அத்தியாயம்-16
“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா .
சாலையில் இருந்த இருக்கையிலேயே அவன் நெஞ்சில் சாய்ந்து அழத்தொடங்கி விட்டவளை, காருக்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் அவன் பெரும்பாடு பட்டுவிட்டான்.
அவன் கோபம் கூட மறைந்திருந்தது. அந்தளவுக்கு அழுதுகொண்டிருந்தாள் லட்சனா:அன்று கொழும்பில் ஜெயன் வீட்டில், பெற்றவர்களின் படங்களைப் பார்த்துவிட்டுக் கதறியவள் மீண்டும் கதறுவது இன்றுதான்.
இதுநாள் வரை மனதை அழுத்திக்கொண்டிருந்த வேதனைகளை, வலிகளை, வெறுமையை அவனிடம் வாய்விட்டுச் சொன்னதாலோ என்னவோ, அவள் அழுகை நிற்கமாட்டேன் என்றது.
சூர்யாவுக்கு அவளை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை.
சுலக்சனாவின் பெற்றோர்களும் அண்ணாவும் இறந்துவிட்டதாகவும், தங்கை மட்டுமே தப்பியதாகவும், மூன்று வருடங்களுக்கு முதல் அவனும் கேள்விப் பட்டான் தான். அன்று ‘அடப் பாவமே’ என்று பரிதாபத்தோடு மறந்துவிட்ட விஷயம், இன்று அது தன் காதலியின் குடும்பம் என்று அறிந்தபோது வேதனையாகத்தான் இருந்தது.
அதுவும் நடந்து மூன்று வருடங்கலானபோதும், இன்றும் அவள் படும் இந்தப் பாட்டைப் பார்க்கையில் மனதைப் பிசைந்தது. ஆனால், அதற்காக அழுதுகொண்டே இருந்தால் நடந்தவை மாறிவிடுமா என்ன?!
“லட்டு, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து.” என்றவனின் பேச்சைக் கேட்காது தொடர்ந்து அழுதவளிடம்; “சொல்வதைக் கேட்கமாட்டாயா!” என்றான் அதட்டலாக.
அவன் அதட்டியத்தில் கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு, திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்து விழித்தாள். அந்தப் பார்வை மனதைத் தாக்கவே, “ப்ச்! லட்டு, என்ன இது?! கண்ணைத்துடை.” என்றவன், தானே ‘டிஷ்யு’ வினால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டான்.
“இன்றும் நடந்தது கண்முன்னால் நிற்கிறது சூர்யா. அந்த விபத்து ஏன் நடந்தது? அம்மா, அப்பா, அண்ணா உடல்கள் என்ன ஆனது. அவற்றைப் பார்க்காததாலேயே, அவர்கள் எங்காவது உயிரோடு இருந்துவிட மாட்டார்களா என்று உள்ளம் கிடந்தது தவிக்கிறது. இறந்துவிட்டார்கள் என்று தெரியும். ஆனாலும்...” அதற்கு மேலும் சொல்ல முடியாமல் அவள் கேவ, “இந்தப் பேச்சுப் போதும் லட்டு. அதையே திரும்பத் திரும்பக் கதைத்து உன்னையே நீ வருத்தி என்ன காணப்போகிறாய்..?” என்றான் சூர்யா கண்டிப்பும் கனிவுமாக.
“அவர்களோடு சந்தோசமாக இருந்த நாட்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்துப்பார். மனதுக்கு ஆறுதலாக இருக்கும். கஷ்டமாக இருந்தாலும், சிலவற்றை மறக்கவும் ஒதுக்கவும் பழகவேண்டும்..” என்று தொடர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினான்.
“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டவளும் அவன் கைகளுக்குள் புகுந்து, வாகாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். மனம் இலகுவாக இருந்தது. இதுவரை சுமந்த சுமைகளை இறக்கி வைத்ததுபோல், மூச்சடைத்துக் கிடந்தவளுக்கு மூச்சுச் சீரானதுபோல் ஒரு உணர்வு.
இருவருமே சற்றுநேரம் அமைதியாக இருந்தார்கள். அவன் கை அவள் முதுகைத் தடவிக்கொடுக்க மட்டும் மறக்கவில்லை.
தன் தோளில் சாய்ந்திருந்தவளின் முகத்தைக் குனிந்து பார்த்தான் சூர்யா. அவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் அவனைப் பார்க்க, “ஜெயனிடம் நீ நம்மைப் பற்றிச் சொல்லிவிட்டாயா..?” என்று கேட்டான்.
லேசாக முகம் கன்ற இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.
“ஏன்?”
“அது.. ஏனோ சொல்ல முடியவில்லை.”
“அது தப்பில்லையா லட்டு. அவனுக்கு உன்னை நிச்சயித்திருக்கிறார்கள். நீயும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாய். அப்படி இருக்கையில் என்னை நீ காதலித்ததே தப்பு. சரி, காதல் தான் நம்மை அறியாமல் வந்துவிட்டது என்றால், அதை நீ உடனடியாக அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமா? அவனைப் பற்றி எப்படி யோசிக்காமல் இருந்தாய்..?” நேரடியாக எதையும் கதைத்துப் பழகியவன், அவளிடம் நேராகவே கேட்டான்.
அவள் முகமோ அவன் பேச்சில் சுண்டிப்போனது. தான் செய்வது பிழை என்று தெரிந்தாலும், அதை இன்னொருவர் வாயால் அதுவும் சூர்யாவின் வாயால் கேட்கையில் பெரும் பிழையாகத் தோன்றியது.
“அது.. நான் இங்கு வந்த புதிதில் அவர் என்னோடு தொலைபேசியில் கதைக்க முயன்றார். நான் இரண்டு மூன்று தடவைகள் தவிர்த்துவிட்டதில், பிறகு அவரும் கதைப்பதில்லை. அதனால் சொல்லமுடியவில்லை..”
“அவர் கதைக்கவில்லை என்றால் என்ன, நீயாக அழைத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அவள் பேச்சை இடைமறித்துக் கதைத்தவனின் குரலில் கண்டனம் இருந்தது.
“எனக்கு.. எனக்கு அவரிடம் சொல்ல ஒருமாதிரி.. தயக்கமாக இருந்தது..” என்றாள் மெல்லிய குரலில்.
“என்ன தயக்கம்? எதுக்குத் தயக்கம்? அவனும் மனிதன் தானே. உன் நிலைமையைச் சொன்னால் புரிந்துகொண்டிருப்பான். அல்லது நீ புரியவைத்திருக்கலாம். இரண்டையும் நீ செய்யவில்லை. அவன் உன்னைத் தன் வருங்கால மனைவியாக நினைத்துக் கொண்டிருப்பான். அப்படியான ஒருவனை நீ ஏமாற்றுவது போல் இருக்கிறது!” என்றவனின் குரலில் கோபம் இருந்ததோ?! தன்னவளை ஒருவன் மனதில் நினைத்திருக்கிறான் என்பது பிடிக்கவில்லையா அல்லது தன் காதலி செய்வது பிழை என்று நினைத்தானா, ஏதோ ஒன்று அவன் குரல் இறுக்கமாக இருந்தது.
“அவர் வந்ததும் சொல்லலாம் என்று நினைத்தேன்..” என்று முணுமுணுத்தாள் லட்சனா.
“அதுவரை..?” அவன் புருவங்கள் சுருங்கக் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தலையைக் குனிந்துகொண்டாள்.
“சொல்லு?” அவன் மீண்டும் கேட்க, “என்னால் அவரோடு இலகுவாகவே கதைக்கமுடியவில்லை சூர்யா. அதனால்தான் தொலைபேசியில் கதைப்பதையும் தவிர்த்தேன். நம்மைப்பற்றி அக்கா அத்தானிடம் சொல்லாமல் அவரிடம் சொன்னால், அது எப்படியும் சுற்றிச் சுழன்று எல்லோருக்கும் தெரிய வந்துவிடும். அதோடு எனக்கு.. அவரிடம் எப்படிச் சொல்வது என்று.. அதுவேறு தயக்கம். அதுதான் அவர் வரட்டும் என்று இருக்கிறேன்…” என்று தன்னிலையை அவனுக்கு உணர்த்த முயன்றாள்.
“தயக்கமாக இருக்கிறது, ஒருமாதிரி இருக்கிறது.. இதெல்லாம் என்ன லட்டு. உன் தயக்கத்துக்கு ஒருவனின் மனதைப் பலியாக்காதே!” என்றான் கண்டிப்பான குரலில் கடினமாக.
அந்தக் கடினத்தில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்த்தது அவள் கண்களில்.
“முதலில் இப்படி எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து. அடுத்ததாக எல்லாவற்றிற்கும் தயங்குவதை நிறுத்து. எதையும் பிறகு பிறகு என்று தள்ளிப் போடுவது. பிறகு தவறு செய்துவிட்டுக் கண் கலங்குவது. இதெல்லாம் சரியில்லை.” என்று அவள் தவறுகளை அவளுக்குச் சுட்டியவன், “சரி, உனக்குத்தான் சொல்லமுடியவில்லை. அவன் நம்பரைத் தா, நான் சொல்கிறேன் அவனிடம் நம்மைப் பற்றி..” என்றான்.
“இல்லையில்லை… வேண்டாம்…” என்று அதற்கும் அவசரமாக மறுத்தாள் அவள்.
“ஏன் வேண்டாம்..?” இறுகிய குரலில் அவன் கேட்க, “அது… நானே சொல்வதுதான் முறை….” என்று இழுத்தாள் அவள்.
“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை.
அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்கு முதலில் அவள் தன்னைத் தானே தயார் செய்யவேண்டும். இவனோ திடீர் என்று சொல் என்கிறான். அவளால் அது முடியவில்லை.
அதோடு அவள் செய்வது தவறு என்று அவளுக்குமே புரிந்ததில், ஜெயனிடம் நேரடியாகவே சொல்லி மன்னிப்புக் கேட்கவே அவள் மனம் விரும்பியது.
“சூர்யா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்கள். அவசரப் படவேண்டாம். முதலில் அக்காவிடம் சொல்லிவிட்டு, ஜெயனிடம் நேரவே சொல்கிறேனே. அதுதான் முறை சூர்யா..” என்றாள் கெஞ்சலாக.
“ப்ச்! என்ன நீ…” என்று சலித்தவன், “என்னவாவது செய். ஆனால் நீ செய்வது தவறு.” என்றான் அழுத்தமான குரலில். அவள் முகம் அதைக் கேட்டுக் கூம்பியது.
அதற்கு மேல் அதைப்பற்றி அவன் பேசவில்லை. இனி அது அவள் பொறுப்பு என்று நினைத்தவன், காரைக் கிளப்பினான்.
காரைக் கொண்டு சென்று நிறுத்திய இடம், அவன் தாத்தா பாட்டியின் வீடு.
யோசனையில் இருந்தவள் கார் சென்ற பாதையைக் கவனிக்கவில்லை. அவன் நிறுத்தியதுமே, இடத்தை இனங்கண்டு, “அச்சோ சூர்யா. இங்கு எதற்கு வந்தீர்கள்? நான் வேறு அழுது வீங்கிய முகத்தோடு இருக்கிறேன்.. அக்காவுக்கு தெரிந்தால் அதுவேறு பிரச்சினை..” என்று படபடத்தவளிடம், எதுவும் சொல்லாது காரைவிட்டு இறங்கினான் அவன்.
அவள் இருந்த பக்கமாக வந்து, கதவைத் திறந்து, “இறங்கு..” என்றான்.
“என்ன சூர்யா இது..?”
“அழுதாலும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் அக்காவுக்கு நீ இங்கு வந்தது தெரியவராது. அதனால் இறங்கு..” என்றவன், அவள் கையைப் பிடித்து இறக்கி அவளோடு சேர்ந்தே நடந்தான்.
பெரியவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக இருக்க, கையை அவனிடமிருந்து உருவப் பார்த்தாள் அவள்.
அதை உணர்ந்து, “பேசாமல் வா. இல்லையானால் தூக்கிக்கொண்டு போவேன்..” என்றான் அவன். படக்கென்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனாள் சனா.
பின்னே, அவன் என்றும் எதையும் பேச்சுக்காகச் சொன்னதே இல்லையே. சொன்னதுபோல் அவளைத் தூக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது. அதற்கு இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு போவது எவ்வளவோ மேல் அல்லவா!
சோபாவில் இலகுவாக அமர்ந்து, சாக்ஸ் பின்னிக்கொண்டிருந்த பாட்டி உள்ளே வந்தவர்களைக் கண்டதும், முதலில் யோசனையாகப் பார்த்தார். பின்னர் முகம் மலர எழுந்து வந்தார்.
“வாம்மா லச்சு.. வாவா. உன்னைக் கூட்டிக்கொண்டு வா என்று இவனிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் தெரியுமா. இன்றுதான் மனம் வந்திருகிறது இவனுக்கு…” என்றவர் மருந்துக்கும் அவன் முகம் பாராது, லட்சனாவை அன்போடு அணைத்துக்கொண்டார்.
“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா .
சாலையில் இருந்த இருக்கையிலேயே அவன் நெஞ்சில் சாய்ந்து அழத்தொடங்கி விட்டவளை, காருக்குள் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் அவன் பெரும்பாடு பட்டுவிட்டான்.
அவன் கோபம் கூட மறைந்திருந்தது. அந்தளவுக்கு அழுதுகொண்டிருந்தாள் லட்சனா:அன்று கொழும்பில் ஜெயன் வீட்டில், பெற்றவர்களின் படங்களைப் பார்த்துவிட்டுக் கதறியவள் மீண்டும் கதறுவது இன்றுதான்.
இதுநாள் வரை மனதை அழுத்திக்கொண்டிருந்த வேதனைகளை, வலிகளை, வெறுமையை அவனிடம் வாய்விட்டுச் சொன்னதாலோ என்னவோ, அவள் அழுகை நிற்கமாட்டேன் என்றது.
சூர்யாவுக்கு அவளை எப்படித் தேற்றுவது என்றே தெரியவில்லை.
சுலக்சனாவின் பெற்றோர்களும் அண்ணாவும் இறந்துவிட்டதாகவும், தங்கை மட்டுமே தப்பியதாகவும், மூன்று வருடங்களுக்கு முதல் அவனும் கேள்விப் பட்டான் தான். அன்று ‘அடப் பாவமே’ என்று பரிதாபத்தோடு மறந்துவிட்ட விஷயம், இன்று அது தன் காதலியின் குடும்பம் என்று அறிந்தபோது வேதனையாகத்தான் இருந்தது.
அதுவும் நடந்து மூன்று வருடங்கலானபோதும், இன்றும் அவள் படும் இந்தப் பாட்டைப் பார்க்கையில் மனதைப் பிசைந்தது. ஆனால், அதற்காக அழுதுகொண்டே இருந்தால் நடந்தவை மாறிவிடுமா என்ன?!
“லட்டு, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து.” என்றவனின் பேச்சைக் கேட்காது தொடர்ந்து அழுதவளிடம்; “சொல்வதைக் கேட்கமாட்டாயா!” என்றான் அதட்டலாக.
அவன் அதட்டியத்தில் கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு, திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்து விழித்தாள். அந்தப் பார்வை மனதைத் தாக்கவே, “ப்ச்! லட்டு, என்ன இது?! கண்ணைத்துடை.” என்றவன், தானே ‘டிஷ்யு’ வினால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டான்.
“இன்றும் நடந்தது கண்முன்னால் நிற்கிறது சூர்யா. அந்த விபத்து ஏன் நடந்தது? அம்மா, அப்பா, அண்ணா உடல்கள் என்ன ஆனது. அவற்றைப் பார்க்காததாலேயே, அவர்கள் எங்காவது உயிரோடு இருந்துவிட மாட்டார்களா என்று உள்ளம் கிடந்தது தவிக்கிறது. இறந்துவிட்டார்கள் என்று தெரியும். ஆனாலும்...” அதற்கு மேலும் சொல்ல முடியாமல் அவள் கேவ, “இந்தப் பேச்சுப் போதும் லட்டு. அதையே திரும்பத் திரும்பக் கதைத்து உன்னையே நீ வருத்தி என்ன காணப்போகிறாய்..?” என்றான் சூர்யா கண்டிப்பும் கனிவுமாக.
“அவர்களோடு சந்தோசமாக இருந்த நாட்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்துப்பார். மனதுக்கு ஆறுதலாக இருக்கும். கஷ்டமாக இருந்தாலும், சிலவற்றை மறக்கவும் ஒதுக்கவும் பழகவேண்டும்..” என்று தொடர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினான்.
“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டவளும் அவன் கைகளுக்குள் புகுந்து, வாகாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். மனம் இலகுவாக இருந்தது. இதுவரை சுமந்த சுமைகளை இறக்கி வைத்ததுபோல், மூச்சடைத்துக் கிடந்தவளுக்கு மூச்சுச் சீரானதுபோல் ஒரு உணர்வு.
இருவருமே சற்றுநேரம் அமைதியாக இருந்தார்கள். அவன் கை அவள் முதுகைத் தடவிக்கொடுக்க மட்டும் மறக்கவில்லை.
தன் தோளில் சாய்ந்திருந்தவளின் முகத்தைக் குனிந்து பார்த்தான் சூர்யா. அவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் அவனைப் பார்க்க, “ஜெயனிடம் நீ நம்மைப் பற்றிச் சொல்லிவிட்டாயா..?” என்று கேட்டான்.
லேசாக முகம் கன்ற இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள்.
“ஏன்?”
“அது.. ஏனோ சொல்ல முடியவில்லை.”
“அது தப்பில்லையா லட்டு. அவனுக்கு உன்னை நிச்சயித்திருக்கிறார்கள். நீயும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாய். அப்படி இருக்கையில் என்னை நீ காதலித்ததே தப்பு. சரி, காதல் தான் நம்மை அறியாமல் வந்துவிட்டது என்றால், அதை நீ உடனடியாக அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமா? அவனைப் பற்றி எப்படி யோசிக்காமல் இருந்தாய்..?” நேரடியாக எதையும் கதைத்துப் பழகியவன், அவளிடம் நேராகவே கேட்டான்.
அவள் முகமோ அவன் பேச்சில் சுண்டிப்போனது. தான் செய்வது பிழை என்று தெரிந்தாலும், அதை இன்னொருவர் வாயால் அதுவும் சூர்யாவின் வாயால் கேட்கையில் பெரும் பிழையாகத் தோன்றியது.
“அது.. நான் இங்கு வந்த புதிதில் அவர் என்னோடு தொலைபேசியில் கதைக்க முயன்றார். நான் இரண்டு மூன்று தடவைகள் தவிர்த்துவிட்டதில், பிறகு அவரும் கதைப்பதில்லை. அதனால் சொல்லமுடியவில்லை..”
“அவர் கதைக்கவில்லை என்றால் என்ன, நீயாக அழைத்துச் சொல்லியிருக்க வேண்டாமா? இதெல்லாம் ஒரு காரணமா?” என்று அவள் பேச்சை இடைமறித்துக் கதைத்தவனின் குரலில் கண்டனம் இருந்தது.
“எனக்கு.. எனக்கு அவரிடம் சொல்ல ஒருமாதிரி.. தயக்கமாக இருந்தது..” என்றாள் மெல்லிய குரலில்.
“என்ன தயக்கம்? எதுக்குத் தயக்கம்? அவனும் மனிதன் தானே. உன் நிலைமையைச் சொன்னால் புரிந்துகொண்டிருப்பான். அல்லது நீ புரியவைத்திருக்கலாம். இரண்டையும் நீ செய்யவில்லை. அவன் உன்னைத் தன் வருங்கால மனைவியாக நினைத்துக் கொண்டிருப்பான். அப்படியான ஒருவனை நீ ஏமாற்றுவது போல் இருக்கிறது!” என்றவனின் குரலில் கோபம் இருந்ததோ?! தன்னவளை ஒருவன் மனதில் நினைத்திருக்கிறான் என்பது பிடிக்கவில்லையா அல்லது தன் காதலி செய்வது பிழை என்று நினைத்தானா, ஏதோ ஒன்று அவன் குரல் இறுக்கமாக இருந்தது.
“அவர் வந்ததும் சொல்லலாம் என்று நினைத்தேன்..” என்று முணுமுணுத்தாள் லட்சனா.
“அதுவரை..?” அவன் புருவங்கள் சுருங்கக் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தலையைக் குனிந்துகொண்டாள்.
“சொல்லு?” அவன் மீண்டும் கேட்க, “என்னால் அவரோடு இலகுவாகவே கதைக்கமுடியவில்லை சூர்யா. அதனால்தான் தொலைபேசியில் கதைப்பதையும் தவிர்த்தேன். நம்மைப்பற்றி அக்கா அத்தானிடம் சொல்லாமல் அவரிடம் சொன்னால், அது எப்படியும் சுற்றிச் சுழன்று எல்லோருக்கும் தெரிய வந்துவிடும். அதோடு எனக்கு.. அவரிடம் எப்படிச் சொல்வது என்று.. அதுவேறு தயக்கம். அதுதான் அவர் வரட்டும் என்று இருக்கிறேன்…” என்று தன்னிலையை அவனுக்கு உணர்த்த முயன்றாள்.
“தயக்கமாக இருக்கிறது, ஒருமாதிரி இருக்கிறது.. இதெல்லாம் என்ன லட்டு. உன் தயக்கத்துக்கு ஒருவனின் மனதைப் பலியாக்காதே!” என்றான் கண்டிப்பான குரலில் கடினமாக.
அந்தக் கடினத்தில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்த்தது அவள் கண்களில்.
“முதலில் இப்படி எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து. அடுத்ததாக எல்லாவற்றிற்கும் தயங்குவதை நிறுத்து. எதையும் பிறகு பிறகு என்று தள்ளிப் போடுவது. பிறகு தவறு செய்துவிட்டுக் கண் கலங்குவது. இதெல்லாம் சரியில்லை.” என்று அவள் தவறுகளை அவளுக்குச் சுட்டியவன், “சரி, உனக்குத்தான் சொல்லமுடியவில்லை. அவன் நம்பரைத் தா, நான் சொல்கிறேன் அவனிடம் நம்மைப் பற்றி..” என்றான்.
“இல்லையில்லை… வேண்டாம்…” என்று அதற்கும் அவசரமாக மறுத்தாள் அவள்.
“ஏன் வேண்டாம்..?” இறுகிய குரலில் அவன் கேட்க, “அது… நானே சொல்வதுதான் முறை….” என்று இழுத்தாள் அவள்.
“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை.
அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்கு முதலில் அவள் தன்னைத் தானே தயார் செய்யவேண்டும். இவனோ திடீர் என்று சொல் என்கிறான். அவளால் அது முடியவில்லை.
அதோடு அவள் செய்வது தவறு என்று அவளுக்குமே புரிந்ததில், ஜெயனிடம் நேரடியாகவே சொல்லி மன்னிப்புக் கேட்கவே அவள் மனம் விரும்பியது.
“சூர்யா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்கள். அவசரப் படவேண்டாம். முதலில் அக்காவிடம் சொல்லிவிட்டு, ஜெயனிடம் நேரவே சொல்கிறேனே. அதுதான் முறை சூர்யா..” என்றாள் கெஞ்சலாக.
“ப்ச்! என்ன நீ…” என்று சலித்தவன், “என்னவாவது செய். ஆனால் நீ செய்வது தவறு.” என்றான் அழுத்தமான குரலில். அவள் முகம் அதைக் கேட்டுக் கூம்பியது.
அதற்கு மேல் அதைப்பற்றி அவன் பேசவில்லை. இனி அது அவள் பொறுப்பு என்று நினைத்தவன், காரைக் கிளப்பினான்.
காரைக் கொண்டு சென்று நிறுத்திய இடம், அவன் தாத்தா பாட்டியின் வீடு.
யோசனையில் இருந்தவள் கார் சென்ற பாதையைக் கவனிக்கவில்லை. அவன் நிறுத்தியதுமே, இடத்தை இனங்கண்டு, “அச்சோ சூர்யா. இங்கு எதற்கு வந்தீர்கள்? நான் வேறு அழுது வீங்கிய முகத்தோடு இருக்கிறேன்.. அக்காவுக்கு தெரிந்தால் அதுவேறு பிரச்சினை..” என்று படபடத்தவளிடம், எதுவும் சொல்லாது காரைவிட்டு இறங்கினான் அவன்.
அவள் இருந்த பக்கமாக வந்து, கதவைத் திறந்து, “இறங்கு..” என்றான்.
“என்ன சூர்யா இது..?”
“அழுதாலும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் அக்காவுக்கு நீ இங்கு வந்தது தெரியவராது. அதனால் இறங்கு..” என்றவன், அவள் கையைப் பிடித்து இறக்கி அவளோடு சேர்ந்தே நடந்தான்.
பெரியவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக இருக்க, கையை அவனிடமிருந்து உருவப் பார்த்தாள் அவள்.
அதை உணர்ந்து, “பேசாமல் வா. இல்லையானால் தூக்கிக்கொண்டு போவேன்..” என்றான் அவன். படக்கென்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனாள் சனா.
பின்னே, அவன் என்றும் எதையும் பேச்சுக்காகச் சொன்னதே இல்லையே. சொன்னதுபோல் அவளைத் தூக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது. அதற்கு இப்படிக் கையைப் பிடித்துக்கொண்டு போவது எவ்வளவோ மேல் அல்லவா!
சோபாவில் இலகுவாக அமர்ந்து, சாக்ஸ் பின்னிக்கொண்டிருந்த பாட்டி உள்ளே வந்தவர்களைக் கண்டதும், முதலில் யோசனையாகப் பார்த்தார். பின்னர் முகம் மலர எழுந்து வந்தார்.
“வாம்மா லச்சு.. வாவா. உன்னைக் கூட்டிக்கொண்டு வா என்று இவனிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் தெரியுமா. இன்றுதான் மனம் வந்திருகிறது இவனுக்கு…” என்றவர் மருந்துக்கும் அவன் முகம் பாராது, லட்சனாவை அன்போடு அணைத்துக்கொண்டார்.