அத்தியாயம் 36
எல்லாளன் வீட்டில் தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள் ஆதினி.
சத்தியப்பிரமாணத்துக்கான ஆயத்தங்களால் கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு ஒழுங்கான உறக்கம் இல்லை. கூடவே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து வந்த களைப்போடு சேர்த்துக் காண்டீபனின் கைதும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாகச் சோர்ந்திருந்தாள்.
இதெல்லாம் போதாது என்று அவள் மண்டைக்குள் ஓராயிரம்
கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.
அவளுக்கு அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான் எல்லாளன்.
காண்டீபன் வீட்டினருக்குப் பாதுகாப்புத் தேவை என்பதில், தனியார் நிறுவனத்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் ஒருவரை வரவழைத்து, அவருக்கான ஏற்பாடுகளைச் செய்துமுடித்துவிட்டு அவர்கள் இருவரும் புறப்பட்டபோது, நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது.
அந்த நேரத்தில் காண்டீபனிடம் அழைத்துச் செல் என்று அடம் பிடித்தவளைத்தான் இங்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். அந்தக் கோபமும் இருந்தது அவளுக்கு!
எல்லாளனும் அவசரமாக அவளைச் சமாதானம் செய்யப் போகவில்லை. காரணம் மிதிலா! கைகளில் தெரிந்த வெட்டுக் காயங்களின் அடையாளங்கள், இன்னுமே தீராத நடுக்கம், பயந்த உடல்மொழி எல்லாம் அவனைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.
இத்தனை வருடங்கள் கழிந்தும் இப்படி இருக்கிறாள் என்றால், அன்று காண்டீபன் இவர்களைச் சந்தித்த நாள்களில் எவ்வளவு மோசமாக இருந்திருப்பாள்? தம் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பை அறிந்திருந்தும், அவளை ஏன் காண்டீபன் மணந்தான் என்பதற்கான காரணம், இன்னுமே தெளிவாகப் புரிந்தது.
ஆனால், எதிலுமே சூட்டிகையாக இருந்த பெண், எப்படி அதற்குள் சென்று மாட்டிக்கொண்டாள்? அத்தனை காலமும் புகலிடமாக இருந்த எல்லாளன் வீடு இல்லாமல் போனதும், நட்பாய் இருந்த ஆண்கள் இருவரும் காணாமல் போனதும் சேர, எதையும் பிரித்தறியத் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டாளோ?
காலம் வகுத்த கணக்கினுள் சிக்குண்டு, திசைக்கு ஒருவராக வெட்டி வீசப்பட்டுப் போன, அவர்கள் மூவரினதும் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது.
“மிதிலாக்கா ஏன் உங்களைப் பாத்ததும் அந்தளவுக்கு அதிர்ந்தவா? உங்களிட்டயும் தடுமாற்றம் தெரிஞ்சது. அண்ணா குடும்பத்தை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
திடீர் என்று வந்த கேள்விகளில் சிந்தனை கலைந்து அவளைத் திரும்பிப் பார்த்தான். இந்த வினாக்களுக்கான விடைகள் அவளை இன்னுமே கோபப்படுத்தி, அவனுக்கும் அவளுக்குமிடையில் பிணக்கை உருவாக்கப்போகின்றவை. அது தெரிந்தாலும் அவன் எதையும் மறைக்க விருப்பமில்லை.
அதில், “ஒரு காலத்தில எனக்கு அவளில விருப்பம் இருந்தது. அவளுக்கும்.” என்று உள்ளதைச் சொன்னான்.
சத்தியமாக இதை ஆதினி எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் அவனைப் போன்ற கரடுமுரடான ஒருவனுக்கு முன் கதை ஒன்று, அதுவும் காதல் கதை ஒன்று இருக்குமென்று யோசித்ததேயில்லை. சுருக்கென்று நெஞ்சை ஏதோ தைக்க அவனையே வெறித்தாள்.
அவள் பார்வை அவனையும் என்னவோ செய்ய, “அதெல்லாம் அப்ப ஆதினி.” என்றான் ஒருவித வேகத்தோடு.
வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. இப்போதும் இருந்தால் அதற்குப் பெயர் வேறாயிற்றே! ஆனால், அவன் மனத்தில் அவளுக்கு முன் ஒருத்தி இருந்திருக்கிறாள். அதுதானே விடயம்.
மீண்டும் தோற்றுவிட்டதாக உணர்ந்தவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. வார்த்தைகள் சீற முயன்றன. விழிகளை இறுக்கி மூடி, நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுத் தன்னை அடக்க முயன்றாள்.
அவளை அப்படிப் பார்க்க முடியாமல், இன்னொரு நாற்காலியை அவளருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, அவளைத் தன் புறம் திருப்பி, “நீயா கண்டதையும் யோசிக்காத. அதெல்லாம் சின்ன வயசில நடந்தது. நாங்க மூண்டு பேரும் ஒரே ஊர்…” என்று ஆரம்பித்து, அவர்கள் ஒன்றாகத் திரிந்தது, அவனுக்கு மிதிலா மீது உண்டான ஈர்ப்பு, அன்னை தந்தைக்கு நடந்த கொடூர மரணம், அதிலிருந்து ஊரை விட்டே வெளியேறியது என்று அனைத்தையும் சொன்னான்.
அவன் என்ன சொல்லியும் அவள் மனம் சமன்படவில்லை. ஒருவித ஏமாற்றம் நெஞ்சு முழுவதும் பரவிற்று. காண்டீபன் கூட அவளிடம் உண்மையாக இருக்கவில்லையே! இவன் மீதான அன்பில்தான் அவளைத் தேடி வந்து பழகி இருக்கிறான். ஆக, மீண்டும் இவர்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டிருக்கிறாள்!
பழைய காயங்களை எல்லாம் ஆற்றிக்கொண்டு வந்தவளிடம் இந்தா பிடி புதுக் காயங்கள் என்று தருவது போலிருந்தது.
அவன் முன்னே உடையப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிச் சமாளிக்க முயன்றாள். அவளை அப்படிப் பார்க்க முடியாமல், “என்ன நீ?” என்று, அவளை இழுத்துத் தன் மார்பில் சேர்த்தான் அவன்.
அடுத்த கணமே எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ, “என்னைத் தொடாதீங்க நீங்க!” என்று அவனை உதறித் தள்ளினாள்.
முகம் மாறிப்போனது அவனுக்கு. அந்தளவுக்கு என்ன இன்னொருத்தியோடு குடும்பமா நடத்திவிட்டு வந்தான்? வார்த்தைகள் தடித்துக்கொண்டு வரப்பார்க்க, விருட்டென்று எழுந்து வெளியே நடந்தான்.
தேய்பிறை நிலவின் ஒளியில் நின்றவன் மனத்தின் கொதிப்பை, அந்த நேரத்துக் குளிர் காற்றுக் கூட அடக்கமாட்டேன் என்றது! அவள் உதறித் தள்ளிய காட்சியே மீண்டும் மீண்டும் கண்முன்னே வந்து நிற்க, சினம் மிகுந்துகொண்டே போனது.
ஒரு கட்டத்துக்கு மேல் தன்னை அடக்க முடியாமல் மீண்டும் உள்ளே வந்து, “நீ சொன்னதின்ர அர்த்தம் என்ன எண்டு உனக்கு விளங்கினதா?” என்று சீறினான்.
அவள் அசையவே இல்லை.
“ஆதினி!”
“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” வெடுக்கென்று நிமிர்ந்து சிடுசிடுத்தவளின் சிவந்திருந்த நாசியும், இமைகளில் படிந்திருந்த ஈரமும் அழுத்திருக்கிறாள் என்று சொல்ல, அப்படியே நின்றுவிட்டான் எல்லாளன். அவன் சினமும் கொஞ்சமாய்த் தணிந்து போயிற்று.
எல்லாளன் வீட்டில் தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள் ஆதினி.
சத்தியப்பிரமாணத்துக்கான ஆயத்தங்களால் கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு ஒழுங்கான உறக்கம் இல்லை. கூடவே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து வந்த களைப்போடு சேர்த்துக் காண்டீபனின் கைதும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாகச் சோர்ந்திருந்தாள்.
இதெல்லாம் போதாது என்று அவள் மண்டைக்குள் ஓராயிரம்
கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.
அவளுக்கு அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான் எல்லாளன்.
காண்டீபன் வீட்டினருக்குப் பாதுகாப்புத் தேவை என்பதில், தனியார் நிறுவனத்துப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் ஒருவரை வரவழைத்து, அவருக்கான ஏற்பாடுகளைச் செய்துமுடித்துவிட்டு அவர்கள் இருவரும் புறப்பட்டபோது, நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது.
அந்த நேரத்தில் காண்டீபனிடம் அழைத்துச் செல் என்று அடம் பிடித்தவளைத்தான் இங்குக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். அந்தக் கோபமும் இருந்தது அவளுக்கு!
எல்லாளனும் அவசரமாக அவளைச் சமாதானம் செய்யப் போகவில்லை. காரணம் மிதிலா! கைகளில் தெரிந்த வெட்டுக் காயங்களின் அடையாளங்கள், இன்னுமே தீராத நடுக்கம், பயந்த உடல்மொழி எல்லாம் அவனைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.
இத்தனை வருடங்கள் கழிந்தும் இப்படி இருக்கிறாள் என்றால், அன்று காண்டீபன் இவர்களைச் சந்தித்த நாள்களில் எவ்வளவு மோசமாக இருந்திருப்பாள்? தம் இருவருக்குள்ளும் இருந்த ஈர்ப்பை அறிந்திருந்தும், அவளை ஏன் காண்டீபன் மணந்தான் என்பதற்கான காரணம், இன்னுமே தெளிவாகப் புரிந்தது.
ஆனால், எதிலுமே சூட்டிகையாக இருந்த பெண், எப்படி அதற்குள் சென்று மாட்டிக்கொண்டாள்? அத்தனை காலமும் புகலிடமாக இருந்த எல்லாளன் வீடு இல்லாமல் போனதும், நட்பாய் இருந்த ஆண்கள் இருவரும் காணாமல் போனதும் சேர, எதையும் பிரித்தறியத் தெரியாமல் சென்று சிக்கிக்கொண்டாளோ?
காலம் வகுத்த கணக்கினுள் சிக்குண்டு, திசைக்கு ஒருவராக வெட்டி வீசப்பட்டுப் போன, அவர்கள் மூவரினதும் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில் மனத்தின் கனம் கூடிக்கொண்டே போனது.
“மிதிலாக்கா ஏன் உங்களைப் பாத்ததும் அந்தளவுக்கு அதிர்ந்தவா? உங்களிட்டயும் தடுமாற்றம் தெரிஞ்சது. அண்ணா குடும்பத்தை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
திடீர் என்று வந்த கேள்விகளில் சிந்தனை கலைந்து அவளைத் திரும்பிப் பார்த்தான். இந்த வினாக்களுக்கான விடைகள் அவளை இன்னுமே கோபப்படுத்தி, அவனுக்கும் அவளுக்குமிடையில் பிணக்கை உருவாக்கப்போகின்றவை. அது தெரிந்தாலும் அவன் எதையும் மறைக்க விருப்பமில்லை.
அதில், “ஒரு காலத்தில எனக்கு அவளில விருப்பம் இருந்தது. அவளுக்கும்.” என்று உள்ளதைச் சொன்னான்.
சத்தியமாக இதை ஆதினி எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் அவனைப் போன்ற கரடுமுரடான ஒருவனுக்கு முன் கதை ஒன்று, அதுவும் காதல் கதை ஒன்று இருக்குமென்று யோசித்ததேயில்லை. சுருக்கென்று நெஞ்சை ஏதோ தைக்க அவனையே வெறித்தாள்.
அவள் பார்வை அவனையும் என்னவோ செய்ய, “அதெல்லாம் அப்ப ஆதினி.” என்றான் ஒருவித வேகத்தோடு.
வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. இப்போதும் இருந்தால் அதற்குப் பெயர் வேறாயிற்றே! ஆனால், அவன் மனத்தில் அவளுக்கு முன் ஒருத்தி இருந்திருக்கிறாள். அதுதானே விடயம்.
மீண்டும் தோற்றுவிட்டதாக உணர்ந்தவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. வார்த்தைகள் சீற முயன்றன. விழிகளை இறுக்கி மூடி, நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுத் தன்னை அடக்க முயன்றாள்.
அவளை அப்படிப் பார்க்க முடியாமல், இன்னொரு நாற்காலியை அவளருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து, அவளைத் தன் புறம் திருப்பி, “நீயா கண்டதையும் யோசிக்காத. அதெல்லாம் சின்ன வயசில நடந்தது. நாங்க மூண்டு பேரும் ஒரே ஊர்…” என்று ஆரம்பித்து, அவர்கள் ஒன்றாகத் திரிந்தது, அவனுக்கு மிதிலா மீது உண்டான ஈர்ப்பு, அன்னை தந்தைக்கு நடந்த கொடூர மரணம், அதிலிருந்து ஊரை விட்டே வெளியேறியது என்று அனைத்தையும் சொன்னான்.
அவன் என்ன சொல்லியும் அவள் மனம் சமன்படவில்லை. ஒருவித ஏமாற்றம் நெஞ்சு முழுவதும் பரவிற்று. காண்டீபன் கூட அவளிடம் உண்மையாக இருக்கவில்லையே! இவன் மீதான அன்பில்தான் அவளைத் தேடி வந்து பழகி இருக்கிறான். ஆக, மீண்டும் இவர்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டிருக்கிறாள்!
பழைய காயங்களை எல்லாம் ஆற்றிக்கொண்டு வந்தவளிடம் இந்தா பிடி புதுக் காயங்கள் என்று தருவது போலிருந்தது.
அவன் முன்னே உடையப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிச் சமாளிக்க முயன்றாள். அவளை அப்படிப் பார்க்க முடியாமல், “என்ன நீ?” என்று, அவளை இழுத்துத் தன் மார்பில் சேர்த்தான் அவன்.
அடுத்த கணமே எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ, “என்னைத் தொடாதீங்க நீங்க!” என்று அவனை உதறித் தள்ளினாள்.
முகம் மாறிப்போனது அவனுக்கு. அந்தளவுக்கு என்ன இன்னொருத்தியோடு குடும்பமா நடத்திவிட்டு வந்தான்? வார்த்தைகள் தடித்துக்கொண்டு வரப்பார்க்க, விருட்டென்று எழுந்து வெளியே நடந்தான்.
தேய்பிறை நிலவின் ஒளியில் நின்றவன் மனத்தின் கொதிப்பை, அந்த நேரத்துக் குளிர் காற்றுக் கூட அடக்கமாட்டேன் என்றது! அவள் உதறித் தள்ளிய காட்சியே மீண்டும் மீண்டும் கண்முன்னே வந்து நிற்க, சினம் மிகுந்துகொண்டே போனது.
ஒரு கட்டத்துக்கு மேல் தன்னை அடக்க முடியாமல் மீண்டும் உள்ளே வந்து, “நீ சொன்னதின்ர அர்த்தம் என்ன எண்டு உனக்கு விளங்கினதா?” என்று சீறினான்.
அவள் அசையவே இல்லை.
“ஆதினி!”
“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” வெடுக்கென்று நிமிர்ந்து சிடுசிடுத்தவளின் சிவந்திருந்த நாசியும், இமைகளில் படிந்திருந்த ஈரமும் அழுத்திருக்கிறாள் என்று சொல்ல, அப்படியே நின்றுவிட்டான் எல்லாளன். அவன் சினமும் கொஞ்சமாய்த் தணிந்து போயிற்று.