என்னவளே!
முடிந்தால் என்னை மன்னித்து விடு
உன் மீது காதல்கொண்டது நிஜம்
உனக்கும் எனக்குமான
கல்யாணக் கனவுகளை
கற்பனையில் கண்டது நிஜம்.
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்
உன் ஜீவ அணுக்கள்
கலந்திருப்பதாக சொன்னது நிஜம்.
நீ ராகமானால் நான் தாளமாகி
உன் வாழ்க்கையை ஸ்பரிசிப்பேன்
எனச்சொன்னதும் நிஜம்- ஆனால்
எனக்கான கனவுகளைக் காணக்கூட
அருகதையற்றவன் நான் என்பதை
எப்படி உனக்குப் புரியவைப்பேன்.
அப்பா என்ற வார்த்தைக்கு
அடையாளமாய் மட்டுமே இருக்கும்
என் தந்தை,
சமையலறையைத்தவிர
வேறெதைப்பற்றியும்
சிந்திக்கத்தெரியாத என் தாய்,
எப்படியும் அண்ணன்
மணமேடையில்
அமரவைத்துவிடுவான் என
ஆதங்கத்தோடு காத்திருக்கும்
என் இரு தங்கைகள்,
அப்பா செய்யத்தவறியதை
அண்ணன் செய்துவிடுவான் என
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
என் அருமைத் தம்பி
இத்தனையையும் விட்டுவிட்டு
எப்படி உன் கரம்
பற்றிக்கொள்வேன்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.
குடும்பத்திற்காய் நான்
சுமக்க வேண்டிய சிலுவையை
யாரிடம் கொடுத்துவிடமுடியும்.
எனக்கான சிலுவையை
நான் தானே சுமக்க முடியும்.
என் உயிரானவளே!
நான் உன் நெற்றியில்
திலகமிடும்போது
கடல் ஆர்ப்பரிக்கும்,
வானம் பூத்தூவும்,
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும்,
என்றெல்லாம் சொன்னவன் நான்தான்.
என்னை மன்னித்துவிடு,
முடிந்தால் மறந்துவிடு.
என் வாரிசை நீ சுமக்கும்
ஈரைந்து மாதத்தில்
நான் ஐந்து மாதம் சுமப்பேன்
எனக்கூறியவன் நான் தான்.
என் உள்ளங்கைக்குள் ஓவியமாய்
உன்னை ஒளித்துவைப்பேன்
என்றவனும் நான் தான்.
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா காலமென்று
நித்தம் நித்தம் உன்னிடம்
உரைத்தவனும் நான் தான்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.
என்னவளே!
ஓடமுடியாத
ஒற்றைச்சக்கரம் நான்.
ஓசை எழுப்பமுடியாத
புல்லாங்குழல் நான்.
புரிந்துகொள், பிரிந்துவிடுவோம்,
மீண்டும் கேட்கிறேன்,
மன்னித்துவிடு,
முடிந்தால்
மறந்துவிடு என்னவளே!
* கோபிகை
முடிந்தால் என்னை மன்னித்து விடு
உன் மீது காதல்கொண்டது நிஜம்
உனக்கும் எனக்குமான
கல்யாணக் கனவுகளை
கற்பனையில் கண்டது நிஜம்.
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்
உன் ஜீவ அணுக்கள்
கலந்திருப்பதாக சொன்னது நிஜம்.
நீ ராகமானால் நான் தாளமாகி
உன் வாழ்க்கையை ஸ்பரிசிப்பேன்
எனச்சொன்னதும் நிஜம்- ஆனால்
எனக்கான கனவுகளைக் காணக்கூட
அருகதையற்றவன் நான் என்பதை
எப்படி உனக்குப் புரியவைப்பேன்.
அப்பா என்ற வார்த்தைக்கு
அடையாளமாய் மட்டுமே இருக்கும்
என் தந்தை,
சமையலறையைத்தவிர
வேறெதைப்பற்றியும்
சிந்திக்கத்தெரியாத என் தாய்,
எப்படியும் அண்ணன்
மணமேடையில்
அமரவைத்துவிடுவான் என
ஆதங்கத்தோடு காத்திருக்கும்
என் இரு தங்கைகள்,
அப்பா செய்யத்தவறியதை
அண்ணன் செய்துவிடுவான் என
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
என் அருமைத் தம்பி
இத்தனையையும் விட்டுவிட்டு
எப்படி உன் கரம்
பற்றிக்கொள்வேன்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.
குடும்பத்திற்காய் நான்
சுமக்க வேண்டிய சிலுவையை
யாரிடம் கொடுத்துவிடமுடியும்.
எனக்கான சிலுவையை
நான் தானே சுமக்க முடியும்.
என் உயிரானவளே!
நான் உன் நெற்றியில்
திலகமிடும்போது
கடல் ஆர்ப்பரிக்கும்,
வானம் பூத்தூவும்,
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும்,
என்றெல்லாம் சொன்னவன் நான்தான்.
என்னை மன்னித்துவிடு,
முடிந்தால் மறந்துவிடு.
என் வாரிசை நீ சுமக்கும்
ஈரைந்து மாதத்தில்
நான் ஐந்து மாதம் சுமப்பேன்
எனக்கூறியவன் நான் தான்.
என் உள்ளங்கைக்குள் ஓவியமாய்
உன்னை ஒளித்துவைப்பேன்
என்றவனும் நான் தான்.
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா காலமென்று
நித்தம் நித்தம் உன்னிடம்
உரைத்தவனும் நான் தான்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.
என்னவளே!
ஓடமுடியாத
ஒற்றைச்சக்கரம் நான்.
ஓசை எழுப்பமுடியாத
புல்லாங்குழல் நான்.
புரிந்துகொள், பிரிந்துவிடுவோம்,
மீண்டும் கேட்கிறேன்,
மன்னித்துவிடு,
முடிந்தால்
மறந்துவிடு என்னவளே!
* கோபிகை