அத்தியாயம் 6
அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது.
“வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான்.
“ஆருமே இல்லாத வீட்டை என்னால பாக்கேலாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார்பிலிருந்து தலையை எடுக்காமலேயே மறுத்துத் தலையசைத்தாள்.
“உனக்கெண்டு இவ்வளவு பெரிய காணியும் வீடும் இருக்கேக்க, ஆரோ ஒரு ஆக்களின்ர காணியில ஏன் அநாதை மாதிரி இருக்கவேணும்?” நெஞ்சிலிருந்து பாரத்தை மறைத்து இதமாக எடுத்துச் சொன்னான் அவன்.
“இங்க வந்தா மட்டும் நான் அநாதை இல்லையா?” உன் உலகமாக நான் வருகிறேன் என்றவனைக்கூட இன்னொருத்தியிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு இப்படிக் கேட்கிறவளிடம் என்ன சொல்லுவான்?
“இல்ல! நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ அநாதை இல்ல. இறங்கு!” என்றான் அழுத்தி.
மெல்லத் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் வீட்டைப் பார்த்தாள். சுற்றிவர வளர்ந்துவிட்ட பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. வீடு, அதற்குச் செல்லும் பாதை எல்லாமே திருத்தப் பட்டிருந்தது.
அவள், அண்ணா, அம்மா, அப்பா என்று எல்லோருமாக வாழ்ந்த வீட்டுக்குள் எப்படித் தனியாகப் போவாள்? நெஞ்சு நடுங்க, அம்மா அப்பாவோடு அந்த வீட்டிலிருந்து பயத்தோடு வெளியேறிய நாள் நினைவில் வந்தது.
போகமுதல் அவள் முத்தமிட்டுப் பிரிந்த ரோஜா செடி எங்கே? அண்ணா நட்ட மாமரம் எங்கே? அப்பாவின் செவ்விளநீர் தென்னைகள் எங்கே? ஐயோ.. அம்மாவின் முருங்கை மரத்தைக் கூடக் காணவில்லை. எதையுமே காணவில்லை. அவளும் அந்த வீடும் மட்டும் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சங்களாக மிஞ்சிப்போய் நிற்கிறார்கள்.
“வா..!” அவன் அவளைத் தூக்கியதை உணரவேயில்லை அவள். தேகமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அவளைச் சக்கர நாற்காலியில் இருத்தி மெல்ல அவனே தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
வாசலுக்குப் போனதும் கால்களை வைத்து நடக்கவேண்டும் போலிருந்தது. அவளால் முடியாதே. விம்மல் ஒன்று பெரிதாக வெடித்தது. கைகள் இரண்டாலும் வாயை இறுக்கிப் பொத்திக்கொண்டாள்.அவள் பிறந்து, வளர்ந்து, ஓடி ஆடி விளையாடிய வீட்டில் கால்வைக்கக் காலில்லை அவளுக்கு.
“நிர்மலன் ப்ளீஸ்.. நான் வீட்டை மிதிக்கவேணும்.. கால்.. கால் வைக்கப்போறன்..” பெரும் பரிதவிப்போடு பின்னால் திரும்பி அவனிடம் சொன்னாள்.
அவள் படும்பாட்டைக் கண்டவனின் விழிகளிலும் கண்ணீர்!
நெஞ்சு கனக்க, அவளை மெல்ல எழுப்பி ஒற்றைக் காலில் நிறுத்தினான். முதல் பாதடி அந்த வீட்டினுள் பட்ட நொடி, தேகமெங்கும் அதிர்வலைகள் தாக்க அப்படியே மடிந்து சரிந்தவள் விறாந்தையில் விழுந்து கதறித்தீர்த்தாள்.
ஒன்பது வருடத்து அழுகையை, ஒன்பது வருடத்துத் துயரை, ஒன்பது வருடத்துப் பாரத்தை அழுது தீர்த்தாள். அங்கே, பற்றைகளை வெட்டிக்கொண்டு இருந்தவனும் காரோட்டியும் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு ஓடிவந்தனர். அவளைப் பார்த்த அவர்களின் கண்களிலும் கண்ணீர்.
சொல்லித் தெரியவேண்டியதில்லையே இந்தத் துயரெல்லாம்!
நிர்மலனாலும் தேற்ற முடியவில்லை. தேற்றும் நிலையில் அவனுமில்லை. அவளது அண்ணன் கதிரோன் இரண்டு வயது பெரியவன் என்றாலும் அவனது நண்பன். அவனின் இழப்பு நிர்மலனையும் தாக்கியது.
அவளை அழட்டும் என்று விட்டுவிட்டான். அதன்பிறகாவது தெளிந்து அவளைப் பற்றியும் அவள் யோசிக்கட்டும். அழுது அழுது ஓய்ந்தவளின் அழுகை விம்மலாக மாறி, சின்னச் சின்னக் கேவலாக வந்து நின்றபோது, “கண்மணி! காணும் எழும்பு, வா!” என்றவன் பூவைப்போலத் தூக்கி அங்கே இருந்த சோபாவில் அவளை இருத்தினான்.
உள்ளே சென்று தண்ணீர் எடுத்துவந்து பருகச் செய்தான். ஈரத்துணியைக் கொடுக்க நன்றி சொல்லி முகத்தைத் துடைத்துக்கொண்டவளுக்கு, ஒருமுறை அந்த வீடு முழுவதும் நடந்துபார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மா அப்பாவின் அறையை, சுவாமி அறையை, அண்ணாவின் அறையை, சமையலறையை எல்லாவற்றையும்.. ஒரு சுவரைக்கூட விடாமல் தடவிப்பார்க்க வேண்டும் போலிருந்தது.
அப்போது தேநீரை நீட்டியது ஒரு கரம். யார் என்று பார்த்தவளின் விழிகளில் வியப்பு! இது அவன்.. அன்று துயிலுமில்லத்தில் பார்த்தவன்.
அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது.
“வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான்.
“ஆருமே இல்லாத வீட்டை என்னால பாக்கேலாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார்பிலிருந்து தலையை எடுக்காமலேயே மறுத்துத் தலையசைத்தாள்.
“உனக்கெண்டு இவ்வளவு பெரிய காணியும் வீடும் இருக்கேக்க, ஆரோ ஒரு ஆக்களின்ர காணியில ஏன் அநாதை மாதிரி இருக்கவேணும்?” நெஞ்சிலிருந்து பாரத்தை மறைத்து இதமாக எடுத்துச் சொன்னான் அவன்.
“இங்க வந்தா மட்டும் நான் அநாதை இல்லையா?” உன் உலகமாக நான் வருகிறேன் என்றவனைக்கூட இன்னொருத்தியிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு இப்படிக் கேட்கிறவளிடம் என்ன சொல்லுவான்?
“இல்ல! நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ அநாதை இல்ல. இறங்கு!” என்றான் அழுத்தி.
மெல்லத் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் வீட்டைப் பார்த்தாள். சுற்றிவர வளர்ந்துவிட்ட பற்றைகள் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. வீடு, அதற்குச் செல்லும் பாதை எல்லாமே திருத்தப் பட்டிருந்தது.
அவள், அண்ணா, அம்மா, அப்பா என்று எல்லோருமாக வாழ்ந்த வீட்டுக்குள் எப்படித் தனியாகப் போவாள்? நெஞ்சு நடுங்க, அம்மா அப்பாவோடு அந்த வீட்டிலிருந்து பயத்தோடு வெளியேறிய நாள் நினைவில் வந்தது.
போகமுதல் அவள் முத்தமிட்டுப் பிரிந்த ரோஜா செடி எங்கே? அண்ணா நட்ட மாமரம் எங்கே? அப்பாவின் செவ்விளநீர் தென்னைகள் எங்கே? ஐயோ.. அம்மாவின் முருங்கை மரத்தைக் கூடக் காணவில்லை. எதையுமே காணவில்லை. அவளும் அந்த வீடும் மட்டும் வாழ்ந்த வாழ்க்கையின் எச்சங்களாக மிஞ்சிப்போய் நிற்கிறார்கள்.
“வா..!” அவன் அவளைத் தூக்கியதை உணரவேயில்லை அவள். தேகமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அவளைச் சக்கர நாற்காலியில் இருத்தி மெல்ல அவனே தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
வாசலுக்குப் போனதும் கால்களை வைத்து நடக்கவேண்டும் போலிருந்தது. அவளால் முடியாதே. விம்மல் ஒன்று பெரிதாக வெடித்தது. கைகள் இரண்டாலும் வாயை இறுக்கிப் பொத்திக்கொண்டாள்.அவள் பிறந்து, வளர்ந்து, ஓடி ஆடி விளையாடிய வீட்டில் கால்வைக்கக் காலில்லை அவளுக்கு.
“நிர்மலன் ப்ளீஸ்.. நான் வீட்டை மிதிக்கவேணும்.. கால்.. கால் வைக்கப்போறன்..” பெரும் பரிதவிப்போடு பின்னால் திரும்பி அவனிடம் சொன்னாள்.
அவள் படும்பாட்டைக் கண்டவனின் விழிகளிலும் கண்ணீர்!
நெஞ்சு கனக்க, அவளை மெல்ல எழுப்பி ஒற்றைக் காலில் நிறுத்தினான். முதல் பாதடி அந்த வீட்டினுள் பட்ட நொடி, தேகமெங்கும் அதிர்வலைகள் தாக்க அப்படியே மடிந்து சரிந்தவள் விறாந்தையில் விழுந்து கதறித்தீர்த்தாள்.
ஒன்பது வருடத்து அழுகையை, ஒன்பது வருடத்துத் துயரை, ஒன்பது வருடத்துப் பாரத்தை அழுது தீர்த்தாள். அங்கே, பற்றைகளை வெட்டிக்கொண்டு இருந்தவனும் காரோட்டியும் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு ஓடிவந்தனர். அவளைப் பார்த்த அவர்களின் கண்களிலும் கண்ணீர்.
சொல்லித் தெரியவேண்டியதில்லையே இந்தத் துயரெல்லாம்!
நிர்மலனாலும் தேற்ற முடியவில்லை. தேற்றும் நிலையில் அவனுமில்லை. அவளது அண்ணன் கதிரோன் இரண்டு வயது பெரியவன் என்றாலும் அவனது நண்பன். அவனின் இழப்பு நிர்மலனையும் தாக்கியது.
அவளை அழட்டும் என்று விட்டுவிட்டான். அதன்பிறகாவது தெளிந்து அவளைப் பற்றியும் அவள் யோசிக்கட்டும். அழுது அழுது ஓய்ந்தவளின் அழுகை விம்மலாக மாறி, சின்னச் சின்னக் கேவலாக வந்து நின்றபோது, “கண்மணி! காணும் எழும்பு, வா!” என்றவன் பூவைப்போலத் தூக்கி அங்கே இருந்த சோபாவில் அவளை இருத்தினான்.
உள்ளே சென்று தண்ணீர் எடுத்துவந்து பருகச் செய்தான். ஈரத்துணியைக் கொடுக்க நன்றி சொல்லி முகத்தைத் துடைத்துக்கொண்டவளுக்கு, ஒருமுறை அந்த வீடு முழுவதும் நடந்துபார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மா அப்பாவின் அறையை, சுவாமி அறையை, அண்ணாவின் அறையை, சமையலறையை எல்லாவற்றையும்.. ஒரு சுவரைக்கூட விடாமல் தடவிப்பார்க்க வேண்டும் போலிருந்தது.
அப்போது தேநீரை நீட்டியது ஒரு கரம். யார் என்று பார்த்தவளின் விழிகளில் வியப்பு! இது அவன்.. அன்று துயிலுமில்லத்தில் பார்த்தவன்.