அத்தியாயம் 25
அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார்.
இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டுபோய் அவளுக்குப் போட்டால் அவரின் மகளின் திருமணம் என்னாவது?
சீதனப் பேச்சின்போது நீங்கள் கேட்பதை எல்லாம் தருகிறோம் என்று பெரிதாக அளந்துவிட்டு, இனிப்போய் அது முடியாது, குறையுங்கள் என்று சொன்னால் என்னாகும்?
மனம் முழுக்கச் சந்தோசம் ததும்பித் ததும்பி வழிய, அச்சடித்து வந்த அழைப்பிதழ்களைக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டது என்ன, அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு வீட்டில் வந்து குந்திக்கொண்டு இருப்பது என்ன?
இன்றே நெருங்கிய உறவினர்களை அழைக்கத் திட்டமிட்டு இருந்ததில், அவரின் மனதில் மகளின் கல்யாணக் கொண்டாட்டம் இன்றே ஆரம்பித்திருந்தது. அதை தன் காரியத்தால் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டானே மகன்.
முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க வருங்காலக் கணவனோடு கரம் கோர்த்துத் திரிந்த மகள் கண்ணுக்குள் வந்து நின்று கலங்கடித்தாள்.
இந்தத் திருமணத்துக்கு ஏதாவது பாதகம் நடந்துவிட்டால் அவள் என்ன ஆவாள்? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. எல்லாம் அந்தப் பாதகியால்!
என்னவோ அவன் செய்யக் கூடாத ஒன்றைச் செய்துவிட்டதுபோல் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் முடங்கிக்கொண்டு இருந்தது நிகேதனின் பொறுமையைச் சோதித்தது.
“ப்ச் அம்மா! இப்ப என்ன நடந்திட்டுது எண்டு இப்பிடி இருக்கிறீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?” அதற்குமேலும் அங்கே நிலவிய அமைதியைப் பொறுக்க மாட்டாமல் கேட்டான்.
“இன்னும் என்ன நடக்கோணும்? அதுதான் ஒரேடியா என்ர தலையில மண்ணை அள்ளி போட்டுட்டியே. போ போய் இன்னும் என்ன உன்ர மனுசிக்கு வாங்கிக் குடுக்கலாம் எண்டு யோசி!” இருந்த சினத்துக்கு சுள் என்று எரிந்து விழுந்தார் அவர்.
அண்ணா அண்ணியையும் வைத்துக்கொண்டு என்ன பேச்சு இது? “கோபத்தில என்ன கதைக்கிறது எண்டு யோசிக்காம கதைக்காதீங்கம்மா! கயலுக்கு கலியாணம் நடக்கேக்க அவள் வெறும் கழுத்தோட நிண்டா நல்லாவா இருக்கும்? அதுதான் தாலிக்கொடி செய்தனான். அத அண்ணா குடும்பமும் நிக்கிற நேரம் கோயில்ல வச்சு கட்டினான். அதுக்கு என்னத்துக்கு இந்தக் குதி குதிக்கிறீங்க.”
அவர்களின் வாழ்வின் மிக மிக இனிமையான தருணம். அவள் ஆசைப்பட்ட ஒன்றை முதன் முதலாகச் செய்திருக்கிறான். அதனை அனுபவிக்க முடியாமல் என்ன துன்பம் இது என்று இருந்தது அவனுக்கு.
“அதுக்கு அவ்வளவு மொத்தக் கொடி அவளுக்குத் தேவையே? அதுவும் கயலுக்கு கலியாணம் நடக்கப்போற இந்த நேரம். கூடப்பிறந்தவளில கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தா இப்பிடி நடந்திருப்பியா? இனி அவளின்ர கலியாணத்துக்கு என்ன செய்யப்போறாய்? ரோட்டுல பிச்சை எடுப்பியே?”
“நீங்களே இவ்வளவு யோசிக்கேக்க நான் யோசிக்காம இருப்பனா? பேசாம போய் பாக்கிற வேலைய பாருங்கம்மா. கயலின்ர கலியாணம் ஒரு குறையும் இல்லாம நடக்கும்.” எரிச்சலுடன் சிடுசிடுத்தான் அவன்.
அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சகாதேவனும் இப்போது நிகேதனுக்குத் துணையாக வந்தார். “அதுதான் அவனே சொல்லுறான் தானே அம்மா. நீங்க வாங்க நாங்க கார்ட் குடுக்கிற வேலைய பாப்பம்.” என்று அழைத்தார்.
அவருக்கும், நிகேதன் செய்தது சரி என்றே தோன்றிற்று. என்ன பவுனின் அளவைக் குறைத்திருக்கலாம். ஆனால், கயலின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் நடக்கும் என்றால் அதைப்பற்றியும் யோசிக்க ஒன்றுமில்லை என்றுதான் எண்ணினார்.
மகளின் திருமணம் பேசிய பேச்சுப்படி நடக்காதோ என்கிற ஒற்றை விடயத்திலேயே நிலைகுலைந்து போயிருந்த அமராவதி எதையும் விளங்கிக்கொள்ள மறுத்தார்.
“நீயும் இவன்ர கதையை நம்புறியா தம்பி? இவன் மனம் வச்சாலும் அவள் விடமாட்டாள். உனக்கு அவளைப்பற்றித் தெரியாது. நல்லவள் மாதிரி நடிச்சு இவனை முட்டாளாக்கி வச்சிருக்கிறாள்.”
“இப்ப என்னத்துக்கு தேவை இல்லாம அவளை இழுக்கிறீங்க. அவளுக்கு ஒண்டும் தெரியாது. என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னைப்பற்றி மட்டும் கதைங்க!” என்றான் நிகேதன் சுள்ளென்று. தமையனிடமே தன் மனைவியைப் பற்றி அவர் குறை சொன்னதைப் பொறுக்க முடியவில்லை அவனுக்கு.
“பாத்தியா அவளைப்பற்றி ஒண்டு சொன்னதும் இவனுக்கு எப்பிடி கோபம் வருது எண்டு. எல்லாம் அவள் போட்டு வச்சிருக்கிற தூபம்.” என்று பெரிய மகனிடம் முறையிட்டுவிட்டு,
“ஒண்டும் தெரியாமத்தான் சும்மா போற கோயிலுக்கு காலியாண பொம்பிளை மாதிரி சீவி சிங்காரிச்சுக்கொண்டு வந்தவளோ? அவளின்ர நடிப்பை நீ வேணுமெண்டா நம்பு. நான் நம்ப மாட்டன். ஆனா, உன்ன சொல்லி குற்றமில்லை. அவள் எல்லாம் தண்ணிக்கால நெருப்பை கொண்டு போறவள். நல்லவள் மாதிரி இந்தப் பக்கம் நடிச்சுக்கொண்டு உள்ளுக்க உன்ன ஏவி காரியம் சாதிச்சிருக்கிறாள். அந்தக் கெட்டித்தனம் இந்த வயசிலையும் எனக்கு வருது இல்லையே!” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
“பெத்தது ஒரேயொரு பொம்பிளை பிள்ளையை. அவளை கரை ஏத்துறதுக்கிடையில நான் படுற பாடு இருக்கே.. கடவுளே..”
அவர் அரற்ற ஆரம்பிக்கவும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிகேதன். ஆரணிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணி செய்த காரியங்கள் இப்படி அவனுக்கு எதிராகவே திரும்பும் என்று அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
நிமிர்ந்தவன் அவர்களின் அறை வாசலில் நின்ற ஆரணியைக் கண்டு திகைத்தான். அவனைக் காதலித்த பாவத்துக்கு இன்னும் என்னவெல்லாம் கேட்கப் போகிறாள் அவனுடையவள். அந்த இடத்தில் தன்னால் முடிந்த ஒன்றாக அவளை விழிகளால் தேற்ற முயன்றான்.
அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார்.
இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டுபோய் அவளுக்குப் போட்டால் அவரின் மகளின் திருமணம் என்னாவது?
சீதனப் பேச்சின்போது நீங்கள் கேட்பதை எல்லாம் தருகிறோம் என்று பெரிதாக அளந்துவிட்டு, இனிப்போய் அது முடியாது, குறையுங்கள் என்று சொன்னால் என்னாகும்?
மனம் முழுக்கச் சந்தோசம் ததும்பித் ததும்பி வழிய, அச்சடித்து வந்த அழைப்பிதழ்களைக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டது என்ன, அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு வீட்டில் வந்து குந்திக்கொண்டு இருப்பது என்ன?
இன்றே நெருங்கிய உறவினர்களை அழைக்கத் திட்டமிட்டு இருந்ததில், அவரின் மனதில் மகளின் கல்யாணக் கொண்டாட்டம் இன்றே ஆரம்பித்திருந்தது. அதை தன் காரியத்தால் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டானே மகன்.
முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க வருங்காலக் கணவனோடு கரம் கோர்த்துத் திரிந்த மகள் கண்ணுக்குள் வந்து நின்று கலங்கடித்தாள்.
இந்தத் திருமணத்துக்கு ஏதாவது பாதகம் நடந்துவிட்டால் அவள் என்ன ஆவாள்? நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. எல்லாம் அந்தப் பாதகியால்!
என்னவோ அவன் செய்யக் கூடாத ஒன்றைச் செய்துவிட்டதுபோல் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் முடங்கிக்கொண்டு இருந்தது நிகேதனின் பொறுமையைச் சோதித்தது.
“ப்ச் அம்மா! இப்ப என்ன நடந்திட்டுது எண்டு இப்பிடி இருக்கிறீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?” அதற்குமேலும் அங்கே நிலவிய அமைதியைப் பொறுக்க மாட்டாமல் கேட்டான்.
“இன்னும் என்ன நடக்கோணும்? அதுதான் ஒரேடியா என்ர தலையில மண்ணை அள்ளி போட்டுட்டியே. போ போய் இன்னும் என்ன உன்ர மனுசிக்கு வாங்கிக் குடுக்கலாம் எண்டு யோசி!” இருந்த சினத்துக்கு சுள் என்று எரிந்து விழுந்தார் அவர்.
அண்ணா அண்ணியையும் வைத்துக்கொண்டு என்ன பேச்சு இது? “கோபத்தில என்ன கதைக்கிறது எண்டு யோசிக்காம கதைக்காதீங்கம்மா! கயலுக்கு கலியாணம் நடக்கேக்க அவள் வெறும் கழுத்தோட நிண்டா நல்லாவா இருக்கும்? அதுதான் தாலிக்கொடி செய்தனான். அத அண்ணா குடும்பமும் நிக்கிற நேரம் கோயில்ல வச்சு கட்டினான். அதுக்கு என்னத்துக்கு இந்தக் குதி குதிக்கிறீங்க.”
அவர்களின் வாழ்வின் மிக மிக இனிமையான தருணம். அவள் ஆசைப்பட்ட ஒன்றை முதன் முதலாகச் செய்திருக்கிறான். அதனை அனுபவிக்க முடியாமல் என்ன துன்பம் இது என்று இருந்தது அவனுக்கு.
“அதுக்கு அவ்வளவு மொத்தக் கொடி அவளுக்குத் தேவையே? அதுவும் கயலுக்கு கலியாணம் நடக்கப்போற இந்த நேரம். கூடப்பிறந்தவளில கொஞ்சமாவது பாசம் இருந்திருந்தா இப்பிடி நடந்திருப்பியா? இனி அவளின்ர கலியாணத்துக்கு என்ன செய்யப்போறாய்? ரோட்டுல பிச்சை எடுப்பியே?”
“நீங்களே இவ்வளவு யோசிக்கேக்க நான் யோசிக்காம இருப்பனா? பேசாம போய் பாக்கிற வேலைய பாருங்கம்மா. கயலின்ர கலியாணம் ஒரு குறையும் இல்லாம நடக்கும்.” எரிச்சலுடன் சிடுசிடுத்தான் அவன்.
அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சகாதேவனும் இப்போது நிகேதனுக்குத் துணையாக வந்தார். “அதுதான் அவனே சொல்லுறான் தானே அம்மா. நீங்க வாங்க நாங்க கார்ட் குடுக்கிற வேலைய பாப்பம்.” என்று அழைத்தார்.
அவருக்கும், நிகேதன் செய்தது சரி என்றே தோன்றிற்று. என்ன பவுனின் அளவைக் குறைத்திருக்கலாம். ஆனால், கயலின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் நடக்கும் என்றால் அதைப்பற்றியும் யோசிக்க ஒன்றுமில்லை என்றுதான் எண்ணினார்.
மகளின் திருமணம் பேசிய பேச்சுப்படி நடக்காதோ என்கிற ஒற்றை விடயத்திலேயே நிலைகுலைந்து போயிருந்த அமராவதி எதையும் விளங்கிக்கொள்ள மறுத்தார்.
“நீயும் இவன்ர கதையை நம்புறியா தம்பி? இவன் மனம் வச்சாலும் அவள் விடமாட்டாள். உனக்கு அவளைப்பற்றித் தெரியாது. நல்லவள் மாதிரி நடிச்சு இவனை முட்டாளாக்கி வச்சிருக்கிறாள்.”
“இப்ப என்னத்துக்கு தேவை இல்லாம அவளை இழுக்கிறீங்க. அவளுக்கு ஒண்டும் தெரியாது. என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னைப்பற்றி மட்டும் கதைங்க!” என்றான் நிகேதன் சுள்ளென்று. தமையனிடமே தன் மனைவியைப் பற்றி அவர் குறை சொன்னதைப் பொறுக்க முடியவில்லை அவனுக்கு.
“பாத்தியா அவளைப்பற்றி ஒண்டு சொன்னதும் இவனுக்கு எப்பிடி கோபம் வருது எண்டு. எல்லாம் அவள் போட்டு வச்சிருக்கிற தூபம்.” என்று பெரிய மகனிடம் முறையிட்டுவிட்டு,
“ஒண்டும் தெரியாமத்தான் சும்மா போற கோயிலுக்கு காலியாண பொம்பிளை மாதிரி சீவி சிங்காரிச்சுக்கொண்டு வந்தவளோ? அவளின்ர நடிப்பை நீ வேணுமெண்டா நம்பு. நான் நம்ப மாட்டன். ஆனா, உன்ன சொல்லி குற்றமில்லை. அவள் எல்லாம் தண்ணிக்கால நெருப்பை கொண்டு போறவள். நல்லவள் மாதிரி இந்தப் பக்கம் நடிச்சுக்கொண்டு உள்ளுக்க உன்ன ஏவி காரியம் சாதிச்சிருக்கிறாள். அந்தக் கெட்டித்தனம் இந்த வயசிலையும் எனக்கு வருது இல்லையே!” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
“பெத்தது ஒரேயொரு பொம்பிளை பிள்ளையை. அவளை கரை ஏத்துறதுக்கிடையில நான் படுற பாடு இருக்கே.. கடவுளே..”
அவர் அரற்ற ஆரம்பிக்கவும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிகேதன். ஆரணிக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க எண்ணி செய்த காரியங்கள் இப்படி அவனுக்கு எதிராகவே திரும்பும் என்று அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
நிமிர்ந்தவன் அவர்களின் அறை வாசலில் நின்ற ஆரணியைக் கண்டு திகைத்தான். அவனைக் காதலித்த பாவத்துக்கு இன்னும் என்னவெல்லாம் கேட்கப் போகிறாள் அவனுடையவள். அந்த இடத்தில் தன்னால் முடிந்த ஒன்றாக அவளை விழிகளால் தேற்ற முயன்றான்.