அத்தியாயம் 26
நாட்டின் முக்கிய புள்ளிகள் அலைபேசி வாயிலாகவும் நேராகவும் இளந்திரையனின் நலத்தை விசாரித்தபடியிருந்தனர். அப்படித்தான் சத்தியநாதனும் அவரைப் பார்க்க நேராகவே வந்தான். வீட்டின் காவலாளி சமநலநாயக்க மூலம், எல்லாளனுக்கு உடனேயே செய்தி பறந்தது.
இவன்தான் காரணமோ என்கிற சந்தேகம் எல்லாளனுக்கு ஏற்கனவே இருந்தது. அதை நிரூபிக்க, எப்படி வலைவீசித் தேடியும் சுட்டவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலேயே உள்ளுக்குள் கனன்றுகொண்டு இருந்தான். இப்போது, வீட்டுக்கே வந்திருக்கிறான் என்றால்? அவனால் வீட்டில் வைத்து எதையும் செய்ய முடியாதுதான். என்றாலும்…
அகரனும் வேலையாக வெளியே போயிருந்தான். வீட்டில் இருப்பது ஆதினியும் இளந்திரையனும் மட்டும்தான். இருவரையும் அவனோடு தனியே விட மனம் வராமல், அங்கு விரைந்தான்.
அதற்கு முதல் ஆதினிக்கு அழைத்து, கீழே இளந்திரையனின் அறைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினான். அவர்கள் எல்லோர் பற்றிய தகவலும் சத்தியநாதனின் விரல் நுனியில் இருக்கும் என்று தெரிந்தாலும், ஏனோ சத்தியநாதனின் பார்வையில் அவள் படுவதை அவன் விரும்பவில்லை.
இளந்திரையனுக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டவருக்கு அழைத்து, இளந்திரையனை விட்டு எங்கும் அசைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினான். எவ்வளவுதான் வேகமாக வந்தபோதிலும், அவன் அங்கு வந்து சேர்ந்தபோது நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.
இவன் கேட்டிலிருந்து உள்ளே வரவும் சத்தியநாதன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. காக்கி உடையில் காவலதிகாரியாக இவனும் வெள்ளை வேட்டி சட்டையில் அரசியல் வாதியாக அவனும் எதிரெதிரே! கிட்டத்தட்ட ஒரே வயதினர்.
அவன் மீதே பார்வையைப் பதித்து நடந்து வந்த எல்லாளன், நேற்றுப் பெய்த மழையில் சிறு குட்டையாகத் தேங்கியிருந்த நீரில் காலை வைக்கப் பார்த்து, கடைசி நேரத்தில் எட்டி வைக்க, “ஜஸ்ட் மிஸ்!” என்றான் சத்தியநாதன்.
ஒற்றைப் புருவத்தை மட்டும் கேள்வியாக உயர்த்தினான் எல்லாளன்.
“கால வைக்கப் பாத்திட்டு கடைசி நேரத்தில தப்பிட்டிங்க. அதைத்தான் சொன்னனான்.” இளம் முறுவலோடு சொல்லிவிட்டு, “என்ர கலியாணத்தில பாத்தது. எப்பிடி இருக்கிறீங்க எல்லாளன்?” என்று விசாரித்தபடி அவன் புறமாகக் கையை நீட்டினான்.
“எனக்கு என்ன? நல்லவன் மாதிரி ஊருக்க மக்களோட மக்களா உலாவுற கள்ளனையும் காடையனையும் தூக்கி உள்ளுக்குப் போடுறதிலேயே காலம் ஓடுது!” அவன் கரத்தை வெகு அழுத்தமாகப் பற்றிக் குலுக்கியபடி சொன்னான் எல்லாளன்.
“பின்ன! உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிட்ட இருந்து தப்பேலுமா? என்ர தம்பியையே தூக்குக் கயிற்றுக்குத் தூக்கிக் குடுத்த ஆள் எல்லா நீங்க!” அவன் தோள் தட்டிச் சொல்லிவிட்டு, “இளந்திரையன் சேர சுடப் பாத்தவனைப் பிடிச்சிட்டீங்களா?” என்று விரிந்த சிரிப்புடன் விசாரித்தான்.
அந்தச் சிரிப்பே எல்லாளனின் நெஞ்சில் நெருப்பைப் பற்ற வைத்தது. காட்டிக்கொள்ளாமல், “தேடிக்கொண்டு இருக்கிறம். கெதியில பிடிச்சிடுவம்.” என்றான்.
“அதுக்கு அவன் உயிரோட இருக்கோணுமே.”
“விளங்கேல்ல?” என்றான் எல்லாளன் விழிகள் இடுங்க.
“இல்ல, அவனுக்கும் குண்டு பட்டதாம் எண்டு கேள்விப்பட்டன். அதுதான்… அவன் தப்பி இருந்தாத்தானே உங்களிட்ட மாட்டுவான்.”
ஆக, அவன் சந்தேகம் சரிதான். இப்போது எல்லாளனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “சுட்டவன் செத்தாலும் சுடச் சொன்னவன் உயிரோடதானே இருப்பான். எனக்கு அவன் தான் வேணும்.” என்றான் அசராமல்.
மெலிதாக நகைத்தான் சத்தியநாதன்.
“எனக்கு உங்களிட்டப் பிடிச்ச விசயமே இந்தத் தைரியம்தான் எல்லாளன்! நானும் இப்பிடித்தான். மரத்த வெட்டுறதை விட்டுட்டு வேரையே அறுக்கிறவன். பதிலுக்குப் பதில், பரிசுக்குப் பரிசு குடுக்காம விடவே மாட்டன்.” என்றுவிட்டு,
“உங்களுக்கும் இளந்திரையன் சேரின்ர மகளுக்கும் கலியாணமாம் எண்டு கேள்விப்பட்டன். வாழ்த்துகள் எல்லாளன்! கள்ளனும் காடையனும் ஒருத்தன் போக இன்னொருத்தன் வந்து கொண்டேதான் இருப்பான். அவங்களுக்கு வேறென்ன வேல? அதால கெதியா கலியாணத்தக் கட்டி வாழ்க்கையை அனுபவிக்கிற வழியப் பாருங்க. இந்த விசயத்தில உங்கள விட நான் கொஞ்சம் அனுபவசாலி. அதால நான் சொல்லுறதைக் கேளுங்க. சேருக்கு நடந்த மாதிரி, எப்ப என்ன நடக்கும் எண்டு, இந்தக் காலத்தில சொல்லவே ஏலாம இருக்கு. வரட்டா எல்லாளன்.” என்று விடைபெற்றுப் போனான் அவன்.
அவனைத் திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் வந்த எல்லாளனுக்குள் எரிமலையின் சீற்றம். அத்தனைக்கும் காரணம் நான்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறான்.
இளந்திரையன் தப்பியதை ஜஸ்ட் மிஸ்ஸில் உணர்த்தி, அவரைச் சுட்டவன் உயிருடன் இல்லை என்கிற தகவலைத் தந்து, தன் தம்பிக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த உன்னை விடமாட்டேன் என்று மிரட்டிவிட்டுப் போகிறான்.
கிட்டத்தட்ட இது ஒரு நேரடி மோதல்!
இளந்திரையனைச் சென்று பார்க்கக் கூடச் செய்யாமல் விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான். அருள், சாமந்தி போன்ற அடுத்த இளம் தலைமுறையை மொத்தமாக நாசமாக்கி, நாட்டின் சொத்தே இவர்கள்தான் என்று சொல்லும் இளந்திரையன் போன்றவர்களின் உயிரோடு விளையாடுகிறவனை இன்னுமே கையைக் கட்டி வேடிக்கை பார்க்கப் போகிறானா?
அவன் நெஞ்சில் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது.
எதற்கோ, தன் அறையிலிருந்து வெளியே வந்த இளந்திரையன், விழிகளை மூடித் தனியாக அமர்ந்திருந்த எல்லாளனைக் கண்டுவிட்டு, அவனிடம் வந்தார்.
“எல்லாளன்?”
நாட்டின் முக்கிய புள்ளிகள் அலைபேசி வாயிலாகவும் நேராகவும் இளந்திரையனின் நலத்தை விசாரித்தபடியிருந்தனர். அப்படித்தான் சத்தியநாதனும் அவரைப் பார்க்க நேராகவே வந்தான். வீட்டின் காவலாளி சமநலநாயக்க மூலம், எல்லாளனுக்கு உடனேயே செய்தி பறந்தது.
இவன்தான் காரணமோ என்கிற சந்தேகம் எல்லாளனுக்கு ஏற்கனவே இருந்தது. அதை நிரூபிக்க, எப்படி வலைவீசித் தேடியும் சுட்டவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலேயே உள்ளுக்குள் கனன்றுகொண்டு இருந்தான். இப்போது, வீட்டுக்கே வந்திருக்கிறான் என்றால்? அவனால் வீட்டில் வைத்து எதையும் செய்ய முடியாதுதான். என்றாலும்…
அகரனும் வேலையாக வெளியே போயிருந்தான். வீட்டில் இருப்பது ஆதினியும் இளந்திரையனும் மட்டும்தான். இருவரையும் அவனோடு தனியே விட மனம் வராமல், அங்கு விரைந்தான்.
அதற்கு முதல் ஆதினிக்கு அழைத்து, கீழே இளந்திரையனின் அறைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினான். அவர்கள் எல்லோர் பற்றிய தகவலும் சத்தியநாதனின் விரல் நுனியில் இருக்கும் என்று தெரிந்தாலும், ஏனோ சத்தியநாதனின் பார்வையில் அவள் படுவதை அவன் விரும்பவில்லை.
இளந்திரையனுக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டவருக்கு அழைத்து, இளந்திரையனை விட்டு எங்கும் அசைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினான். எவ்வளவுதான் வேகமாக வந்தபோதிலும், அவன் அங்கு வந்து சேர்ந்தபோது நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.
இவன் கேட்டிலிருந்து உள்ளே வரவும் சத்தியநாதன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. காக்கி உடையில் காவலதிகாரியாக இவனும் வெள்ளை வேட்டி சட்டையில் அரசியல் வாதியாக அவனும் எதிரெதிரே! கிட்டத்தட்ட ஒரே வயதினர்.
அவன் மீதே பார்வையைப் பதித்து நடந்து வந்த எல்லாளன், நேற்றுப் பெய்த மழையில் சிறு குட்டையாகத் தேங்கியிருந்த நீரில் காலை வைக்கப் பார்த்து, கடைசி நேரத்தில் எட்டி வைக்க, “ஜஸ்ட் மிஸ்!” என்றான் சத்தியநாதன்.
ஒற்றைப் புருவத்தை மட்டும் கேள்வியாக உயர்த்தினான் எல்லாளன்.
“கால வைக்கப் பாத்திட்டு கடைசி நேரத்தில தப்பிட்டிங்க. அதைத்தான் சொன்னனான்.” இளம் முறுவலோடு சொல்லிவிட்டு, “என்ர கலியாணத்தில பாத்தது. எப்பிடி இருக்கிறீங்க எல்லாளன்?” என்று விசாரித்தபடி அவன் புறமாகக் கையை நீட்டினான்.
“எனக்கு என்ன? நல்லவன் மாதிரி ஊருக்க மக்களோட மக்களா உலாவுற கள்ளனையும் காடையனையும் தூக்கி உள்ளுக்குப் போடுறதிலேயே காலம் ஓடுது!” அவன் கரத்தை வெகு அழுத்தமாகப் பற்றிக் குலுக்கியபடி சொன்னான் எல்லாளன்.
“பின்ன! உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிட்ட இருந்து தப்பேலுமா? என்ர தம்பியையே தூக்குக் கயிற்றுக்குத் தூக்கிக் குடுத்த ஆள் எல்லா நீங்க!” அவன் தோள் தட்டிச் சொல்லிவிட்டு, “இளந்திரையன் சேர சுடப் பாத்தவனைப் பிடிச்சிட்டீங்களா?” என்று விரிந்த சிரிப்புடன் விசாரித்தான்.
அந்தச் சிரிப்பே எல்லாளனின் நெஞ்சில் நெருப்பைப் பற்ற வைத்தது. காட்டிக்கொள்ளாமல், “தேடிக்கொண்டு இருக்கிறம். கெதியில பிடிச்சிடுவம்.” என்றான்.
“அதுக்கு அவன் உயிரோட இருக்கோணுமே.”
“விளங்கேல்ல?” என்றான் எல்லாளன் விழிகள் இடுங்க.
“இல்ல, அவனுக்கும் குண்டு பட்டதாம் எண்டு கேள்விப்பட்டன். அதுதான்… அவன் தப்பி இருந்தாத்தானே உங்களிட்ட மாட்டுவான்.”
ஆக, அவன் சந்தேகம் சரிதான். இப்போது எல்லாளனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “சுட்டவன் செத்தாலும் சுடச் சொன்னவன் உயிரோடதானே இருப்பான். எனக்கு அவன் தான் வேணும்.” என்றான் அசராமல்.
மெலிதாக நகைத்தான் சத்தியநாதன்.
“எனக்கு உங்களிட்டப் பிடிச்ச விசயமே இந்தத் தைரியம்தான் எல்லாளன்! நானும் இப்பிடித்தான். மரத்த வெட்டுறதை விட்டுட்டு வேரையே அறுக்கிறவன். பதிலுக்குப் பதில், பரிசுக்குப் பரிசு குடுக்காம விடவே மாட்டன்.” என்றுவிட்டு,
“உங்களுக்கும் இளந்திரையன் சேரின்ர மகளுக்கும் கலியாணமாம் எண்டு கேள்விப்பட்டன். வாழ்த்துகள் எல்லாளன்! கள்ளனும் காடையனும் ஒருத்தன் போக இன்னொருத்தன் வந்து கொண்டேதான் இருப்பான். அவங்களுக்கு வேறென்ன வேல? அதால கெதியா கலியாணத்தக் கட்டி வாழ்க்கையை அனுபவிக்கிற வழியப் பாருங்க. இந்த விசயத்தில உங்கள விட நான் கொஞ்சம் அனுபவசாலி. அதால நான் சொல்லுறதைக் கேளுங்க. சேருக்கு நடந்த மாதிரி, எப்ப என்ன நடக்கும் எண்டு, இந்தக் காலத்தில சொல்லவே ஏலாம இருக்கு. வரட்டா எல்லாளன்.” என்று விடைபெற்றுப் போனான் அவன்.
அவனைத் திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் வந்த எல்லாளனுக்குள் எரிமலையின் சீற்றம். அத்தனைக்கும் காரணம் நான்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறான்.
இளந்திரையன் தப்பியதை ஜஸ்ட் மிஸ்ஸில் உணர்த்தி, அவரைச் சுட்டவன் உயிருடன் இல்லை என்கிற தகவலைத் தந்து, தன் தம்பிக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த உன்னை விடமாட்டேன் என்று மிரட்டிவிட்டுப் போகிறான்.
கிட்டத்தட்ட இது ஒரு நேரடி மோதல்!
இளந்திரையனைச் சென்று பார்க்கக் கூடச் செய்யாமல் விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான். அருள், சாமந்தி போன்ற அடுத்த இளம் தலைமுறையை மொத்தமாக நாசமாக்கி, நாட்டின் சொத்தே இவர்கள்தான் என்று சொல்லும் இளந்திரையன் போன்றவர்களின் உயிரோடு விளையாடுகிறவனை இன்னுமே கையைக் கட்டி வேடிக்கை பார்க்கப் போகிறானா?
அவன் நெஞ்சில் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது.
எதற்கோ, தன் அறையிலிருந்து வெளியே வந்த இளந்திரையன், விழிகளை மூடித் தனியாக அமர்ந்திருந்த எல்லாளனைக் கண்டுவிட்டு, அவனிடம் வந்தார்.
“எல்லாளன்?”