அத்தியாயம்-5
அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்!
“என்னைக் கூப்பிட வந்துவிட்டு இங்கே என்ன செய்கிறீர்கள் சித்தி..?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டாள் சைந்தவி.
அவளிடம் அசைவே இல்லை.
“சித்தீ..!!”
“ஆ..?” மலங்க விழித்தவள், அக்கா மகளைக் கண்டதும் சுற்றுமுற்றும் விழிகளைச் சுழற்றி நிற்கும் இடத்தை இனங்காண முயன்றாள்.
“என்ன சித்தி.. எங்கே பார்க்கிறீர்கள்..?” என்று கேட்ட அந்தச் சின்னப்பெண்ணிடம் என்னவென்று சொல்வாள்.?! எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.
“ஏன் சித்தி இங்கேயே நின்றுவிட்டீர்கள்? நான் உங்களைக் காணவில்லை என்று தேடினேன் தெரியுமா..? பிறகு செலின் தான் வந்து சொன்னாள், அவளின் அப்பா உங்களை இங்கே கண்டதாக..”
“அது… தெரிந்த ஒருவரை இங்கே கண்டேன். கதைத்துக்கொண்டு நின்றதில் நேரத்தைக் கவனிக்க மறந்துபோனேன்.” என்றவளுக்கு, இப்போதுதான் ஓரளவுக்குப் பேச்சு வந்தது.
சைந்தவி மீண்டும் வாயைத் திறக்க, “வா வா, நேரம் போகிறது. நாம் இன்று உடையெடுக்க டோர்ட்முண்ட் போகவேண்டுமே…”என்று அவளின் எண்ணப்போக்கைத் திசை திருப்பினாள் சனா.
பின்னே, யாரைக் கண்டு கதைத்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது?
உடைகள் என்றதும் எல்லாக் குழந்தைகள் போல சைந்துவும் என் உடை அப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும் என்று வாய் ஓயாமல் சலசலத்தபடி வந்தாள்.
அவளின் பேச்சுக்கு காதுகொடுக்காமலேயே எல்லாவற்றுக்கும் ஒரு ‘ம்..’ஐக் கொட்டிக்கொண்டு வந்தாள் சனா.
நெஞ்சப் படபடப்பு அடங்க மறுத்தது. கைகால்களில் மெல்லிய உதறல். கண் பார்வை கூட மங்கிவிட்டது போல் இருந்தது. அவன் பதித்த முத்தம் அவளின் பெண்மைக்குள் அத்துமீறி நுழைந்ததில், உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் பெரும் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தது அவளுக்கு!
சத்தமில்லாமல் ஒரு முத்தத்தைப் பதித்து அவளைச் சலனப்படுத்திவிட்டானே!
உள்ளத்தில் பெரும் பிரளயமே நடக்க, வேலை நிறுத்தம் செய்துவிட்ட மூளையால் எதையும் சிந்திக்கமுடியாமல் வீட்டை அடைந்தவளை வித்தியாசமாகப் பார்த்தாள் சுலோ.
அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவளிடம், “என்ன சனா.. ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்..?” என்று கேட்டாள்.
“ஒ.. ஒன்றுமில்லையே அக்கா..” என்றாள் முகத்தை வேறுபுறம் திருப்பி. பதட்டத்தில் வியர்த்து வழிந்தது அவளுக்கு.
“இல்லையே… ஏதோ..” என்ற தமக்கையைப் பேசவிடாமல், “அது.. அதக்கா வெளியே நல்ல வெய்யில்.. அதுதான்…” என்றாள் விழுந்தடித்துக்கொண்டு.
ஏன் இப்படித் தடுமாறுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது, “குளித்து, உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
‘வெய்யிலில் நடந்ததில் களைத்துவிட்டாள் போல…’ என்று ஓடிய சுலோவின் சிந்தனையை, “பசிக்குதும்மா…” என்றபடி வந்த சைந்தவி கலைத்தாள்.
அதற்கு மேல் சுலோ அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. மகளைக் கவனித்து, மதிய உணவைப் பார்த்து, வெளியே செல்வதற்கு தயாராகுவது என்று அவளின் நேரம் ஓடியது.
காரில் சிவபாலனும் சுலோவும் முன்பக்கம் அமர்ந்துகொள்ள, சைந்துவோடு பின்பக்கம் அமர்ந்திருந்தாள் சனா. வேக வீதியில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது அவர்களின் கார்.
எப்போதுமே இப்படியான தூரப்பயணங்கள் சனாவுக்கு மிகவும் பிடிக்கும். போக நான்கு பாதைகள் வர நான்கு பாதைகள் என்று அமைக்கப்பட்ட அதிவேக வீதியில், காற்றாய்ப் பறக்கும் வாகனங்களைப் பார்வையிட்டபடி, வேகமாய் நகரும் மலைகளை ரசித்தபடி செல்வது அவளுக்கு விருப்பமான ஒன்று!
காரின் ஒருபக்கக் கதவில் சாய்ந்து, வெளியே பார்வையை பதித்திருந்தவளின் விழிகளில் இன்று அவை எதுவுமே படவில்லை. அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறியிருந்த அவள் உள்ளம் இப்போது இனிமையாய் படபடத்துக் கொண்டிருந்தது.
முகமோ மல்லிகைப்பூவாய் மலர்ந்திருக்க, செவ்விதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, கண்களோ கனவில் மிதந்தது. ரிதமாய்த் துடித்த இதயத்திற்குள் மதியம் நடந்த நிகழ்வுகளே மையம் கொண்டிருந்தது.
அவனைக் கட்டிக்கொண்டு பயணம் செய்கையில் அனுபவித்த அவன் உடலின் கதகதப்பு, அவளின் உயிர்மூச்சுக்குள் நுழைந்துவிட்ட அவன் வாசனை, அவள் கைகளைப் பற்றியவனின் வலிமை, அவளைப் பார்க்கையில் அவன் விழிகளில் தோன்றும் ரசனை, கடைசியாக அவளை இழுத்தணைத்து அவன் பதித்த இதழ் முத்தம்!
அதை நினைத்ததும் அவள் கன்னங்கள் தன்னாலே சிவந்தது. உள்ளத்தின் இனம்புரியா தவிப்பைத் தாங்கமுடியாது கீழுதட்டைப் பற்கள் பற்ற, அதிலே அவன் இதழ்களின் சுவை இன்னும் மிச்சமிருப்பதாய்த் தோன்ற சட்டென்று பற்றிய இதழ்களை விட்டுவிட்டாள். கண்களோ நாணம் தாங்காது தாழ்ந்துபோனது.
அவள் உள்ளம் உணர்வுகளின் ஆக்கிரமிப்பில் தள்ளாடியது. மனம் ஏனோ மயங்கியது!
கோபம் வரவேண்டிய ஒரு செயலை உள்ளம் ரசிக்கிறதே! அவனைத் திட்டமறந்து மனம் தித்திக்குதே! வெறுத்தொதுக்க வேண்டியவனை மறுபடியும் காணமாட்டோமா என்று கண்கள் அலைபாய்கிறதே! இத்தனை மாற்றங்களும் எதற்காக?
அழையா விருந்தாளியாய் உள்ளத்தில் நுழைந்துவிட்டவனின் நினைவுகளை ஒதுக்கமுடியாமல் திணறினாள். ஆனால் அந்தத் திணறல் கூடப் பிடித்திருந்தது. இப்படியே அவன் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி விடமாட்டோமா என்றிருந்தது.
அவளின் அன்றைய தினத்தின் மிகுதி, புதுவித உணர்வுகளின் தாக்கத்தோடே கழிந்தது.
அடுத்தடுத்த நாட்களை அவனைக் காணமாட்டோமா, அவன் அழைக்கமாட்டானா என்கிற எதிர்பார்ப்போடேயே கழித்தாள். வீதியில் நடக்கையில் அவன் எங்காவது தென்படுகிறானா என்று விழிகளால் தேடினாள்.
அவனுக்கு நாமே அழைப்போமா என்று கைபேசியை எடுப்பதும், அழைத்தால் அவன் ஏதும் நினைப்பானோ என்று அந்த எண்ணத்தைக் கைவிடுவதும் என்று அவளின் கனவுகள் முதல் நினைவுகள் வரை அனைத்திலும் அவனே நிறைந்திருந்தான்.
ஏன் இப்படி அவனையே நினைக்கிறோம் என்கிற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவனுடன் பேசுவதை, பழகுவதை தவிர்ப்போமா என்கிற கேள்வி தோன்றவே இல்லை!
இப்படியே அந்த வாரம் ஓடிப்போக, அன்று சனிக்கிழமை. பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதற்காக சிவபாலன் வீட்டில் எல்லோரும் தயாரிக்கொண்டு இருந்தார்கள்.
தலைக்குக் குளித்து, அரைவாசி முடியை கிளிப்பில் அடக்கி, தளரப்பின்னிய கூந்தல் இடை தாண்டி நிற்க, ஆகாயநீலக் கரைகொண்ட மாம்பழ வண்ணச்சேலையில் அழகிய மங்கையாகத் தயாராகி வந்தாள் சனா.
“அடடா சனா.. மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னைப் பார்க்கவேண்டியவர்கள் பார்த்தால் அப்படியே உன் காலடியில் சரணடைந்து விடுவார்கள்…” என்றார் சிவபாலன்.
அவர் யாரை மனதில் நினைத்துச் சொன்னாரோ தெரியாது. அவர் அப்படிச் சொன்னதும் சனாவின் மனதில் மின்னிய உருவம் சூர்யாவினுடையது.
“ஆமாம் சனா.. உனக்கு இந்தச் சேலை மிகவும் நன்றாக இருக்கிறது..” என்றாள் சுலோவும் மகிழ்ச்சியோடு.
“சித்தி, நீங்கள் மிகவும் வடிவாக(அழகாக) இருக்கிறீர்கள்..” என்றாள் சைந்து அவளின் காலைக் கட்டிக்கொண்டு.
அவர்களின் பாராட்டுக்கு வெட்கத்தோடு புன்னகைத்தவளின் உள்மனது
விழாவுக்கு சூர்யாவும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தது.
விழா நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்ததுமே சிவபாலனின் நண்பர்கள் அவரைப் பிடித்துக்கொள்ள, பெண்கள் மூவரும் நான்கு கதிரைகள் கொண்ட வட்ட மேசையருகில் சென்று அமர்ந்துகொண்டனர். இவர்களைக் கண்டதும் சுலோவின் வயதை ஒத்தவர்கள் வந்து சேரவே அங்கே பெண்களுக்கே உரித்தான சலசலப்புத் தொடங்கியது.
அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்!
“என்னைக் கூப்பிட வந்துவிட்டு இங்கே என்ன செய்கிறீர்கள் சித்தி..?” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டாள் சைந்தவி.
அவளிடம் அசைவே இல்லை.
“சித்தீ..!!”
“ஆ..?” மலங்க விழித்தவள், அக்கா மகளைக் கண்டதும் சுற்றுமுற்றும் விழிகளைச் சுழற்றி நிற்கும் இடத்தை இனங்காண முயன்றாள்.
“என்ன சித்தி.. எங்கே பார்க்கிறீர்கள்..?” என்று கேட்ட அந்தச் சின்னப்பெண்ணிடம் என்னவென்று சொல்வாள்.?! எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.
“ஏன் சித்தி இங்கேயே நின்றுவிட்டீர்கள்? நான் உங்களைக் காணவில்லை என்று தேடினேன் தெரியுமா..? பிறகு செலின் தான் வந்து சொன்னாள், அவளின் அப்பா உங்களை இங்கே கண்டதாக..”
“அது… தெரிந்த ஒருவரை இங்கே கண்டேன். கதைத்துக்கொண்டு நின்றதில் நேரத்தைக் கவனிக்க மறந்துபோனேன்.” என்றவளுக்கு, இப்போதுதான் ஓரளவுக்குப் பேச்சு வந்தது.
சைந்தவி மீண்டும் வாயைத் திறக்க, “வா வா, நேரம் போகிறது. நாம் இன்று உடையெடுக்க டோர்ட்முண்ட் போகவேண்டுமே…”என்று அவளின் எண்ணப்போக்கைத் திசை திருப்பினாள் சனா.
பின்னே, யாரைக் கண்டு கதைத்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது?
உடைகள் என்றதும் எல்லாக் குழந்தைகள் போல சைந்துவும் என் உடை அப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும் என்று வாய் ஓயாமல் சலசலத்தபடி வந்தாள்.
அவளின் பேச்சுக்கு காதுகொடுக்காமலேயே எல்லாவற்றுக்கும் ஒரு ‘ம்..’ஐக் கொட்டிக்கொண்டு வந்தாள் சனா.
நெஞ்சப் படபடப்பு அடங்க மறுத்தது. கைகால்களில் மெல்லிய உதறல். கண் பார்வை கூட மங்கிவிட்டது போல் இருந்தது. அவன் பதித்த முத்தம் அவளின் பெண்மைக்குள் அத்துமீறி நுழைந்ததில், உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் பெரும் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தது அவளுக்கு!
சத்தமில்லாமல் ஒரு முத்தத்தைப் பதித்து அவளைச் சலனப்படுத்திவிட்டானே!
உள்ளத்தில் பெரும் பிரளயமே நடக்க, வேலை நிறுத்தம் செய்துவிட்ட மூளையால் எதையும் சிந்திக்கமுடியாமல் வீட்டை அடைந்தவளை வித்தியாசமாகப் பார்த்தாள் சுலோ.
அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவளிடம், “என்ன சனா.. ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்..?” என்று கேட்டாள்.
“ஒ.. ஒன்றுமில்லையே அக்கா..” என்றாள் முகத்தை வேறுபுறம் திருப்பி. பதட்டத்தில் வியர்த்து வழிந்தது அவளுக்கு.
“இல்லையே… ஏதோ..” என்ற தமக்கையைப் பேசவிடாமல், “அது.. அதக்கா வெளியே நல்ல வெய்யில்.. அதுதான்…” என்றாள் விழுந்தடித்துக்கொண்டு.
ஏன் இப்படித் தடுமாறுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது, “குளித்து, உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
‘வெய்யிலில் நடந்ததில் களைத்துவிட்டாள் போல…’ என்று ஓடிய சுலோவின் சிந்தனையை, “பசிக்குதும்மா…” என்றபடி வந்த சைந்தவி கலைத்தாள்.
அதற்கு மேல் சுலோ அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை. மகளைக் கவனித்து, மதிய உணவைப் பார்த்து, வெளியே செல்வதற்கு தயாராகுவது என்று அவளின் நேரம் ஓடியது.
காரில் சிவபாலனும் சுலோவும் முன்பக்கம் அமர்ந்துகொள்ள, சைந்துவோடு பின்பக்கம் அமர்ந்திருந்தாள் சனா. வேக வீதியில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது அவர்களின் கார்.
எப்போதுமே இப்படியான தூரப்பயணங்கள் சனாவுக்கு மிகவும் பிடிக்கும். போக நான்கு பாதைகள் வர நான்கு பாதைகள் என்று அமைக்கப்பட்ட அதிவேக வீதியில், காற்றாய்ப் பறக்கும் வாகனங்களைப் பார்வையிட்டபடி, வேகமாய் நகரும் மலைகளை ரசித்தபடி செல்வது அவளுக்கு விருப்பமான ஒன்று!
காரின் ஒருபக்கக் கதவில் சாய்ந்து, வெளியே பார்வையை பதித்திருந்தவளின் விழிகளில் இன்று அவை எதுவுமே படவில்லை. அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறியிருந்த அவள் உள்ளம் இப்போது இனிமையாய் படபடத்துக் கொண்டிருந்தது.
முகமோ மல்லிகைப்பூவாய் மலர்ந்திருக்க, செவ்விதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, கண்களோ கனவில் மிதந்தது. ரிதமாய்த் துடித்த இதயத்திற்குள் மதியம் நடந்த நிகழ்வுகளே மையம் கொண்டிருந்தது.
அவனைக் கட்டிக்கொண்டு பயணம் செய்கையில் அனுபவித்த அவன் உடலின் கதகதப்பு, அவளின் உயிர்மூச்சுக்குள் நுழைந்துவிட்ட அவன் வாசனை, அவள் கைகளைப் பற்றியவனின் வலிமை, அவளைப் பார்க்கையில் அவன் விழிகளில் தோன்றும் ரசனை, கடைசியாக அவளை இழுத்தணைத்து அவன் பதித்த இதழ் முத்தம்!
அதை நினைத்ததும் அவள் கன்னங்கள் தன்னாலே சிவந்தது. உள்ளத்தின் இனம்புரியா தவிப்பைத் தாங்கமுடியாது கீழுதட்டைப் பற்கள் பற்ற, அதிலே அவன் இதழ்களின் சுவை இன்னும் மிச்சமிருப்பதாய்த் தோன்ற சட்டென்று பற்றிய இதழ்களை விட்டுவிட்டாள். கண்களோ நாணம் தாங்காது தாழ்ந்துபோனது.
அவள் உள்ளம் உணர்வுகளின் ஆக்கிரமிப்பில் தள்ளாடியது. மனம் ஏனோ மயங்கியது!
கோபம் வரவேண்டிய ஒரு செயலை உள்ளம் ரசிக்கிறதே! அவனைத் திட்டமறந்து மனம் தித்திக்குதே! வெறுத்தொதுக்க வேண்டியவனை மறுபடியும் காணமாட்டோமா என்று கண்கள் அலைபாய்கிறதே! இத்தனை மாற்றங்களும் எதற்காக?
அழையா விருந்தாளியாய் உள்ளத்தில் நுழைந்துவிட்டவனின் நினைவுகளை ஒதுக்கமுடியாமல் திணறினாள். ஆனால் அந்தத் திணறல் கூடப் பிடித்திருந்தது. இப்படியே அவன் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கி விடமாட்டோமா என்றிருந்தது.
அவளின் அன்றைய தினத்தின் மிகுதி, புதுவித உணர்வுகளின் தாக்கத்தோடே கழிந்தது.
அடுத்தடுத்த நாட்களை அவனைக் காணமாட்டோமா, அவன் அழைக்கமாட்டானா என்கிற எதிர்பார்ப்போடேயே கழித்தாள். வீதியில் நடக்கையில் அவன் எங்காவது தென்படுகிறானா என்று விழிகளால் தேடினாள்.
அவனுக்கு நாமே அழைப்போமா என்று கைபேசியை எடுப்பதும், அழைத்தால் அவன் ஏதும் நினைப்பானோ என்று அந்த எண்ணத்தைக் கைவிடுவதும் என்று அவளின் கனவுகள் முதல் நினைவுகள் வரை அனைத்திலும் அவனே நிறைந்திருந்தான்.
ஏன் இப்படி அவனையே நினைக்கிறோம் என்கிற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவனுடன் பேசுவதை, பழகுவதை தவிர்ப்போமா என்கிற கேள்வி தோன்றவே இல்லை!
இப்படியே அந்த வாரம் ஓடிப்போக, அன்று சனிக்கிழமை. பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதற்காக சிவபாலன் வீட்டில் எல்லோரும் தயாரிக்கொண்டு இருந்தார்கள்.
தலைக்குக் குளித்து, அரைவாசி முடியை கிளிப்பில் அடக்கி, தளரப்பின்னிய கூந்தல் இடை தாண்டி நிற்க, ஆகாயநீலக் கரைகொண்ட மாம்பழ வண்ணச்சேலையில் அழகிய மங்கையாகத் தயாராகி வந்தாள் சனா.
“அடடா சனா.. மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னைப் பார்க்கவேண்டியவர்கள் பார்த்தால் அப்படியே உன் காலடியில் சரணடைந்து விடுவார்கள்…” என்றார் சிவபாலன்.
அவர் யாரை மனதில் நினைத்துச் சொன்னாரோ தெரியாது. அவர் அப்படிச் சொன்னதும் சனாவின் மனதில் மின்னிய உருவம் சூர்யாவினுடையது.
“ஆமாம் சனா.. உனக்கு இந்தச் சேலை மிகவும் நன்றாக இருக்கிறது..” என்றாள் சுலோவும் மகிழ்ச்சியோடு.
“சித்தி, நீங்கள் மிகவும் வடிவாக(அழகாக) இருக்கிறீர்கள்..” என்றாள் சைந்து அவளின் காலைக் கட்டிக்கொண்டு.
அவர்களின் பாராட்டுக்கு வெட்கத்தோடு புன்னகைத்தவளின் உள்மனது
விழாவுக்கு சூர்யாவும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தது.
விழா நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்ததுமே சிவபாலனின் நண்பர்கள் அவரைப் பிடித்துக்கொள்ள, பெண்கள் மூவரும் நான்கு கதிரைகள் கொண்ட வட்ட மேசையருகில் சென்று அமர்ந்துகொண்டனர். இவர்களைக் கண்டதும் சுலோவின் வயதை ஒத்தவர்கள் வந்து சேரவே அங்கே பெண்களுக்கே உரித்தான சலசலப்புத் தொடங்கியது.