அத்தியாயம் 35
நிகேதனும் ஆரணியும் அடுத்த வாரமே புது வீட்டுக்கு பால் காய்ச்சி வந்து சேர்ந்தனர். வீட்டுத் தளபாடங்கள் வாங்குவதற்கு நிகேதன் ஆயத்தமானபோது தடுத்து நிறுத்திவிட்டாள், ஆரணி.
அட்வான்ஸ் முப்பதுனாயிரம் எனும்போது சுளையாக முப்பதுனாயிரம் அதற்கே போனது. மாதக்கடைசியில் பத்தாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டும். தளபாடங்களும் எனும்போது செலவு அதிகம் என்று படுப்பதற்குப் பாய் தலையணையும் சமைப்பதற்கு அத்தியாவசியப் பொருட்களும் என்று தன் வீட்டுக்கான செலவை கைக்கூ கவிதைபோல் சிக்கனமாக முடித்துக்கொண்டாள் அவள்.
விறாந்தையில் டீவி இல்லை. அமர்வதற்குக் குறைந்தபட்சமாகப் பிளாஸ்ட்டிக் நாற்காலிகள் கூட இல்லை. உறங்கக் கட்டில் மெத்தை இல்லை. சாப்பாட்டு மேசை இல்லை. ஆனாலும், அவளின் சந்தோசத்துக்கு அளவில்லை.
அதுவரை நடந்த பிரச்சனைகள் அனைத்தும் பனியாய் அகன்றுபோன உணர்வு. புதிதாக முதல் நாளிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது.
பொருட்களே இல்லாத அந்த வீட்டையே ஆசையோடு சுற்றிச் சுற்றி வந்தாள். எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதனால்தானோ? இரவு, பாயில் அவனருகில் சரிந்திருந்த ஆரணி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். நேரம் பதினொன்றைக் கடந்திருந்தபோதும் அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது.
“இது எங்கட வீடு நிக்கி. சொல்லவே எப்பிடி இருக்கு பாரு. எங்கட வீடு! நானும் நீயும் இனி இங்கதான் வாழப்போறோம். என்னால நம்பவே ஏலாம இருக்கடா.” என்றவள் தன் சந்தோசத்தைக் காட்டுகிறவளாக அவனைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
கைகள் இரண்டையும் தலைக்குக் கீழே கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன் அவளின் உற்சாகத்தையும், அதில் தன் மார்புக்கு அவள் தருகிற ஆழ முத்தங்களையும், இறுகிய அணைப்பையும் மென்னகையோடு ரசித்திருந்தான்.
அவன் மார்பில் சரிந்திருந்தவள் தலையை மட்டும் மேல்நோக்கித் திருப்பி அவனைப் பார்த்தாள். “ஓய்! என்ன ஒண்டுமே கதைக்கிறாய் இல்ல? உன்ன உன்ர குடும்பத்தில இருந்து பிரிச்சுத் தனிக்குடித்தனம் கூட்டிக்கொண்டு வந்திட்டேனோ?” என்றாள் கண்களில் சிரிப்பு மின்ன.
முகத்தில் இளநகை மின்னியபோதும் ஒன்றும் சொல்லவில்லை அவன். நன்றாக அவன் முகம் பார்ப்பதுபோல் திரும்பிப் படுத்து, “என்னைப் பாத்தா கொடுமைக்கார மனுசி மாதிரி இருக்கோ?” என்றாள் மீண்டும்.
அப்போதும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க அவன் வாயைக் கிண்டும் ஆவல் எழுந்தது அவளுக்கு. அவன் மீசையைப் பிடித்துத் திருகினாள். உதட்டைப் பிடித்து இழுத்தாள்.
“பேசு நிக்கி பேசு. ஏதாவது பேசு நிக்கி பேசு!” என்று அவன் தாடையைப் பற்றி ஆட்டினாள்.
அவன் உதட்டோரம் துடித்தது. கைகள் எதற்கெல்லாமோ துறுதுறுத்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு இன்னும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று பார்க்கப் பொறுத்திருந்தான்.
“என்னடா கதைக்க மாட்டியா? எனக்கு அவ்வளவு பயமா நீ? அவ்வளவுக்கு நல்லவனாடா நீ?”
அதற்கு மேலும் அவனால் முடியவில்லை. மின்னல் விரைவில் அவளைத் தனக்குள் கொண்டு வந்தான். “இதையெல்லாம் இவ்வளவு நாளும் எங்கயடி வச்சிருந்தனி?” என்றான் கிறக்கத்துடன்.
“எல்லாம் இங்கதான் மச்சி கிடக்கு!” என்று நகைத்தாள் அவள்.
“சிரிக்காதயடி! கிட்ட வந்தாலே முகத்தைக் கல்லு மாதிரி வச்சிருக்கிறது. ஒரு சிரிப்பு இல்ல. கதைப்பு இல்ல. சோக கீதம் வாசிச்சிட்டு இப்ப பேசு நிக்கி பேசா?” என்று கேட்டவன் அவளைப் பதில் சொல்ல விடவேயில்லை.
நாட்கள் இனிமையாக நகர்ந்தன. அவர்களைப் பற்றி அறிந்துகொண்ட அந்த வீட்டுச் சொந்தக்காரனின் அன்னையான பார்வதி அம்மாவுக்கு அவர்களை மிகவுமே பிடித்துப் போயிற்று.
அவரும் அருமையானவராக இருந்ததில் நிகேதனுக்கும் அவளின் பாதுகாப்புக் குறித்தான கவலை அகன்றிருந்தது. இவள் தனித்திருக்கும் பொழுதுகளில் ஒன்றில் அவர் இங்கு இருப்பார் இல்லையோ இவள் அங்கு இருப்பாள்.
வார இறுதிகளில் இருவருமாகக் கயல் வீட்டுக்குச் சென்று வந்தார்கள். கயலுக்கு ஐந்து மாதங்கள் ஆரம்பித்தும் ஆரணிக்கு எந்த நல்லதும் நடக்கமாட்டேன் என்றது.
‘வைத்தியரிடம் ஒருமுறை காட்டுவோமா?’ என்று ஆரம்பக் காலத்தில் தயக்கமாக ஒலித்த கேள்வி இப்போதெல்லாம் ஆரணியிடமிருந்து ஒரு வற்புறுத்தலோடு ஆரம்பித்திருந்தது.
நிகேதன் தான் அதற்கு உடன்படாமல் நின்றான். சும்மா அறியப் போனாலே ஆயிரம் குறைகளைச் சொல்லி இருக்கிற சந்தோசத்தையும் கெடுத்து விடுவார்களோ என்கிற பயம் அவனை அழுத்தியது.
இந்த ஐந்து வருடங்களும் அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததைக் காட்டிலும் தம்மை நிரூபிக்கவும் கடமையை முடிக்கவும் ஓடியதே அதிகம். இதில் எங்கிருந்து குழந்தை உருவாக. கூடவே, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் இயற்கையாகவே தன்னுடையவள் சூழ் கொள்வாள் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு வெகுவாகவே இருந்தது.
“ஏன் ஆரா இவ்வளவு அவசரம்? நாங்க கல்யாணம் கட்டி அஞ்சு வருசம் எண்டாலும் வாழ ஆரம்பிச்சு கொஞ்சக் காலம் தானே ஆகுது. எல்லாம் நடக்கும் அமைதியா இரு.” என்று ஆறுதல் சொன்னான்.
தன் மனதின் ஏக்கம் தீராதபோதும், அவன் சொல்வதிலும் உண்மை இருந்ததில் அவளும் காத்திருக்க முடிவு செய்தாள்.
---------------
சுகிர்தனுக்கு தர்மினி என்கிற பெண்ணைப் பேசி நிச்சயம் செய்து இருந்தார்கள். அடுத்த வாரத்தில் திருமணம் என்று நெருங்கியதும் அந்த வாரம் முழுவதும் நிகேதன் வீட்டிலேயே இல்லை. கயலின் திருமணத்தின்போது அவன் எப்படி இவனுக்குத் தோள் கொடுத்தானோ அதேபோல் இவனும் அவனுக்காக நின்றான்.
சுகிர்தனின் பெற்றோர் வயதானவர்கள் என்பதில் ஆரணியும் பலகாரம் செய்ய, ஆடைத் தெரிவுகளுக்கு, சமையலுக்கு, வீடு ஒதுக்க, ஒழுங்கு செய்ய என்று நேரம் காலம் பாராமல் உதவி செய்தாள்.
அன்று சுகிர்தனுக்குத் திருமணம்.
அமராவதி அம்மா, கயல், ராகவன், ஆரணி என்று எல்லோரையும் நிகேதன் தன் வாகனத்திலேயே அழைத்துப் போனான். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மண்டபத்தில் நிறைந்திருக்க, மேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்து சடங்குகளைச் செய்துகொண்டிருந்தான் சுகிர்தன்.
நிகேதனும் ஆரணியும் அடுத்த வாரமே புது வீட்டுக்கு பால் காய்ச்சி வந்து சேர்ந்தனர். வீட்டுத் தளபாடங்கள் வாங்குவதற்கு நிகேதன் ஆயத்தமானபோது தடுத்து நிறுத்திவிட்டாள், ஆரணி.
அட்வான்ஸ் முப்பதுனாயிரம் எனும்போது சுளையாக முப்பதுனாயிரம் அதற்கே போனது. மாதக்கடைசியில் பத்தாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டும். தளபாடங்களும் எனும்போது செலவு அதிகம் என்று படுப்பதற்குப் பாய் தலையணையும் சமைப்பதற்கு அத்தியாவசியப் பொருட்களும் என்று தன் வீட்டுக்கான செலவை கைக்கூ கவிதைபோல் சிக்கனமாக முடித்துக்கொண்டாள் அவள்.
விறாந்தையில் டீவி இல்லை. அமர்வதற்குக் குறைந்தபட்சமாகப் பிளாஸ்ட்டிக் நாற்காலிகள் கூட இல்லை. உறங்கக் கட்டில் மெத்தை இல்லை. சாப்பாட்டு மேசை இல்லை. ஆனாலும், அவளின் சந்தோசத்துக்கு அளவில்லை.
அதுவரை நடந்த பிரச்சனைகள் அனைத்தும் பனியாய் அகன்றுபோன உணர்வு. புதிதாக முதல் நாளிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது.
பொருட்களே இல்லாத அந்த வீட்டையே ஆசையோடு சுற்றிச் சுற்றி வந்தாள். எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதனால்தானோ? இரவு, பாயில் அவனருகில் சரிந்திருந்த ஆரணி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். நேரம் பதினொன்றைக் கடந்திருந்தபோதும் அவளுக்கு உறக்கம் வருவேனா என்றது.
“இது எங்கட வீடு நிக்கி. சொல்லவே எப்பிடி இருக்கு பாரு. எங்கட வீடு! நானும் நீயும் இனி இங்கதான் வாழப்போறோம். என்னால நம்பவே ஏலாம இருக்கடா.” என்றவள் தன் சந்தோசத்தைக் காட்டுகிறவளாக அவனைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
கைகள் இரண்டையும் தலைக்குக் கீழே கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன் அவளின் உற்சாகத்தையும், அதில் தன் மார்புக்கு அவள் தருகிற ஆழ முத்தங்களையும், இறுகிய அணைப்பையும் மென்னகையோடு ரசித்திருந்தான்.
அவன் மார்பில் சரிந்திருந்தவள் தலையை மட்டும் மேல்நோக்கித் திருப்பி அவனைப் பார்த்தாள். “ஓய்! என்ன ஒண்டுமே கதைக்கிறாய் இல்ல? உன்ன உன்ர குடும்பத்தில இருந்து பிரிச்சுத் தனிக்குடித்தனம் கூட்டிக்கொண்டு வந்திட்டேனோ?” என்றாள் கண்களில் சிரிப்பு மின்ன.
முகத்தில் இளநகை மின்னியபோதும் ஒன்றும் சொல்லவில்லை அவன். நன்றாக அவன் முகம் பார்ப்பதுபோல் திரும்பிப் படுத்து, “என்னைப் பாத்தா கொடுமைக்கார மனுசி மாதிரி இருக்கோ?” என்றாள் மீண்டும்.
அப்போதும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க அவன் வாயைக் கிண்டும் ஆவல் எழுந்தது அவளுக்கு. அவன் மீசையைப் பிடித்துத் திருகினாள். உதட்டைப் பிடித்து இழுத்தாள்.
“பேசு நிக்கி பேசு. ஏதாவது பேசு நிக்கி பேசு!” என்று அவன் தாடையைப் பற்றி ஆட்டினாள்.
அவன் உதட்டோரம் துடித்தது. கைகள் எதற்கெல்லாமோ துறுதுறுத்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு இன்னும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று பார்க்கப் பொறுத்திருந்தான்.
“என்னடா கதைக்க மாட்டியா? எனக்கு அவ்வளவு பயமா நீ? அவ்வளவுக்கு நல்லவனாடா நீ?”
அதற்கு மேலும் அவனால் முடியவில்லை. மின்னல் விரைவில் அவளைத் தனக்குள் கொண்டு வந்தான். “இதையெல்லாம் இவ்வளவு நாளும் எங்கயடி வச்சிருந்தனி?” என்றான் கிறக்கத்துடன்.
“எல்லாம் இங்கதான் மச்சி கிடக்கு!” என்று நகைத்தாள் அவள்.
“சிரிக்காதயடி! கிட்ட வந்தாலே முகத்தைக் கல்லு மாதிரி வச்சிருக்கிறது. ஒரு சிரிப்பு இல்ல. கதைப்பு இல்ல. சோக கீதம் வாசிச்சிட்டு இப்ப பேசு நிக்கி பேசா?” என்று கேட்டவன் அவளைப் பதில் சொல்ல விடவேயில்லை.
நாட்கள் இனிமையாக நகர்ந்தன. அவர்களைப் பற்றி அறிந்துகொண்ட அந்த வீட்டுச் சொந்தக்காரனின் அன்னையான பார்வதி அம்மாவுக்கு அவர்களை மிகவுமே பிடித்துப் போயிற்று.
அவரும் அருமையானவராக இருந்ததில் நிகேதனுக்கும் அவளின் பாதுகாப்புக் குறித்தான கவலை அகன்றிருந்தது. இவள் தனித்திருக்கும் பொழுதுகளில் ஒன்றில் அவர் இங்கு இருப்பார் இல்லையோ இவள் அங்கு இருப்பாள்.
வார இறுதிகளில் இருவருமாகக் கயல் வீட்டுக்குச் சென்று வந்தார்கள். கயலுக்கு ஐந்து மாதங்கள் ஆரம்பித்தும் ஆரணிக்கு எந்த நல்லதும் நடக்கமாட்டேன் என்றது.
‘வைத்தியரிடம் ஒருமுறை காட்டுவோமா?’ என்று ஆரம்பக் காலத்தில் தயக்கமாக ஒலித்த கேள்வி இப்போதெல்லாம் ஆரணியிடமிருந்து ஒரு வற்புறுத்தலோடு ஆரம்பித்திருந்தது.
நிகேதன் தான் அதற்கு உடன்படாமல் நின்றான். சும்மா அறியப் போனாலே ஆயிரம் குறைகளைச் சொல்லி இருக்கிற சந்தோசத்தையும் கெடுத்து விடுவார்களோ என்கிற பயம் அவனை அழுத்தியது.
இந்த ஐந்து வருடங்களும் அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததைக் காட்டிலும் தம்மை நிரூபிக்கவும் கடமையை முடிக்கவும் ஓடியதே அதிகம். இதில் எங்கிருந்து குழந்தை உருவாக. கூடவே, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் இயற்கையாகவே தன்னுடையவள் சூழ் கொள்வாள் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு வெகுவாகவே இருந்தது.
“ஏன் ஆரா இவ்வளவு அவசரம்? நாங்க கல்யாணம் கட்டி அஞ்சு வருசம் எண்டாலும் வாழ ஆரம்பிச்சு கொஞ்சக் காலம் தானே ஆகுது. எல்லாம் நடக்கும் அமைதியா இரு.” என்று ஆறுதல் சொன்னான்.
தன் மனதின் ஏக்கம் தீராதபோதும், அவன் சொல்வதிலும் உண்மை இருந்ததில் அவளும் காத்திருக்க முடிவு செய்தாள்.
---------------
சுகிர்தனுக்கு தர்மினி என்கிற பெண்ணைப் பேசி நிச்சயம் செய்து இருந்தார்கள். அடுத்த வாரத்தில் திருமணம் என்று நெருங்கியதும் அந்த வாரம் முழுவதும் நிகேதன் வீட்டிலேயே இல்லை. கயலின் திருமணத்தின்போது அவன் எப்படி இவனுக்குத் தோள் கொடுத்தானோ அதேபோல் இவனும் அவனுக்காக நின்றான்.
சுகிர்தனின் பெற்றோர் வயதானவர்கள் என்பதில் ஆரணியும் பலகாரம் செய்ய, ஆடைத் தெரிவுகளுக்கு, சமையலுக்கு, வீடு ஒதுக்க, ஒழுங்கு செய்ய என்று நேரம் காலம் பாராமல் உதவி செய்தாள்.
அன்று சுகிர்தனுக்குத் திருமணம்.
அமராவதி அம்மா, கயல், ராகவன், ஆரணி என்று எல்லோரையும் நிகேதன் தன் வாகனத்திலேயே அழைத்துப் போனான். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மண்டபத்தில் நிறைந்திருக்க, மேடையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்து சடங்குகளைச் செய்துகொண்டிருந்தான் சுகிர்தன்.