வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
நலம், நலமறிய ஆவல்! தீபாவளிச் சிறப்பு மாதத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
“என்ன சத்யா தொடர்ந்து ஒரு நகரத்திலுள்ள இடங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே… எங்களை வேறு நாட்டுக்கும் அழைத்துச் செல்வது தானே? என்று, போவோமா ஊர்கோலம் பகுதியின் தொடர் வாசகி ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார்.
அவரின் விருப்பத்திற்கிணங்க, தீபாவளிச் சிறப்பாக செந்தூரத்தின், போவோமா ஊர்கோலம்? பகுதியில் உங்களை ஒரு சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன். தயாரா எல்லோரும்? போவோமா மக்களே?
சுற்றி வர நீலக்கடல் சூழ்ந்திருக்க ஆங்காங்கே பெரிய பெரிய கட்டடங்களோடு எழுந்து நிற்கிறது இந்த அதிசய நகரம். எப்போது உருவாக்கப்பட்டது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் கூட நான்காம் நூற்றாண்டு சரித்திரங்களில் இடம்பெற்றிருக்கும் இந்நகரம் தனது தொன்மையைப் பறை சாற்றி நிற்கின்றது.
யுனெஸ்கோவினால் world heritage ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நகர், தனது பிரத்யேகக் கட்டடக் கலைகளாலும் கலாச்சாரத்தாலும் உலகப் பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. நூற்றுக்கும் அதிகமான சிறு தீவுகளையும், போக்குவரத்திற்காக நூற்றைம்பதிற்கு மேற்பட்ட சிறு கால்வாய்களையும், பலநூறு பாலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மிதவை நகரத்தில், அதுவே இந்த பிரதேசத்தின் அழகைப் பலமடங்காக்குவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது.
தொன்மையான பல கிறிஸ்தவத் தேவாலயங்கள் அவற்றின் கட்டட வடிவமைப்புக்களாலும் உள்ளே காணப்படும் சித்திர, சிற்ப வேலைப்பாடுகளாலும் மெய்மறந்து பார்க்க வைக்கின்றன.
வெள்ளை மாபிளால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம் Church of Madonna della Salute.
நலம், நலமறிய ஆவல்! தீபாவளிச் சிறப்பு மாதத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
“என்ன சத்யா தொடர்ந்து ஒரு நகரத்திலுள்ள இடங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே… எங்களை வேறு நாட்டுக்கும் அழைத்துச் செல்வது தானே? என்று, போவோமா ஊர்கோலம் பகுதியின் தொடர் வாசகி ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார்.
அவரின் விருப்பத்திற்கிணங்க, தீபாவளிச் சிறப்பாக செந்தூரத்தின், போவோமா ஊர்கோலம்? பகுதியில் உங்களை ஒரு சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன். தயாரா எல்லோரும்? போவோமா மக்களே?
சுற்றி வர நீலக்கடல் சூழ்ந்திருக்க ஆங்காங்கே பெரிய பெரிய கட்டடங்களோடு எழுந்து நிற்கிறது இந்த அதிசய நகரம். எப்போது உருவாக்கப்பட்டது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் கூட நான்காம் நூற்றாண்டு சரித்திரங்களில் இடம்பெற்றிருக்கும் இந்நகரம் தனது தொன்மையைப் பறை சாற்றி நிற்கின்றது.
யுனெஸ்கோவினால் world heritage ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நகர், தனது பிரத்யேகக் கட்டடக் கலைகளாலும் கலாச்சாரத்தாலும் உலகப் பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. நூற்றுக்கும் அதிகமான சிறு தீவுகளையும், போக்குவரத்திற்காக நூற்றைம்பதிற்கு மேற்பட்ட சிறு கால்வாய்களையும், பலநூறு பாலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மிதவை நகரத்தில், அதுவே இந்த பிரதேசத்தின் அழகைப் பலமடங்காக்குவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது.
தொன்மையான பல கிறிஸ்தவத் தேவாலயங்கள் அவற்றின் கட்டட வடிவமைப்புக்களாலும் உள்ளே காணப்படும் சித்திர, சிற்ப வேலைப்பாடுகளாலும் மெய்மறந்து பார்க்க வைக்கின்றன.
வெள்ளை மாபிளால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம் Church of Madonna della Salute.