You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பூவே பூச்சூட வா!

நிதனிபிரபு

Administrator
Staff member
Pavi Sundar




நிதனிபிரபு அக்காவோட
"பூவே பூச்சூடவா" வித்தியாசமான
கதைக்களம்.
ஆசையாக திருமணம் செய்து திகட்ட,
திகட்ட வாழ்ந்து கொண்டிருக்கையிலே,
பிரசவத்தில் இறந்து போகும் மிருணா.
மனைவியின் இழப்பை ஏற்றுக்
கொள்ள முடியாமல் வேதனையின் விளிம்பில் நிற்கும் அதிரூபன்.
வாடகைத் தாயாக வந்து,அதிரூபன்-மிருணாவின் குழந்தையை
சுமந்து,பின் கருவின் ஒவ்வொரு
வளர்ச்சியின் போதும்,முகம் பார்க்காத
குழந்தையின் தந்தையை விரும்பி,
அவனுக்காக உருகி,குழந்தையை விட
மனமில்லாமல் ஓடிப்போய் குழந்தையை பெற்றுக்கொள்ளும் வானதி.
நிதனி அக்காவின்
அருமையான

இலங்கைத்தமிழ்,அவருடைய
ஒவ்வொரு வசனங்களும்,ஆழ்மனதை
சென்று தொடும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு வசனத்திலும் முதிர்ச்சி,நேர்த்தியான நடை,
அருமையான

கதை.
முடிந்த அதிரூபனின் வாழ்க்கை மீண்டும்
மலருமா? வானதி என்ன ஆனாள்?
"பூவே பூச்சூடவா" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nathn Shan

நிதனி பிரபுவின்
“பூவே பூச்சூட வா”
இரு நாயகிகளின் இதயத்திலும் ஒற்றை நாயகனாய் அவன்.. இரண்டு குழந்தைகள் இரு தாய்களென தொடரும் வாழ்க்கைப் போராட்டம்..அல்லாடல்...இழப்பு...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“பூவே பூ சூடவா” - நிதனி பிரபு.
மனதை வருடி கனக்க வைக்கிற கதை. அதிரூபனோட சேர்ந்து நானும் பீல் பண்ணேன் … அவன் பீல்தான் பண்ணான் பட் நான் அழுதேன் அவன நினைச்சு அதுவும் நைட் 1 மணிக்கு …
நிதா சிஸ் ஸ்டோரில அதிரூபன் டிபரண்ட்ஆனவன், பெரும்பாலும் அவங்க ஸ்டோரில ஹீரோ நல்லவனா இருந்தாலும் கோபத்த காட்டி ஹீரோயின துடிக்க வச்சுடுவாங்க . பட் இவன் அந்த கேட்டகரில வரல … ரொம்ப புடிச்சு போச்சு அதுவும் மிருணா மிருணா உருகும் போது
?
?
?
.
கதை கரு: உயிருக்கு மேல நேசிச்ச மனைவி டெலிவரி டைம்ல இருக்கிறா , பெண் குழந்தையை வச்சுக்கிட்டு அவ இறப்ப தாங்க முடியாம துடிக்கிறவன் , வேற இடத்துக்கு மாறுதல வாங்கிட்டு வரான். வந்த இடத்துல இவனுக்கு ஒரு மகன் இருக்கிறது தெரிய வருது … மத்தது படிச்சு தெரிஞ்சுக்குங்க .
கிண்டில்ல படிச்சேன் … செம கதை

Kavi Thillai
 
Top Bottom