You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... மிக மிக அருமையான பதிவு. நிரல்யாவின் குடைக்குள் சிசிர என்ற நிலை மாறி இப்போது நிரல்யா மற்றும் அனந்தன் ஒரு குடைக்குள் வந்தது அவர்களின் வாழ்க்கையிலும் தான் என்று காட்டியது போல் உள்ளது. சூப்பர்.
 

Thevaky

New member
வாழ்த்துக்கள் நிதாமா 25 வது நிறைவுக்கு💐👏 எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களும் நலங்களும் அருளட்டும்
பாத்திரங்களும் எழுத்தும் எப்போதும் போல அருமை 😘💕
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... 25ம் கதையை எப்பொழுதும் போல் அழகாக அருமையாக தந்த உங்கள் எழுத்துக்கும் எப்பொழுதும் போல் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உங்கள் எழுத்தால் எங்கள் மனதை நிறைந்த உங்கள் அன்புக்கும் நன்றி.

சிசிரவும் நிரல்யாவும் அவரவர் தங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு போயிருந்தால் ஒரு சின்ன சுணக்கம் எங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். ஆனால் இருவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டும் இடையில் வைத்து வாழ்ந்ததிற்கும் அதற்கு முழுமையாக அவர்களைப் புரிந்து அவர்களின் இணைகளை பெற்றதற்கும் மனம் நிறைவை உணர்கிறது.
 

Yamu

Member
25 வது நாவலுக்கு எங்களுடை வாழ்த்துகள் நிதாம்மா.25ம் இருபத்தைந்து முத்துக்கள்.உங்களுடைய மணிமகுடத்தில் மேன்மேலும் பல முத்துக்களும்,வைரங்களும் சேரட்டும்.
கதையைப்பற்றி என்ன சொல்ல மிகவும் அருமையான நிறைவான முடிவைத்தந்துள்ளீர்கள்.அன்பு அளப்பரிய ஒன்றுதான்.சில இடங்களில் வருத்தப்பட வைத்தீர்கள்,சில இடங்களில் திட்டவைத்தீர்கள்,மேலும் வருத்தப்படவைத்து,அழவைத்து முடிவில் சந்தோசத்தை தந்துவிட்டீர்கள்.
மிகவும் விரைவாக எபிசோடுகளைத் தந்து எங்களை ஆனந்தப்பட. வைத்தமைக்கு மிக்க நன்றி.
உங்களுடைய தளத்தில் அடுத்தொரு முத்து விரைந்து வரட்டும். எதிர்பார்ப்புகளுடன்....💐💐💐💐
 
Top Bottom