• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்த நாவல், நான் எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய நாவல்களில் ஒன்று. இப்ப எப்படி இருக்கும் என்று தெரியாது. வாசிச்சுப் பாருங்க.

இந்தக் கதையில் நான் சொல்லியிருக்கும் அந்தக் கிராமம், பள்ளிக்கூடம், சந்தை என்று அத்தனையுமே இந்த நாவலை எழுதிய காலத்தில் நான் வாழ்ந்த ஊர் பற்றியது. தினமும் காலையில் ஒரு அத்தியாயம் மாலையில் ஒரு அத்தியாயம் என்று போடுவேன்.

இதயத் துடிப்பாய்க் காதல்!



அத்தியாயம்-1


மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதினொரு மணிக்கு முதல் அவன் ஓய்வு எடுக்கமாட்டான் என்பதைச் சொல்லின!

அந்தச் சாலையின் இருமருங்கிலும் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு மற்றும் ஆரெஞ்ச் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருந்த கட்டிடங்கள், சூரிய ஒளியைத் தாங்கி தங்கள் அழகை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டு நிமிர்ந்து நின்றன.

அந்த அழகு போதாது என்று அவற்றைச் சுற்றி நின்ற மரங்கள் சோலையாக மாறி, அந்தச் சாலைக்குத் தனிச் சோபையைக் கொடுத்தன. அந்தச் சாலையின் ஆரம்பித்திலேயே பெயர்ப்பலகை ஒன்று நடப்பட்டு, வரிசையாக பாடசாலைகளின் பெயர்களைத் தாங்கி நின்றது.

‘அட! இந்தக் கண்கவர் கட்டிடங்கள் அனைத்தும் பாடசாலைகளோ…!’ என்று எண்ண வைப்பது மட்டுமல்லாமல் ‘சும்மாவாவது அதற்குள் புகுந்துவிட்டு வருவோமா..’ என்கிற ஆசையையும் எல்லோர் மனதிலும் தோற்றுவிக்கும் வண்ணம் மிளிர்ந்தது அந்த இடம்.

அந்தச் சாலையின் ஒரு பக்கமாக இருந்த நீலம் மற்றும் சிவப்புக் கட்டிடங்களுக்கு இடையில் பச்சைப்பசேல் என்றிருந்த காற்பந்து மைதானத்தில், ஆண்கள் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விளையாடுவதைப் பார்ப்பதற்கும், தங்களுக்குப் பிடித்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் மைதானத்தைச் சுற்றிக் கூடியிருந்த ஆண்களும் பெண்களும் அங்கே அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வாங்கில்களில் அமர்ந்தும், அதிலே இடமில்லாதவர்கள் நின்றபடியும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

அந்தக் கூட்டத்தில் இருந்து விலகி வந்துகொண்டிருந்தான் ஒருவன். இவ்வளவு நேரமும் காற்பந்து விளையாடியிருக்கிறான் என்று அவன் உடலில் இருந்து வடிந்துகொண்டிருந்த வியர்வையே சொல்லியது.

அவன் அணிந்திருந்த வெள்ளை நிற அரைக்கை ‘டி-ஷர்ட் ‘ வியர்வையில் முற்றாக நனைந்திருந்ததில் அவனின் உடற்கட்டை அது வெட்ட வெளிச்சமாகக் காட்ட, அதே வெள்ளை நிறத்தில் முழங்காலுக்கு சற்று மேலே மட்டுமான ‘சோர்ட்ஸ்’ அணிந்து, வெள்ளை நிறத்திலேயே சொக்ஸ் மற்றும் காற்பந்து ஷூவும் அணிந்திருந்தான்.

அவனது ‘டி-ஷர்ட்’ இன் நெஞ்சுப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து சென்றிமீட்டார் அகலத்துக்கு புத்தகத்தை விரித்து வைத்தது போன்ற அமைப்பில், சிவப்பு நிறமும் அதன்மேல் மெல்லிய கறுப்புக் கோடுகளும் அதன் முடிவாக பொன்மஞ்சள் நிறக் கோடும் தீட்டப்பட்டு இருந்தது. அதைப்பார்க்கையில் முதலில் கறுப்பு பின்னர் சிவப்பு கடைசியாக பொன்மஞ்சள் நிறம் என்று அவன் வாழும் நாட்டின் கொடியை நினைவு படுத்தியது.

அந்தச் சிவப்புப் பகுதியின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிறத்தில் ‘அடிடாஸ்’ என்றும் இன்னொரு பக்கத்தில் கறுப்பு வட்டத்துக்குள் வெள்ளை நிறத்தில் கழுகின் படமும் பொறிக்கப்பட்டு அதற்கு மேலே ‘டொச்லாந்து’ என்று ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டு இருந்தது.

நடந்து வந்து கொண்டிருந்தவனின் ஒரு கையின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் எரிந்துகொண்டிருந்த சிகரட்டினைப் பற்றியிருக்க, மற்றக்கையில் ‘க்ரொம்பஹர்’ பியர் டின் இருக்க, அவனின் கைபேசி காற்சட்டைக்குள் இருந்து என்னைக் கவனி என்று கதறியது.

பியர் டின்னை சிகரட்டை பற்றியிருந்த கைக்கு மாற்றிவிட்டு கைபேசியை எடுக்கவும் அங்கே இருந்த மரத்தடிக்கு அவன் வந்துசேரவும் சரியாக இருந்தது. இவ்வளவு நேரமும் உடலைத்தாக்கிய வெயிலுக்கு அந்த மரநிழல் சுகமாய் இருக்கவே, அந்த இடத்திலேயே நின்றபடி கைபேசியைக் காதுக்குக் கொடுத்தவன், “ம்மா…” என்றான், அழைத்தது யார் என்று அறிந்து.

அந்த மரத்தின் அந்தப்பக்கமாக அமைக்கப் பட்டிருந்த வாங்கிலில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தியின் காதிலும் இவனின் அழைப்பு விழுந்தது.

‘என்னது..? ‘ம்மே’ யா.. ஆடு கத்துவது மாதிரியே இருக்கிறதே.. இங்கு ஆடு கூட இருக்கிறதா..?’ என்று யோசித்தபடி எட்டிப் பார்த்தவளுக்கு கத்தியது ஆடல்ல ஒரு ஆடவன் என்பது தெரிந்தது.

அருகில் மிருகம் எதுவுமில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதியானவள், அவன் கைபேசியில் கதைப்பதில் கவனமாக இருப்பதை அறிந்து அவனை சுவாரசியத்தோடு அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தாள்.

கண்கள் அவனை அளவெடுத்தபோதும், ‘இவன் என்ன எங்கள் ஊரில் கிணறு வெட்டுபவர்களை விட மோசமாக வியர்த்துப்போய் நிற்கிறான். எதையும் யாரிடமும் களவெடுத்துக்கொண்டு ஓடி வந்திருப்பானோ அல்லது நாய் துரத்தியதில் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடி வந்திருப்பானோ...’ என்று தாறுமாறாக ஓடியது அவளின் சிந்தனை.

‘இல்லையே.. இந்த நாட்டில் நாயெல்லாம் துரத்தாதே.. அதெல்லாம் எங்கள் நாட்டில் தானே நடக்கும்..’ என்று நினைத்தபடி பார்வையைத் திருப்பியவளின் விழிகளில், அவனின் மற்றக்கையின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் சிகரட்டை தாங்கியிருக்க, மற்றைய மூன்று விரல்களும் பியர் டின்னை தாங்கி இருப்பது படவே, அவள் முகம் கோணல் மாணலாகச் சுருங்கியது.

“சேக்! அம்மாவுடன் கதைத்துக்கொண்டே சாராயம் குடிக்கிறான், குடிகாரன்! உவ்வே…” மனதுக்குள் சொல்வதாக நினைத்தவளின் உதடுகள் அவற்றை சத்தமாக உச்சரித்திருந்தன, அவளின் உத்தரவு இல்லாமலேயே!

கதைப்பதை நிறுத்திவிட்டு அவனின் பார்வை வேகமாகத் தன்புறம் திரும்புவதை உணர்ந்தவள், அதைவிட வேகமாகத் தன்னை மறைத்துக்கொண்டாள்.

‘அப்பாடி.. நல்லகாலம் அந்தக் குடிகாரனின் கண்ணில் படமுதலேயே திரும்பிக்கொண்டேன்..’ என்று நெஞ்சில் கைவைத்து ஆறுதலடைந்தாள் அவள்.

ஆனால், அந்த ஆறுதலுக்கு ஆயுசு குறைவு என்பதற்குச் சான்றாக அவளின் முன்னால் வந்து நின்றான் அவன்.

தன் முன்னால் நின்றவனைப் பார்த்து, திடுக்கிட்டு எழுந்து நின்றவளின் மடியிலிருந்த புத்தகம் கீழே விழுந்தது. அதைக்கூட உணராது திகைத்து விழித்தவளின் விழிகளோ அவள் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை விடப் பெரிதாக விரிய, அதில் மெல்ல மெல்லப் பயப் படபடப்பு குடிபுகுந்தது.

“உன் பெயர் என்ன?” கூர் விழிகள் அவளைத் துளைக்க நிதானமாகக் கேட்டவன், கையில் இருந்த சிகரெட்டினை வாயில் பொருத்தி புகையை இழுத்தான்.

“ம.. மைன் ந.. நாம இஸ்ட் ல.. லட்சனா..” அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு இவள் டொச்சில் திக்கித் திணறிப் பதில் சொன்னாள்.

மனதிலோ, ‘உள்ளுக்கு இழுத்த புகையை என்ன செய்தான்? அப்படியே விழுங்கிவிட்டானோ...’ என்று எண்ணம் ஓடியது.

அவளின் பதிலில் அவன் விழிகளில் ஒருவித சுவாரசியம் தோன்றியபோதும் முகம் சாதரணமாகவே இருந்தது.

“இங்கே யார் வீட்டுக்கு வந்திருக்கிறாய்..?” அவள் முகத்தையே பார்த்தபடி கேட்டவன், வாயைக் குவித்து வளையம் வளையமாக புகையை வெளியே விட்டான்.

‘இவ்வளவு நேரமும் இந்தப் புகை எங்கே இருந்தது? வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு கதைக்கமுடியுமா...’ அவனிடம் தன் சந்தேகத்தைக் கேட்க அவளுக்குப் பயமாக இருந்தது.

எனவே சந்தேகத்தை தள்ளி வைத்தவள் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல நினைத்தாள்.

“மைன ஸ்..” என்று ஆரம்பித்தவள் அப்போதுதான் உணர்ந்தவளாய், “உங்களுக்குத் தமிழ் தெரியுமா…?” என்று விழிகளில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.

அவளையே சில நொடிகள் கூர்ந்தவனின் முகத்தில் அதுவரை இருந்த ஆராயும் பார்வை அகன்று ஓர் இலகுத்தன்மை குடிபுகுந்தது.

“தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.” என்றவன், அவள் சற்று முன்வரை அமர்ந்திருந்த வாங்கிலில் ஒரு பக்கமாக அமர்ந்தான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
வாங்கிலின் அருகிலேயே நின்றவள் விழுந்தடித்துக்கொண்டு நகர்ந்தாள். நகர்ந்தவளின் காலை நிலத்தில் கிடந்த அவளின் புத்தகமே தடுக்கியது.

அவன்தான் தன் காலைப் பிடித்து இழுக்கிறானோ என்று பயந்தவள், “அம்மா…!” என்கிற ஒரு கூவலுடன் பல அடிகளை வேகமாகப் பாய்ந்து சென்று நின்றுகொண்டு, அவனைப் பயத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

“உன் புத்தகம்தான் உன் காலைத் தட்டியது. அதற்கு இவ்வளவு பயப்படுவாயா..?” என்று, அவளின் அவனைப் பற்றிய எண்ணம் அறியாது கேட்டான் அவன்.

அவன் அப்படிக் கேட்ட பிறகுதான் நடந்தது புரிந்தது அவளுக்கு. மனதில் இருந்த பயம் மொத்தமாக விலகாமலேயே மெல்ல நடந்துவந்து புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள். அப்போதும் ஓரக்கண்ணால் அவனைக் கவனிக்கத் தவறவில்லை.

அப்படியே மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரப் பார்த்தவளிடம், “அப்போது என்ன சொன்னாய்..?” என்று சாதாரணமாகக் கேட்டான் அவன்.

அவளுக்குத்தான் பயத்தில் உதறல் எடுத்தது. அவள் சொன்னதைக் கேட்டால் என்ன சொல்வானோ?

“ஒ.. ஒன்றுமில்லையே…” அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்வதற்கே மிகவும் தடுமாறினாள்.

அவளை அவன் பார்வை துளைக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லட்சனா.

“இங்கே மாலை வகுப்பில் டொச் படிக்க வந்தாயா..?” அவளின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.

ஆம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தவள், ‘அப்பாடி! நான் சொன்னது அவன் காதில் விழவில்லை. தப்பித்தேன்..’ என்று ஆறுதல் பட்டுக்கொண்டாள்.

“வகுப்பு இனித்தான் தொடங்கப் போகிறதா..?” அவள் இன்னும் நின்று கொண்டிருந்ததில் கேட்டான்.

“இல்லை. முடிந்துவிட்டது.”

பதில் சொன்னபிறகுதான் யோசித்தாள், இனித்தான் தொடங்கப் போகிறது என்று சொல்லியிருக்க இவனிடமிருந்து தப்பித்துப் போயிருக்கலாமே என்று.

சரியான மக்குடி நீ என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

“அப்படியானால் கொஞ்சநேரம் கதைத்துக்கொண்டு இருக்கலாம். அமர்ந்துகொள்.” என்றவன், பியர் டின்னை வாயில் சரித்தான்.

அந்த இடத்தில் தமிழ் பேசும் ஒருவனைக் கண்டதில் அவனுடன் கதைக்க அவளின் மனதில் விருப்பம் உண்டானது என்னவோ உண்மைதான். ஆனால் அவன் கையில் இருக்கும் பொருட்கள் அவளை ஏனோ பயப்படுத்தியது.

அவன் அதனை ரசித்து ருசித்துக் குடிப்பதை ஒருவித முகச்சுளிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் அதையே பார்ப்பதை உணர்ந்து அவள் புறமாக பியரை நீட்டி, “வேண்டுமா? வேண்டுமென்றால் இந்தா குடி. இந்த வெயிலுக்கு இதைக் குடித்தால்தான் தாகம் அடங்கும்..” என்றான் இயல்பாக.

“என்னது…?!?” என்றவள் மீண்டும் வேகமாக பல அடிகள் பின்னால் நகர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளின் செய்கைகள் அனைத்தும் வேடிக்கையாக இருந்தது போலும்.

“என்ன நீ, எப்போது பார்த்தாலும் திகைப்பதும் ஓடுவதுமாக இருக்கிறாய். உனக்கு வேண்டாம் என்றால் விடு. எனக்கும் தர விருப்பம் இல்லைதான். நீ ஆசையாக என் பியரையே பார்க்கிறாயே என்றுதான் கேட்டேன்.” என்றுவிட்டு மறுபடியும் அந்த அமிர்தத்தை ருசித்துக் குடித்தான்.

முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்னுக்குள்ளேயே போட்டவன், அந்த டின்னை சற்று தூரத்தில் இருந்த குப்பை வாளிக்குள் இருந்த இடத்தில் இருந்தே குறி பார்த்து எறிந்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த லட்சனாவின் கண்களும் பறந்துகொண்டிருந்த பியர் டின்னையே தொடர்ந்தது. அது சரியாக குப்பை வாளிக்குள்ளேயே சென்று விழவும் அவளின் விழிகளில் ஆச்சரியம் மின்னியது.

அந்த ஆச்சரியம் குன்றாது அவன் புறம் திரும்பவும், “உன் பெயர் என்னவென்று சொன்னாய், லச்..” என்று அவன் இழுக்க, “லட்சனா..” என்றாள் அவள்.

“லட்சனா…” என்று தானும் ஒருமுறை சொல்லிப்பார்த்தான்.

“அழகான பெயர். நீ இங்கே வந்து எவ்வளவு காலம்..?”

“ஆறு மாதமாகிறது.”

“ஓ.. அதுதான் டொச் கிளாசுக்கு வருகிறாயா..?”

தலையை ஆமென்பதாக அசைத்தாள்.

“படிப்பது புரிகிறதா…?”

“ஒரு கண்றாவியும் விளங்கவில்லை. நித்திரைதான் வருகிறது…” என்று சலித்தவள், தன்னுடைய எச்சரிக்கை உணர்வையும் மறந்து அவனோடு கதைக்க ஆரம்பித்து இருந்தாள்.

அவள் சொன்னவிதத்தில் மெலிதான புன்னைகை பூத்தது அவன் முகத்தில்.

“ஆரம்பத்துக்கு அப்படித்தான் இருக்கும். போகப் போகப் பிடித்துவிடுவாய்…” என்றான் இதமாக.

“ச்சு..! எங்கே பிடிப்பது. இப்போது இரண்டு மாதமாக வருகிறேன். ஒன்றுமே விளங்கமாட்டேன் என்கிறது…” என்றவளின் குரலில் அப்போதும் சலிப்புத்தான் இருந்தது.

“அப்படியானால் ஒன்று செய். யாராவது ஜேர்மன் நாட்டுக்காரன் ஒருவனை நண்பனாக்கு. பிறகு அவனோடு கதைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் மொழியைப் பிடித்துவிடுவாய்.” என்று சொன்னவனின் குரலில், இலகுவான வழி ஒன்றைச் சொல்கிறேன் பார்த்தாயா என்கிற பெருமை இருந்தது.

அதைக் கேட்டவளுக்கோ, ‘மொழி பிடிக்க வழி சொல்கிறானாம் வழி…’ என்று பத்திக்கொண்டு வந்தது.

“அப்படித்தான் இந்தநாட்டு மொழியைப் பிடித்தாக வேண்டுமென்றால், நான் பிடிக்காமலேயே இருந்துவிடுகிறேன்…” என்றாள் மிகுந்த எரிச்சலோடு.

அவனோ அவளை ‘ நீ என்ன லூசா...’ என்பதாகப் பார்த்தான்.

அந்த நாட்டிலேயே பிறந்து, அந்தக் கலாச்சாரத்திலேயே ஊறி வளர்ந்தவனுக்கு தான் சொன்னதில் தப்பேதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதனால் அவளின் மனநிலையையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“மொழியைப் பிடிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையென்றால் பிறகு எதற்கு இங்கே வருகிறாய்..?” என்று புரியாத குரலில் கேட்டான்.

“மொழியைப் பழகத்தான்! அதற்காக எவனையும் பிடித்து மொழியைப் படிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை!” என்றாள் அப்போதும் சூடாகவே.

“ஏன்? ஒருவனை நண்பனாக்கிக் கொள்வதில் என்ன பிழை கண்டாய்…? உனக்கு எந்த வழியில் பார்த்தாலும் லாபம் தானே.”

“அப்படிக் கண்டதிலும் லாபம் அடையவேண்டிய அவசியம் எனக்கில்லை…” என்றாள் கோபத்தில் மூச்சிரைக்க.

அவளின் கோபத்துக்கான காரணம் அவனுக்குப் புரியவே இல்லை. அவளையே சில நொடிகள் பார்த்தான். அவளும் விடாது அவனை முறைத்தாள்.

எனக்கு என்ன என்பதாகத் தோள்களைக் குலுக்கியவன், கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்துவிட்டு, “ஓ… நேரமாகிவிட்டது.” என்றபடி எழுந்துகொண்டான். “நான் கிளம்பப் போகிறேன். நீ யாருக்காக காத்திருக்கிறாய்..?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் அவளுக்கு மீண்டும் எரிச்சல் வந்தது . பின்னே, போக வெளிக்கிட்டவளைப் போகவிடாது கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு நிறுத்திவிட்டு இப்போது மீண்டும் கேள்வி கேட்கிறானே! அதுவும் யாருக்காகக் காத்திருக்கிறாய் என்று.

எப்போதும் வகுப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்குச் சென்றுவிடுவாள் அவள். இன்று வகுப்பு முடிந்து வெளியே வந்தவளை இந்த மரமும் அதன் நிழலும் ‘இங்கே கொஞ்ச நேரம் வந்து இருந்துவிட்டுப் போயேன்..’ என்று அழைப்பதைப் போல் தோன்றியது.

வீட்டுக்குப் போயும் என்ன செய்யப் போகிறேன். என்னுடைய அறைக்குள் சென்று முடங்கத்தானே போகிறேன் என்று நினைத்தவள் நிழலின் சுகத்தை அனுபவிக்க நினைத்தே அங்கே வந்து அமர்ந்தாள்.

இப்படி ஒருவனிடம் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருக்க அங்கே வந்தே இருக்கமாட்டாள்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. வருகிறேன்…” என்றவள் எழுந்து வேக எட்டுக்களை எடுத்துவைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மிக இலகுவாக நான்கடியில் அவளை எட்டியவன், “காரிலா வந்தாய்..?” என்று கேட்டான்.

“நடந்து.” என்றாள் சுருக்கமாக.

“அப்படியானால் என்னுடன் காரில் வா. உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன்…”

“தேவையில்லை. என்னால் நடந்துபோக முடியும். கேட்டதற்கு நன்றி.” என்றவள் நடையின் வேகத்தைக் கூட்டினாள். அவளுக்கு ஒரு நண்பனைப் பிடி என்று அவன் சொன்னதில் மிகுந்த கோபம் உண்டாகியிருந்தது.

அவனோ தன் இலகு நடையிலேயே அவளுடன் சேர்ந்தே இன்னும் நடந்தான்.

“உன் அப்பாவின் பெயர் என்ன..?” மீண்டும் அவனிடமிருந்து கேள்வி.

சினம் வந்தபோதும், “எதற்கு..?” என்று இப்போது அவளும் கேள்வி கேட்டாள்.

“இந்த ஊரில் கிட்டத்தட்ட பதினைந்து தமிழ்க் குடும்பங்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எனக்கு எல்லோரையும் தெரியும். அதுதான் நீ யார் வீட்டுப்பெண் என்று அறிந்துகொள்ளக் கேட்டேன்.” என்றான் விளக்கமாக.

“நீங்கள் தமிழா…?” அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது இதுவரை இருந்த பெரும் சந்தேகத்தைக் கேட்டாள் அவள்.

நடந்துகொண்டிருந்தவன் நின்றுவிட்டான். நின்றவன் இப்போது அவளை ஒருவிதமாகப் பார்த்தான்.

இவளுக்கு மறை ஏதும் கழன்றுவிட்டதா என்கிற சந்தேகம் இருந்தது அவன் பார்வையில். பின்னே, அழகான தமிழில் அழகாய்ப் பேசுபவனிடம் நீ தமிழனா என்று கேட்டால் வேறு என்னதான் நினைப்பது.

“என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது…?” என்று கேட்டவனின் விழிகளில், அவளின் எண்ணத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருந்தது.

“இந்த நாட்டுக்காரனைப்போல் இருக்கிறீர்கள்…” என்றவளுக்கு, அவன் மேல் இருந்த கோபம் மறைந்துவிட்டதா அல்லது மறந்துவிட்டதா?

“எதை வைத்துச் சொல்கிறாய்..?” கேள்வி கேட்பதை அவன் விட்ட பாடாக இல்லை.

“உங்கள் முகத்தில் மீசையைக் காணோம்..” என்றாள், நம்மவர்களின் அடையாளமே அதுதான் என்கிற தொனியோடு.

அதைச் சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருந்தபோதும் அவன் தானே கேட்டான் என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அவன் விழிகளில் சிரிப்பு வந்தது.

அதைக் காட்டாது, “ஏன், தமிழர்கள் எல்லோரும் இப்போது மீசையோடுதான் இருக்கிறார்களா..?” என்று கேட்டான்.

“இல்லைதான். ஆனாலும் பெரும்பாலானவர்கள் மீசை வைத்திருப்பார்கள். அதோடு உங்கள் முடிவேறு செம்பட்டையாக இருக்கிறதே…” என்று தன் கருத்துக்கு வலு சேர்த்தாள் அவள்.

“செம்பட்டை…? அப்படி என்றால்…” அவனுக்குப் புரியவில்லை.

“அதுதான், இந்த நாட்டுக்காரர்களின் பூனை முடியைப்போல் உங்கள் முடியும் மஞ்சள் கலரில் இருக்கிறதே…”

விழிகளில் தேங்கியிருந்த சிரிப்பு முகமெல்லாம் பரவ, வெண்பற்கள் பளீரிட வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

பின்னே சில நூறு யூரோக்களைக் கொடுத்து, அவனின் கரிய அடர்ந்த சிகைக்கு கோல்ட் மற்றும் மெல்லிய பிரவுன் நிறங்களை கலந்த டையை அடித்து, கறுப்பு, பிரவுன், கோல்ட் என்று அலையலையாக மின்னும்படி அவன் விரும்பிச் செய்த சிகையலங்காரத்தை ‘செம்பட்டை’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாளே அவள்.

போதாக்குறைக்கு ‘பூனைமுடி’, ‘மஞ்சள் கலர்’ என்று வேறு சொல்லிவிட்டாள். அவன் தமிழன் இல்லை என்பதற்குச் சான்றாகவும் அல்லவா அதைக் காட்டிவிட்டாள்.

பல பெண் தோழிகளைப் புதிதாகத் தேடிக்கொடுத்த அவனின் சிலையலங்காரத்துக்கு இந்த நிலையா?

“எதற்காகச் சிரிக்கிறீர்கள்..?” அவனின் சிரிப்பின் அர்த்தம் புரியாதவளின் முகத்தில் மெல்லிய ரோசம் வந்திருந்தது.

“உன் அருமையான விளக்கத்தைக் கேட்டு அதிசயித்துச் சிரிக்கிறேன்…” என்றான் அப்போதும் நகை மாறா முகத்துடன்.

“அப்படியானால் நான் சொன்னது சரிதானே…?” ஆவலோடு கேட்டாள் அவள்.

“நீ கேட்கும் விதத்துக்கு ஆம் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மை அதுவல்லவே…” என்றான் அவன் கைகளை விரித்து.

“அப்போ.. உங்கள் அம்மா இந்த நாட்டுக்காரியா…?” அவளும் விடுவதாக இல்லை.

“இல்லையே. அவர்கள் தமிழ்தான்..” என்றான் வாடாத புன்னகையோடு.

“உங்கள் அப்பா இந்த நாட்டுக்காரர் தானே..?” விடை கண்டு பிடித்துவிட்ட குதூகலத்தோடு அவள் கேட்க,

“அம்மாடியோ! இதோடு உன் கற்பனையை நிறுத்திவிடு. என் வீடும் தாங்காது. நானும் தாங்கமாட்டேன். நான் தமிழன்தான். என் அம்மா அப்பாவும் தமிழர்கள் தான். ஏன், என்னுடைய தாத்தா பாட்டி கூடத் தமிழர்கள் தான்..” என்றான் அவன் வேகமாக.

“ஓ….” என்றவளின் பார்வை, நீ சொல்வது உண்மையா என்கிற ரீதியில் அவனை ஆராய்ந்தது.

அவளின் பார்வையில் விரிந்த புன்னகையோடு, “நடந்துகொண்டே கதைக்கலாமே…” என்றவன், அவளோடு சேர்ந்து நடந்தான்.

‘இவ்வளவு நிறமாக வேறு இருக்கிறானே… இவனானால் தான் தமிழன் என்கிறான்...’ என்று ஓடிய அவளின் சிந்தனையை,

“உன் அப்பாவின் பெயரை நீ இன்னுமே சொல்லவில்லையே..:?” என்கிற அவன் கேள்வி தடுத்தது.

நெஞ்சடைத்தது அவளுக்கு. சற்றுத் தூரம் அமைதியாக நடந்தவள், “அவரை உங்களுக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அத்தான் சிவபாலனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.” என்றாள்.

“யார்..? சைந்தவியின் அப்பாவையா சொல்கிறாய்..?”

“ஆமாம். உங்களுக்கு சைந்துக்குட்டியைத் தெரியுமா..?”

“ம். அவளின் தோழி திபிகாவின் சித்தப்பாதான் நான்..” என்றவன், “நீ…?” என்று இழுக்க,

“என் அக்கா சுலக்சனாவின் மகள்தான் சைந்து. அக்கா கணவர் சிவபாலன்.” என்று சொன்னாள் அவள்.

கதைத்துக்கொண்டே அவனது கார் நின்ற இடத்துக்கு அவர்கள் வந்துவிடவும், கையில் இருந்த கார்த்திறப்பின் பட்டனை அழுத்திக் காரின் லொக்கை அகற்றினான் அவன்.

“இப்போதுதான் நாம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டோமே. போதாக்குறைக்கு நான் தமிழன்தான் என்றும் தெரிந்துகொண்டாய். வருகிறாயா, உன் அக்கா வீட்டில் இறக்கிவிடுகிறேன்..” என்று புன்னகையோடு கேட்டான் அவன்.

அவள் முகத்திலும் அந்தப் புன்னையின் எதிரொலி தெரிந்தது.

“நான் நடந்தே போகிறேன். எனக்கு நடக்கத்தான் விருப்பம். அதோடு வீடும் கிட்டத்தானே…” என்று தன்மையாகவே தன் மறுப்பைச் சொன்னாள் லட்சனா.

உன் விருப்பம் என்பதாகத் தோளைத் தூக்கியவன், ஒரு “வருகிறேன்..” உடன் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

தொடரும்
 

Goms

Active member
Welcome Nithani 👍

இனி காலை, மாலை இருபொழுதும் தேத்தண்ணி with நிதா 😜😜

கதையின் ஆரம்பம் அருமை 🥰 தமிழனா என்று நல்ல ஆராய்ச்சி தான்.
 
இந்த கதைக்கு நன்றி Sis
சண்டையில் ஆரம்பம் என்று பார்த்தால் சமாதானமாகவே தொடங்குகிறார்கள்
அருமை
 

Ananthi.C

Active member
“நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. வருகிறேன்…” என்றவள் எழுந்து வேக எட்டுக்களை எடுத்துவைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மிக இலகுவாக நான்கடியில் அவளை எட்டியவன், “காரிலா வந்தாய்..?” என்று கேட்டான்.

“நடந்து.” என்றாள் சுருக்கமாக.

“அப்படியானால் என்னுடன் காரில் வா. உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன்…”

“தேவையில்லை. என்னால் நடந்துபோக முடியும். கேட்டதற்கு நன்றி.” என்றவள் நடையின் வேகத்தைக் கூட்டினாள். அவளுக்கு ஒரு நண்பனைப் பிடி என்று அவன் சொன்னதில் மிகுந்த கோபம் உண்டாகியிருந்தது.

அவனோ தன் இலகு நடையிலேயே அவளுடன் சேர்ந்தே இன்னும் நடந்தான்.

“உன் அப்பாவின் பெயர் என்ன..?” மீண்டும் அவனிடமிருந்து கேள்வி.

சினம் வந்தபோதும், “எதற்கு..?” என்று இப்போது அவளும் கேள்வி கேட்டாள்.

“இந்த ஊரில் கிட்டத்தட்ட பதினைந்து தமிழ்க் குடும்பங்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எனக்கு எல்லோரையும் தெரியும். அதுதான் நீ யார் வீட்டுப்பெண் என்று அறிந்துகொள்ளக் கேட்டேன்.” என்றான் விளக்கமாக.

“நீங்கள் தமிழா…?” அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாது இதுவரை இருந்த பெரும் சந்தேகத்தைக் கேட்டாள் அவள்.

நடந்துகொண்டிருந்தவன் நின்றுவிட்டான். நின்றவன் இப்போது அவளை ஒருவிதமாகப் பார்த்தான்.

இவளுக்கு மறை ஏதும் கழன்றுவிட்டதா என்கிற சந்தேகம் இருந்தது அவன் பார்வையில். பின்னே, அழகான தமிழில் அழகாய்ப் பேசுபவனிடம் நீ தமிழனா என்று கேட்டால் வேறு என்னதான் நினைப்பது.

“என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது…?” என்று கேட்டவனின் விழிகளில், அவளின் எண்ணத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்திருந்தது.

“இந்த நாட்டுக்காரனைப்போல் இருக்கிறீர்கள்…” என்றவளுக்கு, அவன் மேல் இருந்த கோபம் மறைந்துவிட்டதா அல்லது மறந்துவிட்டதா?

“எதை வைத்துச் சொல்கிறாய்..?” கேள்வி கேட்பதை அவன் விட்ட பாடாக இல்லை.

“உங்கள் முகத்தில் மீசையைக் காணோம்..” என்றாள், நம்மவர்களின் அடையாளமே அதுதான் என்கிற தொனியோடு.

அதைச் சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருந்தபோதும் அவன் தானே கேட்டான் என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அவன் விழிகளில் சிரிப்பு வந்தது.

அதைக் காட்டாது, “ஏன், தமிழர்கள் எல்லோரும் இப்போது மீசையோடுதான் இருக்கிறார்களா..?” என்று கேட்டான்.

“இல்லைதான். ஆனாலும் பெரும்பாலானவர்கள் மீசை வைத்திருப்பார்கள். அதோடு உங்கள் முடிவேறு செம்பட்டையாக இருக்கிறதே…” என்று தன் கருத்துக்கு வலு சேர்த்தாள் அவள்.

“செம்பட்டை…? அப்படி என்றால்…” அவனுக்குப் புரியவில்லை.

“அதுதான், இந்த நாட்டுக்காரர்களின் பூனை முடியைப்போல் உங்கள் முடியும் மஞ்சள் கலரில் இருக்கிறதே…”

விழிகளில் தேங்கியிருந்த சிரிப்பு முகமெல்லாம் பரவ, வெண்பற்கள் பளீரிட வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

பின்னே சில நூறு யூரோக்களைக் கொடுத்து, அவனின் கரிய அடர்ந்த சிகைக்கு கோல்ட் மற்றும் மெல்லிய பிரவுன் நிறங்களை கலந்த டையை அடித்து, கறுப்பு, பிரவுன், கோல்ட் என்று அலையலையாக மின்னும்படி அவன் விரும்பிச் செய்த சிகையலங்காரத்தை ‘செம்பட்டை’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாளே அவள்.

போதாக்குறைக்கு ‘பூனைமுடி’, ‘மஞ்சள் கலர்’ என்று வேறு சொல்லிவிட்டாள். அவன் தமிழன் இல்லை என்பதற்குச் சான்றாகவும் அல்லவா அதைக் காட்டிவிட்டாள்.

பல பெண் தோழிகளைப் புதிதாகத் தேடிக்கொடுத்த அவனின் சிலையலங்காரத்துக்கு இந்த நிலையா?

“எதற்காகச் சிரிக்கிறீர்கள்..?” அவனின் சிரிப்பின் அர்த்தம் புரியாதவளின் முகத்தில் மெல்லிய ரோசம் வந்திருந்தது.

“உன் அருமையான விளக்கத்தைக் கேட்டு அதிசயித்துச் சிரிக்கிறேன்…” என்றான் அப்போதும் நகை மாறா முகத்துடன்.

“அப்படியானால் நான் சொன்னது சரிதானே…?” ஆவலோடு கேட்டாள் அவள்.

“நீ கேட்கும் விதத்துக்கு ஆம் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மை அதுவல்லவே…” என்றான் அவன் கைகளை விரித்து.

“அப்போ.. உங்கள் அம்மா இந்த நாட்டுக்காரியா…?” அவளும் விடுவதாக இல்லை.

“இல்லையே. அவர்கள் தமிழ்தான்..” என்றான் வாடாத புன்னகையோடு.

“உங்கள் அப்பா இந்த நாட்டுக்காரர் தானே..?” விடை கண்டு பிடித்துவிட்ட குதூகலத்தோடு அவள் கேட்க,

“அம்மாடியோ! இதோடு உன் கற்பனையை நிறுத்திவிடு. என் வீடும் தாங்காது. நானும் தாங்கமாட்டேன். நான் தமிழன்தான். என் அம்மா அப்பாவும் தமிழர்கள் தான். ஏன், என்னுடைய தாத்தா பாட்டி கூடத் தமிழர்கள் தான்..” என்றான் அவன் வேகமாக.

“ஓ….” என்றவளின் பார்வை, நீ சொல்வது உண்மையா என்கிற ரீதியில் அவனை ஆராய்ந்தது.

அவளின் பார்வையில் விரிந்த புன்னகையோடு, “நடந்துகொண்டே கதைக்கலாமே…” என்றவன், அவளோடு சேர்ந்து நடந்தான்.

‘இவ்வளவு நிறமாக வேறு இருக்கிறானே… இவனானால் தான் தமிழன் என்கிறான்...’ என்று ஓடிய அவளின் சிந்தனையை,

“உன் அப்பாவின் பெயரை நீ இன்னுமே சொல்லவில்லையே..:?” என்கிற அவன் கேள்வி தடுத்தது.

நெஞ்சடைத்தது அவளுக்கு. சற்றுத் தூரம் அமைதியாக நடந்தவள், “அவரை உங்களுக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அத்தான் சிவபாலனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.” என்றாள்.

“யார்..? சைந்தவியின் அப்பாவையா சொல்கிறாய்..?”

“ஆமாம். உங்களுக்கு சைந்துக்குட்டியைத் தெரியுமா..?”

“ம். அவளின் தோழி திபிகாவின் சித்தப்பாதான் நான்..” என்றவன், “நீ…?” என்று இழுக்க,

“என் அக்கா சுலக்சனாவின் மகள்தான் சைந்து. அக்கா கணவர் சிவபாலன்.” என்று சொன்னாள் அவள்.

கதைத்துக்கொண்டே அவனது கார் நின்ற இடத்துக்கு அவர்கள் வந்துவிடவும், கையில் இருந்த கார்த்திறப்பின் பட்டனை அழுத்திக் காரின் லொக்கை அகற்றினான் அவன்.

“இப்போதுதான் நாம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டோமே. போதாக்குறைக்கு நான் தமிழன்தான் என்றும் தெரிந்துகொண்டாய். வருகிறாயா, உன் அக்கா வீட்டில் இறக்கிவிடுகிறேன்..” என்று புன்னகையோடு கேட்டான் அவன்.

அவள் முகத்திலும் அந்தப் புன்னையின் எதிரொலி தெரிந்தது.

“நான் நடந்தே போகிறேன். எனக்கு நடக்கத்தான் விருப்பம். அதோடு வீடும் கிட்டத்தானே…” என்று தன்மையாகவே தன் மறுப்பைச் சொன்னாள் லட்சனா.

உன் விருப்பம் என்பதாகத் தோளைத் தூக்கியவன், ஒரு “வருகிறேன்..” உடன் காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

தொடரும்
 

Ananthi.C

Active member
நல்ல ஆரம்பம்....ஓ.... தமிழர் என்பதை இப்படியெல்லாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கலாமா???நல்லது
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom