அத்தியாயம்-10
சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ அவளின் முகம் பாராது, “இறங்கு…” என்றபடி இறங்க முற்படவும், “இங்கே எதற்குச் சூர்யா…?” என்று இறங்குவதற்கு எந்த முயற்சியும் செய்யாது கேட்டாள்.
“டிரைவிங் படிக்கவேண்டும் என்றாயே. அதற்குப் பதிவதற்கு!” இப்போதும் அவள் புறம் அவன் திரும்பவில்லை.
‘என் முகத்தைப் பார்த்துக் கதைக்க முடியாத அளவுக்கு நான் என்ன செய்தேன்..’ என்று உள்ளம் பரிதவித்தபோதும், “அதற்கு எதற்கு இப்போது வந்தீர்கள்?” என்று மனக்குமுறலைக் காட்டாத குரலில் கேட்டாள்.
“இப்போதே ஆரம்பித்தால் தான் இன்னும் மூன்றோ நான்கு மாதத்தில் நீ பழகி முடிக்கலாம்…”
“ஆனால் என்னிடம்...” என்று ஆரம்பித்தவள் அமைதியானாள். அவளுக்கு பணத்தைப் பற்றி மீண்டும் அவனிடம் கதைக்க விருப்பமில்லை. அதோடு அவனே பணம் கட்டும் எண்ணத்துடன் வந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது.
என்னதான் உயிர்க் காதலனாக இருந்தாலுமே திருமணத்திற்கு முதல் அவன் செலவில் ஒன்றைச் செய்வதில் அவளுக்குச் சம்மதமில்லை. அதை அவனிடம் அவளால் வாய்விட்டுச் சொல்ல முடியாது. சொன்னால் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிடுவான். இன்னுமொரு வாக்குவாதத்தை தாங்கும் சக்தியும் இப்போது இல்லை.
“இப்போதைக்கு வேண்டாமே. எனக்கு மொழியும் அவ்வளவாகப் புரியாது…” மொழி மேல் பழியைப் போட்டு அந்த விஷயத்தை தள்ளிப்போடப் பார்த்தாள்.
“அது ஒரு பிரச்சினை இல்லை. அதே கேள்விகள் இணையத்தில் தமிழில் இருக்கிறது. நான் பதிவிறக்கம் செய்து தருகிறேன். அதைப் படித்துவிட்டு ஐந்தோ அல்லது ஆறு வகுப்புக்களுக்கு நீ போனால் போதும். நீ பரீட்சை எழுதலாம்…” என்று அவளின் எண்ணத்தை மிக இலகுவாக முறியடித்தான் அவன்.
“இணையத்தில் தமிழில் இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்..?” ஆச்சரியமாகக் கேட்டாள் சனா. தமிழில் ஒன்றைத் தேடவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லையே.
“உனக்காகத் தேடியதில் தெரியும். டொச்சில் படிக்கச் சிரமப்படுவாயே என்று நினைத்து தேடினேன்....” என்றான் சிறு புன்னகையோடு.
அதைக் கேட்டதும் இதுவரை இருந்த மனநிலை மாறி அவள் உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி! நெகிழ்ச்சி! அவளுக்காக அவன் ஒன்றைச் செய்தான் என்பதில் பெருமையாக இருந்தது.
அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். ஆனால் அது அவன் காதலில் கசிந்த ஆனந்தக்கண்ணீர் மட்டுமே!
“எதற்கும் கொஞ்ச நாட்கள் போகட்டுமே சூர்யா…” என்றாள் நெகிழ்ந்த குரலில். அவன் காட்டிய நேசத்தில் அவளின் எதிர்ப்பு முற்றாக அடிபட்டிருந்தது. திடமாகப் பேச முடியாவிட்டாலும் அவன் பணத்தில் டிரைவிங் பழகுவதைத் தவிர்க்க முயன்றாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே கண்களில் கோபம் மின்ன, “ஏன்..?” என்று சுருக்கமாகக் கேட்டான் அவன்.
“அது.. அது இன்னும் இரண்டுமாதம் கழித்து…” அவளைச் சொல்லிமுடிக்க விடாது, “அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..!” என்று கூர்மையோடு கேட்டான் அவன்.
உள்ளதைச் சொல்ல விருப்பம் இல்லாதபோதும், சொல்லாமலும் விடமாட்டான் என்று தெரியவே, “என்னிடம் போதியளவு பணமில்லை…” என்றாள் அவன் முகம் பாராது.
“இப்போது உன்னிடம் யாராவது பணம் கேட்டார்களா..?”
“அது… நானே கட்டிப் படிக்கிறேன்.” என்றாள் தயக்கமாக. இன்னுமொரு வாதாட்டம் தொடங்கப் போகிறது என்பதையறிந்து உள்ளம் படபடக்கத் தொடங்கியது.
“ஏன்? நான் கட்டினால் நீ படிக்க மாட்டாயா?” பார்வையை அவளிடமிருந்து பிரிக்காது கேட்டான்.
இவ்வளவு நேரமும் முகம் பார்த்துக் கதைக்கிறான் இல்லையே என்று தவித்தவள், இப்போது அவன் பார்வையை விலக்கிக் கொண்டால் நல்லது என்று நினைத்தாள். அந்தளவுக்கு கூர்மையாக இருந்தன அவன் விழிகள்.
எதுவும் சொல்லாது, முகத்தில் மறுப்பைத் தேக்கி எங்கோ பார்த்தவளின் நாடியைப் பிடித்துத் தன்பக்கமாகத் திருப்பி, “உனக்கு நான் செய்வதில் என்ன தவறு கண்டாய் நீ..?” என்று அவள் விழிகளையே ஊடுருவியபடி கேட்டான்.
அப்போதும் அவளின் மௌன யுத்தம் தொடரவே, “உனக்குச் செய்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்கிறாயா..?” என்று அவன் கேட்க, அதற்கு மேலும் அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
“இல்லை.. அப்படி இல்லை..” என்று திக்கியவளைப் பேசவிடாது,
“எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? இதற்கு மட்டும் பதிலைச் சொல்!” என்றான் அவன்.
“சூர்யா.. நான் சொல்வதைக் கேளுங்களேன்..” அவள் கெஞ்ச,
“நான் கேட்டதற்கு மட்டும் பதிலைச் சொல்லு..!” என்று தன் பிடியிலேயே நின்றான் அவன்.
அதற்கு மேல் முடியாமல், “இருக்கிறது…” என்றாள் மொட்டையாக.
“அப்படியானால் இறங்கு…” என்றவன் காரைவிட்டு இறங்கினான்.
உள்ளே சென்று அவள் டிரைவிங் பழகுவதற்குப் பதிந்து, முதற்கட்டப் பணத்தைத் தானே கட்டி என்று மிக வேகமாக வேலைகளை முடித்து, “கையெழுத்துப் போடு..” என்று அவன் ஒரு பத்திரத்தை நீட்ட, அதிலே என்ன இருக்கிறது என்று பாராமலேயே கையெழுத்திட்டாள் சனா.
எல்லா வேலைகளும் முடிந்து காருக்கு வரும்வரை அவளாக ஒரு வார்த்தை அவனோடு கதைக்கவில்லை. சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மையாக அவன் சொன்னதை மட்டுமே செய்தாள்.
“இப்போ எதற்கு முகத்தை நீட்டிக்கொண்டு இருக்கிறாய்..?” எதையும் பிடித்துத் தொங்கும் இயல்பு இல்லாதவன் என்பதாலோ அல்லது அவளின் ஆர்ப்பாட்டமான மறுப்பை விட இந்த அமைதியான மறுப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ, காருக்குள் ஏறியபிறகும் அமைதியாக இருந்தவளிடம் கேட்டான்.
மடியில் இருந்த தன் கைவிரல் நகங்களை ஆராய்ந்தபடி இருந்தவள் எதுவும் பேசவில்லை.
“என்னோடு கதைக்க மாட்டாயா லட்டு…?” தணிந்த குரலில் அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
‘என்னால் அது முடியுமா..?’ என்று கேட்டது அந்தப் பார்வை. அதைப் புரிந்துகொண்டான் போலும், அவன் இதழ்களில் சின்னப்புன்னகை.
“நமக்குத் திருமணம் நடந்தபிறகு உன் பொறுப்பு என்னதுதானே! அதை நான் இப்போதே செய்கிறேன். அதிலே உனக்கு என்ன பிரச்சினை?” தன் செயலுக்கான காரணத்தை விளக்க முயன்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் நெஞ்சம் அவன் பால் இன்னுமின்னும் உருகியது! மனைவியின் கடமைகளையே தட்டிக்கழிக்கும் கணவன் வாழும் இந்தக் காலத்தில், காதலி மறுத்தபோதும் பிடிவாதமாக அவளின் தேவைகளை நிறைவேற்றும் காதலன் கிடைப்பது வரமல்லவா!
ஆனாலும் பணத்துக்காக அவள் அவனோடு பழகுவதாக நினைத்துவிட்டான் என்றால்...
அப்படி நினைக்க மாட்டான் என்று காதல் கொண்ட மனது வாதிட, அவன் நினைத்துவிட்டாலோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் சொல்லிவிட்டாலோ அதன் பிறகு என்ன செய்வாய் என்று கேட்டது அவளின் பெண் மனது.
“பணத்துக்காக நீ என்னோடு பழகுவதாக நான் நினைத்துவிடுவேன் என்று நினைக்கிறாயோ..?” அவள் மனதை அப்படியே படம் பிடித்தவனாகக் கேட்டான்.
திகைப்போடு அவனைப் பார்த்து விழித்தவளின் விழிகளே உண்மையைச் சொல்ல, “என்னைப் பற்றி நல்லதாகவே நினைக்கமாட்டாயா..?” என்று கேட்டவனின் முகத்தில் சிரிப்பிருந்தது.
“அச்சோ சூர்யா.. அப்படியெல்லாம் இல்லை…” மனதை மறைத்து அவள் சிணுங்க,
“விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்கிறாயா.…”என்றான் விரிந்த புன்னகையோடு!
‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியது.
அவன் அவளை ரசிக்கிறான் என்பதில் உள்ளம் துள்ள, “கண்களைச் சொல்லிவிட்டு மூக்கை பிடிக்கிறீர்களே சூர்யா…” என்றவளின் குரல் காதலில் குலைந்து வந்தது.
அவளையே பார்த்தபடி, “உன்னைப்பற்றி, உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும்! அதனால் இப்படி லூசுத்தனமாக எல்லாம் சிந்திக்காதே…!” என்று இதமாகச் சொன்னவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் இனிமையைச் சேர்த்தது.
எதையும் நேராகப் பேசுபவன், அவளைத் தவறாக நினைத்திருந்தால், அதையும் நேராகச் சொல்லியிருப்பான்.
சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ அவளின் முகம் பாராது, “இறங்கு…” என்றபடி இறங்க முற்படவும், “இங்கே எதற்குச் சூர்யா…?” என்று இறங்குவதற்கு எந்த முயற்சியும் செய்யாது கேட்டாள்.
“டிரைவிங் படிக்கவேண்டும் என்றாயே. அதற்குப் பதிவதற்கு!” இப்போதும் அவள் புறம் அவன் திரும்பவில்லை.
‘என் முகத்தைப் பார்த்துக் கதைக்க முடியாத அளவுக்கு நான் என்ன செய்தேன்..’ என்று உள்ளம் பரிதவித்தபோதும், “அதற்கு எதற்கு இப்போது வந்தீர்கள்?” என்று மனக்குமுறலைக் காட்டாத குரலில் கேட்டாள்.
“இப்போதே ஆரம்பித்தால் தான் இன்னும் மூன்றோ நான்கு மாதத்தில் நீ பழகி முடிக்கலாம்…”
“ஆனால் என்னிடம்...” என்று ஆரம்பித்தவள் அமைதியானாள். அவளுக்கு பணத்தைப் பற்றி மீண்டும் அவனிடம் கதைக்க விருப்பமில்லை. அதோடு அவனே பணம் கட்டும் எண்ணத்துடன் வந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது.
என்னதான் உயிர்க் காதலனாக இருந்தாலுமே திருமணத்திற்கு முதல் அவன் செலவில் ஒன்றைச் செய்வதில் அவளுக்குச் சம்மதமில்லை. அதை அவனிடம் அவளால் வாய்விட்டுச் சொல்ல முடியாது. சொன்னால் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிடுவான். இன்னுமொரு வாக்குவாதத்தை தாங்கும் சக்தியும் இப்போது இல்லை.
“இப்போதைக்கு வேண்டாமே. எனக்கு மொழியும் அவ்வளவாகப் புரியாது…” மொழி மேல் பழியைப் போட்டு அந்த விஷயத்தை தள்ளிப்போடப் பார்த்தாள்.
“அது ஒரு பிரச்சினை இல்லை. அதே கேள்விகள் இணையத்தில் தமிழில் இருக்கிறது. நான் பதிவிறக்கம் செய்து தருகிறேன். அதைப் படித்துவிட்டு ஐந்தோ அல்லது ஆறு வகுப்புக்களுக்கு நீ போனால் போதும். நீ பரீட்சை எழுதலாம்…” என்று அவளின் எண்ணத்தை மிக இலகுவாக முறியடித்தான் அவன்.
“இணையத்தில் தமிழில் இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்..?” ஆச்சரியமாகக் கேட்டாள் சனா. தமிழில் ஒன்றைத் தேடவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லையே.
“உனக்காகத் தேடியதில் தெரியும். டொச்சில் படிக்கச் சிரமப்படுவாயே என்று நினைத்து தேடினேன்....” என்றான் சிறு புன்னகையோடு.
அதைக் கேட்டதும் இதுவரை இருந்த மனநிலை மாறி அவள் உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி! நெகிழ்ச்சி! அவளுக்காக அவன் ஒன்றைச் செய்தான் என்பதில் பெருமையாக இருந்தது.
அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். ஆனால் அது அவன் காதலில் கசிந்த ஆனந்தக்கண்ணீர் மட்டுமே!
“எதற்கும் கொஞ்ச நாட்கள் போகட்டுமே சூர்யா…” என்றாள் நெகிழ்ந்த குரலில். அவன் காட்டிய நேசத்தில் அவளின் எதிர்ப்பு முற்றாக அடிபட்டிருந்தது. திடமாகப் பேச முடியாவிட்டாலும் அவன் பணத்தில் டிரைவிங் பழகுவதைத் தவிர்க்க முயன்றாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே கண்களில் கோபம் மின்ன, “ஏன்..?” என்று சுருக்கமாகக் கேட்டான் அவன்.
“அது.. அது இன்னும் இரண்டுமாதம் கழித்து…” அவளைச் சொல்லிமுடிக்க விடாது, “அதுதான் ஏன் என்று கேட்கிறேன்..!” என்று கூர்மையோடு கேட்டான் அவன்.
உள்ளதைச் சொல்ல விருப்பம் இல்லாதபோதும், சொல்லாமலும் விடமாட்டான் என்று தெரியவே, “என்னிடம் போதியளவு பணமில்லை…” என்றாள் அவன் முகம் பாராது.
“இப்போது உன்னிடம் யாராவது பணம் கேட்டார்களா..?”
“அது… நானே கட்டிப் படிக்கிறேன்.” என்றாள் தயக்கமாக. இன்னுமொரு வாதாட்டம் தொடங்கப் போகிறது என்பதையறிந்து உள்ளம் படபடக்கத் தொடங்கியது.
“ஏன்? நான் கட்டினால் நீ படிக்க மாட்டாயா?” பார்வையை அவளிடமிருந்து பிரிக்காது கேட்டான்.
இவ்வளவு நேரமும் முகம் பார்த்துக் கதைக்கிறான் இல்லையே என்று தவித்தவள், இப்போது அவன் பார்வையை விலக்கிக் கொண்டால் நல்லது என்று நினைத்தாள். அந்தளவுக்கு கூர்மையாக இருந்தன அவன் விழிகள்.
எதுவும் சொல்லாது, முகத்தில் மறுப்பைத் தேக்கி எங்கோ பார்த்தவளின் நாடியைப் பிடித்துத் தன்பக்கமாகத் திருப்பி, “உனக்கு நான் செய்வதில் என்ன தவறு கண்டாய் நீ..?” என்று அவள் விழிகளையே ஊடுருவியபடி கேட்டான்.
அப்போதும் அவளின் மௌன யுத்தம் தொடரவே, “உனக்குச் செய்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்கிறாயா..?” என்று அவன் கேட்க, அதற்கு மேலும் அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
“இல்லை.. அப்படி இல்லை..” என்று திக்கியவளைப் பேசவிடாது,
“எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? இதற்கு மட்டும் பதிலைச் சொல்!” என்றான் அவன்.
“சூர்யா.. நான் சொல்வதைக் கேளுங்களேன்..” அவள் கெஞ்ச,
“நான் கேட்டதற்கு மட்டும் பதிலைச் சொல்லு..!” என்று தன் பிடியிலேயே நின்றான் அவன்.
அதற்கு மேல் முடியாமல், “இருக்கிறது…” என்றாள் மொட்டையாக.
“அப்படியானால் இறங்கு…” என்றவன் காரைவிட்டு இறங்கினான்.
உள்ளே சென்று அவள் டிரைவிங் பழகுவதற்குப் பதிந்து, முதற்கட்டப் பணத்தைத் தானே கட்டி என்று மிக வேகமாக வேலைகளை முடித்து, “கையெழுத்துப் போடு..” என்று அவன் ஒரு பத்திரத்தை நீட்ட, அதிலே என்ன இருக்கிறது என்று பாராமலேயே கையெழுத்திட்டாள் சனா.
எல்லா வேலைகளும் முடிந்து காருக்கு வரும்வரை அவளாக ஒரு வார்த்தை அவனோடு கதைக்கவில்லை. சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மையாக அவன் சொன்னதை மட்டுமே செய்தாள்.
“இப்போ எதற்கு முகத்தை நீட்டிக்கொண்டு இருக்கிறாய்..?” எதையும் பிடித்துத் தொங்கும் இயல்பு இல்லாதவன் என்பதாலோ அல்லது அவளின் ஆர்ப்பாட்டமான மறுப்பை விட இந்த அமைதியான மறுப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததாலோ என்னவோ, காருக்குள் ஏறியபிறகும் அமைதியாக இருந்தவளிடம் கேட்டான்.
மடியில் இருந்த தன் கைவிரல் நகங்களை ஆராய்ந்தபடி இருந்தவள் எதுவும் பேசவில்லை.
“என்னோடு கதைக்க மாட்டாயா லட்டு…?” தணிந்த குரலில் அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
‘என்னால் அது முடியுமா..?’ என்று கேட்டது அந்தப் பார்வை. அதைப் புரிந்துகொண்டான் போலும், அவன் இதழ்களில் சின்னப்புன்னகை.
“நமக்குத் திருமணம் நடந்தபிறகு உன் பொறுப்பு என்னதுதானே! அதை நான் இப்போதே செய்கிறேன். அதிலே உனக்கு என்ன பிரச்சினை?” தன் செயலுக்கான காரணத்தை விளக்க முயன்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் நெஞ்சம் அவன் பால் இன்னுமின்னும் உருகியது! மனைவியின் கடமைகளையே தட்டிக்கழிக்கும் கணவன் வாழும் இந்தக் காலத்தில், காதலி மறுத்தபோதும் பிடிவாதமாக அவளின் தேவைகளை நிறைவேற்றும் காதலன் கிடைப்பது வரமல்லவா!
ஆனாலும் பணத்துக்காக அவள் அவனோடு பழகுவதாக நினைத்துவிட்டான் என்றால்...
அப்படி நினைக்க மாட்டான் என்று காதல் கொண்ட மனது வாதிட, அவன் நினைத்துவிட்டாலோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் சொல்லிவிட்டாலோ அதன் பிறகு என்ன செய்வாய் என்று கேட்டது அவளின் பெண் மனது.
“பணத்துக்காக நீ என்னோடு பழகுவதாக நான் நினைத்துவிடுவேன் என்று நினைக்கிறாயோ..?” அவள் மனதை அப்படியே படம் பிடித்தவனாகக் கேட்டான்.
திகைப்போடு அவனைப் பார்த்து விழித்தவளின் விழிகளே உண்மையைச் சொல்ல, “என்னைப் பற்றி நல்லதாகவே நினைக்கமாட்டாயா..?” என்று கேட்டவனின் முகத்தில் சிரிப்பிருந்தது.
“அச்சோ சூர்யா.. அப்படியெல்லாம் இல்லை…” மனதை மறைத்து அவள் சிணுங்க,
“விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்கிறாயா.…”என்றான் விரிந்த புன்னகையோடு!
‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டியது.
அவன் அவளை ரசிக்கிறான் என்பதில் உள்ளம் துள்ள, “கண்களைச் சொல்லிவிட்டு மூக்கை பிடிக்கிறீர்களே சூர்யா…” என்றவளின் குரல் காதலில் குலைந்து வந்தது.
அவளையே பார்த்தபடி, “உன்னைப்பற்றி, உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும்! அதனால் இப்படி லூசுத்தனமாக எல்லாம் சிந்திக்காதே…!” என்று இதமாகச் சொன்னவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் இனிமையைச் சேர்த்தது.
எதையும் நேராகப் பேசுபவன், அவளைத் தவறாக நினைத்திருந்தால், அதையும் நேராகச் சொல்லியிருப்பான்.