அத்தியாயம் 38
வைத்தியசாலையில் ராகவனின் பெற்றோர், தங்கை என்று மொத்தக் குடும்பமும் நின்றிருந்தனர். எல்லோரின் முகத்திலும் புது வரவைக்கக் கொண்டாடும் மகிழ்ச்சி. “வாங்கோ நிகேதன்!” என்று பூரிப்பாக வரவேற்ற ராகவனை அணைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினான், நிகேதன்.
அவர்களோடு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுக் கயலிடம் சென்றனர். இவர்களைக் கண்டதும், அமராவதியின் பார்வை ஆரணியின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியில் படிந்து மீண்டது. கூடவே, “எப்ப சொன்னதுக்கு இப்ப வாறாய் தம்பி?” என்று நிகேதனிடம் கடிந்துகொண்டார்.
“ஹயர் முடிக்க வேண்டாமா அம்மா?” என்றுவிட்டு தங்கையை நலன் விசாரித்துக்கொண்டான். ஆரணியும் கயலினியின் கரத்தைப் பற்றி வருடிக்கொடுத்தாள். “கெட்டிகாரி கயல் நீ!” என்று பாராட்டினாள்.
பிள்ளை பெற்ற அயர்வு முகத்தில் அப்படியே இருந்தாலும் பூரிப்புடன் இருந்த கயலின் முகம் மிகுந்த அழகைக் கொடுத்தது. அருகிலேயே குட்டித் தொட்டிலில் படுத்திருந்தான் அவளின் மகன். அதற்குள் ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து அவளருகில் போட்டு, “இதுல இருந்து கதை.” என்றான் நிகேதன்.
தொட்டிலின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, “செல்லக்குட்டி…!” என்று அவன் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் மெல்ல வருடினாள் ஆரணி. பூவின் இதழ் போன்று மிகுந்த மென்மை. அவளின் முகமும் அப்படியே மலர்ந்து போயிற்று. “எங்கட செல்லக்குட்டிக்கு நான் ஆரு தெரியுமா? உங்கட அத்தை.” அந்த மொட்டோ அவளின் தொடுகையில் செப்பு இதழ்களைச் சுருக்கியது. ஆரணியின் புன்னகை விரிந்தது. “நிக்கி, இங்க பார் நான் தொடுறது அவருக்குப் பிடிக்கேல்லையாம். வாயை சுருக்கிறார்.” கவனம் குழந்தையில் இருக்க அவனிடம் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டாள் அவள்.
“என்ர மருமகனுக்கே தெரியுது நீ ஆபத்தானவள் எண்டு.”
“போடா பொறாமை பிடிச்சவனே. என்ர செல்லம் இப்பதான் அத்தைய பழகிறார். ரெண்டு நாளில சேர்ந்திடுவார். அப்பிடித்தானே? அத்தையிட்ட வருவீங்க தானே?” என்றவளுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. “எங்கட செல்லத்தை ஒருக்கா நான் தூக்கட்டோ.” என்றபடி தூக்க முயன்றாள்.
“பாத்து பாத்து! உன்ர அவசர குணத்தில் கீழ போட்டுடாத! பொறு நான் தூக்கித் தாறன்.” என்று விரைந்து வந்து குழந்தையைத் தூக்கி, பக்குவமாக அவளின் கையில் கொடுத்தார், அமராவதி. கூடவே எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.
ஆசையோடு தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டவளுக்குக் கை, மனது, உடம்பு எங்கும் புதுப் பரவசம். தேகம் எல்லாம் சிலிர்த்தது. நெஞ்சில் பாசம் சுரக்க உச்சி முகர்ந்தாள். அவள் விழிகள் தானாகவே நிகேதனை தேடிச் சென்றது. அவனும் அவளைத்தான் சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான். காதலியாக, மனைவியாக மட்டுமே பார்த்துப் பழகியவள், கையில் குழந்தையுடன் நின்ற தாய்மைக் கோலம் அவன் மனதை மயக்கிற்று. விழிகளை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை. அடுத்து நம் குழந்தை என்கிற எண்ணம் இருவருக்குமே இனித்துக்கொண்டு இறங்கிற்று.
கயலினியின் களைத்த தோற்றத்தைக் கண்டு மெல்லிய அச்சம் அவனுக்குள். “நிறையக் கஷ்டப்பட்டவளா அம்மா?”
“பின்ன? முதல் பிள்ளை எல்லா தம்பி. அப்பிடித்தான் இருக்கும். நேற்று கொண்டுவந்து சேர்த்தாலும் இந்தக் குட்டி இண்டைக்குத்தானே பிறந்தவன்.”
“ஓ..” என்றவனின் எண்ணமெல்லாம் ஆரணியையே சுற்றி வந்தது. தன்னுடையவள் தாங்குவாளா? துடித்துவிட மாட்டாளா? அவள் துடிக்கிற அந்த நிமிடங்களை அவன் எப்படிக் கடப்பான்? மெல்லிய அச்சத்துடன் அவளை நோக்க, கண்களை மூடித்திறந்து அவனை ஆற்றுப்படுத்தினாள், ஆரணி.
ராகவனின் தங்கை எல்லோருக்கும் அருந்த குளிர்பானம் கொடுத்தாள். என்ன பெயர் வைப்பது? குறிப்பு எழுத கொடுத்ததா? குழந்தை பிறந்த நேரத்தை குறித்துக் கொண்டதா? எப்போது வீட்டுக்கு விடுவார்கள் என்று பொதுவாகச் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ராகவனின் பெற்றவர்கள் புறப்பட ஆயத்தமாக, “நான் இங்கேயே இருக்கிறன். நீ அவேய கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு வா நிக்கி.” என்றாள் ஆரணி.
“இன்னும் என்ன பிள்ளை வா போ எண்டு கதைக்கிறது? பிள்ளையும் பிறக்கப்போகுது. நாளைக்குத் தகப்பனை குழந்தைகளே மதிக்காயினம்.” பட்டென்று சொன்னார் ராகவனின் அன்னை. முதலாவது அவள் அப்படிக் கணவனானவனை அழைப்பது அவருக்குள் ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கிற்று. அடுத்ததாக, இதைப் பார்த்து தன் மகனை மருமகளும் கூப்பிட்டு விடுவாளோ என்கிற பயமும் சேர்ந்துகொண்டது. அரணிக்குச் சொல்வது போன்று, ‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்பதை கயலினிக்கு மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
அதைக்கேட்டு அமராவதியின் முகம் கடுத்தது. மகனை நெருப்புப் பார்வை பார்த்தார். கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அவன்.
அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் விறுவிறு என்று ஆரணியிடம் வந்தார் அமராவதி. “இங்க பார். உனக்கு எத்தின தரம் சொன்னாலும் நீ கேக்கப் போறேல்ல. ஆனாலும் சொல்லாம இருக்க என்னாலையும் முடியேல்ல. ஆட்களுக்கு முண்ணுக்காவது அவனுக்கு மரியாதை குடு. நாலுபேர் இருக்கிற இடத்தில அவனைக் கேவலப் படுத்தாத. பெத்த தாய் எனக்கு எரிச்சலும் கோபமும் வருது. சொல்லுற எதையும் கேக்காத உன்ர குணத்தாலதான் இவ்வளவு காலமாகியும் எனக்கு உன்ன பிடிக்கிறதே இல்ல.” முகத்துக்கு நேராகவே காட்டிய அவரின் வெறுப்பில் அவள் விழிகள் மெலிதாகக் கலங்கிற்று. கையில் இருந்த குழந்தையைப் பார்ப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டாள்.
“அவன் உனக்கு என்ன குறை வச்சவன் எண்டு அவனை இப்பிடி எல்லாருக்கும் முன்னுக்கும் கேவலப்படுத்துறாய்? மாடா உழைச்சு எல்லாத்தையும் கொண்டுவந்து உனக்குத்தானே கொட்டுறான். கொஞ்சம் மரியாதை குடுத்தா நீ என்ன குறைஞ்சா போவாய்?” என்று எரிந்து விழுந்துவிட்டுப் போனார் அவர்.
விழி நீரை அடக்குவதிலேயே முழுமூச்சாக முயன்றுகொண்டிருந்தாள், ஆரணி. அமராவதிக்கு மனம் அடங்குவேனா என்று கொதித்தது. குழந்தையின் தொட்டிலை தட்டிப் போட்டுக்கொண்டே, “உன்ர கொண்ணனிட்ட சொன்னா, நீ உன்ர மனுசனை பெயர் சொல்லி கூப்பிடுறியாம். அதுவும் இதுவும் ஒண்டா சொல்லு? ஒன்றில் சுய அறிவு வேணும் இல்ல சொல் புத்தி வேணும். இது ஒண்டும் இல்ல. இது யாருக்கும் அடங்காத குணம்.” நிகேதனும் இல்லாமல் ஆரணி அகப்பட்டதில் கயலிடம் பேசுவதுபோல் தன் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார் அமராவதி. எவ்வளவு முயன்றும் முடியாமல் குழந்தையைச் சுற்றியிருந்த துணியில் இரு துளி கண்ணீர் விழுந்து சிதறிற்று.
சற்று நேரத்தில் ராகவனுடன் திரும்பி வந்த நிகேதன், ஒற்றைப் பார்வையிலேயே என்னவோ சரியில்லை என்று புரிந்துகொண்டான். அதற்குமேல் அங்கே தாமதிக்காமல், “என்ன தேவை எண்டாலும் கூப்பிடுங்கோ ராகவன். கயலை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகேக்க சொல்லுங்க வந்து கூட்டிக்கொண்டு போறன்.” என்றுவிட்டு, “நீங்க நிக்கப் போறீங்களா, வீட்டை போகப்போறீங்களா?” என்றான் அன்னையிடம்.
வைத்தியசாலையில் ராகவனின் பெற்றோர், தங்கை என்று மொத்தக் குடும்பமும் நின்றிருந்தனர். எல்லோரின் முகத்திலும் புது வரவைக்கக் கொண்டாடும் மகிழ்ச்சி. “வாங்கோ நிகேதன்!” என்று பூரிப்பாக வரவேற்ற ராகவனை அணைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினான், நிகேதன்.
அவர்களோடு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுக் கயலிடம் சென்றனர். இவர்களைக் கண்டதும், அமராவதியின் பார்வை ஆரணியின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியில் படிந்து மீண்டது. கூடவே, “எப்ப சொன்னதுக்கு இப்ப வாறாய் தம்பி?” என்று நிகேதனிடம் கடிந்துகொண்டார்.
“ஹயர் முடிக்க வேண்டாமா அம்மா?” என்றுவிட்டு தங்கையை நலன் விசாரித்துக்கொண்டான். ஆரணியும் கயலினியின் கரத்தைப் பற்றி வருடிக்கொடுத்தாள். “கெட்டிகாரி கயல் நீ!” என்று பாராட்டினாள்.
பிள்ளை பெற்ற அயர்வு முகத்தில் அப்படியே இருந்தாலும் பூரிப்புடன் இருந்த கயலின் முகம் மிகுந்த அழகைக் கொடுத்தது. அருகிலேயே குட்டித் தொட்டிலில் படுத்திருந்தான் அவளின் மகன். அதற்குள் ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து அவளருகில் போட்டு, “இதுல இருந்து கதை.” என்றான் நிகேதன்.
தொட்டிலின் அருகில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, “செல்லக்குட்டி…!” என்று அவன் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் மெல்ல வருடினாள் ஆரணி. பூவின் இதழ் போன்று மிகுந்த மென்மை. அவளின் முகமும் அப்படியே மலர்ந்து போயிற்று. “எங்கட செல்லக்குட்டிக்கு நான் ஆரு தெரியுமா? உங்கட அத்தை.” அந்த மொட்டோ அவளின் தொடுகையில் செப்பு இதழ்களைச் சுருக்கியது. ஆரணியின் புன்னகை விரிந்தது. “நிக்கி, இங்க பார் நான் தொடுறது அவருக்குப் பிடிக்கேல்லையாம். வாயை சுருக்கிறார்.” கவனம் குழந்தையில் இருக்க அவனிடம் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டாள் அவள்.
“என்ர மருமகனுக்கே தெரியுது நீ ஆபத்தானவள் எண்டு.”
“போடா பொறாமை பிடிச்சவனே. என்ர செல்லம் இப்பதான் அத்தைய பழகிறார். ரெண்டு நாளில சேர்ந்திடுவார். அப்பிடித்தானே? அத்தையிட்ட வருவீங்க தானே?” என்றவளுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. “எங்கட செல்லத்தை ஒருக்கா நான் தூக்கட்டோ.” என்றபடி தூக்க முயன்றாள்.
“பாத்து பாத்து! உன்ர அவசர குணத்தில் கீழ போட்டுடாத! பொறு நான் தூக்கித் தாறன்.” என்று விரைந்து வந்து குழந்தையைத் தூக்கி, பக்குவமாக அவளின் கையில் கொடுத்தார், அமராவதி. கூடவே எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.
ஆசையோடு தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டவளுக்குக் கை, மனது, உடம்பு எங்கும் புதுப் பரவசம். தேகம் எல்லாம் சிலிர்த்தது. நெஞ்சில் பாசம் சுரக்க உச்சி முகர்ந்தாள். அவள் விழிகள் தானாகவே நிகேதனை தேடிச் சென்றது. அவனும் அவளைத்தான் சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான். காதலியாக, மனைவியாக மட்டுமே பார்த்துப் பழகியவள், கையில் குழந்தையுடன் நின்ற தாய்மைக் கோலம் அவன் மனதை மயக்கிற்று. விழிகளை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை. அடுத்து நம் குழந்தை என்கிற எண்ணம் இருவருக்குமே இனித்துக்கொண்டு இறங்கிற்று.
கயலினியின் களைத்த தோற்றத்தைக் கண்டு மெல்லிய அச்சம் அவனுக்குள். “நிறையக் கஷ்டப்பட்டவளா அம்மா?”
“பின்ன? முதல் பிள்ளை எல்லா தம்பி. அப்பிடித்தான் இருக்கும். நேற்று கொண்டுவந்து சேர்த்தாலும் இந்தக் குட்டி இண்டைக்குத்தானே பிறந்தவன்.”
“ஓ..” என்றவனின் எண்ணமெல்லாம் ஆரணியையே சுற்றி வந்தது. தன்னுடையவள் தாங்குவாளா? துடித்துவிட மாட்டாளா? அவள் துடிக்கிற அந்த நிமிடங்களை அவன் எப்படிக் கடப்பான்? மெல்லிய அச்சத்துடன் அவளை நோக்க, கண்களை மூடித்திறந்து அவனை ஆற்றுப்படுத்தினாள், ஆரணி.
ராகவனின் தங்கை எல்லோருக்கும் அருந்த குளிர்பானம் கொடுத்தாள். என்ன பெயர் வைப்பது? குறிப்பு எழுத கொடுத்ததா? குழந்தை பிறந்த நேரத்தை குறித்துக் கொண்டதா? எப்போது வீட்டுக்கு விடுவார்கள் என்று பொதுவாகச் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ராகவனின் பெற்றவர்கள் புறப்பட ஆயத்தமாக, “நான் இங்கேயே இருக்கிறன். நீ அவேய கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு வா நிக்கி.” என்றாள் ஆரணி.
“இன்னும் என்ன பிள்ளை வா போ எண்டு கதைக்கிறது? பிள்ளையும் பிறக்கப்போகுது. நாளைக்குத் தகப்பனை குழந்தைகளே மதிக்காயினம்.” பட்டென்று சொன்னார் ராகவனின் அன்னை. முதலாவது அவள் அப்படிக் கணவனானவனை அழைப்பது அவருக்குள் ஒருவித ஒவ்வாமையை உண்டாக்கிற்று. அடுத்ததாக, இதைப் பார்த்து தன் மகனை மருமகளும் கூப்பிட்டு விடுவாளோ என்கிற பயமும் சேர்ந்துகொண்டது. அரணிக்குச் சொல்வது போன்று, ‘எனக்கு இதெல்லாம் பிடிக்காது’ என்பதை கயலினிக்கு மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
அதைக்கேட்டு அமராவதியின் முகம் கடுத்தது. மகனை நெருப்புப் பார்வை பார்த்தார். கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அவன்.
அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் விறுவிறு என்று ஆரணியிடம் வந்தார் அமராவதி. “இங்க பார். உனக்கு எத்தின தரம் சொன்னாலும் நீ கேக்கப் போறேல்ல. ஆனாலும் சொல்லாம இருக்க என்னாலையும் முடியேல்ல. ஆட்களுக்கு முண்ணுக்காவது அவனுக்கு மரியாதை குடு. நாலுபேர் இருக்கிற இடத்தில அவனைக் கேவலப் படுத்தாத. பெத்த தாய் எனக்கு எரிச்சலும் கோபமும் வருது. சொல்லுற எதையும் கேக்காத உன்ர குணத்தாலதான் இவ்வளவு காலமாகியும் எனக்கு உன்ன பிடிக்கிறதே இல்ல.” முகத்துக்கு நேராகவே காட்டிய அவரின் வெறுப்பில் அவள் விழிகள் மெலிதாகக் கலங்கிற்று. கையில் இருந்த குழந்தையைப் பார்ப்பதுபோல் தலையைக் குனிந்துகொண்டாள்.
“அவன் உனக்கு என்ன குறை வச்சவன் எண்டு அவனை இப்பிடி எல்லாருக்கும் முன்னுக்கும் கேவலப்படுத்துறாய்? மாடா உழைச்சு எல்லாத்தையும் கொண்டுவந்து உனக்குத்தானே கொட்டுறான். கொஞ்சம் மரியாதை குடுத்தா நீ என்ன குறைஞ்சா போவாய்?” என்று எரிந்து விழுந்துவிட்டுப் போனார் அவர்.
விழி நீரை அடக்குவதிலேயே முழுமூச்சாக முயன்றுகொண்டிருந்தாள், ஆரணி. அமராவதிக்கு மனம் அடங்குவேனா என்று கொதித்தது. குழந்தையின் தொட்டிலை தட்டிப் போட்டுக்கொண்டே, “உன்ர கொண்ணனிட்ட சொன்னா, நீ உன்ர மனுசனை பெயர் சொல்லி கூப்பிடுறியாம். அதுவும் இதுவும் ஒண்டா சொல்லு? ஒன்றில் சுய அறிவு வேணும் இல்ல சொல் புத்தி வேணும். இது ஒண்டும் இல்ல. இது யாருக்கும் அடங்காத குணம்.” நிகேதனும் இல்லாமல் ஆரணி அகப்பட்டதில் கயலிடம் பேசுவதுபோல் தன் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார் அமராவதி. எவ்வளவு முயன்றும் முடியாமல் குழந்தையைச் சுற்றியிருந்த துணியில் இரு துளி கண்ணீர் விழுந்து சிதறிற்று.
சற்று நேரத்தில் ராகவனுடன் திரும்பி வந்த நிகேதன், ஒற்றைப் பார்வையிலேயே என்னவோ சரியில்லை என்று புரிந்துகொண்டான். அதற்குமேல் அங்கே தாமதிக்காமல், “என்ன தேவை எண்டாலும் கூப்பிடுங்கோ ராகவன். கயலை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகேக்க சொல்லுங்க வந்து கூட்டிக்கொண்டு போறன்.” என்றுவிட்டு, “நீங்க நிக்கப் போறீங்களா, வீட்டை போகப்போறீங்களா?” என்றான் அன்னையிடம்.