அத்தியாயம் 24
நிகேதன் ஒரு பக்கம் சகாதேவன் ஒருபக்கம் கூடவே சுகிர்தனும் இன்னொரு பக்கம் என்று மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தது. சிலதைக் கயல் மறுத்தாள். சிலது குறிப்புப் பொருந்தாமல் போனது. சில வரன் அருமையாக இருந்தாலும் பொறுப்பு அல்லது நிலையற்ற வருமானம் என்று எப்படியோ தட்டிப்போனது. இப்படியே ஆறுமாதம் கழிந்த நிலையில், செண்டரில் ஆரணியோடு வேலை பார்க்கும் அனுவின் தூரத்து உறவினனான ராகவன் இவர்களின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தி வந்தான். கயலினி விரும்பியது போலவே ஆசிரியராகவும் இருந்துவிட எல்லோருக்குமே சந்தோசம். ராகவனுக்கும் கயலினியைப் பிடித்திருந்தது.
பெண் பார்க்கும் படலம், சம்மந்தக் கலப்பு, சீதனப்பேச்சு என்று அனைத்துக்கும் சகாதேவனும் மனைவி பிள்ளைகளோடு வந்து நின்று, நிகேதனோடு சேர்ந்து அனைத்தையும் செய்து முடித்தார்.
ஈழத்தவர்களின் வழக்கமாக வீடும் காணியும் பெண்ணுக்கே சீதனமாகச் சேரும். கூடவே நகை நட்டுகள், திருமணச் செலவு, மருமகனுக்கு பைக் என்று வெகு தாராளமாகவே சீதனம் பேசி முடிவானது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாலினிக்கு, உள்ளூர பெரும் வியப்பு. மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் போனதற்குப் பிறகு இப்போதுதான் வருகிறார். வந்து பார்த்தால் எல்லாமே மாறியிருந்தது. அதே வீடுதான். ஆனால், காயப்பட்டிருந்த இடங்கள் எல்லாம் நேர் செய்யப்பட்டு, யன்னல்கள், கதவுகள் பழுது பார்க்கப்பட்டு, வீடும் புதுவர்ணம் பூசி அழகாகக் காட்சி தந்தது. முன் முற்றம், தோட்டம், ஆரணியின் டெரெஸ் என்று எல்லாமே அழுது வடிந்த தோற்றம் மாறி சீரமைக்கப்பட்டு மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உரு மாறி இருந்தது. முக்கியமாகப் புது சோபா செட், நவீன ரகத் தொலைகாட்சி, அறைகளுக்கு நல்ல கட்டில்கள், கப்போர்ட்டுகள், கிட்சன் செட், வோஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அவர்களின் தரமே உயர்ந்திருந்தது.
இது எல்லாவற்றையும் விட, வாயில்லா பூச்சியாக எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, இறுகிபோய்த் திரிந்த நிகேதனிடம் தெரிந்த நிமிர்வும் ஆளுமையும் தான் அவரின் புருவங்களை உச்சிமேட்டுக்கே கொண்டுபோயிற்று.
மாப்பிள்ளை வீட்டினரைப் பற்றி விசாரித்தது, அவர்களோடு பேசிய முறை, சீதனம் பற்றிய தெளிவான முடிவுகளை எடுத்தது என்று அனைத்திலுமே மிகுந்த தெளிவும் நிதானமும் காட்டினான். உண்மையைச் சொல்லப்போனால் சகாதேவன் மூத்த மகன் என்பதால் கூட நின்றார். அவ்வளவுதான்.
தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்குத்தான் போவேன் என்று இருந்தவனை மாற்றி, ஒரு டிரைவராக்கி, பிறகு அதையே சொந்தத் தொழிலாக்கி, இன்றைக்கு இரண்டு வாகனத்துக்குச் சொந்தக்காரனாக மாற்றிவிட்டாளே இந்தப் பெண் என்று ஆரணியைக் குறித்தும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றோடு கயலின் விடுமுறை முடிந்து நாளையே யாழ்ப்பாணம் புறப்பட வேண்டும் என்பதில், அவளை வெளியே அழைத்துச் செல்ல அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் ராகவன். மண்டபம் பார்த்தல், மண்டப அலங்காரம், மேக்கப், எந்த ஐய்யரை அழைப்பது, சமையல் பொறுப்பு என்று மிச்சம் சொச்சமாக இருக்கும் திருமணம் சம்மந்தமான பேச்சுக்களைப் பேச என்று அவனுடைய பெற்றோரும் வந்திருந்தனர்.
கண்களில் கனவும் உதட்டினில் சிரிப்புமாக வருங்காலக் கணவனோடு புறப்பட்ட மகளின் தோற்றம் கண்டு அமராவதி அம்மாக்கு மனம் பூரித்துப் போயிற்று. கண்ணோரம் ததும்பிய விழிநீரை உள்ளுக்குள்ளேயே இழுத்துக்கொண்டு, “கவனமா போயிட்டு வாங்கோ.” என்று சிரித்தமுகமாக அனுப்பிவைத்தார்.
நினைவு தெரிந்த காலமெல்லாம் வறுமை. ஒரேயொரு பெண் பிள்ளை. அவளின் திருமணம் என்னாகுமோ எப்படி நடக்குமோ என்பது பெரிய கவலை. இன்றோ அனைத்தும் தீர்ந்து அருமையான வரன் அமைந்து போதும் போதும் என்கிற அளவில் சீதனமும் கொடுத்து அவளுக்குப் பிடித்தவனோடு மணமும் நடக்கப்போகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?
மகன்களும் கூடவே அமர்ந்திருக்க, திருமணம் குறித்தான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தது. நடுநடுவே தன் கருத்தையும் கேட்டுக்கொள்ளும் மகன்களுக்குப் பதில்களைச் சொல்லியபடி சம்மந்தி குடும்பத்துடன் சந்தோசமாக அளவளாவிக் கொண்டிருந்தார், அவர்.
இந்தக் கால இடைவெளிக்குள் சமையல் விற்பன்னியாகிவிட்ட ஆரணி விருந்தைச் சமைத்து முடித்திருந்தாள். சகாதேவன் குடும்பம், மாப்பிள்ளை வீட்டினர், நிகேதன் என்று எல்லோரையும் மேசையில் அமர்த்திப் பரிமாறினாள். அன்று போலவே அவளின் கவனிப்பில் நிகேதன் விசேட இடம் பிடித்திருப்பதைக் கவனித்த மாலினிக்கு, ஆரணியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
மூன்று வருடங்களைத் தாண்டியாயிற்று. இன்னுமே வேலைக்குப் போகிறாள். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. கயலினியின் திருமணப் பொறுப்பை முழுமையாக நிகேதன் தான் ஏற்றிருக்கிறான். அது எவ்வளவு பெரிய சுமை? ஆனாலும் நிகேதனின் மீதான அவளின் அன்பும் கவனிப்பும் குறையவே இல்லை.
எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது என்று மாலினிக்கு விளங்கவே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் மாலினியை விடவும் வசதியான வீட்டுப்பெண் தான் ஆரணி. அப்படியானவள் இங்கு வந்திருந்து இவர்களோடு மல்லுக்கட்டி கணவனையும் உயர்த்தித் தானும் உயர்ந்து நிற்கிறாளே. அவருக்குள் ஓடிய இந்த எண்ணங்கள் அடிக்கடி ஆரணியையே கவனிக்க வைத்தது.
ஆரணியும் இதைக் கவனிக்காமல் இல்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு வேலைகளைப் பார்த்தாள். எல்லோரும் உணவை முடித்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கடைசியாகக் கையைக் கழுவிக்கொண்டு வந்த நிகேதன், “நானும் அப்ப இருந்து பாக்கிறன், என்னடி அது ரகசிய சிரிப்பு?” என்று, மற்றவர்களைக் கவராமல் கிசுகிசுத்தான்.
“இல்ல, உன்ர அண்ணி இப்பதான் என்ன பொம்பிளை பாக்கிறா. டிஸ்டப் பண்ணாம போ.” என்று, நகைக்கும் குரலில் அவளும் ரகசியமாகச் சொன்னாள்.
அவளை முறைத்தான் அவன். “சும்மா அவவை வம்புக்கு இழுக்காத ஆரா!” என்று அதட்டினான். ஆனாலும், அவனை அறியாமலேயே அவன் கவனம் மாலினியில் குவிந்தது.
அங்கே பேச்சில் கவனமாக இருந்தாலும் அவரின் பார்வை உண்மையாகவே ஒருவித அளவிடும் நோக்குடன் இவளைத்தான் தொட்டுத் தொட்டு மீண்டது. இப்போது அவனுக்கும் சிரிப்புவர அவளைப் பார்த்தான். குறும்புடன் கண்ணடித்துவிட்டுப் போனாள் ஆரணி.
‘இவளை.. எல்லாரையும் வச்சுக்கொண்டு செய்யிற வேலைய பார்..’ தன் முறுவலை மறைத்துக்கொண்டு கூடத்துக்கு நடந்தான்.
அதன்பிறகும், ஏன் பார்க்கிறார் என்கிற கேள்வியுடன் அவன் பார்வை மாலினியைத் தொட்டுத் தொட்டு மீண்டபோதுதான் அவருக்கும் ஆரணிக்குமான வித்தியாசம் அவன் கண்ணில் பட்டது.
ராகவன் வீட்டினர் வருகின்றனர் என்பதால் ஆரணியைப்போலவே அழகான சுடிதார் ஒன்றில்தான் அவரும் இருந்தார். ஆனால், மொத்தமான தாலிக்கொடியுடன் கூடவே பொலிவான ஒரு செயின். அப்படியே காதில் நல்ல தோடு, கையில் காப்பு, கைச்செயின் என்று தன் தரம் குன்றாதபடிக்கு அவர் இருக்க ஆரணியோ மெல்லிய செயின் ஒன்றுடன் நடமாடிக்கொண்டு இருந்தாள்.
நிகேதன் ஒரு பக்கம் சகாதேவன் ஒருபக்கம் கூடவே சுகிர்தனும் இன்னொரு பக்கம் என்று மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தது. சிலதைக் கயல் மறுத்தாள். சிலது குறிப்புப் பொருந்தாமல் போனது. சில வரன் அருமையாக இருந்தாலும் பொறுப்பு அல்லது நிலையற்ற வருமானம் என்று எப்படியோ தட்டிப்போனது. இப்படியே ஆறுமாதம் கழிந்த நிலையில், செண்டரில் ஆரணியோடு வேலை பார்க்கும் அனுவின் தூரத்து உறவினனான ராகவன் இவர்களின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தி வந்தான். கயலினி விரும்பியது போலவே ஆசிரியராகவும் இருந்துவிட எல்லோருக்குமே சந்தோசம். ராகவனுக்கும் கயலினியைப் பிடித்திருந்தது.
பெண் பார்க்கும் படலம், சம்மந்தக் கலப்பு, சீதனப்பேச்சு என்று அனைத்துக்கும் சகாதேவனும் மனைவி பிள்ளைகளோடு வந்து நின்று, நிகேதனோடு சேர்ந்து அனைத்தையும் செய்து முடித்தார்.
ஈழத்தவர்களின் வழக்கமாக வீடும் காணியும் பெண்ணுக்கே சீதனமாகச் சேரும். கூடவே நகை நட்டுகள், திருமணச் செலவு, மருமகனுக்கு பைக் என்று வெகு தாராளமாகவே சீதனம் பேசி முடிவானது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மாலினிக்கு, உள்ளூர பெரும் வியப்பு. மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் போனதற்குப் பிறகு இப்போதுதான் வருகிறார். வந்து பார்த்தால் எல்லாமே மாறியிருந்தது. அதே வீடுதான். ஆனால், காயப்பட்டிருந்த இடங்கள் எல்லாம் நேர் செய்யப்பட்டு, யன்னல்கள், கதவுகள் பழுது பார்க்கப்பட்டு, வீடும் புதுவர்ணம் பூசி அழகாகக் காட்சி தந்தது. முன் முற்றம், தோட்டம், ஆரணியின் டெரெஸ் என்று எல்லாமே அழுது வடிந்த தோற்றம் மாறி சீரமைக்கப்பட்டு மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உரு மாறி இருந்தது. முக்கியமாகப் புது சோபா செட், நவீன ரகத் தொலைகாட்சி, அறைகளுக்கு நல்ல கட்டில்கள், கப்போர்ட்டுகள், கிட்சன் செட், வோஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அவர்களின் தரமே உயர்ந்திருந்தது.
இது எல்லாவற்றையும் விட, வாயில்லா பூச்சியாக எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, இறுகிபோய்த் திரிந்த நிகேதனிடம் தெரிந்த நிமிர்வும் ஆளுமையும் தான் அவரின் புருவங்களை உச்சிமேட்டுக்கே கொண்டுபோயிற்று.
மாப்பிள்ளை வீட்டினரைப் பற்றி விசாரித்தது, அவர்களோடு பேசிய முறை, சீதனம் பற்றிய தெளிவான முடிவுகளை எடுத்தது என்று அனைத்திலுமே மிகுந்த தெளிவும் நிதானமும் காட்டினான். உண்மையைச் சொல்லப்போனால் சகாதேவன் மூத்த மகன் என்பதால் கூட நின்றார். அவ்வளவுதான்.
தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்குத்தான் போவேன் என்று இருந்தவனை மாற்றி, ஒரு டிரைவராக்கி, பிறகு அதையே சொந்தத் தொழிலாக்கி, இன்றைக்கு இரண்டு வாகனத்துக்குச் சொந்தக்காரனாக மாற்றிவிட்டாளே இந்தப் பெண் என்று ஆரணியைக் குறித்தும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றோடு கயலின் விடுமுறை முடிந்து நாளையே யாழ்ப்பாணம் புறப்பட வேண்டும் என்பதில், அவளை வெளியே அழைத்துச் செல்ல அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் ராகவன். மண்டபம் பார்த்தல், மண்டப அலங்காரம், மேக்கப், எந்த ஐய்யரை அழைப்பது, சமையல் பொறுப்பு என்று மிச்சம் சொச்சமாக இருக்கும் திருமணம் சம்மந்தமான பேச்சுக்களைப் பேச என்று அவனுடைய பெற்றோரும் வந்திருந்தனர்.
கண்களில் கனவும் உதட்டினில் சிரிப்புமாக வருங்காலக் கணவனோடு புறப்பட்ட மகளின் தோற்றம் கண்டு அமராவதி அம்மாக்கு மனம் பூரித்துப் போயிற்று. கண்ணோரம் ததும்பிய விழிநீரை உள்ளுக்குள்ளேயே இழுத்துக்கொண்டு, “கவனமா போயிட்டு வாங்கோ.” என்று சிரித்தமுகமாக அனுப்பிவைத்தார்.
நினைவு தெரிந்த காலமெல்லாம் வறுமை. ஒரேயொரு பெண் பிள்ளை. அவளின் திருமணம் என்னாகுமோ எப்படி நடக்குமோ என்பது பெரிய கவலை. இன்றோ அனைத்தும் தீர்ந்து அருமையான வரன் அமைந்து போதும் போதும் என்கிற அளவில் சீதனமும் கொடுத்து அவளுக்குப் பிடித்தவனோடு மணமும் நடக்கப்போகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்?
மகன்களும் கூடவே அமர்ந்திருக்க, திருமணம் குறித்தான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தது. நடுநடுவே தன் கருத்தையும் கேட்டுக்கொள்ளும் மகன்களுக்குப் பதில்களைச் சொல்லியபடி சம்மந்தி குடும்பத்துடன் சந்தோசமாக அளவளாவிக் கொண்டிருந்தார், அவர்.
இந்தக் கால இடைவெளிக்குள் சமையல் விற்பன்னியாகிவிட்ட ஆரணி விருந்தைச் சமைத்து முடித்திருந்தாள். சகாதேவன் குடும்பம், மாப்பிள்ளை வீட்டினர், நிகேதன் என்று எல்லோரையும் மேசையில் அமர்த்திப் பரிமாறினாள். அன்று போலவே அவளின் கவனிப்பில் நிகேதன் விசேட இடம் பிடித்திருப்பதைக் கவனித்த மாலினிக்கு, ஆரணியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
மூன்று வருடங்களைத் தாண்டியாயிற்று. இன்னுமே வேலைக்குப் போகிறாள். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. கயலினியின் திருமணப் பொறுப்பை முழுமையாக நிகேதன் தான் ஏற்றிருக்கிறான். அது எவ்வளவு பெரிய சுமை? ஆனாலும் நிகேதனின் மீதான அவளின் அன்பும் கவனிப்பும் குறையவே இல்லை.
எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது என்று மாலினிக்கு விளங்கவே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் மாலினியை விடவும் வசதியான வீட்டுப்பெண் தான் ஆரணி. அப்படியானவள் இங்கு வந்திருந்து இவர்களோடு மல்லுக்கட்டி கணவனையும் உயர்த்தித் தானும் உயர்ந்து நிற்கிறாளே. அவருக்குள் ஓடிய இந்த எண்ணங்கள் அடிக்கடி ஆரணியையே கவனிக்க வைத்தது.
ஆரணியும் இதைக் கவனிக்காமல் இல்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு வேலைகளைப் பார்த்தாள். எல்லோரும் உணவை முடித்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கடைசியாகக் கையைக் கழுவிக்கொண்டு வந்த நிகேதன், “நானும் அப்ப இருந்து பாக்கிறன், என்னடி அது ரகசிய சிரிப்பு?” என்று, மற்றவர்களைக் கவராமல் கிசுகிசுத்தான்.
“இல்ல, உன்ர அண்ணி இப்பதான் என்ன பொம்பிளை பாக்கிறா. டிஸ்டப் பண்ணாம போ.” என்று, நகைக்கும் குரலில் அவளும் ரகசியமாகச் சொன்னாள்.
அவளை முறைத்தான் அவன். “சும்மா அவவை வம்புக்கு இழுக்காத ஆரா!” என்று அதட்டினான். ஆனாலும், அவனை அறியாமலேயே அவன் கவனம் மாலினியில் குவிந்தது.
அங்கே பேச்சில் கவனமாக இருந்தாலும் அவரின் பார்வை உண்மையாகவே ஒருவித அளவிடும் நோக்குடன் இவளைத்தான் தொட்டுத் தொட்டு மீண்டது. இப்போது அவனுக்கும் சிரிப்புவர அவளைப் பார்த்தான். குறும்புடன் கண்ணடித்துவிட்டுப் போனாள் ஆரணி.
‘இவளை.. எல்லாரையும் வச்சுக்கொண்டு செய்யிற வேலைய பார்..’ தன் முறுவலை மறைத்துக்கொண்டு கூடத்துக்கு நடந்தான்.
அதன்பிறகும், ஏன் பார்க்கிறார் என்கிற கேள்வியுடன் அவன் பார்வை மாலினியைத் தொட்டுத் தொட்டு மீண்டபோதுதான் அவருக்கும் ஆரணிக்குமான வித்தியாசம் அவன் கண்ணில் பட்டது.
ராகவன் வீட்டினர் வருகின்றனர் என்பதால் ஆரணியைப்போலவே அழகான சுடிதார் ஒன்றில்தான் அவரும் இருந்தார். ஆனால், மொத்தமான தாலிக்கொடியுடன் கூடவே பொலிவான ஒரு செயின். அப்படியே காதில் நல்ல தோடு, கையில் காப்பு, கைச்செயின் என்று தன் தரம் குன்றாதபடிக்கு அவர் இருக்க ஆரணியோ மெல்லிய செயின் ஒன்றுடன் நடமாடிக்கொண்டு இருந்தாள்.