவைத்து, சிறப்பாக உபசரித்து, குளிர்பானம் அருந்தக்கொடுத்துவிட்டு, “பிறகு எப்பிடிப் போகுது குடும்ப வாழ்க்கை?” என்று, குறும்புடன் கண் சிமிட்டிக் கேட்டார்.
ஆரணியின் முகத்திலும் நிறைந்த சிரிப்பு. அதே சிரிப்புடன் நிகேதனை திரும்பிப் பார்த்துவிட்டு “நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” என்றாள்.
“எனக்கு மூன்றும் பெடியள். அதால என்ர வீட்டம்மாக்கு இவள் தான் மகள்.” என்று நிகேதனிடம் சொன்னார் அவர். இப்படி இனிமையாகச் சென்ற அவர்களின் அளவளாவல், “என்னம்மா? சொல்லு! நான் ஏதாவது செய்ய வேணுமா உனக்கு?” என்ற அவரின் கேள்வியில் வந்து நின்றது.
“ஓம் அங்கிள். இவருக்கு ஒரு வேலை தேடுறோம். எனக்காக வேண்டாம். அவரின்ர செர்டிபிகேட்ஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். அதைப் பாத்திட்டுச் சொல்லுங்கோ.” என்றாள் ஆரணி.
“அதென்ன பாத்திட்டுச் சொல்லுறது? கட்டாயம் தாறனம்மா. உனக்கு இல்லாததா?” பைலை வாங்கிப் பார்த்தவரின் புருவங்கள் நன்றாகவே உயர்ந்தது. “எங்கட கம்பனிக்கு நீங்க வேணும் தம்பி. உங்களைக் கைவிட நாங்க ரெடி இல்ல.” என்றார் நிகேதனிடம்.
அதுவரை இருந்த சங்கடம் மறைந்து இருவர் முகமும் பட்டென்று மலர்ந்தது. பார்த்தியா என்பதாக அவனைப் பார்த்தாள் அவள். அவன் முகத்திலும் பெரும் சந்தோசம். அவனுடைய தகுதிக்கல்லவா வேலை கிடைக்கப் போகிறது. மேசைக்குக் கீழே அவன் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“சரி தம்பி. டொக்கிமெண்ட்ஸ் எல்லாம் ரெடியானதும் உங்களுக்குச் சொல்லுறன். வெகு விரைவில மெயில் வரும்!” அவனுக்கு கொடுக்கப்போகிற போஸ்ட், அந்த வேலை பற்றிய விளக்கம் அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி, இன்முகமாகவே அவர்களை அனுப்பி வைத்தார்.
இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. “வரமாட்டன் எண்டு அவ்வளவு அடம் பிடிச்சாய். இப்ப பாத்தியா. வேலை கிடைச்சிட்டுது. இனி எந்தக் கஷ்டமும் இல்ல. மரியாதையா பார்ட்டி வையடா!” என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள், ஆரணி.
“சம்பளம் வரவிட்டி வாங்கித் தரவா?” அவனுக்கும் ஆசைதான். ஆனால், கையிலிருப்பது அவளின் தாலிக்கொடியை விற்றுக் கிடைத்த பணம். அதில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை.
“டேய் வாடா. வேலையே கிடைக்கப் போகுது. அத சின்னதா கொண்டாட வேண்டாமா?” அவனை விடவில்லை அவள். இருந்த பணத்தில் ஹோட்டல் ஒன்றுக்குப்போய்த் தேநீர் அருந்திவிட்டு எல்லோருக்குமாக உணவும் வாங்கிக்கொண்டு சென்றனர்.
அங்கே ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸில் பிரகாஷ் குழம்பிப்போய் நின்றிருந்தார். நடப்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. “சேர், நாங்கதான் மிஸ்டர் ரஞ்சனை அந்தப் போஸ்ட்கு போட்டுட்டோமே!” என்றார் குழம்பியபடி.
நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல்,
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி.
மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் வாசலில் இருந்து வீதிவரைக்கும் கற்கள் பதிக்கப்பட்டு, ஆங்காங்கே அழகுற பூச்சாடிகள் வைக்கப்பட்டிருந்தது. காவலாளி கண்ணாடிக் கதவினைத் திறந்துவிட ஏதுவாக வாசலிலேயே நின்றிருந்தான்.
இதைவிடப் பலமடங்கு பெரிய நிறுவனத்தின் முதலாளியின் மகள்தான் ஆரணி. அப்படியானவளின் இன்றைய நிலை? தன்னைக் காதலித்துத் தொலைத்துவிட்ட பாவத்துக்காக இங்கே வேலை கேட்டு வந்திருக்கிறாள். கசந்துவழிந்த உண்மையைத் தொண்டைக்குழிக்குள் விழுங்கிவிட முடியாமல் தடுமாறி நின்றவனை, “வா!” என்று அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள் ஆரணி.
இவளைக் கண்டதுமே, “மேம் வாங்க மேம்! சுகமா இருக்கிறீங்களா மேம்?” என்று வரவேற்ப்புப் பெண் தன்னிடத்திலிருந்து விரைந்து வந்து நலன் விசாரித்தாள்.
ஆரணி இட்டிருந்த திலகத்தைக் கண்டுவிட்டு, “வெட்டிங் முடிஞ்சுதா மேம்? எப்ப நடந்தது? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல நீங்க. சேர் எங்க?” பக்கத்தில் நிற்பவனை அவளுடைய கணவனாக அவள் நினைக்கவில்லை என்று புரிந்தது.
விழிகளில் குடியேறிய மெல்லிய கோபத்துடன், “இவர் தான் அவர். பெயர் நிகேதன்.” என்று சுருக்கமாக அறிமுகம் செய்துவிட்டு, “அங்கிள பாக்கலாமா?” என்றாள் வேறு பேசாமல்.
“ஓ..! எஸ் மேம். வாங்கோ.” வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அழைத்துக்கொண்டு போனாள் அவள்.
தன்னுடைய ‘பிஏ’ உடன் ஆலோசனையில் இருந்த ராஜேந்திரன் இவளைக் கண்டது சட்டென்று முகம் மலர்ந்தார். “வா வா வா! எப்பிடி இருக்கிறாய் ஆராம்மா?” எழுந்து வந்து ஆர்ப்பாட்டமாக வரவேற்றார். “இவர்தான் அந்த லக்கி போயா?” என்றபடி, அவனையும் அணைத்துக்கொண்டார்.
அவர்களை அமரவைத்து, சிறப்பாக உபசரித்து, குளிர்பானம் அருந்தக்கொடுத்துவிட்டு, “பிறகு எப்பிடிப் போகுது குடும்ப வாழ்க்கை?” என்று, குறும்புடன் கண் சிமிட்டிக் கேட்டார்.
ஆரணியின் முகத்திலும் நிறைந்த சிரிப்பு. அதே சிரிப்புடன் நிகேதனை திரும்பிப் பார்த்துவிட்டு “நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” என்றாள்.
“எனக்கு மூன்றும் பெடியள். அதால என்ர வீட்டம்மாக்கு இவள் தான் மகள்.” என்று நிகேதனிடம் சொன்னார் அவர். இப்படி இனிமையாகச் சென்ற அவர்களின் அளவளாவல், “என்னம்மா? சொல்லு! நான் ஏதாவது செய்ய வேணுமா உனக்கு?” என்ற அவரின் கேள்வியில் வந்து நின்றது.
“ஓம் அங்கிள். இவருக்கு ஒரு வேலை தேடுறோம். எனக்காக வேண்டாம். அவரின்ர செர்டிபிகேட்ஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். அதைப் பாத்திட்டுச் சொல்லுங்கோ.” என்றாள் ஆரணி.
“அதென்ன பாத்திட்டுச் சொல்லுறது? கட்டாயம் தாறனம்மா. உனக்கு இல்லாததா?” பைலை வாங்கிப் பார்த்தவரின் புருவங்கள் நன்றாகவே உயர்ந்தது. “எங்கட கம்பனிக்கு நீங்க வேணும் தம்பி. உங்களைக் கைவிட நாங்க ரெடி இல்ல.” என்றார் நிகேதனிடம்.
அதுவரை இருந்த சங்கடம் மறைந்து இருவர் முகமும் பட்டென்று மலர்ந்தது. பார்த்தியா என்பதாக அவனைப் பார்த்தாள் அவள். அவன் முகத்திலும் பெரும் சந்தோசம். அவனுடைய தகுதிக்கல்லவா வேலை கிடைக்கப் போகிறது. மேசைக்குக் கீழே அவன் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள் ஆரணி.
“சரி தம்பி. டொக்கிமெண்ட்ஸ் எல்லாம் ரெடியானதும் உங்களுக்குச் சொல்லுறன். வெகு விரைவில மெயில் வரும்!” அவனுக்கு கொடுக்கப்போகிற போஸ்ட், அந்த வேலை பற்றிய விளக்கம் அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி, இன்முகமாகவே அவர்களை அனுப்பி வைத்தார்.
இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. “வரமாட்டன் எண்டு அவ்வளவு அடம் பிடிச்சாய். இப்ப பாத்தியா. வேலை கிடைச்சிட்டுது. இனி எந்தக் கஷ்டமும் இல்ல. மரியாதையா பார்ட்டி வையடா!” என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள், ஆரணி.
“சம்பளம் வரவிட்டி வாங்கித் தரவா?” அவனுக்கும் ஆசைதான். ஆனால், கையிலிருப்பது அவளின் தாலிக்கொடியை விற்றுக் கிடைத்த பணம். அதில் சந்தோசம் கொண்டாட முடியவில்லை.
“டேய் வாடா. வேலையே கிடைக்கப் போகுது. அத சின்னதா கொண்டாட வேண்டாமா?” அவனை விடவில்லை அவள். இருந்த பணத்தில் ஹோட்டல் ஒன்றுக்குப்போய்த் தேநீர் அருந்திவிட்டு எல்லோருக்குமாக உணவும் வாங்கிக்கொண்டு சென்றனர்.
அங்கே ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸில் பிரகாஷ் குழம்பிப்போய் நின்றிருந்தார். நடப்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. “சேர், நாங்கதான் மிஸ்டர் ரஞ்சனை அந்தப் போஸ்ட்கு போட்டுட்டோமே!” என்றார் குழம்பியபடி.