அத்தியாயம் 7
அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிளாஸ்டிக் காலுக்கு அளவு கொடுத்தார்கள். அப்படியே, மின்சாரத்தில் பயன்படுத்தும் சக்கரநாற்காலியும் வாங்கிக்கொண்டான். இனி அவள் கையால் உருட்டத் தேவையில்லை. ஒருமுறை சார்ஜ் போட்டால், குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை பயணிக்கலாம்.
“நீங்க வீட்டை போகேல்லையா?” அதுதான் அவன் நினைத்ததுபோலவே எல்லாம் செய்துவிட்டானே என்று கேட்டாள்.
அதைவிட, அவளைப்பற்றி உஷாவுக்கு எல்லாம் தெரியுமா என்றும் தெரியாது. எவ்வளவோ கேட்டும் மூச்சு விடவில்லை அவன். பொல்லாத பிடிவாதக்காரன்
“என்னைத் துரத்திப்போட்டு என்ன செய்யப் போறாய்? சந்தோசமா வாழப்போறியோ?” கனிவோடும் பாசத்தோடும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறவன் இப்படிக் கேட்டால் மட்டும் காய்ந்துவிடுவான்.
“உஷா பாவமெல்லோ நிர்மலன். சின்னப்பிள்ளைகளோட என்னெண்டு தனியா சமாளிப்பா? ஆரனும் மானசியும் ஏங்கப் போறீனம். எனக்கே பாக்கோணும் மாதிரி இருக்கு.”
“அடுத்தச் சம்மருக்கு ஆறுகிழமை லீவுல எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாறன். இப்ப இப்பிடிப் பார்.” என்று அவர்களின் போட்டோக்களைக் காட்டினான்.
ஆசையாசையாக வாங்கிப் பார்த்தாள்.
அவளுக்கென்று அளவெடுத்துச் செய்யக் கொடுத்த கால் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும், இப்போதெல்லாம் கண்மணி ஊன்றுகோலின் உதவியோடு வீட்டுக்கு வெளியேயும் வரத்துவங்கி இருந்தாள். அன்றும், மூவருக்குமாகத் தேநீரை ஊற்றிக்கொண்டு, அதனை ஒரு கையிலும் மற்ற கையில் ஒற்றை ஊன்றுகோலோடும் வந்தவள், தடுமாறி விழப்போக, பாய்ந்து பிடிக்கப்போன நிர்மலன், அவனைப்போலவே வேகமாக வந்த காந்தனைக் கண்டதும் அவள் கையிலிருந்த கப்பை மட்டும் பற்றிக்கொண்டான்.
அதற்குள் காந்தன் அவளைப் பற்றி விழாமல் தடுத்திருந்தான். கூச்சமாகப் போயிற்று அவளுக்கு.
“சொறி, ஒரு கைல தேத்தண்ணி கொண்டு வந்தன்.. அதுதான்.” நிர்மலனின் முறைப்பில் அவள் குரல் உள்ளுக்குள் போயிருந்தது.
“இதுக்காக வேலை செய்துகொண்டிருக்கிற உங்களைக் கூப்பிடுறதா?” என்றாள் சமாதானமாக.
“எண்டாலும் கவனமா இருக்கவேணும் கண்மணி!” என்று சொன்னது காந்தன்.
“சரி வாங்கோ, தேத்தண்ணி ஆறமுதல் குடிப்பம்.” என்றவள், நிர்மலன் வாங்கி வந்திருந்த கேக்கையும் கொண்டுவந்து மூவருக்கும் பகிர்ந்தாள்.
முற்றத்தின் ஒரு ஓரமாக ஒற்றை வேம்பு ஒன்று, யாரினதும் உதவி இல்லாமல் ஓங்கி வளர்ந்து நின்றதில், அதற்குக் கீழே பிரம்பிலான ஒரு செட் மேசை நாற்காலிகளை வாங்கிப் போட்டிருந்தான் நிர்மலன். அங்கேதான் அவர்களின் மாலைத் தேநீர் பொழுது கழிந்தது.
அந்த நேரத்தில் தமையனைப் பற்றிக் காந்தனிடம் விசாரித்தாள் கண்மணி. அவனும் கதைக்க யாருமில்லாமல் இருந்தவன் தானே. மலர்ந்த சிரிப்போடு கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் தலையிடாமல் கவனித்திருந்தான் நிர்மலன்.
நாட்கள் நகர்ந்தது. அவளுக்கான காலும் பொறுத்தப்பட்டுவிட, ஊன்றுகோலும் இல்லாமல் நடமாடத் துவங்கியிருந்தாள் கண்மணி. போதாக்குறைக்கு, காந்தனும் அவனுமாகச் சேர்ந்து அருகிலேயே ஒரு நீண்ட கொட்டிலை இறக்கி சின்னதாக ஒரு டியூஷன் செண்டர் போல ஒன்றையும் உருவாக்கினார்கள்.
“உனக்குக் கணிதம் நல்லா வருமெல்லோ. ஆங்கிலமும் சேர்த்து சொல்லிக்குடு. நேரமும் போகும், உனக்கும் மாற்றமாயிருக்கும்!” என்றவன், அதை அவன் நிற்கும்போதே செயலாக்கி இருந்தான்.
ஊரவர்களும், அவள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு வந்து கதைத்துப்போனதில் மனதுக்கு மிகவுமே ஆறுதலாக உணர்ந்தாள்.
பலர் அவள் உயிரோடு இல்லை என்றே நினைத்திருக்கிறார்கள். அவர்களில் பலரை அவளும் அப்படித்தான் கேள்விப் பட்டிருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. நிர்மலன் இலங்கை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அந்த இரண்டு மாதத்தில் அவளது வாழ்க்கையையே மாற்றிப்போட்டிருந்தான்.
காந்தனுக்கும் தமிழும் சமயமும் நன்றாக வரும் என்பதில் அவனும் அங்கே படிப்பிக்கத் தொடங்கி இருந்தது அவனுக்கும் பெரும் மாற்றமாய் இருந்தது. இருவருக்கும் அவர்களுக்கான வருமானமும் வரும். நமக்காக யாருமில்லையே என்கிற வேண்டாத சிந்தனைகளில் இருந்தும் விடுதலையே!
கண்மணி இப்போதெல்லாம் நிறைய மாறி இருந்தாள். அவளின் தேவைகளை அவளே பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டதால் தன்னம்பிக்கையோடு நடமாடத் துவங்கியிருந்தாள். அதுவும், படிக்கவரும் குழந்தைகளோடு குழந்தையாக அவள் சிரிப்பதைப் பார்க்கையில் மனம் நிறைந்துபோகும் நிர்மலனுக்கு. இந்தச் சிரிப்பை மீட்டுவிடத்தானே பாடுபட்டான்!
அவள் கண்களில் ஒளியும் மீண்டிருந்தது. எதிர்காலம் பற்றிப் பலதை அவனோடு கலந்துரையாடினாள். அதிலே ஒன்று, இந்து சமயத்தையும் தமிழையும் காந்தனும் கணிதத்தையும் ஆங்கிலத்தையும் இவளும் எடுப்பதில் மிகுதிப் பாடங்களுக்கும் யாராவது வேறு ஆசிரியர்களைப் பிடித்தால் அவர்களது ஒரு முழுமையான டியூஷன் செண்டராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தாள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பைக் காந்தன் ஏற்றிருந்தான்.
அவனுக்கும் ஒரு பிளாஸ்ட்டிக் கைக்கு நிர்மலன் ஏற்பாடு செய்தபோது, உணர்ச்சி மேலீட்டில் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கண்கலங்கிவிட்டான் காந்தன். உழைப்புப் பிழைப்பில்லாமல் இருந்தபோது கூலியாக அந்த வீட்டுக்கு வந்தவன் ஆசிரியனாக மாறிப்போனானே! போதாக்குறைக்குக் கையும் கிடைத்துவிட்டதே!
அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிளாஸ்டிக் காலுக்கு அளவு கொடுத்தார்கள். அப்படியே, மின்சாரத்தில் பயன்படுத்தும் சக்கரநாற்காலியும் வாங்கிக்கொண்டான். இனி அவள் கையால் உருட்டத் தேவையில்லை. ஒருமுறை சார்ஜ் போட்டால், குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை பயணிக்கலாம்.
“நீங்க வீட்டை போகேல்லையா?” அதுதான் அவன் நினைத்ததுபோலவே எல்லாம் செய்துவிட்டானே என்று கேட்டாள்.
அதைவிட, அவளைப்பற்றி உஷாவுக்கு எல்லாம் தெரியுமா என்றும் தெரியாது. எவ்வளவோ கேட்டும் மூச்சு விடவில்லை அவன். பொல்லாத பிடிவாதக்காரன்
“என்னைத் துரத்திப்போட்டு என்ன செய்யப் போறாய்? சந்தோசமா வாழப்போறியோ?” கனிவோடும் பாசத்தோடும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறவன் இப்படிக் கேட்டால் மட்டும் காய்ந்துவிடுவான்.
“உஷா பாவமெல்லோ நிர்மலன். சின்னப்பிள்ளைகளோட என்னெண்டு தனியா சமாளிப்பா? ஆரனும் மானசியும் ஏங்கப் போறீனம். எனக்கே பாக்கோணும் மாதிரி இருக்கு.”
“அடுத்தச் சம்மருக்கு ஆறுகிழமை லீவுல எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாறன். இப்ப இப்பிடிப் பார்.” என்று அவர்களின் போட்டோக்களைக் காட்டினான்.
ஆசையாசையாக வாங்கிப் பார்த்தாள்.
அவளுக்கென்று அளவெடுத்துச் செய்யக் கொடுத்த கால் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும், இப்போதெல்லாம் கண்மணி ஊன்றுகோலின் உதவியோடு வீட்டுக்கு வெளியேயும் வரத்துவங்கி இருந்தாள். அன்றும், மூவருக்குமாகத் தேநீரை ஊற்றிக்கொண்டு, அதனை ஒரு கையிலும் மற்ற கையில் ஒற்றை ஊன்றுகோலோடும் வந்தவள், தடுமாறி விழப்போக, பாய்ந்து பிடிக்கப்போன நிர்மலன், அவனைப்போலவே வேகமாக வந்த காந்தனைக் கண்டதும் அவள் கையிலிருந்த கப்பை மட்டும் பற்றிக்கொண்டான்.
அதற்குள் காந்தன் அவளைப் பற்றி விழாமல் தடுத்திருந்தான். கூச்சமாகப் போயிற்று அவளுக்கு.
“சொறி, ஒரு கைல தேத்தண்ணி கொண்டு வந்தன்.. அதுதான்.” நிர்மலனின் முறைப்பில் அவள் குரல் உள்ளுக்குள் போயிருந்தது.
“இதுக்காக வேலை செய்துகொண்டிருக்கிற உங்களைக் கூப்பிடுறதா?” என்றாள் சமாதானமாக.
“எண்டாலும் கவனமா இருக்கவேணும் கண்மணி!” என்று சொன்னது காந்தன்.
“சரி வாங்கோ, தேத்தண்ணி ஆறமுதல் குடிப்பம்.” என்றவள், நிர்மலன் வாங்கி வந்திருந்த கேக்கையும் கொண்டுவந்து மூவருக்கும் பகிர்ந்தாள்.
முற்றத்தின் ஒரு ஓரமாக ஒற்றை வேம்பு ஒன்று, யாரினதும் உதவி இல்லாமல் ஓங்கி வளர்ந்து நின்றதில், அதற்குக் கீழே பிரம்பிலான ஒரு செட் மேசை நாற்காலிகளை வாங்கிப் போட்டிருந்தான் நிர்மலன். அங்கேதான் அவர்களின் மாலைத் தேநீர் பொழுது கழிந்தது.
அந்த நேரத்தில் தமையனைப் பற்றிக் காந்தனிடம் விசாரித்தாள் கண்மணி. அவனும் கதைக்க யாருமில்லாமல் இருந்தவன் தானே. மலர்ந்த சிரிப்போடு கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் தலையிடாமல் கவனித்திருந்தான் நிர்மலன்.
நாட்கள் நகர்ந்தது. அவளுக்கான காலும் பொறுத்தப்பட்டுவிட, ஊன்றுகோலும் இல்லாமல் நடமாடத் துவங்கியிருந்தாள் கண்மணி. போதாக்குறைக்கு, காந்தனும் அவனுமாகச் சேர்ந்து அருகிலேயே ஒரு நீண்ட கொட்டிலை இறக்கி சின்னதாக ஒரு டியூஷன் செண்டர் போல ஒன்றையும் உருவாக்கினார்கள்.
“உனக்குக் கணிதம் நல்லா வருமெல்லோ. ஆங்கிலமும் சேர்த்து சொல்லிக்குடு. நேரமும் போகும், உனக்கும் மாற்றமாயிருக்கும்!” என்றவன், அதை அவன் நிற்கும்போதே செயலாக்கி இருந்தான்.
ஊரவர்களும், அவள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு வந்து கதைத்துப்போனதில் மனதுக்கு மிகவுமே ஆறுதலாக உணர்ந்தாள்.
பலர் அவள் உயிரோடு இல்லை என்றே நினைத்திருக்கிறார்கள். அவர்களில் பலரை அவளும் அப்படித்தான் கேள்விப் பட்டிருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. நிர்மலன் இலங்கை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அந்த இரண்டு மாதத்தில் அவளது வாழ்க்கையையே மாற்றிப்போட்டிருந்தான்.
காந்தனுக்கும் தமிழும் சமயமும் நன்றாக வரும் என்பதில் அவனும் அங்கே படிப்பிக்கத் தொடங்கி இருந்தது அவனுக்கும் பெரும் மாற்றமாய் இருந்தது. இருவருக்கும் அவர்களுக்கான வருமானமும் வரும். நமக்காக யாருமில்லையே என்கிற வேண்டாத சிந்தனைகளில் இருந்தும் விடுதலையே!
கண்மணி இப்போதெல்லாம் நிறைய மாறி இருந்தாள். அவளின் தேவைகளை அவளே பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டதால் தன்னம்பிக்கையோடு நடமாடத் துவங்கியிருந்தாள். அதுவும், படிக்கவரும் குழந்தைகளோடு குழந்தையாக அவள் சிரிப்பதைப் பார்க்கையில் மனம் நிறைந்துபோகும் நிர்மலனுக்கு. இந்தச் சிரிப்பை மீட்டுவிடத்தானே பாடுபட்டான்!
அவள் கண்களில் ஒளியும் மீண்டிருந்தது. எதிர்காலம் பற்றிப் பலதை அவனோடு கலந்துரையாடினாள். அதிலே ஒன்று, இந்து சமயத்தையும் தமிழையும் காந்தனும் கணிதத்தையும் ஆங்கிலத்தையும் இவளும் எடுப்பதில் மிகுதிப் பாடங்களுக்கும் யாராவது வேறு ஆசிரியர்களைப் பிடித்தால் அவர்களது ஒரு முழுமையான டியூஷன் செண்டராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தாள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பைக் காந்தன் ஏற்றிருந்தான்.
அவனுக்கும் ஒரு பிளாஸ்ட்டிக் கைக்கு நிர்மலன் ஏற்பாடு செய்தபோது, உணர்ச்சி மேலீட்டில் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கண்கலங்கிவிட்டான் காந்தன். உழைப்புப் பிழைப்பில்லாமல் இருந்தபோது கூலியாக அந்த வீட்டுக்கு வந்தவன் ஆசிரியனாக மாறிப்போனானே! போதாக்குறைக்குக் கையும் கிடைத்துவிட்டதே!