அத்தியாயம் 45
கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி.
“சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள்.
“நானே பயந்திட்டன் எண்டா பாருங்கோவனம்மா!” சந்தோசமாகச் சிரித்துக்கொண்டு சொன்னார் அவர்.
“ஆரு, நீங்க பயந்தனீங்க? எனக்குத்தான் உங்களப் பாக்க நடுங்கினது. முகம் எல்லாம் டெரர்தான். மேடைல பாக்க பொல்லாத ஆள் மாதிரி இருந்தனீங்க அப்பா.”
மகளின் பேச்சில் சத்தமாக நகைத்தார் அவர். “அது உத்தியோகம் என்னம்மா. அந்தப் பதவிக்கான பக்குவத்தோடயும் பொறுப்போடயும் நடக்கோணும். எங்களை நம்பி மக்கள் தங்கட பிரச்சனைகளைக் கொண்டு வருகினம். அதுக்கேற்ற மாதிரி நாங்க கவனிச்சு, சின்ன பிழை கூட நடந்திடாம தீர்ப்புச் சொல்லோணும் இது இனி உங்களுக்கும் பொருந்துமாச்சி!” என்றவர், “உணர்ச்சிவசப்படாம, பொறுமையா, தெளிவா, கதைக்க வேண்டிய பொயிண்ட்ஸ மட்டும் கதைச்சு அருமையா நடந்தது வாதம்.” என்று பாராட்டினார்.
உள்ளே உள்ளம் துள்ளினாலும், “பொய் சொல்லாதீங்க அப்பா! நானே தம் கட்டி ஆரம்பிக்கிறன், நடுவுக்க புகுந்து, ‘இந்த வழக்குக்குத் தேவையானதைக் கேளுங்க ஆதினி!’ எண்டு வில்லன் மாதிரிச் சொல்லிப்போட்டு, இப்ப நல்ல பிள்ளைக்குக் கதைக்கிறீங்க என்ன? வீட்ட வாங்க, உங்களோட பெரிய சண்டையே இருக்கு!” என்றவளுக்குப் பதில் சொல்லக் கூட முடியாமல் நகைத்தார் அவர்.
அவரிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு இவரா நீதிமன்ற டயஸில் சிங்கமென அமர்ந்திருந்தவர் என்று இருந்தது.
அவள் அங்கே நிற்பதைக் கண்டு விட்டு ஓடி வந்தான் கதிரவன். “நினைச்சுப் பாக்கவே ஏலாம இருந்தது மேம், உங்கட ஆர்கியுமென்ட். சில இடங்களில கை தட்டப் பாத்தன். அந்தளவுக்கு இருந்தது. சேர கையாலேயே பிடிக்க முடியேல்ல. என்ன நடந்தாலும் முகத்தில காட்ட மாட்டார். ஆனா இண்டைக்கு அவரின்ர முகம் அவ்வளவு வெளிச்சமா இருந்தது.” என்றதும் அவள் முகத்தில் விரிந்த புன்னகை.
“நன்றி கதிரவன். அது நானா வாதாட இல்ல. எனக்குள்ள இருந்த காண்டீபன் அண்ணாதான் வாதாட வச்சவர். அவருக்கு நடந்த அநியாயமும், அதால எனக்கு வந்த கோவமும்தான் இதுக்கெல்லாம் காரணம்.” என்றவள் விழிகளின் ஓரம், மெல்லிய நீர்க் கசிவு.
அவளையே வியப்புடன் பார்த்து நின்றான் கதிரவன். அவன் முதன் முதலாகச் சந்தித்தபோது அகந்தையும் ஆணவமும் கொண்டு நின்றவள் அல்லள் இவள்! பாசம் ஒரு பெண்ணை எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது?
அவனுக்கு, ‘நீங்க கொஞ்சம் ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பா!’ என்று அன்று காண்டீபன் சொன்னதுதான் உள்ளே ஓடிற்று.
உடனேயே, “நான் உங்களோட ஃபிரெண்டா இருக்கலாமா மேம்?” என்றான் வேறு யோசிக்காமல்.
வியப்போடு புருவங்களை உயர்த்தினாள் ஆதினி.
“இல்ல, காண்டீபன் சேர்தான் சொன்னவர். அதான்…” இப்போது அவனிடம் மெல்லிய தயக்கம் வந்திருந்தது.
“ஓ!” என்று நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்டவளுக்குக் கண்ணீர்ச் சுரப்பிகள் மீண்டும் திறந்துகொள்ளப் பார்த்தன.
மனத்தின் அடியாழத்தில் அமிழ்ந்திருந்த அவன் நினைவுப் படிமங்களை இன்று திரும்பவும் கலைத்துவிட்டதாலோ என்னவோ, கண்ணீர் சட்டுச் சட்டென்று வந்துகொண்டிருந்தது.
அதை உள்ளிழுத்துக்கொண்டு, “அதுக்கு முதல் நீங்க இந்த மேமை விடோணும்” என்றாள்.
“அது கஷ்டம் மேம். எங்கட சேரின்ர வருங்கால வைஃப் நீங்க. லோயர் வேற. அது அப்பிடியே இருக்கட்டும். அதோடேயே நாங்க ஃபிரெண்ட்ஸா இருப்பம்.”
அவன் பேச்சில் அவள் மீதான மரியாதையும் எல்லாளன் மீதான மதிப்பும் தெரிய, அதற்கு மேல் வற்புறுத்தப் போகவில்லை அவள்.
“டன்!” என்று தன் கரத்தை அவன் புறமாக நீட்டினாள். அவனும் பற்றிக் குலுக்கினான். முறைப்படி அங்கே ஒரு நட்பதிகாரம் கைச்சாத்திடப்பட்டது!
“நீங்க உங்கட சேரோட போகேல்லையா?” அவனோடு இணைந்து நடந்தபடி வினவினாள்.
“இல்ல, சேர்தான் உங்க எல்லாரையும் கூடவே நிண்டு கொண்டுபோய் விடச் சொன்னவர்.” என்று சொன்னவன், சொன்னது போல அகரனோடு சேர்ந்து, அவர்கள் எல்லோரையும் இரு வீடுகளிலும் சேர்ப்பித்துவிட்டுத்தான் போனான்.
இந்த வழக்குக்கான தீர்ப்பு இன்றோ நாளையோ கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தம் பக்கம்தான் தீர்ப்பு வரும் என்கிற பெரும் நம்பிக்கை வந்திருந்தது. அதைத் தந்தது ஆதினியின் வாதத் திறமை. ஒற்றை நாளிலேயே அவள் யார், அவளின் திறமை என்ன என்று காட்டியிருந்தாள்.
சும்மாவே நண்பனின் உயிரை எடுத்தவர்களை எல்லாளன் விடமாட்டான். இதில், மேலதிக விசாரணைக்கு நீதிமன்றமே அனுமதி தந்த பிறகு விடுவானா? நன்றாகவே பூசை செய்தான்.
கூடவே, வைரவனின் கூட்டாளிகள் இருவரையும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான(Approver) வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான். முடிந்தால் சத்தியநாதனையும் முறையாக மாட்ட வைக்கலாமா எனும் கோணத்தில் நகர்ந்தது, அவன் விசாரணை.
அதே நேரத்தில் துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்க விடாமல் நாளாந்த வாழ்வின் சிக்கல்களும், வருமானமில்லா நிலையும் மிதிலாவை மிரட்டின.
அவர்களுக்கான செலவுகளை ஆதினியும் எல்லாளனும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்தான். அதை ஏற்றுக்கொள்ள அவளுக்குத்தான் விருப்பமில்லை.
யாரிடமும் எதற்கும் கையேந்த விடாமல், அவர்களைக் கட்டிக் காத்த கணவனுக்கு அவள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று மனம் அரித்தது.
தற்சமயம் வெளியே சென்று வேலை பார்க்கும் நிலை அவளுக்கில்லை. வீட்டில் இருந்தே பிழைப்புக்கு என்ன வழி என்று தேட ஆரம்பித்திருந்தாள். தற்போதைக்கு வீட்டுத் தேவைக்கேற்ப மரவெள்ளி, கத்தரி, வெண்டைக்காய் என்று மரக்கறிகள் பயிரிட்டாள். கோழிகள் வாங்கி வளர்த்தாள்.
மகன் நேசரிக்கு செல்ல ஆரம்பித்ததும் வேலைக்குப் போக வேண்டும் எனும் அளவுக்கு யோசித்துக்கொண்டாள்.
சில இழப்புகள் வலியைத் தரும், சில இழப்புகள் வலிமையைத் தரும். கணவனின் இழப்பு வலியோடு சேர்த்து வலிமையையும் தருவதாய் உணர்ந்தாள்.
இல்லாமல், அவன் இருந்த நாள்களில் அவன் எவ்வளவோ சொல்லியும் வீட்டை விட்டுத் தாண்ட விரும்பாமல் அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக வாழ்ந்தவள், இன்று துணிந்து ஏதாவது செய்ய வேண்டும் எனும் அளவுக்கு யோசிப்பாளா?
நாள்கள் தாம் விரையும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவே இல்லை. காண்டீபனின் வழக்கும் ஒவ்வொரு தவணையாக நகர்ந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க ஆரம்பித்திருந்தாள் ஆதினி.
இதற்குள் வேறு சில வழக்குகளும் அவளுக்கு வரத்தொடங்கியிருந்தன. தற்போதைக்கு அவற்றையும் எடுத்துக்கொண்டாலும் அவளுக்கு வழக்காடுவதில் இருக்கும் ஆர்வத்தை விடவும், காண்டீபனைப் போலவே கற்பிக்கும் ஆசையே அதிகரித்துக்கொண்டிருந்தது.
விரைவில் காண்டீபனுக்கு ஒரு வருடத் திதி வர இருந்தது. அதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்திருந்தன. அப்படிக் கடந்த ஒரு நாளின் விடியலில் மீண்டும் ஒருமுறை மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது.
கண்கள் பிடுங்கப்பட்டு, கை கால்கள் உடைக்கப்பட்டு, உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் மாமிசத் துண்டுகளாக வெட்டிக் கூறுபோட்டு, யார் என்றே இனம் காண முடியாத அளவுக்குக் கோரமாக, வீதியில் இறந்து கிடந்தான் சத்தியநாதன்.
யார் கொன்றார் தெரியாது. எதனால் கொன்றார் தெரியாது. ஆனால், அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது சாதாரண மரணமன்று! கொடூர மரணம்!
சம்பவம் நடந்த இடத்துக்கு உடனேயே விரைந்தான் எல்லாளன். புலன் விசாரணை ஆரம்பமாயிற்று. என்ன முகாந்திரம், யார் இதற்குக் காரணம், எப்படி இப்படி வீதியில் தனியாக மாட்டினான் என்று தேட ஆரம்பித்தார்கள்.
வாகனங்கள் வேக வேகமாக வந்து திரும்பிச் சென்றதற்குச் சான்றாக டயர்களின் அடையாளங்களும், சப்பாத்துக் கால்களின் தடங்களும் அவன் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கிடந்தன. அவற்றைப் பின்பற்றி, குற்றவாளியைப் பிடிக்கும் வேலை மிக வேகமாக ஆரம்பமாகியது.
தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சிக்கென்று எஞ்சியிருந்த ஒரேயொரு வாரிசு. இன்று அவனும் இல்லை. மீண்டுமொருமுறை யாழ்ப்பாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. விசேட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். வீதியெங்கும் காவல்துறை வாகனங்களே அங்குமிங்குமாய் சீறிக்கொண்டிருந்தன. மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகொண்டனர்.
தொலைக்காட்சியில் அவனைப் பார்த்த தமயந்தி மயங்கிச் சரிந்தாள். அத்தனை மோசமாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தான் அவன்.
அகரனுக்கு எல்லாளன் மீதுதான் சந்தேகம். எப்படிக் கேட்டும் இல்லை என்று மறுத்தான் எல்லாளன்.
“நீ என்ன சொன்னாலும் எனக்கு உன்னில நம்பிக்கை இல்ல.” உறுதியாகச் சொன்னான் அகரன்.
“நம்பாத போ! என்னவோ அவன் எனக்கு மட்டும்தான் கெடுதல் செய்த மாதிரிக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய். எவனுக்கு என்ன செய்தானோ? எவன் சந்தர்ப்பம் பாத்துப் பழி தீத்தானோ, ஆருக்குத் தெரியும்?”
“காணும் நடிக்காத! அவனில இவ்வளவு துணிச்சலா கை வைக்கிற தைரியம் உனக்கு மட்டும்தான் இருக்கு.” என்றுதான் அப்போதும் நின்றான் அகரன்.
“நன்றி மச்சான், உன்ர பாராட்டுக்கு!” என்றுவிட்டு நடந்தவனை
ஆதினியின் சந்தேகப் பார்வை தொடரவும், “நீயும் ஏதாவது கேட்டுக்கொண்டு வந்தியோ தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான்.
இனி என்னாகுமோ என்கிற திகிலுடனேயே அடுத்த மூன்று நாள்கள் கடந்து போயின. பெரும் கலவரங்கள் ஏதுமற்று நிலவரம் மெல்ல மெல்லக் கட்டுக்குள் வர ஆரம்பித்தது.
சத்தியநாதனைப் போலவோ, இல்லை அவன் தம்பிகளைப் போலவோ அவர்களின் தந்தை சிவநாதசுப்ரமணியன் அவசரப்பட்டு எதையும் செய்து, அரசியலில் தனக்கிருக்கும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் துணியமாட்டார் என்று, எல்லாளன் கணித்தே இருந்தான்.
நடந்ததும் அதேதான். மகன்களின் இறப்பை வைத்து அரசியலில் தனக்கு இன்னும் ஆதாயம் தேட முயன்றார் மனிதர்.
காக்கிச் சட்டையில் காவல் நிலையத்திற்குச் செல்லத் தயாராகி வந்த எல்லாளனின் பார்வை, சட்டத்தினுள் அடங்கி, சுவரில் மாட்டப்பட்டிருந்தவனிடம் சென்றது.
இவனருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தாலும் இவனைப் பாராமலேயே இருந்திருக்கிறான். இவனுக்காகவே ஆதினியோடு உறவு பூண்டு, அவளை நெறிப்படுத்தியும் இருக்கிறான். இவனுக்காகவே அவன். ஆனால், அவனுக்காக இவனால் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. அதனால் மொத்தமாகவே அவனைத் தூக்கிக் காலனுக்குக் கொடுத்துவிட்டான்.
கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி.
“சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள்.
“நானே பயந்திட்டன் எண்டா பாருங்கோவனம்மா!” சந்தோசமாகச் சிரித்துக்கொண்டு சொன்னார் அவர்.
“ஆரு, நீங்க பயந்தனீங்க? எனக்குத்தான் உங்களப் பாக்க நடுங்கினது. முகம் எல்லாம் டெரர்தான். மேடைல பாக்க பொல்லாத ஆள் மாதிரி இருந்தனீங்க அப்பா.”
மகளின் பேச்சில் சத்தமாக நகைத்தார் அவர். “அது உத்தியோகம் என்னம்மா. அந்தப் பதவிக்கான பக்குவத்தோடயும் பொறுப்போடயும் நடக்கோணும். எங்களை நம்பி மக்கள் தங்கட பிரச்சனைகளைக் கொண்டு வருகினம். அதுக்கேற்ற மாதிரி நாங்க கவனிச்சு, சின்ன பிழை கூட நடந்திடாம தீர்ப்புச் சொல்லோணும் இது இனி உங்களுக்கும் பொருந்துமாச்சி!” என்றவர், “உணர்ச்சிவசப்படாம, பொறுமையா, தெளிவா, கதைக்க வேண்டிய பொயிண்ட்ஸ மட்டும் கதைச்சு அருமையா நடந்தது வாதம்.” என்று பாராட்டினார்.
உள்ளே உள்ளம் துள்ளினாலும், “பொய் சொல்லாதீங்க அப்பா! நானே தம் கட்டி ஆரம்பிக்கிறன், நடுவுக்க புகுந்து, ‘இந்த வழக்குக்குத் தேவையானதைக் கேளுங்க ஆதினி!’ எண்டு வில்லன் மாதிரிச் சொல்லிப்போட்டு, இப்ப நல்ல பிள்ளைக்குக் கதைக்கிறீங்க என்ன? வீட்ட வாங்க, உங்களோட பெரிய சண்டையே இருக்கு!” என்றவளுக்குப் பதில் சொல்லக் கூட முடியாமல் நகைத்தார் அவர்.
அவரிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு இவரா நீதிமன்ற டயஸில் சிங்கமென அமர்ந்திருந்தவர் என்று இருந்தது.
அவள் அங்கே நிற்பதைக் கண்டு விட்டு ஓடி வந்தான் கதிரவன். “நினைச்சுப் பாக்கவே ஏலாம இருந்தது மேம், உங்கட ஆர்கியுமென்ட். சில இடங்களில கை தட்டப் பாத்தன். அந்தளவுக்கு இருந்தது. சேர கையாலேயே பிடிக்க முடியேல்ல. என்ன நடந்தாலும் முகத்தில காட்ட மாட்டார். ஆனா இண்டைக்கு அவரின்ர முகம் அவ்வளவு வெளிச்சமா இருந்தது.” என்றதும் அவள் முகத்தில் விரிந்த புன்னகை.
“நன்றி கதிரவன். அது நானா வாதாட இல்ல. எனக்குள்ள இருந்த காண்டீபன் அண்ணாதான் வாதாட வச்சவர். அவருக்கு நடந்த அநியாயமும், அதால எனக்கு வந்த கோவமும்தான் இதுக்கெல்லாம் காரணம்.” என்றவள் விழிகளின் ஓரம், மெல்லிய நீர்க் கசிவு.
அவளையே வியப்புடன் பார்த்து நின்றான் கதிரவன். அவன் முதன் முதலாகச் சந்தித்தபோது அகந்தையும் ஆணவமும் கொண்டு நின்றவள் அல்லள் இவள்! பாசம் ஒரு பெண்ணை எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது?
அவனுக்கு, ‘நீங்க கொஞ்சம் ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பா!’ என்று அன்று காண்டீபன் சொன்னதுதான் உள்ளே ஓடிற்று.
உடனேயே, “நான் உங்களோட ஃபிரெண்டா இருக்கலாமா மேம்?” என்றான் வேறு யோசிக்காமல்.
வியப்போடு புருவங்களை உயர்த்தினாள் ஆதினி.
“இல்ல, காண்டீபன் சேர்தான் சொன்னவர். அதான்…” இப்போது அவனிடம் மெல்லிய தயக்கம் வந்திருந்தது.
“ஓ!” என்று நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்டவளுக்குக் கண்ணீர்ச் சுரப்பிகள் மீண்டும் திறந்துகொள்ளப் பார்த்தன.
மனத்தின் அடியாழத்தில் அமிழ்ந்திருந்த அவன் நினைவுப் படிமங்களை இன்று திரும்பவும் கலைத்துவிட்டதாலோ என்னவோ, கண்ணீர் சட்டுச் சட்டென்று வந்துகொண்டிருந்தது.
அதை உள்ளிழுத்துக்கொண்டு, “அதுக்கு முதல் நீங்க இந்த மேமை விடோணும்” என்றாள்.
“அது கஷ்டம் மேம். எங்கட சேரின்ர வருங்கால வைஃப் நீங்க. லோயர் வேற. அது அப்பிடியே இருக்கட்டும். அதோடேயே நாங்க ஃபிரெண்ட்ஸா இருப்பம்.”
அவன் பேச்சில் அவள் மீதான மரியாதையும் எல்லாளன் மீதான மதிப்பும் தெரிய, அதற்கு மேல் வற்புறுத்தப் போகவில்லை அவள்.
“டன்!” என்று தன் கரத்தை அவன் புறமாக நீட்டினாள். அவனும் பற்றிக் குலுக்கினான். முறைப்படி அங்கே ஒரு நட்பதிகாரம் கைச்சாத்திடப்பட்டது!
“நீங்க உங்கட சேரோட போகேல்லையா?” அவனோடு இணைந்து நடந்தபடி வினவினாள்.
“இல்ல, சேர்தான் உங்க எல்லாரையும் கூடவே நிண்டு கொண்டுபோய் விடச் சொன்னவர்.” என்று சொன்னவன், சொன்னது போல அகரனோடு சேர்ந்து, அவர்கள் எல்லோரையும் இரு வீடுகளிலும் சேர்ப்பித்துவிட்டுத்தான் போனான்.
இந்த வழக்குக்கான தீர்ப்பு இன்றோ நாளையோ கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தம் பக்கம்தான் தீர்ப்பு வரும் என்கிற பெரும் நம்பிக்கை வந்திருந்தது. அதைத் தந்தது ஆதினியின் வாதத் திறமை. ஒற்றை நாளிலேயே அவள் யார், அவளின் திறமை என்ன என்று காட்டியிருந்தாள்.
சும்மாவே நண்பனின் உயிரை எடுத்தவர்களை எல்லாளன் விடமாட்டான். இதில், மேலதிக விசாரணைக்கு நீதிமன்றமே அனுமதி தந்த பிறகு விடுவானா? நன்றாகவே பூசை செய்தான்.
கூடவே, வைரவனின் கூட்டாளிகள் இருவரையும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான(Approver) வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான். முடிந்தால் சத்தியநாதனையும் முறையாக மாட்ட வைக்கலாமா எனும் கோணத்தில் நகர்ந்தது, அவன் விசாரணை.
அதே நேரத்தில் துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்க விடாமல் நாளாந்த வாழ்வின் சிக்கல்களும், வருமானமில்லா நிலையும் மிதிலாவை மிரட்டின.
அவர்களுக்கான செலவுகளை ஆதினியும் எல்லாளனும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்தான். அதை ஏற்றுக்கொள்ள அவளுக்குத்தான் விருப்பமில்லை.
யாரிடமும் எதற்கும் கையேந்த விடாமல், அவர்களைக் கட்டிக் காத்த கணவனுக்கு அவள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று மனம் அரித்தது.
தற்சமயம் வெளியே சென்று வேலை பார்க்கும் நிலை அவளுக்கில்லை. வீட்டில் இருந்தே பிழைப்புக்கு என்ன வழி என்று தேட ஆரம்பித்திருந்தாள். தற்போதைக்கு வீட்டுத் தேவைக்கேற்ப மரவெள்ளி, கத்தரி, வெண்டைக்காய் என்று மரக்கறிகள் பயிரிட்டாள். கோழிகள் வாங்கி வளர்த்தாள்.
மகன் நேசரிக்கு செல்ல ஆரம்பித்ததும் வேலைக்குப் போக வேண்டும் எனும் அளவுக்கு யோசித்துக்கொண்டாள்.
சில இழப்புகள் வலியைத் தரும், சில இழப்புகள் வலிமையைத் தரும். கணவனின் இழப்பு வலியோடு சேர்த்து வலிமையையும் தருவதாய் உணர்ந்தாள்.
இல்லாமல், அவன் இருந்த நாள்களில் அவன் எவ்வளவோ சொல்லியும் வீட்டை விட்டுத் தாண்ட விரும்பாமல் அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக வாழ்ந்தவள், இன்று துணிந்து ஏதாவது செய்ய வேண்டும் எனும் அளவுக்கு யோசிப்பாளா?
நாள்கள் தாம் விரையும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவே இல்லை. காண்டீபனின் வழக்கும் ஒவ்வொரு தவணையாக நகர்ந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க ஆரம்பித்திருந்தாள் ஆதினி.
இதற்குள் வேறு சில வழக்குகளும் அவளுக்கு வரத்தொடங்கியிருந்தன. தற்போதைக்கு அவற்றையும் எடுத்துக்கொண்டாலும் அவளுக்கு வழக்காடுவதில் இருக்கும் ஆர்வத்தை விடவும், காண்டீபனைப் போலவே கற்பிக்கும் ஆசையே அதிகரித்துக்கொண்டிருந்தது.
விரைவில் காண்டீபனுக்கு ஒரு வருடத் திதி வர இருந்தது. அதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்திருந்தன. அப்படிக் கடந்த ஒரு நாளின் விடியலில் மீண்டும் ஒருமுறை மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது.
கண்கள் பிடுங்கப்பட்டு, கை கால்கள் உடைக்கப்பட்டு, உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் மாமிசத் துண்டுகளாக வெட்டிக் கூறுபோட்டு, யார் என்றே இனம் காண முடியாத அளவுக்குக் கோரமாக, வீதியில் இறந்து கிடந்தான் சத்தியநாதன்.
யார் கொன்றார் தெரியாது. எதனால் கொன்றார் தெரியாது. ஆனால், அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது சாதாரண மரணமன்று! கொடூர மரணம்!
சம்பவம் நடந்த இடத்துக்கு உடனேயே விரைந்தான் எல்லாளன். புலன் விசாரணை ஆரம்பமாயிற்று. என்ன முகாந்திரம், யார் இதற்குக் காரணம், எப்படி இப்படி வீதியில் தனியாக மாட்டினான் என்று தேட ஆரம்பித்தார்கள்.
வாகனங்கள் வேக வேகமாக வந்து திரும்பிச் சென்றதற்குச் சான்றாக டயர்களின் அடையாளங்களும், சப்பாத்துக் கால்களின் தடங்களும் அவன் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கிடந்தன. அவற்றைப் பின்பற்றி, குற்றவாளியைப் பிடிக்கும் வேலை மிக வேகமாக ஆரம்பமாகியது.
தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சிக்கென்று எஞ்சியிருந்த ஒரேயொரு வாரிசு. இன்று அவனும் இல்லை. மீண்டுமொருமுறை யாழ்ப்பாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. விசேட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். வீதியெங்கும் காவல்துறை வாகனங்களே அங்குமிங்குமாய் சீறிக்கொண்டிருந்தன. மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகொண்டனர்.
தொலைக்காட்சியில் அவனைப் பார்த்த தமயந்தி மயங்கிச் சரிந்தாள். அத்தனை மோசமாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தான் அவன்.
அகரனுக்கு எல்லாளன் மீதுதான் சந்தேகம். எப்படிக் கேட்டும் இல்லை என்று மறுத்தான் எல்லாளன்.
“நீ என்ன சொன்னாலும் எனக்கு உன்னில நம்பிக்கை இல்ல.” உறுதியாகச் சொன்னான் அகரன்.
“நம்பாத போ! என்னவோ அவன் எனக்கு மட்டும்தான் கெடுதல் செய்த மாதிரிக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய். எவனுக்கு என்ன செய்தானோ? எவன் சந்தர்ப்பம் பாத்துப் பழி தீத்தானோ, ஆருக்குத் தெரியும்?”
“காணும் நடிக்காத! அவனில இவ்வளவு துணிச்சலா கை வைக்கிற தைரியம் உனக்கு மட்டும்தான் இருக்கு.” என்றுதான் அப்போதும் நின்றான் அகரன்.
“நன்றி மச்சான், உன்ர பாராட்டுக்கு!” என்றுவிட்டு நடந்தவனை
ஆதினியின் சந்தேகப் பார்வை தொடரவும், “நீயும் ஏதாவது கேட்டுக்கொண்டு வந்தியோ தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான்.
இனி என்னாகுமோ என்கிற திகிலுடனேயே அடுத்த மூன்று நாள்கள் கடந்து போயின. பெரும் கலவரங்கள் ஏதுமற்று நிலவரம் மெல்ல மெல்லக் கட்டுக்குள் வர ஆரம்பித்தது.
சத்தியநாதனைப் போலவோ, இல்லை அவன் தம்பிகளைப் போலவோ அவர்களின் தந்தை சிவநாதசுப்ரமணியன் அவசரப்பட்டு எதையும் செய்து, அரசியலில் தனக்கிருக்கும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் துணியமாட்டார் என்று, எல்லாளன் கணித்தே இருந்தான்.
நடந்ததும் அதேதான். மகன்களின் இறப்பை வைத்து அரசியலில் தனக்கு இன்னும் ஆதாயம் தேட முயன்றார் மனிதர்.
காக்கிச் சட்டையில் காவல் நிலையத்திற்குச் செல்லத் தயாராகி வந்த எல்லாளனின் பார்வை, சட்டத்தினுள் அடங்கி, சுவரில் மாட்டப்பட்டிருந்தவனிடம் சென்றது.
இவனருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தாலும் இவனைப் பாராமலேயே இருந்திருக்கிறான். இவனுக்காகவே ஆதினியோடு உறவு பூண்டு, அவளை நெறிப்படுத்தியும் இருக்கிறான். இவனுக்காகவே அவன். ஆனால், அவனுக்காக இவனால் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. அதனால் மொத்தமாகவே அவனைத் தூக்கிக் காலனுக்குக் கொடுத்துவிட்டான்.