அத்தியாயம் 8
அஜய் அவன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. அவன் போய் வரும் இடங்கள், நண்பர்கள், கடைத்தெரு என்று எல்லா இடமும் வலைவிரித்துத் தேடினான் கதிரவன். ஆனாலும் அவன் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி இருந்தான் அஜய்.
ஒரு இளம் பெண்ணின் உயிர் போயிருக்கிறது. அதற்கான சிறு துப்புக் கூடக் கிடைக்காமல் இருந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவன் கிடைத்தும் தவற விட்டுவிட்டார்கள். காரணம் ஆதினி.
மிகுந்த எரிச்சலில் இருந்தான் எல்லாளன். சாகித்தியனை மீண்டும் அழைத்து விசாரித்த போதும் அஜையைப் பற்றிப் புதிதாக எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
அப்போது கதிரவன் அழைத்தான்.
“சேர், அஜய் ஒரு கடைல பைக்கை விட்டுட்டுப் போயிருக்கிறான். போய் எடுக்கட்டாம் எண்டு பிரைவேட் நம்பர்ல இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறான். இப்ப நான் அந்தக் கடைலதான் நிக்கிறன். அவன்ர பைக்கும் நிக்குது. பெட்ரோல் இல்லை எண்டு பொய் சொல்லியிருக்கிறான். அங்க இருந்து அவனைக் கூட்டிக்கொண்டு போனது ஒரு பெட்டையாம். சிவப்பு நிற ஸ்கூட்டியாம். எனக்கு என்னவோ ஆதினியோ எண்டு யோசினையா இருக்கு.” என்று அவன் திரட்டிய தகவல் முழுவதையும் சொன்னான்.
“நீங்க அங்கேயே நில்லுங்க. இப்ப நான் உங்களுக்கு அவளின்ர ஃபோட்டோ ஒண்டு அனுப்புறன். அவளா எண்டு காட்டிக் கேளுங்க.” என்றவன் சியாமளாவோடு எப்போதோ எங்கேயோ அவள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தன் கேலரியில் தேடி எடுத்து அனுப்பிவைத்தான்.
இவனை லைனில் வைத்துக்கொண்டே அந்தக் கடைக்காரரிடம் ஃபோட்டோவை காட்டிக் கேட்டான் கதிரவன்.
அவரும், “ஓம் சேர், இந்தப் பிள்ளைதான். எனக்கு நல்லாத் தெரியும். நேற்று நீலத்தில பிளவுசும் கறுப்பில பாவாடையும் போட்டிருந்தவா.” என்றார் அவர்.
சாமந்தியின் இறுத்திச் சடங்கின்போது அவள் அணிந்திருந்தது அதுதான். கதிரவனுக்கு அவள்தான் என்று உறுதியாயிற்று.
‘இவளை!’ பல்லைக் கடித்தான் எல்லாளன். பார்க்கிறவனை எல்லாம் நம்பாதே என்று எத்தனை தடவைகள் சொல்லியிருப்பான்! கேட்டாளா?
“நீங்க ரெயில்வே, பஸ் ஸ்டான்ட் எல்லாம் விசாரிங்க. மிஞ்சிமிஞ்சிப் போனாலும் கொழும்புக்கு ஓடி இருப்பான். நான் அவளை விசாரிக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
*****
இப்போதெல்லாம் ஆதினியின் மனம் தனிமையை விரும்பிற்று. அந்தத் தனிமையில் எல்லாளனைப் பற்றி அசைபோடுவதில் ஆனந்தமும் கொண்டது. காதல் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், அவள் மனத்தைச் சலனப்படுத்தியவனே எதிர்காலத் துணையாகவும் வரப்போகிறான் என்றானதும், இயல்பாகவே அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான் அவன்.
அப்படித்தான் இன்றும் சிந்தையை அவனிடம் சிதற விட்டுவிட்டு, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நின்றிருந்தவளை, “அஜய் எங்க?” என்ற எல்லாளனின் கடினக் குரல் கலைத்தது.
வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். அவன் விழிகளில் தெறித்த கோபத்தைக் கண்டு அவள் மனது துணுக்குற்றது.
“அஜய் எங்க எண்டு கேட்டனான்?”
அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்று முடிவானதிலிருந்து அவனிடமிருந்து பிரத்தியேகமான ஒரு பார்வையை, பேச்சை எதிர்பார்த்திருந்தவளால் எப்போதும்போல் துடுக்காகப் பதில் சொல்ல இயலாமல் போயிற்று.
“கவனமா இரு, புத்தியா நட எண்டு எத்தின தரம் சொல்லியிருப்பன். கேட்டியா நீ? ஒரு பொம்பிளைப் பிள்ளை சாகிறதுக்குக் காரணமா இருந்திட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான். அதுக்கு நீ உதவி செய்திருக்கிறாய். இல்ல, நீயும் சேந்துதான் அந்தப் பிள்ளையைக் கொன்டியா(கொன்றாயா)?” என்றதும் அவள் தேகம் ஒரு முறை தூக்கிப்போட்டது.
“என்ன விசர்க் கத கதைக்கிறீங்க?” என்று தன்னை மீறிச் சீறினாள்.
“விசர்க் கத கதைக்கிறனோ? அறைஞ்சு விட்டுடுவன். ஒழுங்கு மரியாதையாச் சொல்லு! எங்க அவன்?”
அறைவானாமா? அவ்வளவு தைரியமா? விழிகளில் நெருப்புப் பறக்க, “எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கென்று சொல்லி முகத்தைத் திருப்ப முதலே, அவள் கையைப் பற்றி இழுத்துத் தன் முன்னே நிறுத்தி இருந்தான் அவன்.
அஜய் அவன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. அவன் போய் வரும் இடங்கள், நண்பர்கள், கடைத்தெரு என்று எல்லா இடமும் வலைவிரித்துத் தேடினான் கதிரவன். ஆனாலும் அவன் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி இருந்தான் அஜய்.
ஒரு இளம் பெண்ணின் உயிர் போயிருக்கிறது. அதற்கான சிறு துப்புக் கூடக் கிடைக்காமல் இருந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவன் கிடைத்தும் தவற விட்டுவிட்டார்கள். காரணம் ஆதினி.
மிகுந்த எரிச்சலில் இருந்தான் எல்லாளன். சாகித்தியனை மீண்டும் அழைத்து விசாரித்த போதும் அஜையைப் பற்றிப் புதிதாக எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.
அப்போது கதிரவன் அழைத்தான்.
“சேர், அஜய் ஒரு கடைல பைக்கை விட்டுட்டுப் போயிருக்கிறான். போய் எடுக்கட்டாம் எண்டு பிரைவேட் நம்பர்ல இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறான். இப்ப நான் அந்தக் கடைலதான் நிக்கிறன். அவன்ர பைக்கும் நிக்குது. பெட்ரோல் இல்லை எண்டு பொய் சொல்லியிருக்கிறான். அங்க இருந்து அவனைக் கூட்டிக்கொண்டு போனது ஒரு பெட்டையாம். சிவப்பு நிற ஸ்கூட்டியாம். எனக்கு என்னவோ ஆதினியோ எண்டு யோசினையா இருக்கு.” என்று அவன் திரட்டிய தகவல் முழுவதையும் சொன்னான்.
“நீங்க அங்கேயே நில்லுங்க. இப்ப நான் உங்களுக்கு அவளின்ர ஃபோட்டோ ஒண்டு அனுப்புறன். அவளா எண்டு காட்டிக் கேளுங்க.” என்றவன் சியாமளாவோடு எப்போதோ எங்கேயோ அவள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தன் கேலரியில் தேடி எடுத்து அனுப்பிவைத்தான்.
இவனை லைனில் வைத்துக்கொண்டே அந்தக் கடைக்காரரிடம் ஃபோட்டோவை காட்டிக் கேட்டான் கதிரவன்.
அவரும், “ஓம் சேர், இந்தப் பிள்ளைதான். எனக்கு நல்லாத் தெரியும். நேற்று நீலத்தில பிளவுசும் கறுப்பில பாவாடையும் போட்டிருந்தவா.” என்றார் அவர்.
சாமந்தியின் இறுத்திச் சடங்கின்போது அவள் அணிந்திருந்தது அதுதான். கதிரவனுக்கு அவள்தான் என்று உறுதியாயிற்று.
‘இவளை!’ பல்லைக் கடித்தான் எல்லாளன். பார்க்கிறவனை எல்லாம் நம்பாதே என்று எத்தனை தடவைகள் சொல்லியிருப்பான்! கேட்டாளா?
“நீங்க ரெயில்வே, பஸ் ஸ்டான்ட் எல்லாம் விசாரிங்க. மிஞ்சிமிஞ்சிப் போனாலும் கொழும்புக்கு ஓடி இருப்பான். நான் அவளை விசாரிக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
*****
இப்போதெல்லாம் ஆதினியின் மனம் தனிமையை விரும்பிற்று. அந்தத் தனிமையில் எல்லாளனைப் பற்றி அசைபோடுவதில் ஆனந்தமும் கொண்டது. காதல் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், அவள் மனத்தைச் சலனப்படுத்தியவனே எதிர்காலத் துணையாகவும் வரப்போகிறான் என்றானதும், இயல்பாகவே அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான் அவன்.
அப்படித்தான் இன்றும் சிந்தையை அவனிடம் சிதற விட்டுவிட்டு, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நின்றிருந்தவளை, “அஜய் எங்க?” என்ற எல்லாளனின் கடினக் குரல் கலைத்தது.
வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். அவன் விழிகளில் தெறித்த கோபத்தைக் கண்டு அவள் மனது துணுக்குற்றது.
“அஜய் எங்க எண்டு கேட்டனான்?”
அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்று முடிவானதிலிருந்து அவனிடமிருந்து பிரத்தியேகமான ஒரு பார்வையை, பேச்சை எதிர்பார்த்திருந்தவளால் எப்போதும்போல் துடுக்காகப் பதில் சொல்ல இயலாமல் போயிற்று.
“கவனமா இரு, புத்தியா நட எண்டு எத்தின தரம் சொல்லியிருப்பன். கேட்டியா நீ? ஒரு பொம்பிளைப் பிள்ளை சாகிறதுக்குக் காரணமா இருந்திட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான். அதுக்கு நீ உதவி செய்திருக்கிறாய். இல்ல, நீயும் சேந்துதான் அந்தப் பிள்ளையைக் கொன்டியா(கொன்றாயா)?” என்றதும் அவள் தேகம் ஒரு முறை தூக்கிப்போட்டது.
“என்ன விசர்க் கத கதைக்கிறீங்க?” என்று தன்னை மீறிச் சீறினாள்.
“விசர்க் கத கதைக்கிறனோ? அறைஞ்சு விட்டுடுவன். ஒழுங்கு மரியாதையாச் சொல்லு! எங்க அவன்?”
அறைவானாமா? அவ்வளவு தைரியமா? விழிகளில் நெருப்புப் பறக்க, “எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கென்று சொல்லி முகத்தைத் திருப்ப முதலே, அவள் கையைப் பற்றி இழுத்துத் தன் முன்னே நிறுத்தி இருந்தான் அவன்.