அத்தியாயம் 50
நிகேதனின் வாகனம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அவனருகில் ராகவனும், பின்னுக்கு முதல் வரிசையில் அமராவதி அம்மாவும் கயலினியும் ராகுலனுடன் இருக்க, அடுத்த வரிசையில் பூவினியுடன் ஆரணி அமர்ந்து இருந்தாள்.
மன்னாரில் இருந்து கொழும்புக்கு நிற்காமல் சென்றால் கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலப் பயணம். இரண்டு குழந்தைகளோடு செல்கையில் குறைந்தது மூன்று தடவையாவது நிறுத்தவேண்டி வரும். ஆக, இது எட்டு மணித்தியாலப் பயணமாக அமையும் என்பது நிகேதனின் கணிப்பு. அதில், ஆரம்பத்திலேயே சற்று வேகமெடுத்திருந்தான். அவன் வாகனமோட்டுவதில் கவனமாக இருக்க ஆரணி அவன் பற்றிய சிந்தனையில் இருந்தாள்.
காரணம், இன்று வந்துவிட்டுப் போன அன்னை யசோதா. அவரின் வரவைப்போலவே அவர் சொன்னவைகளும் அவள் எதிர்பாராதவையாகவே இருந்தது.
அவள் தாய்மை அடைந்தபோது அன்னையின் அருகாமைக்காக வெகுவாகவே ஏங்கியது உண்மை. அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் கெட்டித்தனமாக மறைத்துக்கொண்டதாகத்தான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தாள். ஆனால், அவன் அதைக் கண்டுகொண்டிருக்கிறான்; அன்னையிடம் சென்று சமாதானம் பேசவும் முயன்று இருக்கிறான். படு மோசமாக அவமானமும் பட்டிருக்கிறான். இருந்தும், ஒரு சிறு செய்கையிலோ பார்வையிலோ கூட அவளிடம் காட்டிக்கொண்டதே இல்லை. மாறாக, இன்னும் இரண்டு மடங்கு கவனத்துடனும் கரிசனையோடும் கனிவோடும் அவளைப் பார்த்துக்கொண்டான்.
அந்த நேரத்தில் அவனைச் சுற்றி இருந்த பிரச்சனைகள் நிறைய. இதில் அவளின் தாய் கொடுத்த அவமானம் வேறு. அத்தனையையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, குழந்தை பிறந்த பிறகும், அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டு கடன் கட்டி, உழைத்து என்று அவன் பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா? நினைக்கையிலேயே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது ஆரணிக்கு.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் திடீரென்று வீட்டுக்கு வந்து சேர்ந்த தாலிக்கொடி, அவசர அவசரமாக வேனை விற்று வீடு கட்ட ஆரம்பித்தது எல்லாமே ஏன் என்று புரிந்தது. ‘மிச்சம் சொச்சமா இருக்கிற மானத்தையாவது காப்பாத்தத்தான்.’ என்று அவன் அன்று சொன்னதன் பொருளும் புரிந்தது.
அவனைச் சார்ந்த எல்லோருமே அவள் உட்பட எப்போதுமே ஏதோ ஒரு விதத்தில் அவனை நெருக்கடியான நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்களோ? அந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தான் வெடித்தானா? வெடித்தது அவன். வெடிக்க வைத்தது யார்? தவிப்புடன் அவனையே பார்த்தாள் ஆரணி.
இத்தனை நாட்களாக, அவனை மாத்திரமே உலகமாய் நம்பியிருந்த என்னை நோகடித்துவிட்டானே என்று இருந்த அவளின் பார்வை சற்றே மாறியது. கொஞ்சம் அவனை விளங்கி நடந்துகொண்டிருக்கலாமோ, அவளுக்காக என்று உயிரையும் கொடுத்து ஓடுகிறவன் அவளிடமே ஏன் இப்படிக் கோபப்பட்டான் என்று கொஞ்சமே கொஞ்சம் நிதானமாக யோசித்து இருக்கலாமோ என்று ஓடியது. சீதனம் வேண்டுமா என்று அவள் கேட்டதும் மகா தவறுதானே.
வீதியில் கவனமாக இருந்தவன் ஏதோ ஒரு உணர்வில் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. நெஞ்சுக்குள் எதுவோ அடைக்கும் உணர்வு அவளுக்கு. இத்தனை நாள் விலகலா அல்லது அன்னையின் வரவால் நெகிழ்ந்திருந்த மனது இயல்பாய் அவனைத் தேடியதா தெரியவில்லை. அவனையே பார்த்தாள் ஆரணி.
அவர்களைச் சுற்றிக் கவிழ்ந்திருந்த மெல்லிய இருளுக்குள், சீடி பிளேயரில் பாடல் அளவான சத்தத்தில் செவிகளை நனைக்க, காலர் வைத்த அரைக்கை டீ ஷர்ட்டில், ஒரு கை இருக்கையின் கைப்பிடியில் சும்மா இருக்க மற்ற கையால் ஸ்டேரிங்கை பற்றியிருந்தான் நிகேதன். வாகனத்தின் வேகம் நூறு தாண்டியிருந்தபோதும் அதைக்குறித்த பயம், பதட்டம் எதுவுமற்று வெகு நிதானமாக அவன் வாகனத்தைச் செலுத்தும் பாங்கு அவளைக் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் மனம் கணவனாகிப்போனவனைக் காதலனின் இடத்தில் வைத்துப் பார்த்து மயக்கம் கொண்டது.
அதனை அவன் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். வீதியில் கவனம் இருந்தாலும் கண்களில் சிறு சிரிப்புடன் அவளை நோக்கினான். மெல்லிய தடுமாற்றத்துடன் பார்வையை அகற்றிக்கொண்டாள் ஆரணி. விழுந்துபோயிருந்த விரிசல் காதலைப் புதிதாக உணரவைத்துக்கொண்டிருந்தது.
“போயிட்டு உடனேயே திரும்பப் போறம். தொடர்ந்து வாகனம் ஓடுறது சிரமமா இருக்காதா நிகேதன்?” என்று வினவினான் ராகவன்.
“ஆரம்ப நாட்கள்ல கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது ராகவன். இப்ப பழகிப்போச்சு. கொஞ்ச நேரம் படுத்து எழும்பினா காணும்.” வீதியில் கவனம் இருக்க, இலகுவாகப் பதில் சொன்னான் அவன்.
“உங்கட டிரைவிங்கிலேயே உங்கட அனுபவம் தெரியுது.” என்று சிலாகித்தான் அவன்.
அவர்கள் இருவரும் உறவினர்களாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. ஆனாலும், குடும்பத்துக்குள் இருந்த பிக்கல் பிடுங்கல்கள் ஒரு இலகுவான பேச்சு வார்த்தையை அவர்களுக்குள் நடத்த விட்டதே இல்லை. இன்று, வேறு வழியில்லை. இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்து பயணித்தே ஆகவேண்டும். அதில் இயல்பாகவே பேச்சை ஆரம்பித்திருந்தான் ராகவன்.
“உண்மைய சொல்லுங்கோ நிகேதன், என்னதான் நல்ல வருவாய இந்த வேலை தந்தாலும் சில நேரங்கள்ல யோசிச்சு பாக்கேக்க கவலையா இருக்கிறேல்லையா?”
அந்தக் கேள்வி அவர்களின் ஆரம்ப நாட்களை நினைவூட்டிவிட்டது. மீண்டும் நிகேதன், ஆரணி இருவரின் விழிகளும் கண்ணாடி வழியே சந்தித்து மீண்டது.
“வேலைவெட்டி இல்லாம அந்த நேரம் நானே வீட்டுக்குச் சுமை ராகவன். இதுல கலியாணம் கட்டி ஒரு பெட்டையையும் கூட்டிக்கொண்டு போனா என்ன ஆகும் சொல்லுங்கோ? டிரைவரா எண்டாலும் ஒரு வேலை கிடைச்சதே பெருசு எண்டுதான் இருந்தது. அதே நேரம் எங்கயாவது தெரிஞ்ச அறிஞ்ச ஆட்களைக் காணேக்க(காணும் போது) ஒருமாதிரி.. எப்பிடி சொல்ல வெக்கமா அவமானமா இருந்ததும் உண்மை தான். ஆனா இப்ப உண்மையா எனக்கு எந்தக் கவலையும் இல்ல. அப்பிடி இருந்தா இப்ப எண்டாலும் ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் தானே.” என்றவன், “குறுகிய காலத்துக்க பெரிய முன்னேற்றம் வந்தது இந்த வேலையாலதான்.” என்பதையும் சேர்த்துச் சொன்னான்.
அவன் சொன்னது அங்கிருந்த மூன்று பெண்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. தம்முடைய இந்த நல்ல நிலைக்கு அவனும் அவனுடைய அந்த வேலையும் காரணம் என்பதை மனதார உணர்ந்தனர்.
நிகேதனின் வாகனம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அவனருகில் ராகவனும், பின்னுக்கு முதல் வரிசையில் அமராவதி அம்மாவும் கயலினியும் ராகுலனுடன் இருக்க, அடுத்த வரிசையில் பூவினியுடன் ஆரணி அமர்ந்து இருந்தாள்.
மன்னாரில் இருந்து கொழும்புக்கு நிற்காமல் சென்றால் கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலப் பயணம். இரண்டு குழந்தைகளோடு செல்கையில் குறைந்தது மூன்று தடவையாவது நிறுத்தவேண்டி வரும். ஆக, இது எட்டு மணித்தியாலப் பயணமாக அமையும் என்பது நிகேதனின் கணிப்பு. அதில், ஆரம்பத்திலேயே சற்று வேகமெடுத்திருந்தான். அவன் வாகனமோட்டுவதில் கவனமாக இருக்க ஆரணி அவன் பற்றிய சிந்தனையில் இருந்தாள்.
காரணம், இன்று வந்துவிட்டுப் போன அன்னை யசோதா. அவரின் வரவைப்போலவே அவர் சொன்னவைகளும் அவள் எதிர்பாராதவையாகவே இருந்தது.
அவள் தாய்மை அடைந்தபோது அன்னையின் அருகாமைக்காக வெகுவாகவே ஏங்கியது உண்மை. அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் கெட்டித்தனமாக மறைத்துக்கொண்டதாகத்தான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தாள். ஆனால், அவன் அதைக் கண்டுகொண்டிருக்கிறான்; அன்னையிடம் சென்று சமாதானம் பேசவும் முயன்று இருக்கிறான். படு மோசமாக அவமானமும் பட்டிருக்கிறான். இருந்தும், ஒரு சிறு செய்கையிலோ பார்வையிலோ கூட அவளிடம் காட்டிக்கொண்டதே இல்லை. மாறாக, இன்னும் இரண்டு மடங்கு கவனத்துடனும் கரிசனையோடும் கனிவோடும் அவளைப் பார்த்துக்கொண்டான்.
அந்த நேரத்தில் அவனைச் சுற்றி இருந்த பிரச்சனைகள் நிறைய. இதில் அவளின் தாய் கொடுத்த அவமானம் வேறு. அத்தனையையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, குழந்தை பிறந்த பிறகும், அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டு கடன் கட்டி, உழைத்து என்று அவன் பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா? நினைக்கையிலேயே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது ஆரணிக்கு.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் திடீரென்று வீட்டுக்கு வந்து சேர்ந்த தாலிக்கொடி, அவசர அவசரமாக வேனை விற்று வீடு கட்ட ஆரம்பித்தது எல்லாமே ஏன் என்று புரிந்தது. ‘மிச்சம் சொச்சமா இருக்கிற மானத்தையாவது காப்பாத்தத்தான்.’ என்று அவன் அன்று சொன்னதன் பொருளும் புரிந்தது.
அவனைச் சார்ந்த எல்லோருமே அவள் உட்பட எப்போதுமே ஏதோ ஒரு விதத்தில் அவனை நெருக்கடியான நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்களோ? அந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தான் வெடித்தானா? வெடித்தது அவன். வெடிக்க வைத்தது யார்? தவிப்புடன் அவனையே பார்த்தாள் ஆரணி.
இத்தனை நாட்களாக, அவனை மாத்திரமே உலகமாய் நம்பியிருந்த என்னை நோகடித்துவிட்டானே என்று இருந்த அவளின் பார்வை சற்றே மாறியது. கொஞ்சம் அவனை விளங்கி நடந்துகொண்டிருக்கலாமோ, அவளுக்காக என்று உயிரையும் கொடுத்து ஓடுகிறவன் அவளிடமே ஏன் இப்படிக் கோபப்பட்டான் என்று கொஞ்சமே கொஞ்சம் நிதானமாக யோசித்து இருக்கலாமோ என்று ஓடியது. சீதனம் வேண்டுமா என்று அவள் கேட்டதும் மகா தவறுதானே.
வீதியில் கவனமாக இருந்தவன் ஏதோ ஒரு உணர்வில் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. நெஞ்சுக்குள் எதுவோ அடைக்கும் உணர்வு அவளுக்கு. இத்தனை நாள் விலகலா அல்லது அன்னையின் வரவால் நெகிழ்ந்திருந்த மனது இயல்பாய் அவனைத் தேடியதா தெரியவில்லை. அவனையே பார்த்தாள் ஆரணி.
அவர்களைச் சுற்றிக் கவிழ்ந்திருந்த மெல்லிய இருளுக்குள், சீடி பிளேயரில் பாடல் அளவான சத்தத்தில் செவிகளை நனைக்க, காலர் வைத்த அரைக்கை டீ ஷர்ட்டில், ஒரு கை இருக்கையின் கைப்பிடியில் சும்மா இருக்க மற்ற கையால் ஸ்டேரிங்கை பற்றியிருந்தான் நிகேதன். வாகனத்தின் வேகம் நூறு தாண்டியிருந்தபோதும் அதைக்குறித்த பயம், பதட்டம் எதுவுமற்று வெகு நிதானமாக அவன் வாகனத்தைச் செலுத்தும் பாங்கு அவளைக் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளின் மனம் கணவனாகிப்போனவனைக் காதலனின் இடத்தில் வைத்துப் பார்த்து மயக்கம் கொண்டது.
அதனை அவன் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். வீதியில் கவனம் இருந்தாலும் கண்களில் சிறு சிரிப்புடன் அவளை நோக்கினான். மெல்லிய தடுமாற்றத்துடன் பார்வையை அகற்றிக்கொண்டாள் ஆரணி. விழுந்துபோயிருந்த விரிசல் காதலைப் புதிதாக உணரவைத்துக்கொண்டிருந்தது.
“போயிட்டு உடனேயே திரும்பப் போறம். தொடர்ந்து வாகனம் ஓடுறது சிரமமா இருக்காதா நிகேதன்?” என்று வினவினான் ராகவன்.
“ஆரம்ப நாட்கள்ல கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது ராகவன். இப்ப பழகிப்போச்சு. கொஞ்ச நேரம் படுத்து எழும்பினா காணும்.” வீதியில் கவனம் இருக்க, இலகுவாகப் பதில் சொன்னான் அவன்.
“உங்கட டிரைவிங்கிலேயே உங்கட அனுபவம் தெரியுது.” என்று சிலாகித்தான் அவன்.
அவர்கள் இருவரும் உறவினர்களாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. ஆனாலும், குடும்பத்துக்குள் இருந்த பிக்கல் பிடுங்கல்கள் ஒரு இலகுவான பேச்சு வார்த்தையை அவர்களுக்குள் நடத்த விட்டதே இல்லை. இன்று, வேறு வழியில்லை. இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்து பயணித்தே ஆகவேண்டும். அதில் இயல்பாகவே பேச்சை ஆரம்பித்திருந்தான் ராகவன்.
“உண்மைய சொல்லுங்கோ நிகேதன், என்னதான் நல்ல வருவாய இந்த வேலை தந்தாலும் சில நேரங்கள்ல யோசிச்சு பாக்கேக்க கவலையா இருக்கிறேல்லையா?”
அந்தக் கேள்வி அவர்களின் ஆரம்ப நாட்களை நினைவூட்டிவிட்டது. மீண்டும் நிகேதன், ஆரணி இருவரின் விழிகளும் கண்ணாடி வழியே சந்தித்து மீண்டது.
“வேலைவெட்டி இல்லாம அந்த நேரம் நானே வீட்டுக்குச் சுமை ராகவன். இதுல கலியாணம் கட்டி ஒரு பெட்டையையும் கூட்டிக்கொண்டு போனா என்ன ஆகும் சொல்லுங்கோ? டிரைவரா எண்டாலும் ஒரு வேலை கிடைச்சதே பெருசு எண்டுதான் இருந்தது. அதே நேரம் எங்கயாவது தெரிஞ்ச அறிஞ்ச ஆட்களைக் காணேக்க(காணும் போது) ஒருமாதிரி.. எப்பிடி சொல்ல வெக்கமா அவமானமா இருந்ததும் உண்மை தான். ஆனா இப்ப உண்மையா எனக்கு எந்தக் கவலையும் இல்ல. அப்பிடி இருந்தா இப்ப எண்டாலும் ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் தானே.” என்றவன், “குறுகிய காலத்துக்க பெரிய முன்னேற்றம் வந்தது இந்த வேலையாலதான்.” என்பதையும் சேர்த்துச் சொன்னான்.
அவன் சொன்னது அங்கிருந்த மூன்று பெண்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. தம்முடைய இந்த நல்ல நிலைக்கு அவனும் அவனுடைய அந்த வேலையும் காரணம் என்பதை மனதார உணர்ந்தனர்.