இடைச்சொல்
இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.
இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள். பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைசொல்தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
-------------------------------------------------------------------------------
நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது. மக்கள் வாழ மொழி வேண்டும். மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும். இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர்.
பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று. இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘இடைச்சொல்லுக்குப்’ பொதுவான விளக்கம் தருகிறது. இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல், சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது.
சொல் - விளக்கம்
எழுத்து என்பது ஒலியும், வடிவும் கொண்டு விளங்குவது. எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம். பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது. சொல் என்பதைப் ‘பதம்’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார். பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.
ஓரெழுத்து ஒருமொழி
ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர். சிறப்பான ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார்.
எடுத்துக்காட்டு
ஆ (பசு), ஈ, ஏ (அம்பு), ஓ (மதகு), தா, போ முதலிய எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர்.
இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள் பலவெழுத்துச் சொற்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
அணி
அறம்
விரும்பு
சொல் பகுப்பு
இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓர் எழுத்து தனித்து நின்றோ, சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ, பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம். ஒரு சொல் எவ்வாறு அமைகிறது, எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம். அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும். சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன.
சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகைப்படும்.
பகுபதம்
பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள்.
பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும். இவற்றுள் விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும்.
பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம்.
பகுதி:
பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும்; பெயர், வினை, இடை, உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும்.
எடுத்துக்காட்டு
- கண்ணன் - கண் -பெயர்ப் பகுதி
- வந்தான் - வா -வினைப் பகுதி
- மற்றவன் - மற்று - இடைப் பகுதி
- கடியன் - கடி - உரிப் பகுதி
விகுதி:
விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்.
எடுத்துக்காட்டு:
- கண்ணன் - அன் - ஆண் பாலை உணர்த்துகிறது.
- வந்தேன் - ஏன் - தன்மை ஒருமையை உணர்த்துகிறது
- வந்தது - து - ஒன்றன்பாலை உணர்த்துகிறது
- வந்தீர் - ஈர் - முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது.
இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள்.
இடைநிலை
இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும். பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும்.
பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை காலம் காட்டும்.
எடுத்துக்காட்டு:
அறிஞன் - அறி + ஞ் + அன்
இதில் ‘ஞ்’ என்பது பெயர் இடைநிலை. இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது.
வந்தான் - வா + த்(ந்) + த் + ஆன்
இதில் ‘த்’ என்பது வினை இடைநிலை. இது இறந்த காலம் காட்டியது.
சந்தி
சந்தி என்பது புணர்ச்சி. இது சொற்களை இணைக்கிறது. சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது.
எடுத்துக்காட்டு
படித்தான் - படி + த் + த் +ஆன்
என்று பகுக்க வேண்டும். இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘த்’ சந்தி ஆகும். அதற்கு அடுத்துள்ள ‘த்’ காலம் காட்டும் இடைநிலை ஆகும்.
சாரியை
சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும். புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும். சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும்.
எடுத்துக்காட்டு
பட்டினத்தான் - பட்டினம் + அத்து + ஆன்
இச்சொல்லில் ‘அத்து’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது. ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க, பட்டினம் + ஆன், ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘அத்து’ துணை புரிகிறது அல்லவா? ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது.
நெஞ்சம் - நெஞ்சு + அம்
இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல். அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது.
விகாரம்
பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று. இங்கு விகாரம் எனப்படுவது, பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் (மாற்றங்கள்) ஆகும்.
எடுத்துக்காட்டு
வந்தான் - என்ற சொல்லில் ‘வா’ என்பது பகுதி.
இப்பகுதி, ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘வ’ எனக் குறுகியது. அதனால் இது விகாரம் என்று கூறப்படும்.
சொல்லும் உறுப்புகளும்
ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும். இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு.
எடுத்துக்காட்டு
கண்ணன் - கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன.
வந்தனன் - என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம்.
வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்
பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி, விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம். (‘வா’ என்பது ‘வ’ எனத் திரிந்தது விகாரம்).
பகாப்பதம்
பகுக்க முடியாத பதம். பகுத்தால் பொருள் தராது.
எடுத்துக்காட்டு
கண்
படி
பிரித்தால் பொருள் தராது.
சொல் வகைகள்
தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு. அவை,
1)பெயர்ச்சொல்
2)வினைச்சொல்
3)இடைச்சொல்
4)உரிச்சொல்
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,
1)இயற்சொல்
2)திரிசொல்
3)திசைச்சொல்
4)வடசொல்
பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம்.
இடைச்சொல்லின் இலக்கணம்
பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம். இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம்.
இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் (இடையியல்), நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் (இடையியல்) விளக்கிக் கூறுகின்றன.
பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா:
இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே
(தொல்.சொல்.251)
(இடை = இடைச்சொல்)
இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டு:
ஐயோ இறந்தான் = ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.
கொன்றான் கூகூ = என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.
மற்றொன்று = மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.
குழையன் = அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது.
இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம்.
இடைச்சொல் வகைகள்
நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.
1) வேற்றுமை உருபுகள்
2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்
3) சாரியைகள்
4) உவம உருபுகள்
5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்
6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்
7) செய்யுளில் அசைநிலையாக வருபவை
8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை
இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும். இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது:
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசை நிலை
குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்
(சூத்திரம் - 419)
(ஒப்பு உருபு = உவம உருபு)
தொகுப்புரை:
இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.
இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள். பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைசொல்தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
-------------------------------------------------------------------------------
நாம் நம்முடைய கருத்துகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு மொழிதான் துணை புரிகிறது. மக்கள் வாழ மொழி வேண்டும். மொழி வாழ இலக்கணங்கள் வேண்டும். இலக்கண நூலார் இலக்கியச் சொற்களையும் பேச்சு வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து சொல் இலக்கணத்தை வரன்முறைப்படுத்தியுள்ளனர்.
பட்டயப் பாடத்தில் சொல் வகைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்கு உண்டாயிற்று. இடைச்சொல் பற்றிய இந்தப் பாடம் ‘இடைச்சொல்லுக்குப்’ பொதுவான விளக்கம் தருகிறது. இடைச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் என்ன பயனைத் தருகின்றன என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட சில இலக்கண நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் சொல், சொல் வகைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது.
சொல் - விளக்கம்
எழுத்து என்பது ஒலியும், வடிவும் கொண்டு விளங்குவது. எழுத்துகள் தனியாகவோ இரண்டு முதலாகச் சில எழுத்துகள் சேர்ந்தோ நின்று ஒரு பொருளைக் குறிக்குமானால் அதைச் சொல் என்கிறோம். பொருள் தராத வெறும் எழுத்தொலி சொல் ஆகாது. சொல் என்பதைப் ‘பதம்’ என்றும் நன்னூலார் குறிப்பிடுகிறார். பதவியலில் சொல்லின் அமைப்பைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.
ஓரெழுத்து ஒருமொழி
ஒரே எழுத்தில் அமைந்து பொருள் தரும் சொற்களை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர். சிறப்பான ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் நாற்பத்திரண்டு என்று குறிப்பிடுகின்றார் நன்னூலார்.
எடுத்துக்காட்டு
ஆ (பசு), ஈ, ஏ (அம்பு), ஓ (மதகு), தா, போ முதலிய எழுத்துகளை ஓரெழுத்துச் சொற்கள் என்பர்.
இரண்டு முதலான எழுத்துகளில் அமையும் சொற்கள் பலவெழுத்துச் சொற்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
அணி
அறம்
விரும்பு
சொல் பகுப்பு
இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓர் எழுத்து தனித்து நின்றோ, சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ, பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம். ஒரு சொல் எவ்வாறு அமைகிறது, எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம். அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும். சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன.
சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகைப்படும்.
பகுபதம்
பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள்.
பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும். இவற்றுள் விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும்.
பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம்.
பகுதி:
பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும்; பெயர், வினை, இடை, உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும்.
எடுத்துக்காட்டு
- கண்ணன் - கண் -பெயர்ப் பகுதி
- வந்தான் - வா -வினைப் பகுதி
- மற்றவன் - மற்று - இடைப் பகுதி
- கடியன் - கடி - உரிப் பகுதி
விகுதி:
விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்.
எடுத்துக்காட்டு:
- கண்ணன் - அன் - ஆண் பாலை உணர்த்துகிறது.
- வந்தேன் - ஏன் - தன்மை ஒருமையை உணர்த்துகிறது
- வந்தது - து - ஒன்றன்பாலை உணர்த்துகிறது
- வந்தீர் - ஈர் - முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது.
இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள்.
இடைநிலை
இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும். பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும்.
பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை காலம் காட்டும்.
எடுத்துக்காட்டு:
அறிஞன் - அறி + ஞ் + அன்
இதில் ‘ஞ்’ என்பது பெயர் இடைநிலை. இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது.
வந்தான் - வா + த்(ந்) + த் + ஆன்
இதில் ‘த்’ என்பது வினை இடைநிலை. இது இறந்த காலம் காட்டியது.
சந்தி
சந்தி என்பது புணர்ச்சி. இது சொற்களை இணைக்கிறது. சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது.
எடுத்துக்காட்டு
படித்தான் - படி + த் + த் +ஆன்
என்று பகுக்க வேண்டும். இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘த்’ சந்தி ஆகும். அதற்கு அடுத்துள்ள ‘த்’ காலம் காட்டும் இடைநிலை ஆகும்.
சாரியை
சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும். புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும். சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும்.
எடுத்துக்காட்டு
பட்டினத்தான் - பட்டினம் + அத்து + ஆன்
இச்சொல்லில் ‘அத்து’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது. ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க, பட்டினம் + ஆன், ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘அத்து’ துணை புரிகிறது அல்லவா? ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது.
நெஞ்சம் - நெஞ்சு + அம்
இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல். அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது.
விகாரம்
பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று. இங்கு விகாரம் எனப்படுவது, பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் (மாற்றங்கள்) ஆகும்.
எடுத்துக்காட்டு
வந்தான் - என்ற சொல்லில் ‘வா’ என்பது பகுதி.
இப்பகுதி, ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘வ’ எனக் குறுகியது. அதனால் இது விகாரம் என்று கூறப்படும்.
சொல்லும் உறுப்புகளும்
ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும். இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு.
எடுத்துக்காட்டு
கண்ணன் - கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன.
வந்தனன் - என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம்.
வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்
பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி, விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம். (‘வா’ என்பது ‘வ’ எனத் திரிந்தது விகாரம்).
பகாப்பதம்
பகுக்க முடியாத பதம். பகுத்தால் பொருள் தராது.
எடுத்துக்காட்டு
கண்
படி
சொல் வகைகள்
தமிழில் இலக்கண நோக்கில் அமைந்த சொல் வகைகள் நான்கு. அவை,
1)பெயர்ச்சொல்
2)வினைச்சொல்
3)இடைச்சொல்
4)உரிச்சொல்
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர். அவை,
1)இயற்சொல்
2)திரிசொல்
3)திசைச்சொல்
4)வடசொல்
பெயர், வினை இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி வரும் பாடங்களில் விரிவாகக் காண்போம்.
இடைச்சொல்லின் இலக்கணம்
பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம். இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம்.
இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் (இடையியல்), நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் (இடையியல்) விளக்கிக் கூறுகின்றன.
பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா:
இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே
(தொல்.சொல்.251)
(இடை = இடைச்சொல்)
இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டு:
ஐயோ இறந்தான் = ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.
கொன்றான் கூகூ = என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.
மற்றொன்று = மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.
குழையன் = அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது.
இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம்.
இடைச்சொல் வகைகள்
நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.
1) வேற்றுமை உருபுகள்
2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்
3) சாரியைகள்
4) உவம உருபுகள்
5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்
6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்
7) செய்யுளில் அசைநிலையாக வருபவை
8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை
இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும். இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது:
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசை நிலை
குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்
(சூத்திரம் - 419)
(ஒப்பு உருபு = உவம உருபு)
தொகுப்புரை:
சொல் என்றால் அது பொருள் தர வேண்டும். தமிழில் ஓர் எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தந்து சொல் ஆகிறது. சொற்கள் இலக்கண நோக்கில் பொதுவாகப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் தன்மை உடையது. இடைச்சொல் எட்டு வகைப்படும்.
Last edited: