அத்தியாயம் 49
கணவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார் யசோதா. அவரின் கணவரோ பிரெட்டில் பீநட் பட்டரை மிகவும் லாவகமாகத் தடவிக்கொண்டு இருந்தார். கூடவே, அவர் வழமையாக அருந்தும் பெரிய கோப்பையில் கறுப்புக் கோப்பியை வார்த்தார். தான் கோபமாக இருப்பது தெரிந்தும் எதையும் காட்டிக்கொள்ளாத அவரின் அந்த நிதானம் இன்னுமே சினத்தைக் கிளப்பியது. கோப்பிக் கப், பிரெட் இருந்த தட்டு இரண்டையும் தன் புறமாக இழுத்துக்கொண்டார், யசோதா.
அவரை நிமிர்ந்து பார்த்தார், சத்தியநாதன்.
“யாஷ்! இப்ப நான் சாப்பிடுறதா இல்லையா?”
“சாப்பிடாதீங்க! ஒரு நேரம் பட்டினி கிடந்தா ஒண்டும் நடக்காது! இவ்வளவு நடந்திருக்கு. மூச்சுக் கூட விடாம இருந்துபோட்டு இப்ப வந்து சொல்லுறீங்க? அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கிற திமிருக்கு அளவே இல்லை!” என்று கொதித்தார் அவர்.
மகள் வந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறாள். மருமகனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனபோதிலும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே!
“இத நீ உன்ர மகளைத்தான் கேக்கவேணும்.”
“அவளையும் கேக்கத்தான் போறன். கேட்டுச் சண்டை பிடிக்கத்தான் போறன். ஆனா, நீங்க ஏன் உடனேயே எனக்குச் சொல்ல இல்ல? சொல்லி இருந்தா அப்பவே என்ர பேத்தியை நான் போய் பாத்திருப்பன் தானே?”
“அதாலதான் சொல்ல இல்ல யாஷ். ‘இரக்கப்பட்டு என்னைத் தேடி வரவேணாம்’ எண்டு சொல்லிப்போட்டு போனவா உன்ர மகள். அந்த ரோசத்தை, கோபத்தை நாங்க மதிக்கோணும்.” என்றவரை போதும் என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டார் யசோதா.
“அப்பாவும் மகளும் மாறி மாறி கோபப்படுவீங்க. ரோசப்படுவீங்க. நடுவுக்க கிடந்து நான் பட்ட துன்பம் எல்லாம் போதும். நீங்க சொன்னீங்க எண்டுதான் பேத்தி பிறந்தது தெரிஞ்சும் நான் எட்டியும் பாக்கேல்லை. இனி என்னால ஏலாது. நான் போகப்போறன்! பாக்கப்போறன்!” என்று அறிவித்தார் அவர்.
“நோ! நீ போகக்கூடாது யாஷ்!”
“வெரி சொறி! நீங்க எனக்கு நியாயமா நடக்க இல்ல சத்யா. அதால நீங்க சொல்லுறதை நான் கேக்கமாட்டன்!” என்றுவிட்டு, அவரின் சாப்பாட்டையும் கோப்பிக் கோப்பையையும் அவரின் முன்னால் டொம் என்று வைத்துவிட்டு எழுந்துபோனார் யசோதா.
சற்று நேரத்திலேயே தயாராகி, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். கைப்பையையும் கார் திறப்பையும் எடுத்துக்கொண்டு புறப்படவும், கோப்பியை அருந்திக்கொண்டு இருந்த சத்தியநாதன், “கவனம்!” என்றார் வேறு பேசாமல்.
சகாதேவனின் வீடு குடிபூரல் நாளைக்கு என்பதால், பயணத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தான், நிகேதன்.
“இரவுக்கு இங்க இருந்து வெளிக்கிட வேணும் ஆரா. குடிபூரல முடிச்சுக்கொண்டு திரும்ப நாளைக்கு இரவே அங்க இருந்தும் வெளிக்கிடவேணும். பூவிக்கு எல்லாம் பாத்து எடுத்துவை.”
அது அவளுக்கும் தெரியும் தான். சகாதேவனும் மாலினியும் பிரத்தியேகமாக அவளிடமும் பேசி வரச்சொல்லி அழைத்தும் இருந்தார்கள் தான். ஆனாலும், ஆரணி தயங்கினாள்.
அதை உணர்ந்து, “என்ன ஆரா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.
“நான் வராம நிக்கவா?” மெல்லிய தயக்கத்துடன் கேட்டாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கிற்று. ஏன் இப்படிச் சொல்கிறாள்? அவன் மீது இருக்கிற கோபத்தினாலா? அவன் முகம் சுருங்கிப் போயிற்று. “அப்பிடி போகாம இருக்கிறது நல்லாருக்காது.” என்றான் ஒருமாதிரிக் குரலில்.
“ஆனா ஏன்?” என்றான் காரணத்தை அறிய விரும்பி.
அவளோ பதில் சொல்லத் தடுமாறினாள். அவன் முகம் பார்க்க மறுத்தாள்.
ஒன்றும் விளங்காமல், “என்ன ஆரா?” என்றான் மீண்டும். “என்ன எண்டாலும் வெளிப்படையா சொன்னா தானே தெரியும்.”
“இல்ல.. நான் வாறன்.” என்றுவிட்டு, காரணம் சொல்லாமல் போகிறவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் நிகேதன்.
அவனுக்கும் நின்று கேட்க நேரமில்லை. ஒரு வேனை விற்றுவிட்டதில் அதன் மூலம் ஓடிய ஹயர்களையும் சேர்த்துக் கவனிக்கவேண்டி இருந்தது. கிடைத்த நல்ல வாடிக்கையாளர்களை விட்டுவிட மனமில்லை. நாளைய ஒரு நாளுக்கு அவனுக்குப் பதிலாக ஆட்களை ஒழுங்குபடுத்தவேண்டி இருந்தது. அடுத்த வாரம் அளவில் வீட்டு வேலைக்குப் பூசையைப் போட்டு அத்திவாரம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்ததில், அதற்கான அலுவல்கள் என்று அவனுக்கு உண்மையிலேயே மூச்சு விடக்கூட நேரமில்லை.
அவளை அவள் பாட்டுக்கே விட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தவன், வந்து நின்ற யசோதாவின் காரைக் கண்டுவிட்டு அப்படியே நின்றான். அவரைப் பார்த்ததும் முகத்தில் படிந்த கருமையை வேகமாக மறைத்துக்கொண்டு வரவேற்றான். ஆரணியும் அன்னையை அங்கே எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தாலும் பின் ஒன்றும் சொல்லாமல் இறுக்கத்தோடு நின்றாள்.
அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. அவருக்காகவே பிரத்தியேகமாகப் போடப்பட்டு இருந்ததைப்போன்று ஹாலில் இருந்த இருக்கையில் வந்து வசதியாக அமர்ந்துகொண்டார்.
தன்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்த பூவினி, புது முகத்தைக் கண்டதும் விறுவிறு என்று தவழ்ந்து வந்து தகப்பனின் கால்களைப் பற்றி எழுந்து நின்று தூக்கு என்று அவசரப்படுத்தினாள். நிகேதனும் மகளைத் தூக்கிக்கொண்டான்.
யாருக்கு என்ன பேசுவது என்று தெரியாத ஒரு சங்கடமான சூழ்நிலை. யசோதாவின் பார்வை தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்த பேத்தியிலேயே இருந்தது. அவளில் தன் சாயலைத் தேடினார்.
அதைக் கவனித்த நிகேதன், “பூவம்மா, பிள்ளையின்ர அம்மம்மா வந்திருக்கிறா. போறீங்களா?” என்றபடி அவளை அவரிடம் கொண்டுபோய் நீட்டினான். அவளோ தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று உதடு பிதுக்கிச் சிணுங்கினாள்.
கணவர் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார் யசோதா. அவரின் கணவரோ பிரெட்டில் பீநட் பட்டரை மிகவும் லாவகமாகத் தடவிக்கொண்டு இருந்தார். கூடவே, அவர் வழமையாக அருந்தும் பெரிய கோப்பையில் கறுப்புக் கோப்பியை வார்த்தார். தான் கோபமாக இருப்பது தெரிந்தும் எதையும் காட்டிக்கொள்ளாத அவரின் அந்த நிதானம் இன்னுமே சினத்தைக் கிளப்பியது. கோப்பிக் கப், பிரெட் இருந்த தட்டு இரண்டையும் தன் புறமாக இழுத்துக்கொண்டார், யசோதா.
அவரை நிமிர்ந்து பார்த்தார், சத்தியநாதன்.
“யாஷ்! இப்ப நான் சாப்பிடுறதா இல்லையா?”
“சாப்பிடாதீங்க! ஒரு நேரம் பட்டினி கிடந்தா ஒண்டும் நடக்காது! இவ்வளவு நடந்திருக்கு. மூச்சுக் கூட விடாம இருந்துபோட்டு இப்ப வந்து சொல்லுறீங்க? அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கிற திமிருக்கு அளவே இல்லை!” என்று கொதித்தார் அவர்.
மகள் வந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறாள். மருமகனைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனபோதிலும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே!
“இத நீ உன்ர மகளைத்தான் கேக்கவேணும்.”
“அவளையும் கேக்கத்தான் போறன். கேட்டுச் சண்டை பிடிக்கத்தான் போறன். ஆனா, நீங்க ஏன் உடனேயே எனக்குச் சொல்ல இல்ல? சொல்லி இருந்தா அப்பவே என்ர பேத்தியை நான் போய் பாத்திருப்பன் தானே?”
“அதாலதான் சொல்ல இல்ல யாஷ். ‘இரக்கப்பட்டு என்னைத் தேடி வரவேணாம்’ எண்டு சொல்லிப்போட்டு போனவா உன்ர மகள். அந்த ரோசத்தை, கோபத்தை நாங்க மதிக்கோணும்.” என்றவரை போதும் என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டார் யசோதா.
“அப்பாவும் மகளும் மாறி மாறி கோபப்படுவீங்க. ரோசப்படுவீங்க. நடுவுக்க கிடந்து நான் பட்ட துன்பம் எல்லாம் போதும். நீங்க சொன்னீங்க எண்டுதான் பேத்தி பிறந்தது தெரிஞ்சும் நான் எட்டியும் பாக்கேல்லை. இனி என்னால ஏலாது. நான் போகப்போறன்! பாக்கப்போறன்!” என்று அறிவித்தார் அவர்.
“நோ! நீ போகக்கூடாது யாஷ்!”
“வெரி சொறி! நீங்க எனக்கு நியாயமா நடக்க இல்ல சத்யா. அதால நீங்க சொல்லுறதை நான் கேக்கமாட்டன்!” என்றுவிட்டு, அவரின் சாப்பாட்டையும் கோப்பிக் கோப்பையையும் அவரின் முன்னால் டொம் என்று வைத்துவிட்டு எழுந்துபோனார் யசோதா.
சற்று நேரத்திலேயே தயாராகி, தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். கைப்பையையும் கார் திறப்பையும் எடுத்துக்கொண்டு புறப்படவும், கோப்பியை அருந்திக்கொண்டு இருந்த சத்தியநாதன், “கவனம்!” என்றார் வேறு பேசாமல்.
சகாதேவனின் வீடு குடிபூரல் நாளைக்கு என்பதால், பயணத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தான், நிகேதன்.
“இரவுக்கு இங்க இருந்து வெளிக்கிட வேணும் ஆரா. குடிபூரல முடிச்சுக்கொண்டு திரும்ப நாளைக்கு இரவே அங்க இருந்தும் வெளிக்கிடவேணும். பூவிக்கு எல்லாம் பாத்து எடுத்துவை.”
அது அவளுக்கும் தெரியும் தான். சகாதேவனும் மாலினியும் பிரத்தியேகமாக அவளிடமும் பேசி வரச்சொல்லி அழைத்தும் இருந்தார்கள் தான். ஆனாலும், ஆரணி தயங்கினாள்.
அதை உணர்ந்து, “என்ன ஆரா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.
“நான் வராம நிக்கவா?” மெல்லிய தயக்கத்துடன் கேட்டாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கிற்று. ஏன் இப்படிச் சொல்கிறாள்? அவன் மீது இருக்கிற கோபத்தினாலா? அவன் முகம் சுருங்கிப் போயிற்று. “அப்பிடி போகாம இருக்கிறது நல்லாருக்காது.” என்றான் ஒருமாதிரிக் குரலில்.
“ஆனா ஏன்?” என்றான் காரணத்தை அறிய விரும்பி.
அவளோ பதில் சொல்லத் தடுமாறினாள். அவன் முகம் பார்க்க மறுத்தாள்.
ஒன்றும் விளங்காமல், “என்ன ஆரா?” என்றான் மீண்டும். “என்ன எண்டாலும் வெளிப்படையா சொன்னா தானே தெரியும்.”
“இல்ல.. நான் வாறன்.” என்றுவிட்டு, காரணம் சொல்லாமல் போகிறவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான் நிகேதன்.
அவனுக்கும் நின்று கேட்க நேரமில்லை. ஒரு வேனை விற்றுவிட்டதில் அதன் மூலம் ஓடிய ஹயர்களையும் சேர்த்துக் கவனிக்கவேண்டி இருந்தது. கிடைத்த நல்ல வாடிக்கையாளர்களை விட்டுவிட மனமில்லை. நாளைய ஒரு நாளுக்கு அவனுக்குப் பதிலாக ஆட்களை ஒழுங்குபடுத்தவேண்டி இருந்தது. அடுத்த வாரம் அளவில் வீட்டு வேலைக்குப் பூசையைப் போட்டு அத்திவாரம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்ததில், அதற்கான அலுவல்கள் என்று அவனுக்கு உண்மையிலேயே மூச்சு விடக்கூட நேரமில்லை.
அவளை அவள் பாட்டுக்கே விட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தவன், வந்து நின்ற யசோதாவின் காரைக் கண்டுவிட்டு அப்படியே நின்றான். அவரைப் பார்த்ததும் முகத்தில் படிந்த கருமையை வேகமாக மறைத்துக்கொண்டு வரவேற்றான். ஆரணியும் அன்னையை அங்கே எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தாலும் பின் ஒன்றும் சொல்லாமல் இறுக்கத்தோடு நின்றாள்.
அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை. அவருக்காகவே பிரத்தியேகமாகப் போடப்பட்டு இருந்ததைப்போன்று ஹாலில் இருந்த இருக்கையில் வந்து வசதியாக அமர்ந்துகொண்டார்.
தன்பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்த பூவினி, புது முகத்தைக் கண்டதும் விறுவிறு என்று தவழ்ந்து வந்து தகப்பனின் கால்களைப் பற்றி எழுந்து நின்று தூக்கு என்று அவசரப்படுத்தினாள். நிகேதனும் மகளைத் தூக்கிக்கொண்டான்.
யாருக்கு என்ன பேசுவது என்று தெரியாத ஒரு சங்கடமான சூழ்நிலை. யசோதாவின் பார்வை தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன்னையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்த பேத்தியிலேயே இருந்தது. அவளில் தன் சாயலைத் தேடினார்.
அதைக் கவனித்த நிகேதன், “பூவம்மா, பிள்ளையின்ர அம்மம்மா வந்திருக்கிறா. போறீங்களா?” என்றபடி அவளை அவரிடம் கொண்டுபோய் நீட்டினான். அவளோ தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று உதடு பிதுக்கிச் சிணுங்கினாள்.