அத்தியாயம் 32
நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை.
கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி வெயிலில் நின்று அதை மாற்றுவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போயிற்று. இதில் வந்தவர் சினந்து, அவரைச் சமாளித்துக் கிளிநொச்சிக்குக் கூட்டிக்கொண்டுபோய், திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விட்டுவிட்டு, கார்மெண்ட்ஸ் பிள்ளைகளை ஏற்றி, அவர்களை அவரவரின் வீடுகளில் இறக்கிவிட்டு வருவதற்குள், ‘என்ன வாழ்க்கையடா’ என்று வெறுத்துப்போனது அவனுக்கு.
வாகனத்தைக் கொண்டுவந்து வளவுக்குள் எப்போதும் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கதவைத் திறக்க, ராகவன் இவனை நோக்கி வருவது தெரிந்தது. நிகேதனின் புருவங்கள் சுருங்கிற்று. இவ்வளவு நேரத்துக்கு இவன் ஏன் உறங்கப்போகாமல் முழித்திருந்து, அவனைத் தேடி வேறு வருகிறான். திரும்பவும் ஏதும் சண்டையோ? நினைத்த மாத்திரத்திலேயே மூளைக்குள் சூடேறியது.
உடலும் மனமும் முற்றிலும் களைத்திருந்த இந்த நேரத்தில் எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ஆனால், அந்த வீட்டின் மருமகனைத் தவிர்க்க முடியாதே. வேறு வழியற்று அவனைக் கேள்வியாகப் பார்த்தான்.
“உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் நிகேதன். அதுதான் பாத்துக்கொண்டு நிண்டனான்.”
“சொல்லுங்கோ.”
“வேனுக்க இருந்தே கதைப்பமா?”
தனியாகக் கதைக்கப் பிரியப்படுகிறான். இறங்கப்போன நிகேதன் மீண்டும் அமர்ந்துகொண்டு, “ஏறுங்க.” என்றான்.
ஏறி அமர்ந்தவன் உடனே ஒன்றும் பேசிவிடவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தயங்குவது தெரிந்தது. அவன் யோசிக்க யோசிக்க இவனுக்கு என்னவோ என்று அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று.
“என்ன எண்டாலும் சும்மா சொல்லுங்க ராகவன்.” காத்திருக்கப் பொறுமையற்று ஊக்கினான்.
ஒரு முடிவு எடுத்தவன் போன்று இவன் புறமாகத் திரும்பிப் பேசினான் ராகவன். “இதைப் பற்றி நானும் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம் நிகேதன். ஆனா, வீட்டுப் பொம்பிளைகளை விட நாங்க கிளியரா கதைச்சிட்டா சோலி முடிஞ்சு எண்டு நினைச்சன்.” என்றுவிட்டுத் தொடர்ந்தான் அவன்.
“ஒரு பிள்ளைக்கு அம்மா ஆகப்போறாள். ஆனாலும் என்ர மனுசிக்கு… கயலுக்கு இன்னும் பொறுப்பு வரேல்ல நிகேதன். இருந்திருந்தா என்னட்ட ஒரு வார்த்த கதைக்காம ரூம் கட்டுறதைப் பற்றி உங்களிட்ட வந்து கதைச்சிருக்க மாட்டாள். நான் கோபப்பட்டதுக்கு, ‘இவ்வளவு காலமும் அண்ணாதான் வீடு பற்றின முடிவு எல்லாம் எடுத்தவர். அந்தப் பழக்கத்தில ஆலோசனைதான் கேட்டனான். நான் காசு கேக்க இல்லை.’ எண்டு அழுகிறாள். இருந்தாலும் அவள் கேட்டிருக்கக் கூடாது. ஆரணி சொன்னதிலையும் பிழை இல்ல. ஆனா வயித்தில பிள்ளையோட இருக்கிறவள் மனம் நோகிறதுலையோ இப்பிடி அழுகிறதுலையோ எனக்கு உடன்பாடு இல்ல நிகேதன். எனக்கு என்ர மனுசியும் பிள்ளையும் முக்கியம். சுயநலமா கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ. பிள்ளை எண்டுறது எவ்வளவு பெரிய செல்வம் எண்டு அஞ்சு வருசமா குழந்தைக்கு ஏங்குற உங்களுக்கு விளங்காம இருக்காது தானே?” என்றபோது நிகேதனின் கை ஸ்டேரிங்கை அழுத்தமாகப் பற்றியது. தாடை இறுகிற்று.
கேள்வியாக ஏறிட்டவனிடம் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாமல் இருக்க வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் நிகேதன்.
அவன் முகம் என்ன சொன்னதோ, “நிகேதன் அது நான் பிழையா…” என்றவனைக் கையால் தடுத்து, “சொல்ல நினைக்கிறதை சொல்லி முடிங்க ராகவன்.” என்றான் நிகேதன்.
“வேற ஒண்டும் இல்ல. என்ர மனுசி பிள்ளையை எந்தக் குறையும் இல்லாம நான் பாப்பன். இத கயலிட்டயும் சொல்லிப்போட்டன். இனி கயல் எந்த உதவியும் உங்களிட்ட கேக்க மாட்டாள். அப்பிடியே ஏதாவது யோசிக்காம கதைச்சாலும் ஆரணிய கொஞ்சம் அமைதியா போகச் சொல்லுங்கோ.” என்றதுமே, கோபத்தில் அவன் தேகம் இரும்பாய் இறுகியது. என் மனைவியைப் பற்றிக் கதைக்க இவன் யார் என்று மனம் கொதித்தது. தங்கையின் கணவன் என்றுகூடப் பார்க்காமல் சூடாக எதையாவது திருப்பிக் கொடுத்துவிடப் பார்த்தான்.
எல்லோரையும் போன்று ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ இல்லை தமக்காக மட்டுமாக யோசித்தோ பேசமுடியாத நிலை அவனது. ஒரு நொடி விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு, “ஆரா தானா போய் ஆரிட்டையும் எதுவும் கதைக்கமாட்டாள் ராகவன். நீங்களா வராதவரைக்கும் அவளும் வரமாட்டாள்.” என்றுவிட்டு, வாகனத்தை விட்டு இறங்கினான்.
அவனுடைய கோபத்தை ராகவானால் உணர முடிந்தது. அவனும் எதையும் வேண்டுமென்று பேசவில்லை. உங்களிடம் நானோ என் மனைவியோ எந்த உதவிக்கும் வரமாட்டோம் என்று சொல்ல நினைத்தான். அவனளவில் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியிருக்கிறான். அதுவே போதும் என்று தானும் இறங்கிக்கொண்டான்.
வெளியே நடந்த எதையும் அறியாத ஆரணி, அறைக்குள் வந்தவனின் முகம் கோபத்தில் சிவந்து தணலைப் போன்று ஜொலிப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். ஆடைகளை விறுவிறு என்று கழற்றி எறிந்துவிட்டு, சாரத்தை மாற்றிக்கொண்டு டவலை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வந்த வேகத்திலேயே கிணற்றடிக்கு நடந்தான் அவன்.
இன்னுமா இவனுக்குக் கோபம் தீரவில்லை? மனதில் பாரமேற அவன் கழற்றி எறிந்தவற்றை எடுத்து அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் போட்டுவிட்டுக் காத்திருந்தாள். யாரில் சரி பிழை என்பதையெல்லாம் தாண்டி அவனுடைய பாராமுகம் அவளை வாட்டியது.
அவனும் வந்தான். அவள் விழிகள் அவனையே தொடர்ந்தது. தலையை அழுத்தித் துடைத்தான். டவலைத் தூக்கிப் போட்டான். போனில் அலாரம் செட் பண்ணிவிட்டு தன் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்.
நெற்றியின் மீது ஒரு கையை மடித்துப் போட்டுக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள், ஆரணி. இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் எத்தனையோ முறை சண்டைகள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் கொஞ்சல், குலாவல் இருக்காதே தவிர அத்தியாவசியப் பேச்சுக்கள் இருக்கும். அதைக்கூட அவன் தவிர்ப்பது இதுதான் முதல் முறை. ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்தாள்.
நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை.
கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி வெயிலில் நின்று அதை மாற்றுவதற்குள் போதும் போதும் என்று ஆகிப்போயிற்று. இதில் வந்தவர் சினந்து, அவரைச் சமாளித்துக் கிளிநொச்சிக்குக் கூட்டிக்கொண்டுபோய், திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விட்டுவிட்டு, கார்மெண்ட்ஸ் பிள்ளைகளை ஏற்றி, அவர்களை அவரவரின் வீடுகளில் இறக்கிவிட்டு வருவதற்குள், ‘என்ன வாழ்க்கையடா’ என்று வெறுத்துப்போனது அவனுக்கு.
வாகனத்தைக் கொண்டுவந்து வளவுக்குள் எப்போதும் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கதவைத் திறக்க, ராகவன் இவனை நோக்கி வருவது தெரிந்தது. நிகேதனின் புருவங்கள் சுருங்கிற்று. இவ்வளவு நேரத்துக்கு இவன் ஏன் உறங்கப்போகாமல் முழித்திருந்து, அவனைத் தேடி வேறு வருகிறான். திரும்பவும் ஏதும் சண்டையோ? நினைத்த மாத்திரத்திலேயே மூளைக்குள் சூடேறியது.
உடலும் மனமும் முற்றிலும் களைத்திருந்த இந்த நேரத்தில் எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை. ஆனால், அந்த வீட்டின் மருமகனைத் தவிர்க்க முடியாதே. வேறு வழியற்று அவனைக் கேள்வியாகப் பார்த்தான்.
“உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் நிகேதன். அதுதான் பாத்துக்கொண்டு நிண்டனான்.”
“சொல்லுங்கோ.”
“வேனுக்க இருந்தே கதைப்பமா?”
தனியாகக் கதைக்கப் பிரியப்படுகிறான். இறங்கப்போன நிகேதன் மீண்டும் அமர்ந்துகொண்டு, “ஏறுங்க.” என்றான்.
ஏறி அமர்ந்தவன் உடனே ஒன்றும் பேசிவிடவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தயங்குவது தெரிந்தது. அவன் யோசிக்க யோசிக்க இவனுக்கு என்னவோ என்று அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று.
“என்ன எண்டாலும் சும்மா சொல்லுங்க ராகவன்.” காத்திருக்கப் பொறுமையற்று ஊக்கினான்.
ஒரு முடிவு எடுத்தவன் போன்று இவன் புறமாகத் திரும்பிப் பேசினான் ராகவன். “இதைப் பற்றி நானும் கதைக்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம் நிகேதன். ஆனா, வீட்டுப் பொம்பிளைகளை விட நாங்க கிளியரா கதைச்சிட்டா சோலி முடிஞ்சு எண்டு நினைச்சன்.” என்றுவிட்டுத் தொடர்ந்தான் அவன்.
“ஒரு பிள்ளைக்கு அம்மா ஆகப்போறாள். ஆனாலும் என்ர மனுசிக்கு… கயலுக்கு இன்னும் பொறுப்பு வரேல்ல நிகேதன். இருந்திருந்தா என்னட்ட ஒரு வார்த்த கதைக்காம ரூம் கட்டுறதைப் பற்றி உங்களிட்ட வந்து கதைச்சிருக்க மாட்டாள். நான் கோபப்பட்டதுக்கு, ‘இவ்வளவு காலமும் அண்ணாதான் வீடு பற்றின முடிவு எல்லாம் எடுத்தவர். அந்தப் பழக்கத்தில ஆலோசனைதான் கேட்டனான். நான் காசு கேக்க இல்லை.’ எண்டு அழுகிறாள். இருந்தாலும் அவள் கேட்டிருக்கக் கூடாது. ஆரணி சொன்னதிலையும் பிழை இல்ல. ஆனா வயித்தில பிள்ளையோட இருக்கிறவள் மனம் நோகிறதுலையோ இப்பிடி அழுகிறதுலையோ எனக்கு உடன்பாடு இல்ல நிகேதன். எனக்கு என்ர மனுசியும் பிள்ளையும் முக்கியம். சுயநலமா கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ. பிள்ளை எண்டுறது எவ்வளவு பெரிய செல்வம் எண்டு அஞ்சு வருசமா குழந்தைக்கு ஏங்குற உங்களுக்கு விளங்காம இருக்காது தானே?” என்றபோது நிகேதனின் கை ஸ்டேரிங்கை அழுத்தமாகப் பற்றியது. தாடை இறுகிற்று.
கேள்வியாக ஏறிட்டவனிடம் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாமல் இருக்க வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் நிகேதன்.
அவன் முகம் என்ன சொன்னதோ, “நிகேதன் அது நான் பிழையா…” என்றவனைக் கையால் தடுத்து, “சொல்ல நினைக்கிறதை சொல்லி முடிங்க ராகவன்.” என்றான் நிகேதன்.
“வேற ஒண்டும் இல்ல. என்ர மனுசி பிள்ளையை எந்தக் குறையும் இல்லாம நான் பாப்பன். இத கயலிட்டயும் சொல்லிப்போட்டன். இனி கயல் எந்த உதவியும் உங்களிட்ட கேக்க மாட்டாள். அப்பிடியே ஏதாவது யோசிக்காம கதைச்சாலும் ஆரணிய கொஞ்சம் அமைதியா போகச் சொல்லுங்கோ.” என்றதுமே, கோபத்தில் அவன் தேகம் இரும்பாய் இறுகியது. என் மனைவியைப் பற்றிக் கதைக்க இவன் யார் என்று மனம் கொதித்தது. தங்கையின் கணவன் என்றுகூடப் பார்க்காமல் சூடாக எதையாவது திருப்பிக் கொடுத்துவிடப் பார்த்தான்.
எல்லோரையும் போன்று ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ இல்லை தமக்காக மட்டுமாக யோசித்தோ பேசமுடியாத நிலை அவனது. ஒரு நொடி விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு, “ஆரா தானா போய் ஆரிட்டையும் எதுவும் கதைக்கமாட்டாள் ராகவன். நீங்களா வராதவரைக்கும் அவளும் வரமாட்டாள்.” என்றுவிட்டு, வாகனத்தை விட்டு இறங்கினான்.
அவனுடைய கோபத்தை ராகவானால் உணர முடிந்தது. அவனும் எதையும் வேண்டுமென்று பேசவில்லை. உங்களிடம் நானோ என் மனைவியோ எந்த உதவிக்கும் வரமாட்டோம் என்று சொல்ல நினைத்தான். அவனளவில் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியிருக்கிறான். அதுவே போதும் என்று தானும் இறங்கிக்கொண்டான்.
வெளியே நடந்த எதையும் அறியாத ஆரணி, அறைக்குள் வந்தவனின் முகம் கோபத்தில் சிவந்து தணலைப் போன்று ஜொலிப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். ஆடைகளை விறுவிறு என்று கழற்றி எறிந்துவிட்டு, சாரத்தை மாற்றிக்கொண்டு டவலை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வந்த வேகத்திலேயே கிணற்றடிக்கு நடந்தான் அவன்.
இன்னுமா இவனுக்குக் கோபம் தீரவில்லை? மனதில் பாரமேற அவன் கழற்றி எறிந்தவற்றை எடுத்து அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் போட்டுவிட்டுக் காத்திருந்தாள். யாரில் சரி பிழை என்பதையெல்லாம் தாண்டி அவனுடைய பாராமுகம் அவளை வாட்டியது.
அவனும் வந்தான். அவள் விழிகள் அவனையே தொடர்ந்தது. தலையை அழுத்தித் துடைத்தான். டவலைத் தூக்கிப் போட்டான். போனில் அலாரம் செட் பண்ணிவிட்டு தன் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்.
நெற்றியின் மீது ஒரு கையை மடித்துப் போட்டுக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள், ஆரணி. இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் எத்தனையோ முறை சண்டைகள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் கொஞ்சல், குலாவல் இருக்காதே தவிர அத்தியாவசியப் பேச்சுக்கள் இருக்கும். அதைக்கூட அவன் தவிர்ப்பது இதுதான் முதல் முறை. ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்தாள்.