Munnamae paditha kathayayae marumurai padikkaraen endralum kathaikul engalai laiyikka seykirathu ungal varthaihalin naerthiyum kathaiyin amaipum nithaniபெற்றவரை இழந்து பரிதவித்து நின்றபொழுது, ஆறுதல் தேடி அலைந்த அவன் விழிகளைக் கண்டுவிட்டு அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவள்!
வெங்கடேசன் இறந்தபோது அவன் உயர்தரப் பரீட்சையை(ப்ளஸ் டூ) முடித்திருந்தான். வேதனையோடு நாட்கள் கடக்க, நல்ல பெறுபேற்றோடு பரீட்சையில் சித்தி அடைந்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடமும் கிடைத்தது அவனுக்கு. அதுவும் அவனது அப்பாவைப் போலவே மருத்துவனாக ஆசைப்பட்டவனுக்கு மருத்துவ பீடமே கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி.
அந்தச் சந்தோசத்தில் ஓரளவுக்கு தந்தையின் இறப்பில் இருந்து மீண்டு, மகிழ்ச்சியோடே படிக்கச் சென்றான்.
அதன்பிறகு வந்த இரண்டு வருடங்கள் மிக நன்றாகத்தான் சென்றது. அவனுக்குப் பிடித்த படிப்பு, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று அவன் நாட்கள் கடந்தன.
அப்போதெல்லாம் விடுமுறைக்கு வீட்டுக்கு வருபவன், அத்தைகளின் வீட்டுக்கோ சித்தப்பாவின் வீட்டுக்கோ போகலாம் என்றால், தாய் எதையாவது சொல்லித் தடுத்துவிடுவார். ஏன் என்கிற கேள்வி எழுந்தாலும், அதை அவன் ஆழமாக யோசித்தது இல்லை.
இரண்டாவது வருடக் கடைசியில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவனின் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை தலைகீழாக மாறிற்று!
அன்று மாலை இராசமணி நித்தியுடன் கோவிலுக்குச் சென்றுவிட, தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவனை வீட்டுத் தொலைபேசி தொல்லை செய்தது.
எடுத்துக் காதில் வைத்தவனின் தலையில், “தம்பி, அம்மாவிடம் வரும் திங்களுக்கு முதல் நகைகளுக்கு வட்டியைக் கட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் எல்லாமே அறுதியாகிவிடும்..” என்று குண்டை இறக்கினார், அந்தப் பக்கம் பேசிய நகை அடகு வைக்கும் கடைக்காரர்.
என்ன நகை? என்ன வட்டி? என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றவனின் பார்வையில், கோவிலால் வந்த தாயின் வெறும் கழுத்தும் கைகளும் அப்போதுதான் பட்டது.
அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!
அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந்த சமையலறை வரை பட்டது.
பட்ட நொடி உள்ளத்தால் துடித்துத்தான் போனான். இதை இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் விட்டோமே என்று மருகினான். அவனுக்காக அவர்கள் கஷ்டப் பட்டார்களா?
அம்மாவையும் தங்கையையும் இப்படிக் கஷ்டப்பட விட்டுவிட்டு அத்தைகளும் சித்தப்பாவும் என்ன செய்கிறார்கள் என்று கோபத்துடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றவனை, அங்கிருந்த ஒருவர் கூட வரவேற்காதது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் எல்லாம் அவன் சொந்தம் தானா? முன்னர் பாசத்தை மட்டுமே கொட்டிய அந்த மனிதர்கள் தானா என்கிற பெரும் சந்தேகமே எழுந்தது.
அப்போதும், பெரும் சிரமப் பட்டுத் தனிமையில் சாதனாவைச் சந்தித்து, “என்ன சது, நீயாவது அம்மாவையும் நித்தியையும் பார்த்துக் கொள்ளக் கூடாதா..?” என்று மனத்தாங்கலோடு கேட்டான்.
வருங்காலத்தில் அவனது மனைவியாகப் போகிறவள் அல்லவா! அந்த உரிமையில் வந்திருந்தது அந்த மனத்தாங்கல்.
அலட்சியமாக அவனைப் பார்த்து, “அதென்ன நீயாவது என்று கேட்கிறீர்கள். நானென்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா?” என்று கேட்டாள் அவள்.
“விளையாடாதே சது. என் வருங்கால மனைவி நீதானே அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும்..”
“என்னது? நான் உங்கள் வருங்கால மனைவியா? கனவு காணாதீர்கள். என் அப்பா எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்..” என்றாள் எள்ளலும் பெருமையும் குரலில் மிதக்க.
அதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “இவ்வளவு நாளும் என் பின்னால் சுற்றினாயே. அது எதற்கு? என்னிடம் இருந்த பணத்துக்காகவா?” என்று சீறினான்.
ஒரு நொடி அவள் முகம் கன்றியது. உடனேயே நிமிர்ந்து, “அப்போதெல்லாம் என்னைக் கட்ட மாட்டேன் என்று சொன்ன நீங்கள் இன்று வந்து வருங்கால மனைவி என்கிறீர்களே? என்னிடம் உள்ள பணத்துக்காகவா ரஞ்சன்?” என்று திமிராக அவன் கேட்ட கேள்வியையே திருப்பிக் கேட்டாள் அவள்.
ரஞ்சன்?
மச்சான் என்கிற சொற்பதம் காணாமல் போயிருந்தது. சொற்பதம் மட்டுமல்ல சொந்தமும் என்று தெளிவாகப் புரிந்து போயிற்று அவனுக்கு!
‘திரும்பவும் பணம் சம்பாதித்து உன்னையே கட்டிக் காட்டுகிறேன்டி!’ என்று மனதால் உறுதி பூண்டான். ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தவனிடம் ஏளனம் மிக்க வெட்டும் பார்வை ஒன்றை அலட்சியமாக வீசினாள் சாதனா.
கோபத்தில் கையை நீட்டி விடுவோமோ என்று பயந்து விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டான்.
அன்றோடு அவன் படிப்பும் நின்றுபோனது. கனவுகளும் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது.
வேலை தேடியாகவேண்டிய கட்டாயம்! எங்கே என்ன வேலை தேடுவது? அதை எப்படித் தேடுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
வழி தெரியாது விழி பிதுங்கி நின்றவனுக்குப் போன இடமெல்லாம் கிட்டியது தோல்வியே!
படித்து முடித்தவனுக்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்க, படிப்பை இடையில் நிறுத்தியவனுக்கு?
அவர்களுக்குத் தெரிந்த ஒருவர், அவன் இப்போது வேலை செய்யும் ‘ரிபொக்’ செருப்புகள் விற்கும் கடைக்கு ஆட்கள் வேலைக்கு வேண்டுமாம், போகிறாயா? என்று கேட்டபோது, அவனுக்குக் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.
நான் என்ன அந்தளவுக்கு கேவலமானவனா? போயும் போயும் ஒரு செருப்புக் கடையில் வேலை செய்வதா? என்று ஆத்திரப் பட்டான்.
நாட்கள் இப்படியே கடக்க, நகைகள் எல்லாம் அடவு கடைக்காரனுக்கே சொந்தமாகிப் போக, இனி விற்றோ அடவு வைத்தோ சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலை.
வாழ்க்கையே வெறுத்தது. செத்துவிடலாமா என்று கூட யோசித்தான். அப்போது அவனருகில் வந்தமர்ந்த தங்கையைப் பார்த்ததும் கண்களில் நீர் துளிர்த்தது அவனுக்கு.
அவனும் இறந்துவிட்டால் தங்கைக்கும் தாய்க்கும் யார் துணை?
இல்லை! நான் அழக்கூடாது. வாழ்ந்து காட்டுகிறேன்! முன்னுக்கு வந்து காட்டுகிறேன்! என்று வைராக்கியமாக முடிவை எடுத்தான்.
‘நீ ஒரு மருத்துவனாகி ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்’ என்று சொல்லும் தந்தையின் கனவு என்னாவது என்று கேட்டது உள்ளம்.
ஏழைகளுக்குச் சேவை செய்ய யாரும் வருவார்கள். என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நான் மட்டும்தானே இருக்கிறேன் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
அடுத்தநாளே அந்த மனிதரைத் தேடிச் சென்று செருப்புக் கடை வேலைக்குச் சம்மதித்தான்.
என்னதான் முடிவை எடுத்து விட்டாலும், கடை வாசல்படியை மிதிக்கையில் இப்படியே திரும்பி ஓடிவிட்டால் என்ன என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு வலித்தது.
தூணாக நின்ற தந்தையின் இழப்பைப் பல மடங்காக அந்த நொடி உணர்ந்தவன் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைக்குச் சேர்ந்தான்.
ஓடிற்று! இதோ கண்ணை மூடித் திறக்க முதல் மூன்று வருடங்கள் மிக வேகமாக ஓடிற்று!
ஆனால், அவன் நினைத்தது போன்று முன்னுக்கு வரத்தான் முடியவில்லை.
காலை எட்டு மணிக்குத் தொடங்கும் வேலை இரவு எட்டு மணிக்கு முடியும் என்பது பேச்சாக இருந்தாலும்,அந்த முடிவு நேரம் ஒன்பது, பத்து, பதினொன்று ஏன் நடுச்சாமம் பன்னிரண்டு கூட ஆனதுண்டு.
ஒரே ஒரு ஆறுதல். நல்ல சம்பளம்! இவர்கள் இன்னும் ஐந்து செருப்புக் கடைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதாலோ என்னவோ, வேலை செய்பவர்களுக்கு மனம் நோகாத அளவுக்கு இருந்தது அவர்கள் கொடுக்கும் சம்பளம்.
ஆனால், முன்னேறத் துடிக்கும் அவனுக்கு அது போதாதே!
வண்டியைக் கொண்டுவந்து கடைக்கு முன்னால் நிறுத்தியவனது மனம் என்றும்போல் இன்றும் கொந்தளித்த போதும், இன்று சற்று அதிகமாகவே சஞ்சலப் பட்டது.
சாதனாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதனால் அப்படி இருக்கிறது போலும் என்று எண்ணிக்கொண்டே, உணவுப் பையுடன் கடைக்குள்ளே காலடி எடுத்துவைத்தான்.
“இதயரஞ்சன்! இங்கே வாருங்கள்!” சற்று அதிகாரமாக அழைத்தது ஒரு பெண்குரல்.
அந்த அதிகாரத் தொனியே ஒருவித எரிச்சலைக் கொடுத்தது என்றால், அவனது முழுப் பெயரைச் சொல்லி அழைத்தது சினத்தைக் கொடுத்தது.
அதையெல்லாம் முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளி வர்க்கம் காட்டவா முடியும்?
பொறுமையைக் இறுக்கிப்பிடித்தபடி அவன் திரும்பிப் பார்க்க, நான்கைந்து பெண்கள் புடைசூழ நின்றுகொண்டிருந்தாள் சித்ரயாழி!
தொடரும்:...........
Jeevaniyin thooya kadhalukku min niranjanin pazhi vangum padalam edupadhathu endru avanukku theriyalaiyaeபிறகு, “அப்பா, நான் புது வருடத்துக்கு புதுச் சுடிதார் ஒன்று எடுக்கப் போகிறேன். நாதன் மாமாவுக்கு அழைத்துச் சொல்லிவிடுங்கள், அவர் கடைக்கு நான் வருவதாக.” என்றவள், கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“ஏய்! நில்லுடி!” என்று அதட்டல் போட்டார் லக்ஷ்மி.
அந்த ஏய் என்ற அழைப்பு ரஞ்சனை நினைவு படுத்த இன்னுமே கடுப்பானாள் அவர் மகள்.
“அம்மா! என்னை ஏய் என்று சொல்லாதீர்கள். நான் என்ன ஆடா மாடா?”
“இரண்டில் ஒன்றுதான்!” என்றவர் கணவரிடம் திரும்பினார்.
“பாருங்கள் அவளை. உடுப்பெடுக்கக் கடைக்குப் போகப் போகிறேன் என்று அனுமதி ஏதும் கேட்டாளா? போகிறேன் என்று அறிவிக்கிறாள். இதையெல்லாம் கண்டிக்க மாட்டீர்களா நீங்கள்.” என்ற மனைவியின் பேச்சைக் கேட்டவர், மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“என்னப்பா இது? நான் இன்னும் என்ன குழந்தையா? இருபத்தியொரு வயதில் அவரவர் வெளிநாடுகளுக்கே தனியாகப் போகிறார்கள். நான் டவுனுக்குப் போவது ஒரு பிரச்சினையா? அந்த டவுன் எனக்குப் புதிதா? அல்லது நாதன் மாமா கடைதான் புதிதா?” என்று ஆத்திரப் பட்டாள் மகள்.
அர்த்தத்தோடு மனைவியைப் பார்த்தார் சந்தானம்.
“ஏனப்பா, நான் எப்போதாவது எங்கேயாவது உங்களிடம் சொல்லாமல் போயிருகிறேனா? அல்லது ஏதாவது பிழை செய்து இருக்கிறேனா? வீட்டில் சும்மா இருக்க போரடிக்கிறது. அதுதான் கடைக்குப் போவோம் என்றால், அதற்கும் அம்மா சந்தேகமாகப் பார்க்கிறார். உடுப்பு எடுக்கப் போவோம் என்றால் அதற்கும் இத்தனை விசாரணைகளா?” என்று அவள் அலுக்கவும், லக்ஷ்மிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஒற்றைப் பிள்ளையாக நின்றுவிட்டவள் எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருக்க முடியும். அதுதான் நண்பர்களுடன் எப்போதும் வெளியே சுற்றுகிறாள்.. என்று எண்ணியவர், அப்போதுதான் நினைவு வந்தவராக, “எங்கேடி உன் நண்பர்கள் கூட்டம்? ஒருவரையும் காணோமே..” என்று கேட்டார்.
“அவர்களோடு நான் கதைப்பதில்லை..”
“ஏன்? என்னவாகிற்று? இவ்வளவு நாளும் ஒன்றாகத்தானே சுற்றினீர்கள்..” என்று தன் விசாரணையை மீண்டும் ஆரம்பித்தார் லக்ஷ்மி.
“அதை எல்லாம் உங்களிடம் சொல்லமுடியாது.” மகளிடமிருந்து பட்டென்று வந்த பதிலில் மீண்டும் கடுப்பானார் லக்ஷ்மி.
“பாருங்கள்..” என்றபடி, எப்போதும் போல் கணவரிடம் முறையிடத் திரும்பியவர், அவர் வந்த புன்னகையை அடக்கியபடி தலையைக் குனியவும் பல்லைக் கடித்தார்.
கணவரிடம் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து மகளிடமே திரும்பி, “சரிடி. நான் ஒன்..றுமே கேட்கவில்லை. நீ இரு. அப்பா தேநீர் குடித்ததும் உன்னோடு வருவார். நம் கடைக்கே போ.” என்றவர், ‘அவளோடு போங்கள்!’ என்கிற உத்தரவைக் கணவரிடம் கண்ணால் கட்டிவிட்டு அகன்றார்.
தொடரும்...
இவன் இப்படி இருக்கமாட்டானே.. புயலாக மாறி அவளை புரட்டிப் போடுகிறவனுக்கு இந்த ஒரு வாரமாக என்னவாகிற்று? அவளை அணைத்தான், முத்தமிட்டான், அப்படியே அவளைத் தன் மார்பில் போட்டுத் தூங்க வைத்தும் விடுவான். அதற்குமேல் போகவே மாட்டான்.
இன்று இவனை விடக்கூடாது என்று நினைத்தவள், “இதயன்?” என்றாள் கேள்வியாக.
“ம்ம்..”
“என்ன?”
ஒன்றுமில்லை என்பதாக அவள் கழுத்து வளைவுக்குள் இருந்த அவன் தலை மட்டும் ஆடியது.
“ப்ச் இதயன்! முதலில் என்னைப் பாருங்கள்.” என்றவள் அவன் தலையைத் தூக்க, ரஞ்சனின் முகமோ சிவந்து போயிருந்தது.
ஆச்சர்யமாகப் பார்த்தாள் சித்ரா. கம்பீரமான அந்த ஆண்மகனின் வெட்கம் கூட அவ்வளவு அழகாக இருந்தது.
இதழ்களில் மலர்ந்த புன்சிரிப்புடன் விழிகளில் குறும்பும் மின்ன, “என்ன?” என்று கேட்டாள் அவள்.
“அது.. நம் குழந்தைகள் பாவம் இல்லையா.. அவர்களுக்கு வலிக்காதா? அதுதான்..” அவளைப் பாராது சொன்னான் அவன்.
அதைக்கேட்ட சித்ரா இப்போது மலர்ந்து சிரித்தாள்.
“என்ன, என் பாடு உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?” என்று பொய்யாக அதட்டியவனின் விழிகள் மனைவியின் சிரிப்பை ஆசையோடு ரசித்தன.
“இப்படி எத்தனை நாட்களுக்குத் தள்ளியிருப்பீர்கள்?” கிண்டலோடு அவள் கேட்க, “அதுதான்டி தவிப்பாக இருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை..” என்றான் அவன்.
புன்னகையோடு அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கியவள், “அட என் மக்குப் புருசா.. அப்படி ஒன்றும் நடக்காது. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.” என்றாள்.
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியாதா? அதனால் லதாக்காவிடம் எல்லாம் கேட்டுக்கொண்டேன்.”
“என்றாலும்..” என்று அவன் இழுக்க, “உங்களை!” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“உங்கள் முரட்டுத் தனத்தைக் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்தால் போதும். மற்றும்படி பயமில்லை!” என்றவள், அதற்கு மேலும் பொறுமையின்றி அவன் இதழ்களைத் தானே சிறை செய்து, நடக்கப்போகும் ஆலிங்கனத்தை அழகாக ஆரம்பித்து வைத்தாள்.
ஆரம்பித்தது மட்டுமே அவள். மீதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டான் அவள் கணவன்!
வாழ்வில் தனக்கான ஒரு முகத்தைத் தேடி அலைந்தவன், அவன் முகவரியாகக் கிடைத்த முழுநிலவை அந்த மஞ்சத்திலே இதமாகப் பதமாக மலரச் செய்தான்.
முற்றும்!!
மீண்டும் இன்னோர் நாவலுடன் சந்திப்போம். முதல் தடவையாகப் படித்தவர்கள் எப்படி இருந்தது என்று சொன்னால் மகிழ்வேன்! நன்றி!
akka nan enna solla........ idhayan num yazhi yum.....verum kathapathirangal alla.... nichayam avarkal intha ulagathil enkalai pondror manathil valpavarkal..... kastangalai kadanthu throgankalai kadanthu..... kanneerai vidhayaki..... muyarchiyai mattume kondu vetri petra ivarkal nichayam endrndrum valvarkal en idhayathil....
Nenjaiஇவன் இப்படி இருக்கமாட்டானே.. புயலாக மாறி அவளை புரட்டிப் போடுகிறவனுக்கு இந்த ஒரு வாரமாக என்னவாகிற்று? அவளை அணைத்தான், முத்தமிட்டான், அப்படியே அவளைத் தன் மார்பில் போட்டுத் தூங்க வைத்தும் விடுவான். அதற்குமேல் போகவே மாட்டான்.
இன்று இவனை விடக்கூடாது என்று நினைத்தவள், “இதயன்?” என்றாள் கேள்வியாக.
“ம்ம்..”
“என்ன?”
ஒன்றுமில்லை என்பதாக அவள் கழுத்து வளைவுக்குள் இருந்த அவன் தலை மட்டும் ஆடியது.
“ப்ச் இதயன்! முதலில் என்னைப் பாருங்கள்.” என்றவள் அவன் தலையைத் தூக்க, ரஞ்சனின் முகமோ சிவந்து போயிருந்தது.
ஆச்சர்யமாகப் பார்த்தாள் சித்ரா. கம்பீரமான அந்த ஆண்மகனின் வெட்கம் கூட அவ்வளவு அழகாக இருந்தது.
இதழ்களில் மலர்ந்த புன்சிரிப்புடன் விழிகளில் குறும்பும் மின்ன, “என்ன?” என்று கேட்டாள் அவள்.
“அது.. நம் குழந்தைகள் பாவம் இல்லையா.. அவர்களுக்கு வலிக்காதா? அதுதான்..” அவளைப் பாராது சொன்னான் அவன்.
அதைக்கேட்ட சித்ரா இப்போது மலர்ந்து சிரித்தாள்.
“என்ன, என் பாடு உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?” என்று பொய்யாக அதட்டியவனின் விழிகள் மனைவியின் சிரிப்பை ஆசையோடு ரசித்தன.
“இப்படி எத்தனை நாட்களுக்குத் தள்ளியிருப்பீர்கள்?” கிண்டலோடு அவள் கேட்க, “அதுதான்டி தவிப்பாக இருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை..” என்றான் அவன்.
புன்னகையோடு அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கியவள், “அட என் மக்குப் புருசா.. அப்படி ஒன்றும் நடக்காது. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.” என்றாள்.
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியாதா? அதனால் லதாக்காவிடம் எல்லாம் கேட்டுக்கொண்டேன்.”
“என்றாலும்..” என்று அவன் இழுக்க, “உங்களை!” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“உங்கள் முரட்டுத் தனத்தைக் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்தால் போதும். மற்றும்படி பயமில்லை!” என்றவள், அதற்கு மேலும் பொறுமையின்றி அவன் இதழ்களைத் தானே சிறை செய்து, நடக்கப்போகும் ஆலிங்கனத்தை அழகாக ஆரம்பித்து வைத்தாள்.
ஆரம்பித்தது மட்டுமே அவள். மீதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டான் அவள் கணவன்!
வாழ்வில் தனக்கான ஒரு முகத்தைத் தேடி அலைந்தவன், அவன் முகவரியாகக் கிடைத்த முழுநிலவை அந்த மஞ்சத்திலே இதமாகப் பதமாக மலரச் செய்தான்.
முற்றும்!!
மீண்டும் இன்னோர் நாவலுடன் சந்திப்போம். முதல் தடவையாகப் படித்தவர்கள் எப்படி இருந்தது என்று சொன்னால் மகிழ்வேன்! நன்றி!
Nenjai naehila vaitha kadhai.Ithan thakkam vaehu natkalukku manathai vittu agalathu nithani.I love your way of story tellingஇவன் இப்படி இருக்கமாட்டானே.. புயலாக மாறி அவளை புரட்டிப் போடுகிறவனுக்கு இந்த ஒரு வாரமாக என்னவாகிற்று? அவளை அணைத்தான், முத்தமிட்டான், அப்படியே அவளைத் தன் மார்பில் போட்டுத் தூங்க வைத்தும் விடுவான். அதற்குமேல் போகவே மாட்டான்.
இன்று இவனை விடக்கூடாது என்று நினைத்தவள், “இதயன்?” என்றாள் கேள்வியாக.
“ம்ம்..”
“என்ன?”
ஒன்றுமில்லை என்பதாக அவள் கழுத்து வளைவுக்குள் இருந்த அவன் தலை மட்டும் ஆடியது.
“ப்ச் இதயன்! முதலில் என்னைப் பாருங்கள்.” என்றவள் அவன் தலையைத் தூக்க, ரஞ்சனின் முகமோ சிவந்து போயிருந்தது.
ஆச்சர்யமாகப் பார்த்தாள் சித்ரா. கம்பீரமான அந்த ஆண்மகனின் வெட்கம் கூட அவ்வளவு அழகாக இருந்தது.
இதழ்களில் மலர்ந்த புன்சிரிப்புடன் விழிகளில் குறும்பும் மின்ன, “என்ன?” என்று கேட்டாள் அவள்.
“அது.. நம் குழந்தைகள் பாவம் இல்லையா.. அவர்களுக்கு வலிக்காதா? அதுதான்..” அவளைப் பாராது சொன்னான் அவன்.
அதைக்கேட்ட சித்ரா இப்போது மலர்ந்து சிரித்தாள்.
“என்ன, என் பாடு உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?” என்று பொய்யாக அதட்டியவனின் விழிகள் மனைவியின் சிரிப்பை ஆசையோடு ரசித்தன.
“இப்படி எத்தனை நாட்களுக்குத் தள்ளியிருப்பீர்கள்?” கிண்டலோடு அவள் கேட்க, “அதுதான்டி தவிப்பாக இருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை..” என்றான் அவன்.
புன்னகையோடு அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கியவள், “அட என் மக்குப் புருசா.. அப்படி ஒன்றும் நடக்காது. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.” என்றாள்.
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியாதா? அதனால் லதாக்காவிடம் எல்லாம் கேட்டுக்கொண்டேன்.”
“என்றாலும்..” என்று அவன் இழுக்க, “உங்களை!” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“உங்கள் முரட்டுத் தனத்தைக் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்தால் போதும். மற்றும்படி பயமில்லை!” என்றவள், அதற்கு மேலும் பொறுமையின்றி அவன் இதழ்களைத் தானே சிறை செய்து, நடக்கப்போகும் ஆலிங்கனத்தை அழகாக ஆரம்பித்து வைத்தாள்.
ஆரம்பித்தது மட்டுமே அவள். மீதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டான் அவள் கணவன்!
வாழ்வில் தனக்கான ஒரு முகத்தைத் தேடி அலைந்தவன், அவன் முகவரியாகக் கிடைத்த முழுநிலவை அந்த மஞ்சத்திலே இதமாகப் பதமாக மலரச் செய்தான்.
முற்றும்!!
மீண்டும் இன்னோர் நாவலுடன் சந்திப்போம். முதல் தடவையாகப் படித்தவர்கள் எப்படி இருந்தது என்று சொன்னால் மகிழ்வேன்! நன்றி!
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.