அத்தியாயம் 56
எல்லோரும் புறப்பட்டு, குழந்தைகளும் உறங்கியதும் அவனைத் தனியறைக்குத் தள்ளிக்கொண்டு போனாள், ஆரணி.
“என்னடி?” சிரிப்புடன் அவள் முகம் பார்த்துக் கேட்டவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் முகமெங்கும் முத்திரை பதித்தாள்.
அவளின் முத்தங்களின் ஈரம் அவனை நிலைகுலையச் செய்தது. “அடியேய் ஆரா! ஏன் இப்பிடி?” முகம்கொள்ளா சிரிப்புடன் தடுமாறினான்.
“அப்பா வீட்டில, அப்பாக்கு மகளா இருக்கலாம். மாமி வீட்டில மருமகளா இருக்கலாம். ஆனா, நிக்கின்ர நெஞ்சிலயும் வீட்டுலயும் தான் இந்த ஆரணி ஆராவா இருப்பாள். ‘எங்களுக்காக’ எண்டுறதை விட, என்ர நிக்கி, ‘எனக்காகத்தான்’ இந்த வீட்டை கட்டினவன் எண்டு எனக்குத் தெரியும். அதுதான்.. சந்தோசமா இருக்கடா! நாங்க தோத்து போகேல்ல நிக்கி. உனக்கு விளங்குதா? எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கு. நிறையக் காயப்பட்டிருக்கிறோம். கவலைப் பட்டிருக்கிறோம். கண்ணீர் விட்டிருக்கிறோம் தான். ஆனாலும், நாங்க நினைச்சதை சாதிச்சிட்டோம் நிக்கி. எல்லாருக்கும் முன்னால நல்லா வந்து காட்டியிருக்கிறோமடா! எனக்கு நினைக்க நினைக்கச் சந்தோசமா இருக்கு. அப்பாவே அவரின்ர வாயாலேயே எல்லாருக்கும் முன்னால உன்ன கெட்டிக்கார மருமகன் எண்டு சொல்லிட்டார், பாத்தியா?” அவளுக்கு எல்லாவற்றையும் விட அதுதான் நிறைவைக் கொடுத்தது. சந்தோச மிகுதியில் அவனைப் பற்றித் துள்ளிக்கொண்டு ஆர்ப்பரித்தாள்.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. பட்டுச் சேலை. கழுத்தில் அவன் அணிவித்த மொத்தத் தாலிக்கொடி. நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம். விழிகள் இரண்டும் விண்மீன்களாக மின்ன, முகம் சந்தோசத்திலும் பூரிப்பிலும் ஒளிர குட்டி நீர்வீழ்ச்சியாக அவன் முன்னே நின்றிருந்தாள் நிக்கியின் ஆரா.
“உனக்குச் சந்தோசம்தானே?” அவனுக்கு அதுதானே முக்கியம். அவளின் கன்னங்களைக் கைகளில் தாங்கிக் கேட்டான்.
“பின்ன இல்லையா? இதையெல்லாம் செய்தது என்ர நிக்கி. இந்த ஆரான்ர நிக்கி! அதுவும் அப்பா சொன்னார் பாத்தியா, ‘என்ர மருமகன் ஆருக்கும் சளைச்சவர் இல்லை எண்டு: அவர் தான்டா அண்டைக்கு உன்ன எனக்குப் பொருத்தம் இல்லை எண்டு சொன்னவர்.”
அவனுக்கும் சத்தியநாதன் எல்லோர் முன்னும் அப்படிச் சொன்னது பெருத்த நிறைவுதான். அவரிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதும், அவனுடைய ஓட்டத்தின் பின்னிருந்த காரணங்களில் ஒன்றுதானே.
ஆனால், அவனுக்கு ஆரணியின் இந்தச் சந்தோசம் மட்டும் போதாது. அவளிடம் ஒரு கோப்பினை கொண்டுவந்து நீட்டினான்.
“என்ன நிக்கி இது?”
“ஒரு சாதாரண வேல கூட இல்லாம இருந்த என்னை நம்பி வந்த என்ர ஆராக்குச் சின்னப் பரிசு.” என்றான் அவன்.
இயல்பாக அந்தக் கோப்பினை வாங்கித் திறக்கப் போனவள் அதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினாள். “சின்னப் பரிசை எல்லாம் இந்த ஆரா ஏற்க மாட்டாளே. அவளுக்குப் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா வேணுமே!” என்றாள் குறும்பு கொப்பளிக்கும் குரலில்.
“சும்மா வாயாடிக்கொண்டு இருக்காம முதல் அத திறந்து பாரடியப்பா.” என்றான் அவன் முறுவலுடன்.
“பாக்கிறன் பாக்கிறன். இந்த ஆராக்காக அப்பிடி என்னதான் செய்திருக்கிறாய் எண்டு பாக்கிறன்.” என்று அப்போதும் வாய் காட்டியபடி பிரித்தாள்.
பிரித்ததுமே கண்ணில் பட்டது, அவளின் பெயரில் அவன் வாங்கியிருந்த வயல்காணியின் உறுதிப் பத்திரம். இது எதற்கு என்று கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.
“எல்லாத்தையும் பார், தெரியும்.” என்றான் அவன்.
அது ஒரு கட்டட பிளான். சுற்றிவர வயல் பச்சைப் பசேல் என்று மின்ன, அதற்கு நடுவில் கட்டடம் ஒன்று நிமிர்ந்து நிற்பது போன்று 3D வடிவத்தில் வர்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. பல பேப்பர்கள். அவற்றை உன்னிப்பாகக் கவனித்தபோதுதான், அது ஒரு செண்டருக்கான வரைபடம் என்று புரிந்தது. விழிகள் வியப்பால் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ஆர்வமும் ஆசையும் சரிசமமாய் மின்னின.
இதற்காகத்தானே, அந்த முகத்தில் இந்தப் பூரிப்பைப் பார்த்துவிடத்தானே அவன் பாடு பட்டதே. சிறு புன்னகையுடன் சந்தோசமாக அவளின் உணர்வுகளையே கவனித்துக்கொண்டிருந்தான்.
ஆரணியின் உள்ளம் பரபரப்புற்றது. அவளின் கனவொன்று நனவாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு காகித வடிவில் கண்முன்னே தவழ்கிறதே. புதுவித ஆர்வம் தொற்றிக்கொள்ள அந்தக் கோப்பினை மிக வேகமாக ஆராய்ந்து கிரகித்துக்கொள்ள முயன்றாள்.
வயல் காணி, அதிலே தமிழ் எழுத்து ப வடிவில் குழந்தைகளுக்கான மூன்று மாடிகள் கொண்ட கட்டடம். அரைவாசிக்கு சுவரும் மேல் அரைவாசிக்கு இரட்டைக் கண்ணாடிகள் கொண்ட பாதுகாப்பான வெளிச்சம் நிறைந்த கட்டடம். ஒவ்வொரு தளமும் வகுப்பறைகள், உறங்கும் அறைகள், குழந்தைகளுக்கு என்று அவர்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாத்ரூம்கள். பிள்ளைகள் அழுக்குச் செய்துவிட்டால் குளிப்பதற்கு ஏற்ற வசதி, டயப்பர் மாற்றும் வசதி, கூடவே வாஷிங் மெஷின் வைத்து உடைகள் கழுவி காயவைப்பதற்கு ஏற்ற ஆறை, ஆசிரியர்களுக்கான பிரத்தியேக அறை, முக்கியமாக ஒவ்வொரு தளத்திலும் ஒரு சமையலறை என்று வடிவமைத்திருந்தான்.
அதோடு, மீட்டிங் ஹோல், குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஒரு அறை என்று பார்க்கப் பார்க்க பிரமித்துப் போனாள் ஆரணி. மழைக்காலங்களில் வெளியே போகாமல் குழந்தைகள் விளையாடக்கூடிய வகையிலான விளையாட்டு அறை. அந்தக் கட்டடம் இணையும் ஒவ்வொரு மூலைகளிலும் கூரை கண்ணாடியால் ஆனா பொதுவான ஒன்றுகூடல் கூடம். ‘ப’ வடிவக் கட்டடத்தின் வயிற்றுப் பகுதி விளையாட்டு மைதானம், அதைச் சுற்றி மரங்கள், அதன் கீழே இருக்கைகள். முன்னுக்கு வாகனத் தரிப்பிடம் என்று அனைத்து வசதியும் இருந்தது.
அதற்குமேலே பார்க்கவேண்டிய அவசியமே அற்றுப்போனது. அபிராமியின் செண்டரில் வேலை செய்த நாட்களில், இதெல்லாம் அவ்வப்போது பேச்சுவாக்கில் அவள் சொன்னவை. சொன்ன அவளே குழந்தை, குடும்பம், பிரச்சனைகள் என்று நாளாந்த வாழ்வின் ஓட்டத்தில் முற்றிலுமாக மறந்து போயிருந்தாள். அவனோ ஒன்றுவிடாமல் அதையெல்லாம் திரட்டி அவளின் கனவு செண்டரை அப்படியே வடிவமைத்திருந்தான்.
விழிகள் கலங்கிவிட அவனைப் பார்த்தாள் ஆரணி. நெஞ்சம் விம்மித் தணிந்தது. இந்த அன்பை இழந்துவிடக் கூடாது என்றுதானே அவனைத் துரத்தி துரத்தி காதலித்தாள். வீட்டை விட்டே வெளியே வந்து கரம் பிடித்தாள். கோப்பினைக் காட்டி, “எனக்காகவா நிக்கி?” என்றாள். அவளுக்குச் சத்தமே வரமாட்டேன் என்றது.
எல்லோரும் புறப்பட்டு, குழந்தைகளும் உறங்கியதும் அவனைத் தனியறைக்குத் தள்ளிக்கொண்டு போனாள், ஆரணி.
“என்னடி?” சிரிப்புடன் அவள் முகம் பார்த்துக் கேட்டவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் முகமெங்கும் முத்திரை பதித்தாள்.
அவளின் முத்தங்களின் ஈரம் அவனை நிலைகுலையச் செய்தது. “அடியேய் ஆரா! ஏன் இப்பிடி?” முகம்கொள்ளா சிரிப்புடன் தடுமாறினான்.
“அப்பா வீட்டில, அப்பாக்கு மகளா இருக்கலாம். மாமி வீட்டில மருமகளா இருக்கலாம். ஆனா, நிக்கின்ர நெஞ்சிலயும் வீட்டுலயும் தான் இந்த ஆரணி ஆராவா இருப்பாள். ‘எங்களுக்காக’ எண்டுறதை விட, என்ர நிக்கி, ‘எனக்காகத்தான்’ இந்த வீட்டை கட்டினவன் எண்டு எனக்குத் தெரியும். அதுதான்.. சந்தோசமா இருக்கடா! நாங்க தோத்து போகேல்ல நிக்கி. உனக்கு விளங்குதா? எத்தனையோ பிரச்சனைகள் வந்திருக்கு. நிறையக் காயப்பட்டிருக்கிறோம். கவலைப் பட்டிருக்கிறோம். கண்ணீர் விட்டிருக்கிறோம் தான். ஆனாலும், நாங்க நினைச்சதை சாதிச்சிட்டோம் நிக்கி. எல்லாருக்கும் முன்னால நல்லா வந்து காட்டியிருக்கிறோமடா! எனக்கு நினைக்க நினைக்கச் சந்தோசமா இருக்கு. அப்பாவே அவரின்ர வாயாலேயே எல்லாருக்கும் முன்னால உன்ன கெட்டிக்கார மருமகன் எண்டு சொல்லிட்டார், பாத்தியா?” அவளுக்கு எல்லாவற்றையும் விட அதுதான் நிறைவைக் கொடுத்தது. சந்தோச மிகுதியில் அவனைப் பற்றித் துள்ளிக்கொண்டு ஆர்ப்பரித்தாள்.
பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. பட்டுச் சேலை. கழுத்தில் அவன் அணிவித்த மொத்தத் தாலிக்கொடி. நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம். விழிகள் இரண்டும் விண்மீன்களாக மின்ன, முகம் சந்தோசத்திலும் பூரிப்பிலும் ஒளிர குட்டி நீர்வீழ்ச்சியாக அவன் முன்னே நின்றிருந்தாள் நிக்கியின் ஆரா.
“உனக்குச் சந்தோசம்தானே?” அவனுக்கு அதுதானே முக்கியம். அவளின் கன்னங்களைக் கைகளில் தாங்கிக் கேட்டான்.
“பின்ன இல்லையா? இதையெல்லாம் செய்தது என்ர நிக்கி. இந்த ஆரான்ர நிக்கி! அதுவும் அப்பா சொன்னார் பாத்தியா, ‘என்ர மருமகன் ஆருக்கும் சளைச்சவர் இல்லை எண்டு: அவர் தான்டா அண்டைக்கு உன்ன எனக்குப் பொருத்தம் இல்லை எண்டு சொன்னவர்.”
அவனுக்கும் சத்தியநாதன் எல்லோர் முன்னும் அப்படிச் சொன்னது பெருத்த நிறைவுதான். அவரிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதும், அவனுடைய ஓட்டத்தின் பின்னிருந்த காரணங்களில் ஒன்றுதானே.
ஆனால், அவனுக்கு ஆரணியின் இந்தச் சந்தோசம் மட்டும் போதாது. அவளிடம் ஒரு கோப்பினை கொண்டுவந்து நீட்டினான்.
“என்ன நிக்கி இது?”
“ஒரு சாதாரண வேல கூட இல்லாம இருந்த என்னை நம்பி வந்த என்ர ஆராக்குச் சின்னப் பரிசு.” என்றான் அவன்.
இயல்பாக அந்தக் கோப்பினை வாங்கித் திறக்கப் போனவள் அதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினாள். “சின்னப் பரிசை எல்லாம் இந்த ஆரா ஏற்க மாட்டாளே. அவளுக்குப் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா வேணுமே!” என்றாள் குறும்பு கொப்பளிக்கும் குரலில்.
“சும்மா வாயாடிக்கொண்டு இருக்காம முதல் அத திறந்து பாரடியப்பா.” என்றான் அவன் முறுவலுடன்.
“பாக்கிறன் பாக்கிறன். இந்த ஆராக்காக அப்பிடி என்னதான் செய்திருக்கிறாய் எண்டு பாக்கிறன்.” என்று அப்போதும் வாய் காட்டியபடி பிரித்தாள்.
பிரித்ததுமே கண்ணில் பட்டது, அவளின் பெயரில் அவன் வாங்கியிருந்த வயல்காணியின் உறுதிப் பத்திரம். இது எதற்கு என்று கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.
“எல்லாத்தையும் பார், தெரியும்.” என்றான் அவன்.
அது ஒரு கட்டட பிளான். சுற்றிவர வயல் பச்சைப் பசேல் என்று மின்ன, அதற்கு நடுவில் கட்டடம் ஒன்று நிமிர்ந்து நிற்பது போன்று 3D வடிவத்தில் வர்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. பல பேப்பர்கள். அவற்றை உன்னிப்பாகக் கவனித்தபோதுதான், அது ஒரு செண்டருக்கான வரைபடம் என்று புரிந்தது. விழிகள் வியப்பால் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ஆர்வமும் ஆசையும் சரிசமமாய் மின்னின.
இதற்காகத்தானே, அந்த முகத்தில் இந்தப் பூரிப்பைப் பார்த்துவிடத்தானே அவன் பாடு பட்டதே. சிறு புன்னகையுடன் சந்தோசமாக அவளின் உணர்வுகளையே கவனித்துக்கொண்டிருந்தான்.
ஆரணியின் உள்ளம் பரபரப்புற்றது. அவளின் கனவொன்று நனவாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு காகித வடிவில் கண்முன்னே தவழ்கிறதே. புதுவித ஆர்வம் தொற்றிக்கொள்ள அந்தக் கோப்பினை மிக வேகமாக ஆராய்ந்து கிரகித்துக்கொள்ள முயன்றாள்.
வயல் காணி, அதிலே தமிழ் எழுத்து ப வடிவில் குழந்தைகளுக்கான மூன்று மாடிகள் கொண்ட கட்டடம். அரைவாசிக்கு சுவரும் மேல் அரைவாசிக்கு இரட்டைக் கண்ணாடிகள் கொண்ட பாதுகாப்பான வெளிச்சம் நிறைந்த கட்டடம். ஒவ்வொரு தளமும் வகுப்பறைகள், உறங்கும் அறைகள், குழந்தைகளுக்கு என்று அவர்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பாத்ரூம்கள். பிள்ளைகள் அழுக்குச் செய்துவிட்டால் குளிப்பதற்கு ஏற்ற வசதி, டயப்பர் மாற்றும் வசதி, கூடவே வாஷிங் மெஷின் வைத்து உடைகள் கழுவி காயவைப்பதற்கு ஏற்ற ஆறை, ஆசிரியர்களுக்கான பிரத்தியேக அறை, முக்கியமாக ஒவ்வொரு தளத்திலும் ஒரு சமையலறை என்று வடிவமைத்திருந்தான்.
அதோடு, மீட்டிங் ஹோல், குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஒரு அறை என்று பார்க்கப் பார்க்க பிரமித்துப் போனாள் ஆரணி. மழைக்காலங்களில் வெளியே போகாமல் குழந்தைகள் விளையாடக்கூடிய வகையிலான விளையாட்டு அறை. அந்தக் கட்டடம் இணையும் ஒவ்வொரு மூலைகளிலும் கூரை கண்ணாடியால் ஆனா பொதுவான ஒன்றுகூடல் கூடம். ‘ப’ வடிவக் கட்டடத்தின் வயிற்றுப் பகுதி விளையாட்டு மைதானம், அதைச் சுற்றி மரங்கள், அதன் கீழே இருக்கைகள். முன்னுக்கு வாகனத் தரிப்பிடம் என்று அனைத்து வசதியும் இருந்தது.
அதற்குமேலே பார்க்கவேண்டிய அவசியமே அற்றுப்போனது. அபிராமியின் செண்டரில் வேலை செய்த நாட்களில், இதெல்லாம் அவ்வப்போது பேச்சுவாக்கில் அவள் சொன்னவை. சொன்ன அவளே குழந்தை, குடும்பம், பிரச்சனைகள் என்று நாளாந்த வாழ்வின் ஓட்டத்தில் முற்றிலுமாக மறந்து போயிருந்தாள். அவனோ ஒன்றுவிடாமல் அதையெல்லாம் திரட்டி அவளின் கனவு செண்டரை அப்படியே வடிவமைத்திருந்தான்.
விழிகள் கலங்கிவிட அவனைப் பார்த்தாள் ஆரணி. நெஞ்சம் விம்மித் தணிந்தது. இந்த அன்பை இழந்துவிடக் கூடாது என்றுதானே அவனைத் துரத்தி துரத்தி காதலித்தாள். வீட்டை விட்டே வெளியே வந்து கரம் பிடித்தாள். கோப்பினைக் காட்டி, “எனக்காகவா நிக்கி?” என்றாள். அவளுக்குச் சத்தமே வரமாட்டேன் என்றது.