அத்தியாயம் 29
கயலினியின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அவர்களின் இனசனம், சொந்தபந்தம், அயலட்டை எல்லோருமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடாத்தி முடித்தான் நிகேதன்.
கையில் பிடிக்க முடியாத அளவு சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தார் அமராவதி. அவருக்கு எல்லாமே கனவு போலிருந்தது. மங்களம் நிறைந்து முகம் ஜொலிக்க, புதுத் தாலிக்கொடி மின்ன கணவனோடு அமர்ந்திருந்த மகள், ‘இல்லை அம்மா, எல்லாம் நிஜம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சகாதேவனும் நெகிழ்ந்து போயிருந்தார். அவரின் தலையில் தான் விழப்போகிறது என்று பயந்துகொண்டிருந்த பெரும் சுமை ஒன்றை இன்றைக்கு நிகேதன் இறக்கி வைத்திருக்கிறான். இத்தனை காலமாக அவர் குடும்பத்தைப் பார்த்ததற்குச் சமனாக, ஒற்றை ஆளாக நின்று தங்கையின் திருமணத்தை முடித்து உனக்கு நான் எதிலும் குறைந்துவிடவில்லை என்று காட்டிய தம்பியை நெஞ்சார அணைத்துக்கொண்டார்.
“உன்னில எனக்கு நம்பிக்கை இருந்ததுதான். எண்டாலும் ஒரு பயமும் இருந்தது. ஆனா இண்டைக்கு மனதுக்கு நிறைவா இருக்கு நிகேதன்.” என்று அவனிடம் இயம்பிவிட்டு, “உன்ர சப்போர்ட் இல்லாம அவன் கயலுக்கு இவ்வளவும் செய்திருக்க ஏலாதம்மா. நீயும் அருமையான பிள்ளைதான்.” என்று ஆரணியிடமும் சொன்னார்.
நிகேதன் ஆரணி இருவருக்குமே கூடப் பெரும் நிறைவுதான். என்னவோ நேற்றுத்தான் பல்கலை வளாகத்துக்குள் காதலர்களாகச் சுற்றி வந்தது போலிருந்தது. இன்று பார்த்தால், கணவன் மனைவியாக நின்று ஒரு திருமணத்தையே முன்னெடுத்து சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.
“அது என்னவோ காலம் சரியில்ல போல. அதுதான் கொஞ்சக் காலம் பொறுப்பில்லாம இருந்திட்டான். மற்றும்படி என்ர மகன் கெட்டிக்காரன்.” என்று அவர்களின் பேச்சில் அமராவதியும் இணைந்துகொண்டார். பாசத்துடன் மகனின் முதுகை வருடிக்கொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்த ஆரணிக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. இவர் எப்போதிலிருந்து இவ்வளவு நல்லவராக மாறினார்? கேள்வியுடன் நிகேதனைப் பார்க்க, அவனும் அது புரிந்து அவளிடம் குறுநகை புரிந்தான்.
தங்கக் கரையில் கற்கள் மின்னும் பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் காலையில் தீட்டிக்கொண்ட சந்தனம் குங்குமம் இன்னுமே அழியாமல் இருக்க, முகத்தில் களைப்பும் களையும் சரிசமனாகக் கலந்து தெரிய, முதுகைத் தடவிக்கொடுத்த அன்னைக்கு மகனாக அவர் அருகில் நின்றபடி அவளிடம் கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டு அவளின் உள்ளம் கொள்ளை போயிற்று.
‘சொன்னாலும் சொல்லாட்டியும் நீ அழகன் தான்டா!’ மனம் சொன்ன கூற்றை அவனிடம் சொல்ல முடியாமல் சுற்றியிருந்தவர்கள் தடுத்ததால் அவள் இதழ்கள் குறும்பில் நெளிந்தது.
என்னவோ தன்னைப் பற்றித்தான் நினைக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து போயிற்று. பொய்யான முறைப்புடன் பார்வையை வேகமாக அகற்றிக்கொண்டான்.
அடுத்த ஒரு வாரமும் சடங்கு, சம்பிரதாயம், கோயில், நேர்த்திக்கடன், விருந்தாடல் என்று நாட்கள் மின்னலாக விரைந்து மறைய அதன் பிறகுதான் குடும்பமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ராகவன் இன்னுமே மற்றவர்களோடு பெரிதாக இணைந்துகொள்ளாவிடினும் நல்லமாதிரித்தான் என்று பார்த்தவரையில் தெரிந்தான். கயலிடம் அன்பையும் அந்நியோன்யத்தையும் காட்டினான். அதுவே எல்லோருக்கும் போதுமாயிருந்தது.
கயலுக்கு இன்னுமே யாழ்ப்பாணத்தில் தான் வேலை. ராகவனுக்கு மன்னார். அவளின் மாற்றல் இரண்டொரு மாதத்தில் மன்னாருக்குக் கிடைக்கும் என்பதில் அதுவரை வழமை போலவே அவள் யாழ்ப்பாணத்திலும் ராகவன் தன் பெற்றோர் வீட்டிலும் வசிப்பதாகவும், கயல் இங்கே வந்தபிறகு இருவரும் இங்கே வசிப்பதாகவும் முடிவாயிற்று. இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் புதுத் தம்பதியர் வேலைக்குப் புறப்பட்டனர்.
நிகேதனின் ஓட்டம் மீண்டும் ஆரம்பித்திருந்தது. கடனைக் கட்டவேண்டும். வாகனப் பாத்திரத்தை மீட்க வேண்டும். வட்டி வேறு வாயைப் பிளந்துகொண்டு நின்றது. பெரிய கடமை ஒன்றை முடித்திருக்கிறார்கள். ஆனாலும், ஆசுவாசமாக இருந்து இளைப்பாற முடியவில்லை.
அன்று வந்தவனின் முகமே சரியில்லை. என்ன என்று கேட்டால் நிச்சயம் சொல்லமாட்டான். நேரம் வேறு இரவு பதினொன்றைத் தாண்டி இருந்தது. அதில், எதுவும் பேசாமல் குளித்துவிட்டு வந்தவனுக்கு உணவைக் கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியா? அம்மா?”
“இவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடாம இருப்பமா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுது. மாமி நித்திரையும் ஆகிட்டா. கொஞ்சம் நேரத்துக்கு வந்து சாப்பிட்டுத் திரும்பப் போகலாமே நிக்ஸ். இப்பிடி ஒவ்வொரு நாளும் லேட்டா சாப்பிடுறது உடம்புக்கு நல்லமில்லையடா.” இதமான குரலில் எடுத்துச் சொன்னாள் அவள்.
“கடன் முடியிறவரைக்கும் அதெல்லாம் பாக்கேலாது ஆரா. கொஞ்ச நாளைக்கு இப்பிடித்தான்.” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாகச் சொன்னான். “எலெக்ஷன் ஆரம்பிக்கப் போகுது ஆரா. ஒரு எம்.பி ஹயருக்குக் கேட்டிருக்கிறார். ஒரு மாதத்துக்கு. நாலு வேனையும் கொண்டு போகப்போறம்.” என்றவனை மெல்லிய திகைப்புடன் பார்த்தாள் ஆரணி.
“என்னடா சொல்லுறாய்? ஒரு மாதத்துக்கா? இங்கேயா கொழும்பா?” இங்கு என்றால் அவ்வப்போது ஓடிவந்து அவளையும் பார்த்துக்கொண்டு போவான். கொழும்பு என்றால் எலெக்ஷன் முடிந்த பிறகுதான் காணலாம். போனமுறையாவது பதினைந்து நாட்கள். இந்தமுறை நினைக்கவே அவளுக்கு மலைப்பாயிற்று.
“கொழும்புதான். வேற வழியில்ல ஆரா. போய்வந்தா தொகையா காசு கிடைக்கும். சமாளிக்க மாட்டியா?” என்றான் அவளின் முகம் பார்த்து.
அவள் சிரமப்பட்டுத் தலையை ஆட்டினாள். “சமாளிக்கிறன். சமாளிக்கத்தானே வேணும்.” உள்ளே போய்விட்ட குரலில் இயம்பியவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான் நிகேதன்.
அவன் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாளை கூட அவளால் கடத்த இயலாது என்று தெரிந்தாலும் கழுத்தை நெரிக்கும் கடனுக்கும் வட்டிக்குமிடையில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
கயலினியின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அவர்களின் இனசனம், சொந்தபந்தம், அயலட்டை எல்லோருமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடாத்தி முடித்தான் நிகேதன்.
கையில் பிடிக்க முடியாத அளவு சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தார் அமராவதி. அவருக்கு எல்லாமே கனவு போலிருந்தது. மங்களம் நிறைந்து முகம் ஜொலிக்க, புதுத் தாலிக்கொடி மின்ன கணவனோடு அமர்ந்திருந்த மகள், ‘இல்லை அம்மா, எல்லாம் நிஜம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சகாதேவனும் நெகிழ்ந்து போயிருந்தார். அவரின் தலையில் தான் விழப்போகிறது என்று பயந்துகொண்டிருந்த பெரும் சுமை ஒன்றை இன்றைக்கு நிகேதன் இறக்கி வைத்திருக்கிறான். இத்தனை காலமாக அவர் குடும்பத்தைப் பார்த்ததற்குச் சமனாக, ஒற்றை ஆளாக நின்று தங்கையின் திருமணத்தை முடித்து உனக்கு நான் எதிலும் குறைந்துவிடவில்லை என்று காட்டிய தம்பியை நெஞ்சார அணைத்துக்கொண்டார்.
“உன்னில எனக்கு நம்பிக்கை இருந்ததுதான். எண்டாலும் ஒரு பயமும் இருந்தது. ஆனா இண்டைக்கு மனதுக்கு நிறைவா இருக்கு நிகேதன்.” என்று அவனிடம் இயம்பிவிட்டு, “உன்ர சப்போர்ட் இல்லாம அவன் கயலுக்கு இவ்வளவும் செய்திருக்க ஏலாதம்மா. நீயும் அருமையான பிள்ளைதான்.” என்று ஆரணியிடமும் சொன்னார்.
நிகேதன் ஆரணி இருவருக்குமே கூடப் பெரும் நிறைவுதான். என்னவோ நேற்றுத்தான் பல்கலை வளாகத்துக்குள் காதலர்களாகச் சுற்றி வந்தது போலிருந்தது. இன்று பார்த்தால், கணவன் மனைவியாக நின்று ஒரு திருமணத்தையே முன்னெடுத்து சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.
“அது என்னவோ காலம் சரியில்ல போல. அதுதான் கொஞ்சக் காலம் பொறுப்பில்லாம இருந்திட்டான். மற்றும்படி என்ர மகன் கெட்டிக்காரன்.” என்று அவர்களின் பேச்சில் அமராவதியும் இணைந்துகொண்டார். பாசத்துடன் மகனின் முதுகை வருடிக்கொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்த ஆரணிக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. இவர் எப்போதிலிருந்து இவ்வளவு நல்லவராக மாறினார்? கேள்வியுடன் நிகேதனைப் பார்க்க, அவனும் அது புரிந்து அவளிடம் குறுநகை புரிந்தான்.
தங்கக் கரையில் கற்கள் மின்னும் பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் காலையில் தீட்டிக்கொண்ட சந்தனம் குங்குமம் இன்னுமே அழியாமல் இருக்க, முகத்தில் களைப்பும் களையும் சரிசமனாகக் கலந்து தெரிய, முதுகைத் தடவிக்கொடுத்த அன்னைக்கு மகனாக அவர் அருகில் நின்றபடி அவளிடம் கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டு அவளின் உள்ளம் கொள்ளை போயிற்று.
‘சொன்னாலும் சொல்லாட்டியும் நீ அழகன் தான்டா!’ மனம் சொன்ன கூற்றை அவனிடம் சொல்ல முடியாமல் சுற்றியிருந்தவர்கள் தடுத்ததால் அவள் இதழ்கள் குறும்பில் நெளிந்தது.
என்னவோ தன்னைப் பற்றித்தான் நினைக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து போயிற்று. பொய்யான முறைப்புடன் பார்வையை வேகமாக அகற்றிக்கொண்டான்.
அடுத்த ஒரு வாரமும் சடங்கு, சம்பிரதாயம், கோயில், நேர்த்திக்கடன், விருந்தாடல் என்று நாட்கள் மின்னலாக விரைந்து மறைய அதன் பிறகுதான் குடும்பமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ராகவன் இன்னுமே மற்றவர்களோடு பெரிதாக இணைந்துகொள்ளாவிடினும் நல்லமாதிரித்தான் என்று பார்த்தவரையில் தெரிந்தான். கயலிடம் அன்பையும் அந்நியோன்யத்தையும் காட்டினான். அதுவே எல்லோருக்கும் போதுமாயிருந்தது.
கயலுக்கு இன்னுமே யாழ்ப்பாணத்தில் தான் வேலை. ராகவனுக்கு மன்னார். அவளின் மாற்றல் இரண்டொரு மாதத்தில் மன்னாருக்குக் கிடைக்கும் என்பதில் அதுவரை வழமை போலவே அவள் யாழ்ப்பாணத்திலும் ராகவன் தன் பெற்றோர் வீட்டிலும் வசிப்பதாகவும், கயல் இங்கே வந்தபிறகு இருவரும் இங்கே வசிப்பதாகவும் முடிவாயிற்று. இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் புதுத் தம்பதியர் வேலைக்குப் புறப்பட்டனர்.
நிகேதனின் ஓட்டம் மீண்டும் ஆரம்பித்திருந்தது. கடனைக் கட்டவேண்டும். வாகனப் பாத்திரத்தை மீட்க வேண்டும். வட்டி வேறு வாயைப் பிளந்துகொண்டு நின்றது. பெரிய கடமை ஒன்றை முடித்திருக்கிறார்கள். ஆனாலும், ஆசுவாசமாக இருந்து இளைப்பாற முடியவில்லை.
அன்று வந்தவனின் முகமே சரியில்லை. என்ன என்று கேட்டால் நிச்சயம் சொல்லமாட்டான். நேரம் வேறு இரவு பதினொன்றைத் தாண்டி இருந்தது. அதில், எதுவும் பேசாமல் குளித்துவிட்டு வந்தவனுக்கு உணவைக் கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியா? அம்மா?”
“இவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடாம இருப்பமா? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுது. மாமி நித்திரையும் ஆகிட்டா. கொஞ்சம் நேரத்துக்கு வந்து சாப்பிட்டுத் திரும்பப் போகலாமே நிக்ஸ். இப்பிடி ஒவ்வொரு நாளும் லேட்டா சாப்பிடுறது உடம்புக்கு நல்லமில்லையடா.” இதமான குரலில் எடுத்துச் சொன்னாள் அவள்.
“கடன் முடியிறவரைக்கும் அதெல்லாம் பாக்கேலாது ஆரா. கொஞ்ச நாளைக்கு இப்பிடித்தான்.” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாகச் சொன்னான். “எலெக்ஷன் ஆரம்பிக்கப் போகுது ஆரா. ஒரு எம்.பி ஹயருக்குக் கேட்டிருக்கிறார். ஒரு மாதத்துக்கு. நாலு வேனையும் கொண்டு போகப்போறம்.” என்றவனை மெல்லிய திகைப்புடன் பார்த்தாள் ஆரணி.
“என்னடா சொல்லுறாய்? ஒரு மாதத்துக்கா? இங்கேயா கொழும்பா?” இங்கு என்றால் அவ்வப்போது ஓடிவந்து அவளையும் பார்த்துக்கொண்டு போவான். கொழும்பு என்றால் எலெக்ஷன் முடிந்த பிறகுதான் காணலாம். போனமுறையாவது பதினைந்து நாட்கள். இந்தமுறை நினைக்கவே அவளுக்கு மலைப்பாயிற்று.
“கொழும்புதான். வேற வழியில்ல ஆரா. போய்வந்தா தொகையா காசு கிடைக்கும். சமாளிக்க மாட்டியா?” என்றான் அவளின் முகம் பார்த்து.
அவள் சிரமப்பட்டுத் தலையை ஆட்டினாள். “சமாளிக்கிறன். சமாளிக்கத்தானே வேணும்.” உள்ளே போய்விட்ட குரலில் இயம்பியவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான் நிகேதன்.
அவன் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாளை கூட அவளால் கடத்த இயலாது என்று தெரிந்தாலும் கழுத்தை நெரிக்கும் கடனுக்கும் வட்டிக்குமிடையில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.