அத்தியாயம் 54
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிகேதன் சத்யநாதனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆரணி சென்று கேட்ட ஒற்றை மன்னிப்பிலோ, அவனை அழைத்து ஒருமுறை அவர் பேசியதிலோ அவரிடம் இத்தனை மாற்றம் உண்டாகியிருக்கும் என்று நம்ப அவன் தயாராயில்லை. ஆரம்பம் முதலே அவர் அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். கண்காணித்து, அவன் நல்லவன் தான், உழைப்பாளி தான் என்று ஐயம் திரிபுர உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர்களாகவே அவரிடம் வரவேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். வந்ததும் முழுமையாகப் பிடித்துக்கொள்ள முனைகிறார்.
‘பொல்லாத மனிதர்’ என்று எண்ணும்போதே அவன் உதட்டோரம் சிறு முறுவல் ஒன்று உண்டாயிற்று.
இதோ, அவனிடம் வாக்கு வாங்கிவிட்டாரே. சத்தமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே அவர்களை ஆட்டுவிக்கும் அவர், அவனுக்கு மாமா என்பதைத் தாண்டி, அவனுடைய மதிப்பிற்குரிய முன்மாதிரி என்கிற இடத்தை நோக்கி உயர்ந்திருந்தார்.
விசயம் அறிந்த ஆரணியோ கொதித்து எழுந்துவிட்டாள். “ஆர(யாரை) கேட்டு என்னை அங்க கொண்டுபோய் விடுறதுக்கு முடிவு எடுத்தனி நிக்கி? நான் போக மாட்டன். என்னால உன்ன விட்டுட்டு இருக்கேலாது.”
“நான் என்ன நிரந்தரமாவே அங்க இரு எண்டா சொல்லுறன்? இனி நான் கொழும்புக்கு வெளிக்கிட வேணும். பிறகு வந்தாலும் வீட்டு வேல இருக்கும். ஹயர் இருக்கும். இதுல எப்பிடி நான் உன்ன பாப்பன் சொல்லு? அங்கபோய் இருந்தா உனக்கும் சந்தோசமா இருக்கும். மாமா மாமிக்கும் சந்தோசமா இருக்கும் தானே. நானும் உன்னைப் பற்றின பயமில்லாம வேலைகள பாப்பன். பூவிக்கும் அவவின்ர அம்மம்மாவோட தாத்தாவோட இருக்க, வளர சந்தர்ப்பம் கிடைக்கும் தானே ஆரா.”
அவன் என்ன சமாதானம் சொல்லியும் அவள் மனம் ஆறமாட்டேன் என்றது. “என்ன இருந்தாலும் என்னை கொண்டுபோய் அங்க விட நினைச்சிட்டியே நிக்கி. அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டியா?” என்று கலங்கினாள்.
அதற்குப் பதில் சொல்லவில்லை நிகேதன். அவள் முகத்தையே பார்த்தான். ஆரணிக்கு சில நிமிடங்களுக்கு மேலே அவனைப் பார்க்க முடியவில்லை. தன் கூற்றில் நியாயம் இல்லை என்கிற உண்மை அவளுக்கே தெரியுமே. என்றாலும் மனதின் சிணுக்கம் மறையவில்லை.
அவன் சிறு சிரிப்புடன் அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“நீ ஒண்டும் நடிக்கத் தேவையில்லை. இப்ப எல்லாம் உனக்கு என்னில பாசமே இல்ல.” அவன் முகம் பாராமல் அப்போதும் முறுக்கினாள் அவன்.
அவன் இதழ்கள் விரிந்தன. அவள் முகத்தோடு தன் முகம் வைத்து உரசினான். “என்ர ஆராவில எனக்கு பாசம் இல்லையா?” என்று கேட்டான்.
“பிறகு ஏன் என்னை அனுப்ப நிக்கிறாய்? நான் போகேல்ல நிக்கி!” என்றாள் கெஞ்சலாக.
“ஏன் எண்டு சொல்லு?”
“என்னவோ நாங்க இறங்கி போற மாதிரி இருக்கு..”
“சரி! இறங்கி போனாத்தான் என்ன? முதல் ஆரிட்ட(யாரிட்ட) இறங்கி போறோம்?”
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“அவே எங்களை தேடி வரவேணுமா இல்ல நாங்க அவேயே தேடி போகவேணுமா? எது சரி எண்டு சொல்லு?”
அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
“என்ர முகத்தை பாத்து சொல்லு. உனக்கு மாமாவ மாமிய பாக்கவேணும் மாதிரி இல்லையா? மாமின்ர கைப்பக்குவத்தில சாப்பிட வேணும் மாதிரி? பூவிய யாராவது பக்குவமா பாத்துக்கொண்டா அடிச்சுப்போட்ட மாதிரி படுத்து எழுப்பலாம் எண்டு நீ நினைச்சதே இல்லையா?” என்று கேட்டான் அவன்.
“எண்டாலும்..”
“என்ன எண்டாலும்? சும்மா ஒண்டுமே இல்லாததை தூக்கிப் பிடிக்கிறேல்ல ஆரா. நாங்க ஒண்டும் இறங்கிப் போக இல்ல. நல்லாத்தான் இருக்கிறோம். நீயா வெளில வந்த. நீயாத்தான் திரும்பவும் வரவேணும் எண்டு மட்டும் தான் அவே எதிர்பாக்கினம். மற்றும்படி நீயும் பூவியும் எப்ப வருவீங்க எண்டு ரெண்டுபேரும் காத்துக்கொண்டு இருக்கினம். அவேயும் பாவம் தானே. நீ வெளில வந்ததில இருந்து வீடே பாழடைஞ்சு போச்சுது எண்டு மாமி கண்கலங்குறா. அவவுக்கு என்ன பதில் சொல்லப்போறாய்?”
அதைக் கேட்டதும் அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. கோபம் பாராட்டாமல் தன்னைத் தேடி ஓடிவந்த அன்னை கண்ணுக்குள் வந்து நின்றார்.
“இன்னொரு பிள்ளை எண்டதும் மாமின்ர முகத்தில எவ்வளவு சந்தோசம் தெரியுமா? முதல் பிள்ளைக்குத்தான் அவளை வச்சுப் பாக்க குடுத்து வைக்க இல்ல. இந்தப் பிள்ளைக்காவது நானே எல்லாம் செய்யவேணும் எண்டு பரபரக்கிறா. அவவுக்கு என்ன பத்து பிள்ளையா இருக்கு இதையெல்லாம் செய்து பாக்க?”
“நான் போனா நீ?”
அந்தக் கேள்வியிலேயே அவளின் சம்மதத்தை அறிந்துகொண்டான் அவன். “இது என்ன கேள்வி? உனக்கு பின்னாலதான் வருவன்.” என்றான் சிரித்துக்கொண்டு.
“பூவம்மா உன்ன ஒரு இடத்தில இருக்க விடமாட்டா. நானும் எல்லா நேரமும் வீட்டுல நிக்கேலாது. என்ர ஆராவ என்னால வடிவா பாக்கேலாம போயிடுமோ எண்டு பயமா இருந்தது. நீ அங்க இருந்தா நான் நிம்மதியா வேலைகளை பாப்பன். பிள்ளை பிறக்கிற வரைக்கும் தானே?” என்று இன்னும் எடுத்துச் சொன்னான் அவன்.
“ஆனா சாப்பாட்டுக்கு நீ அங்கதான் வரவேணும். இரவுக்கு அங்கதான் தங்கவேணும். நீ இல்லாம நான் தனியா படுக்கமாட்டன். இது எல்லாத்துக்கும் நீ ஓம் எண்டு சொன்னா சொல்லு, வாறன்.” பேரம் பேசினாள் அவள்.
“எல்லா நாளும் தங்க கிடைக்குமா தெரியாது ஆரா. இங்க இருந்து எனக்கு ஹயருக்கு போறது ஈஸி. ஆனா ஏலுமான(இயலுமான) நேரமெல்லாம் அங்க வாறன். உன்னோட தங்குவன். சரிதானே.” என்று இன்னும் என்னென்னவோ சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான் அவன்.
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிகேதன் சத்யநாதனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆரணி சென்று கேட்ட ஒற்றை மன்னிப்பிலோ, அவனை அழைத்து ஒருமுறை அவர் பேசியதிலோ அவரிடம் இத்தனை மாற்றம் உண்டாகியிருக்கும் என்று நம்ப அவன் தயாராயில்லை. ஆரம்பம் முதலே அவர் அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். கண்காணித்து, அவன் நல்லவன் தான், உழைப்பாளி தான் என்று ஐயம் திரிபுர உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர்களாகவே அவரிடம் வரவேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். வந்ததும் முழுமையாகப் பிடித்துக்கொள்ள முனைகிறார்.
‘பொல்லாத மனிதர்’ என்று எண்ணும்போதே அவன் உதட்டோரம் சிறு முறுவல் ஒன்று உண்டாயிற்று.
இதோ, அவனிடம் வாக்கு வாங்கிவிட்டாரே. சத்தமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே அவர்களை ஆட்டுவிக்கும் அவர், அவனுக்கு மாமா என்பதைத் தாண்டி, அவனுடைய மதிப்பிற்குரிய முன்மாதிரி என்கிற இடத்தை நோக்கி உயர்ந்திருந்தார்.
விசயம் அறிந்த ஆரணியோ கொதித்து எழுந்துவிட்டாள். “ஆர(யாரை) கேட்டு என்னை அங்க கொண்டுபோய் விடுறதுக்கு முடிவு எடுத்தனி நிக்கி? நான் போக மாட்டன். என்னால உன்ன விட்டுட்டு இருக்கேலாது.”
“நான் என்ன நிரந்தரமாவே அங்க இரு எண்டா சொல்லுறன்? இனி நான் கொழும்புக்கு வெளிக்கிட வேணும். பிறகு வந்தாலும் வீட்டு வேல இருக்கும். ஹயர் இருக்கும். இதுல எப்பிடி நான் உன்ன பாப்பன் சொல்லு? அங்கபோய் இருந்தா உனக்கும் சந்தோசமா இருக்கும். மாமா மாமிக்கும் சந்தோசமா இருக்கும் தானே. நானும் உன்னைப் பற்றின பயமில்லாம வேலைகள பாப்பன். பூவிக்கும் அவவின்ர அம்மம்மாவோட தாத்தாவோட இருக்க, வளர சந்தர்ப்பம் கிடைக்கும் தானே ஆரா.”
அவன் என்ன சமாதானம் சொல்லியும் அவள் மனம் ஆறமாட்டேன் என்றது. “என்ன இருந்தாலும் என்னை கொண்டுபோய் அங்க விட நினைச்சிட்டியே நிக்கி. அந்தளவுக்கு என்னை வெறுத்திட்டியா?” என்று கலங்கினாள்.
அதற்குப் பதில் சொல்லவில்லை நிகேதன். அவள் முகத்தையே பார்த்தான். ஆரணிக்கு சில நிமிடங்களுக்கு மேலே அவனைப் பார்க்க முடியவில்லை. தன் கூற்றில் நியாயம் இல்லை என்கிற உண்மை அவளுக்கே தெரியுமே. என்றாலும் மனதின் சிணுக்கம் மறையவில்லை.
அவன் சிறு சிரிப்புடன் அவள் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“நீ ஒண்டும் நடிக்கத் தேவையில்லை. இப்ப எல்லாம் உனக்கு என்னில பாசமே இல்ல.” அவன் முகம் பாராமல் அப்போதும் முறுக்கினாள் அவன்.
அவன் இதழ்கள் விரிந்தன. அவள் முகத்தோடு தன் முகம் வைத்து உரசினான். “என்ர ஆராவில எனக்கு பாசம் இல்லையா?” என்று கேட்டான்.
“பிறகு ஏன் என்னை அனுப்ப நிக்கிறாய்? நான் போகேல்ல நிக்கி!” என்றாள் கெஞ்சலாக.
“ஏன் எண்டு சொல்லு?”
“என்னவோ நாங்க இறங்கி போற மாதிரி இருக்கு..”
“சரி! இறங்கி போனாத்தான் என்ன? முதல் ஆரிட்ட(யாரிட்ட) இறங்கி போறோம்?”
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“அவே எங்களை தேடி வரவேணுமா இல்ல நாங்க அவேயே தேடி போகவேணுமா? எது சரி எண்டு சொல்லு?”
அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
“என்ர முகத்தை பாத்து சொல்லு. உனக்கு மாமாவ மாமிய பாக்கவேணும் மாதிரி இல்லையா? மாமின்ர கைப்பக்குவத்தில சாப்பிட வேணும் மாதிரி? பூவிய யாராவது பக்குவமா பாத்துக்கொண்டா அடிச்சுப்போட்ட மாதிரி படுத்து எழுப்பலாம் எண்டு நீ நினைச்சதே இல்லையா?” என்று கேட்டான் அவன்.
“எண்டாலும்..”
“என்ன எண்டாலும்? சும்மா ஒண்டுமே இல்லாததை தூக்கிப் பிடிக்கிறேல்ல ஆரா. நாங்க ஒண்டும் இறங்கிப் போக இல்ல. நல்லாத்தான் இருக்கிறோம். நீயா வெளில வந்த. நீயாத்தான் திரும்பவும் வரவேணும் எண்டு மட்டும் தான் அவே எதிர்பாக்கினம். மற்றும்படி நீயும் பூவியும் எப்ப வருவீங்க எண்டு ரெண்டுபேரும் காத்துக்கொண்டு இருக்கினம். அவேயும் பாவம் தானே. நீ வெளில வந்ததில இருந்து வீடே பாழடைஞ்சு போச்சுது எண்டு மாமி கண்கலங்குறா. அவவுக்கு என்ன பதில் சொல்லப்போறாய்?”
அதைக் கேட்டதும் அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. கோபம் பாராட்டாமல் தன்னைத் தேடி ஓடிவந்த அன்னை கண்ணுக்குள் வந்து நின்றார்.
“இன்னொரு பிள்ளை எண்டதும் மாமின்ர முகத்தில எவ்வளவு சந்தோசம் தெரியுமா? முதல் பிள்ளைக்குத்தான் அவளை வச்சுப் பாக்க குடுத்து வைக்க இல்ல. இந்தப் பிள்ளைக்காவது நானே எல்லாம் செய்யவேணும் எண்டு பரபரக்கிறா. அவவுக்கு என்ன பத்து பிள்ளையா இருக்கு இதையெல்லாம் செய்து பாக்க?”
“நான் போனா நீ?”
அந்தக் கேள்வியிலேயே அவளின் சம்மதத்தை அறிந்துகொண்டான் அவன். “இது என்ன கேள்வி? உனக்கு பின்னாலதான் வருவன்.” என்றான் சிரித்துக்கொண்டு.
“பூவம்மா உன்ன ஒரு இடத்தில இருக்க விடமாட்டா. நானும் எல்லா நேரமும் வீட்டுல நிக்கேலாது. என்ர ஆராவ என்னால வடிவா பாக்கேலாம போயிடுமோ எண்டு பயமா இருந்தது. நீ அங்க இருந்தா நான் நிம்மதியா வேலைகளை பாப்பன். பிள்ளை பிறக்கிற வரைக்கும் தானே?” என்று இன்னும் எடுத்துச் சொன்னான் அவன்.
“ஆனா சாப்பாட்டுக்கு நீ அங்கதான் வரவேணும். இரவுக்கு அங்கதான் தங்கவேணும். நீ இல்லாம நான் தனியா படுக்கமாட்டன். இது எல்லாத்துக்கும் நீ ஓம் எண்டு சொன்னா சொல்லு, வாறன்.” பேரம் பேசினாள் அவள்.
“எல்லா நாளும் தங்க கிடைக்குமா தெரியாது ஆரா. இங்க இருந்து எனக்கு ஹயருக்கு போறது ஈஸி. ஆனா ஏலுமான(இயலுமான) நேரமெல்லாம் அங்க வாறன். உன்னோட தங்குவன். சரிதானே.” என்று இன்னும் என்னென்னவோ சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான் அவன்.