அத்தியாயம் 7
காலையிலேயே விழித்துவிட்டாள் ஆரணி. நிகேதனின் பாதங்கள் தான் முதலில் கண்களில் பட்டது. ‘இவன் எதுக்குத் தலைகீழா படுத்திருக்கிறான்?’ என்று யோசித்தவளுக்கு, தான்தான் தலைகீழாகக் கிடக்கிறோம் என்று பிறகுதான் விளங்கிற்று. சிரிப்பில் உதடுகள் விரிய அப்படியே கிடந்தாள்.
இரவு அவன் கைகளுக்குள் உறங்கிப்போனாலும் சற்று நேரத்திலேயே வியர்க்கத் தொடங்கியதில் விலகிப் படுத்திருந்தாள். அவளின் தேகச் சூட்டினை வாங்கிய மெத்தை அதை அவளுக்கே திருப்பிக்கொடுக்க, புரண்டு புரண்டு படுத்தும் முடியாமல் எழுந்து தலையணையைத் தூக்கிக் கால் மாட்டில் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டாள்.
நிகேதனோ இப்படி எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாக உறங்கிக்கொண்டு ருந்தான். சிரிப்புடன் அவனுடைய நடுப் பாதத்தில் மெல்லிய கோடு இழுத்தாள் ஆரணி. சரக்கென்று இழுத்துக்கொண்டான் அவன்.
‘பாவம்.. நல்ல நித்திரைல இருக்கிறான்.’ உள்ளம் அவனுக்காக இரங்கினாலும் குறும்புக்குணம் சீண்டிப்பார்க்கத் தூண்டியது. மீண்டும் கீறினாள். அவன் திரும்பவும் இழுத்துக்கொள்ளச் சிரிப்புடன் சற்றே தலையைச் சரித்து அவனைப் பார்த்தாள். புரண்டு படுத்தவன் கையால் அவளைத் தேடுவது தெரிந்தது.
அவனுக்கும் அவளின் கால்கள் தான் அகப்பட்டது. சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு சிரிப்புடன் தன் காலடியில் பார்த்தான்.
வேகமாகக் கண்களை மூடிக்கொண்டு, என்ன செய்கிறான் என்று தன் புலன்களைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தாள் ஆரணி. எழுந்துபோய்த் தோட்டத்துக்குப் போகும் கதவினைத் திறந்து வைத்துவிட்டு வந்து, தன் தலையணையையும் அவளருகே போட்டு, அவளை நெருங்கிப் படுத்துக்கொண்டு அவன் உறக்கத்தைத் தொடர, வைரத்துளிகள் இரண்டு மின்னின அவள் கண்களுக்குள்.
ஆழ்ந்து உறங்கிவிட்டான் என்று சீராக ஏறி இறங்கிய மார்பு உணர்த்த, “லவ் யூடா செல்லக்கண்ணா!” என்று உதட்டுக்குள் உரைத்துவிட்டு அவன் உறக்கம் கலையாது எழுந்துகொண்டாள். அணிந்திருந்த அவனுடைய ஆடைகளோடு வெளியே செல்லக் கூச்சமாக இருந்தது. யாராவது தெரிகிறார்களா என்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய்க் கொடியில் கிடந்த தன் ஆடைகளை எடுத்துவந்து மாற்றிக்கொண்டாள். முகம் கழுவி, தலையிழுத்த பிறகும் அவன் எழுந்துகொள்ளவில்லை.
பொட்டில்லாத நெற்றி குங்குமத்தை நினைவூட்டியது. அந்தக் குங்குமம் அதைத் தந்தவனை நினைவூட்டியது. திரும்பிப் பார்த்தாள். அவனோ கடந்துபோன இரவினை நினைவூட்டினான். எவ்வளவு ஆசையாக அவளை நாடினான். அவள் மேனியின் அவளறியா ரகசியங்களைக் கூட அவளுக்கே அறிமுகப் படுத்தினான். கள்ளன்! அதுநாள் வரை பார்வையால் கூட எல்லை மீறாதவன் ஒற்றைத் தாலியைக் கட்டிவிட்டு என்னவெல்லாம் கேட்கிறான். எடுத்துச் சொன்னதும் நல்ல பிள்ளையாக அடங்கிப் போனானே!
சிரிப்புடன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். சமையலறையில் இருந்து கேட்ட அமராவதி அம்மாவினதும் கயலினியினதும் பேச்சுக்குரல்கள் கால்களைத் தயங்கச் செய்தாலும், இந்த மௌனப்போராட்டத்தை உடைக்காமல் பிளவுபட்டு நிற்கும் குடும்பத்தை இணைக்கமுடியாது என்று எண்ணிக்கொண்டு அங்கே நடந்தாள்.
அமராவதி அம்மா டீ தயாரித்துக்கொண்டிருந்தார். கயலினி தட்டைக் கையிலேயே ஏந்திப் புட்டும் சம்பலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சேலையே, டீச்சர் ட்ரைனிங் கொலிஜில் ட்ரைனிங் எடுக்கிறாள் என்று உணர்த்திற்று!
“குட்மோர்னிங் கயல்! மோர்னிங் மாமி! எனக்கும் ஒரு டீ தாறீங்களா?”
இயல்பாக வெளிப்பட்ட அவளின் பேச்சில் இயங்கிக்கொண்டிருந்த இருவரின் கைகளும் ஒருகணம் நின்றன. எப்படிப் பிரதிபலிப்பது என்று தெரியாது கயலினி முழிக்க, சட்டெனக் கடுத்துவிட்ட முகத்தோடு விருட்டென்று அங்கிருந்து வெளியேறினார் அமராவதி. தயாரித்த டீயினைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் பின்னே கயலினியும் வெளியேறினாள்.
அசரவில்லை ஆரணி.
‘உங்கட மகனும் இப்படித்தான் சிலுப்பிக்கொண்டு போனவன் மாமி. அவனையே வளச்ச நான் உங்களை வளைக்க மாட்டனா!’ சளைக்காமல் நால்வருக்கும் டீயினைத் தயாரித்துக்கொண்டு விறாந்தைக்கு நடந்தாள்.
“மாமி இந்தாங்கோ. கயல் உனக்கு இது.” என்று அவர்களின் முன்னே இருந்த டீப்போவின் மேல் கப்புகளை வைத்துவிட்டு மீதி இரண்டையும் எடுத்துக்கொண்டு திரும்ப, அடுத்தகணம் அவள் வைத்த கப்புகளில் ஒன்று பறந்துபோய் முற்றத்தில் விழுந்து சிதறியது.
“உன்ர கையால வாங்கிக் குடிக்கிறதுக்குப் பதிலா ஒரு போத்தில் விசத்தை வாங்கிக் குடிச்சிடுவன்!” அமராவதி அம்மாவின் பேச்சில் நின்ற இடத்திலேயே உறைந்தாள் ஆரணி. உயிரைப் பறிக்கும் விசத்துக்குச் சமனா அவள் கையால் கொடுக்கும் தேநீர்?
“அம்மா! என்ன கதைக்கிறீங்க?” என்றபடி வந்தான் நிகேதன்.
“வேற என்ன கதைக்கவேணும் எண்டு ஆசைப்படுறாய்? என்னவோ முறையா வந்தவள் மாதிரி நடிக்கிறாள். நான் இப்ப கேட்டனானே தேத்தண்ணி கொண்டுவா எண்டு. மாமியாம் மாமி! இவளுக்கு நான் மாமியும் இல்ல. இவள் நான் பாத்துக் கூட்டிவந்த மருமகளும் இல்ல. என்ர கண்ணுக்கு முன்னாலேயே வரக்கூடாது இவள். சொல்லிவை!” ஆத்திரத்தோடு உத்தரவிட்டார் அவர்.
“என்ன முறை கெட்டுப்போச்சு எண்டு சொல்லுறீங்க? கோயில்ல வச்சு தாலி கட்டி முறையாத்தான் அவள இந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். என்ர மனுசி உங்களுக்கு மருமகள். உங்கட மருமகளுக்கு நீங்க மாமிதானே. மாமிய மாமி எண்டு கூப்பிடாம வேற எப்பிடி கூப்பிடுறது? அதென்ன நீங்க கூட்டி வராதவள் எண்டு சொல்லுறீங்க? அண்ணியையும் அண்ணாதான் கூட்டிக்கொண்டு வந்தவர். அவவை மருமகளா ஏற்க முடிஞ்ச உங்களுக்கு இவளை ஏற்க முடியேல்லயா? ஏன் அம்மா? நான் உழைப்பில்லாம இருக்கிறன் எண்டுறதுதாலயா? நானும் உழைச்சு இந்தக் குடும்பத்தைப் பாக்கிறவனா இருந்திருந்தா ஒண்டுமே சொல்லாம இருந்திருப்பீங்க, என்ன? ஆக, எல்லாத்தையும் காசுதான் தீர்மானிக்குது என்னம்மா?” கேட்டவனின் குரலில் ஆதங்கம் நிறைந்துகிடந்தது.
அதை உணரத் தயாராயில்லை அவர்.
காலையிலேயே விழித்துவிட்டாள் ஆரணி. நிகேதனின் பாதங்கள் தான் முதலில் கண்களில் பட்டது. ‘இவன் எதுக்குத் தலைகீழா படுத்திருக்கிறான்?’ என்று யோசித்தவளுக்கு, தான்தான் தலைகீழாகக் கிடக்கிறோம் என்று பிறகுதான் விளங்கிற்று. சிரிப்பில் உதடுகள் விரிய அப்படியே கிடந்தாள்.
இரவு அவன் கைகளுக்குள் உறங்கிப்போனாலும் சற்று நேரத்திலேயே வியர்க்கத் தொடங்கியதில் விலகிப் படுத்திருந்தாள். அவளின் தேகச் சூட்டினை வாங்கிய மெத்தை அதை அவளுக்கே திருப்பிக்கொடுக்க, புரண்டு புரண்டு படுத்தும் முடியாமல் எழுந்து தலையணையைத் தூக்கிக் கால் மாட்டில் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டாள்.
நிகேதனோ இப்படி எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாக உறங்கிக்கொண்டு ருந்தான். சிரிப்புடன் அவனுடைய நடுப் பாதத்தில் மெல்லிய கோடு இழுத்தாள் ஆரணி. சரக்கென்று இழுத்துக்கொண்டான் அவன்.
‘பாவம்.. நல்ல நித்திரைல இருக்கிறான்.’ உள்ளம் அவனுக்காக இரங்கினாலும் குறும்புக்குணம் சீண்டிப்பார்க்கத் தூண்டியது. மீண்டும் கீறினாள். அவன் திரும்பவும் இழுத்துக்கொள்ளச் சிரிப்புடன் சற்றே தலையைச் சரித்து அவனைப் பார்த்தாள். புரண்டு படுத்தவன் கையால் அவளைத் தேடுவது தெரிந்தது.
அவனுக்கும் அவளின் கால்கள் தான் அகப்பட்டது. சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு சிரிப்புடன் தன் காலடியில் பார்த்தான்.
வேகமாகக் கண்களை மூடிக்கொண்டு, என்ன செய்கிறான் என்று தன் புலன்களைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தாள் ஆரணி. எழுந்துபோய்த் தோட்டத்துக்குப் போகும் கதவினைத் திறந்து வைத்துவிட்டு வந்து, தன் தலையணையையும் அவளருகே போட்டு, அவளை நெருங்கிப் படுத்துக்கொண்டு அவன் உறக்கத்தைத் தொடர, வைரத்துளிகள் இரண்டு மின்னின அவள் கண்களுக்குள்.
ஆழ்ந்து உறங்கிவிட்டான் என்று சீராக ஏறி இறங்கிய மார்பு உணர்த்த, “லவ் யூடா செல்லக்கண்ணா!” என்று உதட்டுக்குள் உரைத்துவிட்டு அவன் உறக்கம் கலையாது எழுந்துகொண்டாள். அணிந்திருந்த அவனுடைய ஆடைகளோடு வெளியே செல்லக் கூச்சமாக இருந்தது. யாராவது தெரிகிறார்களா என்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய்க் கொடியில் கிடந்த தன் ஆடைகளை எடுத்துவந்து மாற்றிக்கொண்டாள். முகம் கழுவி, தலையிழுத்த பிறகும் அவன் எழுந்துகொள்ளவில்லை.
பொட்டில்லாத நெற்றி குங்குமத்தை நினைவூட்டியது. அந்தக் குங்குமம் அதைத் தந்தவனை நினைவூட்டியது. திரும்பிப் பார்த்தாள். அவனோ கடந்துபோன இரவினை நினைவூட்டினான். எவ்வளவு ஆசையாக அவளை நாடினான். அவள் மேனியின் அவளறியா ரகசியங்களைக் கூட அவளுக்கே அறிமுகப் படுத்தினான். கள்ளன்! அதுநாள் வரை பார்வையால் கூட எல்லை மீறாதவன் ஒற்றைத் தாலியைக் கட்டிவிட்டு என்னவெல்லாம் கேட்கிறான். எடுத்துச் சொன்னதும் நல்ல பிள்ளையாக அடங்கிப் போனானே!
சிரிப்புடன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். சமையலறையில் இருந்து கேட்ட அமராவதி அம்மாவினதும் கயலினியினதும் பேச்சுக்குரல்கள் கால்களைத் தயங்கச் செய்தாலும், இந்த மௌனப்போராட்டத்தை உடைக்காமல் பிளவுபட்டு நிற்கும் குடும்பத்தை இணைக்கமுடியாது என்று எண்ணிக்கொண்டு அங்கே நடந்தாள்.
அமராவதி அம்மா டீ தயாரித்துக்கொண்டிருந்தார். கயலினி தட்டைக் கையிலேயே ஏந்திப் புட்டும் சம்பலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சேலையே, டீச்சர் ட்ரைனிங் கொலிஜில் ட்ரைனிங் எடுக்கிறாள் என்று உணர்த்திற்று!
“குட்மோர்னிங் கயல்! மோர்னிங் மாமி! எனக்கும் ஒரு டீ தாறீங்களா?”
இயல்பாக வெளிப்பட்ட அவளின் பேச்சில் இயங்கிக்கொண்டிருந்த இருவரின் கைகளும் ஒருகணம் நின்றன. எப்படிப் பிரதிபலிப்பது என்று தெரியாது கயலினி முழிக்க, சட்டெனக் கடுத்துவிட்ட முகத்தோடு விருட்டென்று அங்கிருந்து வெளியேறினார் அமராவதி. தயாரித்த டீயினைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவரின் பின்னே கயலினியும் வெளியேறினாள்.
அசரவில்லை ஆரணி.
‘உங்கட மகனும் இப்படித்தான் சிலுப்பிக்கொண்டு போனவன் மாமி. அவனையே வளச்ச நான் உங்களை வளைக்க மாட்டனா!’ சளைக்காமல் நால்வருக்கும் டீயினைத் தயாரித்துக்கொண்டு விறாந்தைக்கு நடந்தாள்.
“மாமி இந்தாங்கோ. கயல் உனக்கு இது.” என்று அவர்களின் முன்னே இருந்த டீப்போவின் மேல் கப்புகளை வைத்துவிட்டு மீதி இரண்டையும் எடுத்துக்கொண்டு திரும்ப, அடுத்தகணம் அவள் வைத்த கப்புகளில் ஒன்று பறந்துபோய் முற்றத்தில் விழுந்து சிதறியது.
“உன்ர கையால வாங்கிக் குடிக்கிறதுக்குப் பதிலா ஒரு போத்தில் விசத்தை வாங்கிக் குடிச்சிடுவன்!” அமராவதி அம்மாவின் பேச்சில் நின்ற இடத்திலேயே உறைந்தாள் ஆரணி. உயிரைப் பறிக்கும் விசத்துக்குச் சமனா அவள் கையால் கொடுக்கும் தேநீர்?
“அம்மா! என்ன கதைக்கிறீங்க?” என்றபடி வந்தான் நிகேதன்.
“வேற என்ன கதைக்கவேணும் எண்டு ஆசைப்படுறாய்? என்னவோ முறையா வந்தவள் மாதிரி நடிக்கிறாள். நான் இப்ப கேட்டனானே தேத்தண்ணி கொண்டுவா எண்டு. மாமியாம் மாமி! இவளுக்கு நான் மாமியும் இல்ல. இவள் நான் பாத்துக் கூட்டிவந்த மருமகளும் இல்ல. என்ர கண்ணுக்கு முன்னாலேயே வரக்கூடாது இவள். சொல்லிவை!” ஆத்திரத்தோடு உத்தரவிட்டார் அவர்.
“என்ன முறை கெட்டுப்போச்சு எண்டு சொல்லுறீங்க? கோயில்ல வச்சு தாலி கட்டி முறையாத்தான் அவள இந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். என்ர மனுசி உங்களுக்கு மருமகள். உங்கட மருமகளுக்கு நீங்க மாமிதானே. மாமிய மாமி எண்டு கூப்பிடாம வேற எப்பிடி கூப்பிடுறது? அதென்ன நீங்க கூட்டி வராதவள் எண்டு சொல்லுறீங்க? அண்ணியையும் அண்ணாதான் கூட்டிக்கொண்டு வந்தவர். அவவை மருமகளா ஏற்க முடிஞ்ச உங்களுக்கு இவளை ஏற்க முடியேல்லயா? ஏன் அம்மா? நான் உழைப்பில்லாம இருக்கிறன் எண்டுறதுதாலயா? நானும் உழைச்சு இந்தக் குடும்பத்தைப் பாக்கிறவனா இருந்திருந்தா ஒண்டுமே சொல்லாம இருந்திருப்பீங்க, என்ன? ஆக, எல்லாத்தையும் காசுதான் தீர்மானிக்குது என்னம்மா?” கேட்டவனின் குரலில் ஆதங்கம் நிறைந்துகிடந்தது.
அதை உணரத் தயாராயில்லை அவர்.