அத்தியாயம் 55
நாட்கள் சிறகில்லாமல் பறந்தன. ஆரணியின் சூழ் கொண்ட வயிறு பெருக்கப் பெருக்க நிகேதனும் வீட்டைக் கட்டி முடித்திருந்தான். தந்தைக்கு உதவியாக அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள், ஆரணி. யசோதா ஆசை தீர மகளையும் பேத்தியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அங்கும் இங்குமாக அலைவது மிகுந்த சிரமமாக இருந்தபோதிலும், இப்படி மகளைத் தம் வீட்டிலேயே விட்டிருந்த மருமகன் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டாயிற்று. அதில், அவனைப் பெற்ற மகனைப்போன்று நன்றாகவே கவனித்துக்கொண்டார்.
அமராவதி அம்மாதான் எதையோ இழந்ததைப்போன்று நடமாடிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. எதிர்காலம் குறித்த பயங்களும்
இல்லை. நல்ல மருமகன். கயலும் குறை சொல்வதற்கு இல்லை. அன்னை மீது மிகுந்த பாசமாகவே இருந்தாள். பேரனும் அவரை விட்டுவிட்டு இருக்கவே மாட்டான். ஆனாலும், சின்ன மகனை மனம் தேடியது.
அவனும் அவரை ஒன்றும் தள்ளி வைக்கவில்லை. தினமும் எடுத்து நலன் விசாரித்தான். அங்கு வந்து போகிறபோதெல்லாம் பழங்கள், உடைகள், அவர் விரும்பி வாசிக்கும் புத்தகங்கள் என்று அவருக்காக எதையாவது வாங்கிக்கொண்டு வந்தான். கையில் காசையும் பொத்திவிட்டுத்தான் போவான். அவரின் பெயரில் அவன் வைப்புச் செய்துவிட்ட பணத்தின் வட்டி வருகிறது. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
மொத்தத்தில் தன் கடமையில் இருந்தும் பொறுப்பில் இருந்தும் அவன் வழுவவேயில்லை. ஆனால், தாய் மனம் கடமையையும் பொறுப்பையும் தாண்டி, சின்ன மகனின் பாசத்துக்கு ஏங்கியது. ஏதோ ஒன்றை இழந்துவிட்டுப் பரிதவித்தார்.
அந்த இழப்பும் தவிப்பும் தான் அவரின் தவறுகளை அவருக்கே உணர்த்தியது. நடந்த பிரச்சனைகளை அவர் சற்றே நிதானமாகக் கையாண்டு இருக்க மகன் அந்த வீட்டை விட்டும் போயிருக்க மாட்டான். இன்று, அவன் அருகில் இல்லாமல் அவர் ஏங்குகிற நிலையும் வந்திருக்காது என்று புரிந்தது.
அவன் வருகிறபோதெல்லாம் இதையெல்லாம் சொல்லி அவனோடு மனம் விட்டுப் பேச நினைப்பார். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்க எண்ணுவார். அவன் இல்லாத வேளைகளில் அவனிடம் இப்படி இப்படிச் சொல்ல வேண்டும், இதையெல்லாம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்கிறவரால் அவன் முகம் பார்த்து ஒரு வார்த்தையேனும் உதிர்க்க முடிவதில்லை. அவற்றைப் பேச நினைத்தாலே வார்த்தைகளை முந்திக்கொண்டு அழுகை வந்தது. நடந்து முடிந்தவற்றை எல்லாம் மீண்டும் பேசத்தான் வேண்டுமா என்கிற சந்தேகமும் வந்து தடுத்துவிடும். இனியாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் தன் மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்ளுவார்.
இன்றைக்கு என்னவோ, அவனுக்கும் தனக்கும் இடையிலான இந்த இடைவெளியை இனியும் தாங்க முடியாது என்று மனம் அந்தரித்தது. கடைசியும் முதலுமாக ஒரேயொரு முறை மனதிலிருப்பதை அவனிடம் கொட்டிவிடவேண்டும் என்கிற முடிவோடு அவனுக்கு அழைத்து வரச் சொன்னார்.
அன்று மாலை ஹயர் முடிந்ததும் புறப்பட்டான் நிகேதன். எதற்கு வரச்சொன்னார் என்கிற சிந்தனையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான். அப்போது, சிவப்பு நிற பி.எம்.டபிள்யு மினி ஒன்று ஒலிப்பானை அலறவிட்டபடி அவனை முந்தியது. முந்துகிற வேளையில் பக்கத்து கண்ணாடியிலேயே கவனித்துவிட்டவனுக்கு உதட்டினில் இளமுறுவல் அரும்பியது. “இவள..” என்றான் வாய்விட்டே.
முந்திய பிறகும் விடவில்லை அவள். ஒருமுறை வேகம் எடுத்தாள். இன்னொருமுறை வேகத்தைக் குறைத்தாள். மறைமுகமாக அவனைப் போட்டிக்கு அழைத்தாள். நிறைமாத வயிற்றோடு அவள் விளையாடிய விளையாட்டில் அவனுக்குக் கோபம் வந்தது. அவன் தன் வேகத்தைக் கூட்டவில்லை. நிதானமாகப் போனான்.
அவன் தன்னை முந்தமாட்டான் என்று அவளும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். தன் வேகத்தை நன்றாகவே குறைத்தாள். அன்று, ஞாயிறு என்பதும் வாகனங்கள் இல்லாத தெருவும் அவளுக்கு இன்னுமே வசதியாகிப் போனது. நடந்து போனாலே இதைவிட வேகமாகப் போய்விடலாம் போலும். அந்தளவுக்கு காரை உருட்டிக்கொண்டிருந்தாள் ஆரணி. வேண்டுமென்றே தன் ஒலிப்பானை அழுத்தி வழிவிடச் சொன்னான் நிகேதன்.
அவள் காரையே நிறுத்தியிருந்தாள்.
உதட்டினில் மீண்டும் முறுவல் அரும்ப, பின்னால் வருகிற வாகனங்களுக்கு முதலே எச்சரிக்கும் விதமாக, தன் வேனின் நான்கு பக்கத்து சிக்னல் லைட்டையும் ஒளிர விட்டுவிட்டுக் காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்ததுபோல் காரிலிருந்து இறங்கி இவனை முறைத்துக்கொண்டு வந்தாள் அவள். கர்ப்பிணிகள் அணிவதற்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, அதற்கு மேலே கையில்லாத டாப்பும், வயிற்றைத் தனித்துக் காட்டாமல் இருக்கக் கொட்டன் துணியாலான மெல்லிய கோர்ட் அணிந்து இருந்தவளின் அழகு இன்னுமின்னும் மெருகேறி அவன் கண்களையும் மனதையும் ஒருங்கே பறித்தது.
கண்ணில் சிரிப்புடன் அவன் பார்க்க, “ஹல்லோ, என்ன கோர்ன் அடிக்கிறீங்க? அவசரம் எண்டா முந்திக்கொண்டு போகவேண்டியது தானே.” என்று அதட்டினாள், அவள்.
“நீங்க இதுக்கு நடந்து போகலாமே மேடம்.” என்றவனின் விழிகள் ஆசையோடு அவள் முகத்தில் படிந்து மணிவயிற்றை வருடியது.
அவள் முறைத்தாள். “நடந்து போறதும் கார்ல போறதும் என்ர விருப்பம். அதைப் பற்றி நீங்க என்ன கதைக்கிறது? முதல், என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்ர கண்ண பாத்து கதைக்கவேணும். பார்வை கழுத்த தாண்டக் கூடாது. இப்பிடித்தான் தனிய நிக்கிற பொம்பிளைய பாப்பீங்களா? வெக்கமா இல்ல?”
‘அடியேய்…’ நிகேதனுக்குச் சிரிப்பை அடக்குவது வெகு சிரமமாக இருந்தது. சிவனே என்று போய்க்கொண்டு இருந்தவனைத் துரத்திப் பிடித்துச் சண்டை இழுக்கிறவளை என்ன செய்வது? நேற்று யாழ்ப்பாண ஹயர் ஒன்றை முடித்துக்கொண்டு வரும்போது இரவு பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவளை எழுப்ப மனமற்று தங்களின் வீட்டிலேயே வந்து படுத்திருந்தான். அந்தக் கோபத்தை இப்போது சாதிக்கிறாள் என்று புரிந்தது.
“தாண்டினா என்னடி செய்வாய்? ஓனரே நான்தான். வந்திட்டா கழுத்த தாண்டாத கைய தாண்டாத எண்டு சொல்லிக்கொண்டு!” என்று அதட்டிவிட்டு எட்டி பக்கத்து கதவைத் திறந்துவிட்டான். “ஏறு, வெயிலுக்க நிக்காம!”
“என்னை பாக்க வராம நீ எங்கயடா ஊரைச் சுத்துறாய்?” ஏறி அமர்ந்தபடி கேட்டாள் அவள். “மனுசி நிறை மாதமா இருக்கிறாளே, அவளைக் கவனமா பாக்க வேணுமே எண்டுற பொறுப்பு மருந்துக்கும் இல்ல உனக்கு. இதுல ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகப்போறான்!”
நாட்கள் சிறகில்லாமல் பறந்தன. ஆரணியின் சூழ் கொண்ட வயிறு பெருக்கப் பெருக்க நிகேதனும் வீட்டைக் கட்டி முடித்திருந்தான். தந்தைக்கு உதவியாக அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள், ஆரணி. யசோதா ஆசை தீர மகளையும் பேத்தியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அங்கும் இங்குமாக அலைவது மிகுந்த சிரமமாக இருந்தபோதிலும், இப்படி மகளைத் தம் வீட்டிலேயே விட்டிருந்த மருமகன் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டாயிற்று. அதில், அவனைப் பெற்ற மகனைப்போன்று நன்றாகவே கவனித்துக்கொண்டார்.
அமராவதி அம்மாதான் எதையோ இழந்ததைப்போன்று நடமாடிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைகளும் இல்லை. எதிர்காலம் குறித்த பயங்களும்
இல்லை. நல்ல மருமகன். கயலும் குறை சொல்வதற்கு இல்லை. அன்னை மீது மிகுந்த பாசமாகவே இருந்தாள். பேரனும் அவரை விட்டுவிட்டு இருக்கவே மாட்டான். ஆனாலும், சின்ன மகனை மனம் தேடியது.
அவனும் அவரை ஒன்றும் தள்ளி வைக்கவில்லை. தினமும் எடுத்து நலன் விசாரித்தான். அங்கு வந்து போகிறபோதெல்லாம் பழங்கள், உடைகள், அவர் விரும்பி வாசிக்கும் புத்தகங்கள் என்று அவருக்காக எதையாவது வாங்கிக்கொண்டு வந்தான். கையில் காசையும் பொத்திவிட்டுத்தான் போவான். அவரின் பெயரில் அவன் வைப்புச் செய்துவிட்ட பணத்தின் வட்டி வருகிறது. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
மொத்தத்தில் தன் கடமையில் இருந்தும் பொறுப்பில் இருந்தும் அவன் வழுவவேயில்லை. ஆனால், தாய் மனம் கடமையையும் பொறுப்பையும் தாண்டி, சின்ன மகனின் பாசத்துக்கு ஏங்கியது. ஏதோ ஒன்றை இழந்துவிட்டுப் பரிதவித்தார்.
அந்த இழப்பும் தவிப்பும் தான் அவரின் தவறுகளை அவருக்கே உணர்த்தியது. நடந்த பிரச்சனைகளை அவர் சற்றே நிதானமாகக் கையாண்டு இருக்க மகன் அந்த வீட்டை விட்டும் போயிருக்க மாட்டான். இன்று, அவன் அருகில் இல்லாமல் அவர் ஏங்குகிற நிலையும் வந்திருக்காது என்று புரிந்தது.
அவன் வருகிறபோதெல்லாம் இதையெல்லாம் சொல்லி அவனோடு மனம் விட்டுப் பேச நினைப்பார். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்க எண்ணுவார். அவன் இல்லாத வேளைகளில் அவனிடம் இப்படி இப்படிச் சொல்ல வேண்டும், இதையெல்லாம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்கிறவரால் அவன் முகம் பார்த்து ஒரு வார்த்தையேனும் உதிர்க்க முடிவதில்லை. அவற்றைப் பேச நினைத்தாலே வார்த்தைகளை முந்திக்கொண்டு அழுகை வந்தது. நடந்து முடிந்தவற்றை எல்லாம் மீண்டும் பேசத்தான் வேண்டுமா என்கிற சந்தேகமும் வந்து தடுத்துவிடும். இனியாவது அவன் நிம்மதியாக இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் தன் மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்ளுவார்.
இன்றைக்கு என்னவோ, அவனுக்கும் தனக்கும் இடையிலான இந்த இடைவெளியை இனியும் தாங்க முடியாது என்று மனம் அந்தரித்தது. கடைசியும் முதலுமாக ஒரேயொரு முறை மனதிலிருப்பதை அவனிடம் கொட்டிவிடவேண்டும் என்கிற முடிவோடு அவனுக்கு அழைத்து வரச் சொன்னார்.
அன்று மாலை ஹயர் முடிந்ததும் புறப்பட்டான் நிகேதன். எதற்கு வரச்சொன்னார் என்கிற சிந்தனையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான். அப்போது, சிவப்பு நிற பி.எம்.டபிள்யு மினி ஒன்று ஒலிப்பானை அலறவிட்டபடி அவனை முந்தியது. முந்துகிற வேளையில் பக்கத்து கண்ணாடியிலேயே கவனித்துவிட்டவனுக்கு உதட்டினில் இளமுறுவல் அரும்பியது. “இவள..” என்றான் வாய்விட்டே.
முந்திய பிறகும் விடவில்லை அவள். ஒருமுறை வேகம் எடுத்தாள். இன்னொருமுறை வேகத்தைக் குறைத்தாள். மறைமுகமாக அவனைப் போட்டிக்கு அழைத்தாள். நிறைமாத வயிற்றோடு அவள் விளையாடிய விளையாட்டில் அவனுக்குக் கோபம் வந்தது. அவன் தன் வேகத்தைக் கூட்டவில்லை. நிதானமாகப் போனான்.
அவன் தன்னை முந்தமாட்டான் என்று அவளும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். தன் வேகத்தை நன்றாகவே குறைத்தாள். அன்று, ஞாயிறு என்பதும் வாகனங்கள் இல்லாத தெருவும் அவளுக்கு இன்னுமே வசதியாகிப் போனது. நடந்து போனாலே இதைவிட வேகமாகப் போய்விடலாம் போலும். அந்தளவுக்கு காரை உருட்டிக்கொண்டிருந்தாள் ஆரணி. வேண்டுமென்றே தன் ஒலிப்பானை அழுத்தி வழிவிடச் சொன்னான் நிகேதன்.
அவள் காரையே நிறுத்தியிருந்தாள்.
உதட்டினில் மீண்டும் முறுவல் அரும்ப, பின்னால் வருகிற வாகனங்களுக்கு முதலே எச்சரிக்கும் விதமாக, தன் வேனின் நான்கு பக்கத்து சிக்னல் லைட்டையும் ஒளிர விட்டுவிட்டுக் காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்ததுபோல் காரிலிருந்து இறங்கி இவனை முறைத்துக்கொண்டு வந்தாள் அவள். கர்ப்பிணிகள் அணிவதற்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து, அதற்கு மேலே கையில்லாத டாப்பும், வயிற்றைத் தனித்துக் காட்டாமல் இருக்கக் கொட்டன் துணியாலான மெல்லிய கோர்ட் அணிந்து இருந்தவளின் அழகு இன்னுமின்னும் மெருகேறி அவன் கண்களையும் மனதையும் ஒருங்கே பறித்தது.
கண்ணில் சிரிப்புடன் அவன் பார்க்க, “ஹல்லோ, என்ன கோர்ன் அடிக்கிறீங்க? அவசரம் எண்டா முந்திக்கொண்டு போகவேண்டியது தானே.” என்று அதட்டினாள், அவள்.
“நீங்க இதுக்கு நடந்து போகலாமே மேடம்.” என்றவனின் விழிகள் ஆசையோடு அவள் முகத்தில் படிந்து மணிவயிற்றை வருடியது.
அவள் முறைத்தாள். “நடந்து போறதும் கார்ல போறதும் என்ர விருப்பம். அதைப் பற்றி நீங்க என்ன கதைக்கிறது? முதல், என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்ர கண்ண பாத்து கதைக்கவேணும். பார்வை கழுத்த தாண்டக் கூடாது. இப்பிடித்தான் தனிய நிக்கிற பொம்பிளைய பாப்பீங்களா? வெக்கமா இல்ல?”
‘அடியேய்…’ நிகேதனுக்குச் சிரிப்பை அடக்குவது வெகு சிரமமாக இருந்தது. சிவனே என்று போய்க்கொண்டு இருந்தவனைத் துரத்திப் பிடித்துச் சண்டை இழுக்கிறவளை என்ன செய்வது? நேற்று யாழ்ப்பாண ஹயர் ஒன்றை முடித்துக்கொண்டு வரும்போது இரவு பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவளை எழுப்ப மனமற்று தங்களின் வீட்டிலேயே வந்து படுத்திருந்தான். அந்தக் கோபத்தை இப்போது சாதிக்கிறாள் என்று புரிந்தது.
“தாண்டினா என்னடி செய்வாய்? ஓனரே நான்தான். வந்திட்டா கழுத்த தாண்டாத கைய தாண்டாத எண்டு சொல்லிக்கொண்டு!” என்று அதட்டிவிட்டு எட்டி பக்கத்து கதவைத் திறந்துவிட்டான். “ஏறு, வெயிலுக்க நிக்காம!”
“என்னை பாக்க வராம நீ எங்கயடா ஊரைச் சுத்துறாய்?” ஏறி அமர்ந்தபடி கேட்டாள் அவள். “மனுசி நிறை மாதமா இருக்கிறாளே, அவளைக் கவனமா பாக்க வேணுமே எண்டுற பொறுப்பு மருந்துக்கும் இல்ல உனக்கு. இதுல ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகப்போறான்!”